Jump to content

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மாணவன் தற்கொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மாணவன் தற்கொலை - குளோல்தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:-

26 நவம்பர் 2015

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மாணவன் தற்கொலை - குளோல்தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:-


அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளான்.

தற்கொலைக்கு முன்பாக அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஐனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளான்.

கோப்பாய் வடக்கை சேர்ந்த 18 வயதுடைய ராஜேஸ்வரன் செந்தூரன் எனும் மாணவனே தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126293/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த யாழ். மாணவன்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த யாழ். மாணவன்

 

நல்லாட்சி அரசாங்கத்திடம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி உயர்தரத்தில் கற்கும் மாணவர் ஒருவர் கடிதம் ஒன்றை எழுதிவிட்டு இன்று வியாழக்கிழமை ஓடும் புகையிரதம் முன் பாயந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கோப்பாய் வடக்கு கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் செந்தூரன் (வயது 18) என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை யாழ்.கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரத வண்டிக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த மாணவனின் சடலத்துடன், தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதத்தினையும் கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

விடுதலையை கொடு ஒளியையூட்டு,

அதிமேதகு ஜனாதிபதி நல்லாட்சி அரசாங்கங்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ஒரு அரசியல் கைதியேனும் சிறையில் இருக்க முடியாது.

இந்த அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்குப் புரிந்தும் கூட இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்னும் புரியவில்லையே என்பது வருத்தமளிக்கின்றது.

என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறித்த மாணவனின் சுயவிபரமும் எழுதப்பட்டுள்ளது.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பல்கலைக்கழகம் போகும் வயதை அடைந்த.. மாணவன் சாவதனூடு சாதிக்க முடியாததை.. வேறுவழியில் சாதிக்க முற்பட்டிருக்கலாம். இப்படியான சாவுகள் விளலுக்கு இறைத்த நீராகவே முடியும்.. சொறீலங்கா.. மற்றும்... ஹிந்திய உபகண்ட நாடுகளில். இந்தச் சாவுக்கு பின்னாலும் எத்தனை பழிப்புகள்.. வரும். அதிலும் படிச்சுப் பட்டம் பெற்று அதனூடு ஏதாவது செய்ய முற்பட்டிருக்கலாம். :unsure:

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீரஞ்சலியும். tw_cry:

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..! இப்படியான வழிமுறைகளைக் கைவிட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீரஞ்சலியும்

விடுதலைக்காக உயிர்தியாகம் செய்வதை இனிவரும் சந்ததியினர் விடவேண்டும்......பொலிஸ் அல்லது இராணுவ உயரதிகாரிகளாக வந்து தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் .படங்களை பார்க்க நெஞ்சு கனக்கின்றது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகனே, நீ  இதே  உணர்வோடு, உயிரோடு  நெடு காலம் இருந்திருக்கலாம்.
நீ வேண்டி நின்ற கைதிகளும் ஒரு நாள் வந்திருப்பார்கள்....
உன்னை நிரந்தரமாக பிரிந்து நிற்க்கும் உன் குடும்பக்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான வழிமுறைகளைக் கைவிட வேண்டும்.ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!!!இந்த முடிவு வருத்தத்தக்கது.நல்லாட்சி அரசாங்கத்துடன் பேசுகிறோம்.விரைவில் விடுதலை பெற்றுத் தருவோம் என்று தமிழ்மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற தமிழ்த்தலைவர்களே இதற்குப் பொறுப்பு. இந்தப் பிஞ்சு வயதில் தன்னை அழித்துக் கொண்டது துயரமளிக்கிறது. சிங்களம் இந்தத் தியாகத்திற்கெல்லாம் மதிப்பளிக்காது.

Link to comment
Share on other sites

விரக்தி...    கையறு நிலையில் தமிழினம் இருக்கும் போது அதீத விரக்தியில் தமிழர் தள்ளப்படுகின்றனர்.. அதில்  ஜெனீவாவில் தன்னை எரித்த மயூரனாகட்டும் , இந்த இளயவனாகட்டும் எல்லோரும் ஒண்றே..  

தமிழர் தலைமை(கள்) தமிழர்களின் உளவள மேம்பாட்டுக்கு ஆவன செய்ய முன்வரவேண்டும்..  

போருக்குள் இருந்த இனத்தை மற்றவர்கள் அழிப்பதை வேண்டும் எண்றாலும் ஏற்கலாம்.. ஆனால் தன்னை தானே அழிப்பதை ஏற்கவே முடியாது... 

இந்த இளைஞனின் பெற்றோருக்கு எதை சொல்லி ஆறுதல் சொல்ல எண்று தெரியவில்லை...

(கூட்டமைப்பின்  தலைவர் சம்பந்தன்,பாராளுமண்ற உறுப்பினர் மாவை  , சுமந்திரன் ,  முதலைமைச்சர்   விக்னேஸ்வரன் போண்றோருக்கு  வேண்டு கோளாக அனுப்பி வைக்கலாம் எண்று நினைக்கிறேன்..  அவர்களின் பயன்பாட்டின் தற்போது உள்ள  மின்னஞ்சல் முகவரி இருந்தால் தயவு செய்து தாருங்கள் )

 

 

 

Link to comment
Share on other sites

இப்படியான வழிமுறைகளைக் கைவிட வேண்டும்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜய்க்கும் அஜித்திற்கும் கட் அவுட்டுக்கு பாலூற்றும் இவர் வயதை ஒத்தவர்கள் இருக்கும் தேசத்தில் இப்படி தன் இனத்தின் மேல் அக்கறை உள்ள இவர்போன்ற இளைஞர்களின் இழப்பு மிகப்பெரியது.. இப்படி  சின்ன வயசிலேயே அரசியல் அறிவும் உணர்வும் உள்ள பிள்ளைகள் அநியாயமாக உயிரிழக்காமல் கிழட்டு நரிகள் அரசியல் செய்யும் இடங்களுக்கு வரவேண்டும்... இந்த பையனை இழந்து நிற்கும் குடும்பத்தின் வலி கொடியது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீரஞ்சலியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

தனது உயிரைத் தானே எடுத்துக் கொள்ளும் நிலை... எனது எதிரிக்குக் கூட ஏற்படக்கூடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீரஞ்சலியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.