Jump to content

இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள்


Recommended Posts

இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள்

November 25, 2015

கெவின் பீற்றர்சன் கிரிக்கெட் பவுண்டேசனினால் நடத்தப்படும் துடுப்பாட்டத் தொடரில் பங்குபற்றும் இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

2
குறித்த தொடர் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 3ஆம் திகதி வரை டுபாயில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான அணி நேற்று முன்தினம் டுபாய் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. நடப்பு வருடத்தில் வடமாகாணத்தில் இடம் பெற்ற முரளி கிண்ணத் தொடரில் சிறந்த பெறுபேற்று வெளிப்படுத்திய 12 வீரர்கள் ஒரு அணியாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

1

இதில் வவுனியா மாவட்ட இணைந்த அணியில் விளையாடிய கிரிதரன், சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியில் விளையாடிய நிரோசன், யாழ். மாவட்ட இணைந்த அணியில் விளையாடிய தசோபன், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் இணைந்த அணியில் விளையாடிய நிதுசன் ஆகிய நான்கு தமிழ் வீரர்களுமே குறித்த தொடருக்கான இலங்கை அணியில் இடம் பெற்றவர்களாவர்.

நேற்று முன்தினம் டுபாய் சென்ற இந்த அணி 26ஆம், 27ஆம் 28ஆம் திகதிகளில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடும். பின்னர் இந்தமாதம் 30ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ரி-20 தொடரில் கலந்துகொள்ளும். தொடரில் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

http://www.onlineuthayan.com/sports/?p=3928&cat=3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சொறீலங்காவின் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியுமோ... விளையாடித்தான் பாருங்களேன். முன்னரும் ஒரு சில தமிழர்களை சாக்குப் போக்கிற்கு பிரச்சாரங்களுக்கு தெரிவு செய்துவிட்டு இடையில் துரத்தி அடித்த நிகழ்வுகள் நடந்துள்ளன.  முரளியை தவிர வேறு தமிழர்கள் சொறீலங்கா சிங்கள ஆதிக்க கிரிக்கெட் அணியில் நிலைத்ததில்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிராகாசிக்க வாழ்த்துக்கள்...சாதித்துக் காட்ட வேண்டும்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

Unity Squad

Nipun Haggalla (Captain) – Ananda College (Wicket Keeper & RH Batsman)
SK Kiritharan – Mannar & Vavuniya Combined Schools (RH Batsman)
Vishwa Dissanayake – Maliyadeva College Kurunegala (LH Batsman & Left Arm Leg-Spin)
Avishka Shehan – Trinco & Batti Combined Schools (RH Batsman & Right Arm Medium Bowler)
Dileepa Sandaruwan – Monaragala Combined Schools (RH Batsman & Right Arm Off-Spin)
MMG Akalanka – Up Country Combined Schools (LH Batsman & Right Arm Fast Bowler)
Niroshan Benjamin – St John’s College Jaffna (RH Matsman & Right Arm Fast Bowler)
KK Kevin – Richmond College Galle (LH Batsman & Right Arm Leg-Spin)
S Thasoban – Jaffna Combined Schools (RH Batsman & Right Arm Off-Spin)
Bhanuka Pamuditha – P De S Kularatne College Ambalangoda (RH Batsman & Right Arm Off-Spin)
Chanuka Asinsana – Debarawewa Central College (RH Batsman & Right Arm Off-Spin)
Mugunthan Nithushan – Kilinochchi & Mullaitivu Combined Schools (LH Batsman & Right Arm Off-Spin)

Officials: Joel Fernando – Manager, Chaminda De Silva – Asst. Manager / Tour coordinator, AS Nishanthan – Schools Representative.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.