Jump to content

ஐ.நாவின் செயற்குழுவினருடன் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் பேச்சு!


Recommended Posts

ஐ.நாவின் செயற்குழுவினருடன் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நாவின் செயற்குழுவை நேற்றுமுன்தினம் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்த கலந்துரையாடலில் காணாமல் போகச் செய்யப்பட்டோர் மற்றும் தடுப்புக்காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினரின் கரிசனைகளை சுமந்திரன் எம்.பி., ஐ.நாவின் செயற்குழுவினரிடம் எடுத்துரைத்தார். காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நீதிப் பொறிமுறை மற்றும் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையின் அவசியத்தையும் இதன்போது சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தியதுடன், ஐ.நாவின் இந்தச் செயற்குழுவானது இந்தப் பொறிமுறைகள் தொடர்பான செயற்பாடுகளில் தொடர்ந்தும் தமது பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

http://malarum.com/article/tam/2015/11/18/12558/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-

 

 

Link to comment
Share on other sites

சுமந்திரன் தனது பாராளுமன்ற கன்னியுரையை "யுத்ததை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்திற்கு நன்றிகள்" எனத் தொடங்கியிருந்தார், அண்மையில் கூட இராணுவத்தினரைக் கெளரவிக்கும் பொபி மலரை தனது கோட்டில் குத்தி பாரளுமன்றத்திற்குச் சென்று தனது இராணுவ விசுவாசத்தினைக் காட்டியிருந்தார்.

இப்படிப் பட்ட நபர் காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நாவின் செயற்குழுவை தனியே சந்தித்தது மிகவும் அபாயகரமானது, அதுவும் அவர்கள் இராணுவத்திற்கெதிரான மிக முக்கிய சாட்சியங்களை கண்டு பிடித்திருக்கும் சந்தர்ப்பத்தில் இவர் அவர்களை தனியே சந்திப்பது பலத்த சந்தேகதினை ஏற்படுத்துகிறது. இப்படியான சந்திப்புக்களில் குறைந்தது இருவராவது கலந்து கொள்வது சிறந்தது.

நேற்று முன்தினம் கூட, இவர் தனது அறிக்கையொன்றிலே

(http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125993/language/ta-IN/------.aspx)

"தமிழ் அரசியல் கைதிகள்" என்ற சொல்லுக்குப் பதிலாக  "விடுதலைப் புலி சந்தேக நபர்கள்" எனும் பதத்தினை பயண்ப்டுத்தியிருந்தார். இதன் மூலம் இவர் அரச செயலை மறைமுகமாக நியாயப் படுத்துகிறாரா?

Link to comment
Share on other sites

நீண்ட கால பதவி வெறி பிடித்து அலையிது  இந்த வெறி படுகுழியில் வெகுவிரைவில் இவரை விழுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த இன்னொரு சகுனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த இன்னொரு சகுனி.

முட்டாள் துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்கள் படையைவிட சகுனி தேவலை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாலி said:

முட்டாள் துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்கள் படையைவிட சகுனி தேவலை!

சுமந்திரன் அரசியலுக்கு வந்த நாள் முதல் இன்று வரைக்கும் ஈழத்தமிழ்மக்களுக்காக இதுவரை சாதித்தது / நிறைவேற்றியது என்னவென்று சொல்லுங்கள்?

Link to comment
Share on other sites

5 minutes ago, வாலி said:

முட்டாள் துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்கள் படையைவிட சகுனி தேவலை!

உங்கள் தரவளிகளின் காட்டில் இப்போ மழை! .. இவ்வளவு காலமும் மா.க.மாணிக்கங்களாக! ...  இப்போ தேசியமாம்! ... சுமந்திரனாம்! ... ஆடூ நனையுதாம் ... என்று ஏதோ ஆ ஓ என்று ஒப்பாரி வச்சுதாம்!

Link to comment
Share on other sites

On 11/19/2015, 10:30:51, குமாரசாமி said:

சுமந்திரன் அரசியலுக்கு வந்த நாள் முதல் இன்று வரைக்கும் ஈழத்தமிழ்மக்களுக்காக இதுவரை சாதித்தது / நிறைவேற்றியது என்னவென்று சொல்லுங்கள்?

இப்படி கேட்டால் எப்படி மறு கருத்து வரும் ஏதாவது சும் புடுங்கி இருந்தால் தானே பதில் எழுதலாம் ஆனால் சம் சும்க்கு  தமிழனை நன்றாக வித்து பிழைக்க மாத்திரம் நன்றாக தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஐயாவின் இந்த முயற்சி பாரட்டத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

சுமந்திரன் ஐயாவின் இந்த முயற்சி பாரட்டத்தக்கது.

அண்டு தொடக்கம் எங்கடை தமிழ் தலைவர்மாரின்ரை முயற்சியளுக்கு பஞ்சமில்லை. ஆனால் செயல்லை காட்டுறத்துக்குத்தான் ஒரு வக்குமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகா பாரதத்தில் துரியோதனனை முட்டாளாக / முரடனாக மாற்றியதே இந்த சகுனி தான்.
சகுனிகளுக்கும் வக்காலத்து வாங்கும் ஒரு கூட்டம் ... வெளங்குன மாதிரி தான் ...

2 hours ago, colomban said:

சுமந்திரன் ஐயாவின் இந்த முயற்சி பாரட்டத்தக்கது.

அவரின் வேறு ஏதாவது முயற்சி பாராட்டத் தக்கதாக இல்லை என்று கூற ஏதும்  ...

Link to comment
Share on other sites

12294750_438711173001772_303371109183555

#தமிழ்_மக்களும்_சுமந்திரன்_எம்பியும்
உண்மையில் தமிழ் மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்குமிடையில் இருக்கும் பிரச்சினை இதுதான். சுமந்திரன் எம்.பி அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு சட்ட ரீதியாக அணுகுவதற்கு முயற்சிக்கின்றார். அவ்வாறு செல்லும் போது அதற்கு முன்னால் இருக்கும் சட்டச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டுகின்றார். அவர் சட்டத்தின் படி காட்டும் வட்டம் (சதுரம்) மக்களுக்கு வட்டமாகத் தெரியவில்லை. அதனை தமிழ் மக்கள் உடனடியாகவும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். சாத்வீக ரீதியாகவும் அறவழியிலும் போராடிய மக்களுக்கு வட்டம் வட்டமாகத்தான் தெரியும். அதனையே அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
எனவே கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தான் இழுத்த இழுப்புக்கு மக்கள் வரவேண்டும் என எண்ணாமல் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக செயலாற்றவேண்டும்.

... படித்ததில் ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.