Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Tanjore_doll_1.jpg

 

மழை வரப் போவதுபோல் மேகங்கள் எல்லாம் கருங் குன்றுகளாகி ஒன்றுடனொன்று மோதுவதுபோல் செல்வதும் பின்னர் விலகுவதுமான விண் விளையாட்டைப் பரணி யன்னலினூடே பாத்துக்கொண்டே நின்றான். இப்ப சில வாரங்களாக இப்படித்தான் கடும் புழுக்கம் இவன் மனதிலும் வெளியிலும்.
 
என் மனதைப் போலத்தான் மேகங்களுமோ??? இன்னும் முடிவை எடுக்க முடியாது அலைந்துகொண்டு திரிகின்றன. குளிர் காற்று வீசுகிறது. கரு மேகங்களும் தெரிகின்றன. ஆனால் இன்னும் ஒருசிறு மழைத்துளி கூட விழாது ஏன் எல்லோரையும் எதிர்பார்த்தே காத்திருக்க வைக்கின்றது என மனதில் எண்ணிக்கொண்டே, என்னால் கூட ஒரு மாதமாகியும் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லையே என்று சமாதானமும் சொல்லிக்கொண்டான்.
 
................................................................................
 
அவர்கள் லண்டனில இருந்து வந்திருக்கினம். இரண்டே இரண்டு பெட்டையளாம். மூத்தது ஒரு கோடீஸ்வரனைக் கலியாணம் செய்து வசதியா இருக்கினமாம். இது இரண்டாவது பெட்டை. லண்டனில பெரிய வீடும் இங்கை முப்பது லட்சம் காசும் தரீனமாம். நல்ல சம்பந்தம். பொருத்தமும் எண்பது வீதப் பொருத்தம். அம்மா சொல்லிக்கொண்டே போக இவன் இடை நிறுத்தி "ஏனம்மா மூத்த மகளுக்குக் கோடீஸ்வரனைக் கட்டிக் குடுத்தவை. ஏன் இரண்டாவதுக்கு என்னைக் கட்ட விருப்பப் படினம்" என்று கேட்டவுடன் தாய்க்குக்கூட ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
 
"அதைப்பற்றி எங்களுக்கு என்ன தம்பி. இண்டைக்குப் பின்னேரம் இங்க அவை வரீனம். நீ எங்கையாலும் போனாலும் எண்டுதான் சொல்லுறன். எதுக்கும் அவை வந்து போகட்டும் அப்பன் பிறகு மிச்சத்தைக் கதைப்பம்" என்று தாய் அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மிகுதிக் காரியங்களைச் செய்யக் கிளம்ப, சரி வரட்டும் பார்ப்பம் என்று நினைத்தவுடனேயே ஆண் பார்க்க வருகிறார்கள் என்று மனதில் எழுந்த எண்ணம் கூச்சப்பட வைத்தது.
 
அவன் கடந்த ஆண்டுதான் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியுள்ள பொறியியலாளர். ஒருவாறு கடனை உடனை வாங்கி அம்மா படிப்பிச்சு முடிச்சிட்டா. அதுக்காக அம்மாவை எதிர்த்துக் கதைக்கப் பயந்து பேசாமல் இருக்கிறதோ என்று மனம் எதிர்த்தாலும், உண்மையில் அம்மா சொல்வதை எப்பதான் எதிர்த்துள்ளான் வாழ்க்கையில் இப்ப மட்டும் எதிர்க்க என வகையற்றுத் தவித்தது மனம்.
 
எதிர்க்க முடியாது என்று இல்லை. இவனின் பன்னிரண்டாவது வயதில் தந்தை விபத்து ஒன்றில் இறந்துபோக, அவனையும் தங்கையையும் எந்தக் குறையும் இன்றி ஒரு பட்டம் பெறுமளவு வளர்த்து விட்டதற்கு கைமாறு இதைவிட வேறென்ன செய்யமுடியும் என்று நினைத்து மனதைச் சமாதானம் செய்து கொண்டான்.
 
>>>>>>>>>>>........................................................
 
மாலையில் நான்கு மணிக்கு அவர்கள் பெரிய பென்ஸ் காரில் வந்து இறங்க இவனுக்கு வாங்கோ என்று வெளியே போய்க் கூப்பிட கூச்சமாக இருந்ததில் அம்மா என்று தாய்க்கு அவர்கள் வருவதைத் தெரியப்படுத்திவிட்டு என்ன செய்வது என்று தெரியாது யன்னலூடே பார்த்தபடிவெளியே நின்றான்.
 
தாய் ஓடாத குறையாகச் சென்று அவர்களை வரவேற்க, முதலில் பின் கதவைத் திறந்துகொண்டு ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி இறங்க அவரைத் தொடர்ந்து ஒரு சின்னப் பெண்ணும் இன்னொரு நாற்பதுக்குள் வயதுள்ள பெண்ணும் இறங்க, மறுபக்கத்திலிருந்து இரண்டு ஆண்கள் இறங்கினர்.
 
ஒருவரைப் பார்த்ததுமே அவர்தான் பெண்ணின் லண்டன் அப்பா என அவரின் ஆடையிலும் பளபளப்பிலும் இவன் ஊகித்துக்கொண்டான். பெண்கள் மூவருமே தலை முடியை ஓட்ட வெட்டியிருந்தனர். வயது கூடிய பெண் தலைக்கு மண்ணிறம் அடித்திருந்தது பார்க்க அவனுக்கு எதோ போல் இருந்தது.
 
எல்லோரும் உள்ளே வந்ததும் அவன் வேறு வழியின்றி வாங்கோ இருங்கோ என்று சொல்லிவிட்டு நின்றான். இரண்டு ஆண்களும் இவனுக்குக் கிட்ட வர இவனுக்கு ஒரே குழப்பம் ஒருநொடி. ஆனால் நீட்டிய அவர்களின் கையை கண்டதும் அவனின் குழப்பம் மறைந்து அவனும் கைகுலுக்கிக் கொண்டான். அவர்களின் கைகுலுக்கலில் கை இலேசாக நோவெடுத்தது.
 
முதலில் கை குலுக்கியவர், கமோன் தட்சா என்று கண்ணைக் காட்ட அந்தச் சின்னப் பெண் எழுந்து வந்து இவனுக்கு முன்னால் கை நீட்டியது. இவன் வேறு வழியின்றிக் கை குலுக்கிவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, அம்மா  அதை விளங்கிக் கொண்டு பரணி நீயும் இரு என்று சொல்ல, அவன் நுனிக் கதிரையில் அமர்ந்தான். 
 
அந்தப் பெண் இவனையே குறுகுறுவெனப் பார்த்தபடி இருக்க, இவனும் துணிவாய் நிமிர்ந்து பார்த்தான். நல்ல வெள்ளை தான். ஆனாலும் அழகி என்று சொல்ல முடியாது. நெற்றியில் பொட்டுமின்றித் தலை முடியையும் ஓட்ட வெட்டி, ஒரு ஆண் தனம்  இருந்தது அப்பெண்ணிடம். ஒரு அழகிய பெண் தான் தன் மனைவியாக வரவேண்டும் என்று அவன் எப்போதுமே எண்ணியதுமில்லை. ஆயினும் தன் மனைவி இவளா என்று எண்ணவே,  இல்லை என்று அவன் மனம் அழுத்திக் கூறியது.
 
பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது இவனை விரும்புவதாகக் கூறிய நிசா கண் முன் வந்து சிரிப்பதுபோல் இருந்தது. தாயின் விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்வதில்லை என்ற கட்டுப்பாடு கொண்டதால் அவன் யாரையும் தன் மனதில் எண்ணாமல் எண்ணியவரையும் சுலபமாக விலத்தி வரமுடிந்தது. ஆனால் என் விதி இப்படியாகி விட்டதே என மனதில் எழுந்த பச்சாதாபத்தை ஓரம் தள்ளியபடி அவர்கள் கதைப்பதில் தன் மனதைப் பதித்தான்.
 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
 
பெண்ணின் தாயார் தம்பட்டம் அடிப்பதைப் பார்க்க எரிச்சலாக வந்தாலும் அடக்கிக்கொண்டு இவர்கள் யார் என்று மற்ற இருவரையும் பார்த்துக் கேட்டான். இது என் அக்காவின் மகளும் கணவரும். இரண்டு பேருமே டொக்ரேர்ஸ் என்று ஆங்கிலத்தில் கூற, அம்மாவுக்கு ஆங்கிலம் விளங்காது என்றுவிட்டு இவையும் லண்டனிலை இருக்கினமா என்றான் பரணி. இவை இங்க கொழும்பில்தான் வேலை செய்யினம். இங்கதான் இருக்கிறது. வருசத்தில ஒருமாதம் அங்க ஹோலிடேக்கு வாறவை என்று கூறிவிட்டு மகளைப் பார்த்து தட்சா இவரைப் பிடிச்சிருக்கோ என்று எல்லார் முன்னாலும் கேட்டார்அந்தத் தாய்.
 
இவனுக்குத் தன்னையும் அதேபோல் கேட்டாலும் என்ற பயம் எழ, என்ன குடிக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு உடனே எழுந்தான். டீ ஒன்றும் வேண்டாம். ஏதாவது கூல் ட்ரிங்க்ஸ் தாங்கோ என்று தந்தை கூற, தம்பி நீ இரு நான் கொண்டு வாறன் என்று தாயார் எழமுயல, அம்மா நீங்கள் இருந்து கதையுங்கோ நான் கொண்டுவாறன் என்றுவிட்டு குசினிக்குள் சென்றபின் தான் இவனுக்கு நின்மதி வந்தது. 
 
அங்கு சென்ற பின்னும் காது வெளியே என்ன கதைக்கிறார்கள் என்பதிலேயே நிக்க, அவர்களுக்கும் மகளிடம் அப்படிக் கேட்டதால்த்தான் பெடியன் எழுந்து சென்றுவிட்டான் என்று புரிந்ததால் மேற்கொண்டு அதுபற்றிக் கதைக்காமல் பொதுவாகக் கதைக்கவாரம்பிக்க, இவனும் மனதை இலகுவாக்கியபடி கடையில் வாங்கிய பற்றிசையும் வடையையும் எடுத்துக்கொண்டு போய்த் தாயிடம் கொடுத்துவிட்டு மீண்டும் வந்து ஊற்றி வைத்த நெக்டோச் சோடாவை கிளாசில் ஊற்றி தாய் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த தட்டில் வைத்துக் கொண்டுபோய் மேசையில் வைத்துவிட்டு அமர்ந்தான். 
 
****************************************
 
இவன் மனம் இன்னுமே அமைதியாகவில்லை. பணம் கொட்டிக் கிடந்தால் எதுவும் கதைக்கலாமோ ?? நாங்களா அவையிட்டை பெண் கேட்டு ஓடினோம். கஷ்டப் பட்டனாங்கள் என்று தெரிந்தும் இன்சினியர் எண்டதும் பல்லைக் காட்டிக் கொண்டு வந்தது அவர்கள். சீதனம் தந்தாப்போல் அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு ஒரு ஒண்டும் தெரியாத பெண்ணுக்கு புருஷன் வேலை பார்த்ததும் இல்லாமல் உணர்வுகளையும் எல்லாம் அடக்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்று எப்பிடி எதிர் பார்ப்பார்கள். எல்லாம் பணக் கொழுப்பு. நினைக்க நினைக்க பரணியின் மனதில் கொதிநிலை கூடிக்கொண்டு சென்றதேயன்றிக் குறையவில்லை.
 
இனி அம்மாவுக்காகவோ ஆருக்காகவோ பார்க்க முடியாது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுதானே என மனம் சொன்னது. அம்மாவுக்கு அவன் முடிவாகச் சொல்லிவிட்டான். இனியும் நான் தட்சாவுடன் சேர்ந்து வாழ முடியாது என்று. தாய் இரண்டு மூன்றுதரம் அழுது ஆர்பாட்டம் செய்து இவனை மசியவைக்கப் பார்த்தாலும் இவன் கடைசியில் தன் வெக்கத்தை விட்டு நடந்தவற்றைத் தாயாரிடம் சொன்னதன் பின்னர் தாய் எதுவும் கதைக்கவே இல்லை.
 
அவர்கள் கொடுத்த சீதனம் பதினைந்து இலட்சத்தில் பட்ட கடன்கள் அடைத்ததுபோக  தங்கைக்குச் சீதனம் கொடுக்க என்று பத்துலட்சம் வங்கியில் வட்டி போட்டபடி இருக்கிறது. அதை எடுத்து அவர்கள் மூஞ்சியில் தூக்கி எறிவோம் என்றால் "நீ அந்தப் பயித்தியத்தோட வாழ்ந்ததுக்கு அதுசரியாப் போச்சு. அவை கேட்டாலும் அந்தக் காசைக் குடுக்கிறேல்லை" என்று தாயார் கறாராகக் கூறிவிட்டார். அவன் மனமும் கொஞ்ச நாட்கள் கொடுப்போமா விடுவோமா என்று இரு பக்கமும் ஆடியபடி இருந்தது . இப்ப கொடுப்பதில்லை என்று அவனும் முடிவுக்கு வந்துவிட்டான். 
 
இன்னும் அவர்கள் மகளின் பெயரில் வாங்கிய வீட்டிலேயே தங்கியிருக்கிறான். தாய் கூறியது போல் தட்சா பைத்தியம் எல்லாம் இல்லைத்தான் எனினும் அவன் எத்தனையைச் சமாளித்து அவளுடன் வாழ்க்கையைக் கொண்டு போனான். சோறுகறி சமைப்பது எப்படி என்று தெரியாது, இடியப்பம் புட்டுக் கூட ......தமிழர்களின் உணவே சமைக்கத் தெரியாது அவளுக்கு. எத்தனை நாட்களுக்குத்தான் கடையில் எடுத்து உண்பது??
 
அவனாவது லண்டன் வந்து தட்டுத்தடுமாறி இறைச்சிக்கறி வைக்கப் பழகிக் கொண்டான். தட்சாவுக்கோ சொல்லிக் கொடுத்தாலும் வர  மறுத்தது. சரி தன் விதி என்று மனதைத் தேத்திக் கொண்டாலும் கடைசியாக அவளுடன் நடந்த வாக்குவாதம் நினைவில் வந்து இரக்கம் என்பதையே அவன் மனதிலிருந்து தூக்கிப் போட, இன்னும் தன் மனநிலையைப் பாதித்துக்கொண்டிருக்கும் அவள் பேச்சுக்களே மீண்டும் மீண்டும் நினைவுகளை எல்லாம் வளைத்துப் போட்டது.
 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
 
திருமணப் பேச்சு முற்றாகி எழுத்தும் இலங்கையில் எழுதிவிட்டு அவர்கள் லண்டன் சென்று ஆறு மாதங்களிலேயே இவனுக்கு விசாவும் கிடைத்தது. இவனை உடனே அங்கு வரும்படி தட்சாவின் பெற்றோர் அழைக்க, பரணி பிடிவாதமாக இலங்கையில் தான் கலியாணவீடு செய்யவேண்டும் என்று முடிவாகக் கூறிவிட்டான். தாயும் தங்கையும் பார்க்காது என்ன கலியாணம் என்று ஒரு பிடிவாதம். அவர்களும் வேறு வழியின்றி அங்கு போய்க் காசை அள்ளி எறிந்து மிக ஆடம்பரமாக திருமணத்தை நடத்தினர். தாய்க்குத் தங்கைக்குக் கூட அவர்களே சேலைகள் எடுத்து, கூறைச் சேலை கூட இவர்களை எடுக்க விடவில்லை. தாயோ பரணியோ அது பற்றிக் கவலை கொள்ளவுமில்லை.
 
திருமணம் நடந்த அடுத்த நாளே அவர்கள் எல்லோருடனும் இவனும் லண்டன் வந்துவிட்டான். மருமகள் தன் வீட்டில் நிக்கவில்லையே என்னும் கவலை பரணியின் தாய்க்கு இருந்தாலும், உதைப் பெரிசு படுத்தக் கூடாது என்று ஒன்றும் கூறவில்லை.
 
எல்லாரும் போல லண்டனும் அவனைப் பிரமிக்க வைத்து மனதை ஒருசஞ்சரிப்புக்கு ஆட்படுத்தியது. வந்த அடுத்த நாளே இருவரையும் தட்சாவுக்கு வாங்கிய வீட்டில் கொண்டுபோய் விட்டு விட்ட பின்னர் தான் அவனுக்கு தட்சாவுடன் தனிய இருக்கவே சந்தர்ப்பம் கிடைத்தது.
 
தனிமை அவனுக்குக் குறுகுறுப்பை ஏற்படுத்த அவளுக்குப் பக்கத்தில் போய் அமர்ந்து தட்சா என்றான் ஆசையுடன். "வெயிட் பர்ணி ப்ரோக்ராம் முடியட்டும்" என்றுவிட்டு அவள் தன் பாட்டுக்கு சிறுவர்களின் நிகழ்வொன்றைப் பார்த்துக்கொண்டு இருக்க இவன் வேறு வழியின்றி மேசையில் கிடந்த மகசின் ஒன்றைப் புரட்டியபடி அமர்ந்தான். அப்படியே கதிரையில் சாய்ந்து தூங்கிவிட்டவன் கண் விழித்தபோது அவள் சான்விச் ஒன்றை உண்டுகொண்டிருந்தாள்.
 
என்ன நீர் என்னை விட்டுவிட்டுச் சாப்பிடுகிறீர். எழுப்பி இருக்கலாமே என்று இவன் ஆதங்கத்துடன் சொல்ல, நான் அதை யோசிக்கவில்லை என்று கூறிவிட்டு மீண்டும் தொலைக்காட்சியில் முகம் பதிக்க ஏற்பட்ட எரிச்சலை அடக்கியபடி இண்டைக்கு வெளியே போய் இரண்டுபேரும் சாப்பிடலாம் என்று நினைத்தேன் என்றான் இவன். நீங்களும் இப்ப சான்விச் சாப்பிடுங்க. இரவு போகலாம் என்றுவிட்டு அதுபற்றி வேறெதுவும் கதைக்காது சாப்பிடுபவளை எதுவும் சொல்ல முடியாது தானே எழுந்து சென்று பிறிச்சில் இருந்த ஒரு பாணைக் கொண்டுவந்து அவளுக்கு அருகிலிருந்து உண்ண ஆரம்பித்தான். அவனுக்கு அரை வயிறுதான் நிரம்ப மீண்டும் எழுந்து பிரிச்சைத் திறந்து பார்த்தவன், அது காலியாக இருக்கவே எரிச்சலுடன் அடித்துச் சாற்றிவிட்டு வந்து அமர்ந்தான். வீட்டில் அம்மா கலையில் மட்டும் தான் பாண் தருவது. அதுவும் அந்த அரைத்த சம்பலோ அல்லது இடித்த சம்பலுடன் சாப்பிடும்போது கால்றாத்தல் பாணுடனேயே வயிறு நிறைந்துவிடுமே.
 
இத்தனை பணம் இருந்து என்ன. இவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லையே என சினம் கூடியது. நானும் அம்மாவிடம் வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டுமோ என்று முதல்முறையாக அவனுக்குத் தன்மேல் கோபம் எழுந்தது. மாமியார்க்காரி ஒரு வாரமாவது தம்முடன் எங்களை வைத்திருக்கலாம் என்று எழுந்த கோபத்தில் தட்சா எனக்குப் பசிக்குது வாரும் ஏதாவது வாங்கிக் கொண்டுவந்து சமைப்பம் என்றவன், அவளின் கையைப் பிடித்து கதிரையிலிருந்து அவளை எழுப்பினான். அவள் உடை மற்ற அறைக்குள் செல்ல சிறுநீர் கழிக்கச் சென்றவன் வெளியே  வரும்போது தட்சா யாருடனோ போனில் கதைத்துக்கொண்டிருந்தாள்.
இந்தாங்க மம்மி என்றுவிட்டு இவனிடம் போனைக் கொடுத்தவள், மீண்டும் இருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தாள். 
 
பரணி, அங்க வெட்டிங் நடந்ததால இங்க பிரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு நெக்ஸ்ட் சனி ரிசெப்சன் வச்சிருக்கு. அதால நீங்கள் வெளியில பெரிசா திரியாமல் இருக்கிறது பெட்டர். நான் ஒரு மணித்தியாலத்தில பூட் கொண்டு வாறன் என்று மாமியார் ஆங்கிலமும் தமிழும் கலந்து சொல்ல இவனுக்கு பசி குறைந்துவிட்டாற்போல் உணர்வு ஏற்பட, சரி என்றுவிட்டு அவளுக்கு பக்கத்தில் அமர்ந்தான். அவளுக்கு அவனிடம் எந்த  ஈர்ப்பும் ஏற்படாதது அவனுக்கு வியப்பையும் ஒருவித ஏமாற்றத்தையும் கூட அளித்தது. அவளின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுப்போமா என்று எண்ணியவன் அவளைப் பயப்படுத்தக் கூடாது என்று எண்ணியவனாய் அவள் கைகளுடன் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு அவளைப் பார்த்தான். அவளோ எந்தவித உணர்வும் அற்றவளாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள்.
 
*************************************************************************************************************************************
 
எல்லோரையும் போல அவனும் எதிர்பார்ப்புடன் இரவுக்காகக் காத்திருக்க, தனது அறையினுள் சென்று ஆடை மாற்றிக்கொண்டு வந்தவள் கையில் ஒரு சிறிய பெட்டியை எடுத்து நீட்டினாள். இவன் பெட்டியை வாங்காது திடுமென அவளை அனைத்துத் திக்குமுக்காட வைத்தபோதும் அவள் பெரிதாக உணர்ச்சிவசப்படாது மம்மி பெட்டியை குடுக்கச் சொன்னவ என்றபோது உச்சத்துக்குச் சென்றுகொண்டிருந்த அவன் உணர்வுகள் தடைப்பட்டுக் கீழே விழுந்தன. அதன்பின் அதை வாங்கிப் பார்த்தவனுக்கு கோபமும் எரிச்சலும் ஒன்றாய் எழுந்தன. மம்மி தந்துவிட்டவவா என்றபடி பெட்டியைப் பார்த்தவனுக்கு "கொண்டம்" என்று எழுதியிருந்ததைப் பார்த்தவன் புரிந்ததும் உம்மட மம்மிக்கு விசரா என்று அதைத் தூர ஏறிந்தான். சின்னப்பிள்ளைபோல் அதை ஓடிப்போய் எடுத்துவந்த தாட்சா இதை கட்டாயம் யூஸ் பண்ணட்டுமாம் மம்மி என்றவள், அக்கா கூட கோல்சேல் கடையில் பெரிய பண்டல் வாங்கி வச்சிருக்கிறா. நெக்ஸ்ட் டைம் அவவிட்டை இது ஓகே என்றால் அவவே எமக்கும் வாங்கித்தருவா என்றவளை என்ன செய்வது என்று தெரியாமல் மனக் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு நின்றான் பரணி.
 
*****************************************************************************************************************************************
 
ஒருவாறு அவன் லண்டன் வந்து ஆறுமாதங்கள் ஆகிவிட்டது. நல்ல வேலையும் சம்பளமும் கொம்பனிக் காருமாக இருந்தாலும் தட்சாவின் போக்கும் குணமும் செயல்களும் அவனுக்குப் பெரும் சவாலாகவே இருந்தன. காசுக்காக அம்மா என்னை விற்க நான் அம்மாவுக்காக என்னை விற்றுவிட்டேன் என்று மனம் ஓலமிடத்தான் செய்தது. உண்மையைச் சொல்லு அம்மாவுக்காக மட்டும் தானா நீ இந்தக் கலியாணத்துக்குச் சம்மதித்தது?? லண்டன் போகும் உன் ஆசையாலும் தானே என மனம் இடித்துரைத்ததை ஏற்கமறுத்த மனதை வலுக்கட்டாயமாக ஏமாற்றியபடி  கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். வீடு வைத்தது வைத்தபடி அப்படியே இருந்தது. தட்சாவும் இவன் வரவை ஆவலின்றி எதிர்கொண்டு கடமைக்காகச் சிரித்துவிட்டு தன்பாட்டில் டிவி பார்த்தது. 
 
இவன் முகம் கழுவி உடை மாற்றி வர,தாட்சா எழுந்து சாப்பாடை சூடாக்கவோ என்று கேட்க இவன் ஆம் என்று தலையசைத்தான். தாய் விருந்து சமைக்காவிடாலும் ஒருகறியோ இரண்டோ சுடச்சுடச்  சமைத்து வைத்து உண்பதற்காய்க் கூப்பிடுவார். அந்தச் சுவையே இரண்டாம்தரமும் போட்டு உண்ண ஆவலை ஏற்படுத்தும். இங்கு பணமிருந்து என்ன? தாயின் சமையல் போல் இல்லாவிடாலும் சாதாரணமாகக் கூடச் சமைக்கத் தெரியாத மனைவியை வைத்துக்கொண்டு மாமியார் சமைத்துத் தரும் உணவை  இரண்டு நாளுக்கொருதடவை குளிர்பதனப் பெட்டியில் வைத்து  எடுத்துச் சூடாக்கி உண்ணவே பசி பறந்துபோகும். நல்ல காலம் மதியம் இவன் வேலை செய்யும் அலுவலகத்துக்கு அண்மையில் ஒரு இலங்கைத் தமிழரின் உணவகம் இருந்ததனால் இவன் சமாளிக்கக் கூடியதாக இருந்தது.
 
இங்கே பிறந்து வளர்ந்தபடியால் தட்சாவுக்கு சோறு கறியில் பெரிதாக நாட்டமே இல்லை. சான்விச்சும் பொரித்த உருளைக்கிழங்கும் இறைச்சிப் பொரியல்களும் நினைக்கவே இவனுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. ஆனாலும் நல்ல காலம் இடியப்பம், அப்பம், இட்லி போன்ற எம்மூர் உணவுகள் சிலதும் அவளுக்குப் பிடிததால் பக்கத்தில் இருக்கும் தமிழ் கடையில் அவற்றை வாங்கி உண்டும் அப்பப்ப வெளியே சேர்ந்து சென்று உணவகங்களில் சாப்பிட்டும் தன் ஏமாற்றத்தைத் தீர்த்துக் கொண்டான் பரணி. இப்படியே எத்தனை காலம் தான் ஓட்டமுடியும் என்ற யோசனையும் அவனை அலைக்கழித்தபடியே இருக்க, முடிவே தெரியாதவனாய் வாழ்ந்துகொண்டிருந்தான் அவன்.
 
****************************************************************************************************************************************
 
அன்று சாதாரணமாக் வேலைக்குச் செல்ல வேண்டியவன் சிறிது காச்சல்க் குணமாக இருக்க, போன் செய்து அன்று வரவில்லை என்று சொல்லிவிட்டு, என்னை எழுப்பவேண்டாம். இண்டைக்கு படுத்து நித்திரை கொள்ளப் போறன் என்றுவிட்டு உண்மையிலேயே தூங்கியும் போனான். தற்செயலாகக் கண்விழித்தவன் தட்சா யாருடனோ போனில் கதைத்துக்கொண்டிருப்பதைக் கேட்டதும் தன் காதை அங்குவிட்டபடி கவனித்தான்.
 
இல்லை டாடி. நேற்று ஒன்றும் நடக்கவில்லை. நேற்று முதல் நாள்தான் இரண்டுபேரும் ஒன்றாய் இருந்தது. எனக்கு பர்ணி கிஸ் பண்ணினாலும் எந்த பீலிங்கும் இல்லை டாட். டோன்ட்வொறி டாட். நான் கட்டாயம் சொல்லுவன் என்று கூறிப் போனை வைக்க இவனுக்கு கோபத்தில் உடல் கொதிக்க உடனே எழுந்து யாருடன் கதைத்தீர் என்றான். அப்பாதான் என்றுவிட்டு எந்தவிதக் கூச்சமும் இன்றி அவள் இருக்க எங்கடை பேசனல் விஷயத்தைப்பற்றி அதுவும் உம்மட அப்பாவுக்குச் சொல்லிக்கொண்டு இருந்தீரா. உமக்கு என்ன விசரா என்றான். அம்மாவும் டெய்லி போன் செய்து கேக்கிறவ. நான் சொல்லுறனான் என்றுவிட்டு அதுபற்றிய அவமான உணர்வு எதுவுமற்றபடி அவனைப் பார்த்தாள் தட்சா.
 
உன்ர குடும்பத்துக்கு விசரா?  ஒரு அப்பா பிள்ளையிட்டைக் கதைக்கிற கதையா இது? லூசா நீ  என்று இவன் கோபமாக் கூறியபடி கையை ஓங்க, என்னை நீங்க அடிக்க முடியாது என்று அம்மா சொன்னவ. நாங்க நிறையக் காசு தந்திருக்கிறம் உங்களுக்கு. பொறுங்கோ டாடிக்குச் சொல்லிறன் என்று போனை அவள் எடுக்க, இவனுக்கு வந்த கோபத்தில் கண்மண் தெரியாமல் அத்தனை மூர்க்கமாக அவளை அடித்தான் என்று அவள் உணர்வற்றுக் கிடக்கத்தான் உணர்ந்தான். பத்து நிமிடத்தில் அவள் கண்விழித்தபோது இவன் குற்ற உணர்வுடன் சொறி தட்சா என்றபடி அவளருகே செல்ல, பேயைக்கண்டவள் போல் இவனைப் பார்த்துப் பயந்த தாட்சாவைப் பார்க்கப் பரணிக்குப் பாவமாக இருந்தது.
 
அவள் பயப்படுவது தெரிந்ததும் அவன் மீண்டும் சென்று படுக்கையில் விழ, சிறிது நேரத்தில் வந்துசேர்ந்த தாயும் தந்தையும் இவனை பார்த்துக் கேட்ட கேள்விகள் கொஞ்சமல்ல. இவனும் விடவில்லைத்தான். எல்லாம் உங்களாலத்தான். பிள்ளையோட என்ன கதைக்கிறது எண்டு தெரியாத நீங்கள் எல்லா ஒரு மனிசரா என்று வாக்குவாதம் முற்றி அவர்கள்  தாட்சாவைத் தம்முடன் கூட்டிக்கொண்டு போக இவனால் தடுக்கவே முடியாது போய்விட்டது.
 
"இப்பவே பொலிசுக்குச் சொன்னால் உன்னை உள்ளே போடுவாங்கள். ஆனால் எமக்குத்தான் அது கேவலம் என்று தான் பேசாமல் போறம்" என்று இவனை மிரட்டிவிட்டுத்தான் மாமியார் போனார்.
 
தாட்சாவைக் காரில் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு சென்று அவளுக்குக் கோப்பி ஒன்று போட்டுக் கொடுத்து படுக்க வைத்தபின் தாயார் திலகா கணவனிடம் வந்து அடுத்து என்ன செய்வது என்றபோது " எல்லாம் உம்மால்த்தான். எத்தன தடவை சொன்னனான் தட்சாவுக்குக் கலியாணம் வேண்டாம் எண்டு. அவளின் டொக்ரர் உனக்கு வடிவாத்தானே சொன்னவர். தட்சா சாதாரண ஆட்கள் போல் இருந்தாலும் சில பிரச்சனைகளும் டிக்ஸ்லெக்சியாவும் இருக்கிறதால நீங்கள் எப்பவும் உங்கட கண்காணிப்பில வச்சிருக்கிறதுதான் நல்லது எண்டு. உனக்குப் பேராசை. நல்ல காலம் எக்குத்தப்பா ஏதும் நடந்து போலிசுக்குப் போயிருந்தால் எங்களுக்குத்தான் பிரச்சனை வந்திருக்கும் " என்று திட்டிக்கொண்டே போக, "நான் என்னப்பா செய்ய. கலியாணம் செய்தால் எல்லாம் சரியாயிடும் என்று நினைச்சன்" என்று அழத் தொடங்கும் மனைவியை தொடர்ந்தும் திட்ட மனமின்றி ஏதும் செய்ய வகையற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார் தட்சாவின் தந்தை கண்ணன்.
 
அடுத்தநாள் இவன் போன்செய்தும் யாரும் இவனிடம் கதைக்க முன்வரவில்லை. தட்சா இனி உன்னோட இருக்க விரும்பேல்லை. மரியாதைய வீட்டை விட்டு வெளியே ஒரு மாதத்தில போவிடவேணும். இல்லாட்டால் வீண் பிரச்சனை தான் என்றும் இவனை மிரட்டி இன்றுடன் மூன்று  மாதங்கள் ஓடிவிட்டன. இந்த மூன்று மாதங்களில் அவன் மனம் நன்றாகவே தெளிந்துவிட்டது.
 
அவன் ஒரு முடிவோடு அவர்கள் அனுப்பிய பத்திரத்தில் கையெழுத்திட்டு உறையை ஒட்டியபின்தான் நீண்ட நாட்களின் பின் மனம் முழுதும் ஒரு நிம்மதி பரவுவது போல் இருந்தது.
 
Link to comment
Share on other sites

சுமே உங்கள் எழுத்துநடை நன்றாக உள்ளது. இறந்த கால நினைவுகளையும் நிகழ்காலத்தையும் கலந்து தருவதிலும் ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றீர்கள். முடிவில் கொஞ்சம் அவசரம் தெரிகிறது. அதிகம் எழுதினால் பயலுகள் படிக்க மாட்டாங்கள் என்ற யோசனையா? விறுவிறுப்பாக இருந்ததால் இன்னும் அதிகமாகவே வாசித்திருக்கலாம்.

 - தொடர வாழ்த்துக்கள் -

டிஸ்லெக்ஸியா என்பது பற்றிய கேள்வி இது. தப்பாக நினைக்க வேண்டாம் இவ்வருத்தமானது உங்கள் கதையில் பல கேள்விகளை விடையில்லாமல் உருவாக்கி விட்டது. டிஸ்லெக்ஸியா உள்ளவர்களுக்கு எழுத்துக்கள் இடங்கள் மாறித் தோன்றுவதால் அவர்களால் சொற்களைப் படிக்க முடியாது. ஆனால் அவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்களில்லை, சமுதாயத்தில் உள்ள மற்றவர்களைப் போன்றே இவர்கள் எல்லா விடயங்களிலும் இருப்பார்கள். இப்பதிவை எழுத முன்னர் உறுதிப்படுத்தலிற்காக நெற்றில் தேடியபோது பல ஆச்சரியங்கள். உதாரணத்திற்கு dyslexia உள்ள சில பிரபலங்கள் John Lennon, Pablo Picasso, Bill Gates, Steve Jobs, Agatha Christie, Albert Einstein, Steven Spielberg, Leonardo da Vinci, Erna Solberg (தற்போதைய நோர்வே பிரதமர்) . 

இத்தனை புத்தகங்களை எழுதித்தள்ளிய Agatha Christieக்குமா?
அருமையான பாடல்களை எழுதி உலகையே ஆக்கிரமித்த John Lennonக்குமா?

புரியவே இல்லை.

எப்படி இப்படி என்பதை ஜஸ்டின் போன்ற மருத்துவ அறிவுள்ளவர்கள் வந்து விளக்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஜீவன் சிவா.  டிஸ்லெக்ஸியா என்பது learning difficulty. அதாவது எழுத்துக்கள் மாறிமாறித் தெரியும் அவர்களால் தொடர்ந்து ஒன்றில் கவனம் வைக்க முடியாது. நான் காலையில் இதைப் போடும்போது போட்டபின் தான் திருத்தாததைப் போட்டுவிட்டேன் என்று புரிந்தது. மீண்டும் என் கதையை அழுத்த எனக்குத் திறக்கவில்லை. நிர்வாகத்துக்கு அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டேன்.இப்ப வந்து பார்க்க நான் பதிந்தது இருக்கிறது. ஒன்றைப் போடும்போது அவசரப்படாமல் போடவேண்டும் என்று தெரிகிறது. மன்னிக்கவும்.

இப்ப எங்கே யாழில் கதை கவிதையை ஆட்கள் வாசிப்பது. அது ஒரு கனாக் காலம் ஜீவன் சிவா. மற்றவரின் உற்சாகம் தானே இன்னும் இன்னும் எழுதத் தூண்டுவது. இப்போ பல கள உறவுகள் களைத்துவிட்டார்கள் நான் உட்பட. இந்தக் கதையைப் போடுவோமா விடுவோமா என்று யோசித்துவிட்டுத்தான் போடுவம் என்று போட்டது. எனக்கே இதில் திருப்தி இல்லைத்தான். பார்ப்பம்.

வருகை தந்த அர்ஜுனுக்கும் புங்கைக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஞ்சினியராகப் படித்தாலும் பழைய பஞ்சாங்கமாக இருக்க ஆசைப்படுகின்றார். ஆனால் பண்பாட்டுப் பெருமைக்குள் அவரை ஒளிக்கப்பார்க்கின்றது கதை. 

பெண்ணும், ஆணும் மனப் பொருத்தம் இல்லாமல் சேர்ந்து வாழமுடியாது. காதலித்து மணம் முடித்தாலும், பெற்றோர் பேசி முடித்தாலும் மனப் பொருத்தம் சிலருக்கு வருவதில்லை. 

Dyslexia உள்ளவர்கள் மந்தமானவர்கள் என்ற மாதிரியான ஒரு பார்வை கதையில் இருப்பது போலுள்ளது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை மிகவும் திறமையானவர்களாக உள்ளார்கள். வாசிப்பதிலும், எழுதுவதிலும் சில பிழைகள் விட்டாலும் விவாதிப்பதிலும், கட்டுடைப்பதிலும், பொருளீட்டுவதிலும் வல்லவர்களாக உள்ள ஒரு சிலரை தெரியும்.

Link to comment
Share on other sites

சுமே இது உங்களை பிழை சொல்ல பதிந்த பதிவு இல்லை, உங்கள் பதிவு பிடித்திருந்தது. இவ்வருத்தம் உள்ளவர்கள் அதிகம் வாசிக்காமையால் அவர்களால் சொற்களை சரியாக சரியான இடத்தில் பாவிப்பது பிரச்சனையாகி பலர் குடும்ப வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள். ஆனால் இக்குறைபாடு உள்ளவர்கள் பலர் இந்த உலகையே ஆழுகிறார்கள் பல துறைகளில். 

ஏன்,எப்படி இப்படி - என்ரை மண்டை வெடிக்கும் பதில் தெரியாதவரை. எனது கேள்விக்கான பதிலை இங்குள்ள சில மருத்துவர்களிடம் எதிர்பார்க்கின்றேன். கள உறவுகள் விளக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக நடந்த சம்பவம் போல இருக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அருமையான எழுத்து நடை... உங்களுக்குக் கிடைத்த கொடை!

டிஸ்லெக்சியா என்பது நீங்கள் கூறுவது போன்று விளைவுகளை ஏற்படுத்துமோ என்பதில் எனக்குச் சந்தேகமுண்டு!

ஒரு சமூக எழுத்தாளராக வளரும் நீங்கள், சீரியசான விடயங்களை எழுதும் முன்னர்.. ஒரு சின்ன றிசேர்ச் செய்தால் நல்லது என்று நினைக்கிறேன்!

எனக்கும் இப்படியான வருத்தம் இருக்குமோ என்று உங்கள் கதையை வாசித்த பின்னர் யோசிக்கிறேன்!

இப்போதெல்லாம் பெண்களைப் பார்க்கும் போது.. ஒரு விதமான பயமும், பக்தியும் தான் வருகின்றது!:mellow:

யாழ் களத்தில், படைப்புக்களுக்குக் கருத்திடுதல் குறைந்து வருகின்றது என்று கூறும் அதேவேளை.. உங்கள் கதைகளையும், கவிதைகளையும் வேறு தளங்களில் இடுவதையும் கண்டிருக்கிறேன்!

எனவே..எந்த விதமான கோப தாபமும் பாராது 'யாழ் களத்துக்கு' முன்னுரிமை கொடுங்கள்!

ஏனெனில்.. அது எமது... எம்மை வளர்த்தெடுத்த... ஒரு களம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருத்தங்களை விடுத்து....... வெளிநாட்டிலை பிறந்து வளர்ந்த பொம்புளைப்பிள்ளையள் இஞ்சை பிறந்து வளர்ந்த பெடியங்களை கலியாணம் கட்டுறதுதான் உத்தமம்......:cool:

கதை வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது...வாழ்த்துக்கள்.tw_thumbsup:

Link to comment
Share on other sites

 


இந்த முறை கதை வாய்க்கவில்லை அக்கா, மன்னிக்கவும். கதையின் பல இடங்களில் தொய்வு, கொண்டம் கதை போன்ற பல தேவையில்லாத இடைச்செருகல்கள் சலிப்புத் தருகின்றன, மற்றும் logical flow இல்லை. இலங்கையில் E fac செய்த யாரையும் உங்களுக்கு தெரியாது போல இருக்கிறது, இலங்கையில் கவனமாக செலவழித்தால், எஞ்சினியரிங் முடிக்க 15 லட்சம் தேவையில்லை. மகாபொல  போன்ற விடயங்களும் இருக்கு.. தாட்சாவை லெஸ்பியன் என முடிப்பீர்கள் என நினைத்தேன்.

மற்றவர்கள் போல ஆகா ஓகோ என்று என்னால் கூறி பச்சை குத்தி விட்டுப் போக முடியவில்லை. சில காலமாக Performance audit செய்து கொண்டு  திரிவதால் சட்டம்பி மாதிரி சிந்திக்கிறேனோ தெரியாது.

மற்றும்படி வெளிநாட்டுப் பெண்களுக்கு ஊர் ஆம்பிளையள் சரி வராது. எமது அயலில் இருக்கும் ஒருவர் 80 லட்சம் சீதனம் எண்டு சொல்லி ஒரு சுவிஸ் பெட்டயை முடித்தார்.போன பெட்டை ஒரு போன் கூட போடவில்லை. பெடியன் இப்ப கலியான வீட்டுக் கார் ஓடிக்கொண்டு திரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2015, 20:33:38, ரதி said:
On 24/11/2015, 20:33:38, ரதி said:

உண்மையாக நடந்த சம்பவம் போல இருக்குது

 

உண்மைச் சம்பவம் தான் ரதி

 

23 hours ago, புங்கையூரன் said:

நல்ல அருமையான எழுத்து நடை... உங்களுக்குக் கிடைத்த கொடை!

டிஸ்லெக்சியா என்பது நீங்கள் கூறுவது போன்று விளைவுகளை ஏற்படுத்துமோ என்பதில் எனக்குச் சந்தேகமுண்டு!

ஒரு சமூக எழுத்தாளராக வளரும் நீங்கள், சீரியசான விடயங்களை எழுதும் முன்னர்.. ஒரு சின்ன றிசேர்ச் செய்தால் நல்லது என்று நினைக்கிறேன்!

எனக்கும் இப்படியான வருத்தம் இருக்குமோ என்று உங்கள் கதையை வாசித்த பின்னர் யோசிக்கிறேன்!

இப்போதெல்லாம் பெண்களைப் பார்க்கும் போது.. ஒரு விதமான பயமும், பக்தியும் தான் வருகின்றது!:mellow:

யாழ் களத்தில், படைப்புக்களுக்குக் கருத்திடுதல் குறைந்து வருகின்றது என்று கூறும் அதேவேளை.. உங்கள் கதைகளையும், கவிதைகளையும் வேறு தளங்களில் இடுவதையும் கண்டிருக்கிறேன்!

எனவே..எந்த விதமான கோப தாபமும் பாராது 'யாழ் களத்துக்கு' முன்னுரிமை கொடுங்கள்!

ஏனெனில்.. அது எமது... எம்மை வளர்த்தெடுத்த... ஒரு களம்! 

நீங்கள் நேற்றுக் கருத்து  எழுதாது விடும்போதே உங்கள் மனநிலை எனக்குப் புரிந்ததுதான்.

22 hours ago, குமாரசாமி said:

வருத்தங்களை விடுத்து....... வெளிநாட்டிலை பிறந்து வளர்ந்த பொம்புளைப்பிள்ளையள் இஞ்சை பிறந்து வளர்ந்த பெடியங்களை கலியாணம் கட்டுறதுதான் உத்தமம்......:cool:

கதை வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது...வாழ்த்துக்கள்.tw_thumbsup:

என் பிள்ளைகள் அறுதியாகச் சொல்விட்டார்கள். யேர்மனியில் அல்லது லண்டனில் பிறந்தவர்களைத்தான் திருமணம் செய்வது என்று.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2015, 19:41:51, கிருபன் said:

எஞ்சினியராகப் படித்தாலும் பழைய பஞ்சாங்கமாக இருக்க ஆசைப்படுகின்றார். ஆனால் பண்பாட்டுப் பெருமைக்குள் அவரை ஒளிக்கப்பார்க்கின்றது கதை. 

பெண்ணும், ஆணும் மனப் பொருத்தம் இல்லாமல் சேர்ந்து வாழமுடியாது. காதலித்து மணம் முடித்தாலும், பெற்றோர் பேசி முடித்தாலும் மனப் பொருத்தம் சிலருக்கு வருவதில்லை. 

Dyslexia உள்ளவர்கள் மந்தமானவர்கள் என்ற மாதிரியான ஒரு பார்வை கதையில் இருப்பது போலுள்ளது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை மிகவும் திறமையானவர்களாக உள்ளார்கள். வாசிப்பதிலும், எழுதுவதிலும் சில பிழைகள் விட்டாலும் விவாதிப்பதிலும், கட்டுடைப்பதிலும், பொருளீட்டுவதிலும் வல்லவர்களாக உள்ள ஒரு சிலரை தெரியும்.

நீங்கள் கூறுவதும் ஒரு விதத்தில் சரியாக இருந்தாலும் நாகரீகமானவர் பெற்றோரிடம் கணவனுடன் மகிழ்ந்த தருணங்களை எல்லாம்  பற்றிக் கூறுவார்களா என்ன ???

20 hours ago, Thumpalayan said:

 


இந்த முறை கதை வாய்க்கவில்லை அக்கா, மன்னிக்கவும். கதையின் பல இடங்களில் தொய்வு, கொண்டம் கதை போன்ற பல தேவையில்லாத இடைச்செருகல்கள் சலிப்புத் தருகின்றன, மற்றும் logical flow இல்லை. இலங்கையில் E fac செய்த யாரையும் உங்களுக்கு தெரியாது போல இருக்கிறது, இலங்கையில் கவனமாக செலவழித்தால், எஞ்சினியரிங் முடிக்க 15 லட்சம் தேவையில்லை. மகாபொல  போன்ற விடயங்களும் இருக்கு.. தாட்சாவை லெஸ்பியன் என முடிப்பீர்கள் என நினைத்தேன்.

மற்றவர்கள் போல ஆகா ஓகோ என்று என்னால் கூறி பச்சை குத்தி விட்டுப் போக முடியவில்லை. சில காலமாக Performance audit செய்து கொண்டு  திரிவதால் சட்டம்பி மாதிரி சிந்திக்கிறேனோ தெரியாது.

மற்றும்படி வெளிநாட்டுப் பெண்களுக்கு ஊர் ஆம்பிளையள் சரி வராது. எமது அயலில் இருக்கும் ஒருவர் 80 லட்சம் சீதனம் எண்டு சொல்லி ஒரு சுவிஸ் பெட்டயை முடித்தார்.போன பெட்டை ஒரு போன் கூட போடவில்லை. பெடியன் இப்ப கலியான வீட்டுக் கார் ஓடிக்கொண்டு திரியுது.

நீங்கள் கூறியது சரிதான். இந்தக் கதை நானே என் தலையில் மண் போட்டது என்று ஒருவர் கூறினார். உண்மைதான். இந்தக் கதையை இரு வாரங்களுக்கு முன் எழுதினேன். சரியாக வரவில்லை என்று மனம் சொன்னாலும் அதைத் திருத்தும் மனநிலை வரவே இல்லை. வீணாக அதை வைத்திருக்காமல் போடுவோம் என்றுஎண்ணிப் போட்டதுதான். வெளிநாட்டில் பிறந்த பெண்ணோ ஆணோ வெளிநாட்டில் பிறந்தவர்களை மணம் முடிப்பதுதான் சரியானது. 

 

 

 

 

 

 

வருகை தந்து பச்சை தந்த அர்ஜுன் , ஜீவன்சிவா, மீனா, சுவைப்பிரியன், மூன்றாம் கண், நந்தன் , ரதி, பகலவன், நவீனன், புங்கை ஆகிய உறவுகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றிகள்....ஊரில இப்படியான‌ வருத்தங்கள் இருந்தால் அவன் விசரன்,அவள் விசரி ...அல்லது பனியன் என்று சொல்லுவம்....வெளிநாடு வந்த பின்புதான் விளங்குது இதெல்லாம் வருத்தங்கள் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் பிள்ளைகள் அறுதியாகச் சொல்விட்டார்கள். யேர்மனியில் அல்லது லண்டனில் பிறந்தவர்களைத்தான் திருமணம் செய்வது என்று.:rolleyes:

கனடாப்பக்கம் எட்டியும் பார்க்காதேங்கோ........அமெரிக்கா பக்கம் நினைச்சும் பாராதேங்கோ catrun_e0_zpszfzgcarf.gif
lol2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுமே அக்கா,
கதை / சம்பவங்களை நன்றாகவே எழுதி உள்ளீர்கள்.
இன்று புலம் பெயர்ந்த எம்மவர் குழந்தைகள் மத்தியில் இது போன்ற மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட சில நிலைப்பாடுகள் (நோய் என்று சொல்ல மனம் வருகுதில்லை) கூடிக் காணப்படுகின்றது.

  • Autism
  • ADD
  • ADHD
  • Asperger Syndrome
  • OCD
  • Dyslexia
  • Developmental Disability
  • Hypermedia
  • Down Syndrome 

இவை தொடர்பான சரியான புரிதல் பெற்றாரிடமோ அல்லது தமிழ் சமூகத்திடமோ இன்னுமே பெரிதாக ஏற்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டு.
ஒரு சில அமைப்புகள் இப்போது தான் இங்கு கனடாவில் இது குறித்த தெளிவோடு சில செயல் பாடுகளை ஆரம்பித்துள்ளார்கள். பெற்றார்களும் தமது குழந்தைகளில் காணும் சில (இனம் புரியாத ) மாற்றங்களை பெரிதாக யாருடனும் கதைப்தர்க்கும் விரும்புவதில்லை.
இது குறித்து நேரமிருந்தால் இன்னும் ஒரு திரியில் விரிவாக எழுதுகின்றேன்.

நாம் எல்லோருமே எதோ ஒருவகையில் இவற்றால் சிறிதளவேனும் பீடிக்கப்பட்டவர்கள் தான்.
என்ன அளவில் இந்த (spectrum)  இருக்கின்றது என்பதில் தான் மாற்றங்கள். சாதாரணமான எம்மால் சமூகத்தில் எமது குறைகளை மறைத்து, வெளிக்காட்டாமல், சகஜமாக வாழமுடிகிறது. இந்த (spectrum) சிறிது கூடியவர்கள், சமூகத்திலிருந்து சிறிது தள்ளி அவதானி க்கப்படகூடியவர்கலாக இருப்பார்கள். அவர்களின் செய்கை, பேச்சு, அறிவு சார் தன்மைகள் அவர்களின் நிலைப்பாடை காட்டி நிற்கும். 
உதாரணம் இந்த கதையில் வரும் "தாட்ஸா" ஒரு சிறு குழந்தையின் மன நிலைப்பாடுடன் இருக்கிறார்.
அது அவரின் தவறல்ல, அவருக்கு "மனைவி" என்னும் அந்தஸ்து அவர் அறிவுக்கு எட்டிய தோன்றல்ல.
மனைவியாக எது செய்ய வேண்டும், கணவனின், குழந்தைகளின் எதிர்பார்ப்பு என்ன, சமூக எதிர் பார்ப்பு என்ன என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியாது. சொல்லியும் புரிய வைப்பதும் கடினம். அனால் முடியும்.
கதையின் நாயகன் அவளுக்கு தாயாய், கணவனாய் நிதானம் தவறாமல் அன்போடு, அரவணைப்போடு இருந்தால், சொல்லிக்கொடுத்தால் மாற்றங்கள் வரலாம். வராமலும் போகலாம்.
ஆனால் கதையின் நாயகன் தன் வாழ்வின் சுகங்கள், காதல் உணர்வுகள், கலவி, நெருக்கம் இதை எல்லாம் இழந்தவனாகவே வாழ்கை ஓட்ட வேண்டும்.
இருவருமே பாவம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இப்படியானவர்களை தங்க வைத்து ஓரளவேனும் குணப்படுத்தி விடும் நிலையங்கள் உண்டு. மேலும் பெற்றோர் இவ் விடயத்தில் அன்பு காட்டுகின்றோம் என்று வீட்டிலேயே வைத்திருந்து எல்லாவற்றையும் சொதப்பி விடுகின்றார்கள்.  மிகவும் பொறுமையாய் இவர்களிடம் பழகி எடுத்துச் சொன்னால் சரியான வழிக்கு வருவினம்...!

பகிர்வுக்கு நன்றி சகோதரி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2015, 14:29:46, குமாரசாமி said:

கனடாப்பக்கம் எட்டியும் பார்க்காதேங்கோ........அமெரிக்கா பக்கம் நினைச்சும் பாராதேங்கோ catrun_e0_zpszfzgcarf.gif
lol2.gif

tw_blush:tw_blush:

On 26/11/2015, 18:28:11, suvy said:

இங்கு இப்படியானவர்களை தங்க வைத்து ஓரளவேனும் குணப்படுத்தி விடும் நிலையங்கள் உண்டு. மேலும் பெற்றோர் இவ் விடயத்தில் அன்பு காட்டுகின்றோம் என்று வீட்டிலேயே வைத்திருந்து எல்லாவற்றையும் சொதப்பி விடுகின்றார்கள்.  மிகவும் பொறுமையாய் இவர்களிடம் பழகி எடுத்துச் சொன்னால் சரியான வழிக்கு வருவினம்...!

பகிர்வுக்கு நன்றி சகோதரி...!

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்

On 26/11/2015, 16:02:40, Sasi_varnam said:

வணக்கம் சுமே அக்கா,
கதை / சம்பவங்களை நன்றாகவே எழுதி உள்ளீர்கள்.
இன்று புலம் பெயர்ந்த எம்மவர் குழந்தைகள் மத்தியில் இது போன்ற மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட சில நிலைப்பாடுகள் (நோய் என்று சொல்ல மனம் வருகுதில்லை) கூடிக் காணப்படுகின்றது.

  • Autism
  • ADD
  • ADHD
  • Asperger Syndrome
  • OCD
  • Dyslexia
  • Developmental Disability
  • Hypermedia
  • Down Syndrome 

இவை தொடர்பான சரியான புரிதல் பெற்றாரிடமோ அல்லது தமிழ் சமூகத்திடமோ இன்னுமே பெரிதாக ஏற்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டு.
ஒரு சில அமைப்புகள் இப்போது தான் இங்கு கனடாவில் இது குறித்த தெளிவோடு சில செயல் பாடுகளை ஆரம்பித்துள்ளார்கள். பெற்றார்களும் தமது குழந்தைகளில் காணும் சில (இனம் புரியாத ) மாற்றங்களை பெரிதாக யாருடனும் கதைப்தர்க்கும் விரும்புவதில்லை.
இது குறித்து நேரமிருந்தால் இன்னும் ஒரு திரியில் விரிவாக எழுதுகின்றேன்.

நாம் எல்லோருமே எதோ ஒருவகையில் இவற்றால் சிறிதளவேனும் பீடிக்கப்பட்டவர்கள் தான்.
என்ன அளவில் இந்த (spectrum)  இருக்கின்றது என்பதில் தான் மாற்றங்கள். சாதாரணமான எம்மால் சமூகத்தில் எமது குறைகளை மறைத்து, வெளிக்காட்டாமல், சகஜமாக வாழமுடிகிறது. இந்த (spectrum) சிறிது கூடியவர்கள், சமூகத்திலிருந்து சிறிது தள்ளி அவதானி க்கப்படகூடியவர்கலாக இருப்பார்கள். அவர்களின் செய்கை, பேச்சு, அறிவு சார் தன்மைகள் அவர்களின் நிலைப்பாடை காட்டி நிற்கும். 
உதாரணம் இந்த கதையில் வரும் "தாட்ஸா" ஒரு சிறு குழந்தையின் மன நிலைப்பாடுடன் இருக்கிறார்.
அது அவரின் தவறல்ல, அவருக்கு "மனைவி" என்னும் அந்தஸ்து அவர் அறிவுக்கு எட்டிய தோன்றல்ல.
மனைவியாக எது செய்ய வேண்டும், கணவனின், குழந்தைகளின் எதிர்பார்ப்பு என்ன, சமூக எதிர் பார்ப்பு என்ன என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியாது. சொல்லியும் புரிய வைப்பதும் கடினம். அனால் முடியும்.
கதையின் நாயகன் அவளுக்கு தாயாய், கணவனாய் நிதானம் தவறாமல் அன்போடு, அரவணைப்போடு இருந்தால், சொல்லிக்கொடுத்தால் மாற்றங்கள் வரலாம். வராமலும் போகலாம்.
ஆனால் கதையின் நாயகன் தன் வாழ்வின் சுகங்கள், காதல் உணர்வுகள், கலவி, நெருக்கம் இதை எல்லாம் இழந்தவனாகவே வாழ்கை ஓட்ட வேண்டும்.
இருவருமே பாவம்!!!

 கருத்து நன்றி  சசி. நீங்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் பற்றி விரிவாகத் தனித் திரி திறந்து எழுதினால் அனைவருக்கும் பயனாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.