Jump to content

'எமக்காக யாரும் உயிர்த் தியாகம் செய்யாதீர்கள்' : மனவருத்தமளிக்கின்றது என்கின்றனர் அரசியல் கைதிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'எமக்காக யாரும் உயிர்த் தியாகம் செய்யாதீர்கள்' : மனவருத்தமளிக்கின்றது என்கின்றனர் அரசியல் கைதிகள்

  தமது விடுதலைக்காக யாரும் உயிர்த் தியாகம் செய்ய வேண்டாம். இவ்வாறு உயிர்த் தியாகம் செய்வது எமக்கு வேதனையளிக்கின்றது என செய்வதனை என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

Suicide-of-Rajeshwaran-Senthuran.jpg

தமிழ் அரசியல் கைதிகள் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களாவன,

'அகால மரணமடைந்த மாணவன் இராஜேஸ்வரன்  செந்தூரனின் மரணம் தொடர்பாக........

தமிழ் அரசியல் கைதிகளாகிய எமது விடுதலையை கோரி தன்னுயிரை தியாகம் செய்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனுக்கு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளும் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலிகளையும் செலுத்துவதோடு,

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக குடும்பங்கள் மற்றும் உறவுகளையும் பிரிந்து சிறைகளில் வேதனையில் வாடும் எங்களுக்கு இந்த மாணவனது திடீர் உயிர்த்தியாகம் எங்களை மிகுந்த சோகத்தினையும் வேதனையையும் ஆழ்த்தியுள்ளது.

இவரது இழப்பு தொடர்பான எமது உணர்வுகளை எழுத்தில் சொல்லி மட்டுப்படுத்த முடியாது.

எனவே நாங்கள் மிகவும் ஆழ்ந்த வேதனையுடன் எமது அஞ்சலிகளை அந்த மாணவனது குடும்பத்திற்கும் அவருக்கும் செலுத்துவதோடு, இனிமேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாரும் உயிர்த்தியாகம் செய்வதை ஒரு காலமும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் விரும்பவில்லை என்பதனை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மாறாக சாத்வீக வழியிலான அறவழிப் போராட்டங்களை முன்னெடுப்பதே சாலச்சிறந்தது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

இப்படியான சம்பவங்களை இனிமேல் தவிர்த்துக்கொள்ளுமாறு எங்களை நேசிக்கும் மக்களாகிய உங்களை அரசியல் கைதிகளாகிய நாம் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செந்தூரனின் இறுதி கிரியைகள்

அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய கோரி நேற்றைய தினம் புகையிரதம் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்த கொக்குவில் இந்து மாணவன்  செந்தூரனின் இறுதி கிரியைகள் இன்று மிக அமைதியான முறையில் நடைபெற்றது.

கோப்பாய் வடக்கில் உள்ள மாணவனின் வீட்டில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து பூதவுடல் மாணவர்களால் சுமந்து வரப்பட்டு பூதவுடல் அஞ்சலிக்காக மாணவன் கல்வி கற்ற தனியார் கல்வி நிறுவனத்தில் வைக்கப்பட்டு கல்வி நிறுவன ஆசிரியர்கள் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்வினையடுத்து  கோப்பாய் கந்தன் காடு இந்து மயானத்தில் மாணவனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது .

இறுதி நிகழ்வில் மாணவர்கள் அரசியல்வாதிகள் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மாணவனின் இறுதி நிகழ்வில் பெருமளவான புலனாய்வாளர்களும் கலந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.