Jump to content

இறுதிப்போரில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி இரகசிய சந்திப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த 9 இராணுவ அதிகாரிகள் இரகசியமான முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த 9 இராணுவ அதிகாரிகள் இரகசியமான முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

   

இராணுவத்தில் உள்ள இந்த 9 சிரேஷ்ட அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரகசியமான முறையில் சந்தித்தமையானது பாதுகாப்பு படை தலைமை அதிகாரிகள் மத்தியில் கோபத்தையும் அவமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நடந்த இறுதிக்கட்ட போரில் முக்கிய பங்காற்றிய இராணுவ அதிகாரிகள், நீர்கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் வைத்து ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி வேறு பணிக்காக நீர்கொழும்பு சென்றிருந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் அதிகாரி ஒருவர் அமைச்சர் ஒருவரின் உதவியுடன் 9 இராணுவ அதிகாரிகள் முப்படை தளபதியான ஜனாதிபதி சந்திக்க ஏற்பாடுகளை செய்திருந்தாக தெரியவந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியோ அல்லது இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் கிறிஷாந்த டி சில்வாவோ அறிந்திருக்கவில்லை.

ஜனாதிபதியை சந்திக்க அதிகாரிகளில் 55 வயதை பூர்த்தி செய்த ஓய்வுபெறப் போகும் சில அதிகாரிகளும் அடங்குவதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு நீதிபதிகளும் பங்கேற்கும் விசாரணைப் பொறிமுறை மூலம் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவிருப்பதாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் குற்றம் சுமத்தின. எனினும் தேசிய பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது பதிலளித்திருந்தார். இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக எதனையும் செய்ய போவதில்லை என அரசாங்கம் கூறி வருகிறது.

எவ்வாறாயினும் இராணுவ அதிகாரிகள், இராணுவ தளபதி அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகிய இருவரில் ஒருவரது அனுமதியை பெறாமல் ஜனாதிபதியை சந்திப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர், இராணுவ தளபதி விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சு அல்ல அதனுடன் சம்பந்தப்பட்ட உயர் மட்ட நபர்களை சந்திக்க வேண்டுமாயின் முன்னதாக இராணுவ தளபதியின் அனுமதியை பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி கிறிஷாந்த டி சில்வா, ஜனாதிபதியை சந்தித்து இந்த சம்பவம் குறித்த விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளதுடன் இந்த சந்திப்புக்காக தன்னிடமோ பாதுகாப்பு அமைச்சிடமோ அனுமதியை பெறவில்லை என்பதை ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். மேஜர் ஜெனரல்களான ஜகத் டயஸ், மகிந்த ஹத்துருசிங்க, கமல் குணரத்ன, சவேந்திர சில்வா, நந்தன உடவத்த, பிரசன்ன டி சில்வா, ஜகத் அல்விஸ், பிரசந்த சில்வா ஆகியோரே நீர்கொழும்பு ஹோட்டலில் ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்க்கான சட்டங்களை அரசாங்கம் அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக விசேட மேல் நீதிமன்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் எண்ணியுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோல்டா செல்லும் முன்னர் இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் அடிப்படையாக பேசியுள்ளதுடன் மேலதிக விபரங்கள் குறித்து பேசவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவர் சமந்தா பவர் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹூசைன் அடுத்த பெப்ரவரி மாதம் இலங்கை வரவுள்ளார். ஜெனிவா யோசனையின் முன்னேற்றத்தை அறியும் வகையிலேயே இவர்களில் விஜயங்கள் அமைந்துள்ளதாக பேசப்படுகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=145921&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழரசு said:

2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நடந்த இறுதிக்கட்ட போரில் முக்கிய பங்காற்றிய இராணுவ அதிகாரிகள், நீர்கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் வைத்து ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழர் பிரதேசங்களில் இருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு ஆலோசனை கேட்டிருப்பார்...tw_grimace:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.