Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2000 ஆம் ஆண்டுகளுக்கு முன் ஆணாதிக்கம் அந்த மாதிரி இருந்திருகுது.tw_tounge_wink:

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

இன்று உலக எய்ட்ஸ் தினம்: உயிரியல் போர் ஆயுதம் உருவானது எப்படி?

 

aids01.jpg'எய்ட்ஸ் நோய், கடவுள் ஆப்பிரிக்கர்களுக்குக் கொடுத்த சாபம் என்கிறார்கள். நான் அப்படிக் கருதவில்லை. மனிதனால் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டதே ஹெச்.ஐ.வி கிருமி. இதன் விளைவு என்னவென்றால், இனி துப்பாக்கிகள் எல்லாம் கற்காலத்திற்கு மட்டுமே. மனித இனத்தை அழிக்க இந்த உயிரியல் போர் ஆயுதம் ஒன்றே போதும்...' -உலகையே அச்சுறுத்தும் ஒரு கொடிய நோய்க்கான மூலத்தை விதைத்தவர் யார்? என்பது பற்றி எந்தவித தயக்கமும் இல்லாமல் முன்வைத்தவர் வங்காரி மத்தாய். கென்ய நாட்டின் சுற்றுச்சூழல் போராளி. இவர் வைரஸ் (virology) குறித்துப் படித்தவர். 2004-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வாங்கியவர்.

இன்று உலக எய்ட்ஸ் தினம். 'புதிய எச்.ஐ.வி நோய் தோற்று இல்லாத, புறக்கணிப்பு இல்லாத மற்றும் எய்ட்ஸ் நோயின் மூலம் உயிர் பலியில்லாத நிலையை உருவாக்குதல்' என்பதுதான் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முன்வைக்கப்படும் மையக் கருத்து. ஒவ்வொரு ஆண்டும் போப்பாண்டவர் முதற்கொண்டு, ஆளும் அரசுகள் உலக எய்ட்ஸ் தினத்திற்கு எதாவது ஒரு செய்தியைச் சொல்வது சடங்காகவே மாறிவிட்டது. எய்ட்ஸ் நோயாளிகளின் மீதான அரசின் பரிவிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. 1981-ம் ஆண்டில் இருந்து இதுவரை இரண்டரை கோடிக்கும் அதிகமான மக்கள் எய்ட்ஸ் நோயால் இறந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் 3 கோடியே 32 லட்சம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகிறார்கள். 2007-ம் ஆண்டில் 20 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் இறந்தார்கள். இதில் குழந்தைகள் மட்டும் 2,70,000 பேர் என்கிறது ஒரு புள்ளி விபரக் குறிப்பு...

aids02.jpg

எய்ட்ஸ் நோய் யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதைப் பற்றி விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

நோபல் பரிசு பெற்ற வங்காரி மத்தாய், 'அமெரிக்க ராணுவ உயிரியல் போர்முறை வளாகத்தில் (Fort Detrick) உருவாக்கப்பட்ட கிருமிதான் எச்.ஐ.வி வைரஸ் எனப்படும் எய்ட்ஸ்' என அறிவித்தபோது, உலமே அதிர்ந்தது.

கென்யாவில் ஏராளமான எயிட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள். 2006-ம் வருட கணக்குப்படி உலகில் மொத்தம் 38 மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள். இதில் முதல் இடத்தில் ஆப்பிரிக்காவும் (28.1 மில்லியன் மக்கள்) மூன்றாம் இடத்தில் இந்தியாவும் (3.97 மில்லியன் மக்கள்) இருக்கிறது. இது எப்படி பரவியது? இத்தனை மில்லியன் மக்கள் கொடுமையான மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார்களே?

aids03%281%29.jpg1969-ல் கலிபோர்னியாவின் 'டேவிட்' என்னும் இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் குரங்குகளுக்கு 'எய்ட்ஸ் கிருமிகள்' ஊசி மூலம் செலுத்தப்பட்டு ஆய்வு செய்திருக்கிறது அமெரிக்க நுண்ணுயிர் ஆய்வு நிலையம். எய்ட்ஸ் கிருமிகள் செலுத்தப்பட்ட குரங்கள் ஒரே வருடத்தில் இறந்திருக்கின்றன. 1970-ல் பூனைகளுக்கு 'எயிட்ஸ் கிருமி' செலுத்தப்பட்டு, அவைகளும் இறந்தன. 1974-ல் சிம்பன்சி குரங்குகளுக்கு 'எயிட்ஸ் கிருமிகள்' செலுத்தப்பட்டு அவைகளும் இறந்தன.

குரங்கு, பூனை, சிம்பன்சி குரங்கு என மிருகங்களுக்கு 'எயிட்ஸ் கிருமிகள்' செலுத்தப்பட்டு சோதனை செய்த அமெரிக்க நுண்ணுயிர் ஆய்வு நிலையம், 1979-ல் பென்டகன் ஆய்வு மையத்தின் நுண்ணுயிர் ஆய்வாளரான டாக்டர் மேக் ஆர்தூர் ஆலோசனைப்படி சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட HIV (Human Immuno Deficiency Virus) அமெரிக்க ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தடுப்பூசி மூலம் பரப்பப்பட்டது. 'எய்ட்ஸ்' உருவாக ஹெச்.ஐ.வி (HIV)யும், அவை உருவான இடமான அமெரிக்காவின் 'மான்ஹாட்டன்' (Manhatten) பகுதி தான் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்தது.

1982-க்கு பிறகே எய்ட்ஸ் ஆப்பிரிக்காவில் வந்தது. அது எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை 1987 மே மாதம் 11-ம் தேதியில் வெளியான லண்டன் டைம்ஸ் விவரிக்கிறது: 'உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் பல மில்லியன் மக்களுக்கு எய்ட்ஸ் கிருமி கலந்த பெரியம்மை தடுப்பூசி ஆப்பிரிக்க மக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக, ஆப்பிரிக்க மக்களிடம் எய்ட்ஸ் பரவியது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட உயிர்கள் அழித்தொழிப்பு கொடுமை' என அந்த அறிக்கை நீண்டுகொண்டே போகிறது. இதுதவிர, எய்ட்ஸ் நோயின் மூலம் குறித்து ஆய்வில் ஈடுபட்டோரின் கதி என்னவானது என்பதையும் ஓர் அதிர்ச்சி புள்ளிவிபரம் அம்பலப்படுத்துகிறது.

ஜேக்கப் சிகால். கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த நுண்ணுயிர் கிருமிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர். லண்டனில் இருந்து வெளிவரும் லண்டன் சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு 26.10.1986-ல் பேட்டி எடுத்தபோது ஒரு விஷயத்தை முன்வைத்தார். 'எய்ட்ஸ் கிருமி மனிதனின் செய்கையால் உருவாக்கப்பட்டது. இதை மறுக்கவும், மறைக்கவும் அமெரிக்கா முயற்சி செய்கிறது' என்றும், எய்ட்ஸ் கிருமி குறித்த நீண்ட விளக்கத்தையும் அப்பேட்டியில் கூறி இருந்தார். அதற்கு பின் ஜேக்கப் சிகால் என்னவானார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவரது பேட்டியையும் மக்கள் சாதாரணமாக நினைத்து விட்டனர்.

aids04.jpg

டெட் ஸ்டெரக்கர் என்னும் பெயருடைய அமெரிக்க நுண்ணுயிர் கிருமி ஆராய்ச்சியாளர் எய்ட்ஸ் கிருமியின் மூலம் (Origin) குறித்து ஆய்வு செய்துக் கொண்டிருந்தார். ஆய்வின் முடிவுகள் குறித்து அவருக்குள் பல புதிர்களை உருவாக்கியது. அவைக் குறித்து சில இடங்களில் பேசியும் இருக்கிறார். அதற்கு பின் மிசோரியில் ´'ஸ்பிரிங்க் ஃபில்ட்' என்ற இடத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்தார். சில வாரங்கள் மட்டுமே 'டெட் ஸ்டெரக்கர்' கொலை குறித்து பரபரப்பாக பேசப்பட்டதே தவிர, என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை. கொலைக்குறித்து ஏதோ உப்புசப்பற்ற விசாரணையை பேருக்கு நடத்தி ஓரங்கட்டி விட்டது அரசு.

lllnosis senate உறுப்பினரான 'ஹவ்ப்' (Huff) என்பவர், எயிட்ஸ் உருவாக்கப்பட்ட கிருமி என்று தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துக் கொண்டே இருந்தார். அவருக்கும் வந்தது நேரம். எங்கேயோ ஓர் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலில் உயிர் போவதற்கு முன்பு கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட தடயங்கள் இருந்தன.

அப்போதும் மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும், எய்ட்ஸ் நுண்ணுயிர் கிருமிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு மத்தியில் இக்கொலைகள் பயத்தை ஏற்படுத்தி இருந்தது. 'ஏதோ நம்மை வைத்து ஆட்டையை ஆரம்பித்திருக்கிறது அரசு' என்பதை உணர்ந்து மௌனிகளாக இருந்தனர். பத்திரிகை பேட்டி என்றாலோ, எய்ட்ஸ் கிருமி குறித்த கேள்விகளை யாராவது எழுப்பினாலோ 'ஆளை விடுங்க சாமிகளா...' என்று ஓட்டமெடுத்தனர்.

aids05.jpg

இந்நிலையில், டாக்டர் லியோநார்டு, 1996-ல் 'Aide Ebola Nature, Accident or intentional' என்ற புத்தகத்தில் ஆதாரங்களுடன் பல விளக்கங்களையும் எழுதி இருக்கிறார் லியோநார்டு. 'எய்ட்ஸ் கிருமிகளின் உருவாக்கம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களாலும், ஆப்பிரிக்க மக்களாளுமே உருவானது என்று அமெரிக்கா சொல்வது நூற்றுக்கு நூறு பொய்!' என்று அடித்துப் பேசுகிறார் லியோநார்டு.

1970-ம் ஆண்டிலேயே எய்ட்ஸ் கிருமியை உருவாக்க அமெரிக்க அரசு முயற்சித்துள்ளது. இருப்பினும், 1984-ம் ஆண்டுகளில் அவை உண்மையான செய்தி என்று அதிகாரப்பூர்வமாக தெரிய ஆரம்பித்தது. 'எய்ட்ஸ் கிருமியை உருவாக்கத்தின் முக்கிய மூளையாக இருந்தவர் ஹென்றி கிஸ்சிங்கர் என்பவர் (முன்னாள் Secretary of State). அமெரிக்க அரசு இத்திட்டத்திற்காக 1 மில்லியன் டாலர்களை அமெரிக்க ராணுவத்திற்குக் கொடுத்திருக்கிறது. இத்திட்டத்திற்கு M.K. என்றும் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 'ஹென்றி கிஸ்சிங்கர்'க்கும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கும், உதவியாக M.David Manakar, K.Paul Kotin என இருவர் இருந்தனர். சி.ஐ.ஏ (C.I.A) துணையுடன் இவர்கள் செயல்பட்டார்கள்' என்றும் லியோநார்டு அந்நூலில் மிகத் தெளிவான ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறார். அதன்பிறகு சில மிரட்டல்களை சந்தித்திருக்கிறார் லியோநார்டு.

இன்று வரையில், எய்ட்ஸ் நோயின் மூலம் எங்கே? என்ற கேள்விகளுக்கெல்லாம் லியோநார்டு கொடுத்த விளக்கங்கள் அதிர வைப்பவை. இதுபற்றியெல்லாம் இதுநாள் வரை அமெரிக்க அரசு எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. 'இனி துப்பாக்கிகள் எல்லாம் கற்காலத்திற்கு மட்டும்தான்' என்கின்ற வங்காரி மத்தாயின் கருத்துக்களை மவுனமாக அசைபோடுவதைத் தவிர வேறு வழியும் இல்லை. வைரஸைக் கண்டுபிடிப்பவன்தான் ஆண்டி வைரஸையும் கண்டுபிடிப்பான் என்ற உலக நியதிப்படி, ஒருநாள் அமெரிக்காவே எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளை வெளியிட்டாலும் ஆச்சரியம் இல்லை.

http://www.vikatan.com/news/miscellaneous/55851-today-is-world-aids-day.art

Link to comment
Share on other sites

12316078_1029964410395682_64345820901636

சொல்வனம்
* சாப்பாடு *

சுடச்சுட உணவு இருந்தால்
தாத்தா அதிகம் சாப்பிடுவார்
அம்மா உணவு பரிமாறினால்
அப்பா அதிகம் சாப்பிடுவார்
தூக்கி வைத்துக்கொண்டு
உணவு ஊட்டினால்
தங்கை அதிகம் உண்ணுவாள்
தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்
தம்பி அதிகம் சாப்பிடுவான்
சமைத்தது மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள்!

Link to comment
Share on other sites

டிசம்பர் - 1 உலக எய்ட்ஸ் தினம் - எச்சரிக்கை

எய்ட்ஸ் நோய் தாக்கியவர்கள் அனைவருக்கும் ஏ.ஆர்.டி தெரப்பி சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக அளவில் 3.5 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.17 கோடி பேர் மட்டுமே எய்ட்ஸ் நோயைக் கட்டுக்குள் வைக்கும் ‘ஏ.ஆர்.டி தெரப்பி’ சிகிச்சையை எடுக்கின்றனர். மற்றவர்களின் நிலை கவலைக்கிடம்தான்.

ஹெச்.ஐ.வி தாக்கிய ஒருவரின் உடலில் ஒரு துளி ரத்தத்தில் 250-க்கும் கீழ் வெள்ளை அணுக்கள் இருந்தால், அவர் கண்டிப்பாக ஏ.ஆர்.டி தெரப்பியை எடுக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை, இந்த ஆன்ட்டி ரெட்ரோவைரல் மருந்தை 12 மணி நேர இடைவேளையில் எடுக்க வேண்டும். ஒரு நாள்கூட மருந்தை நிறுத்தக் கூடாது. எய்ட்ஸ் நோயைக் கட்டுக்குள் வைப்பதற்கு மட்டுமே மருந்துகள் இருக்கின்றன. குணப்படுத்த முடியாது.

பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமாகவே 90 சதவிகிதத்தினரை ஹெச்.ஐ.வி வைரஸ் தாக்குகிறது. எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களை தொடுவதாலோ அவர்களது எச்சில், வியர்வை மூலமாகவோ மற்றொருவருக்குப் பரவாது. எய்ட்ஸ் நோயாளியின் ரத்தத்தை செலுத்தும்போதும், ஊசிமருந்து செலுத்துவதன் மூலமும் எய்ட்ஸ் பரவும்.

ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா, இல்லையா என்பதை அறிய `எலிசா' பரிசோதனை செய்ய வேண்டும். எய்ட்ஸ் பரிசோதனை முடிவை அறிந்துகொள்ள நாட்கணக்கில் காத்திருக்கத் தேவை இல்லை. 15 நிமிடங்களில் முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.

திருமணம் செய்துகொள்ளும் ஆண், பெண் இருவரும் கட்டாயம் ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கருவுற்ற பெண்களுக்கு, மருத்துவமனையிலேயே எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. கருவுற்ற பெண்களுக்கு எய்ட்ஸ் இருந்தால் குழந்தைக்கு அந்த நோய் பரவாமல் தடுத்துவிட முடியும்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் வசிக்கும் மூன்றாவது நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 24 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 1.5 லட்சம் பேர் உள்ளனர்.

எய்ட்ஸ் நோய் வந்தவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். உடலில் வரும் சிறு ரத்தக் காயம்கூட மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும். உடலில் வரும் புண்கள் விரைவில் ஆறாது. காலணிகள் அணியாமல் வெளியே செல்லக் கூடாது.

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 02
 

article_1449026048-5.jpg1409: ஜேர்மனியின் லீப்ஸிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1946: இந்திய தலைவர்களான ஜவஹர்லால் நேரு, பால்தேவ் சிங், மொஹமட் அலி ஜின்னாஹ், லியாகத் அலிகான் ஆகியோரை அரசியலமைப்புச் சபையின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு பிரித்தானிய அரசாங்கம் அழைப்பு விடுத்தது.

1954: தேசியவாத சீனாவுடன் அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டது.

1961: தான் ஒரு மார்க்சிஸ லெனினிஸவாதியெனவும் கியூபா கம்யூனியஸத்தை பின்பற்றும் எனவும் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

1971: அபுதாபி, அஜ்மன்,  புஜாரியா, சார்ஸா, துபாய், உம் அல்குவெய்ன் ஆகியன இணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸை உருவாக்கின.

1976: 1959ஆம் ஆண்டு முதல் கியூபாவின் பிரதமராக பதவி வகித்த பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் ஜனாதிபதியானார்.

1988: பாகிஸ்தான் பிரதமராக பெனாஸிர் பூட்டோ பதவியேற்றார்.

1993: கொலம்பிய போதைப்பொருள் வர்த்தகப் புள்ளியான பாப்லோ எஸ்கோபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2008: தாய்லாந்து பிரதமர் சோம்சேய் வொங்சாவட் அரசியல் நெருக்கடி காரணமாக இராஜினாமா செய்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/160379/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.sJNQHMFc.dpuf
Link to comment
Share on other sites

செல்ல மகள் வந்தாள்... 3 லட்சம் கோடியை உலகுக்கு தந்தாள்...!

 

மூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனக்கு பெண் குழந்தை பிறந்ததையொட்டி தனது நிறுவனத்தின் 99% பங்குகளை அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். அப்பங்குகளின் தற்போதைய மதிப்பு சுமார் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 31 வயதேயான சக்கர்பெர்க்கின் இச்செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மகளுக்குக் கடிதம்

சக்கர்பெர்க் – பிரிசில்லா சான் தம்பதியினருக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. மேக்ஸ் எனப் பெயரிடப்பிட்ட தங்கள் மகளுக்கு பேஸ்புக் வாயிலாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.  இத்தம்பதியினர். தங்கள் மகளுடைய எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கும் என்று அதில் கூறியுள்ள அவர்கள், சக்கர்பர்க்கின் மனைவி சான் ஃபேஸ்புக் நிறுவனத்தில் தனக்கு சொந்தமான 99 சதவீத பங்குகளை  ‘சான் சக்கர்பெர்க் இனிஷியேடிவ்’ எனப்படும் தங்கள் அறக்கட்டளைக்கு வழங்குவதாக அறிவித்தனர்.

“மனித வள மேம்பாட்டிற்காகவும், அடுத்த தலைமுறை குழந்தைகளிடையே சமத்துவத்தை ஊக்குவிப்பதுதான் இந்த அறக்கட்டளையின்   இதன் தலையாய நோக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளனர். “இந்த அறக்கட்டளையின் முதல் பணி நோய்களுக்கு தீர்வு காண்பதும், மக்களை இணைப்பதும் மற்றும் பலமான சமூகத்தை உருவாக்குவதும் தான். இதற்காக பணியாற்றி வரும் பலருக்கு முன்னால் எங்கள் பங்களிப்பு மிகவும் சிறியது தான். அனைவரோடும் இணைந்து நாங்கள் செயல்படத் தயாராக இருக்கிறோம்” என்று அக்கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

mark1_400.jpg



“எனக்கும் உன் அம்மாவிற்கும் நீ எந்த அளவிற்கு நம்பிக்கை ஊட்டியுள்ளாய் என்று சொல்ல வார்த்தைகளே கிடையாது. நீ வாழப்போகும் இவ்வுலகில் நாங்கள் இருப்பதற்கான காரணத்தை  நீ ஏற்கனவே தந்துவிட்டாய். உன்மேல் அன்பால் மட்டும் இதை நாங்கள் செய்யவில்லை. அடுத்த தலைமுறை குழந்தைகள் மீது எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு  உள்ளது” என்று பாசமம் பொங்க கலந்து கடிதம் எழுதியுள்ளார் மார்க்.

45 பில்லியன் அமெரிக்க டாலர்!

சக்கர்பெர்க் வழங்கியுள்ள இப்பங்குகளின் மதிப்பு சுமார் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்(இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சம் கோடி ). இதுவரை பல பொதுநல காரியங்களுக்காக பங்களித்துள்ள சக்கர்பெர்க்கின் இச்செயல் உலகம் முழுவதும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் குவித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து  பேஸ்புக் வெளியிட்டுள்ள கமென்டில்,”இது ஒரு உண்னதமான கடிதம். வருங்கால சந்ததியரின் வாழ்க்கையை சீராக்க சிறந்த முயற்சி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பங்குகளை வழங்கியதால் பேஸ்புக்கை நிர்வகிக்கும் அவரது மதிப்பு குறைந்து விடாது என்றும், பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர்  தொடர்வார் என்றும்  சொல்லப்பட்டுள்ளது.

 உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவரான வாரன் பஃபெட் சக்கர்பெர்கை வெகுவாக பாராட்டியுள்ளார். “சக்கர்பெர்க்கின் இம்முடிவு சற்று ஆச்சரியம் தான். ஆனால் மிகச் சிறப்பான முடிவு. 70 வயது ஆன பிறகு தனது சொத்துகளை சேவைகளுக்கு வழங்காமல், மிகவும் இளம் வயதிலேயே முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. சக்கர்பெர்க் தனது தலைமுறையினருக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் விளங்குகிறார்” என்று பாராட்டியுள்ளார்.

இதொன்றும் புதிதல்ல..

  மைக்ரோசாப்டின் நிறுவனர் பில் கேட்ஸ் கூறுகையில்,”இன்று நீங்கள் செய்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. உங்கள் மகள் மேக்சும், இன்றைய காலகட்டத்தில் பிறக்கும் மற்ற அனைத்து குழந்தைகளும் நமக்குத் தெரிந்ததைவிட ஒரு மிகச்சிறப்பான உலகத்தில் வாழ்வார்கள் என்பது உறுதி. தாங்கள் சொல்லியதுபோல் இன்று விதைக்கும் விதை வளரும். நீங்கள் இன்று விதைத்திருக்கும் விதை வெற்றியைத் தர வாழ்த்துக்கள்” என்று மனமார வாழ்த்தியுள்ளார்.

  சக்கர்பெர்க் ஒருசமயம்,பில் கேட்சை தனது பால்ய கால ஹீரோவாகக் குறிப்பிட்டுள்ளார்.அவரது சமூக அக்கறையே சமூக சேவைகள் செய்வத்ற்கு தன்னைத் தூண்டியதாகவும் கூறியுள்ளார். இதற்கு முன் 2010ஆம் ஆண்டு இவர்கள் மூவரும் இணைந்து, ‘தி கிவிங் பிளெட்ஜ்’ என்ற அமைப்பைத் தொடங்கி, தங்களது சொத்துக்களில் பாதியை அறக்கட்டளைகளுக்கு வழங்குவது எனத் தீர்மானித்தனர்.

சக்கர்பெர்க் பல சமூக நலக் காரியங்களை இதற்கு முன்னரும் செய்துள்ளார். தனது சான்-சக்கர்பெர்க் அறக்கட்டளை மூலம் 2013ல் மக்கள் நலப் பணிகளுக்காக சிலிகான் வேலி  பவுண்டேசன்   என்ற அமைப்புக்கு 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கினார். கடந்த ஆண்டு உலகையே உலுக்கிய எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது இத்தம்பதி. அதுமட்டுமின்றி அமெரிக்க பள்ளிக்கூட மேம்பாட்டிற்காக 2010ம் ஆண்டிலிருந்து சக்கர்பெர்க் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

  தங்கள் குழந்தையப் பற்றி மட்டும் நிணைக்காமல் அனைத்து குழந்தைகளின் நலனும் முக்கியம் எனக்கூறும் இத்தம்பதிக்கு கோடி லைக்ஸ். இதன் மூலம் அவர்கள் இளம் தலைமுறைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் விளங்குகின்றனர். மகள் பிறந்ததற்காக இத்தம்பதியருக்கு போஸ்புக்கிலேயே வாழ்க்கையை கழிக்கும் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

பணம் இருக்கும் இடத்தில் பாசம் இருக்காது என்று யார் சொன்னது?

http://www.vikatan.com/news/world/55865-facebooks-mark-zuckerberg-to-give-away-99.art

Link to comment
Share on other sites

12295330_949246561790705_761300713584594

தமிழ்த் திரையுலகின் என்றும் மறையாத கவர்ச்சி அடையாளம், ஒரு காலகட்டத்தில் எல்லாப் படங்களும் ஓட இவர் மட்டுமே போதும் என்று கருதப்பட்ட சினிமா போதை - மறைந்த திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நவீனன் said:

12295330_949246561790705_761300713584594

தமிழ்த் திரையுலகின் என்றும் மறையாத கவர்ச்சி அடையாளம், ஒரு காலகட்டத்தில் எல்லாப் படங்களும் ஓட இவர் மட்டுமே போதும் என்று கருதப்பட்ட சினிமா போதை - மறைந்த திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள்.

பால்ய வயதில் இவரது படங்கள் பார்த்து / பாடல்களை கேட்டு லுங்கி (சரம்) அடிக்கடி நனைந்து போனது ஞாபகத்துக்கு வருகின்றது. 
சிருங்காரம் நிறைந்த / கிளர்ச்சி ஏற்படுத்தக்கூய மறக்க முடியாத ஓர் நடிகை.  

அடுக்கு மல்லிகை என்னை... என்று தங்கமகன் படத்தில் ஓர் பாடல்
உண்டு.

Link to comment
Share on other sites

12289598_949243751790986_664589250797704

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான அப்துல் ரசாக்கின் பிறந்தநாள்.

Link to comment
Share on other sites

4 hours ago, colomban said:

பால்ய வயதில் இவரது படங்கள் பார்த்து / பாடல்களை கேட்டு லுங்கி (சரம்) அடிக்கடி நனைந்து போனது ஞாபகத்துக்கு வருகின்றது. 
சிருங்காரம் நிறைந்த / கிளர்ச்சி ஏற்படுத்தக்கூய மறக்க முடியாத ஓர் நடிகை.  

அடுக்கு மல்லிகை என்னை... என்று தங்கமகன் படத்தில் ஓர் பாடல்
உண்டு.

:grin::grin:

 

Link to comment
Share on other sites

ஒரு மணி நேரம் பெடல் செய்தால், 24 மணி நேரத்திற்கு தேவையான மின்சாரம் கிடைக்கும்!

 

ஒரு மணி நேரம் பெடல் செய்தால் ஒருநாளைக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த சாதனத்தின் விலை ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஆகும்.

man.jpg

இந்த மிதிவண்டி சாதனத்தை  அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர் மனோஜ் பார்கவா  தயாரித்துள்ளார். நேற்று இந்த சாதனத்தை அவர் டெல்லியில் அறிமுகப்படுத்தினார். இந்த சாதனத்தை  பெடல் செய்யும் போது, அதில் உள்ள  ஜெனரேட்டர் வழியாக மின்சாரம் உற்பத்தியாகி பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. அதோடு இந்த சாதனத்தை ஒருவர் மிதிக்கும் போது, அவரது உடலில் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகிறது என்பதை காட்டும் வகையிலும் இந்த சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

par%20.jpg

இந்தியாவில் முதலில் உத்ரகாண்ட் மாநிலத்தில் இந்த சாதனம் விற்பனைக்கு வருகிறது. இதன் விலைரூ. 12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. இந்த சாதனத்தை ஒரு மணி நேரம் பெடல் செய்தால் 24 மணி நேரத்திற்கு நம் வீட்டிற்கு தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். சிறிய விளக்குகள், மின்விசிறிகளை இயங்க செய்ய முடியும். அதோடு செல்போன் சார்ஜர் செய்து கொள்ளலாம்.

இது குறித்து பர்கவா கூறுகையில், "இது தொடர்பாக ஒரு வருடத்திற்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். ஆனால் அரசுடன் இணைந்து பணியாற்ற எனக்கு விருப்பமில்லை. அதற்காக அவர்கள் மோசமென்று சொல்ல வரவில்லை. ஆனால் திறமையற்றவர்கள். இந்த உலகம் முழுக்க 130 கோடி மக்கள் மின்சாரம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த சாதனத்தை நான் கண்டுபிடித்துள்ளேன் ''என்றார். 

http://www.vikatan.com/news/india/55779.art

Link to comment
Share on other sites

போர் முடிந்த இரவு வேளையில், போர்க்களத்தில் ஒருவர் புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தார்...
அந்த நபரைப் பார்த்த ஒரு பெண்மணி கேட்டார், ‘ஏன் எல்லோரும் ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் நீ மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று.
அதற்கு அந்த நபர் சொன்னார், ‘இன்று சிப்பாயாக பணிபுரியும் நான் இந்தப் படைக்கு ஒருநாள் தலைவனாக ஆக வேண்டுமென்று’.
அப்படி தன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நபர், பின்னாளில் அந்தப் படைக்கு மட்டுமல்ல, அந்த நாட்டுக்கே மன்னன் ஆனார்.
அவர் வேறு யாருமில்லை பிரான்ஸ் நாட்டையாண்ட "மாவீரன் நெப்போலியன் தான்".

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 03
 
 
 
 

article_1449111913-aa.jpg1592 - 'எட்வேர்ட் பொனவென்ச்சர்' என்ற ஆங்கிலக் கப்பல் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.

1795 - ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளராக  நியமிக்கப்பட்டார்.

1854 - அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

1903 - சேர் ஹென்றி பிளேக் ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்து சேர்ந்தார்.

1904 - வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன், சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1912 - பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்கேரியா, கிரேக்க நாடு, மொண்டெனேகிரோ, மற்றும் சேர்பியா ஆகியன துருக்கியுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன.

1917 - 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது.

1944 - கிறீசில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.

1967 - தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறிஸ்டியன் பார்னார்ட் தலைமையில் உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை 53 வயது லூயிஸ் வாஷ்கான்ஸ்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

1971 - இந்திய-பாகிஸ்தான் போர், 1971: இந்தியா கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது.

1978 - வேர்ஜீனியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.

1984 - இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொதுமக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.

1997 - நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவது தடை செய்யும் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

1999 - செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lande இன் தொடர்புகளை நாசா இழந்தது.

2007 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.

1992-  சர்வதேச ஊனமுற்றோர் தினம் இன்றாகும்.

- See more at: http://www.tamilmirror.lk/160488/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.de7qXB6G.dpuf
Link to comment
Share on other sites

12307315_949707855077909_811755666076281

தென் ஆபிரிக்கக் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும், உலக சாதனையாளருமான மார்க் பவுச்சரின் பிறந்தநாள்.

Link to comment
Share on other sites

அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் நாள் இன்று..
International Day of Persons with Disabilities

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை அனைத்துலக மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.

12308496_949317201783641_797174492405415

Link to comment
Share on other sites

சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு

 

யற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை. மனிதனும் அது போலத்தான்.

ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லா வகையிலும் வேறுபடுகின்றனர். ஆனால் யாரும் முழுமையோடு படைக்கப்படுவதில்லை. குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. அதை பெரிதாய் நினைத்து வருந்துகிறவன் உல்கையே வெறுத்துப்போய்ப் பார்க்கிறான். அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான். இன்று, உலக மாற்றுத் திறனாளிகள் தினம். தங்கள் உடலிலுள்ள குறைகளை துச்சமாய் மிதித்து,  வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில் எதிர்நீச்சல் அடித்து உலகின் பார்வையை தங்கள் மீது திருப்பிய ஒருசில சாதனையாளர்கள் பற்றிய தொகுப்பு இதோ…

ஹெலென் கெல்லர்

457px-Helen_Keller.jpg

இளம் வயதில் ஏற்பட்ட மர்மக் காய்ச்சலால் பார்வை, பேச்சு, கேட்கும் திறன் அனைத்தையும் இழந்தவர் ஹெலென் கெல்லர். ஆனி சுலிவன் என்பவரால் சைகை மொழி கற்பிக்கப்பட்டு பிறரோடு தொடர்புகொள்ளத் தொடங்கினார். பேச்சு மற்றும் கேட்கும் திறனை இழந்தவர்களில் முதன்முதல் இளங்கலை பட்டம் பெற்றவர் இவர்தான். சுமார் 40 நாடுகளுக்குப் பயணம் செய்து மாற்றுத் திறன் கொண்டவர்கள்,தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க பல சொற்பொழிவுகள் ஆற்றினார். பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள இவர், பல இடங்களில் தொழிலாளர் நலனுக்காகவும், பெண்கள் உரிமைக்காகவும் குரல் கொடுத்துள்ளார். உலகிலுள்ள மாற்றுத் திறன் கொண்ட மக்களுக்கான போராளியாகக் கருதப்பட்டார் ஹெலென். இவரது வாழ்க்கையைத் தழுவி ‘தி மிராக்கிள் உமன்’ என்ற பெயரில் நாடகங்களும் திரைப்படமும் வெளியாகி,  பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் பிறந்த தினமான ஜூன் 27, அமெரிக்காவில் ஹெலென் கெல்லர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.

சுதா சந்திரன்

200120-sudha-chandran.jpg

நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர். தமிழ் தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் தோன்றியவர். மிகச் சிறந்த பரதக் கலைஞர். இயற்கை இவரோடு விளையாடியபோது இவருக்கு வயது 17. திருச்சி அருகே ஏற்பட்ட விபத்தால் இவர் ஒரு காலை இழக்க நேரிட்டது, அதன் பிறகு, ‘ஜெய்ப்பூர் ஃபூட்’ எனப்படும் செயற்கை காலின் உதவியோடு நடக்கத் தொடங்கினார். ஆனால் இவர் நடப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தான் உயிரிலும் மேலாய் நேசித்த நடனத்தில் தன் கவனத்தைத் திருப்பினார். தேர்ந்த பரதக் கலைஞரான இவர், உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கச்சேரிகள் நடத்தியுள்ளார். இவரது வாழ்க்கையைத் தழுவி தெலுங்கில் ‘மயூரா’  ( தமிழில் 'மயூரி') என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார் இவர். தனது சோதனையை பெரிதுபடுத்தாமல் நாட்டியத்தில் சாதித்துக் காட்டி பலருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார் இவர்.

ஸ்டீபன் ஹாகிங்

stephen%20hawking.jpg



1942ல் பிறந்த இந்த அறிவியல் மேதை தனது 21வது வயதில் தசையூட்டமற்ற பக்க மரபு நோயால் பாதிக்கப் பட்டார். கை, கால் முழுவதும் செயலிழந்து வீல் சேரிலேயே வாழ்க்கை கழிந்த போதும், இவரது மூளையின் செயல்பாடு சற்றும் ஓயவில்லை. சார்பியல் மற்றும் குவான்டம் ஈர்ப்பில் அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். இவரது ‘ப்ரீஃப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற புத்தகம்,  விற்பனையில் பல சாதனைகள் நிகழ்த்தியது. 2009ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டபோதிலும், அசராமல் வேற்றுகிரக வாசிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடங்கியுள்ளார் இவர்.

ஜான் நேஷ்

john%20nash.jpg

நோபல் பரிசு பெற்ற இவர், கணிதத்திற்கு மிகப்பெரும் பங்காற்றியவர். இவர் கண்டுபிடித்த ஆட்டக் கோட்பாடு பொருளாதாரம், அரசியல், உயிரியல், கணினி அறிவியல் எனப் பல இடங்களிலும் பயன்படுகிறது. சைசோப்ரேனியா என்னும் மன நோயால் பாதிக்கப்பட்ட நேஷ், ஜாமெட்ரி, டிபரென்சியல் சமன்பாடு முதலியவற்றிற்கும் முன்னோடியாய்த் திகழ்ந்தவர். தீவிர மன நோயால் பாதிக்கப்பட்ட இவர், கற்பனையாக சில விஷயங்களை புனைந்து கொண்டு பயப்படுவார் என்று அவரது மனைவி கூறியுள்ளார். ஆனாலும் தனக்கு மிகவும் பிடித்த கணிதத்தை அவர் ஒருபோதும் ஒதுக்கவில்லை. கணிதத்தோடு வாழ்ந்ததால்தான் அவர் நீண்ட காலம் உயிரோடு இருந்தார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 1994-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் நிணைவுப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

பீத்தோவன்

beethoven.jpg

இசை உலகின் பிதாமகனாய் கருதப்பட்டவர் பீத்தோவன். மிகச்சிறந்த பியானோ இசைக்கலைஞரான இவர், மேற்கத்திய இசையின் பரிணாமத்திற்கு பெரும் பாலமாய் விளங்கியவர். இவர் முதன்முதலில் இசைக் கச்சேரி நடத்தையில் இவருக்கு வயது 8. தனது 26-வது வயதில் கேட்கும் திறனை முழுமையாக இழந்தார் பீத்தோவன். ஆனால் இவர் அசரவில்லை. இசையிலேயே மூழ்கினார். இசையில் பல முத்துக்களை அள்ளினார். அவற்றுள் நைன்த் சிம்பனி, வயலின் கான்செர்டோ போன்றவை குறிப்பிடத்தக்கவை. பைபோலார் நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் இந்த இசை மேதை.

மர்லா ருன்யான்

marla%20runyan.jpg



அமெரிக்காவைச் சார்ந்த தடகள வீராங்கனையான இவர் பார்வையற்றவராவார். மாற்றுத் திறனாளிகளுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில்,  மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் பாராலிம்பிக் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். 1992 பாராலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கங்களும்,1996ம் ஆண்டு 1 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். ஹெப்டத்லான், மாரத்தான், 500 மீட்டர், 20000 மீட்டர் ஆகிய பிரிவுகளில் அமெரிக்காவின் தேசிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர் இவர்தான்.

நிக் வுஜுசிக்

nick%20vujicik.jpg

வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர்கள் இவரைத் தெரியாமல் இருக்க முடியாது. 1982ல் ஆஸ்திரேலியாவில் பிறந்த நிக்கிற்கு இரண்டு கைகள், கால்கள் கிடையாது. சிறு வயதில் பல துன்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளான நிக்,  பின்னர் வாழ்க்கையை எதிர்த்துப் போராடத் தொடங்கினார். ‘லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கி,  மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்காக உதவி செய்து வருகிறார். பட்டர்பிளை சர்க்கஸ் எனும் குறும்படத்தில் நடித்து,  அதற்காக சில விருதுகளும் வென்றுள்ளார். 2005-ம் ஆண்டிற்கான சிறந்த ஆஸ்திரேலியன் என்னும் விருது இவருக்கு வழங்கப்பட்டது. “என்னுடைய வீட்டில் நான் எப்போதும் ஷூக்கள் வைத்திருப்பேன். எனக்கு ஆச்சரியங்களின் மீது அதீத நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை எனக்கு மிகவும் அதிகமாகவே உள்ளது” என்று சிரிக்கிறார் நிக்.

ஆஸ்கர் பிஸ்டோரியஸ்

oscar%20pistorius.jpg



மாற்றுத்திறன் கொண்ட வீரர்கள் பாராலிம்பிக் போட்டிகளில் கலக்க,  இவரோ அதற்கும் ஒரு படி மேலே போனவர். மாற்றுத்திறன் கொண்டிருந்தாலும் சாதாரண சக வீரர்களோடு 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று,  உலகை வியப்பில் ஆழ்த்தினார். இரண்டு கால்களும் இல்லாமல் கார்பன் பிளேடு எனப்படும் செயற்கை காலின் உதவியோடு ஓடும் இவர்,  2011-ம் ஆண்டு உலக தடகளப் போட்டியில் 4x400 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் உலகப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் மாற்றுத்திறன் கொண்ட வீரர் என்ற சாதனையைப் படைத்தார். பாராலிம்பிக் போட்டிகளில் இவர் 1 வெண்கலம்,1 வெள்ளி மற்றும் 6 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். 2007ம் ஆண்டின் சிறந்த மனிதராக இவரை BBC தேர்வு செய்தது.

அருநிமா சின்ஹா

arunima.jpg



இந்திய மூவர்ணக் கொடியை உலகின் மிக உயரத்தில் பறக்கவிட்டவர் இந்த கால் இழந்த சாதனைப் பெண். 2011ல் தொடர்வண்டியிலிருந்து சில திருடர்களால் வெளியே தூக்கி வீசப்பட்டார். மற்றொரு டிராக்கில் வந்த இன்னொரு ரயில் இவரது காலை நசுக்கியதில் தனது காலை இழந்தார் அருநிமா. தனது பிரச்சனையையே தனது பலமாகக் கருதிய இவர்,  2013-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நம் தேசியக் கொடியை நட்டு தேசத்திற்குப் பெருமை தேடித் தந்தார். உலகின்  மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய் மாற்றுத் திறனாளி இவர்தான். முன்னாள் தேசிய வாலிபால் மற்றும் கால்பந்து வீராங்கனையான இவர், புற்றுநோயிலிருந்து விடுபட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கால்,  தான் மிகவும் ஊக்கம் பெற்றதாகக் கூறினார்.

இவர்கள் மட்டுமல்ல இவர்கள் போல பலரும் தங்கள் சோதனைகளை சாதனைகளாக மாற்றியுள்ளனர்.  உடலிலிருக்கும் ஒவ்வொரு நரம்பிலும் நம்பிக்கை வேரூன்றியிருக்க வேண்டும். மனம் திடமாய் இருந்தால் போதும் செவ்வாய் கிரகத்திற்கே செல்ஃபி எடுக்கச் செல்லலாம்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

http://www.vikatan.com/news/miscellaneous/55895-inspiring-stories-of-10-famous-disabled.art

Link to comment
Share on other sites

உலகில் இன்றும் வாழும்  "நர மாமிசப் பிரியர்கள்"

Naramamisam.jpg


இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய தீவாகிய பப்புவா தாழ்நில மழைக்காட்டு பகுதியில் உலகின் கடைசி நரமாமிசப் உண்ணும் 'கொரவை'கள் இன மக்கள் வாழ்கின்றனர்.

இவர்களின் எண்ணிக்கை 2500  4000 பேர் அண்ணளவாக காணப்படுகின்றனர். காரணம் சிலர் 'ஈலன்டன்' நதிகரையோரத்தில் விவசாயம், மீன்பிடி என கிராம வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.

இவர்கள் தமது அன்புக்குரியவர்களையே நரமாமிசமாக உண்பர். நோயினால் இறந்தவர்களையும் உண்பர்.

அநாதையாக்கப்படுபவர்கள் "ஹக்வா" நரமாமிச விருந்துக்குரியவர்கள். இந்த விருந்துக்கு பயன்பட இவர்கள் 14 வயதை கடந்திருக்க வேண்டும்.

மேலும் இவர்களை தாக்கும் நோய் மந்திரவாதிகளா ல் ஏவிவிடப்படுபவை என்பது இவர்களின் அசைக்க முடியா நம்பிக்கையாகும்.             

  இவர்களின் வீடு 35  45 அடிக்கு மேல் அமையும். அவர்களின் இந்த வீடே அவர்களின் அந்தஸ்துக்குரியது. இவர்களது பிரதான தொழிலாக மீன்பிடித்தல், வேட்டையாடல், உக்கிய மரத்தில் புழுக்களை எடுத்தல், 'சாகோபாம்' மரத்தில் உட்சோற்றில் மா தயாரித்தல் என்பன அமையும். அம்பெய்ந்து மீன்பிடித்தலில் இவர்கள் வல்லவர்கள்.

இரசனை குறைந்த இவர்கள் மூக்கை மட்டும் அழுகுபடுத்தி கொண்டு பிறந்த மேனியாக ஆண், பெண் இருபாலாரும் இருபர். சில பெண்கள் பாளை இலையை தமது இடையில் கட்டி வைத்து கொள்வர்.

நாகரீகத்தை விரும்பா இவர்கள்  மாறி வந்தவர்களிடம் பண்மாற்று முறை மூலம் தமக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்வர். அதனுடன் இவர்கள் வாழும் காட்டில் சிவப்பு நிற பழ வகையும் உண்டு. அதுவே இவர்களின் காலை உணவாகும்.

 

Link to comment
Share on other sites

நண்பர்:  ஹை-வோல்டேஜ் கரண்ட் திடீர்ன்னு வந்ததாலே எங்க தெருவில் உள்ள எல்லா வீட்டு டி.வி.க்களும் அவுட்டாயிடுச்சிங்க!

மற்றவர்: அப்ப எல்லார் வீட்டிலேயும் பரிபூரண நிம்மதி நிலவுதுன்னு சொல்லுங்க!

 

"டெய்லர் கடையில எதுக்கு கார்பெண்டர்?''
"ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்கவாம்!''

Link to comment
Share on other sites

மாணவனின் கனவை நனவாக்கிய DHL

 

உலகின் முன்னணி அதிவேக சேவை மற்றும் சரக்கியல் வழங்குநரான DHL நிறுவனம், பாடசாலை றக்பி விளையாட்டு வீரரான ஹர்ஷ சமரசிங்கவின் கனவுப் பயணத்தை நிறைவேற்றியுள்ளது. 

DHL.jpg

இதற்கமைய, லண்டன் நகரில் இடம்பெற்ற 2015ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண றக்பி போட்டிகளின் உத்தியோகபூர்வ பந்தினை கையளித்து றக்பி வரலாற்றில் இடம்பிடித்த ஒரேயொரு இலங்கையர் எனும் பெருமையை ஷர்ஷ சமரசிங்க பெற்றுள்ளார்.

 

2015ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண றக்பி போட்டிகளின் உத்தியோகப்பூர்வ சரக்கியல் பங்காளரான DHL Express நிறுவனம் மற்றும் இலங்கை றக்பி கால்பந்தாட்ட சங்கம்  (SLRFU)ஆகியன இணைந்து றக்பி உலக்கிண்ண போட்டியில் உத்தியோகபூர்வ விளையாட்டு பந்தினை கையளிப்பதற்கான வாய்ப்பை 8 முதல் 15 வயதுக்குட்பட்ட இளம் றக்பி வீரர்களுக்கு வழங்கியிருந்தது.

 

இந்தப் போட்டி மிகப் பிரபல்யம் அடைந்துள்ளதுடன், நாடுமுழுவதுமிருந்து ‘A’ பிரிவு பாடசாலைகளிலிருந்து 36 பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. முதலில் 80 பாடசாலை மாணவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 இறுதி போட்டியாளர்களுக்கு றக்பி களியாட்டத்தில் பங்குபற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

 

ஒன்லைன் மற்றும் SMS வாக்குப்பதிவினூடாக வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். வெவ்வேறு கட்டங்களில் பெற்றுக்கொண்ட ஒட்டுமொத்த அதியுயர் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவான மாணவர், ‘Match Ball Delivery’ செயற்திட்டத்தின் ஓர் அங்கமான 2015 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண றக்பி போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

DHL Express ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கை செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி திமித்ரி பெரேரா கருத்து தெரிவிக்கையில், 

‘2015ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண றக்பி போட்டிகளில் முதலாவது உத்தியோகப்பூர்வ பந்தினை கையளிப்பதற்கான வாய்ப்பு இலங்கை மாணவரான ஹர்ஷவிற்கு கிடைத்தமை அற்புதமான விடயமாகும். இந்த வாய்ப்பினை வழங்குவதனூடாக ஹர்ஷவின் வாழ்வில் சாதகமான பங்களிப்பை ஏற்படுத்த முடிந்துள்ளமை குறித்து DHL நிறுவனம் மிகவும் பெருமையடைகின்றது” என்றார்.

 

கண்டி திரித்துவக் கல்லூரியின் மாணவரும், றக்பி வீரருமான ஹர்ஷவிற்கு சிறுவயது முதலே றக்பி வீரராக வேண்டுமென்பதே கனவாக இருந்தது. 

 

உலகம் முழுவதும் இருந்து 27,000 பார்வையாளர்கள் கூடியிருந்த லீசெஸ்டர் சிட்டி மைதானத்திலிருந்து பந்தை கையளித்து பெருமிதத்துடன் வெளியேறியமையானது தன் கனவு நனவானதிற்கு ஒப்பானது என அவர் குறிப்பிட்டிருந்தார். ‘எனது வாழ்நாளின் மிகப்பெரிய தருணமாக இதுவுள்ளது. 

 

உலகம் முழுவதும் உள்ள பிரமாண்டமான றக்பி ரசிகர்கள் பார்வையிட உத்தியோகபூர்வ பந்தினை நான் கையளித்தமை விலைமதிக்கமுடியாததாகும்” என்றார்.

 

லீசெஸ்டர் சிட்டி மைதானத்தில் கனடா மற்றும் ரொமேனியாவிற்கிடையே நடைபெற்ற குழு மட்ட போட்டியில் முதலாவது உத்தியோகப்பூர்வ பந்தினை கையளிப்பதற்கு மேலதிகமாக, தனது தந்தையுடன் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட RWC 2015 போட்டியில் பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பும் ஹர்ஷவிற்கு கிடைத்திருந்தது. 

 

இந்த பரிசு தொகுப்பில் லண்டனிலிருந்து திரும்பி வருவதற்கான விமான பயணச்சீட்டு, இரண்டு இரவுகளுக்கான தங்குமிட வசதி மற்றும் உத்தியோகப்பூர்வ ஜெர்ஸி மற்றும் றக்பி பந்து கொண்ட RWC 2015 DHL Merchandise Kit உம் உள்ளடக்கப்பட்டிருந்தன.

 

“இதுவே எனது முதலாவது வெளிநாட்டு பயணம். வாழ்நாளில் ஒரேயொரு தடவை மாத்திரம் கிடைக்கும் இந்த வாய்ப்பினை எனக்கு வழங்கிய DHL நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

இத்தகைய பெருமைக்குரிய றக்பி போட்டியில் ஓர் அங்கமாக இருந்ததையிட்டு நான் மிகவும் பெருமையடைவதுடன், என்றேனும் ஒருநாள் இலங்கை சார்பாக இத்தகைய போட்டியில் பங்குபற்ற என்னை ஊக்கப்படுத்தியுள்ளது” என மேலும் ஹர்ஷ தெரிவித்தார்.

 

என்றேனும் தனது பாடசாலை மற்றும் தேசிய அணி சார்பாக போட்டியிட எதிர்பார்த்துள்ள இளம் வீரர்களை உற்சாகமூட்டுவதாக இந்த உலகளாவிய நிகழ்வு அமைந்துள்ளது. இந்த அனுபவம், றக்பி போட்டிக்கான அவர்களது அன்பை வலுப்படுத்துவதுடன், தமது பாடசாலை மற்றும் தேசத்தை பெருமைகொள்ளச் செய்வதற்கான அவர்களின் கனவினை மேலும் உறுதியாக்குவதாக அமைந்துள்ளது.  

 

RWC 2015 போட்டியில் உத்தியோகபூர்வ பந்தினை கையளிக்கும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கிடும் DHL இன் பந்து கையளிப்பு திட்டத்தில் பங்கேற்ற 42 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 48 மாணவர்களுள் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த ஷர்ஷ சமரசிங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/686

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 4
 

article_1449200522-0.jpg1791: உலகின் முதலாவது ஞாயிறு பத்திரிகையான பிரிட்டனின் தி ஒப்சேவர் முதல் இதழ் வெளியிடப்பட்டது.

1918:  உட்ரோ வில்சன் பதவியிலிருக்கும் போது  ஐரோப்பாவுக்குச் சென்ற முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.

1945: ஐ.நா.வில் அமெரிக்கா இணைவதற்கு அந்நாட்டு செனட் சபை 65-7 விகிதத்தில் வாக்களித்தது.

1971: இந்திய- பாகிஸ்தான் மோதல் குறித்து ஆராய்வதற்காக ஐ.நா.பாதுகாப்புச் சபை அவசரகால கூட்டமொன்றை நடத்தியது.

1971: பாகிஸ்தான் கடற்படை மற்றும் கராச்சி நகர் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது.

1977: மலேசியா விமானமொன்று கடத்தப்பட்டு விபத்துக்குள்ளானதில் 100 பேர் பலி.

1984: குவைத் விமானமொன்றை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கடத்தி பயணிகள் நால்வரை சுட்டுக்கொன்றனர்.

- See more at: http://www.tamilmirror.lk/160573/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.y10TpWUj.dpuf
Link to comment
Share on other sites

12345627_950144301700931_794482033046506

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் அஜித் அகார்காரின் பிறந்தநாள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.