Jump to content

வர வேண்டாம் (திரு வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை)


Recommended Posts

வர வேண்டாம்: தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

வர வேண்டாம்: தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

நேற்று (29/11/2015) யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த புத்தகங்களின் வெளியீட்டு விழா ஒன்றிற் கலந்து கொள்வதற்காக இலங்கை வருவதற்குப் பயண அனுமதிக்கு விண்ணப்பித்திருந்த புகழ்பெற்ற ஈழக்கவிஞரான  திரு வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களுக்கு அவ்வனுமதி வழங்கப்படவில்லை என JDSLanka இணையத்தளம் தெரிவித்துள்ளது.  திரு வ. ஐ. ச. ஜெயபாலன் அவர்களின் மூன்று குறுநாவல்களின் சிங்கள மொழிபெயர்ப்பான 'செக்கு கொனா' என்ற நூலும் சாமிநாதன் விமல் அவர்கள் மொழிபெயர்த்த, உபுல் சாந்த சன்னஸ்கலவின் 'அம்மா'  என்ற நாவலும் இன்று யாழ்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன. யாழ்ப்பாணப் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ்வைபவத்திற் சிங்களக் கலை இலக்கியவாதிகளும்  புத்திசீவிகள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் கருத்துப்பரிமாற்றங்களையும் நிகழ்த்தியிருந்தனர் இச்சந்தர்ப்பத்தில் பத்தாயிரம் நூல்கள் பொது நூலகத்துக்கு அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டன.


திரு ஜெயபாலன் அவர்களின் வருகை மறுக்கப்பட்டமைக்கு வினோதமான காரணமொன்றை இலங்கை அரசு கூறியுள்ளது. திரு ஜெயபாலன் அவர்கள் ஏற்கனவே இலங்கைக்கான வதிவிட அனுமதியைக் கொண்டிருப்பதால் அவர் பயணம் செய்வதற்கான  அனுமதியைக் கோரமுடியாதென இலங்கை அதிகாரிகள் ஜெயபாலன் அவர்களுக்குத் தெரிவித்துள்ளனர். உண்மையிலும் தன்னிடம் அவ்வாறான வதிவிட அனுமதி ஏதும் இல்லை, இலங்கையை வந்தடைந்த பின்னர்  கொழும்பில் இலங்கை அதிகாரிகள் குறிப்பிடும் வதிவிட அனுமதியைப் பெறலாமா எனக் கேட்ட பொழுது அதுவும் நிராகரிக்கப்பட்டதாக திரு ஜெயபாலன் அவர்கள் JDSLanka இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.


குறித்த நூல்களின் வெளியீட்டிற் கலந்து கொண்ட பல சிங்களப் புத்திசீவிகள் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரக்காரணமாக இருந்தவர்கள் எனவும் கூறித்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கவிஞர் ஒருவருக்கு அவரது  புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டமை தவறானதென்ற கருத்து இங்கு வலியுறுத்தப்படுகிறது.


நன்றி : JDSLanka இணையத்தளம்
படம்: முகப்புத்தகம் அத்தனாஸ் யேசுராசா

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126421/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அறிக்கை மேல அறிக்கை விட்டார்... சம்பந்தனை எதிர்கட்சி தலைவராக்கவும் அறிக்கை விட்டார்.. அப்புறம் ஆனதும் வாழ்த்தினார்.. நல்லாட்சியிலும் ஐயாவுக்கு தடையா...?! சிங்களவன் தெளிவா இருக்கிறான். நாங்க தான் குழம்பிறதும் குழப்பிறதுமா இருக்கிறம். tw_blush::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல அமைப்புக்களின் தடையை எடுத்து விட்டார்களாம்.நல்லாட்சி அரசில் இப்படியா!ஐயா ஆதரிக்கும் முஸ்லிம்கள் அரசின் பங்காளிகள் ஆச்சே!!!!சம்பந்தர் கைவிட்டால் அவர்களைப் பிடிக்க வேண்டியதுதானே!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நீங்கள் போக வேண்டாம்...உங்களுக்கு ஒண்டு எண்டால் எங்களாலை தாங்கேலாது...ஐயா போகாதேங்கோ.......புத்தகம் வெளியிடப்போற நேரத்துக்கு வேதாளம் படத்தை பாருங்கோ ஐயா........:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.