Jump to content

வீரத்தாலும் ஈகத்தாலும் கட்டியெழுப்பிய தேசிய விடுதலை இலக்கைச் சிதைத்து விடாதீர்கள்! இலட்சிய அரசியல் செயற்பாடே மாவீரருக்கான எமது தார்மீகக் கடமையாகும்!! - பிரதமர் வி.உருத்திரகுமாரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மாவீரர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது சிக்கலானதொரு காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இலட்சிய அரசியலை தார்மீகக் கடமையாக ஏற்று எமது அரசியற் தலைவர்கள் உண்மையுடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மாவீரர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது சிக்கலானதொரு காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இலட்சிய அரசியலை தார்மீகக் கடமையாக ஏற்று எமது அரசியற் தலைவர்கள் உண்மையுடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

   

மாவீரர்கள் வேண்டும் இலட்சிய அரசியல என்பது, ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதற்கும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதற்கும், நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதற்கும், அங்கீகாரம் தேடும் வகையில் எமது அரசியற் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும், இவ் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உழைத்தலுமாகத்தான் இருக்க முடியும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆவணப்படுத்தல், ஆட்சி மாற்ற அரசியல், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம்கள் விவகாரம் என சமகாலத்தின் பல்வேறு விடயங்களை முன்வைத்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் மாவீரர் நாள் செய்தியின் முழுமையான வடிவம் :

இன்று தேசிய மாவீரர் நாள்.

தமிழீழ விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட நமது தாய்மண்ணின் வீரர்களின் நினைவு நாள்.

தமக்கென வாழாது, தம் மக்களுக்காகவே வாழ்ந்து, களம் பல கண்டு போராடி நம் மண்னில் விதையாய் வீழ்ந்து விட்ட மாவீரர்களை நமது இதயக் கோவிலில் வைத்து நாம் பூசிக்கும் நாள். வீரத்துக்கும் ஈகத்துக்கும் அகராதியில் புதிய அர்த்தம் தந்து, ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலை வேட்கையை உலகறியச் செய்த உத்தமர்களின் நினைவுகளில் நாம் உணர்வுடன் மூழ்கிக் கிடக்கும் நாள்.

தம் குருதியால் எம் மண்ணைத் தோய்த்து விடுதலை உணர்வு என்ற பயிரை ஈழத் தமிழ் மக்களின் மனங்களில் எல்லாம் விதைத்து விட்டு வரலாற்றில் இடம் பிடித்து விட்ட எமது நாயகர்களின் திருநாள்.

மாவீரர்களை நினைத்து உருகி அவர்களை தமது நெஞ்சக்கூட்டினில் இருத்தி மக்கள் அவர்களுக்கான மரியாதையினை வழங்கும் இன்றைய நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து தனது மரியாதை வணக்கத்தைத் தலை சாய்த்துத் தெரிவித்துக் கொள்கிறது.

ஒன்றா, இரண்டா, பத்தா, நூறா, ஆயிரமா... இல்லையே.... ஆயிரம் ஆயிரமாய் 40,000 க்கும் மேற்பட்ட மாவீரர்களையல்லவா நமது தேசம் தனது விடுதலைக்காய் ஆகுதியாய்க் கொடுத்திருக்கிறது.

சிங்கள ஆக்கிரமிப்பை முறியடித்து, சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசில் எமது மக்கள் பாதுகாப்பாக, கௌரவமாக, சமத்துவமாக, இனஅழிப்புக்கு உட்படாது தமது தலைவிதியைத் தாமே தீர்மானித்தவாறு ஆனந்தமாக வாழ வேண்டும் என்ற கனவுடன்தானே எமது மாவீரர்கள் களமாடினார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு களத்தில் இருந்த காலத்திலெல்லாம் எமது மக்கள் தமது நெஞ்சினை நிமிர்த்தியவாறு «நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்» என்று அறைகூவியபடி, போராடும் மக்கள் என்ற தார்மீகச் செருக்குடன் வாழ்ந்தமைக்கு நமது மாவீரர்கள்தானே வழி சமைத்துக் கொடுத்தார்கள்.

எமது தேசியப் பிரச்சனையை இது ஒரு சிறு உள்நாட்டுப் பிரச்சனை என்று தட்டிக் கழிக்க முயன்றவர்களுக்கெல்லாம் - களத்தில் நின்று தாம் நடத்திய வீரமும் ஈகமும் நிறைந்த போராட்டத்தின் மூலம் - அதனை அனைத்துலகச் சட்டங்களுக்கு உள்ளாகும் அனைத்துலகப் பிரச்சனையாக உருவெடுக்க வைக்க எமது மாவீரர்கள்தானே வழிகோலினார்கள்.

அரசற்ற தேசமாக இருக்கும் ஈழத் தமிழர் தேசம் தனக்கென்றதோர் அரசினை அமைத்துக் கொள்வது ஒன்று மட்டுமே நமது தாயகத்தினதும் மக்களதும் இருப்பை உறுதி செய்யும் என்பதனை, வரலாற்றை வழிகாட்டியாகக் கொண்டு உய்த்துணர்ந்த சுதந்திர வேட்கையுடன்தானே எம் மாவீரர்கள் நமது தாயகத்தை எதிரியிடம் இருந்து மீட்டெடுக்கப் போராடினார்கள்.

எமது மாவீரர்களின் நினைவுகள் தமிழ் மக்களிடம் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும். மாவீரர்கள் எமது மக்களின் கூட்டு நினைவுகளில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். எமது மக்களின் விடுதலை உணர்வுக்கு அவர்கள் கவசமாக இருக்கின்றார்கள்.

மாவீரர்கள் நினைவுகள் எமது மக்களிடம் நிறைந்திருக்கும் வரையில் அவர்களை அடிமை கொள்ள முடியாது என்பதனை எதிரி புரிந்து வைத்திருக்கிறான். மாவீரர்கள் நினைவுகள் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும்வரை தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்யும் தனது நோக்கம் நிறைவேறப்போவதில்லை என்பதனை நன்கு அறிந்து வைத்திருக்கிறான். மாவீரர்கள் நினைவுகள் அடுத்த தலைமுறைக்குக் காவிச் செல்லப்படுவதனை எப்பாடுபட்டாவது தடுத்து விட வேண்டும் என்பது அவனது திட்டமாக இருக்கிறது. மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்துத் துவம்சம் செய்ததும், மாவீரர்களுக்கு மக்கள் வணக்கம் செலுத்த விடாது தடைகள் இடுவதும் இந்த நோக்குடனேயே மேற்கோள்ளப்படுகின்றன. மாவீரர்களின் வரலாற்றையும் ஈகத்தையும் நினைவுகளையும் வரலாற்றின் பக்கங்களில் இருந்து அழித்து விட வேண்டும் எனத் துடிப்பதும் இதன்பாற் பட்டுத்தான் நடைபெறுகிறது.

மாவீரர்களைப் பயங்கரவாதிகளாக எதிர்காலத் தமிழர் தலைமுறைக்குச் சித்தரிப்பதே சிங்களத்தின் திட்டமாக இருக்கிறது. தற்போதய தலைமுறைத் தமிழ் மக்களை ஆக்கிரமிப்புக்குள் வைத்திருந்து, அவர்களை அச்சத்தின் பிடிக்குள் அழுத்தி வைத்திருந்து, மாவீரர்கள் பற்றிய நினைவுகளை போர்க்காலத்தில் வாழ்ந்த மக்களுக்குள் மட்டுப்படுத்தி விட்டால், அடுத்த தலைமுறையினருக்கு மாவீரர்களைப் பயங்கரவாதிகள் எனச் சித்தரிக்கும் வகையிலான அரச பாடப்புத்தகங்களை உருவாக்குவதும், அதன்வழி மாவீரர்களைப் பயங்கரவாதிகளாக வரலாற்றில் நிலைநிறுத்துவதும் சாத்தியமானது என சிங்கள இனவாத மூளை சிந்திக்கிறது.

ஓர் ஆயுதம் தாங்கிய குழுவினர் மக்களைக் கொன்றார்கள், தலைவர்களைக் கொன்றார்கள், இனச் சுத்திகரிப்புச் செய்தார்கள், வரி விதித்தார்கள், தமது ஆயுதங்களால் மக்களைப் பயமுறுத்தி கொடுங்கோலாட்சி நடாத்தினார்கள் - இக் கொடுமையிலிருந்து தமிழ் மக்களை சிங்கள தேசத்தின் படைகள் பெரும் உயிர்த் தியாகம் செய்து மனிதாபிமான அடிப்படையில் அவர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு நல்வாழ்வு வழங்கினார்கள் என - மாவீரர் வரலாற்றை பயங்கரவாதிகளின் வரலாறாகச் சித்தரிக்கும் திட்டம் சிங்களத்திடம் இருக்கிறது. மகிந்த இராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புப் போருக்கு இராணுவப் பெயர்கள் எதுவும் சூட்டப்படாது மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என இத் தமிழின அழிப்புப் போர் அழைக்கப்பட்டமையினை நாம் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் இத்தயைதோர் நிலை உருவாகாது தடுக்க வேண்டியது தற்போதய தலைமுறையினராகிய எமது கைகளில்தான் இருக்கிறது. மாவீரர் வீரங்களையும், ஈகங்களையும் மாவீரர்களின் மனிதத்துவம் நிறைந்த வாழ்வு குறித்த ஆயிரக்கணக்கான உண்மைக் கதைகளையும் உரிய ஆவணங்களாக்குவது தற்போதய தலைமுறையினரின் பொறுப்பாக இருக்கிறது.

இப் பெரும்பணியை ஆற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமது தலைமுறையைச் சேர்ந்த அறிஞர்களதும், எழுத்தாளர்களதும், படைப்பாளிகளதும் கைகளில் உள்ளது. தமிழ் மொழியில் மட்டுமன்றி உலகின் முக்கியமான மொழிகளில் எல்லாம் இப் படைப்புகள் வெளிவர வேண்டும். ஆய்வுகளாக, வரலாற்று ஆவணங்களாக, வாழ்க்கைக் குறிப்புகளாக, சிறுகதைகளாக, புனைவுகளாக, நாடகங்களாக, திரைப்படங்களாக, கவிதைகளாக, பாடல்களாக, ஓவியங்களாக, புகைப்படங்களாக – என்னென்ன வடிவங்களில் மாவீரர் வாழ்வும் அவர்தம் கனவும் பதிவு செய்யப்பட முடியுமோ அந்தந்த வடிவங்களில் எல்லாம் அவற்றைப் பதிவு செய்து நமது அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டியது நமது தலைமுறையின் பொறுப்பாகும். இதனை நாம் மாவீரர்களுக்குச் செய்யும் மரியாதை வணக்கத்தின் முக்கிய பகுதியாக நாம் கொள்ள வேண்டும்.

அன்பான மக்களே!

தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது ஒரு சிக்கலான காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது. மாவீரர்களின் வீரத்தாலும், ஈகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட தமிழ் மக்களின் தேசிய விடுதலையின் இலக்கைச் சிதைத்து விடும் வகையிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. மகிந்த இராஜபக்சவின் கொடும் கோலாட்சியினை அகற்றவும், தமிழின அழிப்புடனான கொடும் போரைத் தமிழ்மக்கள் மீது ஏவி விட்டமைக்குத் தண்டனை வழங்கவும்; தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பைக் கொண்டே தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையினை இல்லாதொழிக்கும் வகையிலான செயற்பாடுகளில் சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.

மகிந்த இராஜபக்ச ஆட்சியதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டமையின் ஊடாக சிறிலங்கா அரசு அனைத்துலக ரீதியிலான தனிமைப்படுத்தலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறது. சிறிலங்காவின் தற்போதய அரசாங்கத்தை உலகின் பலம் மிக்க நாடுகள் ஆதரிக்கின்றன. மகிந்த இராஜபக்சவின் ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடும்போது குறிப்பாக அமெரிக்க அரசாங்கம் மைத்திரி- ரணில் அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து நிற்கிறது. இந்தியாவின் ஆதரவும் புதிய ஆட்சியாளர்களுக்கு உண்டு. சீனாவுடனும் நெருக்கடி தராத வகையிலான உறவை புதிய ஆட்சியாளர்கள் பேணிக் கொள்கின்றனர்.

இலங்கைத்தீவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் வெறுமனே உள்நாட்டில்; நடந்த விடயம் அல்ல. இது அனைத்துலக அரங்கில் வகுக்கப் பட்டதொரு திட்டம். இத் திட்டத்தில் சிங்களத் தலைவர்கள்; மட்டுமல்ல தமிழ், முஸ்லீம் தலைவர்களும் பங்காளர்களாக இருந்தார்கள். இவ் ஆட்சி மாற்றத் திட்டத்தின் பிரதான நோக்காக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுகளின் நலன்களுக்கும் ஏற்பவே சிறிலங்காவின் வெளிநாட்டுக் கொள்கை அமைய வேண்டும் என்பதில் இந் நாடுகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. இதற்கு தென்னிலங்கையில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பது இந் நாடுகளின் நிலைப்பாடாக இருக்கிறது தென்னிங்கையின் கடும் போக்காளர்கள் சிங்கள தேசியவாதத்தை ஆயுதமாகக் கொண்டு தற்போதய ஆட்சியினை வலுவிழக்கச் செய்து விடக் கூடாது என்பதில் இந் நாடுகள் மிகக் கவனமாக இருக்கின்றன.

இதேவேளை மகிந்த இராஜபக்சவினை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மைத்திரி - ரணில் - சந்திரிகா அணியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்குச் சில வாக்குறுதிகள் வழங்கியிருந்ததாக அறிய முடிகிறது. இந்த வாக்குறுதிகள் எவை என்பதனை கூட்டமைப்புத் தலைவர்கள் பகிரங்கப்படுத்தாவிடினும்கூட இவை தொடர்பாக செய்திகள் வெளியில் கசிந்த வண்ணம்தான் உள்ளன. இதில் அரசியல் தீர்வு குறித்த விடயம் முக்கியமானது. 2016 ஆம் ஆண்டுக்குள் சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படும் என கூட்டமைப்புத் தலைவர் சம்மந்தர் அவர்கள் தேர்தல் காலத்தில் மக்களுக்கு உறுதிமொழி வழங்கியிருந்தார்.

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பது அங்கீகரிக்கப்பட்டு தேசியம், தாயகம் சுயநிர்ணம் என்று நிலையின்பாற்பட்ட ஒரு சமஸ்டித்தீர்வு என்பதே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு என நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் சமஸ்டியும் இல்லாத ஒற்றையாட்சியும் இல்லாத ஒரு புதியதோர் அரசியல் அமைப்பை யாத்து அதனையே தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வாகவும் ஏற்றுக் கொள்வதற்கு நாடாளுமன்றத் தேர்தலின் முன்பே கூட்டமைப்புத் தலைமை சம்மதம் வழங்கி விட்டது என்பது தெளிவாகி வருகிறது.

எவ்வாறு அமெரிக்காவால் ஜெனிவாவில் முன்மொழியப்பட்ட நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மான வாக்கியங்கள் அமைந்திருந்தனவோ அதே போன்றதொரு அணுகுமுறையாகத்தான் இதுவும் அமையக் கூடும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் அடிப்படையில் ஓர் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையினையே பரிந்துரைத்திருந்தது.

அதேவேளை அதனை ஒரு கலப்புப்பொறிமுறை என வாதிடுவதற்கும் இடமளிக்கும் வகையில் சில அம்சங்கள் புகுத்தப்பட்டிருந்தன. இதே போன்று ஆக்கப்படும் புதிய அரசியலமைப்பும் ஒற்றையாட்சி என்பதனை வெளிப்படையாகக் கூறாது விடினும் அடிப்படையில் ஒந்றையாட்சி அரசியல் அமைப்பாகவே அது இருக்கும். மத்தியில் இருந்து மேற்கொள்ளப்படும் சில அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளைக் குறிப்பிட்டு இதுவும் சமஸ்டிதான் என வாதிடுவதற்கும் இந்த அரசியலமைப்பு இடம் தரக் கூடும். இங்கு தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதோ, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதோ, தமிழ் மக்களுக்கு இயல்பான சுயநிர்ணய உரிமை உள்ளது என்பதோ சிங்களத்தால் அங்கீகரிக்கப்படப் போவதில்லை. இத்தகைய அங்கீகாரம் இல்லாத எந்த அரசியல் ஏற்பாடுகளும் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை.

இவ்விடத்தில் மாவீரர் கனவுகள் குறித்து நாம் கவனம் கொள்ள வேண்டும். மாவீரர்களின் ஆன்மா அமைதியாக உறங்குவதற்கு ஏற்ற வகையில் நமது அரசியற் செயற்பாடுகள் அமைய வேண்டும்.

மாவீரர்கள் எம்மிடம் வேண்டுவதெல்லாம் இலட்சிய அரசியல் செய்யுங்கள் என்பதுதான். இங்கு இலட்சிய அரசியல் என்பது ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதற்கும், வடகிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதற்கும் நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதற்கும் அங்கீகாரம் தேடும் வகையில் எமது அரசியற் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும் இவ் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உழைத்தலுமாகத்தான் இருக்க முடியும்.

மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இந்த அடிப்படைகளை நாம் கைவிட முடியாது. அவற்றை ஒரு தார்மீகக் கடமையாக ஏற்றுப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு தமிழரது அரசியற் தலைமைகளுக்கு உண்டு. இந் நிலைப்பாடுகள் தொடர்பாக எமது தலைவர்கள் உண்மையுடன் செயற்பட வேண்டும். தேர்தல் காலக் கோசமாக மட்டும் இவை அமையக் கூடாது.

நாம் மாவீரர்களை நினைவு கூருதல் உணர்வுபூர்வமாக மட்டும் அமைந்தால் போதாது. அது அரசியல் ரீதியிலும்; அமைய வேண்டும். எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தன்னுயிர் ஈந்தவர் என்பதற்காக மட்டும் செலுத்தும் வணக்கமாக அமையாமல் அவர்; என்ன நோக்கத்துக்காக உயிர் ஈகம் செய்தார்கள் என்பதனை எண்ணிப் பார்த்துச் செய்யும் அரசியல்ரீதியான வணக்கமாகவும் அமைய வேண்டும்.

தோழர்களே!

எம் அரிய மாவீரர்கள் எமது சொந்த மண்ணின் விடிவுக்காகவே போராடினார்கள். வேறு எவரது தாயகத்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கு அவர்களிடம் துளியளவும் இருந்ததில்;லை. இனச் சுத்திகரிப்பு எண்ணம் அவர்களிடம் என்றும் இருந்ததில்லை. சிங்கள தேசத்தின் இருப்பை மாவீரர்கள் அங்கீகரித்தார்கள். முஸ்லீம் மக்களுடன் ஓர் இணக்கமான அரசியல் உடன்பாட்டுக்கு வருவதையே அவர்கள் விரும்பினார்கள். வடகிழக்கு நிலப் பரப்பு முஸ்லீம் மக்களினதும் தாயகம் என்றே அவர்கள் கருதினார்கள். போர்க்காலத்தில் முஸ்லீம் மக்களை வெளியேற்ற வேண்டிய நிiலை ஏற்பட்டமை குறித்து மனம் வருந்தினார்கள்.

மாவீரர் கனவுகளை நனவாக்குவதற்கு எம்மால் முடிந்த அனைத்துக் கருமங்களையும் நாம் ஆற்ற வேண்டும். நமது உடனடிப்பணி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் குறித்து சிறிலங்கா முன்னெடுக்கும் நடவடிக்கைகளைக் கண்காணித்து அனைத்துலக நீதி விசாரணைக் கோரிக்கையினை வலுப்படுத்துதலாக இன்று இருக்கிறது. அரசியல் தீர்வு விடயத்தில் தமிழீழம் என்ற நிலைப்பாட்டையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் வாக்கெடுப்பின் ஊடாகவே அரசியல் தீர்வு காணப்படவேண்டும் எனும் நிலைப்பாட்டுக்கு ஆதரவுத்தளத்தை விரிவு படுத்தி அதற்காக உழைப்பதும் நமக்குரிய மற்றைய உடனடிப்பணியாக அமைகிறது. அத்தகைய நிலைப்பாடு ஒன்றே எமது தேசியப் பிரச்சனை தொடர்பாக உண்மையான ஜனநாயகத்தின் பாற்பட்டதாக அமைய முடியும்.

மாவீரர் தம் நினைவுகள் எமது பணிகளுக்;கு உத்வேகம் அளிப்பதாக! தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் நாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாதம் ஊடகசேவை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.