Jump to content

EPRLF வராலாற்றின் அவமானச் சின்னமாக மாறிவிட்டது :வியாசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது மற்றொரு இருண்ட காலம்! இலங்கை இராணுவத்திற்குப் பதிலாக இந்திய இராணுவம் வடக்கையையும் கிழக்கையும் ஆக்கிரமித்துக்கொண்ட அச்சம் தரும் இரவுகள்!! சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் மக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் சோதனைச் சாவடிகளைக் கடந்தே நடந்து போகமுடியும். அவர்கள் கண்களுக்கு எதிரி என்று தெரிகின்ற ஒவ்வொரு மனிதனும், கைது செய்யப்படலாம். விசாரணையின் பின் விடுவிக்கப்படலாம், சித்திரவதையின் பின் கொல்லப்படலாம்…

இவை அனைத்திற்கும் மேலாக தனது பெயரில் புரட்சி என்ற சுமையை சுமந்துகொண்ட அருவருப்பில் உலா வந்துகொண்டிருந்தது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப்.

1987 இல் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை அன்னிய ஆக்கிரமிப்புப் படையான இந்திய இராணுவம் தனது ஊழிக்கால தர்ப்பாரை நடத்திக்கொண்டிருந்தது. அது நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் தமிழ்த் தேசிய இராணுவம் என்ற கூலிப்படையை அழிப்பதற்காகவே உருவாக்கியது, அதன் நிறுவன வேலையை ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை தாங்கியது.

சாலையில் ஒரு இளைஞன் தனியாக நடமாடுவதைக் கண்டால் ஈ.பி.ஆர்.எல்.எப் கடத்திச் சென்றுவிடும்.

அழுகுரலோடும், அச்சம் படர்ந்த முகங்களோடும் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களைக்கொண்டு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற துணைப்படையை உருவாக்குவதே இந்திய இராணுவத்தினதும், ஈ.பி.ஆர்.எல்.எப் இனது,ம் நோக்கம்.

எட்டாம் வகுப்பு மாணவர்களிலிருந்து பல்கலைக் கழக மாணவர்கள் வரை எந்த நேரத்திலும் எந்தப் பகுதியிலும் வைத்துக் கடத்திச் செல்லப்படலாம் என்பதை யாழ்ப்பாண மக்கள் அறிந்து வைத்திருந்தனர். பலர் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர்.

பள்ளிகளுக்கு தந்தையர் தாயாருடன் செல்லும் நிலை காணப்பட்டது. யாழ்ப்பாணம் செத்துப் போயிருந்தது. தெருக்கள் வெறிச்சோடியிருந்தன.

கடத்திச் செல்லப்பட்டவர்கள் யாழ்ப்பாண நகரத்தின் கொல்லைப் புறத்தில் அமைந்திருந்த அசோக் ஹொட்டேலில் அருசி மூட்டைகள் போல அடைத்து வைக்கபட்டனர்.

sureshபயிற்சிக்குக் கொண்டு செல்வதற்கு முன்னர் அங்கு தான் ‘அரசியல்’ விளக்கம் வழங்கப்பட்டது. அப்போது இந்திய இராணுவத்தின் நம்பிக்கைக்குரிய துணைப்படையாகச் செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மத்திய குழு உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விளக்கத்தை வழங்குவார்.

புலிகளை அழிப்பதும், சுயாட்சியை ஏற்படுத்துவதும் எமது நோக்கம்; அதற்கு நீங்கள் தான் பாதுகாப்புப் படை என பிடித்துவரப்பட்டவர்களிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது குற்றுரையை ஆரம்பிப்பார். நீண்ட அகலமான சந்திப்புக் கூடத்தில் கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கான கூட்டம் நடைபெறும்.

ஒரு மூலையில் சிம்மாசனம் போன்ற இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன், நெருக்கமாக தரையில் மாற்ற உடையின்றி அமர்ந்திருக்கும் கடத்திவரப்பட்ட இளைஞர்களுக்கு சுரேஷ் உரையாற்றுவார்.

யாராவது மறு பேச்சுப் பேசினால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். புலிகள் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்படுபவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அவர்கள் மீதான விசாரணையை சுரேஷ் பிரேமச்சந்திரனின் ‘மண்டையன் குழு’ கவனித்துக்கொள்ளும்.

மண்டையன் குழு என்றால், மண்டைய பிழந்து கொலை செய்வது என்பதே பொருள் படும் என பலர் தெரிந்து வைத்திருந்தனர்.

இவை அனைத்தும் நடந்துகொண்டிருந்த போது ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் பத்மநாபா யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்)இன் செயலாளர் நாயகம் பத்மநாபா  64ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தோழமை தினம் இரண்டு நாட்களின் முன்னர் கொண்டாடப்பட்டது. இன்று வரை இந்திய அரசின் தோழர்களகவே தொடரும் ஈ.பி.ஆர்.எல் எப் இன் தோழமை இன் இலக்கணம் இரத்தக்கறைகளால் நிரப்பப்பட்டுள்ளது.

இவை நடந்துகொண்டிருக்கும் போது ரூபவாகினி தொலைக்காட்சியில் தோன்றிய வரதராஜப்பெருமாள் ‘இது பழைய ஈ.பி.ஆர்.எல்.எப்’ இல்லை; புதியது என வில்லத்தனமாக உரையாற்றினார்.

இப்போது இன்னொரு புதிய முகத்தோடு தோழமை தினத்தில் அதே வரதராஜப்பெருமாள் உரையாற்றியுள்ளார். வக்கிரத்தனத்தின் மறு பெயர் தோழமை என்று நினைத்துக்கொண்ட்டார்களோ?
இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணைப்படையாகச் செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இன் கொலைகள், சித்திரவதைகள் எல்லாம் அந்த இயக்கத்தோடு ஒட்டிக்கொண்டிருந்த புரட்சி என்ற பெயரை அவமானப்படுத்திற்று. உயரிய தோழர் என்ற வார்த்தையை கொலையாளிகள் தங்களை அடையாளப்படுத்த பயன்படுத்திக்கொண்டார்கள்.

இடதுசாரிய இயக்கங்கள் மீது மக்கள் வெறுப்படைய ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற துணை இராணுவக் குழு காரணமாயிற்று,

வடக்குக் கிழக்கில் இடதுசாரி இயக்கங்களைத் துடைத்தெறிவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய அரசிற்குத் துணை சென்றது. உலக மக்களின் போராட்டத் தத்துவமாகத் திகழ்ந்த இடதுசாரிப் புரட்சிகரக் கருத்துக்கள் மீது மக்கள் வெறுப்படைந்தமைக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

naba_douglas டக்ளஸ் தேவானந்தாவுடன் பத்மநாபா

இவ்வாறு அழிவுகளின் ஆதாரசக்தியாகவிருந்த ஈ.பி.ஆர்.எல் எப் இன்றும் தனது அதிகாரவர்க்க அரசியலைப் புரட்சியின் பெயரால் தொடர்கிறது. அதன் குற்றவாளிகள் சமூகத்தின் உயரடுக்குகளில் உலா வருகின்றனர்.

டெலோ மற்றும் புலிகள் இயக்கங்களைத் தவிர ஏனைய எல்லா இயக்கங்களின் மத்தியிலும் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்கள் இணைந்து செயற்பட்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் லண்டனிலிருந்து இலங்கை சென்ற பத்மநாபா ஈரோஸ் என்ற இயக்கத்திலிருந்து பிரிந்து ஆரம்பித்த அமைப்பாகும். ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் மட்டுமே மக்களை அமைப்புகளாக அணிதிரட்டியது.

ஈழப் பெண்கள் முன்னணி, கிராமியத் தொழிலாளர் சங்கம், ஈழ மாணவர் பொது மன்றம், ஈழ மக்கள் முன்னணி போன்ற துணை அமைப்புக்கள் ஊடாக வடக்குக் கிழக்கு முழுவதும் மக்களை அணிதிரட்டி பல வேறு போராட்டங்களை நடத்திற்று. இவ்வாறான போராட்டங்கள் ஊடாக பல்வேறு முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்கள் உருவாகினர். போர்குணம் மிக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து எழுச்சி மிக்க இளைஞர் அணி இயக்கத்தின் பல்வேறு மட்டங்களில் செயற்பட்டது.

இயக்கத்தின் பிற்போக்குத் தலைமை இந்தியாவிலிருந்து செயற்பட அதன் முற்போக்கு ஜனநாயக அணி பொதுவாக ஈழத்தில் மக்கள் மத்தியில் அமைப்பு வேலைகளில் ஈடுபட்டனர். புலிகளால் ஈ.பி.ஆர்.எல்.எப் அழிக்கப்பட்ட போது களத்தில் மக்களோடு வாழ்ந்த முற்போக்கு அணியே அழிக்கப்பட அதன் பிற்போக்குத் தலைமை தப்பித்துக்கொண்டது.

எஞ்சிய சிலரை இணைத்துக்கொண்ட அதன் பிற்போக்குத் தலைமை, புலிகளைப் பழிவாங்குவதே தமது நோக்கம் என்ற முழக்கத்துடன் இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இலங்கையில் களமிறங்கிற்று.

புலிகளின் அழிப்பிலிருந்து தப்பி எஞ்சியிருந்த ஒரு சிலரையும், இந்திய இராணுவத்துடன் வந்திறங்கிய ஈ.பி.ஆர்.எல்.எப் தேட ஆரம்பித்த போது அவர்களுகு நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழிகள் இருந்திருக்கவில்லை.

ஆபத்தான முற்போக்கு அணியை அழித்து, பிற்போக்குப் பகுதியைத் தம்மோடு இணைத்துக்கொள்வது என்ற இந்திய அரசின் முதலாவது நோக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப் மீது புலிகளின் தாக்குதலால் நிறைவேற்றப்பட்டது.

கொலைகளுக்கும் அழிவுகளுக்கும் பொறுப்பான பிழைப்புவாதிகளின் கூட்டே இன்றைய ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இன்றைய இரண்டு அணிகளும்!

தமது கொலைகளை ஈ.பிஆர்.எல்.எப் ஏற்றுக்க்கொண்டு பொறுப்புக்கூற வேண்டும். இடதுசாரியத்தை அழிப்பதற்குத் தாமும் துணை சென்றோம் என மக்களிடம் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அதுவே இன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அணிகள் சமூகத்திற்கு ஆற்றக் கூடிய முக்கிய பணி. இனிமேலும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இருப்பு அவசியமற்றது, அது நமது போராட்டத்தின் அவமானச் சின்னமாக மாறிய காலம் இந்திய இராணுவத்துடனேயே ஆரம்பித்துவிட்டது.

 

www.inioru.com

 

Link to comment
Share on other sites

 

இன்று யாழ்பாணத்தில் நாபாவின் பிறந்த தினம் நடைபெர்ருக்கொண்டு இருக்கின்றது .

12241684_1691709137709895_20699739579852

12241311_1691709171043225_44580868612243

12274189_1691715401042602_82735847491727

 

... அஞ்சலிப்போம்,???? அர்சுன, உங்கடையை இணைத்திருக்கிறேன்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனாக இருந்தபோது எல்லா இயக்கத்தவர்களையும் "பொடியள்" என்றுதான் தெரியும். முதன்முதலாக இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை வெறுத்தது என்றால் இந்த முன்னாள் புரட்சிகர விடுதலை இயக்கத்தின் வடகிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாளைத்தான். அவரையும் அவரது புரட்சிகர தலைவர் நாபாவையும், போராளிகள் என்று பொதுமைப்படுத்தி போராளிகள் என்ற சொல்லை மலினப்படுத்தாமல் விட்டால் நல்லது.

Link to comment
Share on other sites

எமது விடுதலை இயக்கங்களில் இரத்த கறை படியாதவை எதுவுமில்லை .

எப்படித்தான் கூட்டி கழித்து பார்த்தாலும் அதில் ஆக குறைந்த கறை படிந்தது ஈ பி தான் அதிகம் எது என்று நான் எழுதி தெரியவேண்டியதில்லை . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது படித்துக் கொண்டிருந்த நானும்  இந்த பிள்ளை பிடி காரர்களிடம் பிடியில் இருந்து மயிரிழையில்  தப்பினனான்.  இந்த Elephant Pass ஐ மக்கள் விரும்பவில்லை. 

Link to comment
Share on other sites

இந்த செய்தி  இங்கு தூசி தட்டப்பட்டு  இணைக்கபட்டதே மாவீர்ர் வாரத்தில் எமக்கிடையே தேவையற்ற முரண்பாடுகளை தோற்றுவிக்கவே. எல்லா இயக்கத்திலும் தமிழ் மக்களுக்காக தமது இன்னுயிர்களை அரப்பணம் செய்த பிள்ளைகளுக்கு வணக்கம் செலுத்துவதை விட்டு இப்படியான உள் நோக்கங்களுடன் இணைக்கப்படும் செய்திகளுக்குப் பின்னூட்டம் இடுவதை தவிர்ககலாமே. 

Link to comment
Share on other sites

1 hour ago, arjun said:

எமது விடுதலை இயக்கங்களில் இரத்த கறை படியாதவை எதுவுமில்லை .

எப்படித்தான் கூட்டி கழித்து பார்த்தாலும் அதில் ஆக குறைந்த கறை படிந்தது ஈ பி தான் அதிகம் எது என்று நான் எழுதி தெரியவேண்டியதில்லை . 

ஆக குறைந்த கறை TELO வில் தான் இருந்தது..  அப்படி சொல்லுற ஆக்களும் இருக்கிறார்கள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12241684_1691709137709895_20699739579852

கலியாணவீட்டுக்கு சோடிச்ச மாதிரி பிங்க் கலர் அந்தமாதிரி தூக்குது......:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுபோன்றதொரு கலியாணவீட்டுச் சோடினையை இந்தமாதம் 26 ஆம் நாள் டொரண்டோவிலும் காணலாம்!<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டமுடியாவிட்டால் விட்டு விலகி நிற்பதே நல்லது.மாவீரர் நாள் பிடிக்காதவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை கொன்றவர்களுக்கும் மக்களை காத்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களுடன்  மல்லுகட்டுவது நேர விரயம் .அவர்களின் அடிப்படை புத்தியை மாற்றுவது கஷ்ட்டம் .

Link to comment
Share on other sites

எப்பவும் நாங்கள் கிட்ட போனதேயில்லை ஆனால் அவர்கள் தான் இப்ப ஒட்ட நினைக்கின்றார்கள் .

அந்த வித்தியாசம் பலருக்கு இப்பதான் விளங்குது 

இது அப்பவே நடந்துதான் .புளொட் ஈபி என்றால் தங்களை விட படித்தவர்கள் என்று அவர்கள் நினைத்த காலங்கள் அவை ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

உதுபோன்றதொரு கலியாணவீட்டுச் சோடினையை இந்தமாதம் 26 ஆம் நாள் டொரண்டோவிலும் காணலாம்!<_<

அதில்லை......இஞ்சை ஹோல் எடுத்து மாவீரர் தினம் செய்தால் நக்கலடிக்கிற கூட்டம் யாழ்ப்பாணத்திலை குடிலுக்கை / வடலிப்பக்கம் ஏன் மாவீரர் தினம் செய்யேல்லை எண்டு கேக்காதவரைக்கும் சந்தோசம்.

Link to comment
Share on other sites

எந்த கருத்திலையும்  பிரபாகரனையும் புலியையும் கொண்டுவராமல் கருத்து எழுத சிலருக்கு வாறது இல்லை...    இது தான் யாழின் கருத்து வங்குரோத்து நிலைமை... 

எனது கருத்தையும் சொல்ல வேண்டும்.. 

போராடாமல் தோற்று போன PLOT போண்ற அமைப்புகளோடை ஒப்பிடும் போது  ஏதோ ஒரு வகையில் யாருடனாவது போராடி தோற்று போன EPRLF  ம் பத்மநாபாவும் உயர்ந்தவர்தான்... 

என்ன போரட்டம் தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவுக்கு ஈபி மட்டும் தான் பிரச்சனை போல. ஈ என் டி எல் எவ்.. ரெலோ.. புளொட் செய்தவை எல்லாம் நன்மையாமோ..?! ரெலோவும் புளொட்டும் வவுனியாவில் சிங்களப் படைகளில் முகாம்களில் பதுங்கிக் கிடந்து இரண்டு சதாப்தங்களாக செய்த அட்டகாசம்.. புளொட் 2009 க்குப் பின்னும் சிங்களப் படை ஏஜென்டுகளாக சொந்த இன மக்களை சித்திரவதை செய்த கொடுமைகள்.. அம்னாஸ்ரியால் கூட மிகக் கொடியது என்ற வர்ணிக்கப்பட்ட நிலையில்.. இன்னொருவுக்கு ஈபி யின் செயல்கள் மட்டும் தான்.. பிரச்சனையா..?! ஈபிக்கு சரி நிகராக.. புளொட்.. ரெலோவும் நடந்து கொண்டுள்ளது. ஈ என் டி எல் எவ் உம் அடங்கும். புளொட் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பதை பற்றி ஏன் இன்னொரு கவலை வெளியிடுவதில்லை. tw_blush:

புளொட்டுக்கு வேண்டிய வியாபாரிகள்.. இன்னொருவில் இருக்கினம் போல. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்மநாபாவின் நினைவுகள்

 

செம்மறிகள் கூட நல்ல மேய்பனை தேடுகின்றன. அதேபோல பல வருடங்களாக பத்மநாபாவின் தகுதியில் தமிழ் இனத்தில் ஒரு தலைவரை தேடும் ஆவலில் இந்த கட்டுரை மீண்டும்  ஜுன் 19 ம் திகதி மீண்டும் பிரசுரமாகிறது.
நடேசன்

என் எஸ் நடேசன்

நமது வாழ்க்கைப் பயணத்தில் ஏராளமானவர்களை சந்திக்கிறோம்.பழகுகிறோம் பிற்காலத்தில் ஒவ்வொருவரும் வேறு வழிகளில் தங்களது பயணத்தை தொடர்கிறார்கள். இவ்வாறு பழகியவர்களில் பலரது நினைவுகளை நினைவு கூருகிறோம். சிலரது நினைவுகளை நண்பர்களுடன் பரிமாறுகிறோம். சொற்பமானவர்களைப்பற்றி பலர் கூடும் நிகழ்வுகளில் பேசுகிறோம். ஒரு சிலரின் நினைவுகளை புத்தகங்களில் பதிப்பித்து பாதுகாக்கின்றோம். காரணம் வருங்கால சமூகத்திற்கும் இவர்களது எண்ணங்கள், சிந்தனைகள் தேவையானது என கருதிய காரணத்தால்.

சமீபத்தில் இப்படி ஒரு பணியை திறம்பட செய்தவர் நண்பர் புஸ்பராஜா. பிரான்ஸில் வசிக்கும் இவர் “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற தனது நனைவோடை நினைவுகளைப் புத்தகமாக்கி இருக்கிறார். இவர் தனது நண்பன் பத்மநாபாவுடைய தொடர்புகளையும் செயல்களை 70ம் ஆண்டு காலத்திலிருந்து பதிவு செய்துள்ளார்.

சென்னையில் பத்மநாபாவுடன் பழகிய அந்த மூன்று வருடங்கள் மறக்க முடியாதவை. நான், நானாக இருப்பதற்கு அஸ்திவாரம் இட்ட காலங்கள். அந்தக் காலங்களில் பத்மநாபாவை ரஞ்சன் என்றே அழைப்பேன். மற்றைய EPRLF இனர் இருக்கும் போது ரஞசன் தோழர் என்பேன். தோழர் என்ற வார்த்தை சங்கடத்துடன்தான் வெளியே வரும். காரணம் நான் EPRLF அங்கத்வனல்ல. அதேவேளை இடதுசாரி இயக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவனோ இல்லை.

என்னைப்போல் இலங்கை, இந்தியாவில் ஏராளமானவர்கள் பதமநாபாவின் நண்பர்கள். சிங்களவர், மலையகத்தமிழர், தமிழ்நாட்டினர், இஸ்லாமியர் என இன, மத, மொழி வோறுபாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களுடன் நட்புறவு கொண்டவர். எனது பார்வை, வாசிப்புகளுக்கு உட்பட தமிழ்நாட்டில் இரண்டு பேர் LIVING LEGENDS என என்னால் பார்க்கப்படுவார்கள். பத்திக்கையாளர் சோ ராமசாமி, எழுத்தாளர் ஜெயகாந்தன். இவர்கள் இருவரும் கொள்கைகளிலும், வாழ்க்கைகளிலும் எதிரும், புதிருமானவர்கள் கடந்த ஜம்பது வருடத்தில் இவர்கள் இன்றி தமிழ்நாட்டு சரித்திரம் எழுதமுடியாது. இப்படியான இருவரும் பத்மநாபாவின் நண்பர்கள்.

தனிப்பட்ட முறையில் பத்மநாபாவுடனான பல சம்பவங்களை நான் நினைவு கூறமுடியும். இதில் முக்கியபாக நான் கருதும் சமபவம் ஒன்று பத்மநாபாவின் பலத்தையும் பலவீனத்தையும் காட்டுவது.

86ம் ஆண்டு மே மாதம் இருபத்தியாறாம் திகதி ரெலோ சிறிசபாரட்ணம் இறந்த நாளாகும். இதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இது.

இரவு பத்து மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள EPIC தகவல் நிலையத்தருகே TVS 50 இல் சென்று கொண்டிருந்த போது பத்மநாபாவைக் கண்டதும் வண்டியை நிறுத்தினேன். தனிமனிதராக நடந்து வந்து கொண்டிருந்தார்.

“ரஞ்சன், ரெலோவிற்குள் பிரச்சனை போலிருக்கு, தாஸிற்கும் பொபிக்கும் நல்லா இல்லை போலிருக்கு(ரெலோவின் ராணுவ பொறுப்பாளர் இருவரும்).

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” வருகிறீர்களா சிறியிடம் போவோம்?

“ஓம்” என தலையசைத்ததும் உடனே எனது TVS 50 இல் ஏறிவிட்டார் பத்மநாபா. எங்கள் TVS 50 மெதுவாக சென்றது. போகிற வழியில் கேட்டேன் பாதுகாப்புக்கு ஏதாவது ஆயுதம் உள்ளதா?

“இல்லை. தோழர் நாம் ஏன் பயப்பட வேண்டும்?

அப்பொழுது எனது இதயத்துடிப்பு இரு மடங்காகியது. ஏற்கனவே இயக்கங்கள் இந்திய மண்ணில் சகோதர கொலைகள் செய்து விட்டிருந்தார்கள். இந்த மனிதன் தனது பாதுகாப்பைப் பற்றி கவலைப்படவில்லை, இதில் நானும் மாட்டிக் கொண்டேனே என உள்ளே எண்ணிக் கொண்டு, ரெலோ அலுவலகம் இருந்த சாலிக்கிராமம் சென்றோம்.

இரவு பததரை மணியிலிருந்து விடியற்காலை நாலுமணிவரையும் பத்மநாபாவும் சிறிசபாரத்தினமும் பேசினார்கள். பேசியதில் முக்கியபாக பத்மநாபா சிறியிடம் “உங்கள் உட்பிரச்சனையை பேசி தீருங்கள்” என்பதுதான். அமைதியாக தலையாட்டியபடி கேட்ட சிறிசபாரத்தினம் அன்று விடியற்காலையில் வேதாரணியம் கரைக்கு சென்றார்.

யாழ்ப்பாணம் சென்ற சிறிசபாரத்தினம் தாசை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் கொலை செய்ததும் பின்பு சிறியுடன் இருநூறுக்கு மேற்பட்டவர்களை புலிகள் சுட்டுக் கொன்றதும் சரித்திரமான சம்பவங்களாகும்.

இதே போல இராணுவப் பொறுப்பாளராக இருந்த டக்ளஸ் தேவானந்தா பிரிந்து செல்லும் போது EPRLF அங்கத்தினருக்குள் கொதிப்பு உணர்வுகள் உருவாகியது. இரண்டு பகுதியிலும் ஏற்பட்ட மனக்கசப்புகளை நேரில் பார்த்தேன். எந்த ஒரு சிறிய வன்முறையும் ஏற்படாது பிரிவு ஏற்பட்டதை நான் பார்க்க முடிந்தது.

இப்படி மற்ற இயக்க பிரிவுகளில் மட்டும் அல்ல தனது இயக்கத்தில் பிரிவுகள் ஏற்பட்ட போது வன்முறை ஏற்க மறுத்தவர் பத்மநாபா.

சிட்னியில் நான் இருந்தபோது பதமநாபாவின் கொலை சம்பவம் தெரிந்து கண்ணீர் விட்டு அழுதேன். பத்மநாபாவோடு கொலை செய்யப்பட்ட கிருபாகரன், யோகசங்கரி என்பவர்கள் எனது கல்லூரித்தோழர்கள் என்பதும் காரணமானது.

கடந்த இருபதாம் நூற்றாணடில் உலக அரசியலில் நான் மதிக்கும் மூவர் இந்தியாவில் மோகனதாஸ்காந்தி, தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா, கியூபாவில் (ஆஐன்ரீனாவில் பிறந்த) ஏனெஸ்ரோ சேகுவரா போன்றவர்கள் வேறு கொள்கைகளைக் கடைப்பிடித்தாலும் தங்களை அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள். இப்படியான இந்த மூவர் எமது மட்டக்களப்பிலோ, யாழ்ப்பாணத்திலோ பிறந்திருந்தால் என்று கற்பனை செய்து பார்த்தேன். நிட்சயமாக கொலை செய்யப்பட்டிருப்பார்கள்.வன்முறைக்கு பலியாகியிருப்பார்கள்.
இப்படியான சிந்தனையின் பின் என் மனம் ஆறுதலடைந்தது.

நான் பழகிய நாட்களில் அவதானித்த முக்கிய ஒரு விடயம் பத்மநாபா ஒரு தூய ஜனநாயகவாதி. நான் பல தமிழ் அரசியல்வாதிகள், இயக்கத்தை சேர்ந்தவர்கள் எழுத்தாளர்கள் மற்றும் சமூகத்தில் பலதரப்பட்டவர்களுடன் பழகி வந்துள்ளேன். ஜனநாயகத்தில் பத்மநாபா போல நம்பிக்கை கொண்ட ஈழத்தமிழர் ஒருவரைக் காணவில்லை இக்காரணங்களுடன் சமூகத்தின் சார்பாக பல வருட முன்னோக்கிய சிந்தனையும், முடிவெடுத்த தன்மையும் பத்மநாபாவின் தவறுகளாக அமைந்தது. கற்களும், முட்களும் நிறைந்த சதுப்பு நிலத்தில் ரோஜாவாக பூத்த காரணத்தால் அழிக்கப்பட்டிருக்கலாம் என ஆறுதலடைகிறேன்.

புத்மநாபா இறந்த பதினைந்து வருட நினைவுக்கூட்டம் மெல்பேணில் யூலை 25ம் திகதி நடைபெற்ற போது பேசிய உரையின் சாரம்.

நன்றி உதயம் அஸ்திரேலியா

July 2005

www.ilankainet.com

 

Link to comment
Share on other sites

49 minutes ago, colomban said:

கடந்த இருபதாம் நூற்றாணடில் உலக அரசியலில் நான் மதிக்கும் தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா, கியூபாவில் (ஆஐன்ரீனாவில் பிறந்த) ஏனெஸ்ரோ சேகுவரா போன்றவர்கள் வேறு கொள்கைகளைக் கடைப்பிடித்தாலும் தங்களை அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள். இப்படியான இந்த மூவர் எமது மட்டக்களப்பிலோ, யாழ்ப்பாணத்திலோ பிறந்திருந்தால் என்று கற்பனை செய்து பார்த்தேன். நிட்சயமாக கொலை செய்யப்பட்டிருப்பார்கள்.வன்முறைக்கு பலியாகியிருப்பார்கள்.

நன்றி பகிர்வுக்கு

காந்தியைப் பற்றி எனக்கு வேறு கருத்துகள் உண்டு. அதனால் அவர் பெயரை மட்டும் மேற்கோளில் நீக்கியுள்ளேன்.

Link to comment
Share on other sites

On 11/24/2015, 7:25:37, no fire zone said:

 

இன்று யாழ்பாணத்தில் நாபாவின் பிறந்த தினம் நடைபெர்ருக்கொண்டு இருக்கின்றது .

12241684_1691709137709895_20699739579852

12241311_1691709171043225_44580868612243

சரி ... ஹிந்திய இராணுவத்துக்கு மாமா வேலைபார்த்தவரின் நினைவோ? அதில் ஏறக்குறைய அதே நிறம், மணம், குணமுடைய  சித்தர் போகலாம்! ... 

... ஆமா ... உதற்குள் ஏன் மாவையார்????? ... ஏறக்குறைய அதே தொழிலை சிங்களவனுக்கு செய்கிறோம் என்று போனாரோ????????

23 hours ago, காத்து said:

ஆக குறைந்த கறை TELO வில் தான் இருந்தது..  அப்படி சொல்லுற ஆக்களும் இருக்கிறார்கள்.. 

...ம்ம்... பின்பொருநாள் விலாவாரியாக எழுதுகிறேன் ... எம்மக்களுக்கு எதிராக முதன் முதலில் தாம் தூக்கிய ஆயுதங்களை திருப்பியவர்கள் ... இந்த ரெலோஸ்டுகள்! .. 

Link to comment
Share on other sites

18 hours ago, arjun said:

எப்பவும் நாங்கள் கிட்ட போனதேயில்லை ஆனால் அவர்கள் தான் இப்ப ஒட்ட நினைக்கின்றார்கள் .

அந்த வித்தியாசம் பலருக்கு இப்பதான் விளங்குது 

இது அப்பவே நடந்துதான் .புளொட் ஈபி என்றால் தங்களை விட படித்தவர்கள் என்று அவர்கள் நினைத்த காலங்கள் அவை ,

ஓ ... அர்சுன அண்ணோய்! ... என்ன? நீங்கள் கிட்டப்போறதில்லை?   அவயள் வந்து உங்களை கட்டிப்பிடிக்கினமோ?? ஏனெனில் நீங்கள் படித்தவர்கள்??

... ம்ம்ம்... அதுதான் இங்கு யாழுக்குள் குந்தியயபடி இருக்கிறீர்களோ??? தெரியாமல் கேட்கிறேன், ஏன் ஈ, பீ, தேனிக்கள் கிடைக்கவில்லையா? இல்லை யாழ் என்ன மாகமாணிக்கங்கள் குந்தும் இடமென நினைத்தீர்களா???

புளொட், ஈபி படிச்சவையள்! .. முகங்களை காட்டுங்கோ பார்ப்பம்??? சங்கிலியோ, டம்மிங் கந்தசாமியோ, மாணிக்கதாசனோ ... இதில் எந்தப்படித்த முகத்துக்கு கிட்ட நிற்கிறீர்கள் என்று பார்ப்போம்????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.