Jump to content

இந்திய பிட்ச்கள் மோசமானவையா? கொதிக்கும் ரசிகர்கள்!


Recommended Posts

இந்திய பிட்ச்கள் மோசமானவையா? கொதிக்கும் ரசிகர்கள்!

 

ந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி,  நாக்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 215 ரன்களை சேர்த்தது. இந்த டெஸ்ட் தொடரில், ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்கப்பட்டது நேற்றுதான். 215 ரன்கள் குவித்ததே சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா,  நேற்று இரண்டு விக்கெட்டுகளை இழந்து 11 ரன்களை எடுத்திருந்தது.
 

south%20africa-%20indian%20playars.jpg

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரையே அஸ்வினிடம் கொடுத்தார் கேப்டன் விராட் கோலி. இன்று முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் எல்கர் ஆட்டமிழந்தார். இதையடுத்து  அடுத்தடுத்த ஓவர்களிலேயே ஆம்லாவும், டி வில்லியர்ஸும் அவுட்டாக,  வெறும் 12 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்ரிக்க அணி. டுமினி மட்டும் சிறிது நேரம் களத்தில் நின்றார். மற்றவர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வரிசையாக பெவிலியன் திரும்பிக்கொண்டே இருந்தனர். இறுதியில் இன்று உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 79 ரன்னுக்கு தென் ஆப்ரிக்கா ஆல் அவுட் ஆனது.

உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியான தென் ஆப்ரிக்கா,  இவ்வளவு மோசமாக விளையாடுவதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக  டி வில்லியர்ஸ்  தவறான கணிப்பில் இருமனதுடன் விளையாடி டக் அவுட் ஆனது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தென் ஆப்ரிக்கா தற்போது 136 ரன்கள் பின்தங்கி உள்ளது. அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார். இந்நிலையில் இந்திய பிட்ச்கள் மோசமானவை என்றும், கிரிக்கெட் விளையாடவே தகுதியற்ற பிட்ச் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


இந்திய பிட்ச்கள் மோசமானவைதானா?

வழக்கத்துக்கு மாறாக முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில்தான் தற்போது பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுமே தங்களுக்கு ஏற்ற வகையில்தான் பிட்ச் அமைப்பார்கள். 2013-ம் ஆண்டு இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது தென் ஆப்ரிக்காவில், பிட்ச்கள் பவுன்சர் டிராக்காக சரியாக அமைக்கப்படவில்லை என  அந்நாட்டு வீரர்களே அதிருப்தி தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் பெர்த் ஆடுகளத்தை என்றுமே வேகபந்துக்கு சாதகமாகத்தான் அமைப்பார்கள். அங்கே நமது வீரர்கள் விளையாடும்போது பவுன்சராக வீசி அச்சுறுத்துவார்கள். 

நியூசிலாந்தில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். ஆக்லாந்து போன்ற மைதானங்களில் பல அணிகள் 200 ரன்கள் கடப்பதற்கே திணறியுள்ளன. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் தற்போது முற்றிலும் தங்களுக்கு சாதகமான பிட்ச்களை மட்டுமே அமைத்து வருகின்றன. அந்த மைதானங்களில் ஸ்பின் ஓரளவுக்குதான் எடுபடும். இந்த டெஸ்ட் போட்டியில்,  முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க வீரர் மோர்னே மோர்கல் அபாரமாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதை நாம் நினைவுக் கூற வேண்டும். ஏனெனில் இந்திய மைதானங்களில் எப்போதுமே  ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுப்பார்கள்.

indian%20pitch.jpg

ஆசிய கண்டத்தில் மைதானங்கள், சூரிய வெப்பம் காரணமாக பெரும்பாலும்  உலர்ந்து இருக்கும். இதனால் இலங்கை, இந்தியா போன்றவற்றிலும் ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச் தயாரிக்கப்படுகிறது. இங்கே பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பவுன்சர்களை ஒரு சாதாரண வேகப்பந்து வீச்சாளரால் வீச முடியாது. வலிமை வாய்ந்த தோனியின் படை ஆகட்டும், தென் ஆப்பிரிக்கா ஆகட்டும், பாகிஸ்தான் ஆகட்டும் மூன்று அணிகளுமே இந்த ஆண்டு வங்கதேச மண்ணில், அந்த அணியை சமாளிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தன.

இந்நிலையில்தான் தென் ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஒருதின போட்டிகளில் மும்பை மைதானத்தை தவிர,  மற்ற அனைத்து ஆடுகளங்களும்  சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே வடிவமைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக சென்னை  எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் டி வில்லியர்ஸ் தவிர , மற்ற அனைத்து தென் ஆப்ரிக்க வீரர்களும் பேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். மும்பையில் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமாக ஆடுகளம் இருந்ததால்தான் தென் ஆப்ரிக்கா 400 ரன்களுக்கு மேல் குவித்தது.

இந்திய மண்ணில் ரஞ்சி போட்டிகள் முதலான உள்ளூர் போட்டிகளில் விளையாடியதால் இம்மைதானங்களில் இந்திய வீரர்கள ஓரளவு பேட்டிங் செய்கின்றனர். அதிலும் ஷிகர் தவான், விராட் கோலி, ரஹானே, ரோஹித் ஷர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் தடுமாறியே வந்துள்ளனர். ஏனெனில் இவ்வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்காக அயல் மண்ணில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளனர். உள்ளூர்  டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால் எந்த பிட்சில் எப்படி பேட்டிங் செய்வது என தெரியாமல் திணறுகின்றனர். ரஞ்சியில் அமர்களப்படுத்திய ரவீந்திர ஜடேஜா மட்டுமே பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கி வருகிறார். முரளி விஜய், புஜாரா, அமித் மிஸ்ரா போன்றோரும் தென் ஆப்ரிக்க தொடருக்கு முன்னதாக இந்திய மண்ணில் நன்றாக விளையாடி பழகியதால் இத்தொடரில் சிறப்பாக விளையாடுகிறார்கள்.


இன்றைய தினம் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததில் எந்தவித மாற்று கருத்தும் நமக்கு இருக்க முடியாது. அதே சமயம் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சரியான லைனில் அபாரமாக பந்துவீசினர். தவறான ஷாட் விளையாடிதான் பெரும்பாலான தென் ஆப்ரிக்க வீரர்கள் அவுட் ஆயினர். டி வில்லியர்ஸ் உட்பட.  வேகப்பந்துக்கு மட்டுமே சாதகமாக பிட்ச் அமைக்கப்படும்போது, ஸ்பின்னுக்கு மட்டுமே சாதகமாக இருக்குமாறு பிட்ச் அமைப்பதில் என்ன தவறு? என கேட்கின்றனர் ரசிகர்கள். உலகின் நம்பர் ஒன் அணியான தென் ஆப்ரிக்கா, இந்திய அணிக்கு கடும் சவால் தரும் அளவுக்கு விளையாட வேண்டும் என்றுதான் இந்திய ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

http://www.vikatan.com/news/sports/55610-india-cricket-pitch.art

Link to comment
Share on other sites

எல்லா நாளுமே 5-வது நாள் பிட்ச்தானோ?: நாக்பூர் பிட்ச் பற்றி தெறிக்கும் விமர்சனங்கள்

முதல் நாள் ஆட்டத்தின் போது நடுவரும் முரளி விஜய்யும் பார்வையிட பிட்சை பெருக்கும் மைதான ஊழியர். | படம்: ஏ.எஃப்.பி.
முதல் நாள் ஆட்டத்தின் போது நடுவரும் முரளி விஜய்யும் பார்வையிட பிட்சை பெருக்கும் மைதான ஊழியர். | படம்: ஏ.எஃப்.பி.

நாக்பூர் டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டத்தில் 20 விக்கெட்டுகள் விழுந்துள்ளது. கடைசியாக 310 ரன்கள் என்ற ‘இமாலய’ இலக்கை எதிர்த்து தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் எடுத்துள்ளது.

ஒரு தற்செயல் நிகழ்வு என்னவெனில் முதல் நாள் ஆட்ட முடிவிலும் டீன் எல்கர், ஆம்லா களத்தில் இருந்தனர், இன்று 2-ம் நாளும் டீன் எல்கர், ஆம்லா களத்தில் இருக்கின்றனர்.

மொஹாலி டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிந்தது, இந்த டெஸ்ட் போட்டியும் 3-ம் நாள் தாண்டாத நிலை உருவாகியுள்ளதையடுத்து பிட்ச் பற்றி வாசிம் அக்ரம், மைக்கேல் வான் உட்பட பல முன்னாள் வீரர்கள் கேலி தொனியுடன் சில கருத்துகளை கூறியுள்ளனர்:

மைக்கேல் வான்: இது மிகவும் கொடூரமான பிட்ச். இது 5 நாட்கள் போட்டி நீடிக்க தயாரிக்கப்பட்டது என்று கூறமுடியுமா?

கிளென் மேக்ஸ்வெல்: இந்தப் பிட்ச் கொடூரமானது; முதல் ஒரு மணி நேரத்தில் 9 விக்கெட்டுகள் விழும் வாய்ப்பு, ஏனெனில் ஒவ்வொரு ஓவரிலும் 3 பந்துகள் பேட்ஸ்மென் விக்கெட்டை அச்சுறுத்துகிறது.

மேத்யூ ஹெய்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் நாம் இப்போது பார்க்கும் அளவுக்கு சீரழிந்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.

வாசிம் அக்ரம்: உலகம் முழுதும் டெஸ்ட் பிட்ச்களைத் தயாரிப்பதில் ஐசிசி முனைப்பு காட்டுவது அவசியம். அல்லது அணியின் தரநிலையை பாதிக்கும் வண்ணம் புள்ளிகளைக் குறைக்க வேண்டும். அதுவரை இப்படிப்பட்ட பிட்ச்களை நாம் பார்த்துத்தான் தீர வேண்டும்.

தி இந்து (ஆங்கிலம்) பத்தியில் ஜாக் காலிஸ்: ஓரளவுக்கு நல்ல பிட்சில் 400 ரன்களை வைத்துக் கொண்டு பந்து வீச ஸ்பின்னர் ஆசைப்படுவாரா அல்லது ஒவ்வொரு எதிரணி ரன்னுமே கவலையளிப்பதாக அமையும் 200 ரன்களை வைத்துக் கொண்டு பந்து வீச ஆசைப்படுவாரா என்று கேட்டோமானால் அவர்கள் முதல் தெரிவையே விரும்புவர் என்றே நான் கருதுகிறேன்.

ராபின் பீட்டர்சன்: ஏன் டெஸ்ட் கிரிக்கெட் என்று அழைக்கப்படுகிறது என்றால் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என்று அனைத்து துறைகளிலும் வீரர்களின் திறமையை சோதிப்பதால்தான். இப்போது அதனை பார்க்க முடிவதில்லை.

ரோஷான் அபய்சிங்கே: நாக்பூர் பிட்ச் போல் தயாரித்தால் 3 நாள் டெஸ்ட் கிரிக்கெட்தான் இனிமேல். இது பார்க்க மிகவும் அவமானகரமாக உள்ளது.

ராஜ்தீப் சர்தேசாய்: தென் ஆப்பிரிக்கா ஸ்பின் பந்து வீச்சை ஆடமுடியாது, ஆனாலும் இது மிகவும் இழிவான பிட்ச். ஜுஹு பீச் போல் உள்ளது.

டிரெண்ட் ஜான்சன்: 215 ரன்களை எடுத்த பிறகு இந்தியா 136 ரன்கள் முன்னிலை!! ஆட்ட நடுவர்களின் அறிக்கையை படிக்க ஆசையாக இருக்கிறது.

ரிச்சர்ட் ஹைண்ட்ஸ்: தென் ஆப்பிரிக்கா 79 ஆல் அவுட். 80 ரன்களுக்கும் அதிகமாக அடிக்க முடியக்கூடிய பிட்சில் தென் ஆப்பிரிக்கா மோசமான ஆட்டம்!

டாம் மூடி: இந்த நாக்பூர் பிட்ச் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு லாயக்கற்றது. 142 ஓவர்களில் 25 விக்கெட்டுகள்!

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7919620.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.