Jump to content

இரா. சம்பந்தனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: அரியநேந்திரம்


Recommended Posts

                                                                  

2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, வடகிழக்கில் வேட்பாளர்களை தீர்மானித்தது விடுதலைப் புலிகள் தான் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்ற கருத்தை அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தார். இது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

'தலைவர் இரா.சம்பந்தன் எதற்காக இக்கருத்தினை தெரிவித்தார் என்பது எனக்குப் புரியவில்லை. அக்கருத்தினை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

கடந்த 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமையால், தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்துடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று இருந்த தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.

இதில் அதிகமான பங்களிப்பு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தையே சாரும். அதில் நானும் இடம்பெற்றிருந்ததன் காரணமாகத்தான் என்னால் அக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 16 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர் என அவர் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/160157/%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%9A%E

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கின முகநூலிலும் இணையங்களிலும் எழுதிக் கிழிக்கும் சிலர் தாங்க தான் உருவாக்கினதா சொல்லிக்கிறார்ய்ங்க. tw_blush: புலிங்க வெறும் புல்லுத்தான் திண்ணதா பேசிக்கிறாய்ங்க. :unsure:

Link to comment
Share on other sites

ஆரம்பமாக ...

இந்திய அமைதிப்படை எனும் கொலைப்படை ஈழத்தில் தாண்டவமாடிய காலப்பகுதியில் ..

... சென்னையில் ... காஸ்ரோவின் அலுவலகத்தில் .. அப்போது காயப்பட்டிருந்த போராளிகள் சிலர் சகிதம், கிட்டண்ணா, முதன் முதலில் இதற்கு அடித்தளம் இட்டார் ... இது பலருக்குத் தெரியாது!

அப்போது தமிழர் விடுதலை கூட்டணி எனும் பெயரின் போகங்களை காலா காலமாக அனுபவித்து வந்தவர்களின் செயலதிபர் என்று அழைத்துக் கொண்டு, தமிழீழம் தான் தீர்வென்று 77/78ல் வாக்குகளையும் சுருட்டிக்கொண்டு, சிங்கள பாராளுமன்றில் எதிர்கட்சி தலைவர் எனும் உப்புச்சப்பிலாத பதவியில் அமர்ந்து தமிழீழத்தைக்க்கண்ட அமிருக்கு அழைப்பொன்றை அனுப்பியிருந்தார், ஒரு சந்திப்புக்கு!

அச்சந்திப்புக்கு சாதகமான சமிக்கையை காட்டிய பின், தான் மெதுவாக ஒதுங்கிக் கொண்டு, இப்போது தானைத்தலைவராக இருக்கும் சம்பந்தர் தலைமையில் ஓர் குழுவை அனுப்பியிருந்தார்!

அங்கு ... கிட்டண்னா ... உங்கள் இலக்கும், எங்கள் இலக்கும் ஒன்று ... நாங்கள் ஆயுத வழியில் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்! நீங்கள் அகிம்சை வழியில் என்கிறீர்கள்? ... அப்படியாயின் ஏன் இரண்டு தரப்பும் சமாந்திரமாக (ஐ.ஆர்.ஏ, சின் ஃபெயின் போன்று) பயனிக்க முடியாது? சேர்ந்து இயங்குவோமா என்று கேள்வி எழுப்பினார் என்பதற்கு மேல் வேண்டிக்கொண்டார்!

அங்கு பிரசன்னமாக இருந்த சம்பந்தரோ, அதற்கு பதிலளிக்காமல், "அண்ணாவை (அப்பாப்பிள்ளையை) கேட்டுத்தான் நாம் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லி, கிளம்பினராம்! ... பதில் வரவே இல்லையாம்!

பின்னாளில் விடுதலைப்புலிகளின் ஆலோசனையில் மாமனிதர் தராகியின் மீண்டுமொடு முயற்சியில் ... இன்றைய "தமிழ் தேசிய கூட்டமைப்பு! 

எவ்வளவு காலத்துக்கு சம்பந்தர் பொய் சொல்லப்போகிறார்????????????

Link to comment
Share on other sites

ஆனால் ... இன்றோ ..

பின்வாசல்களால் உள்நுளைக்கப்பட்டவர்கள் ... வரலாற்றை திருப்பி எழுத முற்படுகின்றார்கள் .. முழு பூசனிக்காயை ஒரு பிடி சோற்றினுள் மறைக்க பல பிரயத்தனங்கள்! ... வரலாறு மன்னிக்காது! ... 

Link to comment
Share on other sites

தமிழ்தேசியக் கூட்டமைப்பை புலிகளின் ஒரு பினாமி அமைப்பு என இந்திய தேசியத்தைக் காக்கும் ஒரு ஆங்கிலப் பத்திரிகை அப்போது.ஒரு செய்தி போட்டிருந்தது. அப்போது கூட்டமைப்பு புலிகளின் ஆளுமையில் மக்கள் செல்வாக்குடன் விளங்கியது.

தங்களால் ஆட்டிப்படைக்க முடியாத நிலையிலும், புலிகள் இல்லாத ஒரு நிலையிலும் மக்கள் செல்வாக்குள்ள கூட்டமைப்பை தமது பக்கமாக இந்தியா ஓரளவுக்கு இழுத்துவிட்டது. இதற்கு சிலர் உடந்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தகவாலாக இருக்கிறது .....
நான் நினைத்துகொண்டு இருந்தேன் யாழ் களத்தில் இருக்கும் இரண்டுபேர்தான் 
த தே கூ வை உருவாக்கினார்கள் என்று.

தமிழ் மக்களுக்கு என்றால் கனடாவில் இருந்து உயிரையே பெடெக்ஸ் கொரியரில் அடிக்கடி அனுப்புகிறவர்கள். 
செய்தாலும் செய்திருப்பார்கள் என்று எண்ணிகொண்டு இருந்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் கூட்டமைப்பின் முதுகில் ஏறும்போது கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். எல்லாம் தீர்க்கதரிசனம் ஒன்று மட்டுமே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.