Jump to content

ஆம்…நான் அரவாணிதான்: யாழ் அரவாணிகளின் இரகசிய உலகம்!


Recommended Posts

 

நன்றி: Deepam News

 

‘ஊரோரம் புளியமரம்…. உலுப்பிவிட்டா சலசலக்கும்’ இப்படி பாடியபடி ஏழெட்டுப்பேர் நாணிக்கோணி வட்டமாக வளைய வருவார்கள். ஆண்களைப் போலுமிருப்பார்கள். சேலையுடுத்தியிருப்பார்கள். கன்னத்தில் போட்டுக்கொண்டு அதிகமாக வெட்கப்படுவார்கள். பார்த்து சிரிப்பதற்கென்றே திரையில் காட்டப்படும் இந்த வகையானவர்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.

ஆம்.. அரவாணிகள், திருநங்கைகள் என பல்வேறு வார்த்தைகளால் அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர் பற்றியே பேசுகிறோம்.

ஆணாக பிறந்து, பெண்ணாக உணர வைத்து, போலி வாழ்க்கை வாழ முடியாமலும், சொந்த வாழ்க்கையை வெளிப்படுத்த முடியாமலும் நம்மத்தியில் அன்றாடம் செத்து செத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அரவாணிகள் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம்? திரையிலும், பொது இடங்களிலும் பார்த்து சிரிப்பதற்காக அல்லாமல், அவர்களும் மனிதர்கள்தான் என்ற புரிந்துணர்வு நம்மில் எத்தனை பேரிடம் உள்ளது?

அரவாணிகள் என்றாலே, தீண்டத்தகாதவர்கள் என்பதைப் போன்ற உணர்வுதான் பலரிடமும் உள்ளது. பாலியல் தொழில் செய்வார்கள், பிச்சை எடுப்பார்கள், திருடுவார்கள் என்பதைப் போன்ற சித்திரம்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதைக்கடந்து வாழ்க்கையை வாழத்துடிப்பதே அரவாணிகளின் கதையென்பதை அறிவோமா?

புரிந்து கொள்ளாத குடும்பம்… அங்கீகரிக்காத சமூகம் என அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அரவாணிகளின் கதையை வெளிச்சமிட்டு காட்ட களமிறங்கினோம்.
திரையிலும், கதைகளிலும் தாராளமாக உலாவும் அரவாணிகள் நமது சூழலில் அவ்வளவு இலகுவாக அடையாளம் காண முடியவில்லை. சிறிய அலைச்சலின் பின்னர் அந்த உலகத்திற்குள் நுழைந்தோம். இந்த கதையின் நாயகியை அந்த உலகத்தில் தேடிப்பிடித்தோம்.
ஈழநிலா. இதுதான் அவர் தனக்கு தானே வைத்துக் கொண்ட பெயர். பிறப்பால் சேர்ந்து கொண்ட ஆண் அடையாளங்களை ஒவ்வொன்றாக கழற்றிச் செல்லும் அவரது வாழ்க்கைப் பயணத்தில், பெற்றோர் வைத்த பெயரையும் கழற்றிவிட்டுவிட்டார். அது பற்றி அவர் பேச விரும்பவில்லை.

ஆணாக பிறந்த பெண்

பெற்றோரை பொறுத்தவரை தமக்கொரு ஆண்பிள்ளை பிறந்துள்ளது என்றே நினைத்தார்கள். எனினும், அந்தப்பிள்ளை தன்னை உணர்ந்தது ஒரு பெண்ணாக. ஆணாக பிறந்த பிள்ளை பெண்ணாக தன்னை மாற்றுவதை அங்கீகரிக்காத சமூகப்பார்வை, ஊருக்கு அஞ்சி தனக்குள்தானே தற்கொலை செய்து கொள்ள மனமில்லாத வீரியம் என்பன நேருக்குநேர் மோதும்போது வீடுகளை துறக்கிறார்கள் அரவாணிகள். இப்பொழுது பெற்றோர், உறவினர்கள் என்ற சமூக வட்டத்திலிருந்து வெளியில் வந்துவிட்டார் ஈழநிலா. உடல், உளரீதியில் முக்கால்பங்கிற்கும் அதிகமாக பெண்ணாக மாறிவிட்டார் நிலா.

அரவாணிகளின் உலகத்தில் உள்ள பிரதான இரண்டு சாவல்களில் முதலாவது வீடுகளை துறப்பது. தாம் யார் என்பதை அவர்கள் உணரும் சமயத்தில், வீட்டில்… சமூகத்தில் அதனை புரிந்து கொள்ளும் பக்குவம் இருப்பதில்லை. வேரைப்பிடுங்கிக் கொள்ளும் சவால் முதலாவது. இப்படி வெளியேறும் அரவாணிகள் தமக்குள் ஒரு பிணைப்பை எற்படுத்தி புதியதொரு குடும்பத் தொகுதியாக வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.

எனினும், தற்போது நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் உள்ளது. அரவாணிகளின் நலனை கவனிப்பதற்கென யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒரு பிரிவு உள்ளது. அதுதவிர, சில தன்னார்வ அமைப்புக்களும் இயங்குகின்றன.

ஆண்கள் கல்லூரியில் படித்த பெண்

இந்தப்பகுதிக்காக வேறும் பல அரவாணிகளுடனும் நாம் பேசினோம். நாம் பேசிய அனைவரிடமும் கடந்தகாலம் துயர்நிறைந்த, வலிமிகுந்த காலமாக மனதில் படிந்துள்ளது. பலரிடம் ஒருவித வன்மம் குடிகொண்டுள்ளது. அவர்கள் தம்மை உணர்ந்து கொள்ளத் தொடங்கும் போது, வீடுகளில் அதற்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதனை மீறி தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும்போது, அவர்கள் மீது பல்வேறு கொடுமைகள் வீடுகளில் பிரயோகிக்கப்படுகிறது. வீட்டு கொடுமைகள் பெரும்பாலும் சமூகத்திற்கு அஞ்சியவையே. ஆணாக இருந்தவர் பெண் அடையாளங்களுடன் பகிரங்கமாக திரிவது குடும்பத்திற்கு அவமானமென வீடுகளில் கருதுகிறார்கள். இதனாலேயே என்ன வழியிலாவது அவர்களின் உணர்வுகளை அடக்கிவிட முயல்கிறார்கள்.

IMG_3522அந்தக்கொடுமைகளை சகிக்க முடியாமல் அவர்கள் வீடுகளைவிட்டு வெளியில் செல்கிறார்கள். இந்தக்காலமே வன்மமாக அவர்கள் மனதில் படிந்துள்ளது.

வெளிப்படுத்த முடியாத உணர்வுகள்… இயல்பற்ற இளமைக்காலம்… படைப்பை மீறிய உணர்வுகள்… உணர்வுகளை முடக்க எத்தனிக்கும் வீட்டுசூழல் என அத்தனை கசப்பான காலத்தையும் கடந்தே வந்திருக்கிறார் நிலா. வெறும் 23 வயதுதான் இப்போது நிலாவிற்கு. அதற்குள் எத்தனை கசப்பு, போராட்டங்களை கடந்து வந்திருக்கிறார் என்பதை பேசும்போது புரிந்து கொள்ள முடிந்தது.

‘நான் கல்விகற்றது யாழ் நகரத்தில் உள்ள பிரபல்யமான கிறிஸ்தவ ஆண்கள் பாடசாலையான சென்.பற்றிக்சில். இங்கு எனது வகுப்பில் என்னைப் போல ஆறு நண்பர்கள் ஒரே வகுப்பில் கல்வி கற்றார்கள். அவர்கள் படிப்படியாக பாடசாலையில் இருந்து இடைவிலகி விட்டனர். இறுதியில் உயர்தரப் பரிட்சைக்கு என்னுடன் இன்னும் ஒருவர் தோற்றியிருந்தார்’ என ஒரு கனவைப் போல கடந்த காலத்தை மீட்டினார் நிலா.

பாடசாலை காலம் முழுவதும் ஒரு ஆணாகவே அவர் இருந்தார். சில கலவையான எண்ணங்கள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தாலும், தன்னுள்ளான மாற்றங்களை அவர் அறிந்து கொள்ளவில்லை. பாடசாலைக்காலத்தின் பின்னர்தான் மூன்றாம் பாலினம் தொடர்பான தெளிவு தன்னுள் ஏற்பட்டதாக நிலா கூறுகிறார். தன்னைப் போன்ற இன்னும் பலர் இருக்கும் தகவல் கிடைத்து, மெதுமெதுவாக அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

அவர்களுடனான அறிமுகத்தின் பின்னரே தன்னுள் இருந்த கலவையான எண்ணங்கள் பெண் என்ற மையத்தை நோக்கி குவிந்ததாக சொல்கிறார்.

இந்த உணர்வுமாற்றத்துடன் நீண்டநாட்களாக தனக்குள்ளாகவே அவர் போராடிக் கொண்டிருந்திருக்கிறார். இந்த மாற்றம் பற்றி வீட்டில் பேச முடியாத நிலையிருந்துள்ளது. கல்வியறிவில்லாத பெற்றோர் அதனை எவ்வாறு அணுகுவார்கள், அவர்களால் புரிந்து கொள்ள முடியுமா என்பதில் நிலா குழப்பத்துடன் இருந்துள்ளார். இறுதியில் மாமாவிற்கு விடயத்தை சொல்லலாமென நினைத்தார். அவரால் தன்னை புரிந்து கொள்ள முடியுமென நம்பினார். ‘என்னை ஒரு பெண்ணாக உணர்கிறேன். இப்பொழுதிருக்கும் வெளியடையாளங்களை துறந்து புதிய அடையாளங்களை தேடப்போகிறேன்’ என ஏழு பக்கங்கள் கொண்ட கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அந்தக்கடிதமும் கிணற்றில் போட்ட கல்லானது. புரிந்துகொள்வார் என நிலா நம்பிய மாமா எதுபற்றியும் அலட்டிக்கொள்ளாமல் மௌனமாக இருந்துவிட்டார்.

பாதிரியாருக்கு படித்த பெண்

க.பொ.த உயர்தரத்தில் நிலா தேறியிருந்தார். பல்கலைகழக கலைப்பீடத்திற்கு தேர்வாகியிருந்தார். எனினும், தான் யார் என்பதை உணர்ந்துகொள்ளாத குழப்பத்தால் பல்கலைகழக வாய்ப்பை உதறிவிட்டார்.

இந்த மனப்போராட்டத்தில் நிலா ஒரு முடிவிற்கு வந்தார். மனதிற்குள் ஏற்பட்ட குழப்பங்களை தீர்த்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாக ஆன்மீகத்தை நாடினார். இடைப்பட்ட நாளில் மனதில் தோன்றிய குழப்பங்;களை ஆன்மீகம் தீர்த்து வைக்குமென அவர் நம்பினார். கிறிஸ்தவ மிசனரியின் இணைந்து கல்வி பயில தொடங்கினார்.

ஆன்மீகமும் அவரது மனக்குழப்பத்தை தீர்க்கவில்லை. சக ஆண் நண்பர்களுக்கு மத்தியில் அசௌகரியத்தை உணர்ந்தார். தன்னால் அவர்களுடன்; வழ முடியாது என்ற முடிவிற்கு வந்தார். அங்கு இருந்த காலத்தில் ஆண்கள் அனைவரும் ஒன்றாக குளிக்கும் போதோ, உடைமாற்றும் இடத்தில் நிற்கும் போதோ மிகவும் கூச்சமான தன்மையை உணர்ந்ததாக கூறுகிறார். இன்னொரு விடயத்திலும் அவர் வேறுபட்டிருந்தார். இரவில் தூக்கும் போது அவர்கள் சாறம் உடுத்திருப்பார்கள். ஆனால் தான் பெண்கள் அணியும் பாவாடையின் தன்மையை ஒத்த காற்சட்டையையே அணிந்ததாகவும், அங்கிருந்த நாட்களில் ஆட்களின் முன்னால் மேற்சட்டையை கழற்றியதும் இல்லை என்றார்.

‘எமக்கு பொறுப்பாக இருந்த அருட்தந்தை எனது உணர்வுகளை புரிந்து கொண்டார். நான் யார் என்பதை அவரால் புரிய முடிந்தது. எனது குடும்பத்துடன் தொடர்பு கொண்டு வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு பணித்தார். இதன்படி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட வைத்தியர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றேன். என்னை பரிசோதித்த வைத்தியர், எனக்குள் எந்தவிதமான ஹோர்மோன் மாற்றமும் இல்லையென்றும், நான்தான் பெண்ணாக வாழ ஆசைப்படுவதாகவும் கூறினார். மனவன ஆலோசனை சிகிச்சைகளிற்கு சென்றால் மட்டும் போதுமானதென்றார்’

இருந்தாலும் வைத்தியரின் கருத்தை நிலா முழுதுமாக ஏற்கவில்லை. வேறுசில நண்பர்களின் IMG_3675உதவியுடன், யாழ் போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட சுகாhதாரப் பரிசோதகரும் உளவள ஆலோசகருமான நக்கீரனின் வழிகாட்டலின் கீழ் கொழும்பு பொது வைத்தியசாலையின் வைத்தியர் கபிலனிடம் தனது பிரச்சினைகள் தொடர்பாக பேசினார். நிலாவின் நிலைமையைப் புரிந்து கொண்ட அவர் நிலா முழுமையான பெண்ணாக மாறுவதற்கான சிகிச்சையைப் பெற்று தருவதாக தெரிவித்தார். அவரது வழிகாட்டலும், ஒத்தாசையும் நிலாவை புதிய உலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

‘நான் புதிதாக என்னை உணரத் தொடங்கியபோது, வீட்டுக்காரருக்கு அது பிரச்சனையாக இருந்தது. பல தடவைகள் வீட்டு அங்கத்தவர்களால் துன்புறுத்தப்பட்டேன். பெரிய ரீப்பை முதல் காற்றும் பம் வரை எல்லாப்பொருட்களாலும் என்னை அடித்தார்கள். எனது உடலில் உள்ள தழும்புகள், அடையாளங்கள் அரவாணிகள் சந்திக்கும் வீட்டு வன்முறையை சொல்லிக் கொண்டேயிருக்கும்’ என்கிறார்.

வாழ்வே ஒரு பெரும் கொடுமையாக மாற, வீட்டைவிட்டு எங்காவது கண்காணாத இடத்திற்கு தப்பிச் செல்வதற்கு முடிவு செய்தார். அவரைப் போலவே வீட்டில் கொடுமைகளை சந்தித்த இன்னொரு தோழியும் கூட கிளம்பினார். தனது கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை விற்றும், வீட்டில் சிறு செலவிற்கு கொடுக்கப்படும் சொற்ப பணத்தை சேமித்தும் இந்தியா செல்ல திட்டமிட்டார்.

அப்பொழுதுதான் இலங்கைச்சட்டங்கள் குறுக்கே வந்தன. நிலா பார்வைக்கு ஒரு பெண். அணிந்திருந்த ஆடைகளும் பெண்களாடைகள். ஆனால் ஆவணங்களோ, அவரை ஒரு ஆணாக அடையாளப்படுத்தின. வீட்டு நடைமுறைகள் மட்டுமல்ல, நாட்டு சட்டதிட்டங்களும் அரவாணிகளை வஞ்சித்தன. (இந்தக்கட்டுரை தீபம் வாரஇதழிலிருந்து நன்றியுடன் பிரசுரமாகிறது) அரவாணிகள் பற்றி இலங்கை சட்டங்களில் எதுவுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதிகாரிகளின் பார்வையில் ஆணொருவர் பெண் வேடமிட்டுள்ளார். ஆள்மாறாட்ட சட்டத்தின் கீழ் கைதானார். விசாரணை, தடுத்து வைப்பு என அலைக்கழிவான வாழ்க்கை. இந்திய கனவும் அத்துடன் கலைந்தது.

அவமான ஆண்குறி

அரவாணிகளின் வாழ்க்கையில் உள்ள பிரதான சவால் இதுவரை பேசிய எதுவுமில்லை. வீட்டிலிருந்து வெளியேறுவதோ, தனித்து வாழும் சிரமம் இவைகள் அனைத்தையும் விட அவர்களின் பிரதான சிக்கல் வேறு. எதையும் மாற்றிவிடலாம். சில அடையாளங்கள் கெட்ட கனவாக உடம்பில் ஒட்டியிருக்கும். ஆம். அரவாணிகளின் உடலில் கெட்ட கனவாக சேர்ந்திருப்பது ஆணுறுப்பு.

தமது உடலில் அது ஒட்டியிருக்கிறது என உணரும், நினைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அசௌகரியத்தை உணர்வதாக கூறுகிறார்கள் அரவாணிகள். அவர்கள் வெளிப்படுத்த நினைக்கும் உணர்விற்கு நேர்எதிரான தோற்றத்தை கொடுப்பது அது. அதனால் அரவாணிகளின் வாழ்வின் தலையாய இலட்சியமாக இருப்பது ஆணுறுப்பை உடலிலிருந்து அகற்றுவதே.
அதனை அகற்றாமல், அவர்கள் பெண்கள் என்ற அடையாளத்தை பெற இலங்கைச்சட்டங்கள் அனுமதிப்பதில்லை. மூன்றாம் பாலினத்தவர் பற்றிய சட்ட ஏற்பாடுகளும் கிடையாது. சட்டத்தை பொறுத்தவரை அவர்கள் ஆண்கள். பெண்கள் என்ற அங்கீகாரத்தை சட்டரீதியாக பெறுவதென்றால் ஆணுறுப்பை உடலிலிருந்து அவர்கள் அகற்றித்தான் ஆக வேண்டும்.

எல்லா அரவாணிகளதும் இலட்சியமாக இது இருந்தாலும் அது இலேசான காரியமல்ல. சிகிச்சையில் ஆணுறுப்பை அகற்றி, பெண் என்ற சட்டரீதியான அங்கீகாரத்துடன் யாழில் இருப்பது மூன்றேமுன்றே பேர்தான். அவர்களில் இருவர்தான் இப்பொழுது இருக்கிறார்கள். ஆனாலும், யாழில் மட்டும் கிட்டத்தட்ட நூறுபேர் வரையான அரவாணிகள் தற்போது இனம்காணப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு இரவு தூங்கச்செல்லும்போதும் நிலா கடவுளிடம் தவறாமல் வேண்டிக் கொள்வாராம். ‘விடிந்து எழும்போது பெண்ணாக மாற வேண்டும் என. இப்படியே நினைத்து நினைத்து இப்பொழுது தனக்கு கடவுள் நம்பிக்கையே இல்லாமல்ப் போய் விட்டதென்கிறார்.
இப்பொழுது நிலா சுதந்திரமான வாழ்வை வாழ்வதாக கூறுகிறார். அரவாணிகள் தொடர்பான தன்னார்வ நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஆரவாணிகளின் உரிமைக்காக பாடுபடுவதே தனது இலட்சியமென்றும் கூறுகிறார். நிலா தனது வாழ்வை அடிப்படையாக கொண்டு எழுதிய ‘மூன்றாம் பாலின் முகம்’ என்ற நாவல் விரைவில் வெளியாகவுள்ளது.

புதிய தாய்

வீடுகளிலிருந்து வெளியேறும் அரவாணிகள் குழுக்களாக இணைகிறார்கள். அப்பொழுது தமக்கிடையில் புதிய உறவுமுறையொன்றை கட்டமைத்து கொள்கிறார்கள். இளைய அரவாணியொருவர், கட்டாயமாக மூத்த அரவாணியொருவரின் மகளாகியே தீரவேண்டும்.
தத்தெடுத்த தாய், வேறு அரவாணிகளையும் தத்தெடுத்திருப்பாரேயானால் அவர்கள் அக்கா, தங்கைகளாவார்கள்.

மூடிய, இறுக்கமான யாழ்ப்பாண சமூகத்தின் போலியான திரைகளை கிழித்துக் கொண்டு வெளிவந்திருக்கிறார் நிலா. ஆரவாணிகள் பற்றிய பிழையான சமூக மதிப்பீடுகளிற்கு அரவாணிகளின் நடத்தையும் ஒரு காரணமாகிவிட்டது. அந்த நடத்தைக்கு காரணம்- அவர்களின் உரிமைகளை முறையாக அங்கீகரித்து, சமமாக பார்க்காத தன்மையே.
அரவாணிகள் என்றாலே பிழையாக விளங்கிக் கொள்ளும் நமது சமூகத்தின் முகத்திலறைந்தாற்போல முன்னுதாரணமாக விளங்கும் பலருள் ஒருவரே நிலா. தனது சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து வாழும் நிலாவிற்கு ஒரு சலூட் அடிக்கலாம்தானே!

###

IMG_3744திரு பு. நக்கீரன்
சிரேஸ்ட சுகாதார பரிசோதகர்,உளவள ஆலோசகர்
யாழ் போதனா வைத்திய சாலை
யாழ்ப்பாணத்தில் உள்ள 80 க்கும் அதிகமான அரவாணிகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணி வருகிறேன். சமூகத்தில் அவர்கள் முறையான அங்கீகாரத்துடன் வாழ யாழ் போதனா வைத்தியசாலையில் பாலியல் நடத்தைகள் தொடர்பான ஆலோசனை மையம் மூலம் உதவுகிறோம். அதுதவிரஇ சக வாழ்வுக்கான பயணம் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பையும் நடத்தி வருகிறேன். அவர்களின் சுகாதாரம்இ உளரீதியிலான ஆரோக்கியத்திற்கு ஆதரவாக செயற்படுகிறோம்.

இவர்கள் ஆணாகப் பிறந்து பொண்ணாக மாற்றம் அடைந்தாலும் சட்டரீதியில் இவர்கள் ஆண்களே. வீடுகளில் வாழ முடியாமல் வெளியுலகத்திற்கு வரும் இவர்களின் வாழ்க்கை பெரும் சோதனையானது. முக்கியமாக உளரீதியான பிரச்சினைகள். இதனைத் தீர்க்க அவர்கள் முதலில் தம்மைப்போல் உள்ள அரவாணிகளைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அவர்களுடன் நட்பை ஏற்படுத்தி காலப்போக்கில் அனைவரும் ஒரே குடும்பம் என்று மனதளவில் ஒன்றித்து வாழ ஆரம்பிக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்திலே அவர்களுக்கு இன்னொரு பிரச்சினை ஆரம்பமாகின்றது.

அது தான் பொருளாதார பிரச்சினை. இவர்களுக்கு உதவ யாருமே இல்லை. வேலை வழங்கவும் தயாராக இல்லை. வாழ்க்கைச் செலவை எவ்வாறு ஈடுகட்டுவதென்ற கேள்வி எழுகிறது. இதனைத் தீர்ததுக் கொள்ள வேலை வாய்ப்புக்களைத் தேடி பல இடங்களுக்கு அலைகிறார்கள். சில இடங்களில் மட்டுமே இவர்களுக்கு வேலை கிடைக்கிறது.

இவர்களில் பெரும்பாலாணவர்கள் அடிப்படையில் கல்வியறிவு இல்லாதவர்களாக காணப்படுவதனால் தம்மை பாதுகாக்க முடியாத நிலை உருவாகின்றது. வேலை செய்யும் இடங்களில் இவர்களுடன் பலர் தவறாக நடக்க முற்படுகிறார்கள். இங்கு இவர்களது அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. சட்ட உதவியை நாடி பொலிசில் முறையிட சென்றால் இவர்கள் ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும். இப்படி இருந்தால் ஆள்மாறாட்ட வழக்கில் இவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

இப்படி தமக்கு சமூகத்தில் இழைக்கப்படும் வன்முறைகளில் இருந்து. தப்பிக்கவும் தமக்கான வருமானங்களை உழைக்கவும் இவர்கள் பல குற்றச்செயல்களை செய்ய ஆரம்பிக்கிறார்கள். சிலர் போதைப்பொருட்களுக்கும் அடிமையாகின்றார்கள்.

இவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், விழிப்புணர்வு, ஆலோசனை சேவைகளை பல அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போது வழங்குகின்றன. அதில் heart to heart நிறுவனம் முக்கியமானது.

இப்பொழுது அரவாணிகள் தொடர்பான விழிப்புணர்வு இலங்கையில் அதிகரித்து செல்கிறது. எண்ணற்ற விழிப்புணர்வுகள் ஆலோசனைகள் என்று செய்தாலும் அவர்களில் சிலர் தம்மை மாற்றிக் கொள்ள முடியாது என்றும் நிற்கிறார்கள்.

பாலியல் தொழிலில் ஈடுபடுதல், களவு எடுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் அரவாணிகளில் ஒருபகுதியினர் மீது உள்ளது. அதேபோல, வேலை தேடி வருபவர்களில் சிலர் கிடைக்கும் வேலைகளை சரியாக செய்வதில்லை. உணவகங்கள், காமன்ஸ்கள்இ குழந்தை பராமரிப்பு என் இவர்களுக்கு கொடுத்த வேலைகளை இவர்கள் தமக்கு உகந்தது அல்ல என தட்டிக்கழிக்கின்றனர்.

இவர்களுக்கு மருத்துவசெலவிற்கு மாத்திரம் மாதாந்தம் 4000 ரூபாவிற்கு மேல் தேவைப்படுகிறது. இவர்கள் பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ மாறவேண்டுமானால் அதற்கான ஓமோன்களை பெற்றுக் கொள்ளவே இந்த செலவு ஏற்படுகிறது.

இந்த செலவுகளை நிவர்த்தி செய்ய இவர்களில் பலர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். உலகம் முழுவதும் அதிகளவிலான எயிட்ஸ் தொற்றுக்கு இவர்களே காரணமாக இருக்கிறார்கள். கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட 19 எயிட்ஸ் நோயாளிகளில்  அரவாணிகளும் அடக்கம்.

பொதுவாக மனிதனின் பாலியல் நடத்தைகள் ஐந்து வகைப்படும்

1. ஆண் பெண் உறவு
கிட்டத்தட்ட சனத்தொகையில் 75 வீதமானவர்கள் இவர்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஆணை விரும்பும் ஆணாகவோஇ பெண்ணை விரும்பும் பெண்ணாகவோ இருக்கமாட்டார்கள். இவர்களே ஆரோக்கியமான சந்தியினரை உருவாக்குகிறார்கள்.

2. ஆண் + ஆண் உறவு (கோமோசெக்ஸ்)

ஆண்களின் மீது ஆண்கள் விருப்பம் கொண்டு உறவினைப் வைப்பார்கள் இவர்கள். இந்த வகைக்குள் உள்ள ஆண்கள் சமூகத்தில் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் உயர் பதவிகளிலும் உள்ளனர். குறிப்பாக ஆண்கள் ஒன்றாக சேர்ந்து உள்ள இடங்களில் இவர்கள் அதிகமாக இருப்பார்கள்.

எயிட்ஸ் நோய்த் தொற்றுக்கு இந்த ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களது பங்களிப்பு அதிகமாகும். இவ்வாறான 100 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை மற்றும் ஆலோசனையை யாழ்ப்பாணத்தில் பெற்றுள்ளனர். இவரகளில் 50 வீதமானவர்கள் தம்மை மாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர். மீதிப் பேர் தவறான செயல்களில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர்.

100 க்கும் அதிகமான ஆண்களுடம் உறவு வைத்திருந்த ஒருவர் அண்மையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்.

சிலர் திருமணமாகி குடும்ப வாழ்க்கையை சிறப்பாக நடத்தி குழந்தைகளையும் பெற்றுள்ளனர். எனினும்இ ஓரினச்சேர்க்கையையே அதிகம் விரும்புகிறார்கள்.

3) பெண் + பெண் உறவு (லெஸ்பியன்)

பெண்கள் மீது விரும்பம் கொண்டுஇ உறவினைப் பேணும் பெண்கள் இந்த வகைக்குள் அடக்கம். இப்படி நம்மத்தியில் ஏராளமான பெண்கள் காணப்பட்டாலும் அவர்களில் ஒரு சிலரையே இனங்கானக் கூடியதாக இருக்கிறது. யாழ்பபாணத்தில் ஒருவரே இவ்வாறு இனங்காணப்பட்டு சிகிச்சை ஆலோசனைகளை பெற்று வருகின்றார்.

4) பெண்ணாக மாறிய ஆண்
இவர்கள் ஆணாகப் பிறந்தவர்கள். எனினும்இ தான் ஒரு பெண் எண்ற உணர்வில் வாழ்பவர்கள். இவர்களது நடை உடை பாவனைகள் எல்லாம் பெண்களைப் போலவே இருக்கும். இருந்தாலும் இவர்கள் ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்க கூடியவர்கள்.

5) ஆணாகும் பெண்
பெண்ணாகப் பிறந்து ஆணாக தம்மைமைப் பாவனை செய்து வாழ்பவர்கள். இவர்களது உருவ அமைப்பு பொண்ணாக இருந்தாலும் ஆண் போன்ற எண்ணங்கள் உள்ளவர்கள். ஆண்களுக்கு இருக்கும் தைரியத்தினையும் தம்மில் வளர்துக்கொண்டு வாழ்பவர்களாக காணப்படுகின்றார்கள். இவர்களுக்குள் இருக்கும் பெண்மையானது கருக்கட்டலுக்கு உகந்ததாகவும் காணப்படுகிறது.

# யாழ்பாணத்தில் உள்ள அரவாணிகளில் பலர் முறையான வைத்திய ஆலோசனைகளையோ சிகிச்சைகளையோ பெற்றுக் கொள்ளாமல் தாமாகவே பல மருந்துகளை பாவிக்கிறார்கள். ஏற்கனவே முறையற்ற சிகிச்சை எடுத்த இன்னொரு அரவாணியின் சிபாரிசில் இதனை செய்கிறார். இந்தப்போக்கு வரவர அதிகமாகிக் கொண்டே செல்வதாகவும், இதனால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமென்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

#  யாழ்ப்பாண கோட்டைக்கு அண்மையில் தினமும் மாலையில் சில அரவாணிகள் முகாமிடுவார்கள். ‘500 ரூபா… 1000 ரூபா தாருங்கள். உங்களுடன் வருகிறோம்’ என ‘பேரம்’ பேசுகிறார்கள். இப்படி தினமும் உழைப்பதால்இ தன்னார்வ நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வேலைகளை விட்டு ஓடிச் செல்லும் அரவாணிகளும் உள்ளனர்.

# யாழ்பாணத்தில் உள்ள அரவாணிகளில் பலர் முறையான வைத்திய ஆலோசனைகளையோ சிகிச்சைகளையோ பெற்றுக் கொள்ளாமல் தாமாகவே பல மருந்துகளை பாவிக்கிறார்கள். ஏற்கனவே முறையற்ற சிகிச்சை எடுத்த இன்னொரு அரவாணியின் சிபாரிசில் இதனை செய்கிறார். இந்தப்போக்கு வரவர அதிகமாகிக் கொண்டே செல்வதாகவும், இதனால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமென்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

#  யாழ்ப்பாண கோட்டைக்கு அண்மையில் தினமும் மாலையில் சில அரவாணிகள் முகாமிடுவார்கள். ‘500 ரூபா… 1000 ரூபா தாருங்கள். உங்களுடன் வருகிறோம்’ என ‘பேரம்’ பேசுகிறார்கள். இப்படி தினமும் உழைப்பதால்இ தன்னார்வ நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வேலைகளை விட்டு ஓடிச் செல்லும் அரவாணிகளும் உள்ளனர்.

# யாழ்பாணத்தில் உள்ள அரவாணிகளில் பலர் முறையான வைத்திய ஆலோசனைகளையோ சிகிச்சைகளையோ பெற்றுக் கொள்ளாமல் தாமாகவே பல மருந்துகளை பாவிக்கிறார்கள். ஏற்கனவே முறையற்ற சிகிச்சை எடுத்த இன்னொரு அரவாணியின் சிபாரிசில் இதனை செய்கிறார். இந்தப்போக்கு வரவர அதிகமாகிக் கொண்டே செல்வதாகவும், இதனால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமென்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

#  யாழ்ப்பாண கோட்டைக்கு அண்மையில் தினமும் மாலையில் சில அரவாணிகள் முகாமிடுவார்கள். ‘500 ரூபா… 1000 ரூபா தாருங்கள். உங்களுடன் வருகிறோம்’ என ‘பேரம்’ பேசுகிறார்கள். இப்படி தினமும் உழைப்பதால்இ தன்னார்வ நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வேலைகளை விட்டு ஓடிச் செல்லும் அரவாணிகளும் உள்ளனர்.

# இவர்கள் பிறப்பில் இருந்து ஆண் மற்றும் பொண்ணின் உடலமைப்புக்கள் உறுப்புக்களைக் கொண்ட அர்த்தநாரீஸ்வரர்கள். வாழ்க்கையில் அதிக பிரச்சினைகளையும் போராட்டகளையும் சந்திக்கிறார்கள். இவர்களால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அடுத்த சந்ததியினரை உருவாக்க முடியாது.

# இலங்கையில் இவர்கள் ஆண் என்ற சட்ட அங்கீகாரத்தையும் பெண் என்ற சமூக அங்கீரத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள்.

 

http://www.deepamnews.com/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிழலி...! என்ன எழுதுவது என்றும் தெரியவில்லை , ஒப்புக்கு ஏதோ எழுதிப் போகவும் மனமில்லை...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மை கோட்...என்ன அழகான பெண்ணாக இருக்கின்றார்...ஏன் ஆண்டவன் இப்படியான படைப்புக்களையும் படைக்கிறானோ தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரவாணி என்ற பதம் ஈழத்தில் பாவிக்கப்படுகிறதா..?! அலி என்பார்கள்... இன்னும் போனால்.. ஒன்பது என்பார்கள்.

இப்ப திருநங்கைகள் என்று தானே பொதுத்தளங்களில்.. பாவிக்கினம். இந்தியாவில் கூட இவர்களின் நிலை இப்போ முன்னேறி வருகிறது. மேற்கு நாடுகள் வேறுபாடு காண முடியாத அளவுக்கு சாதாரண மனித வாழ்க்கையில் இவர்கள் இருப்பதை காணலாம். அந்த நிலை தாயகத்தில் வருவதும் நல்லது. மருத்துவ.. உளவியல்.. உளவள.. உதவிகள் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது.

ஒருபால் சேர்க்கை ஆட்களை விட இவர்கள்.. உண்மையில்.. அதிகம் கருசணைக்கு உட்பட வேண்டியவர்கள் என்று சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சமூகத்தின் .முக்கியமான ஒரு பிரச்சனை பற்றி விரிவாக எழுதியுள்ளார் .

அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது.

கூன் குருடு அலி நீங்கிப் பிறத்தல் அரிது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.