Jump to content

இலங்கையின் மிகப் பெரிய லஞ்சப் பணம்: 12.5 கோடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மிகப் பெரிய லஞ்சப் பணம்: 12.5 கோடி  

 

IMG_7071.jpg

லஞ்சப் பணக்கட்டு (நிஜமானது)

அண்மையில் இலங்கையில் மிகப் பெரிய லஞ்ச முயற்சி ஒன்று முறியடிக்கப் பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவர் கையும் களவுமாக, லஞ்ச தடுப்பு கமிசன், விரித்த வலையில் சிக்கி கைதாகி உள்ளனர்.

அரசியல், அதிகாரிகள் மற்றும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினை உண்டாக்கி விட்ட இந்த விசயம், பேராசை பெரும் நட்டம் என்பதனை மீண்டும் நிரூபித்து விட்டது. 

அதிலும் அரச சொந்தமான 'இலங்கை போக்குவரத்துச் சபை' பஸ் வண்டிகளுக்காக, வரி இல்லாது, தனியார் நிறுவனம் ஊடாக, டெண்டர் மூலம், இறக்குமதி செய்யப் பட்ட உதிரிப் பாகங்களுக்கு, வரி கட்ட வில்லை என்று, 'குடைந்தே', அரசு அதிகாரிகளான  சுங்கத் திணைக்கள அதிகாரிகள், இந்த லஞ்ச பணத்தினை கோரினர் என்பதே பெரும் அதிர்வுக்குரியது.

அதாவது, ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் மனிதனைக் கடிப்பது என்பது போல், தமது முதலாளியான, இலங்கை அரசின், இன்னுமோர் பிரிவுக்காக தருவிக்கப் பட்ட பொருட்களுக்காக, இல்லாத வரியை, கொடுக்கவில்லை என சொல்லி லஞ்சம் பெறும் துணிவு, எவ்வளவு தூரம்  இந்த திணைக்களத்தில் லஞ்ச லாவண்யம் புரை ஓடிப் போய் உள்ளது என்று அதிர வைத்து உள்ளது. 

பஞ்சிகாவத்தையில் உள்ள, இந்திய, இலங்கை கூட்டு நிறுவனம் ஒன்று இந்தியாவில் இருந்து, இலங்கை அரச போக்குவரத்துச் சபைக்காக இறக்குமதி செய்த உதிரிப் பாகங்களுக்கு சுங்கத் தீர்வை இல்லை என்று தெரிந்திருந்தும், அந்த நிறுவன  நிர்வாகிகளில் ஒருவரை, வேண்டுமென்ற, 'உலுப்பி' எடுத்த சுங்கத் திணைக்கள ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழு, 'எல்லாம் சுமுகமாக முடிய' வேண்டுமாயின், 50 தர வேண்டும் என்று, அந்த குழுவின் உயர் அதிகாரி கோரி இருக்கிறார்.

இடையே, பரிசீலனை (கஸ்டம் ரைய்ட்) என்ற பெயரில் 3 தடவைகள் வந்து போய், அட்டகாசம் பண்ணி இருகிறார்கள்.

50 லட்சம் என்று நினைத்து, இந்திய நிறுவனத்துடன் பேசி, 25 லட்சம் தருகிறோம் என்று சொல்லி இருக்கிறார்.

'என்னது 25 லட்சமா, உனக்கு, நட்டு கலன்டிரிச்சா, நாம கேட்டது கோடி கண்ணா, கோடி' என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார் அந்த அதிகாரி.

இவர் பதில் சொல்வதாக சில நாட்கள் எடுத்த போது, மேலும் சில கஸ்டம் ரைய்ட் நடந்தது.

நிலைமை கை மீறிப் போவதனைக் உணர்ந்த, நிர்வாகியோ, நேரடியாக, இலங்கை லஞ்ச தடுப்பு ஆணையாளரிடம் முறை இட்டுள்ளார்.

இலஞ்சதடுப்பு ஆணையாளர் ஆலோசனைப் படி, காலியாக உள்ள இரண்டு வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்று அந்த நிறுவன பெயரில் விளம்பரம் வந்தது. விண்ணப்பம் செய்தவர்களில், தேர்ந்து எடுக்கப் பட்ட இருவரும், இலஞ்சத் தடுப்பு அதிகாரிகள்.

உள்ளே புகுந்து கொண்ட இருவரும், மேலும் கஸ்டம் ரைய்ட் நடத்திய அதிகாரிகள், அவர்களுடன் லஞ்ச விசயம் சம்பந்தமாக நிர்வாகி நடத்திய பேச்சு வார்த்தைகள் போன்றவைகளை , சாட்சியமாக பதிவு செய்து கொண்டனர்.

பணத்தினை தர, முதலில் சிங்கபூரும், அதற்கு நடை முறை சாத்தியம் இல்லை என சொல்லப் பட,  கொழும்பின்  ஒரு 5 நட்சத்திர கோட்டலின் கார் பார்க்கும்  தெரிவு செய்யப் பட்டது. இதற்காக அந்த கோட்டலில் இரு அறைகள் பதிவு செய்யுமாறு நிர்வாகியிடம் கோரப்பட, அவரும் அவ்வாறே செய்தார்.

இதனிடையே அந்தளவு லஞ்சம் பணம் 15 கோடியாகக் குறைந்து, காசாக 12.5 கோடிக்கு இணக்கம் காணப் பட்டது.

இந்தளவு பெரும் தொகை எந்த வங்கியில் இருந்து காசாக வ்வாறு பெற்றுக் கொள்ளப் படும் என்பது குறித்த எண்ணமே இல்லாமல், அந்த அதிகாரிகள் பணத்தினைக் கோரி நின்று இருகின்றார்கள். அவர்கள், வெளி நாட்டு நாணயத்தில், பெறலாம் என நினைத்து இருக்கக் கூடும்.

சுங்க திணைக்களத்தின் இந்த 6 பேர் கொண்ட குழுவின் உயர் அதிகாரிக்கு பணம் ரெடி, ஆனால், எனக்கு துணை இல்லை. பணம் நான் வெளியே தனியே கொண்டு சென்று, போலீசில் மாட்டினால் பெரும் பிரச்னை வரும். ஆகவே நீங்களே ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்.

இந்தளவு பெரும் தொகையினை, லஞ்ச திணைக்கள ஆணையாளர், நேரடியாக, இலங்கை திறைசேரியில் இருந்து (மத்திய வங்கி) கைமாத்தாக எடுத்து இருக்கின்றார். அதனையே இந்த பஞ்சிகாவத்தையில்  அந்த நிறுவன அலுவகத்தில் வைத்து இருந்தனர். அதற்கு காவலுக்கு தான் அவர்களது இரு அதிகாரிகள் முன்பே உள்ளே வந்திருந்தனரே.

ஒரு பெரும் வலைக்குள் சிக்குவது அறியாமல் மூன்று அதிகாரிகள் 'உண்மையிலே' பணம் ரெடியா என அறிய நோட்டம் பார்க்க, சுங்க திணைக்கள வாகனத்தில் வந்து உள்ளனர்.

பணத்தினைக் கண்டதும், அவர்களே மலைத்துப் போய் இருக்க வேண்டும். உடனடியாக தமது உயர் அதிகாரிக்கு தகவல் தர அவரோ, மினக்கடாமல் பணத்தினை,   அவர்கள் வந்த வண்டியிலேயே எடுத்துக் கொண்டு வரும்படி சொல்லி விட்டார்.

ஹோட்டல், கார்பார்கிங் போன்ற எச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் மறந்து விட்டது அவர்களுக்கு.

'தம்பி, (மல்லி..) அந்த ரூமில் இருக்கும் பணத்தினை இவர்களுக்கு எண்ணிக் கொடுத்து விடு' என்று நிர்வாகி, அங்கிருந்த இரு புதியவர்களில் ஒருவரிடம் சொல்ல அவரும் எழுந்தார்.

அவரை முன்னரே பார்த்திருந்த படியால் சந்தேகம் வரவில்லை.

'அட, நாம மூன்று பேருமே விரைவாக எண்ணி முடிப்போம், பழக்கம் இருக்குது... ஹி, ஹி....'... என்றார் ஒரு அதிகாரி.

'சரிதான்... நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்... தம்பி நீ எதற்கும் அவர்களுடன் அந்த ரூமில் இரு' என்றார் நிர்வாகி. சும்மா கிடைத்தாலும் எண்ணித் தான் எடுக்க நிற்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டார் அவர்.

அவர்கள் எண்ணத் தொடங்கியதும், அங்காங்கே, பஞ்சிகாவத்தை முழுவது தயாராக நின்ற 40 லஞ்ச திணைக்கள அதிகாரிகள் திபு, திபு என உள்ளே புகுந்து கொண்டனர்.

அவர்களைக் கண்டது அதிர்ச்சியில் உறைந்து போயினர் மூவரும். ஒருவர் மயக்கமானார். அடுத்தவரோ எனக்கு ஒன்றும் தெரியாது. நான், உயர் அதிகாரிகளினால் அனுப்பபட்டேன் என்றார். ஆனால் அவர் ஜாதகமே அங்கே இருந்த, ஊழியராக நடித்த, அதிகாரிகளிடம் இருந்தது.

அவர்கள் இருவருமே லஞ்ச திணைக்கள ஊழியர்கள் தான் என அறிந்ததும், தாம் சிக்கிய வலையின் பின்னல் அவர்களுக்கு புரிந்தது.

இறுதியாக, தம்மை கை விலங்கு இடாமல் கொண்டு செல்லுமாறு வேண்டிக் கொண்டனர் மூவரும். விரைவில் மேலும் பலரும் கைதாவார்கள்.

இலங்கை வரலாறில், மிகப் பெரிய, (மக்களுக்கு தெரிந்த) லஞ்ச லாவண்யம் இது.

இப்போதைக்கு, இலங்கை சுங்கத் திணைக்களத்தில், ஜாறவா (மாமூல், சப்போர்ட்) அடித்து... வேலைக்கு ஆவாது.:grin:

நம்ம ஆக்கமுங்கோ...

IMG_7068.jpg

IMG_7066.jpg

IMG_7056.jpg

லஞ்ச திணைக்கள ஆணையாளர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களே இப்படி அடிக்க பிளான் பண்ணிலால் மகிந்தா கோஸ்டி எப்படி அடிச்சிருக்கும்

Link to comment
Share on other sites

என்னுடன் படித்தவர் ஒருவர் நாங்கள் எல்லாம் வெளிநாடு புறப்படும்போது அவர்  இலங்கையில் கஸ்டம்சில் வேலை கிடைத்து அங்கேயே தங்கிவிட்டார் .

இன்று அவர் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர் . முப்பது வருடங்களுக்கு மேல் இலங்கை யுத்தத்தால் ஏன்னா பாடு படுது இதற்குள் ஒரு தமிழர் இப்படி உழைத்து தள்ளியதை நினைக்க நம்பமுடியாமல் இருக்கு .

இப்போ உலகம் முழுக்க சுற்றி அடிக்கின்றார் .லண்டனில் மகளை தனது பணத்தில் தான் படிப்பித்தார் அவருக்கு அண்மையில் கொழும்பில் நினைத்து பார்க்கமுடியாத பிரமாண்டமாக திருமணம் நடந்தது .இந்தியாவில் இருந்து கூடைக்கணக்கில் பூக்கள் இறக்குமதி செய்தாராம் .

கெட்டித்தனம் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் படித்தவர் ஒருவர் நாங்கள் எல்லாம் வெளிநாடு புறப்படும்போது அவர்  இலங்கையில் கஸ்டம்சில் வேலை கிடைத்து அங்கேயே தங்கிவிட்டார் .

இன்று அவர் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர் . முப்பது வருடங்களுக்கு மேல் இலங்கை யுத்தத்தால் ஏன்னா பாடு படுது இதற்குள் ஒரு தமிழர் இப்படி உழைத்து தள்ளியதை நினைக்க நம்பமுடியாமல் இருக்கு .

இப்போ உலகம் முழுக்க சுற்றி அடிக்கின்றார் .லண்டனில் மகளை தனது பணத்தில் தான் படிப்பித்தார் அவருக்கு அண்மையில் கொழும்பில் நினைத்து பார்க்கமுடியாத பிரமாண்டமாக திருமணம் நடந்தது .இந்தியாவில் இருந்து கூடைக்கணக்கில் பூக்கள் இறக்குமதி செய்தாராம் .

கெட்டித்தனம் தான் 

கெட்டித் தனம் இல்லை. சட்ட விரோதம்.

தப்பி விட்டார்...

பிடிபட்டு இருந்தால் குடும்பமே நாறி இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.. நாதம்!

அர்ஜுன் சொன்னது போல 'இலங்கையில்' சுங்கத் திணைக்களத்தில் வேலை செய்பவர்களின் கதை ஊரே அறியும்! 

இருந்தாலும் இலங்கையில் இப்படி ஒரு ஒப்பரேசன் நடந்தது முடிந்ததை நம்ப முடியவில்லை!

உங்கள் எழுத்து வழக்கம் போல.. திரில்....! 

தொடருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உந்த ஓவசியர்மார்..இன்கம்ரக்ஸ்....கஸ்டம்சிலை வேலை செய்த ஆக்களை கனபேரை தெரியும். எல்லாரும் மாடிவீடும் மதில்வீட்டுக்காரரும் தான்.....

பாவம் பிள்ளையள்......தகப்பன் செய்த பாவத்தை பிள்ளையள் அனுபவிக்குதுகள் :mellow: <_< :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா...! இவ்வளவு பணத்தை ஒரே டேக்கில சர்வ சாதாரணமாகக் கொடுக்கக் கூடியதாக இருக்கெண்டால் , என் தேசம் எவ்வளவு செல்வம் வழிந்தோடும் தேசமாக இருக்கின்றது....! புல்லரிக்குது...!!  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

article_1446202103-IMG_9361.jpg

சுங்க அதிகாரிகளுக்கு விளக்கமறியில்

 

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால், கைது செய்யப்பட்ட மூன்று சுங்கத்திணைக்கள அதிகாரிகளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

125 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், மூன்று அதிகாரிகளுடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

சுங்க அதிகாரிகள் மூவரும் பிணையில்

 

 
அண்மையில் 125 மில்லியன் ரூபா இலஞ்சமாக பெறமுற்பட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூன்று சுங்க அதிகாரிகளும் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜூனதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக, உதவி சுங்க அதிகாரி எம்.டீ.யூ.ஜீ. பெரேரா ஆகிய மூன்று சந்தேகநபர்களும், கடந்த ஒக்டோபர் 15ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இவர்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், சந்தேகநபர்களை பிணையில் விடுவிப்பதை எதிர்க்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதன்படி மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 50 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் மூன்றில் விடுவிக்க, கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சரீரப் பிணை வழங்கும் மூவரில் ஒருவர் அரச உத்தியோகத்தராக இருக்க வேண்டும் எனவும், சந்தேகநபர்கள் வௌிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் குறித்த வழங்கு எதிர்வரும் பெப்ரவரி 16ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.