Jump to content

பிரித்தானிய மாவீரர் நாள் - என்ன நடந்தது ?????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
12311301_10204268487465934_3457877734699
 
 
நான் நேற்றைய மாவீரர் நாள் பற்றி எழுதாது விடுவோம் என்றுதான் முதலில் எண்ணினேன். ஆனாலும் முகநூலில் பலர் எதோ நேரில் பார்த்தது போல் வாய்க்கு வந்தபடி எழுதியுள்ளதைப் பார்க்கும் போது ஒரு விடயத்தை நேரில் பார்த்தும் மற்றவர் அந்நிகழ்வு பற்றி தவறாக எண்ணும்போது மௌனமாக இருபது தவறு என்பதாலேயே இதை எழுதுகிறேன்.
 
ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருதடவை இதே மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இம்முறை பணியாளர்கள் காலை வெள்ளனவே வந்துவிட நாங்கள் சவுத்வெஸ்ட் பகுதியிலிருந்து பத்துப் பணியாளர்கள் 8.30 இக்கு மண்டபத்தை அடைந்தவுடன் எமக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.
 
10.30 இக்கு மக்களை உள்ளே விடுவார்கள் என்று கூறப்பட்டது. அனால் ஒரு பதினைந்து இருபது நிமிடம் கழியவே ஆட்களை உள்ளே விடத் தொடங்கினர். அந்த அரங்க அமைப்பு மற்றையவை போல் இல்லாது பல தனித்தனிப் பகுதிகளாகவும் தனித்தனிக் கதவுகளுடன் கூடிய வெளியே உள்ளே செல்வதற்கான வழிகளும் அமைக்கப்பட்டு இருந்தன. எல்லா இருக்கைகளும் படிகளில் ஏறிச் செல்வதான அமைப்பு. நாங்கள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பொறுப்பெடுத்து நின்றுகொண்டிருந்தோம். நான் நடுப்பகுதியில் நின்றேன் . பத்து ஐம்பதுபோல் மண்டபப் பாதுகாவலர் ஒருவர் தாம் இதில் நிற்கிறோம் நீங்கள் வெளியே நில்லுங்கள் என என்னையும் இன்னும் இருவரையும் வெளியே போகச் சொன்னார். எமது மக்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியாது நாம் நிர்ப்பதுதான் நல்லது என்று கூற, இப்போதைக்கு இந்த இடத்துக்கு யாரையும் விட மாட்டோம். ஆட்கள் வரும்போது வாருங்கள் என்று கூற நாம் கீழே சென்றுவிட்டோம். மக்கள் வராமலே மாவீரர் நாள் நிகழ்வை ஏற்பாட்டாளர்கள் ஆரம்பிக்க கொஞ்சம் கொஞ்சமாக ஒருபகுதிக்கு ஆட்கள் வரத் தொடங்கினர். அதுவும் மிக மெதுவாக.எமக்குச் சந்தேகம் இடம் மாற்றியதால் ஆட்கள் வரவில்லையோ என்று எண்ணியபடி தீபம் ஏற்றும் நிகழ்வு வரை கீழே நின்றோம்.
 
மலர் வணக்கம் செலுத்தப் பகுதி பகுதியாக ஏற்பாட்டாளர்கள் அழைத்துச் செல்வார்கள் என்று கூறியவுடன் ஒருபக்கத்தில் இருந்த அனைவரும் எழுந்துவிட்டனர். எல்லோரும் ஒன்றாக எழுந்ததை அவதானித்த மண்டபப் பாதுகாவளர்கள் உடனடியாக ஒருவரையும் உள்ளே வர அனுமதிக்காது நிறுத்திவிட்டனர். எம்மவர்கள் சொல் கேளாது ஒன்றாக இறங்கியவுடன் ஏற்கனவே அதிகளவானவர்கள் வந்துவிட்டனர் என்று கூறி அவர்கள் விடவில்லை என்று ஒருவர் கூற மூன்றில் ஒருபகுதி மக்கள் தானே வந்துள்ளனர் என நாம் கதைத்துக்கொண்டு இருக்க செயர்ப்பாட்டாளர் ஒருவர் வந்து என்னையும் இன்னொரு பெண்ணையும் வாசலுக்கு வரும்படி அவசரமாக அழைத்தார். அங்கே சென்றபின் தான் எனக்குத் தெரிந்தது வெளியே இத்தனை ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள் என்று. வெளியே உள்ளவர்கள் நாம் சொன்னால் நம்புகிறார்கள் இல்லை. நீங்கள் கூறுங்கள் என்றதும் நான் வெளிக்கதவைத் திறந்து கொண்டு வெளியே போனேன்.
 
எல்லோரும் உள்ளே ஆட்கள் நிரம்பியபடியால்தான் தம்மை விடவில்லை என எண்ணிக்கொண்டு ஆத்திரத்துடன் திட்டினார்கள். நான் அவர்களிடம் கோபம் கொள்ளவேண்டாம். அங்கே இடம் எல்லாம் காலியாக இருக்கிறது. மண்டபப் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் தான் விடுகிறார்கள் இல்லை. நாம் கதைத்து எப்படியாவது உங்களை உள்ளே விடச் செய்கிறோம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்றேன். ஆரவன் மண்டபத்துக்குப் பொருப்பு. அவனைக் கூப்பிடுங்கோ. எத்தினை பேர் வருவினம் எண்டு தெரியாமலோ மண்டப ஒழுங்கு செய்தனியள் என்று கண்டபடி திட்ட, அவர்களிடம் சந்த்தியம் செய்தும் இடம் இருபதாக அவர்கள் நம்பவே இல்லை.
 
நீங்கள் பூக்களையும் மெழுகுதிரியையும் வெளியே கொண்டுவாங்கோ. நாங்கள் இதில நிண்டபடி வணக்கிவிட்டுப் போகிறோம் என்று அவர்கள் கூற அவர்கள் பேச்சுக்கு மதிப்பளித்து உள்ளே சென்று மெழுகுதிரி பூக்கள் என்பவற்றை வெளியில் அனுப்பும்படி கூறிவிட்டு எமது மண்டபத்துக்குப் பொறுப்பானவர்களிடம் போனேன். என்னைக் கொண்டுபோய் கதைக்க விடுங்கோ நான் கதைக்கிறன் என்று கூற எத்தினையோ பேர் கதைத்தாச்சு அவள் கேட்கிறாள் இல்லை என்று பதில். நாமும் விடவில்லை. இல்லை அவளிடம் கூட்டிக்கொண்டு போங்கோ என்று அவளிடம் சென்றால், பொறுப்பாளர் என ஒரு முப்பத்தைந்து வயதுக்குள் உட்பட்ட பெண் ஒருத்தி நிக்கிறாள். நானும் இன்னும் சிலரும் ஆட்கள் தூரத்திலிருந்து வந்திருக்கினம். பிள்ளைகளோடு வந்திருக்கினம்.குளிர் மழை. தயவுசெய்து திறந்துவிடு என்று கெஞ்சாத குறையாக அவளிடம் கேட்டும் அவள் ஒன்றையும் அசட்டை செய்யாது அப்படியே நிற்கிறாள்.
 
திரும்பத் திரும்ப அவளிடம் கதைத்து ஒருவாறு அவளிடம் கொஞ்ச, ஆட்களை வெளியே அனுப்புங்கள் விடுகிறேன் என்றுவிட, அதில் உணவு மற்றும் பொருட்கள் வாங்கிக்கொண்டு நின்றவர்களிடம் சென்று தயவுசெய்து மலர்வணக்கம் செலுத்தியவர்கள் போங்கள். நீங்கள் போனால்த்தான் மற்றவர் உள்ளே வரலாம் என்றுகூறி வெளியே அனுப்பியபின் மீண்டும் அவளிடம் வந்து கெஞ்சினால் சரி திறக்கச் சொல்கிறேன் என்றாள். உடனே கீழே சென்று காவல் நின்றவனிடம் அவள் திறக்கச் சொல்லிவிட்டாள் என்றேன். எனக்கு இன்னும் செய்தி வரவில்லை வந்தால்த்தான் திறப்பேன் என்றுவிட்டான். நீ போன் செய்து கேள் என்றதற்கு வோக்கியில் தனக்கு message வந்தால் மட்டும்தான் தான் திறப்பேன் என்றுவிட்டான். இப்படியே மாறிமாறி கீழேயும் மேலேயும் அலைந்து மற்றும் பலரும் கதைத்து கெஞ்சிக் கேட்டதன்பின் அவள் திறக்கச் சம்மதித்தாலும். வந்தவர்களை இலகுவாக நடமாட விடாது எல்லா இடமும் இரும்புக் கேடர்களும் ஆட்களையும் போட்டு தாம் நினைத்தவாறே எம்மை நகர்த்தினார்கள். மூன்றில் இரண்டு பகுதியை முற்றாக அடைத்துவிட்டு ஒரு பகுதியில் மட்டும் ஆட்களை இருக்கவிட்டு எத்தனை தூரம் எல்லோருக்கும் வெறுப்பை உண்டாக்க முடியுமோ உண்டாக்கினர்.
 
 
இந்த மண்டபம் பிரபல்யமானது. ஒரே நேரத்தில் பன்னிரண்டாயிரம் பேர் இருக்கக் கூடிய மண்டபத்தில் இரண்டாயிரம் பேரைக் கூட ஒரே நேரத்தில் இருக்க அனுமதிக்காமைக்கு நிட்சயமாய் பின்புலத்தில் வேறு பெரிய அரசியல் காரணம் இருக்கவேண்டும். பொறுப்பாளராக இருந்த பெண்ணுக்கு பணம் கொடுத்து இலங்கை அரசுகூட இதைச் செய்திருக்கும். வெளியே இதை வாசிப்பவருக்கு நிட்சயமாய் நான் எழுதுவது விளங்கப் போவதில்லை. அங்கு உள்ளே மண்டத்துள் வந்தவர்களுக்கு நிட்சயமாய் விளங்கும்.
 
 
25000- 75000 பேர் வந்த மாவீரர் நிகழ்வுகளையே மிக இலகுவாகக் கையாண்டவர்கள் நாங்கள். இது திட்டமிட்டே மிகத் தந்திரமாகக் குழப்ப முனைந்துள்ளனர்.
 
இன்னும் எத்தனையோ தடைகள் அங்கு ஏற்ப்பட்டன எல்லாம் எழுதக் கை உளைகிறது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

25000- 75000 பேர் வந்த மாவீரர் நிகழ்வுகளையே மிக இலகுவாகக் கையாண்டவர்கள் நாங்கள். இது திட்டமிட்டே மிகத் தந்திரமாகக் குழப்ப முனைந்துள்ளனர்.

வரும் காலங்களில் கவனமாக இருந்து......திட்டமிடலுடன் ஒழுங்கு செய்க.
இது விளையாட்டு அல்ல. இனம் சம்பந்தப்பட்டது.

Link to comment
Share on other sites

உங்கள் கஷ்டம் புரிகின்றது .

அதைவிட நிரம்பி வெளியில் நின்ற மக்கள் தொகையையும் பார்த்தோம் .

ஆனால் டி வி யில் நிகழ்சிகளை பார்க்கும் போது இன்னமும் அருவரியில் நிற்பவர்களுடன் தான் நீங்களுமா என்ற கேள்வியும் எழுகின்றது .

லண்டன் ,கனடா ,சுவிஸ் ,பிரான்ஸ் எந்த நாடாகட்டும் மாவீரர் நிகழ்சிகளை பார்க்கும்போது சிங்களவன் மாறினாலும் நீங்கள் மாறப்போவதில்லை என்றே தோன்றுகின்றது .

இதை விட பெரிய மாவீரர் விழா எடுக்க மைத்திரியை தள்ளி மகிந்தாவை கொண்டுவருவோம் ,

நாட்டில் மக்கள் படும் பாட்டை பற்றி எமக்கு என்ன அக்கறை மாவீரர் விழா தான் எமக்கு முக்கியம் .

Link to comment
Share on other sites

வரலாறு காணாத நிகழ்வு. உலகில் எந்த விடுதலை போராட்ட அமைப்பும் இத்தனை ஆடம்பரமாக இறந்த வீரர்களை நினைவுகூர்ந்தது கிடையாது. ஒரு மாபெரும் களியாட்டு நிகழ்ச்சிபோல அரங்கை  நிர்மாணித் துள்ளீர்கள். பாராட்டுக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

25000- 75000 பேர் வந்த மாவீரர் நிகழ்வுகளையே மிக இலகுவாகக் கையாண்டவர்கள் நாங்கள். இது திட்டமிட்டே மிகத் தந்திரமாகக் குழப்ப முனைந்துள்ளனர்.

இந்த கருத்துடன் உடன் படுகின்றேன் xல் ஹோலில் உள்ள ஹோல் பாதுகாப்பு அதிகாரிகளின் கடுமையான நடவடிக்கைகள் பின்பே சில மின் இணைப்புகளிட்க்கு அனுமதி தந்தார்கள் ஆனால் இங்கு காரணமேயில்லாமல் அதே  அலங்கார மின் இணைப்புகளின் மின் இணைப்பை துண்டித்தார்கள்.அதை விட கொடுமை நாட்டிய எழுச்சி நிகழ்வின் அசிரியர்கள் விசேட மண்டப அனுமதி அட்டையை காட்டியும் வரிசையில் வா என்று இறுமாப்புடன் சொல்லிய பாதுகாவலர்களை என்னவென்று சொல்வது . பல வருடங்களாக பொது வெளியில் சொல்ல முடியாத அனுமதிகள் தளர்வுற்று இந்த மாவீரர் நிகழ்வு நடைபெறும் நேரம் பார்த்து மண்டப பூசாரிகள் மூலம் சொறிலங்கா காரியத்தை சாதித்துள்ளது என்று அடித்து சொல்லலாம்.

Link to comment
Share on other sites

உண்மை நிகழ்வை அறியத்தந்த மெசொபொத்தேமியா சுமேரியர், பெருமாள் அவர்களுக்கு நன்றி! சில மீடியாக்களில் செய்திகளைப் பார்த்தபோது, ஆயிரக்கணக்கானவர்கள் வெளியில் திரண்டு நிற்குமளவிற்கு உள்ளே இடமில்லை என்றே எண்ணத்தோன்றியது. 


இன்றைய தமிழ் மக்களிடையே போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது இந்தளவிற்கு எப்படிப் பலமாக நுளைந்துள்ளது....? தமிழர்களின் பழைய சரித்திரங்களைப் படிக்கும்போது ஏற்படும். அதற்கான விடைகளில் ஒன்று இன்று கிடைத்துள்ளது. சில நூற்றாண்டு காலமாகத் தமிழரும் பிரித்தானியாவிற்கு அடிமையாகி அவர்களுடைய கேவலமான பண்பாடுகளையும் பயின்று வளர்ந்துள்ளோம் என்பதே அது. இவ்வருடத்திய மாவீரர் நாள் நிகழ்வில் மண்டபப் பொறுப்பாளர்களான பிரித்தானியர்கள் நடந்துகொண்ட முறை, அதனை மேலும் உறுதிப்படுத்தி நிற்கிறது.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Queen-Elizabeth-II-and-Prince-Philip.jpg

britain-remembrance.jpg

ராணி மக்கள் படும் பாட்டுக்க.. நாட்டுக்காக மக்களிக்காக இறந்த வீரர்களுக்கு இது செய்த்தான் வேணுமா. சிங்களவனைப் பாருங்க..அவன் திருந்தினாலும் நீங்கள் திருந்தப் போறதில்லை.

நாட்டுக்காக இறந்தவையை நினைவு கூற ஏன் இந்த ஆடம்பரம் அலங்காரம்.. கோட் சூட் அவசியமா. வெறும் ஜட்டியோட வந்து நினைவு கூறலாமில்ல.

=================================

அந்த அம்மணி மாவீரர் நாள் நிகழ்வுகள் திட்டமிட்டு குழப்பப்படும் வகையில் பாதுகாப்பு கெடுபிடி என்ற போர்வையில் சில நிகழ்வுகள் நடந்திருக்கு என்று எழுத வர.. அதன் பின்புலத்தில் "மக்கள் இதயம் வெல்லும்" ரணில் மைத்திரி மகிந்த சந்திரிக்கா.. நரிவேலை நடந்திருக்கு என்று சொல்ல வர..

அதுக்குள்ளும் சிலர் மாவீரர் தின காழ்ப்புணர்வுகளை கொட்டுவதையே முதன்மையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எமக்கென்றான அந்த அடையாளம்.. வெளிப்படும் சில தருணங்களில்.. சில உச்ச ஆயத்தங்களோடு பாதுகாப்போடு சரியான நேர்த்தியான அடையாளங்களோடு.. ஒழுங்கோடு.. நிகழ்வுகள்..அமைவது.. அமைக்கப்படுவது.. நல்லம். எதிர்காலத்தில் கடைப்பிடிக்க முயல்வோம். மாவீரர்களின் நிலையை நாமும் சேர்ந்து தாழ்த்தாதிருப்போம்..!

சிங்களவனின் தமிழ் மக்களின் இதயத்தை வெல்வது என்ற வார்த்தைப் பிரயோகத்துக்கு செயல்வடிவம் கொடுக்க எம்மிலும் சிலர் உள்ளனர். அவனின் இதயத்தை வெல்வது என்பதன் உள்ளார்த்தம்.. எல்லாத்தையும் குழப்பி அடித்து.. தமிழனை நடுத்தெருவில் நிறுத்தி.. மொத்தத்தையும் சிங்கள மயமாக்கிக் கொள்வது. இப்படி எத்தனையோ இதயத்தை வெல்ல வந்தவை கதை பார்த்தாச்சு. தமிழ் மக்களின் இதயத்தை யாரும் அவர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யாமல் ஏமாற்றி வெல்ல முடியாது. இதை சிங்களவனுக்கும் உலகிற்கும் அடித்து மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய கடப்பாடும் தமிழ் மக்களுக்கு உண்டு. அதில் மாவீரர் நாள் நிகழ்வுகளும் ஒன்று.

Link to comment
Share on other sites

6 hours ago, arjun said:

உங்கள் கஷ்டம் புரிகின்றது .

அதைவிட நிரம்பி வெளியில் நின்ற மக்கள் தொகையையும் பார்த்தோம் .

ஆனால் டி வி யில் நிகழ்சிகளை பார்க்கும் போது இன்னமும் அருவரியில் நிற்பவர்களுடன் தான் நீங்களுமா என்ற கேள்வியும் எழுகின்றது .

லண்டன் ,கனடா ,சுவிஸ் ,பிரான்ஸ் எந்த நாடாகட்டும் மாவீரர் நிகழ்சிகளை பார்க்கும்போது சிங்களவன் மாறினாலும் நீங்கள் மாறப்போவதில்லை என்றே தோன்றுகின்றது .

இதை விட பெரிய மாவீரர் விழா எடுக்க மைத்திரியை தள்ளி மகிந்தாவை கொண்டுவருவோம் ,

நாட்டில் மக்கள் படும் பாட்டை பற்றி எமக்கு என்ன அக்கறை மாவீரர் விழா தான் எமக்கு முக்கியம் .

நாட்டில் நாபாவுக்கு விழா எடுக்கிறமெண்டு ஒரு இணைப்பை இணைத்திருந்தீர்களே...................

உங்களின் கேவலமான நடவடிக்கைகளை மாவீரர் சம்பத்தப்பட்ட திரிகளில் தயவுசெய்து காட்டாதீர்கள்.

 

 

சுமே அக்கா,

தகவலுக்கு நன்றி. முகப்புத்தகத்தில் பார்த்து நொந்திருந்தேன். 

சிலவேளைகளில் குண்டுவெடிப்புக்கு அஞ்சியும் அதிகம் பாதுகாப்பு போட்டிருக்கலாம். அடுத்தவருடம் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள் என நம்புகின்றோம்.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி ..! மண்டபத்தில் நீங்கள் நின்று திரட்டித் தந்த செய்திகளுக்கு நன்றி...!

மாவீரர் நிகழ்வு என்பது நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்கள் என்பதையும் கடந்து ஒவ்வொரு ஈழத்தமிழர் குடும்பத்திலும் சிலர் அங்கே விதைக்கப் பட்டிருக்கின்றார்கள் . அதனால்தான் அன்று எல்லோரும் தத்தம் குடும்பங்களுடன் வருகின்றார்கள். எல்லா நாட்டிலும்தான் போர்வீரர்கள் மரணித்துள்ளார்கள். ஆனால் ஈழத்து மறவர்களுக்காக உலகம் முழுதும் ஈழமக்கள் வீர வணக்கம் செலுத்துவது போல் வேற்று இணத்தவர் எவரேனும் செய்கின்றனரா என எனக்குத் தெரியாது.

அவர்களின் தியாகங்கள் ஒருபோதும் வீண் போகாது. "எறும்பூரக் கல்லும் தேயும்". இதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயம் உலகின் பூட்டிய கதவுகளைத் திறக்கச் செய்யும்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வீட்டில் இருந்தும் அனைவரும் சென்றிருந்தார்கள் அவர்களும் நீங்கள் கூறுவது போன்றே கூறினார்கள் கூடவே பாதுகாப்புக்காக இருந்தவர்கள் மீதும் மிகவும் கோபப்பட்டார்கள் பாடசாலைகளுக்கு போகாது அழைத்து சென்ற பிள்ளைகள் கூட அவர்கள் நடத்திய விதத்தை பார்த்து விரகத்தி உற்றார்கள். அம்மாவுக்கு வயசு 79 அவரைக்கூட வயசானவர் என்று பார்க்காது அரீனா மண்டப பாதுகாவலர்கள் நடத்தி உள்ளார்கள் .. நிச்சயமாக இதனை பார்க்கும் போது சிங்களவனோ அல்லது அவர்களுக்கு துனைபோவவர்களிடமோ பெருந்தொகை லஞ்சம் பெறப்பட்டுள்ளது என்பதை உணரமுடிகின்றது.

சுவி கூறியதுபோல அவர்களின் தியாகங்கள் ஒருபோதும் வீண் போகாது. "எறும்பூரக் கல்லும் தேயும்". இதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயம் உலகின் பூட்டிய கதவுகளைத் திறக்கச் செய்யும்....! என்பதினை நாமும் மிகவும் உறுதியுடன் நம்புகின்றோம். 

சகோதரி மண்டபத்தில் நீங்கள் நின்று திரட்டித் தந்த செய்திகளுக்கு நன்றி. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இங்கு யாரும் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டாம்.
மாவீரர் அஞ்சலி என்பது, எம் மண்ணுக்காக உயிர் நீர்த்த போராளிகள், பொதுமக்களை நினைவு கூறும் திரு நாள். இதை குழப்ப நினைப்பவர்கள் நோக்கம் நிறைவேறாது.

தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, arjun said:

உங்கள் கஷ்டம் புரிகின்றது .

அதைவிட நிரம்பி வெளியில் நின்ற மக்கள் தொகையையும் பார்த்தோம் .

ஆனால் டி வி யில் நிகழ்சிகளை பார்க்கும் போது இன்னமும் அருவரியில் நிற்பவர்களுடன் தான் நீங்களுமா என்ற கேள்வியும் எழுகின்றது .

லண்டன் ,கனடா ,சுவிஸ் ,பிரான்ஸ் எந்த நாடாகட்டும் மாவீரர் நிகழ்சிகளை பார்க்கும்போது சிங்களவன் மாறினாலும் நீங்கள் மாறப்போவதில்லை என்றே தோன்றுகின்றது .

இதை விட பெரிய மாவீரர் விழா எடுக்க மைத்திரியை தள்ளி மகிந்தாவை கொண்டுவருவோம் ,

நாட்டில் மக்கள் படும் பாட்டை பற்றி எமக்கு என்ன அக்கறை மாவீரர் விழா தான் எமக்கு முக்கியம் .

உங்களின் முகப்புத்தகத்தில் டெற்றோல் சோப்பை  உபயோகிக்குமாறு கூறியிருந்தேன்.அதையே இங்கும்  கூறுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிள் லாஜிக்....

பணத்தினை போட்டு பெரிய மண்டபத்தினை புக் பண்ணி, மக்களிடையே உண்டியல், பூ விற்பனை வருமானம் மூலம், அந்த பணம் தந்தவர்களுக்கு, நல்ல 'return' உடன் பணம் திரும்பிய வரை எல்லாம் நல்லாக நடந்தது.

இம்முறை அந்த பெரிய பார்டிகள், ஆக்கள் வர மாட்டினம் என்று, ரிஸ்க் எடுக்கப் பயப்பட, சின்ன ஹாலுக்கு  போனார்கள்.

இந்த முறை வந்த சனத்தைப் பார்த்து அடுத்த முறை எல்லாம் ஓகே ஆயிடும்.

இந்த முறை தடங்கலுக்கு வருந்துவோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருடா வருடம் எங்கட சனத்தில கொஞ்சம் நொட்டை சொல்லிக் கொண்டு தான் இருக்கு.. ஆனால் மாவீரர் தின நிகழ்வுகள் நடக்குது. அது நடக்காமல் நின்றாலும் நொட்டை சொல்லும். ஏதோ மாவீரர்களை நினைவு கூறுவது அடுத்தவன் சங்கதி மாதிரி ஆக்கிடனும் என்று நினைக்கிறது தான் இத்தனைக்கும் காரணம். அது எங்கட கடமை என்றால்.. குற்றம் குறை.. நொட்டை.. நொடிப்புக்கு பதில்.. இன்னும் முன்னேற்ற கரமாக எப்படிச் செய்யலாம் என்ற ஆலோசனை தான் வரும். இது........................ நம்ம முனியர் மாதிரி ஆக்கள்.. தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று போட்டிட்டு.. அடுத்த முறை இன்னொரு பிரச்சனை வர அதுக்கும் ஓடியாந்து நாலு சொல்லிட்டு போக வேண்டியான். எவனோ.. பாடுபட்டு காரியம் செய்ய சில பேர் சும்மா.. பேஸ்புக்கிலும் இணையத்திலும் தங்கட கற்பனைகளை.. காழ்ப்புணர்வுகளை எழுதிக்கிட்டு திரிய வேண்டியான். இதையும் தாண்டி எல்லாம் நகரும்.. நல்ல விதமாக. அதற்கு மாவீரர்களின் ஆசி இருக்கும்.

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

சிம்பிள் லாஜிக்....

பணத்தினை போட்டு பெரிய மண்டபத்தினை புக் பண்ணி, மக்களிடையே உண்டியல், பூ விற்பனை வருமானம் மூலம், அந்த பணம் தந்தவர்களுக்கு, நல்ல 'return' உடன் பணம் திரும்பிய வரை எல்லாம் நல்லாக நடந்தது.

இம்முறை அந்த பெரிய பார்டிகள், ஆக்கள் வர மாட்டினம் என்று, ரிஸ்க் எடுக்கப் பயப்பட, சின்ன ஹாலுக்கு  போனார்கள்.

இந்த முறை வந்த சனத்தைப் பார்த்து அடுத்த முறை எல்லாம் ஓகே ஆயிடும்.

இந்த முறை தடங்கலுக்கு வருந்துவோம்...

இந்த கருத்துக்கள் உங்களின் நிஜ முகத்திரையை காட்டுது கற்பனைகள் எல்லாருக்கும்தான் வரும் ஆனால் எழுத வராதுங்க அதிலை நீங்க மிஸ் பண்ணிட்டிங்க . யார் எது சொன்னாலும் மாவீரர் நிகழ்வு நடக்கும்க  எதிர்காலங்களில் நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Surveyor said:

நாட்டில் நாபாவுக்கு விழா எடுக்கிறமெண்டு ஒரு இணைப்பை இணைத்திருந்தீர்களே...................

உங்களின் கேவலமான நடவடிக்கைகளை மாவீரர் சம்பத்தப்பட்ட திரிகளில் தயவுசெய்து காட்டாதீர்கள்.

 

 

சுமே அக்கா,

தகவலுக்கு நன்றி. முகப்புத்தகத்தில் பார்த்து நொந்திருந்தேன். 

சிலவேளைகளில் குண்டுவெடிப்புக்கு அஞ்சியும் அதிகம் பாதுகாப்பு போட்டிருக்கலாம். அடுத்தவருடம் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள் என நம்புகின்றோம்.     

முகநூல் பதிவுகளைப் பார்த்து வெறுத்துப்போய் தான் இதை எழுதியது.

13 hours ago, arjun said:

உங்கள் கஷ்டம் புரிகின்றது .

அதைவிட நிரம்பி வெளியில் நின்ற மக்கள் தொகையையும் பார்த்தோம் .

ஆனால் டி வி யில் நிகழ்சிகளை பார்க்கும் போது இன்னமும் அருவரியில் நிற்பவர்களுடன் தான் நீங்களுமா என்ற கேள்வியும் எழுகின்றது .

லண்டன் ,கனடா ,சுவிஸ் ,பிரான்ஸ் எந்த நாடாகட்டும் மாவீரர் நிகழ்சிகளை பார்க்கும்போது சிங்களவன் மாறினாலும் நீங்கள் மாறப்போவதில்லை என்றே தோன்றுகின்றது .

இதை விட பெரிய மாவீரர் விழா எடுக்க மைத்திரியை தள்ளி மகிந்தாவை கொண்டுவருவோம் ,

நாட்டில் மக்கள் படும் பாட்டை பற்றி எமக்கு என்ன அக்கறை மாவீரர் விழா தான் எமக்கு முக்கியம் .

 

மாவீரர் நாள் கணக்குகள் சரியாகக் காட்டப்படாது இருப்பது நேர்மையற்றதாயினும் மாவீரர்நாளை ஒழுங்கமைத்து இத்தனை ஆயிரம் பேர்களை ஒன்று திரட்ட இவர்களால் மட்டுமே முடியும். இன்னும் இலங்கை அரசுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இந்த தமிழர்கள் ஒன்று கூடுவதும் உணர்வுடன் நிகழ்வுகளை நடாத்துதலுமே. இதையும் நாம்கைவிட்டால் எம்மவர் எல்லாம் மறந்து தாம் தம் வேலையைப் பார்ப்பதை யாராலும் தடுக்கமுடியாது போய்விடும். அத்துடன் இங்கு இப்படியான நிகழ்வுகள் தொடர்வதனால்த்தான் அதனை முறியடிக்க இலங்கை அரசு அங்கு சில தார்த்தல்களைச் செய்கிறது. நாட்டுக்குக் கொடுப்பவர்கள் கொடுத்துக்கொண்டு இருக்கக் கதைப்பவர்கள் கதைத்துக்கொண்டு மட்டுமே இருக்கின்றனர். தமிழ் இனம் இருக்கும் வரை நாம் எந்தத் தடைவரினும் எத்தனை முரண்பாடுகள் இருப்பினும் மாவீரரை நினைவுகூர்ந்து நிர்ப்பது அவசியம். செலவு குறைவு என்று வெட்டவெளியில் செய்வோமாக இருந்தால் காற்று மழை குளிர் என்னும் புறக் காரணிகளால் மக்கள் வராமல் நிற்ப்பார்கள். இது நிலையான ஒரு இடம் என்பதனாலேயே வருகின்றனர். பிழை பிடிக்க ஆரம்பித்தால் எங்கும் பிடிக்கலாம்.

 

13 hours ago, hasan said:

வரலாறு காணாத நிகழ்வு. உலகில் எந்த விடுதலை போராட்ட அமைப்பும் இத்தனை ஆடம்பரமாக இறந்த வீரர்களை நினைவுகூர்ந்தது கிடையாது. ஒரு மாபெரும் களியாட்டு நிகழ்ச்சிபோல அரங்கை  நிர்மாணித் துள்ளீர்கள். பாராட்டுக்கள். 

இந்த மேடை அமைப்பதை வல்வெட்டித் துறையின் 73 bach என்று சொல்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தாமே பொறுப்பு எடுத்து செய்து முடிக்கின்றனர். மற்ற இனம் செய்வது போல் தான் நாமும் செய்யவேண்டியதில்லை. மாவீரரை நினைத்து எம்மனங்களை உயிர்ப்பிக்கவுமே இந்நிகழ்வு. அது உங்களுக்கு களியாட்ட நிகழ்வு போல் தோன்றினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழரசு said:

எனது வீட்டில் இருந்தும் அனைவரும் சென்றிருந்தார்கள் அவர்களும் நீங்கள் கூறுவது போன்றே கூறினார்கள் கூடவே பாதுகாப்புக்காக இருந்தவர்கள் மீதும் மிகவும் கோபப்பட்டார்கள் பாடசாலைகளுக்கு போகாது அழைத்து சென்ற பிள்ளைகள் கூட அவர்கள் நடத்திய விதத்தை பார்த்து விரகத்தி உற்றார்கள். அம்மாவுக்கு வயசு 79 அவரைக்கூட வயசானவர் என்று பார்க்காது அரீனா மண்டப பாதுகாவலர்கள் நடத்தி உள்ளார்கள் .. நிச்சயமாக இதனை பார்க்கும் போது சிங்களவனோ அல்லது அவர்களுக்கு துனைபோவவர்களிடமோ பெருந்தொகை லஞ்சம் பெறப்பட்டுள்ளது என்பதை உணரமுடிகின்றது.

சுவி கூறியதுபோல அவர்களின் தியாகங்கள் ஒருபோதும் வீண் போகாது. "எறும்பூரக் கல்லும் தேயும்". இதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயம் உலகின் பூட்டிய கதவுகளைத் திறக்கச் செய்யும்....! என்பதினை நாமும் மிகவும் உறுதியுடன் நம்புகின்றோம். 

சகோதரி மண்டபத்தில் நீங்கள் நின்று திரட்டித் தந்த செய்திகளுக்கு நன்றி. 
 

நேரில் பார்த்தவர்களால் புரிந்துகொள்ள முடியும். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

இந்த மேடை அமைப்பதை வல்வெட்டித் துறையின் 73 bach என்று சொல்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தாமே பொறுப்பு எடுத்து செய்து முடிக்கின்றனர். மற்ற இனம் செய்வது போல் தான் நாமும் செய்யவேண்டியதில்லை. மாவீரரை நினைத்து எம்மனங்களை உயிர்ப்பிக்கவுமே இந்நிகழ்வு. அது உங்களுக்கு களியாட்ட நிகழ்வு போல் தோன்றினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

72 batch என்று வந்திருக்கவேண்டும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நான் தான் ஆண்டை மாறிப் போட்டுவிட்டேன் கிருபன்

நீங்கள் வரவில்லையா இம்முறை

 

2 hours ago, nedukkalapoovan said:

வருடா வருடம் எங்கட சனத்தில கொஞ்சம் நொட்டை சொல்லிக் கொண்டு தான் இருக்கு.. ஆனால் மாவீரர் தின நிகழ்வுகள் நடக்குது. அது நடக்காமல் நின்றாலும் நொட்டை சொல்லும். ஏதோ மாவீரர்களை நினைவு கூறுவது அடுத்தவன் சங்கதி மாதிரி ஆக்கிடனும் என்று நினைக்கிறது தான் இத்தனைக்கும் காரணம். அது எங்கட கடமை என்றால்.. குற்றம் குறை.. நொட்டை.. நொடிப்புக்கு பதில்.. இன்னும் முன்னேற்ற கரமாக எப்படிச் செய்யலாம் என்ற ஆலோசனை தான் வரும். இது........................ நம்ம முனியர் மாதிரி ஆக்கள்.. தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று போட்டிட்டு.. அடுத்த முறை இன்னொரு பிரச்சனை வர அதுக்கும் ஓடியாந்து நாலு சொல்லிட்டு போக வேண்டியான். எவனோ.. பாடுபட்டு காரியம் செய்ய சில பேர் சும்மா.. பேஸ்புக்கிலும் இணையத்திலும் தங்கட கற்பனைகளை.. காழ்ப்புணர்வுகளை எழுதிக்கிட்டு திரிய வேண்டியான். இதையும் தாண்டி எல்லாம் நகரும்.. நல்ல விதமாக. அதற்கு மாவீரர்களின் ஆசி இருக்கும்.

இப்படியானவர்கள் எதைச் செய்தாலும்  நொட்டை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவ்வளவே.

 

 

வருகை தந்து கருத்துக்களைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மண்டபத்தில் எத்தனையோ பெரிய இசை நிகழ்ச்சிகள் எல்லாம் அரங்கம் நிறைந்த மக்கள் கூட்டத்துடன் ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடந்திருக்குது. 12 000 பேர் வரையில் அமர்ந்திருக்கலாம் என எழுதியிருக்கும் சுமோ மனேஜர் இலங்கை அரசிடம் காசை வாங்கிக் கொண்டு மக்களை உள்ளுக்குள் விடவில்லை என எழுதியிருப்பது கொமடியாய் இல்லை...இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி நொண்டிச் சாட்டு சொல்லிக் கொண்டு இருக்கப் போறீங்கள். பொறுப்பெடுத்த உங்களைப் போன்றவர்கள்,உங்கள் அமைப்பால் ஒழுங்காக நடத்த முடியவில்லை என்ட உண்மையை ஒத்துக் கொள்ளலாமே.

உள்ளுக்குள் இடம் இருந்தும் உள்ளே இடம் விடாத அந்த மனேஜர் மீது உங்கள் அமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

72 batch என்று வந்திருக்கவேண்டும்.

 

 

துண்டுவிழும் தொகை £ 36,845.20 நினைக்கவே பாவமாக் கிடக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

நான் எழுதியது சாதாரண பண விசயம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லையே. நிகழ்ச்சி ஒருங்கமைபாளர்கள் எல்லோரும் தனிப் பட்ட ரீதியில் கதைப்பது தான்.

பண விடயமாக தானே, இரு இடத்தில் நடத்திய கூத்துகளையும் பார்த்து இருக்கிறோம்.

இங்கே, இம்முறை தவறு எங்கே என்று தெரியா நிலையில் ஆளுக்கு ஆள் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்கள்.

இன்றுள்ள சூழ்நிலையில், இந்த நிகழ்வு குறித்த, தொலைபேசி மூலமான, பயமுறுத்தல் உண்டாக்கக் கூடிய தவறான தகவல்களே, மண்டப நிர்வாகிகளை வெருள வைத்திருக்கும் என்ற உள்வீடுக் தகவலும் உண்டு.

வழமையாக நடைபெறும் O2 மண்டப நிர்வாகம், இந்த தொலைபேசி பயம் (புலி தீவிரவாதிகள் பூச்சாண்டி) அத்துப்படி. அதனால் பயம் இல்லை. இம்முறை wembely புதிய மண்டபம். அதுவே பிரச்சனைகளுக்கு காரணம் என்பது கிடைத்த உள்வீடுத் தகவல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

நெடுக்கர்,

நான் எழுதியது சாதாரண பண விசயம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லையே. நிகழ்ச்சி ஒருங்கமைபாளர்கள் எல்லோரும் தனிப் பட்ட ரீதியில் கதைப்பது தான்.

பண விடயமாக தானே, இரு இடத்தில் நடத்திய கூத்துகளையும் பார்த்து இருக்கிறோம்.

இங்கே, இம்முறை தவறு எங்கே என்று தெரியா நிலையில் ஆளுக்கு ஆள் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்கள்.

இன்றுள்ள சூழ்நிலையில், இந்த நிகழ்வு குறித்த, தொலைபேசி மூலமான, பயமுறுத்தல் உண்டாக்கக் கூடிய தவறான தகவல்களே, மண்டப நிர்வாகிகளை வெருள வைத்திருக்கும் என்ற உள்வீடுக் தகவலும் உண்டு.

வழமையாக நடைபெறும் O2 மண்டப நிர்வாகம், இந்த தொலைபேசி பயம் (புலி தீவிரவாதிகள் பூச்சாண்டி) அத்துப்படி. அதனால் பயம் இல்லை. இம்முறை wembely புதிய மண்டபம். அதுவே பிரச்சனைகளுக்கு காரணம் என்பது கிடைத்த உள்வீடுத் தகவல். 

பணம் இல்லாமலும் எதுவும் நடக்காது தானே. தாயகத்தில் மாவீரர் வளைவுகள் வைக்கும் போதும் சிலர் இப்படி முணுமுணுத்திருக்கிறார்கள். சனம் கஸ்டப்படுகுது இவைக்கு ஆடம்பரம் என்று. ஆனால் அந்த வளைவுகளை கிராம மக்கள்.. வட்ட.. கோட்ட மக்கள் தான் அதிகம் தங்கள் பங்களிப்பில் அமைப்பார்கள்.

மாவீரர் தினத்தை மாவீரர்களுக்கு மக்களும் அவர் தம் குடும்பங்களும் அஞ்சலி செய்யும் வகையில் செய்யனுன்னா.. செலவு அமையும். அந்தச் செலவை நிவர்த்திக்க அவர்களும் வழிமுறைகள் பார்க்கத்தானே வேண்டும். அதில் தவறில்லையே. அந்தப் பணத்தை தவறாகப் பயன்படுத்தினால் தான் குறை குற்றம் சொல்லனும். மற்றும்படி அவர்கள் அதனை சேர்க்கும் நோக்கம் கருதி பாவிப்பதை.. சேமிப்பதை தவறென்று சொல்ல முடியாது தானே.

மேலும்.. பிரமாண்டம் கூட கூட செலவும் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ப வருமானம் இல்லையேல்.. அவர்களும் என்ன செய்வார்கள். இப்போ இலவசமாக நடத்தப்பட்ட ஜி ரிவி க்கு மக்கள் என்ன நன்கொடையை அள்ளியா கொடுத்திருக்கினம். விஜய் ரீவிக்கு கட்டும் காசில் ஒரு சின்னத்தொகையை கொடுத்தால் கூட ஜி ரி வி தப்பும். அப்படிப் பார்க்கிறப்போ மாவீரர்கள் போட்ட வாழ்க்கையில் வெளிநாட்டில் உல்லாசம் அனுபவிக்கும் மக்கள்.. அவர்களுக்கு செய்யும் உதவி என்பது உண்மையில் பாவத்துக்கான பிராயச்சித்தமே அன்றி.. வேறில்லை. அதனைக் கூட செய்யாமல் எத்தனையோ பேர் கணக்கு காட்டு எண்டினம். துண்டுவிழும் தொகையில் மகிழினம்.. ஏனென்றால்.. இப்படியே போனால் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படாமல் போகும் என்று. இப்படியான மலினத்தனமான மனிதர்களை கொண்ட எமது சமூகத்தில்.. பணம் பெறுவது கடினம்.

இங்கு லைக்கா.. நடிகைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றையும் விளம்பரத்துக்கு வைச்சு மக்களால் விரட்டி அடிக்கப்பட்டதாகத் தகவல். அப்படி எல்லாம் பிழைக்க முற்படுகையில்.. மாவீரர் தினம் வருடா வருடம் வரணும் அதில் மக்களும் மாவீரர் குடும்பங்களும் தமது கவலையில் ஒரு சிறிய பகுதியை என்றாவது மறக்கனும்..இழந்த பிள்ளைகளை நினைந்துருகி வணங்கனும்.. மக்களும் தமது கடந்த காலத்தை உணர்வில் இருத்தனும் என்று நினைத்து கஸ்டப்படும் உறவுகளை நாம் நிந்திப்பதை விடுத்து.. அவர்களுக்கு நல்ல வழிகாட்டுவதும் மக்களுக்கு நிலைமைகளை எடுத்து விளக்குவதுமே இந்த அவலமான நேரத்தில் செய்ய வேண்டிய காரியமாகும்.

அதை விடுத்து பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக நடந்து கொள்வது மனிதத் தன்மையற்ற செயலாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்த மேடை அமைப்பதை வல்வெட்டித் துறையின் 73 bach என்று சொல்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தாமே பொறுப்பு எடுத்து செய்து முடிக்கின்றனர். மற்ற இனம் செய்வது போல் தான் நாமும் செய்யவேண்டியதில்லை. மாவீரரை நினைத்து எம்மனங்களை உயிர்ப்பிக்கவுமே இந்நிகழ்வு. அது உங்களுக்கு களியாட்ட நிகழ்வு போல் தோன்றினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

ஒட்டுக்குழுக்கள்,சொறிலன்காவின்காவடிகளுக்குதான் தற்போது மாவீரர் நிகழ்வின் கணக்கு விபரங்கள் ,எவரால், எத்தனைபேரால் இயங்குது என்றவிபரங்கள் அதி முக்கியமாய் தேவைபடுது. இதுகளுக்கு பதில் அழிக்காவிடின் ஒன்றும் குறைந்து போக போவதில்லை  மெசொ .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
    • நன்றி - யாழ்பாணப் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்கிறது என எழுதிய போது சிலர் நகைத்தார்கள். இது அந்த பாய்ச்சலின் ஆரம்ப நிலைதான். எவ்வளவு இளமை, எவ்வளவு துணிச்சல், எவ்வளவு தன்னம்பிக்கை இந்த பிள்ளைகளிடம். இவர்கள்தான் இந்த இனத்தின் எதிர்காலம். @அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு.
    • 300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது. வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற…  சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.