Jump to content

புலம்பெயர்ந்தோரும் புகலிட நாடுகளும்! -கலாநிதி சர்வேந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தோரும் புகலிட நாடுகளும்! -கலாநிதி சர்வேந்திரா

புலம்பெயர்ந்தோரும் புகலிட நாடுகளும்!
 

 

ஈழத்தமிழ் புலம்பெயர் மக்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் தமது தாய்நாட்டுடன் பேணிக் கொள்ளும் உறவுகளை இவர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள பெரும் சமூகத்தினர் எவ்வாறு பார்க்கின்றனர்? இவர்களின் தாயகத் தொடர்பு இரட்டை அல்லது பிளவுண்ட விசுவாசத்துக்கு இடமளிக்கும் என்பதனால் அதனை முழுமையாக நிராகரிக்கிறார்களா? புலம்பெயர்ந்தோரின் தாயகத் தொடர்பு இவர்கள் வாழும் நாடுகளின் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கிறதா? புலம்பெயரந்து வாழும் மக்களுக்கும் இவர்கள் வாழும் நாடுகளின் பெரும் சமூகத்துக்குமிடையே சமூக, பண்பாட்டுத் தளங்களில் பாரிய முரண்பாடுகள் எழுகின்றனவா? இவற்றைப் பற்றிய சில விடயங்களை இன்றைய பத்தி தொட்டுச் செல்கிறது.

இரட்டை அல்லது பிளவுண்ட விசுவாசம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் விவாதங்களில் புலம்பெயர்ந்து வாழும் சமூகங்கள் தாம் பிறந்து வளர்ந்த நாட்டுடன் பேணும் எல்லாவகையான தொடர்புகளும் எதிர்மறையாகப் பார்க்கப்படுவதில்லை. இதேபோல் பண்பாட்டு வடிவத்தில், பழக்கவழக்கங்களாக நாம் பிறந்த வளர்ந்து நமது நாட்டில் இருந்து புலத்துக்கு இறக்குமதி செய்துள்ள எல்லா விடயங்களும் பெரும் சமூகத்தால் நிராகரிக்கப்படுவதில்லை. புலத்தில் வாழும் வெளிநாட்டுப் பின்னணி கொண்ட மக்களின் வாழ்க்கையில் காணப்படும் பேணப்படும் எல்லா அம்சங்களும் பெரும் சமூகத்தால் பிரச்சினைக்குரியதாகப் பார்க்கப்படுவதில்லை. சில ஏற்கப்படுகின்றன. வேறு சில நிராகரிக்கப்படுகின்றன.

உதாரணமாக, மனிதாபிமானம், மனித உரிமைகள் தொடர்பாக அரசுகளிடம் ஓர் இரட்டைத்தன்மை இருந்தாலும் பெரும் சமூகத்தின் மக்கள் மத்தியில் இவற்றுக்கு மதிப்பு உண்டு. இதன்பாற்பட்ட செயற்பாடுகள் இவர்களது கவனத்தை ஈர்க்கும்போது அதற்கான ஆதரவினை இவர்கள் வழங்குவார்கள். இதற்கு 2004 டிசெம்பரில் சுனாமி பேரலை விளைவித்த அனர்த்தங்களுக்காக தமிழ் மக்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியுதவித் திட்டங்களுக்கு இவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் பெரும் சமூகம் அளித்த ஆதரவு நல்லதொரு உதாரணம். பாலஸ்தீனர்களுக்கெதிராக 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரேல் நடாத்திய தாக்குதல்களுக்கு எதிராக உலகம் எங்கும் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அந்தந்த நாடுகளின் பெரும் சமூகங்கள் மத்தியில் கணிசமான ஆதரவும் பங்குபற்றலும் இருந்தது. இப் போராட்டங்கள் மனிதாபிமானத்தின் பாற்பட்டதாக மட்டுமல்லாது, இஸ்ரேலின் பாலஸ்தினியர் தொடர்பான அரசியலுக்கு எதிரான போராட்டங்களாகக்கூடக் கொள்ளப்படக்கூடியவை.

இதேநேரம் உலகில் இடம்பெறும் எல்லா நிகழ்வுகளும், எல்லா மனித உரிமை மீறல்களும் அநீதிகளும் பெரும் சமூகத்தின் கவனத்தை ஒரேயளவில் ஈர்ப்பதில்லை. தமது கவனத்தை ஈர்க்காத விடயங்களில், சாதகமான பொதுமக்கள் அபிப்பிராயம் எட்டப்படாத விடயங்களில் பெரும் சமூகத்தின் பங்குபற்றுதல் இருப்பதில்லை. அல்லது மிகக் குறைவாகவே இருக்கும். இதற்குப் பல்வேறுவகையான காரணங்கள் உண்டு. இக் காரணங்களுக்குள் இப் பத்தி நுழையவில்லை. ஏனைய நாடுகளில் நடைபெறும் விடயங்கள் தொடர்பாக செயற்பாடுகள் அல்லது எதிரொலிகள் அனைத்துமே இவர்கள் வாழும் நாடுகள் அல்லது அந்நாடுகளின் பெரும் சமூகம் இரட்டை அல்லது பிளவுண்ட விசுவாசமாகவோ, அல்லது அவை தொடர்பான பிரச்சினையாகவோ பார்ப்பதில்லை.

இதேவேளை, சோமாலியாவிலோ அல்லது ஏனைய எந்த நாடுகளிலோ ஆயுதம் தாங்கிப் போராடுவதற்கோ அல்லது தற்கொலைப் படையணியின் அங்கமாகத் தன்னை அழித்து எதிரிக்கு சேதம் விளைவிக்கவோ- புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்து எவராவது புறப்படுவது செய்தியாக வரும்போது அதனை இந்த நாடுகளின் அரசுகளும் பெரும் சமூகமும் பிரச்சினையாகப் பார்க்கிறது. இது அரசியல் தளத்தில் அமைந்த ஓர் உதாரணம்.

இதேபோல் சமூக பண்பாட்டுத்தளத்திலும் பல உதாரணங்கள் உண்டு. இந்திய உபகண்டத்தின் இருந்து படைப்பாகும் இசைப் படிமங்களை, நடன வடிவங்களை, உணவுவகைகைள விரும்பி வரவேற்கும் மேற்குலக பெரும் சமூகம், தமது நாடுகளில் உள்ள இந்திய உபகண்ட மக்களின் மத்தியில் இடம்பெறும் ஏற்பாட்டுத் திருமணங்களை (arranged marriages) விரும்பி வரவேற்பதில்லை. இவற்றை கட்டாயக் கல்யாணத்துக்கு (forced marriages) வழிகோலும் நடைமுறையாகப் பார்ப்போர் பெரும் சமூகத்தின் மத்தியில் நிறைய உண்டு. பெரும் சமூகத்தின் பலருக்கு ஏற்பாட்டுத் திருமணத்துக்கும் கட்டாயக் கல்யாணத்துக்குமிடையிலான வேறுபாடுகள் தெரிவதில்லை. இரண்டையும் ஒன்றாகவே நோக்குவோர் பெரும் சமூகத்தின் மத்தியில் பலர் உண்டு. இருப்பினும் கட்டாயக் கல்யாணம் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டது போல ஏற்பாட்டுத் திருமணங்களை தடைசெய்யும் முயற்சிகள் இடம்பெறவில்லை.

இவையெல்லாம் பெரும் சமூகத்துக்கும் புலம்பெயர்ந்த சமூகங்களுக்குள்ளும் இடையே அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் இருக்கும் வேறுபாடுகளில் எல்லா வேறுபாடுகளும் பெரும் சமூகத்தால் நிராகரிக்கப்படவில்லை என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. சில வேறுபாடுகள் பண்பாட்டுத் தனித்துவங்களாகக் கருதப்பட்டு பெரும் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, ஏன் போற்றவும் படுகின்றன. மாறாக வேறு சிலவகையான வேறுபாடுகள் பெரும் சமூகத்தால் மறுக்கப்படுகின்றன, நிராகரிக்கப்படுகின்றன. பெரும் சமூகத்துக்கும் புலம்பெயர்ந்த மக்கள் சமூகங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் எவ்வடிப்படையில் பெரும் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளவும் நிராகரிக்கவும்படுகின்றன? இது முக்கியமான ஒரு கேள்வி. இதற்கு வெவ்வேறு வகையான வியாக்கியானங்கள் நமக்குள் இருக்கக்கூடும்.

இவ் விடயத்தில் நோர்வேயின் புகழ்பெற்ற சமூக மானுடவியல் பேராசிரியர் Thomas Hylland Eriksen தனது அவதானிப்பை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார். பெரும் சமூகத்துக்கும் புலம்பெயர்ந்த மக்கள் சமூகங்களுக்கும் இடையில் உள்ள மாறுபாடான அம்சங்களின் சிலவற்றை சாதகமாகவும் வேறு சிலவற்றைப் பாதகமாகவும் பெரும் சமூகம் கணிப்பதனை வெவ்வேறு உதாரணங்கள் மூலம் பேராசிரியர் எரிக்ஸன் அடையாளம் காட்டுகிறார். பெரும் சமூகம் பாதகமானதாக நோக்கும் மாறுபாடான அம்சங்களை, வேறுபாடுகள் (differences) என வகைப்படுத்தும் பேராசிரியர் எரிக்ஸன், பெரும் சமூகம் சாதகமானது அல்லது பிரச்சினைகளற்றது எனக் கருதும் மாறுபாடான அம்சங்களை பல்வகைமை (diversity) எனவும் வகைப்படுத்துகிறார். அடிப்படையில் நோக்கினால் இவை இரண்டுமே பெரும் சமூகத்துடன் மாறுபட்ட அம்சங்கள்தான். புலம்பெயர்ந்து வாழும் சமூகங்களைப் பொறுத்த வகையில் இவையிரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான். இருப்பினும் இம் மாறுபாடுகளை பெரும் சமூகம் இரு வேறுபட்ட முறையில் கையாள்வதால் அவற்றை வேறுபாடுகள் எதிர் பல்வகைமை (Difference vs Diversity) என்ற அணுகுமுறையின் ஊடாக வகைப்படுத்த பேராசிரியர் எரிக்ஸன் முயல்கிறார்.

புலம்பெயர்ந்தோரும் புகலிட நாடுகளும்!

இங்கு வேறுபாடுகள் (differences) என்பது வாழும் நாட்டின் பெரும் சமூகங்களின் விழுமியங்களுக்கும் (norms) பெறுமானங்களுக்கு (Values) முரணான வகையில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் கொண்டிருக்கும், கடைப்பிடிக்கும் நடைமுறைகள் பழக்கவழக்கங்களைக் குறித்து நிற்கும். தமது சமூகங்களின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியவை எனப் பெரும் சமூகம் கருதக்கூடிய விடயங்களும் வேறுபாடுகளாக நோக்கப்படுகின்றன. சமூகப் பிரச்சினைகளாக உருவெடுக்கக்கூடிய விடயங்களாக பெரும் சமூகம்  கருதக்கூடிய அம்சங்களும் இந்த வேறுபாடுகள் என்ற வகைக்குள் வருவன. கட்டாயக் கல்யாணங்கள் இந்த எதிர்மறை வகையினுள் அடங்குவதால் இவை வேறுபாடுகளாகக் கருதப்படுகின்றன. சில சமூகங்கள் மத்தியில் காணப்படும் பண்பாட்டுப் பழக்கவழக்கமான female genital mutilation அல்லது female circumcision என அழைக்கப்படும் பெண்களின் உள்ளுறுப்புகளைச் சிதைக்கும் அல்லது அகற்றும் நடைமுறையும் சமூக பிரச்சினையாக, வேறுபாடாக நோக்கப்படுகிறது.

பெரும் சமூகத்தின் விழுமியங்கள் மற்றும் பெறுமானங்களுக்கு முரணாக அமையாத பல்வேறு வெளிப்பாடுகளும் பழக்க வழக்கங்களும், அழகியல் அம்சங்கள் சார்ந்தவையும் கூடுதலாக பல்வகைமையாகப் (diversity) பெரும் சமூகத்தால் பார்க்கப்படுகின்றன. இதனால் இவை வரவேற்கப்படுகின்றன. குறைந்த பட்சம் எதிர்ப்புக்குள்ளாவதில்லை. நாம் மேற்குறிப்பிட்ட இந்திய உபகண்டத்தின் இசை, நடனம், உணவு வகைகள் போன்றவை இப் பல்வகைமை என்ற வகையினுள் அடங்குபவை. இந்த அவதானிப்பை பதிவு செய்யும் பேராசிரியர் எரிக்ஸன் நோர்வேயினை உதாரணமாகக் கொண்டு கூறுகையில், பெரும் சமூகத்தின் விழுமியங்களும் பெறுமானங்களும் தாராளவாத ஜனநாயகத்தின் பாற்பட்டதாகவே தற்போது அமைந்திருக்கிறது எனவும் குறிப்பிடுகிறார். இது ஏனைய மேற்குலகப் பெரும் சமூகங்களுக்கும் பொருந்தும்.

இதேவேளை பெரும் சமூகம் தமது சமூகத்துக்கு அந்நியமான விடயங்களில் கொண்டிருக்கும் moral panic எனப்படும் ஒரு வகையான அச்ச உணர்வும் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் வாழ்க்கைமுறை தொடர்பாக எழுப்பும் அச்சங்களுக்கு காரணமாக இருக்கிறது என்ற கருத்தும் புறந்தள்ள முடியாதது.

புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் இவர்களால் பின்பற்றப்படும் நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் எவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் பெரும் சமூகங்கள் ஏற்றுக் கொள்கின்றன? அல்லது நிராகரிக்கின்றன? இவை குறித்த கவனத்தைப் புலம்பெயர் தமிழ் மக்கள் கொண்டிருத்தல் பயன் தரக்கூடியது.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=232cdf73-e72d-4864-92a8-d5f08fa9b5be

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.