Jump to content

சம்பந்தன் வாழ்க்கை வரலாறு....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் வாழ்க்கை வரலாறு....

வரலாற்று புகழ்வாய்ந்த தலைவர் தமிழ் இனத்திற்கு செய்தது என்ன?????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் இந்தியாவில், சீர்காழி என்னும் ஊர் உள்ளது. நெல்வயல்களும், பூங்காவனங்களும் நிறைந்த அந்த அழகிய ஊரின் மத்தியிலே, தோணியப்பர் என்னும் பெயருடன் சிவபெருமான் குடிகொண்ட, பிரசித்தி பெற்ற திருக்கோவில் இருக்கிறது.

சீர்காழியிலே, சிவபாத இருதயர் என்ற பிராமணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த அறிவும், ஒழுக்கமும் உடையவர். அவரது மனைவியின் பெயர் பகவதியார். இருவரும் சிவபெருமான் மீது, மாறாத அன்புடனும், பக்தியுடனும் வாழ்ந்து வந்தார்கள்.

அக்காலத்தில், தென் இந்தியாவில் சமண சமயம் பரவி இருந்தது. சமண சமயத்துறவிகளும், மக்களும் சைவ சமயத்தைச் சேர்ந்த மக்களைத் துன்புறுத்தினார்கள்; அவமானப்படுத்தினார்கள். மக்கள் சைவ சமயத்தின் பெருமைகளை மறந்து வாழ்ந்தார்கள்.

சமண சமயத்தவர்கள் செய்யும் கொடுமைகளையும், சைவ மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் கண்டு, சிவபாத இருதயர் மனம் வருந்தினார்.


திருத்தோணியப்பரான சிவபெருமானின் சன்னதியிலே நின்றுகொண்டு, இரு கைகளையும் குவித்து வேண்டினார். " இறைவா, இந்தச் சீர்காழிப் பதியிலே, சைவ மக்கள் படும் துன்பங்களைக் கண் திறந்து பாரும். சைவ சமயத்தை மீண்டும் இந்த நாட்டில் பரப்புவதற்கு ஒரு பிள்ளையை எங்களுக்குத் தந்தருளும்" என்று மனமுருகிக் கேட்டார்.

சிவபெருமானின் திருவருளினால், பகவதியார் கருவுற்றார். அழகு மிக்க ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

உதய சூரியனைப்போல் அழகுடன் விளங்கிய அந்தப் பிள்ளைக்கு ஆளுடைய பிள்ளையார் என்று பெயரிட்டுப் பெற்றோர் அன்புடன் வளர்த்து வந்தார்கள்.

ஆளுடைய பிள்ளையாருக்கு மூன்று வயதாயிற்று. ஒருநாள் காலையில், சிவபாத இருதயர் வழக்கம்போல் சிவபூசை செய்வதற்காகச் சிவன் கோவிலுக்குப் புறப்பட்டார்.

தொடரும்...... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நாதமுனியார்!

ஞானப்பால் குடிச்சு கடவாயாலை வழிய........கடைசியிலை   உமாதேவியை காட்டிக்குடுத்த கதையெல்லாம் வரும் போலை கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 minutes ago, குமாரசாமி said:

என்ன நாதமுனியார்!

ஞானப்பால் குடிச்சு கடவாயாலை வழிய........கடைசியிலை   உமாதேவியை காட்டிக்குடுத்த கதையெல்லாம் வரும் போலை கிடக்கு.

கடைசியிலை திருநல்லூரில் சுற்றத்தார் சூழ சோதியிலை கலந்த கதைதான் வருமெண்டு நினைக்கிறன்! 

Link to comment
Share on other sites

அழுத பிள்ளைக்கு ஏன் முலையிலிருந்து நேரடியாகப் பால் கொடுக்காமல் உமாதேவியார் பொற்கிண்ணத்தில் கறந்து கொடுத்தர் என யாருக்காவது தெரியுமா?

...

 


மூன்று வயது பிள்ளைக்கு பல்லு முளைத்திருக்கும், கடித்துவிட்டால் என்ற பயமாம் - வாரியார் சொற்பொழிவிலிருந்து பொறுக்கியது.

Link to comment
Share on other sites

நாதம் அண்ணை,

நல்லா இருக்குது தொடருங்கோ. 

நம்மட சம்பந்தருடைய வாழ்கை வரலாற்றை அறிந்து என்னத்தை செய்யிறது. 5 சதத்துக்கும்  பிரயோசனம் இல்லை. செத்த பிணத்திலயும் காசு பொறுக்கும் கேடு கெட்ட ஜென்மங்கள்.tw_angry:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவை,

இப்படி முளுசிப் பயமுறுத்தக் கூடாது கண்டியளோ...

தலைப்பைப் பார்த்து, குமாரசாமியார் பக்திப் பக்கம் போட்டாரோ எண்ட யோசனையில... 

ம்... வீடியோவை யார் பார்த்தது...

ம்... குமாரசாமியண்ணோய், முடிவை சொல்லுங்க, சிறித்தம்பிக்காண்டி தொடர்ரதா.... வேணாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/27/2015, 10:36:53, Nathamuni said:

தென் இந்தியாவில், சீர்காழி என்னும் ஊர் உள்ளது. நெல்வயல்களும், பூங்காவனங்களும் நிறைந்த அந்த அழகிய ஊரின் மத்தியிலே, தோணியப்பர் என்னும் பெயருடன் சிவபெருமான் குடிகொண்ட, பிரசித்தி பெற்ற திருக்கோவில் இருக்கிறது.

சீர்காழியிலே, சிவபாத இருதயர் என்ற பிராமணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த அறிவும், ஒழுக்கமும் உடையவர். அவரது மனைவியின் பெயர் பகவதியார். இருவரும் சிவபெருமான் மீது, மாறாத அன்புடனும், பக்தியுடனும் வாழ்ந்து வந்தார்கள்.

அக்காலத்தில், தென் இந்தியாவில் சமண சமயம் பரவி இருந்தது. சமண சமயத்துறவிகளும், மக்களும் சைவ சமயத்தைச் சேர்ந்த மக்களைத் துன்புறுத்தினார்கள்; அவமானப்படுத்தினார்கள். மக்கள் சைவ சமயத்தின் பெருமைகளை மறந்து வாழ்ந்தார்கள்.

சமண சமயத்தவர்கள் செய்யும் கொடுமைகளையும், சைவ மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் கண்டு, சிவபாத இருதயர் மனம் வருந்தினார்.


திருத்தோணியப்பரான சிவபெருமானின் சன்னதியிலே நின்றுகொண்டு, இரு கைகளையும் குவித்து வேண்டினார். " இறைவா, இந்தச் சீர்காழிப் பதியிலே, சைவ மக்கள் படும் துன்பங்களைக் கண் திறந்து பாரும். சைவ சமயத்தை மீண்டும் இந்த நாட்டில் பரப்புவதற்கு ஒரு பிள்ளையை எங்களுக்குத் தந்தருளும்" என்று மனமுருகிக் கேட்டார்.

சிவபெருமானின் திருவருளினால், பகவதியார் கருவுற்றார். அழகு மிக்க ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

உதய சூரியனைப்போல் அழகுடன் விளங்கிய அந்தப் பிள்ளைக்கு ஆளுடைய பிள்ளையார் என்று பெயரிட்டுப் பெற்றோர் அன்புடன் வளர்த்து வந்தார்கள்.

ஆளுடைய பிள்ளையாருக்கு மூன்று வயதாயிற்று. ஒருநாள் காலையில், சிவபாத இருதயர் வழக்கம்போல் சிவபூசை செய்வதற்காகச் சிவன் கோவிலுக்குப் புறப்பட்டார்.

தொடரும்......  (http://hindukidsworld.org/index.php/ta-IN/2012-05-01-15-36-14    ஞானக்குழந்தை )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28.11.2015, 12:07:33, Nathamuni said:

அளவை,

இப்படி முளுசிப் பயமுறுத்தக் கூடாது கண்டியளோ...

தலைப்பைப் பார்த்து, குமாரசாமியார் பக்திப் பக்கம் போட்டாரோ எண்ட யோசனையில... 

ம்... வீடியோவை யார் பார்த்தது...

ம்... குமாரசாமியண்ணோய், முடிவை சொல்லுங்க, சிறித்தம்பிக்காண்டி தொடர்ரதா.... வேணாமா?

தொடராட்டி பொலிசை கூப்பிடுவன் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/28/2015, 3:17:33, ஜீவன் சிவா said:

அழுத பிள்ளைக்கு ஏன் முலையிலிருந்து நேரடியாகப் பால் கொடுக்காமல் உமாதேவியார் பொற்கிண்ணத்தில் கறந்து கொடுத்தர் என யாருக்காவது தெரியுமா?

...

 


மூன்று வயது பிள்ளைக்கு பல்லு முளைத்திருக்கும், கடித்துவிட்டால் என்ற பயமாம் - வாரியார் சொற்பொழிவிலிருந்து பொறுக்கியது.

மூன்று வயதுப்பிள்ளை.. பாண்டியனின் மனைவியைப் பார்த்துப் பின்வருமாறு பாடியிருக்கின்றது!

 

மானினேர் விழி.. மாதராய் ,வழுதிக்கு மாபெரும் தேவி கேள்...!

அதாவது மானின் விழியை நிகர்த்த  விழிகளைக் கொண்டவளே.. என்று பாண்டியன் தேவியை வர்ணிக்கிறது குழந்தை...!

இது குழந்தை என்று இன்னும் நம்புகிறீர்களா... ஜீவன் சிவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்ஜக்சன் யுவர் ஆனர்...

மூன்று வயதில பாடுனது 'தோடுடைய செவியன்'...

வளந்தாப் பிறகு தான், 'மானிநேர்விழி.....

Link to comment
Share on other sites

3 hours ago, Nathamuni said:

ஆப்ஜக்சன் யுவர் ஆனர்...

மூன்று வயதில பாடுனது 'தோடுடைய செவியன்'...

வளந்தாப் பிறகு தான், 'மானிநேர்விழி.....

நாதமுனி பாடும்போது ஒரு 8 அல்லது 9 வயதிருக்குமா? அப்பகூட இது கொஞ்சம் ஓவர்தான். பிஞ்சிலை பழுத்திருக்குமோ? அப்படித்தான் இருக்க வேண்டும். அதுதான் இளவயதிலேயே பரலோகம் போனாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

மூன்று வயதுப்பிள்ளை.. பாண்டியனின் மனைவியைப் பார்த்துப் பின்வருமாறு பாடியிருக்கின்றது!

 

மானினேர் விழி.. மாதராய் ,வழுதிக்கு மாபெரும் தேவி கேள்...!

அதாவது மானின் விழியை நிகர்த்த  விழிகளைக் கொண்டவளே.. என்று பாண்டியன் தேவியை வர்ணிக்கிறது குழந்தை...!

இது குழந்தை என்று இன்னும் நம்புகிறீர்களா... ஜீவன் சிவா?

வரலாறு முக்கியம் புங்கையரே!

Link to comment
Share on other sites

நன் உட்பட புலம்பெயர்ந்த தமிழர் பலர் யாழ்குடாநாட்டு மேட்டுக்குடியை சேர்ந்தவர்கள். இது நமது சிக்கல்களுக்கு அடிப்படை. கிழக்கு மாகாணம் மன்னார் புரதான வன்னி மக்களை உள்வாங்கி செயல்படுவதும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதும் மிகவும் முக்கியமாக மாறி வருகிறது.

தலைமையில் கிழக்கு மாகாணம் வன்னி மாவட்ட பங்களிப்பில்லாத புலம்பெயர் அமைப்புகள் அவர்களை உள்வாங்கி முழுமையான ஈழ தன்மையை பெறுவது அவசியம்.நமது ஈழ நேசம் முழுமைபெற கிழக்கு மாகாணம் வன்னி மாவட்ட மக்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வது அவசியம்.

ஈழ அரசியலில் பலகீனப்பட்டிருந்த வடகிழக்கு இணைப்பை மீழமைத்த சம்பந்தர் ஐயாவுக்கு விமர்சனங்களுக்கு மேலாக எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, poet said:

நன் உட்பட புலம்பெயர்ந்த தமிழர் பலர் யாழ்குடாநாட்டு மேட்டுக்குடியை சேர்ந்தவர்கள். இது நமது சிக்கல்களுக்கு அடிப்படை. கிழக்கு மாகாணம் மன்னார் புரதான வன்னி மக்களை உள்வாங்கி செயல்படுவதும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதும் மிகவும் முக்கியமாக மாறி வருகிறது.

தலைமையில் கிழக்கு மாகாணம் வன்னி மாவட்ட பங்களிப்பில்லாத புலம்பெயர் அமைப்புகள் அவர்களை உள்வாங்கி முழுமையான ஈழ தன்மையை பெறுவது அவசியம்.நமது ஈழ நேசம் முழுமைபெற கிழக்கு மாகாணம் வன்னி மாவட்ட மக்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வது அவசியம்.

ஈழ அரசியலில் பலகீனப்பட்டிருந்த வடகிழக்கு இணைப்பை மீழமைத்த சம்பந்தர் ஐயாவுக்கு விமர்சனங்களுக்கு மேலாக எனது வாழ்த்துக்கள்.

பொயட் நீங்கள் உங்களை மேட்டுக்குடியைச் சேர்ந்தவர் என சொல்லிக்கொள்கிறீர்கள். மூத்த அனுபவமிக்க ஒரு கவிஞரிடமிருந்து இவ்வாறானதொரு வார்த்தைச் சிதறல்களை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு கவிஞன் என்ற அந்தஸ்தைப் பெறுவானாயின் அவன் மேட்டுக்குடிக்கோ அல்லது தாழ்ந்தகுடிக்கோ உரியவன் அல்லன். எழுத்தில் ஒன்றும் செயலில் வேறொன்றும் காட்டி நிற்கும் வெறும் வசன கவிகள் போன்ற ஒரு தோற்றமே ஏற்படுகின்றது.  நீங்கள் ஒரு மேட்டுக்குடியைச் சார்ந்தவர் என்ற எண்ணம் இன்னும் உங்களுக்குள் இருக்கின்ற போது எவ்வாறு நீங்களே உங்களை கவிஞர் எண்டு அழைக்கமுடிகின்றது? "நான் உட்பட" என்ற இரு சொற்களில் முற்சேர்க்கையாக நீங்கள் இணைத்ததன் காரணம்தான் என்னவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞருக்கு திண்ணையில சொல்லிவிட்டேன், கல்வியறிவினால் மட்டுமே மேட்டுக் குடி என கருதப்பட்ட யாழ் மக்கள், இப்போ மோட்டுக் குடிகள்... 

Link to comment
Share on other sites

அன்புகுரிய வாலி நானும் என்று குறிப்பிட்டது நானுட்பட கிழக்கு மாகாணம் வன்னி தொடர்பாக தவறாக சிந்திக்கக்கூடியவர்கள்தான் என்பதை சுட்டிக்காட்டவே.வன்னி கிழக்கு மாகாண மக்களின் ஆலோசனை பெறாமல் நாம் செயல்படுவது தவறு என்பதை சுட்டிக்காடவ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பொறுப்பான விளக்கத்துக்கு நன்றி பொயட்.

Link to comment
Share on other sites

3 hours ago, Nathamuni said:

கவிஞருக்கு திண்ணையில சொல்லிவிட்டேன், கல்வியறிவினால் மட்டுமே மேட்டுக் குடி என கருதப்பட்ட யாழ் மக்கள், இப்போ மோட்டுக் குடிகள்... 

பாஸ் இப்ப யாழ்குடாநாட்டில் மொக்குக்குடி குடிக்கிறாங்க.................பீர் சப்ளே காணாது என்று முறைப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Surveyor said:

பாஸ் இப்ப யாழ்குடாநாட்டில் மொக்குக்குடி குடிக்கிறாங்க.................பீர் சப்ளே காணாது என்று முறைப்பாடு.

நாங்கள் அடியாத கள்ளே, பியரே....

என்ன... எங்களட்டை காசு அவ்வளவா இருக்கேல்ல.....

இருந்திருந்தால், பியர் பக்டரியல்லோ போட்டுக் குடித்திருப்பம்.

இப்ப பெடியளட்ட காசு இருக்கு.. அனுபவிக்கட்டும்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

நாங்கள் அடியாத கள்ளே, பியரே....

என்ன... எங்களட்டை காசு அவ்வளவா இருக்கேல்ல.....

இருந்திருந்தால், பியர் பக்டரியல்லோ போட்டுக் குடித்திருப்பம்.

இப்ப பெடியளட்ட காசு இருக்கு.. அனுபவிக்கட்டும்... :)

அட்ரா....அட்ரா....அட்ரா  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அட்ரா....அட்ரா....அட்ரா  :grin:

சம்பந்தர்ல தொடங்கி, பக்திப் பக்கமாய் போய், அப்படியே சுழண்டு, மேட்டுக் குடி, மோட்டுக் குடி எண்டு அலைஞ்சு இப்ப மப்பில வந்து நிக்குது அண்ணோய். எங்க போய் நிக்கப் போகுது எண்டு யோசனையாக் கிடக்குது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

சம்பந்தர்ல தொடங்கி, பக்திப் பக்கமாய் போய், அப்படியே சுழண்டு, மேட்டுக் குடி, மோட்டுக் குடி எண்டு அலைஞ்சு இப்ப மப்பில வந்து நிக்குது அண்ணோய். எங்க போய் நிக்கப் போகுது எண்டு யோசனையாக் கிடக்குது. :rolleyes:

ஒரு இரண்டு நாள் கழிச்சு அனுஷ்கா படிச்ச தேவாரம் ஒன்றை போடுவமெண்டு பிளான் பண்ணியிருக்கிறன் :cool:

Link to comment
Share on other sites

9 hours ago, Nathamuni said:

சம்பந்தர்ல தொடங்கி, பக்திப் பக்கமாய் போய், அப்படியே சுழண்டு, மேட்டுக் குடி, மோட்டுக் குடி எண்டு அலைஞ்சு இப்ப மப்பில வந்து நிக்குது அண்ணோய். எங்க போய் நிக்கப் போகுது எண்டு யோசனையாக் கிடக்குது. :rolleyes:

பாஸ் சம்பந்தர் சிவனே என்று தான் நினைச்சதை செய்யுறார்....நினைச்சபாட்டிற்கு கதைக்கிறார்.....

அப்ப நாங்களும் தலைவர் வழியை பின்பற்டி நடக்கின்றோம்.  

13 hours ago, குமாரசாமி said:

அட்ரா....அட்ரா....அட்ரா  :grin:

அண்ணனிற்கு கள்ளெண்றால் அவ்வளவு உற்சாகம்.....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.