Jump to content

நவம்பர் 27 கிரிக்கெட்டின் கறுப்பு தினம்: இளம் வீரர் ஹியூக்ஸ் உயிரை பறித்த பந்து!


Recommended Posts

நவம்பர் 27 கிரிக்கெட்டின் கறுப்பு தினம்: இளம் வீரர் ஹியூக்ஸ் உயிரை பறித்த பந்து!

 

ன்று வரை கிரிக்கெட் உலகின் பிரசித்தி பெற்ற மைதானமாக விளங்கியது சிட்னி கிரிக்கெட் மைதானம்  அன்று வரையிலான அதன் வரலாறு, ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனையும் உற்சாகப்படுத்தியதாகவே இருந்தது. ஆனால், அந்நாள் அதன் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி வைத்தது. அது, நவம்பர் 27, 2014. பவுன்சர் பந்தால் தலையில் காயம்பட்டு சிகிச்சையில் இருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் தனது ஆயுட்காளத்தை 25 ஆண்டுகளோடு நிறைவு செய்துகொண்ட தினம்.

c3.jpg

இன்று. கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விளையாடுபவர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனின் கண்ணிலும் ஈரம் படர வைத்தது இத்துயர சம்பவம். தான் மிகவும் விரும்பிய, மிகவும் நேசித்த கிரிக்கெட் மைதானத்திலேயே தனது உயிரைவிட்ட இந்த வீரரைப் பற்றிய பகிர்வு இதோ...

சாதனைகளோடு தொடங்கியவர்...

2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முதலாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராகக் களம் கண்டார் ஹியூக்ஸ். ஸ்டெய்ன், மோர்கல் என உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட தென்னாப்பிரிக்க அணியிடம் தனது முதல் இன்னிங்சில், தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் கணக்கை தொடக்காமலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்துக் கொண்டு விளையாடி 75 ரன்னெடுத்தார்.

c2.jpg

இவரது வருகையை உலகம் கவனித்தது இரண்டாவது டெஸ்டில் தான். ஆட்டத்தின் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த ஹியூக்ஸ், மிக இளம் வயதில் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ஆனால், மோசமான பார்ம் காரனமாக அடிக்கடி அணிக்கு தேர்வாவதாகவும் வெளியேற்றப்படுவதாகவும் இருந்தார். கடைசியில் இவரது இடத்தை ஆல்ரவுண்டர் வாட்சன் தனதாக்கிக் கொண்டார். ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு 2013-ல் தான் கிடைத்தது. இலங்கைக்கு எதிரான அப்போட்டியில் 112 ரன் எடுத்த ஹியூக்ஸ், அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் ஆஸ்திரேலியர் என்ற சாதனையையும் படைத்தார். இவர் 26 டெஸ்ட் போட்டிகளிலும், 25 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013-ம் ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரருக்கான விருதினையும் ஹியூக்ஸ் வென்றார்.

கருப்பு தினம்...

சவுத் ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான செப்பீல்டு ஷீல்டு நான்கு நாட்கள் போட்டி கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த சவுத் ஆஸ்திரேலிய அணிக்காக 63 ரன்களோடு நிதானமாகவும் உறுதியோடும் விளையாடிக் கொண்டிருந்தார் பிலிப் ஹியூக்ஸ். ஆட்டத்தின் 49வது ஓவரை வீசிய நியூ சவுத் வேல்ஸ் வீரர் சீன் அப்பாட், அவ்வோவரின் மூன்றாவது பந்தை பவுன்சராக வீசினார். மணிக்கு சுமார் 135 கி.மீ வேகத்தில் வந்த அப்பந்தை லெக் சைடில் ‘புல் ஷாட்’ அடிக்க ஹியூக்ஸ் முற்பட, அப்பந்து பேட்டில் படாமல் அவரது இடது காதிற்கு கீழ் புறமாக கழுத்தில் பட்டது. அடிபட்டதும் களத்திலேயே சுருண்டு விழுந்த ஹியூக்சை வீரர்கள் எழுப்ப முயற்சித்தும் அவர் எழாததால் மருத்துவமணைக்குக் கொண்டு சென்றனர். மூளைக்கு ரத்தம் எடுத்து செல்லும் ரத்தக் குழாயில் அடிபட்டு ரத்த உறைவு ஏற்பட்டது, இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு அருவை சிகிச்சை செய்ய கோமா நிலைக்குப் போனார் ஹியூக்ஸ்.

c4.jpg

ஹியூக்ஸ் சீக்கிரம் நலம்பெற வேண்டி கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் பிராத்தணை செய்தவண்ணம் இருந்தனர். ஆனால் இரண்டு நாட்கள் கோமாவிலேயே இருந்த ஹியூக்ஸ். நவம்பர் 27-ம் தேதி காலை காலமானார். உலகமே இந்நிகழ்வால் உறைந்து போனது. கிரிக்கெட்டையே வாழ்க்கையாக நிணைத்த ஒரு 25 வயது இளைஞனின் வாழ்க்கை கிரிக்கெட் பந்தால் முடிவுக்கு வந்த சம்பவம் அனைவருக்கும் பேரதிர்ச்சியாய் இருந்தது. இது கிரிக்கெட்டின் கருப்பு தினமாய் கருதப்பட்டது.

ஹியூக்ஸிற்கு அஞ்சலி...

இச்செய்தியை அறிந்த முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலைத் தெரிவித்தினர். அவர்கள் மட்டுமல்லாது, ரசிகர்களும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். ட்விட்டர் மற்றும் ஃபேஸ் புக்கில் பலரது புரொபைல்களும் ஹியூக்சின் முகமாகவே இருந்தன. அதுமட்டுமல்லாது, ஒவ்வொருவரும் தங்களது வீட்டின் வெளியே ஹியூக்சின் படத்தையும், கிரிக்கெட் பேட்களையும் வெளியே வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது நடந்துகொண்டிருந்த பாகிஸ்தான்-நியூசிலாந்து டெஸ்ட் போட்டி, இலங்கை-இங்கிலாந்து ஒருநாள் போட்டிகள் தள்ளிப்போயின. இதேபோல், அப்போது தொடங்கவிருந்த இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரும் தள்ளிப்போனது.

மறையாத 63 மற்றும் 408...

பின்னர் தொடங்கிய முதல் போட்டியில் ஹியூக்சை கவுரவப்படுத்தும் விதமாக அவர் ஆஸ்திரேலிய அணியின் 13வது வீரராக அறிவிக்கப்பட்டார். ஹியூக்ஸ் அடிபட்டபோது உடன் களத்திலிருந்த வார்னர், வாட்சன், ஹாடின் உள்ளிட்ட வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போதுகூட மிகவும் மனமுடைந்தே காணப்பட்டனர். அப்போட்டியில் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட வீரர்கள் 63 ரன்கள் எடுத்திருந்தபோது, மட்டையை உயர்த்தி ஹியூக்சிற்கு அர்பணித்தினர். ஹியூக்ஸ் அடிபட்டபோது 63 ரன்கள் எடுத்திருந்ததால் அவ்வாறு செய்தனர்.

c1.jpg

அவர்களது சதங்களை தங்களது தோழனுக்கு அர்ப்பணிப்பதாய்க் கூறினர். இப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் ஹியூக்சின் டெஸ்ட் நம்பரான 408 எண் கொண்ட உடையணிந்து விளையாடினர். ஹியூக்ஸ் அடிபட்ட சிட்னி மைதானத்தில் நடந்த கடைசி போட்டியில் 63 ரன்கள் எடுத்திருந்தபோது டேவிட் வார்னர் மைதானத்தை முத்தமிட, குழுமியிருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் கண்ணீர் சிந்தி அவ்வீரனுக்கு அஞ்சலி செலுத்தினர். 63 மற்றும் 408 ஆகிய என்கள் கிரிக்கெட் வரலாற்றில் அழியா இடம்பிடித்துள்ளன என்பது நிதர்சனம்.

முடிவை நிர்ணயித்த முடிவு...

கடந்த 11-ம் தேதி ஹியூக்சின் வாழ்க்கை, அவரது பெயரிலேயே புத்தகமாய் வெளியிடப்பட்டுள்ளது. அதில் யாரும் அறியாத சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஹியூக்ஸ், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கெதிராக தனது கடைசி போட்டியில் களமிறங்கும்போது வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். அது இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்கும் சமயம். கேப்டன் கிளார்க் காயத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததால், தான் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் தனக்கு தேசிய அணியில் இடம் கிடைக்குமென்று நம்பியிருக்கிறார் ஹியூக்ஸ். தொடக்க வீரராக மட்டுமின்றி சில போட்டிகளில் நடு வரிசையிலும் விளையாடிய அனுபவம் இருந்ததால் அப்போட்டியில் கட்டாயம் விளையாட வேண்டுமென்று முடிவெடுத்துள்ளார்.

c5.jpg

அந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலிய தேர்வுக்குழுத் தலைவராக இருந்த மார்க் வாக் மற்றும் சவுத் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் டேரன் பெர்ரி ஆகியோரிடையே நடந்த உரையாடலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கிரிஸ் ரோஜர்சுக்கு வயது அதிகமானதாலும், அவரால் தொடார்ந்து சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியாததாலும் அவருடைய இடத்தில் ஹியூக்சை கொண்டுவர நிணைத்துள்ளார் வாக். அதனால், அவருடைய செயல்பாடுகள் குறித்து பெர்ரியிடம் விசாரித்துள்ளார். அப்போது பெர்ரி “ஹியூக்ஸ் நிச்சயம் சிறப்பாக விளையாடி தேசிய அணியில் நிரந்தர அங்கம் வகிப்பார். நியூ சவுத் வேல்சுடனான போட்டியில் நிச்சயம் அவர் சதமடிப்பார். என் வீட்டை நான் பந்தயமாகக் கூட வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

c6%281%29.jpg

இதில் சோகம் என்னவென்றால், ஹியூக்ஸ் நிரப்ப நிணைத்த கிளார்க், வாக் நிரப்ப நிணைத்த ரோஜர்ஸ், இவரது இடத்தை நிரப்பிய வாட்சன் என அனைவரது இடமும் இப்பொழுது காலியாகவே உள்ளது. ஹியூக்ஸ் மறைந்த ஒரு ஆண்டுக்குள் இவர்கள் மூவரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேவிட்டனர். இன்று அவர் இருந்திருந்தால் கண்டிப்பாக ஆஸ்திரேலிய அணியின் முக்கிய அங்கமாய் இருந்திருப்பார். விரைவில் அணியில் இடம்பெற வேண்டுமென்று அன்று களம் கண்ட அவர், அக்களத்திலேயே முடிந்து போய்விட்டார். அவர் அந்நாளில் விளையாடாமல் ஓய்வெடுத்திருந்தால் இக்கட்டுரையே அவசியமற்றுப் போயிருக்கும்.

மரணம் வேண்டாம்.. சாதனைகள் மட்டும்...

அப்போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக களம் கண்ட ஆஸி சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ.கீஃப் “ஹியூக்ஸ் எப்படி பந்து வீசினாலும் அடித்துக்கொண்டே இருப்பார். அதைக் கட்டுப்படுத்த ‘ஷார்ட் பால்கள்’ போடவேண்டுமென்று எங்கள் பவுலர்கள் தீர்மானித்திருந்தனர். அப்படி நாங்கள் செய்த முடிவு இப்படி ஆகிவிட்டது. அவர் ஒரு மகத்தான வீரர். அவர் மரணத்தை அனைவரும் மறந்து அவர் செய்த சாதனைகளுக்காக மட்டும் அவரை நிணைவு கூற வேண்டும்” என்று கூறினார்.

c7%281%29.jpg

அதற்கு ஏற்றார்போல் அவரது நிணைவு தினமான இன்று, கிரிக்கெட் வரலாற்றின் முதல் பகலிரவு போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியின்போது ஹியூக்சை நிணைவு கூறும் வகையில் சரியாக 4.08 மணிக்கு அவரைப் பற்றிய வீடியோவை மைதானத்தில் ஒளிபரப்ப ஆஸி. கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நேற்று அரசியல் ஆல்பங்கள் மட்டுமே வெளியிடும் ஆஸ்திரேலிய பாப் பாடகர் உர்த்பாய், ஹியூக்ஸ் நிணைவாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி ‘நம்புக்கா பாய்’ என்ற பெயரில் பாடலொன்றை வெளியிட்டுள்ளார்.

எல்லாம் நவம்பரிலே!   

நவம்பர் 27ல் மறைந்த ஹியூக்ஸ் பிறந்ததும் நவம்பரில் தான். 1988-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி கிரெக்-விர்ஜீனியா தம்பதிக்குப் பிறந்தார் ஹியூக்ஸ். சிறுவயது முதலே பேட்டும் கையுமாக இருந்த ஹியூக்ஸ், தனது 12 வயதிலேயே கிளப் அணிகளுக்காக விளையாடத் தொடங்கிவிட்டார். தனது குட்டையான உருவத்தால் நண்பர்களால் ‘லிட்டில் டான்’ என்று அழைக்கப்படுவாராம் ஹியூக்ஸ். ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிப்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்த ஹியூக்ஸ், முதல் தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனதும் இதே நவம்பர் மாதம் தான். 2007 நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய அவரது கிரிக்கெட் வாழ்க்கை அடுத்த 8 ஆண்டுகளில் முடிவுற்றதே பெரும் சோகம்.

c8.jpg

ஹியூக்ஸின் கிரிக்கெட் சகோதரர் என கருதப்படும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு இம்மாதம் 17-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போது பேசிய அவர், ”என் சிறிய சகோதரனை நான் என்றென்றும் மறவாமல் இருக்க வேண்டியே என் மகள் அவர் மறைந்த நவம்பர் மாதத்திலேயே பிறந்திருக்கிறாள். ஹியூக்ஸ் என்றும் என் நிணைவிலேயெ இருப்பார்” என்று நெகிழ்ந்தார்.

நேசித்த இடத்திலேயெ மரணிப்பது என்பது மிகவும் சிறந்தது. ஆனால், அது விரைவில் நடந்தது தான் பேரிழப்பு. ஹியூக்சின் இழப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிற்கே பேரிழப்புதான், கிரிக்கெட்டை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் பேரிழப்பு தான். வீரனே..., ஒவ்வொரு மனிதனும் அவன் பிறந்த நாளிலும், நிணைவு நாளிலும் தான் நிணைக்கப்படுவான். ஆனால் கிரிக்கெட் பந்து எவர் ஒருவர் உடம்பில் படும்பொழுதும் அங்கு உன் நியாபகம் எழும். அதுவே இவ்வுலகம் உனக்குச் செய்யும் அஞ்சலி!

http://www.vikatan.com/news/sports/55649.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.