Jump to content

பகல்- இரவு டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து 202 ஓட்டங்கள்


Recommended Posts

பகல்- இரவு டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து 202 ஓட்டங்கள்

1fd4f6d40f.jpg
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டியில்  நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் இன்றைய நாள் மிக முக்கியமானதாகும். இன்றுதான் இளஞ்சிகப்பு பந்தில் விளையாடும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்கியது. இதில், அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி குப்டில், லாதம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 
மிட்செல் ஸ்டார்க் முதல் பந்தை வீசினார். குப்டில் ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதன்மூலம் பகல்-இரவு போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தி ஹசில்வுட்டும், முதல் விக்கெட்டை இழந்து குப்டிலும் வரலாற்றை பதிவு செய்தனர்.

அதன்பின் வந்த வில்லியம்சன் 22, டெய்லர் 21 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்கள். மற்றொரு தொடக்க வீரர் லாதம் 50 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழந்தனர். 
இதன்பின் வந்த சான்ட்னெர் 31 ஓட்டங்களையும்  வொட்லிங் 29 ஓட்டங்களையும் எடுக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 65.2 ஓவரில் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக பர்ன்ஸ், வோர்னர் ஆகியோர் களம் இறங்கினார்கள். வோர்னர் ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் போல்ட் முறையில் ஆட்டம் இழந்தார். 
பர்ன்ஸ் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 3-வது விக்கெட்டுக்கு  ஸ்டீவன் ஸ்மித்துடன் வோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 54 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 24 ஓட்டங்களுடனும், வோக்ஸ் 9 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.virakesari.lk/articles/2015/11/27/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-202-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Link to comment
Share on other sites

அடிலெய்ட் டெஸ்ட்: நிலைதடுமாறிய ஆஸ்திரேலிய அணியை 'தூக்கி விட்ட' நடுவர்கள்

 

 
 
சர்ச்சைக்குரிய வகையில் நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்ட நேதன் லயன் ஆடிய ஷாட். | படம்: ஏ.எஃப்.பி.
சர்ச்சைக்குரிய வகையில் நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்ட நேதன் லயன் ஆடிய ஷாட். | படம்: ஏ.எஃப்.பி.

அடிலெய்டில் நடைபெற்று வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய நடுவர் ரவி மற்றும் 3-வது நடுவர் ஆகியோர் செய்த தவறுகளினால் நியூஸிலாந்துக்கு பின்னடைவு ஏற்பட்டது.

116/8 என்று திணறிய ஆஸ்திரேலிய அணி, இந்திய நடுவர் எஸ்.ரவியின் தவறான தீர்ப்பினாலும், அதனையடுத்து ரிவியூவில் டிவி நடுவர் லாங்கின் விளங்க முடியா தீர்ப்பினாலும் நியூஸிலாந்து ரன் எண்ணிக்கையான 202 ரன்களைக் கடந்து முன்னிலை பெற்றது.

அதாவது நேதன் லயன் அவுட். அது நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது, இதனையடுத்து ஒரு குறிப்பிடத்தகுந்த முன்னிலையைப் பெற்றிருக்க வேண்டிய நியூஸிலாந்து கடைசியில் 22 ரன்கள் பின் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நடுவர்களின் தீர்ப்பு நியூஸிலாந்தின் வெற்றி வாய்ப்பையும் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

நேற்று தொடங்கிய ‘பிங்க்’ பந்து வீசப்படும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, 2-ம் நாளான இன்று நியூஸிலாந்தின் அற்புதமான, துல்லியமான பந்து வீச்சு மற்றும் அபாரமான பீல்டிங்கினால் 116 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தட்டுத்தடுமாறியது.

ஆட்டத்தின் 54-வது ஓவர் நியூஸிலாந்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாண்ட்னர் வீசினார். ஸ்வீப் செய்தார் லயன் ஆனால் பந்து டாப் எட்ஜ் எடுத்து ஸ்லிப்பில் கேன் வில்லியம்ன்சன் கையில் கேட்ச் ஆனது. பந்து மட்டையில் லேசாகப் பட்டு லயனின் முழங்கைக்கு சற்று மேல் பகுதியில் பட்டு கேட்ச் ஆனது. கள நடுவரான இந்தியர் எஸ்.ரவி நாட் அவுட் என்றார், காரணம் அவர் பந்து தோள்பகுதியில் பட்டுச் சென்றதாக நினைத்தார். ஆனால் அவர் நிற்கும் இடத்திலிருந்து நிச்சயம் மட்டையின் விளிம்பில் பட்டதா இல்லையா என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

நேதன் லயனே தான் அவுட் என்று நடையைக்கட்டவிருந்தார். ஆனால் நடுவர் ரவி நாட் அவுட் என்றதும் அனைத்தும் மாறிப்போனது.

ரவி நாட் அவுட் என்று கூற, நியூஸிலாந்து வீரர்கள் உடனே ரிவியூ செய்தனர். ஹாட் ஸ்பாட்டில் நேதன் லயன் மட்டையில் பந்து பட்டுச் சென்றதற்கான மெலிதான் சுவடு தெரிந்தது. ஆனால் ரியல்-டைம் ஸ்னிக்கோ மீட்டர் இதனை தடம் காண முடியவில்லை. 3-வது நடுவர் நிகல் லாங் முடிவை அறிவிக்க நீண்ட நேரம் எடுத்து காலவிரயம் செய்ததோடு, கடைசியில் எட்ஜ் ஆனதற்கான தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று எஸ்.ரவி தீர்ப்பை சரியென்று கூறினார்.

இதைவிடவும் பெரிய தமாஷ் என்னவெனில், சரி எல்.பி. யாக இருக்கலாம் என்று நைஜெல் லாங் சரிபார்த்தார், ஆனால் அதற்கான ஆதார வீடியோவில் லயன் ஆடிய வேறொரு பந்து காண்பிக்கப்பட்டது.

இதனையடுத்து 0-வில் இருந்த நேதன் லயன் 34 ரன்களை எடுத்தார். இவரும், விக்கெட் கீப்பர் நெவிலும் இணைந்து 74 ரன்களை 9-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க ஆஸ்திரேலியா கடைசியில் 224 ரன்கள் எடுத்தது.

டி.ஆர்.எஸ். சர்ச்சை எனும் புத்தகத்தில் புதிய அத்தியாயமாக இந்த நேதன் லயன் தீர்ப்பு விவகாரம் சேர்க்கப்படலாம், அதாவது நியூஸிலாந்து இந்த டெஸ்ட் போட்டியில் தோற்றால் அதற்குக் காரணம் இந்திய நடுவர் எஸ்.ரவி, மூன்றாவது நடுவர் நைஜெல் லாங் என்றே வரலாறு பேசும்.

சானல் 9 தொலைக்காட்சி வர்ணனையில் இருந்த இயன் சாப்பல் உடனடியாக, “நான் என்ன பார்த்தேனோ அதனை என்னால் நம்ப முடியவில்லை, மோசமான தீர்ப்பு” என்றார்.

ஷேன் வார்ன் தனது ட்விட்டரில், “5 நிமிடங்கள் படு மோசம். நைஜல் லாங்கின் படுமோசமான தீர்ப்பு, லயன் தெளிவாக அவுட். லயனே பெவிலியன் திரும்ப எத்தனித்தார் என்பதை குறிப்பிடத் தேவையேயிலை. பந்து மட்டையில் பட்டு தோள்பட்டையில் பட்டு கேட்ச் ஆனது, இதில் சந்தேகமேயில்லை. முட்டாள் தனமான நேர விரயம் மற்று தவறான தீர்ப்பு” என்று பதிவிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7927318.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

தொடரும் ‘பிங்க்’ பந்து ஆதிக்கம்: விறுவிறுப்பான கட்டத்தில் அடிலெய்ட் டெஸ்ட்

32 ரன்களில் ராஸ் டெய்லரை வீழ்த்திய ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட். | படம்: ராய்ட்டர்ஸ்.
32 ரன்களில் ராஸ் டெய்லரை வீழ்த்திய ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட். | படம்: ராய்ட்டர்ஸ்.

அடிலெய்டில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ‘பிங்க்’ நிறப்பந்தின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று முதல் நாள் 12 விக்கெட்டுகள் விழுந்ததையடுத்து இன்று 13 விக்கெட்டுகள் விழுந்துள்ளன.

அவுட் ஆகி வெளியேறிய நேதன் லயனை மீண்டும் அழைத்த படுமோசமான தீர்ப்பினால் ஆஸ்திரேலியா 22 ரன்கள் முன்னிலை பெற்று 116/8 என்ற நிலையிலிருந்து 224 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோரின் ஒளிவெள்ளத்தின் கீழான ஸ்விங் பந்து வீச்சுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்து, 94 ரன்களே முன்னிலை பெற்றுள்ளது. நாளை 3-வது நாள், விறுவிறுப்பான கட்டத்தில் இருக்கும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் நாள்.

பிங்க் நிறப்பந்தின் தையல் பேட்ஸ்மென்களுக்கு சரிவர தெரியவில்லை, எனவே பேட்ஸ்மென்கள் பந்து எந்தப் பக்கம் ஸ்விங் ஆகும் என்பதைக் கண்டறிய சிரமப்படுவதாக மைக்கேல் ஹஸ்ஸி தொலைக்காட்சியில் தெரிவித்தார். மேலும், பிங்க் பந்து ஒளிவெள்ளத்தில் அருமையாக ஸ்விங் ஆகிறது. இல்லையெனில் மரபான பேட்டிங் சாதக ஆட்டக்களமான அடிலெய்டில் இரண்டு நாட்களில் 25 விக்கெட்டுகள் சாத்தியமாகாது, அதாவது இரு சிறந்த அணிகள் மோதும் போது.

பிட்ச் பேட்டிங் செய்ய சற்றே கடினமாக உள்ளது என்பதில் ஓரளவுக்கு உண்மை உள்ளது. ஆனாலும் இரு அணிகளின் பேட்டிங்கும் பிட்சை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. பந்துகள் நாள் முழுதும் ஸ்விங் ஆகிறது. ஆனால் பிட்சில் பந்தின் வேகமும், உயரமும் சீராகவே இருந்தது. பேட்ஸ்மென்கள் தைரியமாக ஸ்டம்புக்கு நேராக வரும் பந்துகளையே ஆடாமல் விட முடிந்தது, காரணம் நிச்சயம் பந்து ஸ்டம்புக்கு மேல் செல்லும் என்ற நம்பிக்கைதான். பிட்ச் அந்த அளவுக்கு சரியாகவே உள்ளது.

பிங்க் பந்தின் தையலை சரிவர காண முடிவதில்லை என்ற மைக் ஹஸ்ஸியின் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் ஹஸ்ஸியின் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக விளக்கு வெளிச்சத்தில் இரண்டு கேட்ச்களை நியூஸிலாந்தின் 2-வது இன்னிங்சில் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஸ்லிப்பில் கோட்டை விட்டார், அவரால் ஒருவேளை பந்தை சரிவர பார்க்க முடியாமல் போயிருக்கலாம்.

பிங்க் பந்து சோதனை நடைபெற்று வருகிறது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தரப்பு, சானல் 9 தரப்பு, மைதானத்துக்கு இரண்டு நாட்களாக வருகை தந்துள்ள 90,000 பார்வையாளர்கள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு வெற்றி வெற்றி என்று கூச்சலிடப்படுகிறது. ஆனால் இந்தப் பரிசோதனை முயற்சி ஆஷஸ் தொடரிலும், அல்லது பார்டர்-கவாஸ்கர் டிராபியிலும் செய்யப்படுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை அப்படிச் செய்ய முடிவெடுத்தால் பகலிரவு டெஸ்ட், பிங்க் நிறப் பந்துகள் பற்றிய உண்மை வெளிவரலாம்.

நியூஸி.யின் அபாரப் பந்துவீச்சு:

2-ம் நாள் ஆட்டம் மதியம் தொடங்கிய போது 54/2 என்ற நிலையில் ஸ்மித் 24 ரன்களுடனும், வோஜஸ் 9 ரன்களுடனும் இறங்கினர். ஆனால், நியூஸிலாந்தின் அனைத்துப் பவுலர்களும் மிகுந்த கட்டுக்கோப்புடன், நல்ல பீல்டிங் ஆதரவுடன் முதல் 2 மணி நேர ஆட்டத்தில் 62 ரன்களுக்கு 6 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

வேகப்பந்து வீச்சாளர்கள் போல்ட், சவுத்தி அருமையான ஸ்விங் பவுலிங் செய்து ரன்களை கட்டுப்படுத்த ஸ்பின்னர்களுக்கு பந்து திரும்பியது. பீல்டிங் மிக அருமை. குறிப்பாக மெக்கல்லம் மிட் ஆஃபில் டைவ் அடித்து தடுப்பு ஒன்றைச் செய்து பந்தை பிறகு த்ரோ செய்து ஷான் மார்ஷை ரன் அவுட் ஆக்கிய விதத்தை நாம் சுட்டலாம். முன்னதாக திணறிய ஆடம் வோஜசை அருமையான பந்தின் மூலம் சவுத்தி வீழ்த்தினார். 13 ரன்களுக்கு அவர் வெளியேறினார், பந்துகள் ஸ்விங் ஆகும் போது வோஜஸுக்கு சிகப்புப் பந்து, பிங்க் பந்து என்ற வேறுபாடில்லை. அவர் இரண்டிலுமே தடுமாறக்கூடியவர் என்பதை நிரூபித்தார்.

பிரேஸ்வெல் 12 ஓவகளில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அடிலெய்ட் 2-ம் நாள் பிட்சில் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்க ஸ்பின் பந்து வீச்சாகும். ஆனால், ஸ்மித் மீண்டும் தனது திறமையை நிரூபித்து 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார். கிரெய்க் பந்தில் அவர் விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முன்னதாக மிட்செல் மார்ஷ் பிரேஸ்வெல் பந்தில் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் வெளியேறினார். ஸ்மித் அவுட் ஆன அதே ஓவரில் கிரெய்க், சிடில் (0) விக்கெட்டையும் வீழ்த்தினார். ஹேசில்வுட் 4 ரன்களில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாண்ட்னரிடம் பவுல்டு ஆக ஆஸ்திரேலியா 116/8 என்று ஆனது.

ஆனால் அதன் பிறகே நேதன் லயன் ரன் எடுக்காமல் இருந்த போது நடுவர் தீர்ப்பு எனும் அராஜகம் அரங்கேறியது, அவுட் என்று அவரே பெவிலியனுக்கு நடையைக் கட்டியவரை இந்திய நடுவர் ரவியின் நாட் அவுட் தீர்ப்பு கிரீசுக்கு அழைத்தது, ரிவியூவும் நியூஸிக்கு பின்னடைவை ஏற்படுத்த, அவர் அவுட் ஆக வேண்டிய ஷாட்டான ஸ்வீப்பை மேலும் சுதந்திரமாக ஆடி ஒரு சிக்சரையும் 3 பவுண்டரியையும் அடித்து 34 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் விக்கெட் கீப்பர் நெவில் கட்டுக்கோப்பாக, மிகச் சிறப்பான ஒரு டெஸ்ட் இன்னிங்ஸை ஆடி 66 ரன்களை எடுத்து கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

நெவில்-லயன் கூட்டணி 74 ரன்களை 9-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது போட்டியின் திருப்புமுனை, இதற்குக் காரணம் நடுவர்கள். மிட்செல் ஸ்டார்க் காயத்துடன் களமிறங்கி அடிலெய்ட் ரசிகர்களை தனது அதிரடி மூலம் உற்சாகமூட்டினார். 15 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் அவர் 24 ரன்களுக்கு நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

ஆஸ்திரேலியா 116/8-லிருந்து 224 ரன்கள் என்று 22 ரன்கள் முன்னிலை பெற்றது. நியூஸிலாந்து தரப்பில் பிரேஸ்வெல் 3 விக்கெட்டுகளையும், கிரெய்க், போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஹேசில்வுட் அபாரம்: நியூஸிலாந்து சரிவு:

பிறகு இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி ஸ்டார்க் இல்லாவிட்டாலும் ஹேசில்வுட்டிடம் திணறியது. முதலில் கப்தில் 17 ரன்கள் எடுத்து ஹேசில்வுட்டின் விட்டுவிட வேண்டிய பந்தை ஆடி கல்லியில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

லேதமும் 10 ரன்களுக்கு ஹேசில்வுட் ஆஃப் ஸ்டம்ப் வலையில் விழுந்தார், வெளியே சென்ற பந்தை ஒரு பெரிய டிரைவ் ஆட முயன்றார் பந்து எட்ஜ் ஆகி நெவிலிடம் கேட்ச் ஆனது.

மிக முக்கிய விக்கெட்டான கேன் வில்லியம்சன் (1) விக்கெட்டை மிட்செல் மார்ஷ் கைப்பற்றினார். அதே ஆஃப் ஸ்டம்ப் பந்து தொட்டார் கெட்டார்.

பிரெண்டன் மெக்கல்லம் இறங்கி 3 பவுண்டரிகளை விளாசினார் 21 பந்துகளில் 20 ரன்கள் என்று அவர் ஆக்ரோஷம் காட்ட கடைசியில் மிட்செல் மார்ஷின் ஒரு இன்ஸ்விங்கரை கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். தீர்ப்பை ரிவியூ செய்து பார்த்தார், ஆனால் பந்தின் உயரம் மிடில் ஸ்டம்பைத் தாக்குவதாக அமைந்தது.

ராஸ் டெய்லரும் ஆக்ரோஷம் காட்டி 32 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களை எடுத்தார். ஆனால் ஹேசில்வுட் ஷார்ட் ஆஃப் லெந்தில் ஓரிரு பந்துகளை வீசிவிட்டு ஒரு பந்தை ஃபுல் லெந்தாக வேகமாக ஸ்டம்புக்கு நேராக வீச டெய்லர் பந்தை மட்டையில் வாங்காமல் கால்காப்பில் வாங்கினார், எல்.பி. ஆனார்.

டெய்லருக்கு முதலில் அவர் ரன் எண்ணிக்கையைத் தொடங்கும் முன் ஒரு கேட்சை விட்டார் கேப்டன் ஸ்மித், பிறகு தற்போது நாட் அவுட்டாக இருக்கும் வாட்லிங்குக்கும் ஒரு கேட்சை விட்டார், ஆட்ட முடிவில் சாண்ட்னர் 13 ரன்களுடனும், வாட்லிங் 7 ரன்களுடனும் கிரீசில் உள்ளனர்.

ஹேசில்வுட் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மிட்செல் மார்ஷ் 44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட முடிவில் நியூஸிலாந்து 116/5 என்று 94 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/article7927607.ece

Link to comment
Share on other sites

நியூ சீலாந்து                  202 & 208
அவுஸ்திரேலியா         224 & 187/7 (51.0 ov)
அவுஸ்திரேலியா 3 விக்கெட்களால் வெற்றி

228023.3.jpg

Link to comment
Share on other sites

பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா போராடி வெற்றி: தொடரை 2-0 என்று கைப்பற்றியது

 

நியூஸிலாந்தை 2-0 என்று வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி டிரான்ஸ் டாஸ்மன் கோப்பையுடன். | படம்: ராய்ட்டர்ஸ்.
நியூஸிலாந்தை 2-0 என்று வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி டிரான்ஸ் டாஸ்மன் கோப்பையுடன். | படம்: ராய்ட்டர்ஸ்.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டம் மற்றும் பிங்க் நிறப் பந்து ஆகிய புதுமைகளுடன் விறுவிறுப்பான முறையில் ஆஸ்திரேலிய வெற்றியில் முடிந்துள்ளது.

நியூஸிலாந்து தன் 2-வது இன்னிங்சில் 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோஷ் ஹேசில்வுட் அதி அற்புதமாக ஸ்விங் பந்துக் கலையை பயன்படுத்தி 70 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதனையடுத்து 187 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 66/3 என்று தடுமாறி, பிறகு ஷான் மார்ஷ் (49), வார்னர் (35), மிட்செல் மார்ஷ், ஆடம் வோஜஸ் ஆகியோரது சிறுபங்களிப்புகளுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து போராடி வெற்றி பெற்றது.

இந்த தொடர் முழுதும் சரியாக வீசாத டிரெண்ட் போல்ட் இன்று அருமையான ஸ்விங் பந்து வீச்சில் 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தினார். 225-250 ரன்கள் இலக்கு என்றால் ஆஸ்திரேலியா நிச்சயம் மண்ணைக் கவ்வியிருக்கும், ஆனால் நடுவர்கள் எஸ்.ரவி மற்றும் நைஜல் லாங் ஆகியோரின் ஆஸ்திரேலிய சாதக நேதன் லயன் தீர்ப்பினால் நியூஸிலாந்து தோல்வி தழுவியது என்றே கூற வேண்டும்.

மொத்தம் 123,736 ரசிகர்கள் இந்த 3 நாட்களில் மைதானத்துக்கு வருகை தந்துள்ளமை, பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளுக்கான பிரகாசமான எதிர்காலத்தை அறிவுறுத்தியுள்ளது. அதாவது ஆஷஸ் அல்லாத டெஸ்ட் போட்டி ஒன்றில் அடிலெய்டில் இது சாதனைக் வருகைப் பதிவு என்று கூறப்படுகிறது.

3-ம் நாளான இன்று 116/5 என்று தொடங்கிய நியூஸிலாந்து அடுத்த 5 விக்கெட்டுகளை இழந்து மேலும் 92 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதில் 3 விக்கெட்டுகளை ஹேசில்வுட் கைப்பற்றினார்.

வாட்லிங் தனது நேற்றைய ஸ்கோரான 7 ரன்களில் ஹேசில்வுட் பந்து வீச்சில் 2-வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அறிமுக வீரர் சாண்ட்னர் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 45 ரன்களுக்கு அருமையாகவே ஆடினார்.

மார்க் கிரெய்க் 15 ரன்களில் ஹேசில்வுட்-எட்ஜ்-நெவில் கூட்டணியில் ஹேசில்வுட்டின் 5-வது விக்கெட்டாக பெவிலியன் திரும்பினார். 45 ரன்கள் எடுத்த சாண்ட்னர், லயனின் அருமையான கணிப்பினால் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். மிட்செல் மார்ஷ் பந்தில் சவுத்தி 13 ரன்களில் அவுட் ஆனார். பிரேஸ்வெல் 27 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். தேநீர் இடைவேளைக்கு முன்னதாக போல்ட்டை பவுல்டு செய்த ஹேசில்வுட் 6-வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து 187 ரன்கள் தேவைப்பட்டது வெற்றிக்கு. வார்னர், ஜோ பர்ன்ஸ் இறங்கினர். பர்ன்ஸ் போல்ட்டிடம் 11 ரன்களில் எல்.பி.ஆனார். அடுத்ததாக வார்னர் (35), ஸ்மித் (14) ஆகியோர் 7 பந்துகள் இடைவெளியில் பிரேஸ்வெல், போல்ட் ஆகியோரிடம் வெளியேற 66/3 என்று ஆனது ஆஸ்திரேலியா. பிறகு வோஜஸ் (28), ஷான் மார்ஷ் (49) இணைந்து மேலும் 49 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். வோஜஸின் ஸ்விங் பந்து வீச்சுக்கு எதிரான துயரத்தை போல்ட் முடிவுக்குக் கொண்டு வந்தார். மிட்செல் மார்ஷ் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து சாண்ட்னரிடம் வீழ்ந்தார்.

ஸ்கோர் 176 ஆக இருந்த போது ஷான் மார்ஷ் 49 ரன்களில் போல்ட் பந்தை எட்ஜ் செய்து டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசியில் நெவில் 10 ரன்களில் போல்ட்டிடம் வெளியேற வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் மிட்செல் ஸ்டார்க் இறங்கினார், ஆனால் பீட்டர் சிடில் (9) நேராக ஒரு டிரைவ் அடித்து வெற்றி ரன்களை எடுத்தார்.

வரலாற்றுப் புகழடைந்த இந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய வெற்றியில் 3 நாட்களில் முடிந்தது. ஆஸ்திரேலியா தொடரை 2-0 என்று கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஹேசில்வுட்டும், தொடர் நாயகனாக வார்னரும் தேர்வு செய்யப்பட்டனர்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-20-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article7930096.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.