Jump to content

உலகில் உரிமைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலை வேட்கையின் குறியீடானவர் தமிழீழத் தேசியத் தலைவர் : - பிரதமர் வி.உருத்திரகுமாரன் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், ஈழத்தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்களுக்கும், ஏன் உலகில் உரிமைக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலை வேட்கையின் குறியீடாக அவர் மிளிர்கிறார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள்  தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், ஈழத்தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்களுக்கும், ஏன் உலகில் உரிமைக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலை வேட்கையின் குறியீடாக அவர் மிளிர்கிறார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

   

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்தநாளினையொட்டி உலகத் தமிழ் மக்கள் காட்டும் எழுச்;சியான வெளிப்பாடுகளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தன்னை இணைத்துக் கொள்கிறது என பிரதமர் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தேசியத் தலைவர் அவர்கள் தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார். ஈழத்தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்களுக்கும், ஏன் உலகில் உரிமைக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலை வேட்கையின் குறியீடாக அவர் மிளிர்கிறார்.

அடக்குமுறையாளன் எத்தகைய வலுவுள்ளவனாக இருந்தாலும், எவ்வளவு கொடூரமானவனாக இருந்தாலும், அடக்குமுறையை எதிர்த்து அச்சமின்றிப் போரிடுவதற்கு மக்கள் வீரத்துடன் நிமிர வேண்டும் என்பதனைத் தேசியத் தலைவர் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உறுதியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் என்பது தேசியத் தலைவரின் வார்த்தைகளில் கூறுவதாயின் நெருப்பாற்றை நீந்திக் கடப்பது போன்றது. அளப்பரிய வீரத்தையும், ஈடில்லா ஈகத்தையும் கொண்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. எத்தனையோ வேதனைகளையும், சோதனைகளையும், துரோகங்களையும் தாண்டிப் பயணிக்க வேண்டியதொன்று. சின்னம் சிறிய தேசமான தமிழீழ தேசம் தன்னிலும் ஆறு மடங்கு கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட சிங்கள தேசத்தின் அரசை எதிர்த்து மட்டுல்ல, தமது பிராந்திய நலன்களுக்காகவும், புவிசார் நலன்களுக்காகவும் சிறிலங்கா அரசைத் தாங்கி நின்ற பலம் மிக்க அரசுகளை எதிர்த்தும் போராட வேண்டிய போராட்டமாக மாறிப் போனதொன்று. இத்தகையதோர் சூழலில், போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த தேசியத் தலைவர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளும், காட்டிய வீரமும் மதிநுட்பமும் வரலாற்றில் நிலைத்து நிற்கப் போவவை.

உலக வல்லரசுகளின் பெருந்துணையுடன் தமிழீழ மக்களை இனஅழிப்புச் செய்தவாறு சிங்களம் செய்த ஆக்கிரமிப்பை உறுதியுடன் எதிர்த்துப் போராடி, உலகில் போராடும் மக்கள் பெறவேண்டிய சரணடையாத உறுதியைத் தேசியத் தலைவர் வெளிப்படுத்தினார். எமது எதிர்காலத் தலைமுறைக்கு காலத்துக்கு ஏற்ற வகையில் போராட்ட வடிவங்கள் மாறலாம், இலட்சியம் மாறாது என்ற செய்தியை அறிவித்தார்.

ஆயுதப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் தவறு எனத் தெரிந்த போது அதற்காக மன்னிப்புக் கோரவும் அவற்றை இயன்றளவுக்கு மாற்றியமைக்கவும் தேசியத் தலைவர் தயாராக இருந்தவர்.

ஆயுதப்பாவனை குறித்தும் அவரிடம் ஓர் அறம் இருந்தது. தேசியத் தலைவர் எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் விடுதலையை நேசித்தவர். அதற்கான விடுதலைப் போராட்டத்தை அளப்பரும் தியாகங்களுடன் முன்னெடுத்தவர். அவரது பார்வையில் விடுதலைக்குத் தடையாக இருக்கும் எவற்றையும் அகற்றி விடுதல் அவசியம் எனக் கருதியவர்.

தமிழ் மக்களின் விடுதலை எனும் ஒரு பெரும் பொது நன்மையினை அடைவதனை இலக்காகக் கொண்டே, இப் பொதுநன்மையின்பால் நம்பிக்கை கொண்டே, தேசியத் தலைவர் அவர்கள் எல்லா முடிவுகளையும் எடுத்தார். விடுதலை என்ற பொது நன்மையே தேசியத் தலைவரின் அறமாக இருந்தது. தேசியத் தலைவரின் இவ் அணுகுமுறையுடன் முரண்படுபவர்கள்கூடப் போராட்டத்தின் மீதும் விடுதலையின் மீதும் தேசியத் தலைவர் கொண்டிருந்த பற்றுறுதியை மதிக்கவே செய்வர்.

தேசியத் தலைவரின் 61 வது பிறந்த நாள் நிகழ்வை நாம் அடையாளப்படுத்தும் இதேவேளை தேசியத் தலைவர் அவர்கள் கூறிய அறிவுரைகளையும் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். நான் பெரிது நீ பெரிது என்றில்லாது நாடே பெரிது என நாம் அனைவரும் செயற்பட உறுதி எடுத்துக் கொள்வோமாக!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாதம் ஊடகசேவை

 

http://www.seithy.com/breifNews.php?newsID=145708&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.