Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Tanjore_doll_1.jpg

 

மழை வரப் போவதுபோல் மேகங்கள் எல்லாம் கருங் குன்றுகளாகி ஒன்றுடனொன்று மோதுவதுபோல் செல்வதும் பின்னர் விலகுவதுமான விண் விளையாட்டைப் பரணி யன்னலினூடே பாத்துக்கொண்டே நின்றான். இப்ப சில வாரங்களாக இப்படித்தான் கடும் புழுக்கம் இவன் மனதிலும் வெளியிலும்.
 
என் மனதைப் போலத்தான் மேகங்களுமோ??? இன்னும் முடிவை எடுக்க முடியாது அலைந்துகொண்டு திரிகின்றன. குளிர் காற்று வீசுகிறது. கரு மேகங்களும் தெரிகின்றன. ஆனால் இன்னும் ஒருசிறு மழைத்துளி கூட விழாது ஏன் எல்லோரையும் எதிர்பார்த்தே காத்திருக்க வைக்கின்றது என மனதில் எண்ணிக்கொண்டே, என்னால் கூட ஒரு மாதமாகியும் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லையே என்று சமாதானமும் சொல்லிக்கொண்டான்.
 
................................................................................
 
அவர்கள் லண்டனில இருந்து வந்திருக்கினம். இரண்டே இரண்டு பெட்டையளாம். மூத்தது ஒரு கோடீஸ்வரனைக் கலியாணம் செய்து வசதியா இருக்கினமாம். இது இரண்டாவது பெட்டை. லண்டனில பெரிய வீடும் இங்கை முப்பது லட்சம் காசும் தரீனமாம். நல்ல சம்பந்தம். பொருத்தமும் எண்பது வீதப் பொருத்தம். அம்மா சொல்லிக்கொண்டே போக இவன் இடை நிறுத்தி "ஏனம்மா மூத்த மகளுக்குக் கோடீஸ்வரனைக் கட்டிக் குடுத்தவை. ஏன் இரண்டாவதுக்கு என்னைக் கட்ட விருப்பப் படினம்" என்று கேட்டவுடன் தாய்க்குக்கூட ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
 
"அதைப்பற்றி எங்களுக்கு என்ன தம்பி. இண்டைக்குப் பின்னேரம் இங்க அவை வரீனம். நீ எங்கையாலும் போனாலும் எண்டுதான் சொல்லுறன். எதுக்கும் அவை வந்து போகட்டும் அப்பன் பிறகு மிச்சத்தைக் கதைப்பம்" என்று தாய் அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மிகுதிக் காரியங்களைச் செய்யக் கிளம்ப, சரி வரட்டும் பார்ப்பம் என்று நினைத்தவுடனேயே ஆண் பார்க்க வருகிறார்கள் என்று மனதில் எழுந்த எண்ணம் கூச்சப்பட வைத்தது.
 
அவன் கடந்த ஆண்டுதான் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியுள்ள பொறியியலாளர். ஒருவாறு கடனை உடனை வாங்கி அம்மா படிப்பிச்சு முடிச்சிட்டா. அதுக்காக அம்மாவை எதிர்த்துக் கதைக்கப் பயந்து பேசாமல் இருக்கிறதோ என்று மனம் எதிர்த்தாலும், உண்மையில் அம்மா சொல்வதை எப்பதான் எதிர்த்துள்ளான் வாழ்க்கையில் இப்ப மட்டும் எதிர்க்க என வகையற்றுத் தவித்தது மனம்.
 
எதிர்க்க முடியாது என்று இல்லை. இவனின் பன்னிரண்டாவது வயதில் தந்தை விபத்து ஒன்றில் இறந்துபோக, அவனையும் தங்கையையும் எந்தக் குறையும் இன்றி ஒரு பட்டம் பெறுமளவு வளர்த்து விட்டதற்கு கைமாறு இதைவிட வேறென்ன செய்யமுடியும் என்று நினைத்து மனதைச் சமாதானம் செய்து கொண்டான்.
 
>>>>>>>>>>>........................................................
 
மாலையில் நான்கு மணிக்கு அவர்கள் பெரிய பென்ஸ் காரில் வந்து இறங்க இவனுக்கு வாங்கோ என்று வெளியே போய்க் கூப்பிட கூச்சமாக இருந்ததில் அம்மா என்று தாய்க்கு அவர்கள் வருவதைத் தெரியப்படுத்திவிட்டு என்ன செய்வது என்று தெரியாது யன்னலூடே பார்த்தபடிவெளியே நின்றான்.
 
தாய் ஓடாத குறையாகச் சென்று அவர்களை வரவேற்க, முதலில் பின் கதவைத் திறந்துகொண்டு ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி இறங்க அவரைத் தொடர்ந்து ஒரு சின்னப் பெண்ணும் இன்னொரு நாற்பதுக்குள் வயதுள்ள பெண்ணும் இறங்க, மறுபக்கத்திலிருந்து இரண்டு ஆண்கள் இறங்கினர்.
 
ஒருவரைப் பார்த்ததுமே அவர்தான் பெண்ணின் லண்டன் அப்பா என அவரின் ஆடையிலும் பளபளப்பிலும் இவன் ஊகித்துக்கொண்டான். பெண்கள் மூவருமே தலை முடியை ஓட்ட வெட்டியிருந்தனர். வயது கூடிய பெண் தலைக்கு மண்ணிறம் அடித்திருந்தது பார்க்க அவனுக்கு எதோ போல் இருந்தது.
 
எல்லோரும் உள்ளே வந்ததும் அவன் வேறு வழியின்றி வாங்கோ இருங்கோ என்று சொல்லிவிட்டு நின்றான். இரண்டு ஆண்களும் இவனுக்குக் கிட்ட வர இவனுக்கு ஒரே குழப்பம் ஒருநொடி. ஆனால் நீட்டிய அவர்களின் கையை கண்டதும் அவனின் குழப்பம் மறைந்து அவனும் கைகுலுக்கிக் கொண்டான். அவர்களின் கைகுலுக்கலில் கை இலேசாக நோவெடுத்தது.
 
முதலில் கை குலுக்கியவர், கமோன் தட்சா என்று கண்ணைக் காட்ட அந்தச் சின்னப் பெண் எழுந்து வந்து இவனுக்கு முன்னால் கை நீட்டியது. இவன் வேறு வழியின்றிக் கை குலுக்கிவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, அம்மா  அதை விளங்கிக் கொண்டு பரணி நீயும் இரு என்று சொல்ல, அவன் நுனிக் கதிரையில் அமர்ந்தான். 
 
அந்தப் பெண் இவனையே குறுகுறுவெனப் பார்த்தபடி இருக்க, இவனும் துணிவாய் நிமிர்ந்து பார்த்தான். நல்ல வெள்ளை தான். ஆனாலும் அழகி என்று சொல்ல முடியாது. நெற்றியில் பொட்டுமின்றித் தலை முடியையும் ஓட்ட வெட்டி, ஒரு ஆண் தனம்  இருந்தது அப்பெண்ணிடம். ஒரு அழகிய பெண் தான் தன் மனைவியாக வரவேண்டும் என்று அவன் எப்போதுமே எண்ணியதுமில்லை. ஆயினும் தன் மனைவி இவளா என்று எண்ணவே,  இல்லை என்று அவன் மனம் அழுத்திக் கூறியது.
 
பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது இவனை விரும்புவதாகக் கூறிய நிசா கண் முன் வந்து சிரிப்பதுபோல் இருந்தது. தாயின் விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்வதில்லை என்ற கட்டுப்பாடு கொண்டதால் அவன் யாரையும் தன் மனதில் எண்ணாமல் எண்ணியவரையும் சுலபமாக விலத்தி வரமுடிந்தது. ஆனால் என் விதி இப்படியாகி விட்டதே என மனதில் எழுந்த பச்சாதாபத்தை ஓரம் தள்ளியபடி அவர்கள் கதைப்பதில் தன் மனதைப் பதித்தான்.
 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
 
பெண்ணின் தாயார் தம்பட்டம் அடிப்பதைப் பார்க்க எரிச்சலாக வந்தாலும் அடக்கிக்கொண்டு இவர்கள் யார் என்று மற்ற இருவரையும் பார்த்துக் கேட்டான். இது என் அக்காவின் மகளும் கணவரும். இரண்டு பேருமே டொக்ரேர்ஸ் என்று ஆங்கிலத்தில் கூற, அம்மாவுக்கு ஆங்கிலம் விளங்காது என்றுவிட்டு இவையும் லண்டனிலை இருக்கினமா என்றான் பரணி. இவை இங்க கொழும்பில்தான் வேலை செய்யினம். இங்கதான் இருக்கிறது. வருசத்தில ஒருமாதம் அங்க ஹோலிடேக்கு வாறவை என்று கூறிவிட்டு மகளைப் பார்த்து தட்சா இவரைப் பிடிச்சிருக்கோ என்று எல்லார் முன்னாலும் கேட்டார்அந்தத் தாய்.
 
இவனுக்குத் தன்னையும் அதேபோல் கேட்டாலும் என்ற பயம் எழ, என்ன குடிக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு உடனே எழுந்தான். டீ ஒன்றும் வேண்டாம். ஏதாவது கூல் ட்ரிங்க்ஸ் தாங்கோ என்று தந்தை கூற, தம்பி நீ இரு நான் கொண்டு வாறன் என்று தாயார் எழமுயல, அம்மா நீங்கள் இருந்து கதையுங்கோ நான் கொண்டுவாறன் என்றுவிட்டு குசினிக்குள் சென்றபின் தான் இவனுக்கு நின்மதி வந்தது. 
 
அங்கு சென்ற பின்னும் காது வெளியே என்ன கதைக்கிறார்கள் என்பதிலேயே நிக்க, அவர்களுக்கும் மகளிடம் அப்படிக் கேட்டதால்த்தான் பெடியன் எழுந்து சென்றுவிட்டான் என்று புரிந்ததால் மேற்கொண்டு அதுபற்றிக் கதைக்காமல் பொதுவாகக் கதைக்கவாரம்பிக்க, இவனும் மனதை இலகுவாக்கியபடி கடையில் வாங்கிய பற்றிசையும் வடையையும் எடுத்துக்கொண்டு போய்த் தாயிடம் கொடுத்துவிட்டு மீண்டும் வந்து ஊற்றி வைத்த நெக்டோச் சோடாவை கிளாசில் ஊற்றி தாய் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த தட்டில் வைத்துக் கொண்டுபோய் மேசையில் வைத்துவிட்டு அமர்ந்தான். 
 
****************************************
 
இவன் மனம் இன்னுமே அமைதியாகவில்லை. பணம் கொட்டிக் கிடந்தால் எதுவும் கதைக்கலாமோ ?? நாங்களா அவையிட்டை பெண் கேட்டு ஓடினோம். கஷ்டப் பட்டனாங்கள் என்று தெரிந்தும் இன்சினியர் எண்டதும் பல்லைக் காட்டிக் கொண்டு வந்தது அவர்கள். சீதனம் தந்தாப்போல் அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு ஒரு ஒண்டும் தெரியாத பெண்ணுக்கு புருஷன் வேலை பார்த்ததும் இல்லாமல் உணர்வுகளையும் எல்லாம் அடக்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்று எப்பிடி எதிர் பார்ப்பார்கள். எல்லாம் பணக் கொழுப்பு. நினைக்க நினைக்க பரணியின் மனதில் கொதிநிலை கூடிக்கொண்டு சென்றதேயன்றிக் குறையவில்லை.
 
இனி அம்மாவுக்காகவோ ஆருக்காகவோ பார்க்க முடியாது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுதானே என மனம் சொன்னது. அம்மாவுக்கு அவன் முடிவாகச் சொல்லிவிட்டான். இனியும் நான் தட்சாவுடன் சேர்ந்து வாழ முடியாது என்று. தாய் இரண்டு மூன்றுதரம் அழுது ஆர்பாட்டம் செய்து இவனை மசியவைக்கப் பார்த்தாலும் இவன் கடைசியில் தன் வெக்கத்தை விட்டு நடந்தவற்றைத் தாயாரிடம் சொன்னதன் பின்னர் தாய் எதுவும் கதைக்கவே இல்லை.
 
அவர்கள் கொடுத்த சீதனம் பதினைந்து இலட்சத்தில் பட்ட கடன்கள் அடைத்ததுபோக  தங்கைக்குச் சீதனம் கொடுக்க என்று பத்துலட்சம் வங்கியில் வட்டி போட்டபடி இருக்கிறது. அதை எடுத்து அவர்கள் மூஞ்சியில் தூக்கி எறிவோம் என்றால் "நீ அந்தப் பயித்தியத்தோட வாழ்ந்ததுக்கு அதுசரியாப் போச்சு. அவை கேட்டாலும் அந்தக் காசைக் குடுக்கிறேல்லை" என்று தாயார் கறாராகக் கூறிவிட்டார். அவன் மனமும் கொஞ்ச நாட்கள் கொடுப்போமா விடுவோமா என்று இரு பக்கமும் ஆடியபடி இருந்தது . இப்ப கொடுப்பதில்லை என்று அவனும் முடிவுக்கு வந்துவிட்டான். 
 
இன்னும் அவர்கள் மகளின் பெயரில் வாங்கிய வீட்டிலேயே தங்கியிருக்கிறான். தாய் கூறியது போல் தட்சா பைத்தியம் எல்லாம் இல்லைத்தான் எனினும் அவன் எத்தனையைச் சமாளித்து அவளுடன் வாழ்க்கையைக் கொண்டு போனான். சோறுகறி சமைப்பது எப்படி என்று தெரியாது, இடியப்பம் புட்டுக் கூட ......தமிழர்களின் உணவே சமைக்கத் தெரியாது அவளுக்கு. எத்தனை நாட்களுக்குத்தான் கடையில் எடுத்து உண்பது??
 
அவனாவது லண்டன் வந்து தட்டுத்தடுமாறி இறைச்சிக்கறி வைக்கப் பழகிக் கொண்டான். தட்சாவுக்கோ சொல்லிக் கொடுத்தாலும் வர  மறுத்தது. சரி தன் விதி என்று மனதைத் தேத்திக் கொண்டாலும் கடைசியாக அவளுடன் நடந்த வாக்குவாதம் நினைவில் வந்து இரக்கம் என்பதையே அவன் மனதிலிருந்து தூக்கிப் போட, இன்னும் தன் மனநிலையைப் பாதித்துக்கொண்டிருக்கும் அவள் பேச்சுக்களே மீண்டும் மீண்டும் நினைவுகளை எல்லாம் வளைத்துப் போட்டது.
 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
 
திருமணப் பேச்சு முற்றாகி எழுத்தும் இலங்கையில் எழுதிவிட்டு அவர்கள் லண்டன் சென்று ஆறு மாதங்களிலேயே இவனுக்கு விசாவும் கிடைத்தது. இவனை உடனே அங்கு வரும்படி தட்சாவின் பெற்றோர் அழைக்க, பரணி பிடிவாதமாக இலங்கையில் தான் கலியாணவீடு செய்யவேண்டும் என்று முடிவாகக் கூறிவிட்டான். தாயும் தங்கையும் பார்க்காது என்ன கலியாணம் என்று ஒரு பிடிவாதம். அவர்களும் வேறு வழியின்றி அங்கு போய்க் காசை அள்ளி எறிந்து மிக ஆடம்பரமாக திருமணத்தை நடத்தினர். தாய்க்குத் தங்கைக்குக் கூட அவர்களே சேலைகள் எடுத்து, கூறைச் சேலை கூட இவர்களை எடுக்க விடவில்லை. தாயோ பரணியோ அது பற்றிக் கவலை கொள்ளவுமில்லை.
 
திருமணம் நடந்த அடுத்த நாளே அவர்கள் எல்லோருடனும் இவனும் லண்டன் வந்துவிட்டான். மருமகள் தன் வீட்டில் நிக்கவில்லையே என்னும் கவலை பரணியின் தாய்க்கு இருந்தாலும், உதைப் பெரிசு படுத்தக் கூடாது என்று ஒன்றும் கூறவில்லை.
 
எல்லாரும் போல லண்டனும் அவனைப் பிரமிக்க வைத்து மனதை ஒருசஞ்சரிப்புக்கு ஆட்படுத்தியது. வந்த அடுத்த நாளே இருவரையும் தட்சாவுக்கு வாங்கிய வீட்டில் கொண்டுபோய் விட்டு விட்ட பின்னர் தான் அவனுக்கு தட்சாவுடன் தனிய இருக்கவே சந்தர்ப்பம் கிடைத்தது.
 
தனிமை அவனுக்குக் குறுகுறுப்பை ஏற்படுத்த அவளுக்குப் பக்கத்தில் போய் அமர்ந்து தட்சா என்றான் ஆசையுடன். "வெயிட் பர்ணி ப்ரோக்ராம் முடியட்டும்" என்றுவிட்டு அவள் தன் பாட்டுக்கு சிறுவர்களின் நிகழ்வொன்றைப் பார்த்துக்கொண்டு இருக்க இவன் வேறு வழியின்றி மேசையில் கிடந்த மகசின் ஒன்றைப் புரட்டியபடி அமர்ந்தான். அப்படியே கதிரையில் சாய்ந்து தூங்கிவிட்டவன் கண் விழித்தபோது அவள் சான்விச் ஒன்றை உண்டுகொண்டிருந்தாள்.
 
என்ன நீர் என்னை விட்டுவிட்டுச் சாப்பிடுகிறீர். எழுப்பி இருக்கலாமே என்று இவன் ஆதங்கத்துடன் சொல்ல, நான் அதை யோசிக்கவில்லை என்று கூறிவிட்டு மீண்டும் தொலைக்காட்சியில் முகம் பதிக்க ஏற்பட்ட எரிச்சலை அடக்கியபடி இண்டைக்கு வெளியே போய் இரண்டுபேரும் சாப்பிடலாம் என்று நினைத்தேன் என்றான் இவன். நீங்களும் இப்ப சான்விச் சாப்பிடுங்க. இரவு போகலாம் என்றுவிட்டு அதுபற்றி வேறெதுவும் கதைக்காது சாப்பிடுபவளை எதுவும் சொல்ல முடியாது தானே எழுந்து சென்று பிறிச்சில் இருந்த ஒரு பாணைக் கொண்டுவந்து அவளுக்கு அருகிலிருந்து உண்ண ஆரம்பித்தான். அவனுக்கு அரை வயிறுதான் நிரம்ப மீண்டும் எழுந்து பிரிச்சைத் திறந்து பார்த்தவன், அது காலியாக இருக்கவே எரிச்சலுடன் அடித்துச் சாற்றிவிட்டு வந்து அமர்ந்தான். வீட்டில் அம்மா கலையில் மட்டும் தான் பாண் தருவது. அதுவும் அந்த அரைத்த சம்பலோ அல்லது இடித்த சம்பலுடன் சாப்பிடும்போது கால்றாத்தல் பாணுடனேயே வயிறு நிறைந்துவிடுமே.
 
இத்தனை பணம் இருந்து என்ன. இவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லையே என சினம் கூடியது. நானும் அம்மாவிடம் வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டுமோ என்று முதல்முறையாக அவனுக்குத் தன்மேல் கோபம் எழுந்தது. மாமியார்க்காரி ஒரு வாரமாவது தம்முடன் எங்களை வைத்திருக்கலாம் என்று எழுந்த கோபத்தில் தட்சா எனக்குப் பசிக்குது வாரும் ஏதாவது வாங்கிக் கொண்டுவந்து சமைப்பம் என்றவன், அவளின் கையைப் பிடித்து கதிரையிலிருந்து அவளை எழுப்பினான். அவள் உடை மற்ற அறைக்குள் செல்ல சிறுநீர் கழிக்கச் சென்றவன் வெளியே  வரும்போது தட்சா யாருடனோ போனில் கதைத்துக்கொண்டிருந்தாள்.
இந்தாங்க மம்மி என்றுவிட்டு இவனிடம் போனைக் கொடுத்தவள், மீண்டும் இருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தாள். 
 
பரணி, அங்க வெட்டிங் நடந்ததால இங்க பிரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு நெக்ஸ்ட் சனி ரிசெப்சன் வச்சிருக்கு. அதால நீங்கள் வெளியில பெரிசா திரியாமல் இருக்கிறது பெட்டர். நான் ஒரு மணித்தியாலத்தில பூட் கொண்டு வாறன் என்று மாமியார் ஆங்கிலமும் தமிழும் கலந்து சொல்ல இவனுக்கு பசி குறைந்துவிட்டாற்போல் உணர்வு ஏற்பட, சரி என்றுவிட்டு அவளுக்கு பக்கத்தில் அமர்ந்தான். அவளுக்கு அவனிடம் எந்த  ஈர்ப்பும் ஏற்படாதது அவனுக்கு வியப்பையும் ஒருவித ஏமாற்றத்தையும் கூட அளித்தது. அவளின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுப்போமா என்று எண்ணியவன் அவளைப் பயப்படுத்தக் கூடாது என்று எண்ணியவனாய் அவள் கைகளுடன் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு அவளைப் பார்த்தான். அவளோ எந்தவித உணர்வும் அற்றவளாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள்.
 
*************************************************************************************************************************************
 
எல்லோரையும் போல அவனும் எதிர்பார்ப்புடன் இரவுக்காகக் காத்திருக்க, தனது அறையினுள் சென்று ஆடை மாற்றிக்கொண்டு வந்தவள் கையில் ஒரு சிறிய பெட்டியை எடுத்து நீட்டினாள். இவன் பெட்டியை வாங்காது திடுமென அவளை அனைத்துத் திக்குமுக்காட வைத்தபோதும் அவள் பெரிதாக உணர்ச்சிவசப்படாது மம்மி பெட்டியை குடுக்கச் சொன்னவ என்றபோது உச்சத்துக்குச் சென்றுகொண்டிருந்த அவன் உணர்வுகள் தடைப்பட்டுக் கீழே விழுந்தன. அதன்பின் அதை வாங்கிப் பார்த்தவனுக்கு கோபமும் எரிச்சலும் ஒன்றாய் எழுந்தன. மம்மி தந்துவிட்டவவா என்றபடி பெட்டியைப் பார்த்தவனுக்கு "கொண்டம்" என்று எழுதியிருந்ததைப் பார்த்தவன் புரிந்ததும் உம்மட மம்மிக்கு விசரா என்று அதைத் தூர ஏறிந்தான். சின்னப்பிள்ளைபோல் அதை ஓடிப்போய் எடுத்துவந்த தாட்சா இதை கட்டாயம் யூஸ் பண்ணட்டுமாம் மம்மி என்றவள், அக்கா கூட கோல்சேல் கடையில் பெரிய பண்டல் வாங்கி வச்சிருக்கிறா. நெக்ஸ்ட் டைம் அவவிட்டை இது ஓகே என்றால் அவவே எமக்கும் வாங்கித்தருவா என்றவளை என்ன செய்வது என்று தெரியாமல் மனக் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு நின்றான் பரணி.
 
*****************************************************************************************************************************************
 
ஒருவாறு அவன் லண்டன் வந்து ஆறுமாதங்கள் ஆகிவிட்டது. நல்ல வேலையும் சம்பளமும் கொம்பனிக் காருமாக இருந்தாலும் தட்சாவின் போக்கும் குணமும் செயல்களும் அவனுக்குப் பெரும் சவாலாகவே இருந்தன. காசுக்காக அம்மா என்னை விற்க நான் அம்மாவுக்காக என்னை விற்றுவிட்டேன் என்று மனம் ஓலமிடத்தான் செய்தது. உண்மையைச் சொல்லு அம்மாவுக்காக மட்டும் தானா நீ இந்தக் கலியாணத்துக்குச் சம்மதித்தது?? லண்டன் போகும் உன் ஆசையாலும் தானே என மனம் இடித்துரைத்ததை ஏற்கமறுத்த மனதை வலுக்கட்டாயமாக ஏமாற்றியபடி  கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். வீடு வைத்தது வைத்தபடி அப்படியே இருந்தது. தட்சாவும் இவன் வரவை ஆவலின்றி எதிர்கொண்டு கடமைக்காகச் சிரித்துவிட்டு தன்பாட்டில் டிவி பார்த்தது. 
 
இவன் முகம் கழுவி உடை மாற்றி வர,தாட்சா எழுந்து சாப்பாடை சூடாக்கவோ என்று கேட்க இவன் ஆம் என்று தலையசைத்தான். தாய் விருந்து சமைக்காவிடாலும் ஒருகறியோ இரண்டோ சுடச்சுடச்  சமைத்து வைத்து உண்பதற்காய்க் கூப்பிடுவார். அந்தச் சுவையே இரண்டாம்தரமும் போட்டு உண்ண ஆவலை ஏற்படுத்தும். இங்கு பணமிருந்து என்ன? தாயின் சமையல் போல் இல்லாவிடாலும் சாதாரணமாகக் கூடச் சமைக்கத் தெரியாத மனைவியை வைத்துக்கொண்டு மாமியார் சமைத்துத் தரும் உணவை  இரண்டு நாளுக்கொருதடவை குளிர்பதனப் பெட்டியில் வைத்து  எடுத்துச் சூடாக்கி உண்ணவே பசி பறந்துபோகும். நல்ல காலம் மதியம் இவன் வேலை செய்யும் அலுவலகத்துக்கு அண்மையில் ஒரு இலங்கைத் தமிழரின் உணவகம் இருந்ததனால் இவன் சமாளிக்கக் கூடியதாக இருந்தது.
 
இங்கே பிறந்து வளர்ந்தபடியால் தட்சாவுக்கு சோறு கறியில் பெரிதாக நாட்டமே இல்லை. சான்விச்சும் பொரித்த உருளைக்கிழங்கும் இறைச்சிப் பொரியல்களும் நினைக்கவே இவனுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. ஆனாலும் நல்ல காலம் இடியப்பம், அப்பம், இட்லி போன்ற எம்மூர் உணவுகள் சிலதும் அவளுக்குப் பிடிததால் பக்கத்தில் இருக்கும் தமிழ் கடையில் அவற்றை வாங்கி உண்டும் அப்பப்ப வெளியே சேர்ந்து சென்று உணவகங்களில் சாப்பிட்டும் தன் ஏமாற்றத்தைத் தீர்த்துக் கொண்டான் பரணி. இப்படியே எத்தனை காலம் தான் ஓட்டமுடியும் என்ற யோசனையும் அவனை அலைக்கழித்தபடியே இருக்க, முடிவே தெரியாதவனாய் வாழ்ந்துகொண்டிருந்தான் அவன்.
 
****************************************************************************************************************************************
 
அன்று சாதாரணமாக் வேலைக்குச் செல்ல வேண்டியவன் சிறிது காச்சல்க் குணமாக இருக்க, போன் செய்து அன்று வரவில்லை என்று சொல்லிவிட்டு, என்னை எழுப்பவேண்டாம். இண்டைக்கு படுத்து நித்திரை கொள்ளப் போறன் என்றுவிட்டு உண்மையிலேயே தூங்கியும் போனான். தற்செயலாகக் கண்விழித்தவன் தட்சா யாருடனோ போனில் கதைத்துக்கொண்டிருப்பதைக் கேட்டதும் தன் காதை அங்குவிட்டபடி கவனித்தான்.
 
இல்லை டாடி. நேற்று ஒன்றும் நடக்கவில்லை. நேற்று முதல் நாள்தான் இரண்டுபேரும் ஒன்றாய் இருந்தது. எனக்கு பர்ணி கிஸ் பண்ணினாலும் எந்த பீலிங்கும் இல்லை டாட். டோன்ட்வொறி டாட். நான் கட்டாயம் சொல்லுவன் என்று கூறிப் போனை வைக்க இவனுக்கு கோபத்தில் உடல் கொதிக்க உடனே எழுந்து யாருடன் கதைத்தீர் என்றான். அப்பாதான் என்றுவிட்டு எந்தவிதக் கூச்சமும் இன்றி அவள் இருக்க எங்கடை பேசனல் விஷயத்தைப்பற்றி அதுவும் உம்மட அப்பாவுக்குச் சொல்லிக்கொண்டு இருந்தீரா. உமக்கு என்ன விசரா என்றான். அம்மாவும் டெய்லி போன் செய்து கேக்கிறவ. நான் சொல்லுறனான் என்றுவிட்டு அதுபற்றிய அவமான உணர்வு எதுவுமற்றபடி அவனைப் பார்த்தாள் தட்சா.
 
உன்ர குடும்பத்துக்கு விசரா?  ஒரு அப்பா பிள்ளையிட்டைக் கதைக்கிற கதையா இது? லூசா நீ  என்று இவன் கோபமாக் கூறியபடி கையை ஓங்க, என்னை நீங்க அடிக்க முடியாது என்று அம்மா சொன்னவ. நாங்க நிறையக் காசு தந்திருக்கிறம் உங்களுக்கு. பொறுங்கோ டாடிக்குச் சொல்லிறன் என்று போனை அவள் எடுக்க, இவனுக்கு வந்த கோபத்தில் கண்மண் தெரியாமல் அத்தனை மூர்க்கமாக அவளை அடித்தான் என்று அவள் உணர்வற்றுக் கிடக்கத்தான் உணர்ந்தான். பத்து நிமிடத்தில் அவள் கண்விழித்தபோது இவன் குற்ற உணர்வுடன் சொறி தட்சா என்றபடி அவளருகே செல்ல, பேயைக்கண்டவள் போல் இவனைப் பார்த்துப் பயந்த தாட்சாவைப் பார்க்கப் பரணிக்குப் பாவமாக இருந்தது.
 
அவள் பயப்படுவது தெரிந்ததும் அவன் மீண்டும் சென்று படுக்கையில் விழ, சிறிது நேரத்தில் வந்துசேர்ந்த தாயும் தந்தையும் இவனை பார்த்துக் கேட்ட கேள்விகள் கொஞ்சமல்ல. இவனும் விடவில்லைத்தான். எல்லாம் உங்களாலத்தான். பிள்ளையோட என்ன கதைக்கிறது எண்டு தெரியாத நீங்கள் எல்லா ஒரு மனிசரா என்று வாக்குவாதம் முற்றி அவர்கள்  தாட்சாவைத் தம்முடன் கூட்டிக்கொண்டு போக இவனால் தடுக்கவே முடியாது போய்விட்டது.
 
"இப்பவே பொலிசுக்குச் சொன்னால் உன்னை உள்ளே போடுவாங்கள். ஆனால் எமக்குத்தான் அது கேவலம் என்று தான் பேசாமல் போறம்" என்று இவனை மிரட்டிவிட்டுத்தான் மாமியார் போனார்.
 
தாட்சாவைக் காரில் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு சென்று அவளுக்குக் கோப்பி ஒன்று போட்டுக் கொடுத்து படுக்க வைத்தபின் தாயார் திலகா கணவனிடம் வந்து அடுத்து என்ன செய்வது என்றபோது " எல்லாம் உம்மால்த்தான். எத்தன தடவை சொன்னனான் தட்சாவுக்குக் கலியாணம் வேண்டாம் எண்டு. அவளின் டொக்ரர் உனக்கு வடிவாத்தானே சொன்னவர். தட்சா சாதாரண ஆட்கள் போல் இருந்தாலும் சில பிரச்சனைகளும் டிக்ஸ்லெக்சியாவும் இருக்கிறதால நீங்கள் எப்பவும் உங்கட கண்காணிப்பில வச்சிருக்கிறதுதான் நல்லது எண்டு. உனக்குப் பேராசை. நல்ல காலம் எக்குத்தப்பா ஏதும் நடந்து போலிசுக்குப் போயிருந்தால் எங்களுக்குத்தான் பிரச்சனை வந்திருக்கும் " என்று திட்டிக்கொண்டே போக, "நான் என்னப்பா செய்ய. கலியாணம் செய்தால் எல்லாம் சரியாயிடும் என்று நினைச்சன்" என்று அழத் தொடங்கும் மனைவியை தொடர்ந்தும் திட்ட மனமின்றி ஏதும் செய்ய வகையற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார் தட்சாவின் தந்தை கண்ணன்.
 
அடுத்தநாள் இவன் போன்செய்தும் யாரும் இவனிடம் கதைக்க முன்வரவில்லை. தட்சா இனி உன்னோட இருக்க விரும்பேல்லை. மரியாதைய வீட்டை விட்டு வெளியே ஒரு மாதத்தில போவிடவேணும். இல்லாட்டால் வீண் பிரச்சனை தான் என்றும் இவனை மிரட்டி இன்றுடன் மூன்று  மாதங்கள் ஓடிவிட்டன. இந்த மூன்று மாதங்களில் அவன் மனம் நன்றாகவே தெளிந்துவிட்டது.
 
அவன் ஒரு முடிவோடு அவர்கள் அனுப்பிய பத்திரத்தில் கையெழுத்திட்டு உறையை ஒட்டியபின்தான் நீண்ட நாட்களின் பின் மனம் முழுதும் ஒரு நிம்மதி பரவுவது போல் இருந்தது.
 
Link to comment
Share on other sites

சுமே உங்கள் எழுத்துநடை நன்றாக உள்ளது. இறந்த கால நினைவுகளையும் நிகழ்காலத்தையும் கலந்து தருவதிலும் ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றீர்கள். முடிவில் கொஞ்சம் அவசரம் தெரிகிறது. அதிகம் எழுதினால் பயலுகள் படிக்க மாட்டாங்கள் என்ற யோசனையா? விறுவிறுப்பாக இருந்ததால் இன்னும் அதிகமாகவே வாசித்திருக்கலாம்.

 - தொடர வாழ்த்துக்கள் -

டிஸ்லெக்ஸியா என்பது பற்றிய கேள்வி இது. தப்பாக நினைக்க வேண்டாம் இவ்வருத்தமானது உங்கள் கதையில் பல கேள்விகளை விடையில்லாமல் உருவாக்கி விட்டது. டிஸ்லெக்ஸியா உள்ளவர்களுக்கு எழுத்துக்கள் இடங்கள் மாறித் தோன்றுவதால் அவர்களால் சொற்களைப் படிக்க முடியாது. ஆனால் அவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்களில்லை, சமுதாயத்தில் உள்ள மற்றவர்களைப் போன்றே இவர்கள் எல்லா விடயங்களிலும் இருப்பார்கள். இப்பதிவை எழுத முன்னர் உறுதிப்படுத்தலிற்காக நெற்றில் தேடியபோது பல ஆச்சரியங்கள். உதாரணத்திற்கு dyslexia உள்ள சில பிரபலங்கள் John Lennon, Pablo Picasso, Bill Gates, Steve Jobs, Agatha Christie, Albert Einstein, Steven Spielberg, Leonardo da Vinci, Erna Solberg (தற்போதைய நோர்வே பிரதமர்) . 

இத்தனை புத்தகங்களை எழுதித்தள்ளிய Agatha Christieக்குமா?
அருமையான பாடல்களை எழுதி உலகையே ஆக்கிரமித்த John Lennonக்குமா?

புரியவே இல்லை.

எப்படி இப்படி என்பதை ஜஸ்டின் போன்ற மருத்துவ அறிவுள்ளவர்கள் வந்து விளக்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஜீவன் சிவா.  டிஸ்லெக்ஸியா என்பது learning difficulty. அதாவது எழுத்துக்கள் மாறிமாறித் தெரியும் அவர்களால் தொடர்ந்து ஒன்றில் கவனம் வைக்க முடியாது. நான் காலையில் இதைப் போடும்போது போட்டபின் தான் திருத்தாததைப் போட்டுவிட்டேன் என்று புரிந்தது. மீண்டும் என் கதையை அழுத்த எனக்குத் திறக்கவில்லை. நிர்வாகத்துக்கு அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டேன்.இப்ப வந்து பார்க்க நான் பதிந்தது இருக்கிறது. ஒன்றைப் போடும்போது அவசரப்படாமல் போடவேண்டும் என்று தெரிகிறது. மன்னிக்கவும்.

இப்ப எங்கே யாழில் கதை கவிதையை ஆட்கள் வாசிப்பது. அது ஒரு கனாக் காலம் ஜீவன் சிவா. மற்றவரின் உற்சாகம் தானே இன்னும் இன்னும் எழுதத் தூண்டுவது. இப்போ பல கள உறவுகள் களைத்துவிட்டார்கள் நான் உட்பட. இந்தக் கதையைப் போடுவோமா விடுவோமா என்று யோசித்துவிட்டுத்தான் போடுவம் என்று போட்டது. எனக்கே இதில் திருப்தி இல்லைத்தான். பார்ப்பம்.

வருகை தந்த அர்ஜுனுக்கும் புங்கைக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஞ்சினியராகப் படித்தாலும் பழைய பஞ்சாங்கமாக இருக்க ஆசைப்படுகின்றார். ஆனால் பண்பாட்டுப் பெருமைக்குள் அவரை ஒளிக்கப்பார்க்கின்றது கதை. 

பெண்ணும், ஆணும் மனப் பொருத்தம் இல்லாமல் சேர்ந்து வாழமுடியாது. காதலித்து மணம் முடித்தாலும், பெற்றோர் பேசி முடித்தாலும் மனப் பொருத்தம் சிலருக்கு வருவதில்லை. 

Dyslexia உள்ளவர்கள் மந்தமானவர்கள் என்ற மாதிரியான ஒரு பார்வை கதையில் இருப்பது போலுள்ளது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை மிகவும் திறமையானவர்களாக உள்ளார்கள். வாசிப்பதிலும், எழுதுவதிலும் சில பிழைகள் விட்டாலும் விவாதிப்பதிலும், கட்டுடைப்பதிலும், பொருளீட்டுவதிலும் வல்லவர்களாக உள்ள ஒரு சிலரை தெரியும்.

Link to comment
Share on other sites

சுமே இது உங்களை பிழை சொல்ல பதிந்த பதிவு இல்லை, உங்கள் பதிவு பிடித்திருந்தது. இவ்வருத்தம் உள்ளவர்கள் அதிகம் வாசிக்காமையால் அவர்களால் சொற்களை சரியாக சரியான இடத்தில் பாவிப்பது பிரச்சனையாகி பலர் குடும்ப வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள். ஆனால் இக்குறைபாடு உள்ளவர்கள் பலர் இந்த உலகையே ஆழுகிறார்கள் பல துறைகளில். 

ஏன்,எப்படி இப்படி - என்ரை மண்டை வெடிக்கும் பதில் தெரியாதவரை. எனது கேள்விக்கான பதிலை இங்குள்ள சில மருத்துவர்களிடம் எதிர்பார்க்கின்றேன். கள உறவுகள் விளக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக நடந்த சம்பவம் போல இருக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அருமையான எழுத்து நடை... உங்களுக்குக் கிடைத்த கொடை!

டிஸ்லெக்சியா என்பது நீங்கள் கூறுவது போன்று விளைவுகளை ஏற்படுத்துமோ என்பதில் எனக்குச் சந்தேகமுண்டு!

ஒரு சமூக எழுத்தாளராக வளரும் நீங்கள், சீரியசான விடயங்களை எழுதும் முன்னர்.. ஒரு சின்ன றிசேர்ச் செய்தால் நல்லது என்று நினைக்கிறேன்!

எனக்கும் இப்படியான வருத்தம் இருக்குமோ என்று உங்கள் கதையை வாசித்த பின்னர் யோசிக்கிறேன்!

இப்போதெல்லாம் பெண்களைப் பார்க்கும் போது.. ஒரு விதமான பயமும், பக்தியும் தான் வருகின்றது!:mellow:

யாழ் களத்தில், படைப்புக்களுக்குக் கருத்திடுதல் குறைந்து வருகின்றது என்று கூறும் அதேவேளை.. உங்கள் கதைகளையும், கவிதைகளையும் வேறு தளங்களில் இடுவதையும் கண்டிருக்கிறேன்!

எனவே..எந்த விதமான கோப தாபமும் பாராது 'யாழ் களத்துக்கு' முன்னுரிமை கொடுங்கள்!

ஏனெனில்.. அது எமது... எம்மை வளர்த்தெடுத்த... ஒரு களம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருத்தங்களை விடுத்து....... வெளிநாட்டிலை பிறந்து வளர்ந்த பொம்புளைப்பிள்ளையள் இஞ்சை பிறந்து வளர்ந்த பெடியங்களை கலியாணம் கட்டுறதுதான் உத்தமம்......:cool:

கதை வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது...வாழ்த்துக்கள்.tw_thumbsup:

Link to comment
Share on other sites

 


இந்த முறை கதை வாய்க்கவில்லை அக்கா, மன்னிக்கவும். கதையின் பல இடங்களில் தொய்வு, கொண்டம் கதை போன்ற பல தேவையில்லாத இடைச்செருகல்கள் சலிப்புத் தருகின்றன, மற்றும் logical flow இல்லை. இலங்கையில் E fac செய்த யாரையும் உங்களுக்கு தெரியாது போல இருக்கிறது, இலங்கையில் கவனமாக செலவழித்தால், எஞ்சினியரிங் முடிக்க 15 லட்சம் தேவையில்லை. மகாபொல  போன்ற விடயங்களும் இருக்கு.. தாட்சாவை லெஸ்பியன் என முடிப்பீர்கள் என நினைத்தேன்.

மற்றவர்கள் போல ஆகா ஓகோ என்று என்னால் கூறி பச்சை குத்தி விட்டுப் போக முடியவில்லை. சில காலமாக Performance audit செய்து கொண்டு  திரிவதால் சட்டம்பி மாதிரி சிந்திக்கிறேனோ தெரியாது.

மற்றும்படி வெளிநாட்டுப் பெண்களுக்கு ஊர் ஆம்பிளையள் சரி வராது. எமது அயலில் இருக்கும் ஒருவர் 80 லட்சம் சீதனம் எண்டு சொல்லி ஒரு சுவிஸ் பெட்டயை முடித்தார்.போன பெட்டை ஒரு போன் கூட போடவில்லை. பெடியன் இப்ப கலியான வீட்டுக் கார் ஓடிக்கொண்டு திரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2015, 20:33:38, ரதி said:
On 24/11/2015, 20:33:38, ரதி said:

உண்மையாக நடந்த சம்பவம் போல இருக்குது

 

உண்மைச் சம்பவம் தான் ரதி

 

23 hours ago, புங்கையூரன் said:

நல்ல அருமையான எழுத்து நடை... உங்களுக்குக் கிடைத்த கொடை!

டிஸ்லெக்சியா என்பது நீங்கள் கூறுவது போன்று விளைவுகளை ஏற்படுத்துமோ என்பதில் எனக்குச் சந்தேகமுண்டு!

ஒரு சமூக எழுத்தாளராக வளரும் நீங்கள், சீரியசான விடயங்களை எழுதும் முன்னர்.. ஒரு சின்ன றிசேர்ச் செய்தால் நல்லது என்று நினைக்கிறேன்!

எனக்கும் இப்படியான வருத்தம் இருக்குமோ என்று உங்கள் கதையை வாசித்த பின்னர் யோசிக்கிறேன்!

இப்போதெல்லாம் பெண்களைப் பார்க்கும் போது.. ஒரு விதமான பயமும், பக்தியும் தான் வருகின்றது!:mellow:

யாழ் களத்தில், படைப்புக்களுக்குக் கருத்திடுதல் குறைந்து வருகின்றது என்று கூறும் அதேவேளை.. உங்கள் கதைகளையும், கவிதைகளையும் வேறு தளங்களில் இடுவதையும் கண்டிருக்கிறேன்!

எனவே..எந்த விதமான கோப தாபமும் பாராது 'யாழ் களத்துக்கு' முன்னுரிமை கொடுங்கள்!

ஏனெனில்.. அது எமது... எம்மை வளர்த்தெடுத்த... ஒரு களம்! 

நீங்கள் நேற்றுக் கருத்து  எழுதாது விடும்போதே உங்கள் மனநிலை எனக்குப் புரிந்ததுதான்.

22 hours ago, குமாரசாமி said:

வருத்தங்களை விடுத்து....... வெளிநாட்டிலை பிறந்து வளர்ந்த பொம்புளைப்பிள்ளையள் இஞ்சை பிறந்து வளர்ந்த பெடியங்களை கலியாணம் கட்டுறதுதான் உத்தமம்......:cool:

கதை வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது...வாழ்த்துக்கள்.tw_thumbsup:

என் பிள்ளைகள் அறுதியாகச் சொல்விட்டார்கள். யேர்மனியில் அல்லது லண்டனில் பிறந்தவர்களைத்தான் திருமணம் செய்வது என்று.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2015, 19:41:51, கிருபன் said:

எஞ்சினியராகப் படித்தாலும் பழைய பஞ்சாங்கமாக இருக்க ஆசைப்படுகின்றார். ஆனால் பண்பாட்டுப் பெருமைக்குள் அவரை ஒளிக்கப்பார்க்கின்றது கதை. 

பெண்ணும், ஆணும் மனப் பொருத்தம் இல்லாமல் சேர்ந்து வாழமுடியாது. காதலித்து மணம் முடித்தாலும், பெற்றோர் பேசி முடித்தாலும் மனப் பொருத்தம் சிலருக்கு வருவதில்லை. 

Dyslexia உள்ளவர்கள் மந்தமானவர்கள் என்ற மாதிரியான ஒரு பார்வை கதையில் இருப்பது போலுள்ளது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை மிகவும் திறமையானவர்களாக உள்ளார்கள். வாசிப்பதிலும், எழுதுவதிலும் சில பிழைகள் விட்டாலும் விவாதிப்பதிலும், கட்டுடைப்பதிலும், பொருளீட்டுவதிலும் வல்லவர்களாக உள்ள ஒரு சிலரை தெரியும்.

நீங்கள் கூறுவதும் ஒரு விதத்தில் சரியாக இருந்தாலும் நாகரீகமானவர் பெற்றோரிடம் கணவனுடன் மகிழ்ந்த தருணங்களை எல்லாம்  பற்றிக் கூறுவார்களா என்ன ???

20 hours ago, Thumpalayan said:

 


இந்த முறை கதை வாய்க்கவில்லை அக்கா, மன்னிக்கவும். கதையின் பல இடங்களில் தொய்வு, கொண்டம் கதை போன்ற பல தேவையில்லாத இடைச்செருகல்கள் சலிப்புத் தருகின்றன, மற்றும் logical flow இல்லை. இலங்கையில் E fac செய்த யாரையும் உங்களுக்கு தெரியாது போல இருக்கிறது, இலங்கையில் கவனமாக செலவழித்தால், எஞ்சினியரிங் முடிக்க 15 லட்சம் தேவையில்லை. மகாபொல  போன்ற விடயங்களும் இருக்கு.. தாட்சாவை லெஸ்பியன் என முடிப்பீர்கள் என நினைத்தேன்.

மற்றவர்கள் போல ஆகா ஓகோ என்று என்னால் கூறி பச்சை குத்தி விட்டுப் போக முடியவில்லை. சில காலமாக Performance audit செய்து கொண்டு  திரிவதால் சட்டம்பி மாதிரி சிந்திக்கிறேனோ தெரியாது.

மற்றும்படி வெளிநாட்டுப் பெண்களுக்கு ஊர் ஆம்பிளையள் சரி வராது. எமது அயலில் இருக்கும் ஒருவர் 80 லட்சம் சீதனம் எண்டு சொல்லி ஒரு சுவிஸ் பெட்டயை முடித்தார்.போன பெட்டை ஒரு போன் கூட போடவில்லை. பெடியன் இப்ப கலியான வீட்டுக் கார் ஓடிக்கொண்டு திரியுது.

நீங்கள் கூறியது சரிதான். இந்தக் கதை நானே என் தலையில் மண் போட்டது என்று ஒருவர் கூறினார். உண்மைதான். இந்தக் கதையை இரு வாரங்களுக்கு முன் எழுதினேன். சரியாக வரவில்லை என்று மனம் சொன்னாலும் அதைத் திருத்தும் மனநிலை வரவே இல்லை. வீணாக அதை வைத்திருக்காமல் போடுவோம் என்றுஎண்ணிப் போட்டதுதான். வெளிநாட்டில் பிறந்த பெண்ணோ ஆணோ வெளிநாட்டில் பிறந்தவர்களை மணம் முடிப்பதுதான் சரியானது. 

 

 

 

 

 

 

வருகை தந்து பச்சை தந்த அர்ஜுன் , ஜீவன்சிவா, மீனா, சுவைப்பிரியன், மூன்றாம் கண், நந்தன் , ரதி, பகலவன், நவீனன், புங்கை ஆகிய உறவுகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றிகள்....ஊரில இப்படியான‌ வருத்தங்கள் இருந்தால் அவன் விசரன்,அவள் விசரி ...அல்லது பனியன் என்று சொல்லுவம்....வெளிநாடு வந்த பின்புதான் விளங்குது இதெல்லாம் வருத்தங்கள் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் பிள்ளைகள் அறுதியாகச் சொல்விட்டார்கள். யேர்மனியில் அல்லது லண்டனில் பிறந்தவர்களைத்தான் திருமணம் செய்வது என்று.:rolleyes:

கனடாப்பக்கம் எட்டியும் பார்க்காதேங்கோ........அமெரிக்கா பக்கம் நினைச்சும் பாராதேங்கோ catrun_e0_zpszfzgcarf.gif
lol2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுமே அக்கா,
கதை / சம்பவங்களை நன்றாகவே எழுதி உள்ளீர்கள்.
இன்று புலம் பெயர்ந்த எம்மவர் குழந்தைகள் மத்தியில் இது போன்ற மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட சில நிலைப்பாடுகள் (நோய் என்று சொல்ல மனம் வருகுதில்லை) கூடிக் காணப்படுகின்றது.

  • Autism
  • ADD
  • ADHD
  • Asperger Syndrome
  • OCD
  • Dyslexia
  • Developmental Disability
  • Hypermedia
  • Down Syndrome 

இவை தொடர்பான சரியான புரிதல் பெற்றாரிடமோ அல்லது தமிழ் சமூகத்திடமோ இன்னுமே பெரிதாக ஏற்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டு.
ஒரு சில அமைப்புகள் இப்போது தான் இங்கு கனடாவில் இது குறித்த தெளிவோடு சில செயல் பாடுகளை ஆரம்பித்துள்ளார்கள். பெற்றார்களும் தமது குழந்தைகளில் காணும் சில (இனம் புரியாத ) மாற்றங்களை பெரிதாக யாருடனும் கதைப்தர்க்கும் விரும்புவதில்லை.
இது குறித்து நேரமிருந்தால் இன்னும் ஒரு திரியில் விரிவாக எழுதுகின்றேன்.

நாம் எல்லோருமே எதோ ஒருவகையில் இவற்றால் சிறிதளவேனும் பீடிக்கப்பட்டவர்கள் தான்.
என்ன அளவில் இந்த (spectrum)  இருக்கின்றது என்பதில் தான் மாற்றங்கள். சாதாரணமான எம்மால் சமூகத்தில் எமது குறைகளை மறைத்து, வெளிக்காட்டாமல், சகஜமாக வாழமுடிகிறது. இந்த (spectrum) சிறிது கூடியவர்கள், சமூகத்திலிருந்து சிறிது தள்ளி அவதானி க்கப்படகூடியவர்கலாக இருப்பார்கள். அவர்களின் செய்கை, பேச்சு, அறிவு சார் தன்மைகள் அவர்களின் நிலைப்பாடை காட்டி நிற்கும். 
உதாரணம் இந்த கதையில் வரும் "தாட்ஸா" ஒரு சிறு குழந்தையின் மன நிலைப்பாடுடன் இருக்கிறார்.
அது அவரின் தவறல்ல, அவருக்கு "மனைவி" என்னும் அந்தஸ்து அவர் அறிவுக்கு எட்டிய தோன்றல்ல.
மனைவியாக எது செய்ய வேண்டும், கணவனின், குழந்தைகளின் எதிர்பார்ப்பு என்ன, சமூக எதிர் பார்ப்பு என்ன என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியாது. சொல்லியும் புரிய வைப்பதும் கடினம். அனால் முடியும்.
கதையின் நாயகன் அவளுக்கு தாயாய், கணவனாய் நிதானம் தவறாமல் அன்போடு, அரவணைப்போடு இருந்தால், சொல்லிக்கொடுத்தால் மாற்றங்கள் வரலாம். வராமலும் போகலாம்.
ஆனால் கதையின் நாயகன் தன் வாழ்வின் சுகங்கள், காதல் உணர்வுகள், கலவி, நெருக்கம் இதை எல்லாம் இழந்தவனாகவே வாழ்கை ஓட்ட வேண்டும்.
இருவருமே பாவம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இப்படியானவர்களை தங்க வைத்து ஓரளவேனும் குணப்படுத்தி விடும் நிலையங்கள் உண்டு. மேலும் பெற்றோர் இவ் விடயத்தில் அன்பு காட்டுகின்றோம் என்று வீட்டிலேயே வைத்திருந்து எல்லாவற்றையும் சொதப்பி விடுகின்றார்கள்.  மிகவும் பொறுமையாய் இவர்களிடம் பழகி எடுத்துச் சொன்னால் சரியான வழிக்கு வருவினம்...!

பகிர்வுக்கு நன்றி சகோதரி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2015, 14:29:46, குமாரசாமி said:

கனடாப்பக்கம் எட்டியும் பார்க்காதேங்கோ........அமெரிக்கா பக்கம் நினைச்சும் பாராதேங்கோ catrun_e0_zpszfzgcarf.gif
lol2.gif

tw_blush:tw_blush:

On 26/11/2015, 18:28:11, suvy said:

இங்கு இப்படியானவர்களை தங்க வைத்து ஓரளவேனும் குணப்படுத்தி விடும் நிலையங்கள் உண்டு. மேலும் பெற்றோர் இவ் விடயத்தில் அன்பு காட்டுகின்றோம் என்று வீட்டிலேயே வைத்திருந்து எல்லாவற்றையும் சொதப்பி விடுகின்றார்கள்.  மிகவும் பொறுமையாய் இவர்களிடம் பழகி எடுத்துச் சொன்னால் சரியான வழிக்கு வருவினம்...!

பகிர்வுக்கு நன்றி சகோதரி...!

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்

On 26/11/2015, 16:02:40, Sasi_varnam said:

வணக்கம் சுமே அக்கா,
கதை / சம்பவங்களை நன்றாகவே எழுதி உள்ளீர்கள்.
இன்று புலம் பெயர்ந்த எம்மவர் குழந்தைகள் மத்தியில் இது போன்ற மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட சில நிலைப்பாடுகள் (நோய் என்று சொல்ல மனம் வருகுதில்லை) கூடிக் காணப்படுகின்றது.

  • Autism
  • ADD
  • ADHD
  • Asperger Syndrome
  • OCD
  • Dyslexia
  • Developmental Disability
  • Hypermedia
  • Down Syndrome 

இவை தொடர்பான சரியான புரிதல் பெற்றாரிடமோ அல்லது தமிழ் சமூகத்திடமோ இன்னுமே பெரிதாக ஏற்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டு.
ஒரு சில அமைப்புகள் இப்போது தான் இங்கு கனடாவில் இது குறித்த தெளிவோடு சில செயல் பாடுகளை ஆரம்பித்துள்ளார்கள். பெற்றார்களும் தமது குழந்தைகளில் காணும் சில (இனம் புரியாத ) மாற்றங்களை பெரிதாக யாருடனும் கதைப்தர்க்கும் விரும்புவதில்லை.
இது குறித்து நேரமிருந்தால் இன்னும் ஒரு திரியில் விரிவாக எழுதுகின்றேன்.

நாம் எல்லோருமே எதோ ஒருவகையில் இவற்றால் சிறிதளவேனும் பீடிக்கப்பட்டவர்கள் தான்.
என்ன அளவில் இந்த (spectrum)  இருக்கின்றது என்பதில் தான் மாற்றங்கள். சாதாரணமான எம்மால் சமூகத்தில் எமது குறைகளை மறைத்து, வெளிக்காட்டாமல், சகஜமாக வாழமுடிகிறது. இந்த (spectrum) சிறிது கூடியவர்கள், சமூகத்திலிருந்து சிறிது தள்ளி அவதானி க்கப்படகூடியவர்கலாக இருப்பார்கள். அவர்களின் செய்கை, பேச்சு, அறிவு சார் தன்மைகள் அவர்களின் நிலைப்பாடை காட்டி நிற்கும். 
உதாரணம் இந்த கதையில் வரும் "தாட்ஸா" ஒரு சிறு குழந்தையின் மன நிலைப்பாடுடன் இருக்கிறார்.
அது அவரின் தவறல்ல, அவருக்கு "மனைவி" என்னும் அந்தஸ்து அவர் அறிவுக்கு எட்டிய தோன்றல்ல.
மனைவியாக எது செய்ய வேண்டும், கணவனின், குழந்தைகளின் எதிர்பார்ப்பு என்ன, சமூக எதிர் பார்ப்பு என்ன என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியாது. சொல்லியும் புரிய வைப்பதும் கடினம். அனால் முடியும்.
கதையின் நாயகன் அவளுக்கு தாயாய், கணவனாய் நிதானம் தவறாமல் அன்போடு, அரவணைப்போடு இருந்தால், சொல்லிக்கொடுத்தால் மாற்றங்கள் வரலாம். வராமலும் போகலாம்.
ஆனால் கதையின் நாயகன் தன் வாழ்வின் சுகங்கள், காதல் உணர்வுகள், கலவி, நெருக்கம் இதை எல்லாம் இழந்தவனாகவே வாழ்கை ஓட்ட வேண்டும்.
இருவருமே பாவம்!!!

 கருத்து நன்றி  சசி. நீங்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் பற்றி விரிவாகத் தனித் திரி திறந்து எழுதினால் அனைவருக்கும் பயனாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.