Jump to content

"தீரா வலி தரும் தீபாவளி"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று "தீரா வலி தரும் தீபாவளி" என்று சிறிய கவிதை எழுதியதை 54 பேர் முகநூலில் பகிர்ந்துள்ளனர். அவர்கள் அத்தனை பேரிலும் எத்தனை பேர் அக்கவிதையை விளங்கிக்கொண்டனர் ???

சிறு வயதில் நானும் மற்றவர்போல் புது ஆடை உடுத்தி கோயிலுக்குச் சென்றுவந்து ஆட்டிறைச்சிக் கறியுடன் அம்மா பரிமாறும் உணவை ஆவலுடன் உண்டவள் தான். புதிய ஆடை வாங்குவது மகிழ்வான விடயம் தான். ஆயினும் அதைவிட வேறு எந்த விளக்கமும் சிறுவயதில் தேவையாக இருக்கவில்லை. நரகாசுரன் அசுரன். அவன் அழிவது நல்லது தான் என்பதுடன் விடயம் முடிந்துவிடும்.

கொஞ்சம் வளர்ந்தவுடன் நண்பிகளின், கூடப்படிப்பவரின் உடையுடன் போட்டிபோடுமளவு எமது தீபாவளி ஆடைத் தெரிவு அவ்வளவே. புலம்பெயர்ந்து சென்ற பின் எமக்கு நினைத்த நேரத்தில் ஆடைகள் வாங்க முடியும் என்பதால் தீபாவளி என்ற ஒன்றின் தேவை இருக்கவில்லை கடந்த முப்பது ஆண்டுகளாக.

பாடசாலையில் பிள்ளைகளுக்குக் கற்பிக்க ஆரம்பித்த பின் பிள்ளைகளுக்கு விளக்குவதற்காக ஆரம்பத்தில் நரகாசுரன் கதை சொல்லி எமக்கே அதில் நம்பிக்கை வராததனாலும் புலம்பெயர்ந்த பிள்ளைகளும் தீபாவளி கொண்டாடாடதனாலும் தற்காலிகமாக அந்தப் பிரச்சனை தீர்ந்தது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன்னர் மீண்டும் லண்டனுக்கு இடம்பெயர்ந்தபோது மீண்டும் அந்தத் தீராத தலைவலி எட்டிப் பார்த்தது.

லண்டனில் துவேசம் இல்லாமல் அனைத்து இனத்தவரின் மதத்தவரின் விழாக்களும் மற்றைய பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்து தாம் அனைவரையும் மதிக்கிறோம் என்று காட்டுவர். சிறுவர் பாடசாலைகளில் விளக்குகள் செய்து, நிறம் தீட்டி, தீபாவளி ஏன் கொண்டாடுவது என்று விளக்கம் கூறிப் பிள்ளைகளும் ஆர்வமாகக் கேட்டு உள்வாங்குவர். அப்படியோரு பொழுதில் தான் உதவி ஆசிரியையாக நானொரு பள்ளியில் வேலை செய்தபோது தீபாவளி நாளில் ஒரு புத்தகத்தை எடுத்து ஆசிரியை மாணவர்களுக்கு வாசித்து விளக்கம் கூறினார். அசுரன் ராவணணை  கிங் ராமர் கொண்ட நாள்த்தான் இதுஎன்று தான் நேரில் பார்த்தது போல் பத்துத் தலை அவனுக்கு. இருபது கை என்றெல்லாம்  ஆசிரியர் கூற எனக்கு வந்த கோபத்தில் ராவணன் கெட்ட மன்னன் இல்லை. ராமன் தான் கெட்டவன் என்று கூறி பிள்ளைகளுக்கு முன்னர் ஆசிரியருடன் தர்க்கம் செய்ததில் வேலை போனது வேறுகதை.

அதன் பின் பல நூலகங்களிலும் பார்த்தால் ராவணணை மிகக் கேவலமாகச் சித்தரித்து ராமனை நல்லவனாக்கி அவனை கொன்ற தினம் தான் தீபாவளி என்று எத்தனையோ வாடஇந்தியர்கள் தயாரித்த ஆங்கில நூல்கள். லண்டனில் கற்கும் அனைத்துப் பிள்ளைகளையும் கேட்டால் ராவணன் கதையைத் தீபாவளியுடன் தொடர்புபடுத்தி மிக அழகாகச் சொல்வார்கள்.எமது தமிழ் பிள்ளைகள் உட்பட.

ஆனால் எமக்கு கொண்டாடும் தீபாவளி எதற்கு என்று தெரியாது. எதோ மற்றவர்கள் கொண்டாடுகிறார்கள் நாமும் கொண்டாடுகிறோம். ஏன் கொண்டாடுவது??? அதுவும் எதோ நரகாசுரனைக் கொண்டமைக்காக. மற்றப்படி கோயிலுக்கு ஆடை அணிந்து நகை அடுக்கிப் போவோம். அதுவும் மற்றவருக்காக. முகநூலிலும் வாழ்த்துச் சொல்வோம் மற்றவருக்காக. இப்பிடி மற்றவர்களுக்காக எல்லாம் செய்யும் நாம் தமிழுக்காக தமிழருக்காக என்ன செய்தோம்?? செய்யப்போகிறோம் ???

இப்படியே போனால் முகநூலில் சிலர் எழுதியதுபோல பிரபாகரன் என்ற அசுரனை மகிந்த என்னும் மன்னன் கொன்றான் என்று அதைக் கொண்டாடுவோம் என்றால் அதனால் எமக்கு என்ன நட்டம் என்று அதையும் கொண்டாடலாம் எம் அடுத்த தலைமுறை.

 

தமிழரை அழிப்பதற்கு மற்றவர் தேவையில்லை.தமிழரே போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தீபாவளியைப் பற்றிய இனிய நினைவுகள் உண்டு!

பாதித் தேங்காயில், கொஞ்சம் பழைய துணியைப் போட்டுப் பின்னர் கொஞ்சம்  தேங்காய் எண்ணெய் விட்டு...தென்னம் மட்டை அல்லது வாழைத் தண்டில், வீட்டுப் படலைக்கு முன்னால் விளக்கேற்றுவது ஒரு இனியையான அனுபவம்! பக்கத்துக்கு வீடுகளுடன் ஆருடைய விளக்குப் பெரியது என்று ஒரு ஆரோக்கியமான போட்டி...! புத்தாடைகள் அணிவதில், எதிர்பார்ப்பதில் கொஞ்சம் ஆர்வம்..அத்துடன் உறவினர்கள் வாங்கி வருவது.. ஒரு மறக்க முடியாத அனுபவம்..! அண்மையில் ஒரு உறவனர் மரணமடைந்த போது...அவர் தீபாவளிக்கு வாங்கித் தந்த ஒரு 'ரீ' சேட்டைத் தவிர அவரைப் பற்றிய வேறு  எந்த நினைவும் எனக்கு இருக்கவில்லை!  பண்டிகைகள் என்பவை உறவுகளை இணைக்கும் பாலம் என்றே கருதுகின்றேன்! அத்துடன் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்காக விசேட சமையல் செய்வதால்... மரக்கறி வியாபாரி...ஆட்டிறைச்சி வியாபாரி... புடவை வியாபாரி... உடை தைப்பவர் என்று பலரது தொழில்கள் பெருக வாய்ப்பும் உண்டு! அத்துடன் எனது பெற்றோர் ஒரு வித்தியாசமான பழக்கத்தை வைத்திருந்தார்கள்! ஒவ்வொரு தீபாவளிக்கும் அவர்களது பெற்றோர்களுக்குப் புது வேட்டியும், புது சேலையும் எடுத்துக் கொடுப்பார்கள்! பொருளாதார நிலைகள் மாறிய பொழுதுகளில்.. புடவைகளின் தரம் ஏறி இறங்கியதே தவிர... புடவை வாங்குவது மட்டும் இறுதி வரை நிற்கவே இல்லை!

அதனால் எனக்கு.. நரகாசுரனைப் பற்றியோ அல்லது இராவணனைப் பற்றியோ எந்தக் கவலையும் உண்டாவதில்லை! அந்த இனிமையான பண்டிகையின் இனிய நினைவுகள் மட்டுமே இதயம் முழுவதும் நிறைந்திருக்கின்றது! அந்த நினைவுகளைப் பத்திரமாகப் பொத்தி வைத்திருக்கவே விரும்புகின்றேன்!

தைப்பொங்கல், தீபாவளி என்று ஒவ்வொன்றாக இழந்து கொண்டே போனால்... எங்கே போய் எமது இனம், எமது குழந்தைகள் நிற்கப் போகின்றன?

அவர்களுக்கென்று எதனை விட்டுச் செல்லப் போகின்றோம்?

கிறிஸ்துவின் பிறப்பில் கூட, அவரது வாழ்வில் கூட...ஆயிரம் முரண்பாடுகள் இருக்கின்றன!

அதற்காக அவர்கள் கிறிஸ்மஸ்  கொண்டாடுவதை விட்டு விடுவார்களா என்ன?

 

முள்ளி வாய்க்கால் என்பது ஒரு 'சூர சம்ஹாரம்' என்பதில் எனக்கு இரு கருத்துக்கள் இருந்தது கிடையாது!

இராவணன் எவ்வளவு பெரியவன் என்பதற்கு... ஒரு சின்ன உதாரணம்!

திருஞான சம்பந்தன் என்ற நாயனார்.. திருநீற்றின் மகிமையை ஒப்பிடுவதற்கு.. உயர்வான பொருள் ஒன்றைத் தேடிக் களைத்துக் கடைசியாக ...

இராவணன் மேலது நீறு...என்று தான் முடிக்கிறார்! இவ்வளவுக்கும் அவர் ஒரு பிராமணன்!

எனவே.. சுமே... உண்மைகளை ஒரு போதும் குழி தோண்டி...நிரந்தரமாகப் புதைத்து விட முடியாது!

என்றோ ஒரு நாள் ..அவை நிமிர்ந்தே நடை பயிலும்!

உங்கள் பகிர்வுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

19 minutes ago, புங்கையூரன் said:

எனக்கும் தீபாவளியைப் பற்றிய இனிய நினைவுகள் உண்டு!

 

தைப்பொங்கல், தீபாவளி என்று ஒவ்வொன்றாக இழந்து கொண்டே போனால்... எங்கே போய் எமது இனம், எமது குழந்தைகள் நிற்கப் போகின்றன?

அவர்களுக்கென்று எதனை விட்டுச் செல்லப் போகின்றோம்?

கிறிஸ்துவின் பிறப்பில் கூட, அவரது வாழ்வில் கூட...ஆயிரம் முரண்பாடுகள் இருக்கின்றன!

அதற்காக அவர்கள் கிறிஸ்மஸ்  கொண்டாடுவதை விட்டு விடுவார்களா என்ன?

 

 

அருமை. மேலே உள்ள கருத்துக்குதான் பச்சை

Link to comment
Share on other sites

6 hours ago, புங்கையூரன் said:

எனக்கும் தீபாவளியைப் பற்றிய இனிய நினைவுகள் உண்டு!

பாதித் தேங்காயில், கொஞ்சம் பழைய துணியைப் போட்டுப் பின்னர் கொஞ்சம்  தேங்காய் எண்ணெய் விட்டு...தென்னம் மட்டை அல்லது வாழைத் தண்டில், வீட்டுப் படலைக்கு முன்னால் விளக்கேற்றுவது ஒரு இனியையான அனுபவம்! பக்கத்துக்கு வீடுகளுடன் ஆருடைய விளக்குப் பெரியது என்று ஒரு ஆரோக்கியமான போட்டி...! 

 

புங்கை
நீங்கள் தீபாவளியையும் கார்த்திகை விளக்கீட்டையும் போட்டு குழப்பி விட்டீர்கள். படலைக்கு வெளியே விளக்கேற்றுவது கார்த்திகை விளக்கீட்டிற்குத்தான். தீபாவளிக்கு வெடி, புதுஉடை, ஆட்டிறச்சி போன்ற சமாச்சாரங்கள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

புங்கை
நீங்கள் தீபாவளியையும் கார்த்திகை விளக்கீட்டையும் போட்டு குழப்பி விட்டீர்கள். படலைக்கு வெளியே விளக்கேற்றுவது கார்த்திகை விளக்கீட்டிற்குத்தான். தீபாவளிக்கு வெடி, புதுஉடை, ஆட்டிறச்சி போன்ற சமாச்சாரங்கள்தான்.

வணக்கம், ஜீவா! கொஞ்சம் குழம்பித் தான் போய் விட்டேன் போல உள்ளது!

தீபாவளி, விளக்கீடு இரண்டும் கார்த்திகை மாதத்தில்..அடுத்தடுத்து வருகின்றன என்று நினைக்கிறேன்!

தீபாவளி என்பது  தீப + ஆவளி என்று இரு வார்த்தைகள் சேர்ந்தது..அதாவது தீபங்களின் வரிசை என்று பொருள்படும்!

அதனால் தான்... இந்தக் குளறுபடி ஏற்பட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஜீவன் சிவா said:

புங்கை
நீங்கள் தீபாவளியையும் கார்த்திகை விளக்கீட்டையும் போட்டு குழப்பி விட்டீர்கள். படலைக்கு வெளியே விளக்கேற்றுவது கார்த்திகை விளக்கீட்டிற்குத்தான். தீபாவளிக்கு வெடி, புதுஉடை, ஆட்டிறச்சி போன்ற சமாச்சாரங்கள்தான்.

தியேட்டருக்கு வரும், புது சினிமாப் படங்களை சேர்க்க மறந்திட்டீங்க ஜீவா.  Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை தங்களின் கருத்து அருமையானது....!

கச்சியப்பருக்கு திதி ,அதிதி என இரு மனைவியர். அதில் ஒருவரின் பிள்ளைகள்  சுரர்கள் (தேவர்கள்) என்றும், மற்றவரின் பிள்ளைகள் அசுரர் எனவும் கூறுவர். ஆகவே சுரருக்கும் அசுரருக்கும் கச்சியப்பர்தான் தந்தையாவார். (கிருத , திரேதா யுகங்கள்)

இராமன் மஹா விஷ்னுவின்  அவதாரம். சும்மா ஆரியம் திராவிடம் என்று மதவாதிகள் பிரித்தாள நினைத்தால் அதுக்கேன் விலை போறீங்கள். அவை வடக்குப் பக்கம், தெற்குப் பக்கத்தின் குறியீடுகள் அவ்வளவுதான்.

ஈழத்திலும் யாழ்ப்பாணத்தார்/ மட்டக்களப்பார்.  யாழ்ப்பாணத்தார் / வன்னியார், நகரத்தார்/ தீவார். ( இந்த லட்சணத்தில் இலங்கையே ஒரு உசுக்குட்டித் தீவுதான்) இப்படி எத்தனை வேறுபாடுகள் அதுவும் பத்து மைலுக்குள்.

விஷ்னு வாமன அவதாரத்தில் அசுரச் சக்கரவர்த்தி மாபலியிடம் பிச்சை எடுத்து மூன்றடி மண் கேட்கிறார்.

மீனாக , பண்றியாக, நரசிங்கமாக இப்படிப் பல....!

தீபாவளிக்கு காரணமான நரகாசுர வதம்கூட அவர் விருப்பபபடிதான் நடந்தது. தாய்தந்தையரான பூமாதேவி விஷ்னுவால்தான் நிகழ்ந்தது.

எமது மூதாதையர் தொன்று தொட்டு செய்து வந்திருக்கின்றார்கள் , அதை நாமும் செய்கின்றோம்,வருசதில் ஒருநாள் யாரையும் நோகடிக்காமல் சந்தோசமாக இருக்கின்றோம்.

இவற்றுக்கெல்லாம் ஆப்பு வைத்துவிட்டு அடுத்து உங்களிடம் ஒரு தீர்வோ, தெரிவோ இருக்குதா என்டால் எதுவுமில்லை. சும்மா சகட்டு மேனிக்கு யானை வாழைத் தோட்டத்துக்க புகுந்தமாதிரி போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான்.

 

Link to comment
Share on other sites

புங்கை, சுவி... உங்கள் இருவரதும் கருத்துக்கள்  மிக அருமை!.... :)

 

இப்ப சித்திரைப் புத்தாண்டைத் தைப் பொங்கலுடன் சேர்த்திட்டார்கள் ஒரு கூட்டத்தினர் ....ஒரு கொண்டாட்டம் குறைந்திட்டுது சிலருக்கு... தீபாவளிக்கும் ஆப்பு வைத்தால்..

சொந்த நாடும் இல்லை கொண்டாட்டங்களும் இல்லை......

ஆண்டவா கண் திறக்கமாட்டாயா???

 

 

:)

 

Link to comment
Share on other sites

இந்தக் கொண்டாட்டங்கள் புலத்தில் முதற் சந்ததியினரான நாம் இருக்கும் வரைதான். அடுத்த சந்ததியினர் நிச்சயமாக இவ்வாறான கொண்டாட்டங்களில் விருப்பு காட்டமாட்டார்கள். அவர்கள் வளரும் சூழல், கலாச்சாரம் போன்ற காரணிகளால் அவர்கள் சிலவேளைகளில் மாறுபட்ட முறையில் கொண்டாடத் தொடங்கலாம்.

இருந்தாலும் அம்மா தேய்த்துவிட்ட எண்ணெய்,கண் எரிய எரிய தலையில் தப்பிய சீயாக்காய் அரப்பு, புது உடையுடன் ஒரு ஊர்சுற்றல், குடும்பமாக அடித்த ஆட்டின் இரத்த வறை, மூளைப் பொரியல், அடுப்புக்குள் சுட்டுத் தின்னும் ஆட்டின் இன்னொரு உறுப்பு (பெயர் மறந்து விட்டது) அப்புறம் மதியம் ஆட்டிறைச்சியுடன் சாப்பாடு + சூப்பு (தீபாவளிக்கும் காய்ச்சலுக்கும்தான் சூப்பு கிடைக்கும்). மறுபடியும் அடுத்த செற் உடுப்புடன் ஊர் வலம். ஆ புதுப்பட ரிலீஸ் (குறிப்பிடாவிட்டால் தமிழ்சிறீ கோவிப்பார்).

இப்படி அனுபவித்த தீபாவளியை, யாழில் தற்காலிகமாக வசித்தாலும் பார்க்க முடியவில்லை. எனது சொந்த ஊர் 1990 இலிருந்து வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டது. சொந்தங்கள், அயலவர்கள் உலகம் முழுவதும் பரவி விட்டார்கள். மொத்தத்தில் இன்னுமொரு வெறுமையான தீபாவளி.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2015, 05:06:27, புங்கையூரன் said:

வணக்கம், ஜீவா! கொஞ்சம் குழம்பித் தான் போய் விட்டேன் போல உள்ளது!

தீபாவளி, விளக்கீடு இரண்டும் கார்த்திகை மாதத்தில்..அடுத்தடுத்து வருகின்றன என்று நினைக்கிறேன்!

தீபாவளி என்பது  தீப + ஆவளி என்று இரு வார்த்தைகள் சேர்ந்தது..அதாவது தீபங்களின் வரிசை என்று பொருள்படும்!

அதனால் தான்... இந்தக் குளறுபடி ஏற்பட்டது!

வயசு போட்டுது tw_blush:

On 12/11/2015, 05:18:25, தமிழ் சிறி said:

தியேட்டருக்கு வரும், புது சினிமாப் படங்களை சேர்க்க மறந்திட்டீங்க ஜீவா.  Smiley

 

On 12/11/2015, 09:42:23, suvy said:

புங்கை தங்களின் கருத்து அருமையானது....!

கச்சியப்பருக்கு திதி ,அதிதி என இரு மனைவியர். அதில் ஒருவரின் பிள்ளைகள்  சுரர்கள் (தேவர்கள்) என்றும், மற்றவரின் பிள்ளைகள் அசுரர் எனவும் கூறுவர். ஆகவே சுரருக்கும் அசுரருக்கும் கச்சியப்பர்தான் தந்தையாவார். (கிருத , திரேதா யுகங்கள்)

இராமன் மஹா விஷ்னுவின்  அவதாரம். சும்மா ஆரியம் திராவிடம் என்று மதவாதிகள் பிரித்தாள நினைத்தால் அதுக்கேன் விலை போறீங்கள். அவை வடக்குப் பக்கம், தெற்குப் பக்கத்தின் குறியீடுகள் அவ்வளவுதான்.

ஈழத்திலும் யாழ்ப்பாணத்தார்/ மட்டக்களப்பார்.  யாழ்ப்பாணத்தார் / வன்னியார், நகரத்தார்/ தீவார். ( இந்த லட்சணத்தில் இலங்கையே ஒரு உசுக்குட்டித் தீவுதான்) இப்படி எத்தனை வேறுபாடுகள் அதுவும் பத்து மைலுக்குள்.

விஷ்னு வாமன அவதாரத்தில் அசுரச் சக்கரவர்த்தி மாபலியிடம் பிச்சை எடுத்து மூன்றடி மண் கேட்கிறார்.

மீனாக , பண்றியாக, நரசிங்கமாக இப்படிப் பல....!

தீபாவளிக்கு காரணமான நரகாசுர வதம்கூட அவர் விருப்பபபடிதான் நடந்தது. தாய்தந்தையரான பூமாதேவி விஷ்னுவால்தான் நிகழ்ந்தது.

எமது மூதாதையர் தொன்று தொட்டு செய்து வந்திருக்கின்றார்கள் , அதை நாமும் செய்கின்றோம்,வருசதில் ஒருநாள் யாரையும் நோகடிக்காமல் சந்தோசமாக இருக்கின்றோம்.

இவற்றுக்கெல்லாம் ஆப்பு வைத்துவிட்டு அடுத்து உங்களிடம் ஒரு தீர்வோ, தெரிவோ இருக்குதா என்டால் எதுவுமில்லை. சும்மா சகட்டு மேனிக்கு யானை வாழைத் தோட்டத்துக்க புகுந்தமாதிரி போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான்.

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவி அண்ணா

On 12/11/2015, 14:35:41, மீனா said:

புங்கை, சுவி... உங்கள் இருவரதும் கருத்துக்கள்  மிக அருமை!.... :)

 

இப்ப சித்திரைப் புத்தாண்டைத் தைப் பொங்கலுடன் சேர்த்திட்டார்கள் ஒரு கூட்டத்தினர் ....ஒரு கொண்டாட்டம் குறைந்திட்டுது சிலருக்கு... தீபாவளிக்கும் ஆப்பு வைத்தால்..

சொந்த நாடும் இல்லை கொண்டாட்டங்களும் இல்லை......

ஆண்டவா கண் திறக்கமாட்டாயா???

 

 

:)

 

ஆண்டவனுக்கு இருக்கிற பிரச்சனைக்குள்ள இதைப் பாக்க எங்க நேரம் மீனா ???

On 12/11/2015, 15:09:37, ஜீவன் சிவா said:

இந்தக் கொண்டாட்டங்கள் புலத்தில் முதற் சந்ததியினரான நாம் இருக்கும் வரைதான். அடுத்த சந்ததியினர் நிச்சயமாக இவ்வாறான கொண்டாட்டங்களில் விருப்பு காட்டமாட்டார்கள். அவர்கள் வளரும் சூழல், கலாச்சாரம் போன்ற காரணிகளால் அவர்கள் சிலவேளைகளில் மாறுபட்ட முறையில் கொண்டாடத் தொடங்கலாம்.

இருந்தாலும் அம்மா தேய்த்துவிட்ட எண்ணெய்,கண் எரிய எரிய தலையில் தப்பிய சீயாக்காய் அரப்பு, புது உடையுடன் ஒரு ஊர்சுற்றல், குடும்பமாக அடித்த ஆட்டின் இரத்த வறை, மூளைப் பொரியல், அடுப்புக்குள் சுட்டுத் தின்னும் ஆட்டின் இன்னொரு உறுப்பு (பெயர் மறந்து விட்டது) அப்புறம் மதியம் ஆட்டிறைச்சியுடன் சாப்பாடு + சூப்பு (தீபாவளிக்கும் காய்ச்சலுக்கும்தான் சூப்பு கிடைக்கும்). மறுபடியும் அடுத்த செற் உடுப்புடன் ஊர் வலம். ஆ புதுப்பட ரிலீஸ் (குறிப்பிடாவிட்டால் தமிழ்சிறீ கோவிப்பார்).

இப்படி அனுபவித்த தீபாவளியை, யாழில் தற்காலிகமாக வசித்தாலும் பார்க்க முடியவில்லை. எனது சொந்த ஊர் 1990 இலிருந்து வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டது. சொந்தங்கள், அயலவர்கள் உலகம் முழுவதும் பரவி விட்டார்கள். மொத்தத்தில் இன்னுமொரு வெறுமையான தீபாவளி.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.எது உங்கள் ஊர் சிறி ஜீவன் ??

Link to comment
Share on other sites

5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.எது உங்கள் ஊர் சிறி ஜீவன் ??

காங்கேசன்துறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை இன்னும் இருக்குத்தானே. எந்த வரைபடத்தில் இருந்து எடுத்தார்கள்??

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காங்கேசன்துறை இன்னும் இருக்குத்தானே. எந்த வரைபடத்தில் இருந்து எடுத்தார்கள்??

மக்களற்ற இடம் 25 வருடமாக வேறுமனே புவியியல் படத்தில் மட்டுமே உள்ளது. நிஜத்தில் வீடுகளற்று வெறுமையாக இருப்பதையே அப்படி எழுதினான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.