Jump to content

தமிழர் அரசியல் அமைப்புகளிடையே புரிந்துணர்வுக்கு வாய்ப்புக்கள் உண்டா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியல் அமைப்புகளிடையே புரிந்துணர்வுக்கு வாய்ப்புக்கள் உண்டா?

கலாநிதி சர்வேந்திரா

தமிழர் அரசியல் அமைப்புகளிடையே புரிந்துணர்வுக்கு வாய்ப்புக்கள் உண்டா?
 

 

ஈழத்தமிழர் தேசம் தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களைக் கொண்டதொரு நாடு கடந்த தேசமாக பரிணமித்திருக்கிறது. இந்நிலையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள அரசியல் அமைப்புக்கள் தமக்கிடையே போதிய புரிந்துணர்வைக் கொண்டுள்ளனவா? இவ் அமைப்புக்கள் தமக்குள் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏதும் உண்டா?

மே 2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் தலைமை தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒரே அமைப்பின் கையில் இல்லை. மே 2009 க்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பே இரு தளங்களிலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் தலைமையாக விளங்கியது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட தமிழர் தலைமையாக உள்ளது. நடைபெற்ற தேர்தல்களில் மக்கள் ஆதரவைப் பெற்ற அமைப்பாகத் தன்னை நிலைநிறுத்த முடிந்த காரணத்தாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தாயகத்தில் தமிழர் தலைமையாக தன்னை நிலைநிறுத்த முடிந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழர் தேசம் சார்ந்து காத்திரமான அரசியல் நிலைப்பாட்டைக் கெண்டிருந்தாலும் போதிய மக்கள் ஆதரவை தேர்தல்களில் பெற்று மக்கள் பிரதிநிதிகளாக தம்மை நிலைநிறுத்துவதில் இதுவரை வெற்றியடையவில்லை.

இருந்தபோதும் தாயகத்தைப் பொறுத்தவரை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட இரு முக்கிய அரசியல் அமைப்புக்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் நாம் அடையாளம் காண முடியும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் தோல்வியடைந்தாலும் தமது நிலைப்பாட்டின் அடிப்படையில் தொடர்ச்சியான செயற்பாடுகளைத் மேற்கொண்டு வருகிறது. அனைத்துலக நீதி விசாரணை கோரி முன்னெடுக்கப்பட்ட கையெடுத்துப் போராட்டத்தினை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஏறத்தாழ 200,000 மக்கள் இக் கையெழுத்துப் பேராட்டத்தில் பங்கு பற்றியிருக்கிறார்கள்.

இவ் இரண்டு அமைப்புக்களுக்குள்ளும் அரசியல் ரீதியில் முரண்பாடுகள் நிலவுகின்றன. இவ் இரண்டு அமைப்புக்களும் தமிழீழம் பற்றித் தற்போது பேசுவதில்லை. அதற்குரிய சூழலும் அங்கு கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழம் எனும் அரசியல் நிலைப்பாட்டைத் தாம் கைவிட்டு விட்டதாகப் பகிரங்கமாக அறிவித்தும் விட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இத்தனைய அறிவிப்புக்கள் எதனையும் வெளியிடவில்லை. எந்த ஒரு அரசியல் தீர்வு முயற்சியும் 'ஒரு நாடு – இரு தேசங்கள்' என்ற நிலையில் இருந்தே அணுகப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை பகிரங்கமாக முன்வைத்து அதற்கு ஆதரவு தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் ஒரு தேசம் அல்லது அவர்கள் கூறுவது போன்று தேசிய இனம் என்ற நிலைப்பாட்டில் உண்மையாக நின்று சுயநிர்ணயப்பாதையில் பயணிக்கவில்லை – தம்மை ஆதரித்து நிற்கும் மக்களுக்கு பொய்கூறி ஏமாற்றுகிறது என்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் குற்றச்சாட்டாகும். இது ஒரு வகையில் மக்களுக்குச் செய்யும் துரோகம் என்பதும் முன்னணியின் நிலைப்பாடு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் மக்களுக்குத் துரோகம் செய்ய மாட்டோம் எனவும் அனைத்துலக அரசுகளுடன் அந்நியப்படும் அணுகுமுறையினைக் கடைப்பிடிக்காமல் அவர்களின் ஆதரவுடன் உரிமைகளை வென்றெடுக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகள் அமைந்து வருகிறது என்ற வகையிலான கருத்துக்களை முன்வைக்கிறது. இதற்கு எதிர்வினையாக ஈழத் தமிழர் தேசத்துக்கு அனைத்துலக ஆதரவு தேவைப்படுவதுபோல அனைத்துலக சமூகத்துக்கும் தமது நலன்களை எட்டிக் கொள்வதற்கு ஈழத் தமிழர் தேசத்தின் ஆதரவு தேவைப்படுகிறது – இதனால் தேசம் – சுயநிர்ணய உரிமை விடயங்களில் விட்டுக் கொடுப்பற்ற நிலையைப் பேணி இந்நிலைப்பாட்டுக்கு அனைத்துலக ஆதரவினைப் பெற்றுக் கொள்ளல் அவசியம் என்ற கருத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, மக்கள் அவைகள், பிரித்தானியத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் அரசியல் இராஜதந்திர வழிமுறைச் செயற்பாடுகளில் உள்ளன. பிரித்தானியத் தமிழர் பேரவை முன்னர் உலகத் தமிழர் பேரவையில் அங்கம் வகித்து முரண்பாடுகள் காரணமாக தற்போது தனித்து இயங்குகிறது. இங்கு புலம்பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் இருக்கும் அனைத்து அமைப்புக்களும் குறிப்பிடப்படவில்லை. மே 2009 க்கு முன்னர் விடுதலைப் புலிகள் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து நின்று தற்போது வெவ்வேறு அரசியல் அமைப்புக்களாக இயங்கும் முதன்மை அமைப்புக்கள் பற்றியே குறிப்பிடப்படுகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்கு சுதந்திரமும் இறைமையுமுடைய தமிழீழத் தனியரசுதான் தீர்வு என்பதனை தனது அரசியல் அமைப்பில் பிரகனடப்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர் தேசம் சிங்கள அரசால் இனஅழிப்புக்கு (Genocide) உள்ளாக்கப்படுகிறது என்ற நிலைப்பாட்டை முன்வைத்துச் செயற்படுகிறது. ஒரு தேசம் என்ற வகையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் இனப்படுகொலைக்குள்ளாகும் மக்கள் என்ற வகையில் அதற்குப் பரிகாரம் தேடும் ஏற்பாடு என்ற வகையிலும் தமிழீழத் தனியரசுதான் ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும் எனும் நிலைப்பாட்டை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பகிரங்கமாக முன்வைக்கிறது. மக்கள் அவைகளும் தமிழீழம், இனஅழிப்பு என்ற நிலைப்பாடுகளைத் தமது யாப்பில் பிரகடனப்படுத்தி அதே நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றன.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை போன்றவை தமிழீழம் என்ற நிலைப்பாட்டை தனது யாப்பில் உள்ளடக்கவில்லை. அரசியல் தீர்வு குறித்து பேசும்போது சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட நிலைப்பாட்டை இவை எடுக்கின்றன. இது உள்ளக சுயநிர்ணய உரிமையா அல்லது வெளியக சுயநிர்ணய உரிமையா என்பது குறித்தும் கருத்து வெளியிடுவதில்லை. தமிழீழத் தனியரசுதான் தீர்வு என்ற நிலைப்பாட்டை முன்வைத்தும் செயற்படுவதில்லை. சிறிலங்காவில் இவ் வருடம் ஜனவரியில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பங்காளியாக உலகத் தமிழர் பேரவையும் தன்னை இணைத்து கூட்டமைப்பின் சுமந்திரனுடன் இணைந்து தற்போது செயற்பட்டு வருகிறது.

இத்தகைய ஒரு பின்னணியில் தமிழர் அரசியல் அமைப்புக்கள் தமக்கிடையேதொரு புரிந்துணர்வை ஏற்படுத்துவது சாத்தியம்தானா? அப்படியாயின் எத்தகைய ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும்? இவ் விடயத்தை நோக்கும் முன்னர் இன்று ஈழத் தமிழர் தேசம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில விடயங்களை குறித்துக் கொள்வோம்.

1. தமிழ் மக்கள் ஒரு தேசம் (அல்லது தேசிய இனம்) என்ற அடிப்படையில் அரசியல் தீர்வு காண்தல்.

2. தமிழ் மக்கள் ஒரு தேசம் (அல்லது தேசிய இனம்) என்ற நிலையினைத் தக்க வைத்துக்கொள்ளல். அதற்கு தமிழர் நிலங்கள் சிங்கள அரசால் பறித்தெடுக்காமல் பாதுகாப்பதும் வடக்கு கிழக்குப் பிரதேச இணைவும் அடிப்படையானது.

3. தாயக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல். இதற்கு சிங்கள இராணுவம் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து வெளியேறுதலும், தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழ் மக்களாலேயே தீர்மானிக்கப்படுதலும் அவசியம்.

4. ஈழத் தமிழ் மக்கள் திட்டமிட்ட வகையில் சிங்கள அரசால் இனஅழிப்புக்குள்ளாக்கப்பட்டு வருவதனை அனைத்துலக அரங்கில் உரிய முறையில் வெளிப்படுத்தி பரிகாரம் தேடல். சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி கோரல்

5. தமிழர் தாயகப் பகுதிகளை மேம்பாடு அடையச் செய்வதுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், போராளிகள், மாவீரர் குடும்பங்கள் தமது வாழ்வை மீளக் கட்டி எழுப்புதவற்கு வழிவகை செய்தல்.

மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களில் தமிழர் அமைப்புக்கள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்தின் பாற்பட்ட மிகக் குறைந்தபட்ச நிலைப்பாட்டினை எடுத்துக் கொள்கிறது. இதனால் இவ் விடயங்களில் கூட்டமைப்பு உண்மையுடன் செயற்படுமா என்ற கேள்வியும் எழுகிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது மக்கள் முன்வைத்த தேர்தல் அறிக்கைக்கு உண்மையாக கூட்டமைப்பு நடந்து கொள்ளும் பட்சத்தில் இத்தகைய புரிந்துணர்வுக்கு வாய்ப்புகள் உண்டு. 

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=a5cec31b-5f43-44a7-84ff-c68800dd9b28

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.