Jump to content

செந்தூரா உன் உடல் கருகிய தீச் சுவாலையில், இரும்பாய் போன இதயங்கள் இழகட்டும், ஈரம் கசியட்டும்…


Recommended Posts

செந்தூரா உன் உடல் கருகிய தீச் சுவாலையில், இரும்பாய் போன இதயங்கள் இழகட்டும், ஈரம் கசியட்டும்…

 

நடராஜா குருபரன்:-

செந்தூரா உன் உடல் கருகிய தீச் சுவாலையில், இரும்பாய் போன இதயங்கள் இழகட்டும், ஈரம் கசியட்டும்…


உன் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அப்பனே… உன் உயிரை தற்கொடையாக கொடுத்ததன் ஆழ அகலம் பற்றி ஒன்றும் அறியேன்… உன் மரணத்திற்கு பலரும் பல்வேறு கற்பிதங்களை மெருகேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்….

மாவீரர் வாரத்தில் நவம்பர் 27ஆம் நாளுக்கு அண்மித்த உன் மரணம், வீர மரணம் என்கிறார்கள்… தற்கொடை என்கிறார்கள்… வீர மறவன், தமிழர் மானம் காக்க புறப்பட்ட வீரத் தமிழன், மாவீரன் என்றெல்லாம் புகழாரங்கள் சூட்டுகின்றார்கள்… இணையங்கள் சமூக வலைத்தளங்கள் யாவற்றிலும், நீ வியாபித்து இருக்கிறாய்…

உன் வயதில் எனக்கோர் மகன் இருக்கிறான்.. வெளியில் போகும் அவன் வீடு திரும்பப் பிந்தினால், என்மனம் படும் பாட்டை பதபதைப்பை நானே அறிவேன்… உன்னையும் என்னில் இருந்து பிரித்துப் பாரக்க எனக்கு முடியவில்லை…

என் கல்லூரி நாட்களில,; கொக்குவில் இந்துக் கல்லூரியில் நான் பயின்ற காலத்தை நினைத்து பார்க்கிறேன்.. உன் உடலை தாங்கிச் செல்லும் மாணவர்கள் அணிந்து சென்ற கழுத்துப் பட்டியை அக்காலத்தில் நாமும் அணிந்திருந்த ஞாபகங்கள் என்னை அமைதியிழக்கச் செய்கின்றன… உன்வயதில் விடுதலைக்காக புறப்பட்டு, நான் கற்ற கல்லூரியில், நானே அரசியல் வகுப்புகளை எடுத்ததை நினைத்துப் பார்க்கிறேன்… எல்லாம் கனவுபோல் விரிந்து செல்கின்றன….

வீறுகொண்ட தமிழ்த் தேசிய எழுச்சிக் காலம் அந்தக்காலம்… ஈழக் கோரிக்கைக்காக விடுதலை இயக்கங்களில், ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி திரண்ட காலம்… ஆளும் அரசாங்கங்களுடன் ஆயுதங்கள் பேசிய காலம்.. இளைஞர்களின் எழுச்சிக்கு அர்த்தம் இருந்த காலம. அது…

செந்துரா உனது இன்றைய காலம், முள்ளிவாய்க்காலில் ரத்தம் கரைபுரண்டோடி  5 வருடங்கள் விழலுக்கு இறைத்த நீராய் போன காலம் எடா…..

திக்குத் தெரியாது, நாம் திணறிக் கொண்டிருக்கும் உன் காலத்தில், பொய்மைகளும், வஞ்சகங்களும், பிறர் தியாகங்களை தம் தியாகங்களாக்கி, குளிர் காயும் அயோக்கியத் தனங்களும், தமது அரசியல் இருப்புகளுக்காக, பிறரைப் பலிகொடுத்து வீரகாவியங்களை புனையும் காலமடா….

ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளின் உயிர்த் தியாகங்களும், லட்சக்கணக்கான மக்களின் மரணங்களும், இன்று சுய நலன்களுக்காகவும், அரசில் பேரம் பேசல்களுக்காகவும் வாழ்வின் இருத்தலுக்குமான, வியாபாரமாகிப் போன துயரத்தை உன் பிஞ்சுமனம் அறிந்திருக்குமா?

இன்னும் என்னால் உன் மரணத்தை ஏற்க முடியவில்லை செந்தூரா… வெறும் உணர்வுகள் மட்டும் ஒரு இனத்தின் விடுதலையை பெற்றுத் தராது என்பதனை, ஊடக கற்கையை ஒரு பாடமாக எடுத்து, நாளாந்தம் பல பத்திரிகைகளை புரட்டும் உணக்குமா புரியவில்லை?

முள்ளிவாக்காலில் இரத்த ஆறு ஓடிக்கொண்டு இருக்கையில், தமிழகத்தில் இருந்து, புலம்பெயர் நாடுகளில் இருந்து ஐநா முன்றலில் முருகதாஸன் வரை எத்தனை பேர் தமது உயிர்களை தற்கொடை ஆக்கினார்கள்…. உலம் மருண்டதா? இலங்கையின் ஆட்சியாளர்கள்தான் அசைந்தார்களா? இல்லேயே….

ஏன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். பின்னர் சிறைச்சாலை உத்தியோகத்தரை பணயமாக பிடித்து போராடினார்கள்.. அப்போது அங்கு போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் என்னுடன் பேசினார்கள்…
உணர்ச்சிவசப்பட்டு கடுமையான முடிவுகளை எடுக்காதீர்கள்… மகிந்த சகோதரர்களுடன் மோதுவது மலையுடன் மோதுவது என்றேன்.... அவர்கள் கேட்கவில்லை, புலம்பெயர் உறவுகளும், தமிழ்க் கட்சிகளும் தம்முடன் இருப்பதாக சொன்னார்கள்..
செந்தூரா.. இறுதியில் நடந்தது என்ன? உசுப்பேத்தியவர்களில் பலர் ஐராப்பாவில் உல்லாசவாழ்வு வாழ்ந்தனர், வாழ்கின்னறனர். போராடியவர்களில்   நிமலரூபன் வதைபட்டு மாண்டு போனான்… பலர் நையப்புடைக்கப்பட்டு தெற்கின் சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.. சிலர்  அனுராதபுரத்தில் மலம் தின்ன வைக்கப்பட்டார்கள்…

செந்துரா உன்மரணத்தை வீரகாவியமாக்கும் பல பெற்றோர்கள், உன்வயதுப் பிள்ளைகளை தமது மடிக்குள் வைத்திருக்கிறார்கள்;. அவர்களை வைத்தியர்களாகவும், கணக்காளர்களாகவும், பொறியலாளர்களாகவும், இன்னும் பல துறைகளில் விற்பனர்களாகவும் உருவாக்குவற்கு, ஐரோப்பிய தேசங்களிலும், உள்நாட்டிலும் ஓடாய் தேய்கிறார்கள்…
பணம் தேடி உண்டு கழித்து உறங்குவதற்கு முன் எடுக்கும் ஓய்வுப் பொழுதில் ஊரார் வீட்டு பிள்ளைகளுக்கு உசுப்பேத்தி இல்ங்கை அசுடன் யுத்தம் புரியும் சமூக வலைத்தள போராளிகளாகிறார்கள்…

குழந்தாய் உன்மரணம் ஆட்சியாளர்களை ஒருபோதும் தட்டி எழுப்பப் போவதில்லை..  குறைந்தபட்சம் மற்றவர்களின் மரணங்களில் வீரகாவியங்களை படைக்க முயலுபவர்களின்  இதயங்களையாவது உறைய வைக்குமா?

உன்னுடன் இந்த தற்கொலை கலாசாரம் முடிவுக்கு வரட்டும் செந்தூரா.. உன்முடிவு ஈழத்து குழந்தைகளுக்கு ஒரு போதும் முன் உதாரணமாக அமையக் கூடாது… பதிலாக உன் மரணம் அவர்களின் சிந்தனைகளை தூண்டுவனவாக, இனத்துவ மேலான்மைகளை தகர்த்தெறிவதற்கான, அறிவார்ந்த ஆழுமைகளை வளர்ப்பதற்கான மரணமாக அமையட்டும்….

சென்றுவா.. செந்தூரா.. உன்னுள் உறைந்த உணர்வுகளை உணர முடியாது தவிக்கிறேன்… உன்னை மாமனிதனாகவோ, மாவீரனாகவோ, வீர மறவனாகவோ, வீரருஸனாகவோ, இல்லை வீர மைந்தனாகவோ அழகுபடுத்தி, என் இருப்பை பேண ஒரு போதும் நான் துணிய மாட்டேன்… “நீ வரலாறாகிப் போன உன்னத மனிதன்”

உன் உடல் கருகிய தீச் சுவாலையில் இரும்பாய் போன இதயங்களில் ஈரம் கசியட்டும்…

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126365/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.