Jump to content

நான் விதானை மாமரம்


arjun

Recommended Posts

நான் யாழ்ப்பாணத்தில் நின்றபோது எனது காணியில் பாதையை அடைத்துக்கொண்டு நின்ற மாமரத்தை தறிக்கவேண்டியிருந்தது. பெருமரங்கள் தறிப்பதற்கு முதல் விதானையிடம் அனுமதி பெறவேண்டும் என்றார்கள்....அதனால் விதானையாரின் அலுவலகம்? சென்றேன். அவரது அலுவலகம் ஒரு பழையவீட்டின் முன் விறாந்தையில் ஒரு அறையுடன் ஒதுக்கப்பட்டிருந்தது....வீட்டுவிறாந்தையில் ஒரு மேசையும் அதன் முன் ஒரு வாங்கும் போடப்பட்டிருந்தது. அவர் ஒன்று விட்டு ஒருநாள் வேலைக்கு வருவார் என்று போர்ட்டில் எழுதப்பட்டிருந்தது....எனது நல்லகாலம் நான் போனபோது onduty யில் இருந்தார்....ஆனால் பெரும்பாலும் அவரை தேத்தண்ணி கடைகளில்தான் காணமுடியும் என்றார்கள்.....வேலை நேரத்திலும் அடிக்கடி வெளியேபோய் நினைத்த நேரத்திற்கு வருவாராம்....

நான் போனது ஒருமழைநாளில்......விதானையார் சிவனே என்று வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்....நானும் பக்கத்துவீட்டு பொண்ணும் போனபோது.....மேலும் கீழும் பார்த்தபடி என்னவேணும் என்றுகேட்டார்....நான் விடயத்தை சொன்னேன்....இருங்கோ என்றார்....உட்கார்ந்தால் மேலே கூரை ஒழுகி தண்ணி விழுந்து தெறித்துக்கொண்டிருந்தது, கீழே சிவப்பு அட்டைகள் இலங்கை C.T.B. பஸ் போல் குறுகும் மறுக்குமாக மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தன......நான் காலை சிறிது உயர்திப்பிடித்தபடி அவர் கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தேன்.....அவர் கேள்வி கேட்கும்போது முகத்தை ஒரு விசனமாகவே வைத்திருந்தார் (அவர் இயல்பு அப்படிதான் என்பதை ஓரிரு நிமிடங்களில் அறிந்துகொண்டேன்).....சில கேள்விகள் எரிச்சலை தந்தது......நீங்கள் வேதக்காரியா, ஏன் போட்டுவைக்கவில்லை, கலியாணம் பண்ணிவிட்டீர்களா என.....அதற்கு நான் “வேதக்காரி இல்லை, போட்டு வைத்தால் வியர்வையில் கரைந்துவிடும், எனக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றேன்....உடனே கூடவந்த பெண்ணிடம் நீங்கள் யார் எங்கு இருக்கிறீர்கள், திருமணம் முடித்துவிட்டீர்களா எனக்கேட்டார்....

எல்லாவற்றிற்கும் பதில் அளித்தபின்...அப்ப மாமரம் என்ன சைஸ் இருக்கும் எனக்கேட்டார்.... வாய்க்குள் வந்த பதிலை விட்டுவிட்டு... அவர் வீட்டுக்கு முன் இருந்த மாமரத்தை காட்டி..அந்த மாமர சைஸ் இருக்கும் என்றேன்...பின் உயரம் ஒரு பனையடி இருக்குமா என்றார்....பனைமரம் அறுபதடி வளரும் மாமரம் அந்தளவு வளராதே என்றுவிட்டு....மீண்டும் அந்த மாமரத்தை காட்டி அதைவிட ஒரு பத்து இருபது அடி கூட இருக்கும் என்றேன். எல்லாவற்றையும் எழுதிவிட்டு.. மரத்தை பார்த்துவிட்டு தான் அனுமதி தரமுடியும் என்றார்....இதற்கிடையில் ஒரு வயதுபோன அம்மா ஒருவர் வந்து தனது காணிப்பிரச்சனையை முறையிட்டுக்கொண்டிருந்தார்....


நான் அந்த அம்மாவின் காலையே பார்த்துக்கொண்டிருந்தேன் காரணம் அட்டை காலில் ஏறிவிடுமோ என்ற பயம்....அந்த பெண்மணி விதானையாரை சராமாரியாக திட்டதொடங்கியிருந்தார்.......வந்த பெண்மணியின் காணிப்பாதையை அடுத்தவீடுகாறருக்கு விதானையார் அனுமதி அளித்துவிட்டாரம்.....அவர் விதானையாரை பேசும்போது “விதானயார் நீங்கள் வேலைக்கு புதுசு உங்களுக்கு சட்டம் கிட்டம் ஒண்டும் சரியா தெரியாது சும்மா தேவையில்லா வேலைகள் பாக்கதையுங்கோ, என்ன செய்யிறதெண்டாலும் முதல்ல உறுதிய பார்த்து அதன்படி செய்யுங்கோ” என்று. அத்துடன் விதானையார் சரண்டர்....”சரியம்மா கத்தாதையுங்கோ” நான் பாக்கிறன் நீங்கள் போங்கோ என்று அவரை அனுப்பிவிட்டு என்னுடைய காணிக்கு கிளம்பி வந்தார், வந்தவர் மாமரத்தை மேலும் கீழும் பார்த்துவிட்டு....அனுமதி தாறன் ஆனால் நீங்கள் காணி விக்கககூடாது, அப்படி விக்கிறதென்றால் sign பண்ணமாட்டன் என்று ஒரு குண்டை தூக்கிபோட்டார்....நான் ஒருகணம் சமாளித்துவிட்டு...ஆ......நான் கடைசிவரையும் விக்க மாட்டேன், அப்படி ஒரு எண்ணமே எனக்கில்லை என்று ஒரு பொய்யை சொல்லி...மனதுக்குள் signஐ போடுமான் என்று வேண்டிக்கொண்டேன். ஒருவழியாக மோட்டார் seatன் மேல்வைத்து sign பண்ணி தந்துவிட்டு..மேலும் நல்லூரில் இருக்கும் பிரதேச சபையிடம் அனுமதி பெறவேண்டும் என்றார், அட கடவுளே என்றுவிட்டு உடனேயே ஒரு ஆட்டோ பிடித்து பிரதேச சபைக்குசென்று கொடுத்தால்...அங்கு D.O. sign பண்ணவேண்டுமாம்.....

அதற்குமுன் D.O. ஒருவரை அனுப்பி மரத்தை வெட்டுவது சரியா இல்லையா என செக்பண்ணி...எல்லாம் ஓகே என்று சொன்னால் sign பண்ணுவார்....அதற்கு ஒரு இரண்டு, மூன்று நாட்களாகும் என்றார்கள்...நானும் பெருமூச்சுவிட்டபடி வெளியில் வந்தேன்..........ஒவ்வொருநாளும் நானும் விடாமல் போன் அடிப்பேன் அவர்களும் விதவிதமான கரணங்கள் கூறுவார்கள் ஒருநாளைக்கு D.O. “மீட்டிங், off, விஜயதசமி என.... ஆனால் சரியாக எட்டு நாட்களின் பின்தான் மரம்வெட்ட அனுமதி தந்தார்கள் அதுவும் தெரிந்தவர் மூலம் வேண்டிகொண்டதானால்.
அதன்பின் மரத்தை வெட்டி வெளியில் எடுத்து செல்வதற்கு roadpermit எடுக்கவேண்டும் என்றார்கள் உடனேயே 3rd cross street இல் (சரியாக ஞாபகம் இல்லை ) இருக்கும் இன்னுமொரு பிரதேச சபைக்கு சென்று அனுமதி கேட்டபோது......மாமரத்துக்கு அனுமதி தேவையில்லை என்றுகூறி ஒரு வர்த்தமானியை தூக்கி கையில் தந்துவிட்டார்கள்... அதுமுழுக்க சிங்களத்தில் பிரிண்ட் பண்ணபட்டு இருந்தது. அதில்அனுமதி எடுக்கதேவையில்லாத மரங்களுள் மாமரமும் அடக்கம்(சிங்களம் தட்டு தடுமாறி கொஞ்சம் வாசிப்பேன்). ......இவ்வளவு நாளும் அநியாயமாக போச்சே என்ற கவலை......விதானை, பிரதேச சபை ஒருவருக்குமே இதுபற்றி தெரியாதது ஆச்சரியமாக இருந்தது. 


.........எல்லாம் முடிந்து மாமரம் தறிக்கவெளிக்கிட்டால் ஒரே அடைமழை....அப்படி இருந்தும்...மழை விட்டு இடை வெளி வரும்போது தறிக்கத்தொடங்கிவிட்டார்கள்....எனக்கோ மனது கனத்து பாரமாக இருந்தது......நாங்கள் ஏறி விளையாடிய, ஊஞ்சல்கட்டி ஆடியமரம், நன்றாகக் காய்த்த மரம், ருசியான அம்பலவி மாம்பழம், தம்பி ஏறி மாங்காய் பிடுங்கி எறிய நான் சாக்கைவைத்து கேட்ச் பிடிப்பேன்...பிற்காலத்தில் அக்காவின் மகன் மாமரபுட்டியில் ஏறி நின்று பக்கத்து அறையில் தூங்கும் என்னை “ஆண்டே....ஆண்டே” என்று கூப்பிட்டு நித்ரையை குழப்புவார்.... இன்றும் கூட ஒரு சாக்கு முட்ட காய்த்து நின்றது.....ஆனால் நோய்வந்த முதியவர் போல்......நீண்ட கால பராமரிப்பில்லாமல் ஏராளமான குருவிச்சை பிடித்து நோய்வாய்பட்டது போல் தோற்றமளித்தது....இந்த மரத்தை வளர்க்க அம்மம்மா எவ்வளவு பாடுபட்டிருப்பார், இதுவளர எவ்வளவு காலம் எடுத்திருக்கும்..........”BACK TO THE FUTURE” படம் போல் காலச்சக்கரதில் ஏறி முன்னைய வாழ்கை வாழ்ந்து விட்டு வந்தால் எப்படி இருக்கும்.... எல்லா நினைவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்துபோயின...மனம் கனத்து வெறுமையாகி போக கடைசியில் அடி மாமரத்தை வாள்கொண்டு அறுக்க....பார்க்க...சகிக்காமல் பின்புறம் போய்விட்டேன்.

 

 

- ஊருக்கு போன மனைவியின் பதிவு .

12239692_10153242744188354_2456049653390

12243268_10153242744218354_7210924235911

12227037_10153242744223354_2782363774084

12239595_10153242744473354_5234825025988

12235021_10153242744548354_7336708890771

12234987_10153242744698354_2761280456137

12193620_10153242744828354_2126341618085

12196242_10153242744928354_9037685040411

12234956_10153242744943354_9108893800825

12227740_10153242745118354_6323039294056

12246898_10153242745163354_7446839416533

12246830_10153242745568354_3820899635987

12196367_10153242745763354_7437458698755

12239937_10153242745953354_7933376167256

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி அர்ஜுன் அண்ணா! :) தொடர்ந்து பகிருங்கள் வாசிக்க ஆர்வம்!! 

உந்த அட்டையின் படத்தை எடுத்துவிடுங்கள் தயவு செய்து.... இங்கால் பக்கம் வர முடியாமல் இருக்கு :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமந்த மாமரம்..

Link to comment
Share on other sites

25 minutes ago, arjun said:

- ஊருக்கு போன மனைவியின் பதிவு .

அர்ஜுன் உங்கள் மனைவியின் எழுத்து நடை நன்றாகவுள்ளது. ஊக்கப்படுத்துங்கள் மேலும் எழுத. பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரமானாலும் ஆயுள் முடிந்தால் கிளம்ப வேண்டியதுதான்....! பார்க்கப் பதறுது...!!

பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி அர்ஜுன்...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டு படங்களை பார்க்கும் போது, பாடசாலையில் படிக்கும் போது பெடியலுடன் இந்த மாமரதிலும் காய் பறித்த மாதிரி கிடக்கு .....

பசியாற்றிய மரம் வீழ்திருப்பதை பார்க்க மனதிற்கு கஸ்டமாக இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக்கூடாது அர்ஜுன்.. உங்கட துணைவியாரிட்டைச் சொல்லுங்கோ... அருமையான எழுத்து நடை...அவவுக்குக் கை வந்துள்ளது என்று!

அந்தப் பச்சை உங்களுக்கில்லை! அது அவவுக்குத் தான்!

அவவும் தோட்டத்திலிருந்து.. முற்றத்துக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்! அழைத்துக் கொண்டு வாருங்கள்!

உங்கள் அம்மாவின் கவிதை நடையும் நினைவுக்கு வருகின்றது!

காய்க்கா விட்டால்.. மாமரத்துக்கு மட்டுமில்லை...மனித மரங்களுக்கும் இது தான் கதி..!

இணைப்புக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

அருமந்த மாமரம்..

 

13 hours ago, suvy said:

மரமானாலும் ஆயுள் முடிந்தால் கிளம்ப வேண்டியதுதான்....! பார்க்கப் பதறுது...!!

பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி அர்ஜுன்...!!!

 

37 minutes ago, உடையார் said:

வீட்டு படங்களை பார்க்கும் போது, பாடசாலையில் படிக்கும் போது பெடியலுடன் இந்த மாமரதிலும் காய் பறித்த மாதிரி கிடக்கு .....

பசியாற்றிய மரம் வீழ்திருப்பதை பார்க்க மனதிற்கு கஸ்டமாக இருக்கு

அதே... உணர்வு தான் எனக்கும் ஏற்பட்டது.
இந்த மாமரத்துக்கு, 70 - 80 வயது இருக்கும் என்று நினைக்கின்றேன்.
எத்தனை தலைமுறையை கண்டது... வீழ்ந்து  கிடப்பதை பார்க்க, மனதிற்கு சங்கடமாக உள்ளது. 

Link to comment
Share on other sites

இப்படி வளர்ந்த பலன் தந்த மாமரத்தை வெட்டுவது பஞ்சமா பாதகம் தான் ஆனால் வெட்டவேண்டிய கட்டாயம் .

ஒரு வளவிற்குள் மனைவிக்கும் அவரது இரு சகோதரிகளுக்கும் காணிகள் இருந்தது .அவர்கள் இருவரும் தமது காணிகளை விற்றுவிட்டார்கள் .மனைவியுன் காணியின் பாதைக்கு குறுக்கே தான் அந்த மாமரம் நிற்கின்றது .எனவே வெட்ட வேண்டிய கட்டாயம் என்று சொன்னார் .

புதிததாக காணி வாங்கியவர்கள் முன்பின் தெரியாதவர்கள் எனவே இடையில் வேலியோ மதிலோ போட வேண்டிய நிலை .அந்த பகுளறுபடிகள் பற்றியும் மனைவி எழுதினால் பதிகின்றேன் .

பின்னோட்டம் இட்டவர்களுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாமரம் பெயருக்கேற்ற மாதிரி அந்தளவு உயரமாக இருக்கின்றதே.

உந்த விதானைமார் வெளி நாட்டுக்காரர் என்றால் அடிக்கிற நடப்பைப் பாக்க வேணும்.....
தாங்கள் தான் அந்தக் குறிச்சிக்கு அரசன் என்ற நினைப்பு அவர்களுக்கு
பகிர்விற்கு நன்றி அர்ஜுன் அண்ணை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பை தூண்டும் இயல்பான எழுத்து...
விதானையாரின் அதிகப் பிரசங்கித்தனம், சபலம், இலங்கையில் இருக்கும் சோம்பேறித்தனமான அரசாங்க இயந்திரம், பொறுப்புக் கூறல் அற்ற ஊழியர் இவர்களை  நன்கு அவதானித்து எழுதியிருக்கிறார்.
பாவம் அந்த மாமரம்... எவ்வளவு பெரிய மரம்.... ஒரு குடும்பத்தின், அயல் 'அட்டைகளின்' எல்லா இன்ப துன்பங்களையும் கம்பீரமாக நின்று அவதானித்து வளர்ந்த மரம் போல தெரிகிறது. 
இந்த ஒரு மரத்தை வேட்டியதற்கு பிராசித்தமாய் இன்னும் 10 மரங்களை வாங்கி நடச்சொல்லி அக்காவுக்கு ஆணை பிறப்பிக்கிறேன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுண்,

நீங்கள் உங்களது காணியை விக்கவேண்டிய தேவை என்ன? அதை வித்துக்காசாக்கி எதைச் சாதிக்கப்போகுறீர்கள்?

கொஞ்சம் யோசிச்சுப்பாருங்கள். சுமார் ஏழு வருடத்துகுமுதல் நானும் எனது குடும்பமும் யாழ்ப்பாணம் போயிருந்தோம், அப்போது பிலாப்பழ சீசன் எனது சின்ன மகன் சாப்பிட்ட பிலாப்பழச் சுழையின் விதை கொஞ்சம் முளை விட்டிருந்தது, அதைக்கொண்டுபோய் மதில்கரையில தாட்டுவிட்டு அம்மம்மா இது முளைத்தால் தண்ணிவிடுங்கள் எனக்கூறிவிட்டு மீண்டும் புலம்பெயர்தேசம் பயணம், அது வளர்ந்து மரமாகி போனவருசம் காய்க்ககத் தொடங்கிவிட்டது 

கவிஞர் ஜெயபாலன் ஒரு கவிதையில் கேட்டிருப்பார் என் பேரனும் பூட்டனும் பகிர்ந்துண்ண யார் பழமரம் வைப்பார்கள் என எனது மகன் தனது பேரனுக்காய்ப் பழமரம் உண்டாக்கியுள்ளான்

இந்த உலகமும் அதன் சுற்றுச்சூழலும் வளங்களும் எங்களது சொந்தமில்லை எமது அடுத்த சந்ததிக்கானதுஅதைப்பாதுகாத்து அவர்களது கைகளில் கையளித்ததும் அது அவர்களுக்கு உரியதானதாக இருக்காது அவர்களது அடுத்த சந்ததிக்கானது.

எனிலும் மிகவும் அருமையான பதிவு, இயல்பாக எழுதுகிறார் ஆக்கத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குக் கூட மரத்தைத் தறித்ததை ஏற்றுக்கொள முடியவில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.