Jump to content

பங்களாதேஷ் பிரீமியர் லீக்


Recommended Posts

பங்களாதேஷ் பிரீமியர் லீக் : டைனமைட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி

 

பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான நிலையில், முதல் நாளில் நடைப்பெற்ற கொம்மிலா விக்டொரியன்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில், டாக்கா டைனமைட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இப் போட்டியானது, நேற்று மிர்பூர் மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, கொம்மிலா விக்டொரியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் படி முதலில் களமிறங்கிய கொம்மிலா விக்டொரியன்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களை குவித்தது.

அணியின் அதிகபட்ச ஓட்டமாக மஸ்ரபீ மோடார்ஸா 26 பந்தில் இரு சிக்சருடன் 25 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அபூல் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 111 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டாக்கா டைனமைட்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களை கடந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணியின் அதிகபட்ச ஓட்டமாக, நசீர் ஜம்சாட் 44 பந்தில் 8 பவுண்டரியுடன் 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில், அபூ ஜடர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை டாக்கா டைனமைட்ஸ் அணியின் அபூல் ஹசன் பெற்றுக்கொண்டார்.

http://www.onlineuthayan.com/sports/?p=3878

Link to comment
Share on other sites

பிழையைத் தட்டிக் கேட்டமைக்காக வசைபாடப்பட்டேன்: தமிம்
 
 

article_1448362007-tamilbblcom1Tamim.jpgஇடம்பெற்றுவரும் பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரில், சிட்டகொங் விக்கிங்ஸ் அணிக்கும் சியல்கொட் சுப்பர்ஸ்டார்ஸ் அணிக்குமிடையிலான போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, தன் மீது வசைபாடப்பட்டதாக, சிட்டகொங் அணியின் தலைவர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இப்போட்டியில், சியல்கொட் அணியின் ரவி போப்பாரா, ஜொஷ் கொப் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கான, இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் அனுமதிச் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால், நாணயச் சுழற்சியானது 15 நிமிடங்களால் தாமதிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர், நாணயச் சுழற்சி இடம்பெற்ற போது, தமிம் இக்பாலிடம் கையளிக்கப்பட்ட சியல்கொட் அணி விவரத்தில், போப்பாரா, கொப் இருவரினதும் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. 4 வெளிநாட்டு வீரர்கள் பங்குபற்ற வேண்டிய விதி காணப்பட்ட நிலையில், 2 பேரை மாத்திரம் சேர்க்க, அவ்வணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், தமிம் இக்பாலும் திலகரட்ண டில்ஷானும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கும் போது, போப்பாராவும் கொப்-உம், களத்தடுப்பில் ஈடுபட ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தமையால், சர்ச்சை ஏற்பட்டது.

விதிகளுக்கு முரணாக, வழங்கப்பட்ட அணி விவரத்தில் உள்ளடக்கப்படாத வீரர்களை விளையாட அனுமதிக்க முடியாது என தமிம் வாதிட, தங்களுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக சியல்கொட்டின் முஷ்பிக்கூர் ரஹீம் தெரிவித்தார்.

இப்பிரச்சினையைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில், தன்னை நோக்கி வந்த சியல்கொட் அணியின் உரிமையாளரான அஸிஸூல் இஸ்லாம், தன்னை நோக்கித் துர்வார்த்தைகளைப் பயன்படுத்தி, தன் குடும்பத்தைப் பற்றி வசைபாடியதாக, தமிம் தெரிவித்துள்ளார்.

தேசிய அணியின் வீரர்கள், மதிக்கப்பட வேண்டியவர்களெனத் தெரிவித்த தமிம், பணமிருக்கிறது என்பதற்காக, தேசிய வீரர்களை எவரும் பிச்சைக்காரர்களைப் போல் நடத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். விளையாடுவதற்கே அங்கு சென்றதாகத் தெரிவித்த அவர், தனது குடும்பத்தைப் பற்றிய வசைகளைக் கேட்பதற்காக அன்று எனவும் மேலும் குறிப்பிட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/159901#sthash.NIFZ9T9i.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.