Jump to content

சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி


Recommended Posts

சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி
 
சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி
வடக்கில் ஈழக் கொடியை ஏற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
 
சிங்கள கிராமங்களுக்குள் புகுந்து குழந்தைகளையும் கர்ப்பிணி பெண்களையும் கொலை செய்விட்டுத்தான் பிரபாகரன் அன்று மாவீரர் தினத்தை நினைவு கூரினார் எனவும் தெரிவித்தார்.
 
காலி நாக்கியாதெனிய விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் கூறுகையில்,
இந்த வாரம் இலங்கைக்கு மிகவும் முக்கியமான வாரமாகும். வட கிழக்கில் பிரபாகரனின் மாவீரர் வாரம் ஆரம்பமானது இந்த வாரமாகும்.
 
முழு உலகத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கையையும் மக்களையும் பாதுகாத்துக் கொண்டு நான் கடந்த வருடம் வரைக்கும் மாவீரர் தினத்தை கொண்டாடுவதை நிறுத்தியிருந்தேன். இன்று இந்த அரசாங்கத்தின் கீழ் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்து மாவீரர் தினத்தை நினைவு கூருகின்றனர்.
 
அன்று பிரபாகரன் சிங்கள கிராமங்களுக்குள் நுழைந்து சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பிக்குமார் உட்பட அப்பாவி மக்களை வெட்டிக் கொலை செய்துவிட்டுதான் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தார். அப்படி இல்லாவிட்டால் மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் குண்டு வெடிக்கவைத்து மக்கள் அழிவை ஏற்படுத்திவிட்டே நினைவு கூர்ந்தார்.
 
மேலும் நாட்டுக்காக யுத்தக் களத்துக்கு சென்ற இராணுவத்தினரை கொலை செய்வதும் பிரபாகரனின் மாவீரர் வாரத்தை நினைவு கூருதலில் ஓர் அங்கமாகும். என்றாலும் இந்த அரசாங்கம் இதற்கு அனுமதி அளித்திருப்பதானது மிகவும் கவலைக்குரிய நிகழ்வாகும். எங்களால் கைது செய்யப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளை விடுதலை செய்கின்றனர். அத்துடன் நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களை கைது செய்கின்றார்கள்.
 
நாட்டையும் தேசத்தையும் பாதுகாத்தது தானா எமது இராணுவ வீரர்கள் செய்த குற்றம்? என நான் கேட்க விரும்புகின்றேன். இராணுவத்தினருக்கு பதக்கம் அணிவித்து அவர்களை கௌரவப்படுத்துவதற்கு பதிலாக இந்த அரசாங்கம் அவர்கள் சிறை உணவு சாப்பிடுவதற்கான வழிவகைகளை மேற்கொள்கின்றனர். வடக்கில் ஈழக் கொடியை ஏற்றுவற்கே இவர்கள் தயாராகின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அந்த பயங்கரமான நிலைமைக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்.
 
தற்போது பாராளுமன்றத்தில் வரவு– செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. நாங்கள் மக்களுக்கு வழங்கியிருந்த நிவாரணங்கள் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளன. என்னுடைய அரசினால் மேற்கொள்ளப்பட்ட அதிவேகப் பாதை, கொழும்பு துறைமுகம் போன்ற பாரிய வேலைத் திட்டங்கள் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம். இவை அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. மாறாக இன்று நிதி மோசடி பிரிவொன்றை ஏற்படுத்திக் கொண்டு விசாரணை நடத்துவதையே செய்கின்றனர். பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி நாளாந்தம் ஒரு தலைவரை விசாரணைக்காக அழைத்து வருகின்றனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு பணம் செலுத்தவில்லையென கூறி தற்போது என்னிடமும் விசாரணை நடத்துகின்றனர்.
 
எங்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி மக்கள் மத்தியில் இருந்து தூரமாக்குவதற்கே இவற்றையெல்லாம் இவர்கள் செய்கின்றனர். எந்தக் குற்றச்சாட்டை சுமத்தினாலும் எந்த விசாரணையை மேற்கொண்டாலும் மக்களிடம் இருந்து எங்களை ஒருபோதும் தூரமாக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். எனவே வைராக்கிய அரசியலை கைவிட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மை பயக்கக் கூடிய வேலைத் திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நவீனன் said:
சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி
 
சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி
வடக்கில் ஈழக் கொடியை ஏற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

உங்கள் கோரிக்கையை தமிழ் மகிந்தக்கள் முன்னெடுப்பர். கவலை வேண்டாம். :cool:

Link to comment
Share on other sites

58 minutes ago, நவீனன் said:
சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி
 
சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி
 

இதை மகிந்த சொன்னதா? இல்லை சுமந்திரன் சொன்னதா? ... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

உங்கள் கோரிக்கையை தமிழ் மகிந்தக்கள் முன்னெடுப்பர். கவலை வேண்டாம். :cool:

ஆனால் தமிழ் மகிந்தக்கள் முள்ளிவாய்க்கால் வரை முன்னெடுக்க மாட்டார்களென நம்பலாம்.:cool:

Link to comment
Share on other sites

14 minutes ago, வாலி said:

ஆனால் தமிழ் மகிந்தக்கள் முள்ளிவாய்க்கால் வரை முன்னெடுக்க மாட்டார்களென நம்பலாம்.:cool:

ஓ ... உங்கள் போன்றவர்கள் இனத்தில் இருக்கும் மட்டும் ... முள்ளிவாய்க்கால் என்ன? எது சிங்களத்துக்கு சாத்தியமாகாது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


ஒரிஜினல் சிங்களவனை விட இந்த தமிழ் மஹிந்தா "கூத்தாடிகள்" அதிகமாக துள்ளுவது ஏன் ? 
.......

Link to comment
Share on other sites

மகிந்தாவிற்கும் பல எம்மவருக்கும்இடையில் பெரிய வித்தியாசம் இல்லை .அவர் அந்த மூலை இவர்கள் இந்த மூலை.

சிலருக்கு பல முதல்  கிறுக்குகள் கண்ணில் படாமல் போகும் மாயம் என்ன ?


சமூக அவலங்களுக்கு  இதுதான் முக்கிய காரணம் தாம் செய்யும் அல்லது தாம் சார்ந்தவர்கள் செய்யும் பிழைகள் கண்ணில் தெரியாது அல்லது கண்டும் காணாமலும் விட்டுவிடுவார்கள் .மற்றவர்கள் விடும் பிழைகளை பிடிக்க கண்ணில் எண்ணெய் ஊற்றிகொண்டு பார்த்திருந்துவிட்டு பின் அதை ஊதி பெருப்பித்து காலத்தை ஓட்டிவிடுவார்கள் .

இவர்கள் பதிவுகள் பார்க்கும்போது சன் டிவி ,ஜெயா டிவி ,கலைஞர் டிவி பார்க்கும் எண்ணம் தான் இங்கும் ஏற்படுகின்றது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 
"புலிகள் விட்ட பிழைகளை பிடிக்க கண்ணில் எண்ணெய் ஊற்றிகொண்டு பார்த்திருந்துவிட்டு பின் அதை ஊதி பெருப்பித்து காலத்தை ஓட்டிவிடுவார்கள் "

நல்ல அழகாக சொல்லி இருக்கிறீர்கள். ஒரு வார்த்தை ஜஸ்ட்டு மிஸ்ட்டு 

Link to comment
Share on other sites

11 minutes ago, arjun said:

மகிந்தாவிற்கும் பல எம்மவருக்கும்இடையில் பெரிய வித்தியாசம் இல்லை .அவர் அந்த மூலை இவர்கள் இந்த மூலை.

சிலருக்கு பல முதல்  கிறுக்குகள் கண்ணில் படாமல் போகும் மாயம் என்ன ?


சமூக அவலங்களுக்கு  இதுதான் முக்கிய காரணம் தாம் செய்யும் அல்லது தாம் சார்ந்தவர்கள் செய்யும் பிழைகள் கண்ணில் தெரியாது அல்லது கண்டும் காணாமலும் விட்டுவிடுவார்கள் .மற்றவர்கள் விடும் பிழைகளை பிடிக்க கண்ணில் எண்ணெய் ஊற்றிகொண்டு பார்த்திருந்துவிட்டு பின் அதை ஊதி பெருப்பித்து காலத்தை ஓட்டிவிடுவார்கள் .

இவர்கள் பதிவுகள் பார்க்கும்போது சன் டிவி ,ஜெயா டிவி ,கலைஞர் டிவி பார்க்கும் எண்ணம் தான் இங்கும் ஏற்படுகின்றது .

 

அண்ணோய் ... சுட்டு விரலை நீட்டூறீங்கள் ... ஒருக்கால் குனிந்து பாருங்கள் .... நான்கு விரல்கள் உங்களை நோக்கி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1952 இல் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் குழந்தைகளையும் கர்ப்பிணிகளையும் ரயர் போட்டு எரித்துக் கொன்றது முதல் முள்ளிவாய்க்காலில் வன்புணர்ந்து சுட்டுக்கொன்றது வரை மனித இனமே வெட்கித்தலைகுனியக் கூடிய அக்கிரமங்களை செய்துவிட்டு.. வெற்றி விழாக் கொண்டாட இவரால் முடியும் என்றால்.. சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை தமிழ் கிராம மக்களின் பாதுகாப்பின் நிமித்தம் அகற்றி தமிழ் மக்களை பாதுகாத்த பிரபாகரன் மக்களை காத்த வீரர்களை நினைவு கூர்ந்து மாவீரர் தினம் ஏன் அனுஷ்டிக்க முடியாது.

அனுதாரபுரத்திலும்... ஹொரவப்பத்தானையிலும் பஸ்ஸில் வந்த தமிழ் பயணிகளை வகைதொகை இன்றி சுட்டும் வெட்டியும் கொன்ற சிங்கள காடைப்படைகளை விட புலிகள் ஒன்றும் அதிகமாகச் செய்துவிடவில்லை.

எதற்கும் அருமை மச்சானைக் கொண்டு இவற்றை படித்து விளங்கிக் கொண்டு தெளிவது நல்லம். புலிகளை நோக்கி குற்றம் சுமத்த சிங்களத்தில் என்ன இந்த உலகில் எந்த அரசபயங்கரவாதிகளுக்கும் அருகதை கிடையாது என்பது தான் யதார்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

ஆனால் தமிழ் மகிந்தக்கள் முள்ளிவாய்க்கால் வரை முன்னெடுக்க மாட்டார்களென நம்பலாம்.:cool:

குழந்தைபெடிக்கு இருக்கிற மூக்குச்சளிமாதிரி எப்பவும் முள்ளிவாய்க்கால்..முள்ளிவாய்க்கால்...முள்ளிவாய்க்கால்.......

வரலாறு மறந்த மமதைகளே!!!!

சிங்கள அரசுகள் அரங்கேற்றிய இனப்படுகொலைகள் உங்கள் நினைவலைகளுக்கு வருவதேயில்லையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

குழந்தைபெடிக்கு இருக்கிற மூக்குச்சளிமாதிரி எப்பவும் முள்ளிவாய்க்கால்..முள்ளிவாய்க்கால்...முள்ளிவாய்க்கால்.......

வரலாறு மறந்த மமதைகளே!!!!

சிங்கள அரசுகள் அரங்கேற்றிய இனப்படுகொலைகள் உங்கள் நினைவலைகளுக்கு வருவதேயில்லையா??

சிங்கள அரசு அரங்கேறிய இனப்படுகொலைகளை விட முள்ளிவாய்க்கால் வெண்கொடி வேந்தர்(கள்) தம் சொந்த இனத்தின் மீது இறுதிவரை நிகழ்த்திய சொந்தப் படுகொலைகள்தான் நினைவலைகலிள் பிறஸ்ஷா வந்து துலைக்குது! 

குமாரசாமி அண்ணோய் முதலில் தமிழ் மகிந்தக்கள் முன்னெடுப்பார்கள் எண்டு கூட்டமைப்பை வம்புக்கு இழுத்தது நீங்கள். வம்புத் தனமா எழுதினால் அதைவிட பத்துமடங்கு வம்புத் தனமாத்தான் பதில் வரும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 


பதவியை இழந்து, மனோ வியாதியில் இருக்கும் சிங்களவன் மஹிந்த இதை விட எதைத்தான் சொல்லுவான்.

இந்த மாதிரி திரிகளுக்கு வரும் போது வெறும் காலோட தான் வரவேணும்.. இல்ல செருப்பு பிஞ்சிடும்... நட்டம் நமக்குதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sasi_varnam said:

 
"புலிகள் விட்ட பிழைகளை பிடிக்க கண்ணில் எண்ணெய் ஊற்றிகொண்டு பார்த்திருந்துவிட்டு பின் அதை ஊதி பெருப்பித்து காலத்தை ஓட்டிவிடுவார்கள் "

நல்ல அழகாக சொல்லி இருக்கிறீர்கள். ஒரு வார்த்தை ஜஸ்ட்டு மிஸ்ட்டு 

அது ஞானிகளுக்கு பொருந்தாது ....
அவர்கள் பூமியில் இருப்பத்தில்லை ...... நித்தியத்தில் இருப்பவர்கள். 

பூமியில் வாழ்பவர்கள்தான் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி போகவேண்டும். 

8 hours ago, Sasi_varnam said:

 


பதவியை இழந்து, மனோ வியாதியில் இருக்கும் சிங்களவன் மஹிந்த இதை விட எதைத்தான் சொல்லுவான்.

இந்த மாதிரி திரிகளுக்கு வரும் போது வெறும் காலோட தான் வரவேணும்.. இல்ல செருப்பு பிஞ்சிடும்... நட்டம் நமக்குதான்.

நான் நினைக்கவில்லை ...
இது மத்தமங்களுக்கு விளங்கும் என்று ...

இது விளங்கும் சாத்தியம் இருந்திருந்தால் ...
மற்றதெல்லாம் எப்பவோ விளங்கி இருக்க வேண்டும். 

பரிதப படமட்டுமே முடியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களாகிய எமது விடுதலையை நேசிப்பவர்கள் யாவரும், யாழ்களத்தில் எவராலும் நடத்தப்படும் சேறடிப்புவேலைகளை மாவீரர்வாரத்தை முன்னிட்டுக் கவனியாது அவைகளுக்குப் பதிலிடாது விரதம் காக்கவும். இது எனது தாள்மையான வேண்டுகோள். தவறாகில் மன்னிக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் என்றுதான் விமர்சனங்களை விமர்சனங்களாகப் பார்க்கப் பழகப் போகிறோம் ? எதற்கு இந்த வெறுப்பும் காழ்ப்புணர்வும் ?

இங்கே தவறு செய்யாதவர் எவரும் இருக்கிறார்களா ? அப்படியிருக்க ஏன் இந்த குரோதங்கள் ?

தாயக விடுதலைக்காகப் போராடப் போன எல்லோரும் போராளிகளே, உயிர்தந்த எல்லோரும் தியாகிகளே ! இதில் புலிகள், புளொட், ஈரோஸ், டெலோ என்று வேறுபாடு வேண்டாம்.

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈந்த அனைத்துப் போராளிகளையும் இன்று நினைவு கூர்வோம் !!!!

அவர்களுக்கு எனது வீரவணக்கம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ragunathan said:

நாம் என்றுதான் விமர்சனங்களை விமர்சனங்களாகப் பார்க்கப் பழகப் போகிறோம் ? எதற்கு இந்த வெறுப்பும் காழ்ப்புணர்வும் ?

இங்கே தவறு செய்யாதவர் எவரும் இருக்கிறார்களா ? அப்படியிருக்க ஏன் இந்த குரோதங்கள் ?

தாயக விடுதலைக்காகப் போராடப் போன எல்லோரும் போராளிகளே, உயிர்தந்த எல்லோரும் தியாகிகளே ! இதில் புலிகள், புளொட், ஈரோஸ், டெலோ என்று வேறுபாடு வேண்டாம்.

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈந்த அனைத்துப் போராளிகளையும் இன்று நினைவு கூர்வோம் !!!!

அவர்களுக்கு எனது வீரவணக்கம் !

ரகுநாதன் உங்கள் கருத்தையே நானும் கொண்டிருக்கின்றேன். ஆனால் ஒரு சிலரின் மூன்றாம்தர கருத்துக்களால் முட்டி மோதவேண்டியிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 திரும்பியே வரமாட்டம் தெரிந்தும் ஆனால் ஒரு வெடி பொதுமக்களின் மீது பாயாது அண்ணை என்று சிரித்தவாறு விடைபெற்ற கட்டுநாயகாவில்  ஆகுதியான மாவீரர் (இவர்களை போல் ஆயிரம் ஆயிரம்பேர் தியாகம்களின் வரலாறு உள்ள )படங்களுக்கு மத்தியில் எனது சகோதர்கள் கூட்டியும் கொலை செய்த  கேடு கேட்ட கும்பல்களின் படங்களையும் வைக்க சொல்றிங்களா?

தியாகங்களின் வலி தெரியாதவர்கள் இழப்புகளின் வலி அறியாதவர்கள் இங்கு வேதம் ஓதுவது புதிதல்ல நடக்கட்டும் tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ragunathan said:

நாம் என்றுதான் விமர்சனங்களை விமர்சனங்களாகப் பார்க்கப் பழகப் போகிறோம் ? எதற்கு இந்த வெறுப்பும் காழ்ப்புணர்வும் ?

இங்கே தவறு செய்யாதவர் எவரும் இருக்கிறார்களா ? அப்படியிருக்க ஏன் இந்த குரோதங்கள் ?

தாயக விடுதலைக்காகப் போராடப் போன எல்லோரும் போராளிகளே, உயிர்தந்த எல்லோரும் தியாகிகளே ! இதில் புலிகள், புளொட், ஈரோஸ், டெலோ என்று வேறுபாடு வேண்டாம்.

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈந்த அனைத்துப் போராளிகளையும் இன்று நினைவு கூர்வோம் !!!!

அவர்களுக்கு எனது வீரவணக்கம் !

அதை வலியுறுத்திதானே புலிகள் மாவீரர் நாளையே உருவாக்கினார்கள் ...
இவளவு நாளும் தமிழர்கள் கொண்டாடினார்கள்.

நேற்றுதான் விடிஞ்ச மாதிரி வந்து ...
நீங்கள் இந்த கருத்தை எழுத யார் காரண கர்த்தாக்கள் ? 

1989ஆம் ஆண்டு இருந்த கருத்தை 
எதோ புதிய விடயம் மாதிரி நீங்கள் 
2015இல் எழுத வேண்டிய நிலை ஏன் இருக்கிறது ? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.