Jump to content

துருக்கி மீதான பொருளாதார தடைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் ஒப்புதல் !


Recommended Posts

துருக்கி மீதான பொருளாதார தடைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் ஒப்புதல் !
 
மாஸ்கோ: தங்கள் நாட்டு எல்லைக்குள் ரஷ்ய விமானம் அத்துமீறி நுழைந்ததாக கூறி துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கு எதிராக அந்நாட்டு மீது ரஷ்யா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதற்கான ஒப்புதலில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ரஷ்ய நாட்டு போர் விமானம் ஒன்று தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் சுட்டு வீழ்த்தியது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த துருக்கி, எங்கள் நாட்டு எல்லைக்குள் எந்த நாட்டு விமானம் அத்துமீறி நுழைந்தாலும், சுட்டு வீழ்த்துவோம் என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது.
 
இதனால் கடும் கோபத்தில் இருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, துரோகிகள் முதுகில் குத்தி விட்டனர். ரஷ்ய விமானம் சிரியா எல்லைக்குள் பறந்த போதே, துருக்கி ராணுவத்தினர் சர்வதேச சட்டத்தை மீறி, விமானத்தை சுட்டு வீழ்த்தி உள்ளனர்'
Putin approves economic sanctions against Turkey
பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா போர் நடத்தி வரும் வேளையில் இந்த சம்பவம் துருக்கி - ரஷ்ய இடையேயான உறவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த சம்பவம் பற்றி கவனத்துடன் ஆராயப்படும். ஆனால், இதுபோன்ற குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. எனத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக துருக்கிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முற்றியது.
 
இந்நிலையில், துருக்கி நாட்டுக்கு எதிராக, ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், சில நாட்களுக்கு முன்னர் பல பொருளாதார தடைகளை அதிரடியாக அறிவித்தார். டிமிட்ரி வெளியிட்ட அறிவிப்பில், ரஷ்ய பிராந்தியத்தில் செயல்பட்டு வரும், துருக்கியின் அனைத்து பொருளாதார கட்டமைப்புகள் மீதும் தடை விதிக்கப்படுகிறது. அந்நாட்டுக்கு சப்ளை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் தடை செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
 
இதையடுத்து துருக்கி மீதான பொருளாதாரத் தடைக்கான ஒப்புதலில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய நாட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி துருக்கி மீது தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி துருக்கி நாட்டினரை வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரஷ்யாவில் புதிதாக வேலைக்கு அமர்த்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் தற்போது பணியில் இருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் இருந்து தனிப்பட்ட முறையில் கொண்டுவரப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. இதனால் இருநாட்டு உறவுமுறையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/putin-approves-economic-sanctions-against-turkey-241039.html
Link to comment
Share on other sites

துருக்கிக்கு ரெண்டு சாத்து சாத்தினால்தான் சரிப்பட்டு வரும்.. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோ பெரியண்ணன்.. எஸ் 400 ஏவுகணை வந்தது தான்.. இரண்டு நாளா சிரியா பக்கமே போகல்லையாம். இதில துருக்கி அண்ணனை நம்பி சுட்டு விளையாடிட்டு திண்டாடிக்கிட்டு நிற்குது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கிக்கு தானும் பெரிய ஆள் எண்ட நினைப்பு......இந்தா ரஷ்யன் வைக்கிறான் ஆப்பு.....

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

துருக்கிக்கு தானும் பெரிய ஆள் எண்ட நினைப்பு......இந்தா ரஷ்யன் வைக்கிறான் ஆப்பு.....

துருக்கி எரியிற வீட்டில் பிடுங்குறது லாபம் என்று இருந்துவந்தது..ரஷ்சியா 1000 எண்ணை பவுசருக்கு குண்டு போட்டதும் கடுப்பாகிட்டது....அதுக்குள்ள அமெரிக்கன்ட உசுப்புக்கும் உள்ளாகி இனி நாறப்போகுது    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள உலக அரசியலை முதலில் விளங்க வேண்டும்.

சவூதி மூலம் உதவி அளித்து, ரசியாவை சுத்தி இருக்கிற இரண்டு சியா நாடுகளான ஈரான், சிரியாவை மடக்கினால், ரசியாவினை சுத்தி இருக்கும் சகல நாடுகளையும் தமது பக்கமாகி, உலகின் தனி வல்லரசு தானே என்று பெரியண்ணர் போட்ட பிளான்.

ஈரானில் உடனடியாக பருப்பு வேகாது என்பதால், சிரியா. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் மூக்கினை அறுத்தாலும், ரசியாவிக்கு சகுனப் பிழை தானே என்பது போல நிலைப்பாடு அண்ணருக்கு. அதேவேளை எவ்வளவு தான் கதை விட்டாலும், ஆமியை உள்ளே இறக்க மேற்கு தயார் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர ஒத்தைக் காலில் நிற்கும் துருக்கி, மேற்கு சொல்வதை செய்யும்.

பிரான்சில் நடந்த நிலைமை, ஒளண்டேயினை, பெரியண்ணர் வீட்ட ஓட வைத்தாலும், கறுவல் இன்னும் அசைவதாக இல்லை.

விளைவாக அடி வாங்கும் ஐரோப்பியர்கள், ரசியாவின் புடினின் தலைமைத்துவத்தினை இரசிக்க போகின்றனர். புடினுக்கு, பிரான்சின், பெல்யியத்தின், பிரிட்டனின் உள்நாட்டு நெருக்கடி போல (தாக்குதல் பயம்) இல்லாவிடினும், செசினியாவில். முசிலிம்களை ஒடுக்கியதால், அவர்கள் மூலம் பிரச்சனை வரலாம். இரண்டொரு தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, முஸ்லிம்கள் மொஸ்கோவில் , மிகக் கடுமையான கண்காணிப்பில் இருக்கின்றனர். தாக்குதல் நடத்துவது இலகு அல்ல.

எனினும் அவரது மிகப் பெரிய பிரச்சனை, பெரியண்ணர் திட்டம். 

பல்லாண்டுகளாக, கிபிர் குத்துகளை கண்ட எமக்கு, எத்தனை குண்டுகள் விழுந்தாலும், தப்பிக்க முடியும் என்று தெரியும்.

இதனாலேயே புடின், 150,000 தரைப் படையினை இறக்க தயார் ஆகிறார். சீனாவும் உதவக் கூடும். 

விமானப் பறப்பு, புலிகளின் விதியினை எழுதி சென்றது போல, முஸ்லிம் தீவிரவாத பிரச்சனை கொண்ட ரசியா, சீனா இரண்டுமே, நீண்ட கால நோக்கில், ஐ.ஸ் அமைப்பின் அழிவினை விரும்புகின்றன.

ஐ. ஸ் அமைப்பு உலகின் சகல வல்லரசுகளையும் பகைத்து விட்டது. அமெரிக்காவின் நிலைப்பாடு எவ்வாறு இருப்பினும், ஒபாமா, வெத்து வெட்டு என்று அமெரிக்க மக்கள் மட்டும் அல்ல, உலகமே நினைக்கத் தொடங்கி விட்டது, அமெரிக்காவை நெளிய வைக்கிறது.

இன்றைய நிலையில் புடின், தீர்க்கமான உலகத் தலைவர் என தரப் படுத்தலில் முதலிடம் வகிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவுக்கு ரஷ்யா இல்லாமல் வாழ்க்கையை கொண்டு போறது வலுகஷ்டம்......பழைய சரித்திரங்களை பார்த்தால் தெரியும்.

பெரியண்ணை சொல்லுவர் தட்டச்சொல்லி..... :grin:

தட்டிப்போட்டு வண்டவாளத்திலை போற தங்கச்சி ஜேர்மனியை கேட்டால் தெரியும்....பெரியண்ணையின்ரை திறமையை.....:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.