Jump to content

பாஞ்சாலம் குறிச்சி வீரபாண்டிய கட்டப்பொம்மனும் தமிழீழத்தின் பிரபாகரனும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

collesveerapand.jpg

 
 
பாஞ்சாலங்குறிச்சி அரசு சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மாவட்ட ஆட்சிய‌ர் எம்.ரவி குமார் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மாவட்ட ஆட்சிய‌ர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது. வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு ஆட்சிய‌ர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
பின்னர் நடைபெற்ற விழாவில் ஆட்சிய‌ர் பேசும் போது தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சுதந்திரப்போராட்ட வீரர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் வெள்ளையர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து முதன் முதலில் குரல் எழுப்பியவர் வீரபாண்டிய கட்டபொம்மன் . தமிழக அரசு சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு தமிழ்வளர்த்த அறிஞர்களுக்கு மணிமண்டபங்கள் அமைத்தும்,  வாழ்ந்த இல்லங்களை நினைவகங்களாக மாற்றியும், அவர்களது பிறந்த நாளை அரசு விழாவாகவும் கொண்டாடி வருகிறது.
 
தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி., மகாகவி பாரதியார், வீரன் அழகுமுத்துக்கோன், வீரன் வெள்ளையத்தேவன், வீரன் சுந்தரலிங்கம், வாஞ்சிநாதன் போன்ற தலைவர்கள் சுதந்தரத்திற்காக பாடுபட்டவர்கள் அவர்களில் வெள்ளையனை எதிர்த்து முதல் வீர முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இன்று அந்த வீரத்திற்கான விழாவாகும். சிப்பாய் கழகம் கண்டதும் நமது தமிழகம் தான். 39வது வயது வரை வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் சமூக நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளார். 
 
அனைத்து சாதிகாரர்களையும் தனது படையிலேயே சேர்த்து இருந்தார். விரர் சுந்தரலிங்கத்தை சாதியை பார்க்காமால் அவரது வீரத்தை பாராட்டி தனது போர்படை தளபதியாக சேர்த்திருந்தார். அவர் தனது உயிரையே இந்த நாட்டிற்காக அளித்தார். இத்தனை தலைவர்கள் பாடுபட்டு உயிர் தியாகம் செய்து, இரத்தம் சிந்தி பெற்று தந்த சுதந்திரத்தை நாம் ஒற்றுமையாக இருந்து பாதுகாப்பது நமது கடமை. எந்த சாதி மத பிரிவினைக்கும் நாம் ஆளாகக் கூடாது என்றார்.
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபத்திரன், கோவில்பட்டி கோட்டாட்சியர் டாக்டர்.எஸ். கண்ணபிரான், ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் நாகராஜன், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் லதா கருணாநிதி, வீ.வீமராஜா கட்டபொம்முதுரை, வீரசக்கதேவி ஆலயக்குழுத் தலைவர் மு.முருகபூபதி, கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை தலைவர் எஸ்.கோபாலகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன்  அனைவரையும் வரவேற்றார். நிறைவாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சி.குமார் நன்றி கூறினார்.
 
====================
 
தமிழர்களை அடிமையாக்கி வைத்திருக்க நினைக்கும்.. சிங்களனை எதிர்த்துப் போராடிய நவீன கட்டப்பொம்மனான.. பிரபாகரனை பயங்கரவாதின்னு பழிக்கும் தமிழக அரசு.. அவருக்கும் தமிழ் வீரர்கள் வரிசையில் எப்போ மதிப்பளிக்கும்...?! ஹிந்திய தேசிய.. திராவிட அரசியல் மாயைகளில் சிக்காத போதாக இருக்கலாம்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.