Jump to content

புதிய உணவு முறைநீண்ட நாட்களுக்குபலன் தராது!


Recommended Posts

Tamil_News_large_139726220151127225720.j

சுக்ரா டயாபடீஸ் கேர் அண்டு ரிசர்ச் சென்டரின் மருத்துவர் கே.பரணீதரன்: நம் வழக்கத்தில் இல்லாத எந்த உணவு முறையும், நீண்ட நாட்களுக்குப் பலன் தராது. சர்க்கரை நோய் பிரச்னை இருந்தாலும், இல்லாவிட்டாலும், சமச்சீரான உணவு அனைவருக்கும் தேவை. 

ஒருநாளில் நாம் சாப்பிடும் உணவில், 50 சதவீதம் கார்போ ஹைட்ரேட், 20 சதவீதம் கொழுப்பு, 20 சதவீதம் புரதம், மீதி, 10 சதவீதம் தாதுக்களும், வைட்டமின்களும் உடலுக்குக் கிடைக்கும் விதமாக இருக்க வேண்டும்.தற்போது, உலக அளவில் நடந்து வரும் ஆய்வில், மரபியல் ரீதியில் நமக்குப் பழக்கமான உணவுகளை மட்டுமே, நம் உடல் ஒப்புக் கொள்கிறது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது, பல தலைமுறைகளாக நம் குடும்பத்தில் என்ன உணவுகளை சாப்பிட்டனரோ, அந்த முறையை பின்பற்றுவதே பாதுகாப்பானது. ஆனால், கடந்த, 10 ஆண்டுகளில், நமக்குக் கொஞ்சமும் பழக்கம் இல்லாத மேற்கத்திய உணவு முறைகள் தினசரி டயட்டில் இருக்கின்றன. இந்தக் காலக்கட்டத்தில் தான், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் கோடிக்கணக்கில் அதிகரித்துள்ளது. வெளிக்காரணிகளால் மனம் பாதித்து மன அழுத்தம், மனச்சோர்வு எப்படி ஏற்படுகிறதோ, அதேபோல நம் உடல் இத்தனை தலைமுறைகளாக பழகாத பீட்சா, பர்கர் உணவுகளை சாப்பிடும்போது பாதிக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவு செரித்து குளுக்கோசாக மாறி, ரத்தத்தில் கலந்து உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. இந்த வேதி மாற்றத்திற்குப் பெயர், 'ஆக்ஸிடேஷன்!' இந்த உடல் உள்செயல்பாடு சரியாக நடந்தால் தான் திசு, செல்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும். இப்படி கிடைக்கும் சக்தியில், 60 சதவீதம் மூளைக்கு கிடைத்தால் தான் ஆரோக்கியமாக சிந்திக்க, செயல்பட முடியும். உடனடியாக உடலுக்கு சக்தி கிடைப்பது, கார்போ ஹைட்ரேட் உணவில் இருந்து தான். 

ஆனால், தற்போது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படாத சில உணவு முறைகளில், முழுக்கவே கொழுப்பு சார்ந்த உணவுகள் அல்லது காய்கறி, பழம் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளன.இன்னொரு விஷயம், இந்தியர்களின் உடல் அமைப்பு பட்டினியாக இருப்பதற்கே வெகு காலமாக பழகிவிட்டது. மரபுரீதியாக நாம் சிறிதளவு உணவு சாப்பிட்டு, உழைப்பதற்குக் கற்றுக் கொண்டோம். இதனால், நம் உடலுக்கு அதிக அளவிலான உணவை செரிமானம் செய்ய தெரியவில்லை. கொழுப்பு, சோடியம் அதிகம் உள்ள துரித உணவுகளைச் சாப்பிட்டு, உடல் உழைப்பே இல்லாமல் இருப்பதால், உடல் எடை பெரிய பிரச்னை ஆகிவிட்டது.
எந்தப் புதிய உணவு முறையும் நீண்ட நாட்களுக்குப் பலனைத் தராது. நம் சுற்றுப்புறச் சூழலுக்கும், பருவ நிலைக்கும் ஏற்ப, காலங்காலமாக என்ன உணவை உடல் பழகியிருக்கிறதோ, அது தான் பாதுகாப்பானது.

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.