Jump to content

ஐந்து வயது மகள் முன்னால் ஆஸ்ரேலியா பாதுகாப்பில் உள்ள தமிழ் அகதி தற்கொலை முயற்சி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இலன்கையிலிருந்து கடல்வழியாக ஆஸ்ரேலியவிற்க்கு தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் புகலிடம் கோரி வந்த தமிழ் அகதி ஒருவர் நாவுரு தடுப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியில் இருந்து   தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  30 வயதான குறித்த தமிழர் 2012 ஆம் ஆண்டு நடுப் பகுதியில் கடல் வழியாக படகு மூலம் ஆஸ்ரேலியவிற்க்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வந்த இவர்களை ஆஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைத்து அகதி அந்தஸ்த்து வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனாலும் சில மாதங்களின் பின்னர் ஆஸ்ரேலியவிற்க்கு வெளியே உள்ள நாவுரு தீவு தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டு அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து கடல்வழியாக ஆஸ்ரேலியவிற்க்கு தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் புகலிடம் கோரி வந்த தமிழ் அகதி ஒருவர் நாவுரு தடுப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியில் இருந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 30 வயதான குறித்த தமிழர் 2012 ஆம் ஆண்டு நடுப் பகுதியில் கடல் வழியாக படகு மூலம் ஆஸ்ரேலியவிற்க்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வந்த இவர்களை ஆஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைத்து அகதி அந்தஸ்த்து வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனாலும் சில மாதங்களின் பின்னர் ஆஸ்ரேலியவிற்க்கு வெளியே உள்ள நாவுரு தீவு தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டு அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

   

நாவுரு தடுப்பு முகாம் என்பது மக்கள் வாழ்வதற்கான ஏதுவான் இடமாக கொள்ளப்படவில்லை. இந்த தடுப்பு முகாம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் ஆஸ்ரேலிய அரசாங்கத்தின் மீது பல்வேறு சந்தர்ப்பங்களில் பல விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டே வருகின்றன. சில மனித உரிமை அமைப்புக்கள் நாவுரு தீவு முகாமை சித்திரவதைச் சிறைச்சாலை எனவும் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் குறித்த இந்த குடும்பத்தினருக்கு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து விரக்தி அடைந்த தமிழ் அகதி தன்னையும் தனது குடும்பத்தையும் விடுதலை செய்ய வேண்டும் அல்லது தனது உயிரை மாத்துக் கொள்வேன் எனத் தெரிவித்து உயர்ந்த மரத்தின் மீது ஏறியிருந்து 9 மணித்தியாலங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த தமிழ் அகதி போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது ஐந்து வயது மகளான சஜிந்தனா மரத்தின் கீழ் நின்று அழுது கொண்டிருப்பதையும் நாவுரு தீவில் இருந்து கிடைக்கும் ஒளிப்படங்களூடாக அறிய முடிகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணியளவில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறியதை அடுத்து அவர் மரத்தில் இருந்து இறங்கி வந்தார். அதைத் தொடர்ந்து அவ்விடத்திற்க்கு விரைந்து வருகை தந்த நாவுரு தீவு காவல்துறையினர் அவரை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்து வைத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

australiya-news-291115-seithy%20(3).jpg

 

 

australiya-news-291115-seithy%20(2).jpg

 

 

australiya-news-291115-seithy%20(1).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=145931&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா பேருக்குத்தான் பெரிய கண்டம்.......இப்ப இருக்கிற அரசாங்கத்துக்கு நல்ல மனம் கடுகளவும் இல்லை...
இஞ்சை பார் எங்கடை ஜேர்மன் அம்மாவை...நோ ப்ரொப்பளம்.....ஒரே வெல்கம் மழையாய் கொட்டுது..:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.