Jump to content

கலக்க காத்திருக்கும் கோல்கீப்பர் : வயசு 16....மதிப்பு 12ஆயிரம் கோடி?


Recommended Posts

கலக்க காத்திருக்கும் கோல்கீப்பர் : வயசு 16....மதிப்பு 12ஆயிரம் கோடி?

 

தினாறு வயசுல நாம என்ன செஞ்சிட்டு இருந்திருப்போம்? மாங்கு மாங்குனு பத்தாம் கிளாஸ் தேர்வுக்கு படிச்சிட்டு இருப்போம். இல்ல தெருவுல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்துருப்போம். கொடி நாளுக்கு 5 ரூபாய் கொடுங்கனு ஸ்கூல்ல கேட்டா, அதுக்கே அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும்
போய் நிப்போம்.

buff%20.jpg

ஆனால் இத்தாலியைச் சார்ந்த கோல்கீப்பரான 16 வயதே நிரம்பிய கியான்லூகி டொன்னருமாவுடைய மதிப்பு இப்பொழுது 170  மில்லியன் யூராக்களாம் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 12ஆயிரம் கோடி). இவரை இத்தாலி அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த கோல்கீப்பர்களுள் ஒருவருமான பஃப்னோடு ஒப்பிட்டுக் கொண்டாடுகின்றனர் இத்தாலி ரசிகர்கள்.

யாரு இந்தப் பையன்?

இத்தாலியின் சீரி-ஏ கால்பந்து தொடரில் விளையாடும் புகழ்பெற்ற அணியான ஏ.சி.மிலன் அணியின் கோல்கீப்பர் தான் இந்த டொன்னருமா. வயசு தான் 16,ஆனால் 196 செ.மீ (6அடி 5அங்குலம்) நீளத்தில் பார்ப்பவர்களையெல்லாம் பிரம்மிக்க வைக்கிறார் இவர். இவருடைய தாய் இவரது பிறப்பு சான்றிதழை எப்பொழுதும் கையிலேயே வைத்திருப்பாராம். ஏனெனில் யாரும் இவருக்கு 16 வயதென்று நம்ப மாட்டார்களாம்! ஏனென்றால் இவரது வளர்ச்சி அப்படி.
 

இவரது  அண்ணன் ஆன்டனியோவும் கோல்கீப்பர் தான்.அவர் ஜெனோவா அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை  சீரி-ஏவில் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள டொன்னருமா, இத்தாலியின் 21 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம் பெற்றுள்ளார். உயரம்தான் கோல்கீப்பர்களின் மிகப்பெரிய பலம் என்பதால்,அது இவருக்கு மிகவும் கை கொடுத்துள்ளது.

வளைத்துப் போட்ட ஏ.சி.மிலன்

கால்பந்தைப் பொருத்தவரையில் அணிகள் டீல் செய்வது எல்லாம் மில்லியன் டாலர்களில்தான். ஆனால் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் நட்சத்திர வீரர்கள் மட்டுமின்றி இளம் திறமைகளையும் தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்துகொள்வர். அப்படி ஒப்பந்தம் செய்யப்படும் இளம் வீரர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு தர முடியாததால் பண பலம் இல்லாத இரண்டாம்,மூன்றாம் டிவிஷன் கிளப்புகளுக்கு லோனில் சிறிது காலம் விட்டுவிடுவார்கள்.

அங்கு அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து விட்டு அணிக்கு திரும்ப அழைத்துக் கொள்வார்கள்.திருப்தியாக இல்லாத பட்சத்தில் விற்றும் விடுவார்கள். அப்படி சிறிது காலம் முன் பல அணிகளும் டொன்னருமாவை ஒப்பந்தம் செய்ய விரும்பின. அவர்களுல் இங்கிலாந்தின் மிகப்பெரிய அணிகளான மான்செஸ்டர் யுனைடடும் செல்சியும் கூட அடங்கும். 

gin%20.jpg

இத்தாலியின் பெரிய அணிகளான ஜுவன்டஸ், ரோமா போன்ற அணிகள் இவரை அணியில் இணைத்துக்கொள்ள இவரது திறமையை பரிசோதித்தன. அடிப்படையில் டொன்னருமா ஏ.சி.மிலன் அணியின் தீவிர ரசிகராம். இதைப் பயன்படுத்திய ஏ.சி.மிலன் அணி இவரது திறமையை அறிந்துகொண்டு இவரை ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒரு காலத்தில் ரொனால்டினோ, ககா, பெக்கம் என நட்சத்திர வீரர்களைக் கொண்டு ஐரோப்பாவில்  ஆதிக்கம் செலுத்திய மிலன் அணி பின்னாட்களில் பெரும் பின்னடைவை சந்தித்தது.

எதிர்பாராத வாய்ப்பு

மிலன் அணி இவரை ஒப்பந்தம் செய்தவுடன் லோனில் ஒரு சிறிய கிளப்பிற்கு அனுப்பிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிலன் அணியின் பயிற்சியாளர் மிஹாஜிலோவிக், அப்படி செய்யாமல் இவரை சீனியர் அணியில் இணைத்துக் கொண்டார். ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் நடந்த நட்பு ரீதியிலான போட்டியில் மாற்று கோல்கீப்பரான இறங்கிய டொன்னருமா, மிலன் அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடினார்.

அணியின் ஆஸ்தான கீப்பரான   டீயாகோ லோபஸ் தொடர்ந்து சொதப்பியதால் சீரி-ஏ தொடரில் நிரந்தர கோல்கீப்பரானார். இதன் மூலம் இத்தாலி கால்பந்து வரலாற்றில் மிக இளம் வயதில் அறிமுகமானகோல்கீப்பர்  என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இவரது ஆட்டத்தை பில்லியன் டாலர்களை வைத்திருக்கும் ஒவ்வொரு கால்பந்து கிளப்பும் கவனித்துக் கொண்டிருக்கின்றன.

மதிப்பு 170 மில்லியன் யூரோ?

ஆண்டில் இரண்டு முறை (ஜூலை மற்றும் ஜனவரி) கால்பந்து அணிகள் புதிய வீரர்களை வாங்கவும், விற்கவும் அனுமதிக்கப் படுவார்கள். அந்தக் காலகட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரரின் மார்க்கெட் ஜிவ்வென உயரும். பலத்த போட்டிகளின் இடையே பல மில்லியன் யூரோக்கள் கைமாற வீரர்களின்  ட்ரான்ஸ்பர் நடந்தேறும்.

இந்நிலையில் ஜனவரி மாதம் நெறுங்குவதால் இப்பொழுதே டொன்னருமாவை வாங்க பல அணிகள் போட்டி போடுகின்றன. முன்பு வாய்ப்பை தவறவிட்டமான்செஸ்டர் யுனைடட், செல்சி அணிகளும் இம்முறை டொன்னருமாவை வாங்க மும்முரமாய் உள்ளன.

இந்நிலையில் தான் உலகே வாயை பிளக்கும் வகையில், அறிக்கையை வெளியிட்டுள்ளார் டொன்னருமாவின் ஏஜென்டான மினா ரியோலா. “டொன்னருமாவை எந்த அணி வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.ஆனால் அத்ற்காக அவர்கள் 170 மில்லியன் யூரோக்கள் தர வேண்டியிருக்கும்” என்று மிகப்பெரிய குண்டை  வீசியுள்ளார்.

பொதுவாக கால்பந்து வீரர்கள் 34 வயதுக்கு மேல் அதிகம் விளையாட மாட்டர்கள்.அப்படி விளையாடினாலும் அவர்களால் அதே திறனோடு விளையாட முடியாது. ஆனால் கோல்கீப்பர்களை பொருத்தமட்டில் 40வயது வரை திறம்பட செயலாற்றமுடியும்.எனவே  டொன்னருமாவிற்கு இன்னும் சுமார் 25 ஆண்டுகள் காத்திருக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் இந்தத் தொகை சரிதான் என்கின்றனர் கால்பந்து நிபுணர்கள். “மற்ற சிறுவர்கள்
 

கம்ப்யூட்டரில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்க டொன்னருமா அதிசயம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.நான் டொன்னருமாவை இத்தாலியின் ஓவியர் மொடிகிலியானியைப் போல் பார்க்கிறேன். அவரைப் போல் இவரும் ஒரு அசாத்திய திறமைசாலி. உலக சாதனைத் தொகையை செலுத்தும் அணிக்கு அவர் விளையாடுவார்’ என்கிறார் ரியாலோ.

அடுத்த பஃப்பன்  ஆகனும் !

சரி இதற்கெல்லாம் டொன்னருமா என்னதான் சொல்கிறார்? “என்னால் இதை நம்பவே முடியவில்லை.தினமும் என்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டே இருக்குறேன். களத்திற்குள் நுழையும் போதெல்லாம் என் சிறு வயது கனவு நனவான மகிழ்ச்சி. அதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. என் திறமைகளை நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். இத்தாலி தேசிய அணியில் இடம் பிடிக்க வேண்டும். எனது ரோல் மாடலான பஃபனை  போன்று இத்தாலி அணிக்காக பல சாதனைகள் படைக்க வேண்டும்'' என்கிறார்.

அடுத்த பஃப்பன்  ஆக டொன்னருமாக்கு வாழ்த்துக்கள் !

http://www.vikatan.com/news/sports/55762.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.