Jump to content

அனுதாபம் தெரிவிப்பதற்காக மூடப்பட்ட பாடசாலைகள்...


Recommended Posts

8063.jpg

யாழ்ப்பாணத்தில் மாக்சிசம் பேசிய பேராசிரியர் ஒருவர் தன் வீட்டுக்கு வருகிறவர்களை முற்றத்தில் நல்ல நிலா வெளிச்சம்; அங்கிருந்து கதைக்கலாம் என்று கூறி முற்றத்திலேயே இருத்தி விடுவாராம். 
பேராசிரியரைச் சந்திக்கச் சென்றவர்கள் அடடா! பேராசிரியரின் மாக்சிசக் கொள்கை எத்துணை உயர்வுடையது என்று மகிழ்ந்து கொள்வர். என்ன செய்வது? உள்ளொன்றும் புறமொன்றுமாகப் பேசு கின்றவர்களோடு எதுவுமே செய்ய முடியாது. அத னால்தான் இராமலிங்க வள்ளலார் “... உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்...” என்று பாடினார்.

நேற்றுமுன்தினம் (நவம்பர் 26) செந்தூரன் என்ற மாணவன், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்து தன் உயிரை ஆகுதியாக்கிக் கொண்டான். 
மாணவன் செந்தூரனின் இந்த முடிவுக்கு அவர வர்தத்தம் சிந்தனைகளுக்கு ஏற்ப வியாக்கியானம் செய்து கொள்வர்.

இந்த வியாக்கியானங்களைக் கடந்து; 18 வயது டைய ஒரு மாணவன், தன் உயிரைத் தியாகம் செய் வதற்குத் துணிந்தான்;  அதற்காக அவன் நவம்பர்  26ஆம் திகதியை தெரிந்தெடுத்தான்; தனது இறுதிச் சடங்கு இடம்பெற வேண்டிய திகதி எதுவாக இருக்க வேண்டும் என்பதை அந்த மாணவன் முன்கூட்டியே நிர்ணயித்துக் கொண்டான் என்பதும் இங்கு ஈண்டு கவனிக்கத்தக்கது. 

இதற்கு அப்பால், சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அந்த மாணவன் இந்த நாட்டின் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் விடுத்த கோரிக்கைக்குள், ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைக் கொண்டவர் என்பதையும் நல்லாட்சி என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே முன்கொண்டு வரப்பட்டது என்றும் ஜனாதிபதி மைத்திரி ஒரு நல்ல மனிதர் என்பதால், தன் உயிரைத் தியாகம் செய்வதன் ஊடாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் என்றும் நம்பினான். 

இதற்கு அப்பால் மாணவன் செந்தூரன் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். முதல் மாணாக்கனுக்குரிய ஒழுங்கத்தைக் கொண்டவன். 
தனது ஆழ் மனத்தில் பதிந்து கொண்ட  தமிழ் அரசியல்கைதிகளின் விவகாரத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் அந்த மாண வனுக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவன் எடுத்த முடிவு தன் உயிரைத் தியாகம் செய்தேனும் கைதிகளின் விடுதலைக்கு உதவுவது என்பதாகும். 
மாணவன் செந்தூரனின் இத்தகையதொரு நிலைப்பாட்டில்தான் நாங்கள் ஒவ்வொருவரும் வேறுபட்ட வியாக்கியானங்களை முன்வைக்கின்றோம்.

இவை ஒரு புறம் இருக்க, மாணவன் செந்தூரனுக்கு அனுதாபம் தெரிவித்து நேற்றையதினம் வடக்கு மாகாணப் பாடசாலைகளை மூடுவித்து மாணவர்கள் மத்தியில் எழுச்சி ஏற்படாமல்-மாணவன் செந்தூரனின் இறுதிச் சடங்கில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் கலந்து கொள்ளாமல் தடுத்து விட்ட (அரச) கெட்டித்தனம் இருக்கிறதே இதுதான் முற்றத்து நிலா வெளிச்சம்.
அந்தகோ! என் செய்வோம். எம் இனமே! மாண வன் செந்தூரனின் இழப்பு அவன் குடும்பத்திற்கு மட்டும் என்பதாக்கப்பட்ட நிகழ்வுதான் இன்றைய எங்கள் நிலைமை. 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=8063&ctype=news

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.