Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p106a.jpg

twitter.com/indiavaasan: எவ்வளவு பெரிய சாலை விபத்தும், ஐந்து நிமிட வேகக் குறைப்புக்கு மட்டுமே என்றாக்கிவிட்டது வாழ்க்கை ஓட்டம்.

twitter.com/altappu: `ஏழு சரவணன்... ஒரே மீனாட்சி’ - பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் ஊத்தின சம்முவத்துக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்.

twitter.com/Sandy_Offfl டெக்னாலஜி தெரியாத பெற்றோர்களைக் கிண்டல் செய்யாதீர்கள். கீரை பேர்கூட என்ன எனத் தெரியாமல்தான் வளர்ந்து கொண்டிருக்கிறோம்.

twitter.com/Aruns212: அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்யும் அம்மாவைப் பார்த்தே அதிகம் சொல்கிறோம், `போம்மா... உனக்கு வேற வேலையே இல்லை'.

twitter.com/Kozhiyaar : குழந்தைகளின் திருட்டு முழி, அவர்கள் செய்த தவறைவிட சுவாரஸ்யமாக இருக்கும்.

twitter.com/teakkadai: தங்களை பணக்காரர்கள் என நினைத்துக்கொள்ளும் நடுத்தர வகுப்பினர்தான், பின்னாளில் ஏராளமான சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.

twitter.com/devaseema: `நாளைக்கு லன்ச்-க்கு இட்லி கொடுக்கட்டா செல்லம்?’னா, `பத்து வருஷமா அதுதானம்மா குடுக்குறீங்க’ங்து பொடிசு # அதுக்கு வயசே நாலுதான் ஆவுது.

twitter.com/pshiva475: இந்திய அரசே... ரயில்வே ஸ்டேஷன்ல மட்டும் இலவச WiFi வசதி செஞ்சுக்கொடுத்தா, `ட்ரெயின் லேட்டா வர்றதைப் பத்தி நாங்க ஏன் கவலைப்படவோ, கம்ப்ளைன்ட் பண்ணவோபோறோம்?’

twitter.com/kurumbuvivek: 20 ஆயிரம் சம்பளம் வாங்கினப்ப மிடில் க்ளாஸா இருந்த மக்கள், இப்ப 60 ஆயிரம் சம்பளம் வாங்கியும் மிடில் க்ளாஸாவே வெச்சிருக்கிறதுதான் இந்த ஐ.டி துறை.

twitter.com/santhiyagu0009: `பஸ்களில் ஸீட் பெல்ட்’ - தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ஆலோசனை. #முதல்ல ஸீட்டுக்கு நாலு போல்டு போடுங்கப்பா... என்னா ஆட்டம் ஆடுது!

twitter.com/vandavaalam: எங்கே பார்த்தாலும்... யாரைப் பார்த்தாலும் வெயிட் குறைக்கிறதுலேயே குறியா இருக்காங்க.

ரெண்டு கிலோ குறையும்னா மூளையைக் கூடக் கழட்டி வெச்சிருவானுகபோல!

p106b.jpg

twitter.com/ravi3875: எந்த நேரத்தில் நான் சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அம்மாவாக இருந்த வரை, என் உடல் ஆரோக்கியமாக இருந்தது!

twitter.com/Boopaty Murugesh: குடத்துல தண்ணி புடிச்ச காலம் வரை, பெண்கள்தான் தூக்கினாங்க. தண்ணி கேன் வந்ததுல இருந்து ஆம்பளையைத் தான் தூக்கவிடுறாய்ங்க :-(

twitter.com/iindran: நம் ஊர்ல கொலை பண்ணிட்டுக்கூட சர்வசாதாரணமா நடந்து போலாம். திடீர்னு ஒருநாள் டக்கின் பண்ணிட்டு கேஷுவலா ஆபீஸ் போக முடியாது

# போறோம் இன்னைக்கு!

twitter.com/vandavaalam: சண்டே எல்லாம் ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவிச்சு அனுபவிச்சு வேஸ்ட் பண்ணணும்.

twitter.com/ajithkumarc10: எவ்ளவோ டெக்னாலஜி இருக்கு. அதோடு மாத்திரையையும் இனிப்பா மாத்தித் தந்தா நல்லாயிருக்கும்... இதை உட்டுட்டு கண்டுபுடிக்கிறாங்களாம்!

twitter.com/deebanece: ஃப்ரெண்ட் வீட்ல யாரும் இல்லைன்னா, சொந்த வீடு வாங்கின மாதிரி ஒரு ஃபீலிங்!

twitter.com/prakashalto: `அப்பா இன்னைக்கு ஃபீஸ் கட்ட கடைசி நாள்’ என்றான் மகன். `கட்டுறதும் கட்டாததும் அம்மா கையில் இருக்கு’ என்றான் அப்பன். கடந்த முறை அவள் காதில் இருந்தது!

p106c.jpg

facebook.com/varavanaiyaan: `ரசத்தை இறுத்து ஊத்தணும், குழம்பை சோத்துக்கு நடுவுல ஊத்தணும்...’ என்பது போன்ற எனக்கான எளிய பரிமாறல் விதிகள் மட்டுமே வைத்திருக்கிறேன்.

மற்றபடி உணவின் ருசி பிடிக்காவிட்டால் உண்ணும் அளவைக் குறைத்துக்கொள்வேன் அவ்வளவே. குறை சொல்லவே மாட்டேன்.

`ரூல்ஸ்படி ஊத்தணும்னா, ஒங்கொம்மாவே வந்து கஞ்சி ஊத்தட்டும்.’

`டக்கென வாட்ச்சைத் திருகியதில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் போய் நின்றேன்.’

`வர்றவ வந்து கொமட்லயே குத்தினாத்தான், `இந்தியன்' கமல் மாதிரி சாப்பிடுற நேரத்துல வியாக்கியானம் பேசாம சாப்பிடுவ’ என யாரோ ஒரு அம்மா, மகனைத் திட்டிக்கொண்டிருந்தார்.

இப்ப நான் என்ன கேட்டுட்டேன்?

facebook.com/nelsonxavier08:

கர்ப்பிணிப் பெண் ரயிலில் ஏறியதும், தானாக எழுந்து கதவுப் பக்கம் ஒதுங்கிப் போனவர்...

சார்... பேன்ட்ல பர்ஸ் நீட்டிக்கிட்டிருக்கு, உள்ளே வைங்கனு சொல்லிட்டுப் போறவர்...

மறந்து வைத்துவிட்டுப் போன கூலிங் கிளாஸை ஓடோடி வந்து தந்தவர்...

சிக்னலில் `நீங்க முதல்ல போங்க’ என வண்டியை நிறுத்தியவர்...

தேங்கி நிற்கும் மழைநீரில், நம் மீது சேறு அடிக்கும் என ஒதுங்கிப்போய் தடுமாறியவர்...

நாம் சாப்பிட வேண்டும் என மாலை 5 மணி வரை பிரியாணியையும் மீன்குழம்பையும் நமக்காக ஒதுக்கிவைத்திருந்தவர்...

இவ்வளவு அடைமழையிலும் `மீட்டர்ல வர்றதைக் குடுங்க சார்’ எனச் சொன்ன ஆட்டோ டிரைவர்...

அத்தனை பேரையும் கடந்த 8 மணி நேரத்தில் சந்தித்திருக்கிறேன். மழையால் மண்ணும், மனிதர்களால் மனதும் குளிர்ந்திருக்கின்றன!

vikatan

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

தென்னிந்தியாவின் மூன்றுலோக குலாபிகள் இந்த வார அக்கடதேசத்தில்...!

டோலிவுட் அர்த்தனா விஜயகுமார் 

p32a.jpg

ந்திர தேசத்து நடிகர் விஜய்குமாரின் ஒரே மகள். டி.வி காம்பியரிங், குறும்பட நடிப்பு என எக்கச்சக்க அனுபவங்களுக்குப் பிறகுதான் ‘கல்யாண் சில்க்ஸ்’ விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது அர்த்தனாவுக்கு. விளம்பர ஹோர்டிங்குகளில் ஹைதராபாத்தில் சிரித்துக்கொண்டிருக்கும் அர்த்தனாவுக்கு ஒரு நண்பர் மூலமாக  ‘சீதம்மா அண்டாலு ராமய்யா சித்ராலு' படத்தில் ஹீரோயின் ஜாக்பாட் கிடைத்தது. ராஜ் தருணோடு நடித்த அந்தப் படம் சுமாராக ஓடினாலும் ‘திரையில் ஹீரோவைவிட ஹீரோயின் செம’ என எழுந்த விமர்சனங்களால் அடுத்த படம்  ‘முத்துகாவ்' கிடைத்தது.  ‘‘மாஸ் கம்யூனிகேஷன் படித்து முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ் படிக்க நினைத்தேன். ஆனால், இன்று கேமரா முன்னால் பிஸியாகி விட்டேன். நாளை என்ன ஆவேன், நானறியேன்!'' என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார் அர்த்தனா. அர்த்தமா பேசுது அர்த்தனா!

சாண்டல்வுட் சைத்ரா சந்திரநாத்

p32b.jpg

டீனேஜைக் கடக்காமலேயே கன்னட சினிமாவுக்கு வந்த வெகு சிலரில் சைத்ராவுக்கு முதலிடம். முதல் படமே மாஸ் ஸ்டார் தர்ஷனோடு  ‘விராட்' என செம காம்போவில் கலக்குகிறார். அந்தக் கால கன்னட நடிகை மஞ்சுளா போல இருப்பதாகப் பலர் பாராட்டுவதால் பொண்ணு ஏக குஷியோ குஷி. சமீபத்தில்  ‘டிகே' படத்துக்காக லடாக்கில் மூச்சுத்திணறலோடு நடித்துக் கொடுத்த சின்ஸியர் சைத்ராவுக்கு வளமான எதிர்காலம் உண்டு என சாண்டல்வுட் பட்சிகள் கிசுகிசுக் கின்றன. சலோ சைத்ரா சலோ !

மல்லுவுட் பெர்லி மானே

p32c.jpg

கொச்சின் அழகி படித்தது பெங்களூரில்  ‘மீடியா'. படிப்பு முடிந்ததும்  ‘தி பெர்ஃபெக்‌ஷனிஸ்ட்' என்ற டைட்டிலில் எடுத்த குட்டி சினிமா பலத்த வரவேற்பைப்பெற அதைப்பார்த்துதான் மலையாள சினிமாவின் இளம் இயக்குநர் சமீர் தாஹிர் தன்  ‘நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' படத்தில் துல்ஹருக்கு நாயகியாக்கி அழகு பார்த்தார். அமிர்தா டி.வி-யில்  ‘டேஸ்ட் ஆஃப் கேரளா' என்ற சமையல் நிகழ்ச்சியில் கேரளா அறிந்த பிரபலமானதில் இன்னும் பல பட வாய்ப்புகள்.  ‘தி லாஸ்ட் சப்பர்',  ‘ஞான்',  ‘லோஹம்',  ‘டபுள் பேரல்',  ‘புஞ்சிரிக்கு பரஸ்பரம்',  ‘ஜோ அண்ட் தி பாய்' என வரிசை கட்டிப் படங்கள் ரிலீஸாக இப்போது  ‘டீம் 5',  ‘ப்ரேதம்',  ‘பப்பிரி துருத்து' என மூன்று படங்கள் ரிலீஸுக்குத் தயார். ஹீரோயினோ ஹீரோயின் தோழியோ என்ன ரோல் கொடுத்தாலும் நடிப்பார் என்ற நல்ல பெயர் எடுத்திருப்பதால், கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. தெலுங்குக்கும் பெர்லி போயாச்சு

vikatan

Link to comment
Share on other sites

இன்ஸ்டாகிராமில் பழமொழிகள்!

 
instaa_2942258f.jpg
 

ஒளிப்படப் பகிர்வுச் செயலியான இன்ஸ்டாகிராமைப் பலவிதங்களில் பயன்படுத்தலாம். இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்த ஓவியரான ஜஸ்டின் சாப்மேன் பழமொழிகளைப் புதுமையான முறையில் பகிர்ந்து கொள்ள இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்திவருகிறார்.

சாப்மேன் ஓவியர் என்பதால் பழமொழிகளை விளக்கும் வகையில் அழகான சித்திரங்களை வரைந்து அவற்றைப் படம் பிடித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார். ஒவ்வொரு பழமொழிப் படத்துக்கும் கீழ் அதற்கான பழமொழி வாசகமும் அது எந்த நாட்டுப் பழமொழி என்பதும் இடம்பெற்றிருக்கிறது.

இப்படி உலகப் பழமொழிகள் பலவற்றை அவர் படக்கதை பாணியில் ஓவியமாக வெளியிட்டுவருகிறார். பழமொழியில் ஆர்வம் கொண்டவர்கள் அவற்றைப் பட விளக்கத்துடன் வாசிக்கும்போது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

tamil.thehindu

Link to comment
Share on other sites

வெளையாடலாமா?

 

p134a.jpg

த்தனை நாளைக்குதான் நாமளும் கபடி, கோலினு ஒரே விளையாட்டை விளையாடிட்டு இருக்கிறது. விளையாட்டிலும் ஒரு மாற்றம், முன்னேற்றம் தேவையில்லையா... அதான் நம் ஊர் அரசியல்வாதிகளை முன்மாதிரியா வெச்சு சில விளையாட்டுகளைக் கண்டுபிடிச்சுருக்கேன். அதை விளையாடி ஜாலியா இருங்க மக்கழே... ஆங்...

தளபதி சைக்கிள் பந்தயம்:

‘நமக்கு நாமே’ பயணத்தில் ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்த சைக்கிளைப் பாராட்டும்விதமாக இந்தப் போட்டி நடத்தப்படும். பந்தயமானது ‘கோபப்படுங்கள்’, ‘முடியட்டும் விடியட்டும்’ என இரு பிரிவுகளாக நடக்கும். ‘கோபப்படுங்கள்’ பிரிவில் எல்லைக்கோட்டை யார் முதலில் தொடுகிறாரோ, அவர்தான் வெற்றியாளர். ‘முடியட்டும் விடியட்டும்’ என்பது அதற்கு அப்படியே எதிர்மறையான ஸ்லோ சைக்கிள் ரேஸ். யார் கடைசியாக எல்லைக்கோட்டைத் தொடுகிறாரோ அவர்தான் வெற்றியாளர். மாலையில் ஆரம்பிக்கும் இந்தப் பந்தயமானது மறுநாள் விடிந்தபிறகுதான் முடிவடையும். அதுதான் ‘முடியட்டும் விடியட்டும்’. இந்தப் போட்டியில் கலந்துகொள்ள டிராக்‌ஷூட், டி-ஷர்ட், ஷூ மிகமிக முக்கியம், எல்லாவற்றையும் விட அவர் தம்பியாக இருக்க வேண்டும். வெற்றிபெற்றவருடன் தளபதி அவர்கள் ஒரு செல்ஃபியும் தட்டுவார்.

அம்மா மியூஸிகல் சேர்:

p134b.jpg

இந்த மியூஸிகல் சேர் போட்டியில் ‘அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே...’ போன்ற அம்மா சென்டிமென்ட் பாடல்களை ஒலிக்க விட வேண்டும். ஒவ்வொரு நாற்காலியும் ஒவ்வொரு துறையைக் குறிப்பதாகும். ஒவ்வொரு ரவுண்டிலும் யார் யார் எந்தெந்த சேரில் அமர்கிறார்களோ அவர்களே அந்தந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சுற்று ஏற ஏற ஒவ்வொரு நாற்காலியாக குறைத்துக்கொண்டே வருவார்கள். வெளியேறு பவர்களுக்கு அவர்கள் அனுபவித்த பதவியைப் பறித்துவிட்டு அனுப்பி விட வேண்டும். வெற்றியாளருக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய கோப்பை வழங்கப்படும்.

கலைஞர் கட்டுமர சேலஞ்ச்:

p134c.jpg

இந்தப் போட்டியைக் கடல் சார்ந்த பகுதிகளில் மட்டுமே விளையாட முடியும். இதில் வீரர்களைக் கடலில் தூக்கி எறிந்துவிடுவார்கள். அதில் யார் அதிக நேரம் கட்டுமரம் போல மிதக்கிறார்களோ அதில் மூன்று பேர் (ஏனெனில் ஒன்று, இரண்டு எனச் சொன்னால் உதடுகள் ஒட்டாது) மட்டும் இறுதிச்சுற்றுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதிச்சுற்றுதான் டெரர் டேர் டெவில் ரகம். இறுதிச்சுற்றில் கடலில் கட்டுமரமாக மிதந்துகொண்டிருக்கும் வீரர்கள் மீது கிடா மாடு போன்ற ஆட்களை ஏற்றிவிடுவார்கள், அவர்களைத் தாங்கிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும், கவிழ்ந்துவிடக் கூடாது.

கேப்டன் ‘த்தூ’ தூக்கி அடிக்கும் போட்டி:

p134d.jpg

குண்டு எறிதல், தட்டு எறிதல் போன்று இதுவும் எறியும் வகையைச் சேர்ந்த போட்டிதான். கையில் ரிப்பேரான மைக்கைக் கொடுப்பார்கள், அதை ‘த்தூ’ என இரண்டு முறை துப்பி, தலையைச் சுற்றி மூன்று முறை சுற்றி தூக்கி எறிய வேண்டும், அதிக தூரம் தூக்கி எறிபவரே வெற்றியாளர். தோற்பவர்களைக் காதாம்பட்டை வீங்கும் அளவிற்கு வெற்றியாளர் குத்துவிட வேண்டும். தோற்றவர்கள் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழுந்துவர சந்தர்ப்பமும் கொடுக்கப்படும். இது தனிநபர் விளையாடும் விளையாட்டா, அணியாக விளையாடும் விளையாட்டா என்பது மட்டும்தான் விளையாடும்போது அவ்வப்போது குழப்பும்.

வைகோ நடைப் போட்டி:

p134e.jpg

‘போகி’யன்று காலை ஆறுமணி அளவில் போட்டியை ஆரம்பிக்க வேண்டும். போட்டியின் விதியே, தலைவிதியை நொந்துகொண்டு தலையில் தலைப்பாகையைக் கட்டிக்கொண்டு நடப்பதுதான். யார் அதிக தூரத்தை நடந்தே கடந்திருக்கிறார்களோ அவர்தான் வெற்றியாளர். சிலர் பாதிதூரம் வாடகை சைக்கிளில் சென்றுவிட்டு நான்தான் அதிக தூரம் சென்றேன் என ராஜதந்திரத்திலும் ஈடுபடுவார்கள். இந்த விளையாட்டு பார்க்கவே காமெடி, திகில், சென்டிமென்ட் என மூன்றும் கலந்த கலவையாக விருந்து படைக்கும். எப்பூடி...

லெட்ஸ் ஸ்டார்ட் தி கேம்!

vikatan

Link to comment
Share on other sites

வெலிக்­கடைச் சிறையில் குட்­டி­மணி, தங்­கத்­துரை, ஜெகன் உட்­பட 37 தமிழ் அர­சியல் கைதிகள் படு­கொலை
 

வரலாற்றில் இன்று: ஜூலை 25

 

1547: இரண்டாம் ஹென்றி பிரான்ஸ் மன்­ன­னாக முடி­சூ­டினார்.


1593: பிரான்ஸின் நான்காம் ஹென்றி புரட்­டஸ்­தாந்து மதத்தில் இருந்து ரோமன் கத்­தோ­லிக்­கத்­துக்கு பகி­ரங்­க­மாக மதம் மாறினார்.


1603: ஸ்கொட்­லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் பிரித்­தா­னி­யாவின் முத­லா­வது மன்­ன­னாக முடி சூடினார்.


1799: பிரான்ஸின் நெப்­போ­லி­யனின் படைகள் எகிப்தில்  முஸ்­தபா பாஷா தலை­மை­யி­லான ஒட்­டோமான் படை­யி­னரை சமரில் வென்­றன.


1894: முத­லா­வது சீன– ஜப்­பா­னியப் போர் ஆரம்­ப­மா­னது.


1898: புவேர்ட்டோ ரிக்கோ மீதான ஐக்­கிய அமெ­ரிக்­காவின் படை­யெ­டுப்பு ஆரம்­ப­மா­னது. முத­லா­வது அமெ­ரிக்கப் படை­யினர் குவா­னிக்கா துறை­மு­கத்தில் தரை­யி­றங்­கினர்.


1907: ஜப்­பானின் ஆட்­சியின் கீழ் கொரியா  வந்­தது.


1917: கன­டாவில் தற்­கா­லிக ஏற்­பா­டாக வரு­மான வரி அறி­முகம் செய்­யப்­பட்­டது.


1920: சிரி­யாவின் டமஸ்கஸ் நகரை பிரான்ஸ் கைப்­பற்­றி­யது.


1925: சோவியத் யூனியனின் டாஸ் செய்தி நிறு­வனம் ஸ்தாபிக்­கப்­பட்டது.


1934: ஆஸ்­தி­ரிய ஜனா­தி­பதி எங்­கல்பேர்ட் டொல்ஃபஸ் நாஸி­க­ளினால் கொலை செய்­யப்­பட்டார்.


1943: இத்­தா­லிய சர்­வா­தி­காரி பெனிட்டோ முசோ­லினி பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.


1944: இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸில் இடம்­பெற்ற நோர்­மண்டி சண்­டையில் 5,021 கனே­டி­யர்கள் கொல்­லப்­பட்­டனர்.


776welikada-prison.jpg1983: கறுப்பு ஜூலை; கொழும்பு வெலிக்­கடைச் சிறையில் குட்­டி­மணி, தங்­கத்­துரை, ஜெகன் உட்­பட 37 தமிழ் அர­சியல் கைதிகள் படு­கொலை செய்­யப்பட்­டனர்.


1984: சல்யூட் 7 விண்­க­லத்தில் சென்ற சோவியத் யூனி­யனின்  ஸ்வெட்­லானா சவீத்ஸ்­கயா விண்­வெ­ளியில் நடந்த முத­லா­வது பெண் என்ற பெரு­மையைப் பெற்றார்.


1993: லெபனான் மீது இஸ்ரேல் பாரிய தாக்­கு­தலை ஆரம்­பித்­தது.


1993: தென் ஆபி­ரிக்­காவில் சென் ஜேம்ஸ் தேவா­ல­யத்தில் 11 மத­கு­ருக்கள் சுட்டுப் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.


1994:  இஸ்­ரே­லுக்கும் ஜோர்­தா­னுக்கும் இடையில் வா­ஷிங்­டனில் சமா­தான ஒப்­பந்தம் ஏற்­பட்டு 1948ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த முறுகல் நிலை முடி­வுக்கு வந்­தது.


1996: புரூண்­டியில் இரா­ணுவப் புரட்சி ஏற்­பட்­டது.


1997 : கே. ஆர். நாரா­யணன் இந்­தி­யாவின் 10ஆவது ஜனா­தி­பதியானார். தலித் சமூ­கத்தைச் சேர்ந்த ஒருவர்இப்­ப­த­விக்குத் தெரி­வா­னமை இதுவே முதல் தட­வை­யாகும்.


776_sooriyanfm-logo.jpg1998: சூரியன் எவ்.எம். வானொலி சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது. இன்று தனது 18 ஆவது ஆண்டு நிறைவை சூரியன் எவ்.எம். கொண்­டா­டு­கி­றது.


2000: பிரான்ஸின் கொன்கோர்ட் சுப்­பர்­சோனிக் விமானம் பாரிஸ் நகரில் வீழ்ந்­ததில் அதில் பயணம் செய்த 109 பேரும் தரையில் 4 பேரும் கொல்­லப்­பட்­டனர்.


2007: பிரதிபா பட்டேல் இந்தியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியானார்.


2010: ஆப்கானிஸ்தான் யுத்தம் தொடர்பான பெரும் எண்ணிக்கையான இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

.metronews.lk
Link to comment
Share on other sites

ரோசலிண்ட் ஃபிராங்க்ளின்

10_2945716f.jpg
 

இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்

மரபணுவின் சரியான வடிவத்தைக் கண்டறிந்த இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ரோசலிண்ட் எல்சி ஃபிராங்க்ளின் பிறந்த தினம் இன்று (ஜூலை 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

லண்டனில் ஆங்கிலோ யூத குடும்பத்தில் (1920) பிறந்தார். தந்தை, ஒரு வணிக வங்கியில் பங்குதாரராக இருந்தவர். சிறுவயது முதலே கணிதம், அறிவியல், மொழிப் பாடங்களில் சிறந்து விளங்கினார். தான் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று 15 வயதிலேயே தீர்மானித்தார்.

பள்ளிக் கல்வி முடிந்ததும், கல்லூரி செல்ல விரும்பினார். பெண்களுக்கு உயர் கல்வி தேவையில்லை என்ற தந்தை, சமூக சேவையில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார். அதையும் மீறி 1938-ல் கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் சேர்ந்தார். 1941-ல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

உதவித்தொகை பெற்று அதே கல்லூரியில் ஆராய்ச்சி மாணவி யாகச் சேர்ந்தார். ஆனால், அடுத்த ஆண்டே வெளியேறி, பிரிட்டிஷ் நிலக்கரி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். நிலக்கரி, கார்பன்களின் பல்வேறு மைக்ரோ கட்டமைப்புகள் குறித்து 4 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார்.

எக்ஸ் கதிர் விளிம்பு விளைவுப் படிகவியல் மூலம் நிலக்கரி மூலக் கூறின் அமைப்பைக் கண்டுபிடிக்கும் வழிமுறையை உருவாக்கி னார். இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதி, 1945-ல் முனைவர் பட்டம் பெற்றார். தனது ஆராய்ச்சி குறித்து 5 கட்டுரைகள் வெளியிட்டார்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உயிர் இயற்பியலாளர் பிரிவில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார். கரைசல்களில் உள்ள புரதங்கள், கொழுப்புகளின் தன்மை பற்றி ஆராய்ந்தார். மரபணு ஆராய்ச்சியில் 2 ஆண்டுகள் ஈடுபட்டார்.

டிஎன்ஏ இழைகளின் அமைப்பு பற்றி ஆராய்ந்தார். அவற்றை எக்ஸ் கதிர்களின் விளிம்பு விளைவுப் படிகவியல் முறையில் படம் பிடித்தார். இதன்மூலம் மரபணு மூலக்கூறு வடிவத்தை முதலில் படம் பிடித்தவர் என்ற பெருமை பெற்றார்.

பெண் என்பதால், கிங்ஸ் கல்லூரி ஆய்வுக்கூடத்தில் அவமானங்களுக்கு ஆளானவர், லண்டன் பர்பெக் கல்லூரிக்கு இடம்பெயர்ந்தார். வைரஸ் பற்றிய தனது ஆய்வுகளை அங்கு தொடர்ந்தார். 5 ஆண்டுகளில் 17 ஆய்வறிக்கைகள் வெளியிட்டார்.

ஓர் ஆய்வுக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தார். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டே ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார். தன் ஆராய்ச்சிகள் மூலம் அறிவியல் களத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கிய ரோசலிண்ட் எல்சி ஃபிராங்க்ளின் 37-வது வயதில் (1958) மறைந்தார்.

ரோசலிண்ட்டுக்கு மென்மேலும் புகழ் கிடைத்தது, அவரது மறைவுக்குப் பிறகுதான். கிங்ஸ் கல்லூரியில் இருந்து அவர் வெளியேறியபோது, அவர் பதிவு செய்திருந்த மரபணுவின் எக்ஸ்ரே படம், ஆராய்ச்சிக் குறிப்புகள் ஆகியவற்றை உடன் பணியாற்றிய வில்கின்சன் என்ற அறிவியலாளர் எடுத்து வைத்திருந்தார். வாட்சன், கிரிக் ஆகிய அறிவியலாளர்களுக்கு இதை அவர் அனுப்பி வைத்தார்.

அவர்கள் 3 பேரும் இணைந்து இதுதொடர்பாக மேலும் ஆய்வு மேற்கொண்டனர். ஆராய்ச்சியில் வெற்றி கண்ட 3 பேரும் இதற்காக 1962-ல் நோபல் பரிசு பெற்றனர். அதன்பிறகு, ரோசலிண்ட் பெருமை உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்கா, இங்கிலாந்தில் பல உயர்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கூடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

tamil.thehindu

Link to comment
Share on other sites

ஒரே வேலையில் அழுத்தமாக உணர்கிறீர்களா? #MondayMotivation #DailyMotivation

11.jpg

வாரத்தின்  ஆறு நாட்களும் ஒரே வேலையில் மூழ்கி சோர்ந்து போகும் நபரா நீங்கள், அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். ஏதாவது ஒரு வேலையில் சிக்கி, முழுவதுமாக அதே வேலையில் ஈடுபட்டு வரும்போது ஒருகட்டத்தில் அந்த வேலை அப்படியே தடைபட்டு நின்று போக வாய்ப்புள்ளது. இது உங்கள் செயல்திறனை குறைப்பது மட்டுமின்றி உங்களை அடுத்தகட்டத்துக்கு நகராமல் நீண்ட நாட்கள் அதே இடத்தில் முடக்கிவிடும்.

இதுபோன்ற தருணங்களில் ஒருவர்  இத்தகைய சிக்கலிலிருந்து முழுவதுமாக மீண்டு, புதுமையான விஷயங்களில் ஈடுபட,  சில விஷயங்களை தொடர்ந்து ஒரு மாதம் செய்ய வேண்டும். அப்படி செய்தாலே, ஒருவர் புதுமையான மனிதராக மீண்டும் தன்னை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும்.

12.jpg
 

"ஒரே வேலையில் சிக்கிக் கொள்ளும் ஒருவருக்கு அவரது வயதும், பணிபுரியும் துறையும் தடையில்லை.  முதலில் இரண்டு விஷயங்கள் உள்ளன. சில விஷயங்களை செய்ய வேண்டும், சில விஷயங்களை கட்டாயம் செய்யக்கூடாது. இந்த 30 நாட்களிலும் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்...

1.சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்
 
தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் தினசரி சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். உங்கள் சைக்கிள் பயணங்களில் உங்களை கவனம் சிதற வைக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் பயணத்தையும், நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். எந்த தொந்தரவும் குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை செய்ய பழகுங்கள்.

13.jpg
 
 

2.ஒரு நாளைக்கு 10000 ஸ்டெப்ஸ் நடைபயணம்!
 
ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10000 ஸ்டெப்ஸ் என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10000 ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். அதற்காக ஒருவர் தினமும் 7.5 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும் என்பது இல்லை.உங்கள் வீட்டு மாடிக்கு ஏறுவது துவங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேண்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும்.
 
3.தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள்!

 
தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதே போல் 30 நாட்களும் புகைப்படம் எடுங்கள். உங்கள் மனநிலை முதல் நாளிலிருந்து தற்போது எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களை புதுமையாக சிந்திக்க வைக்க இந்த பழக்கம் மிகவும் உதவியாக இருக்கும். அது மிகப்பெரிய போட்டொகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது.

14.jpg
 

4.ஒரு நாவல் எழுதுங்கள்!
 
ஒரு நாவல் எழுதுங்கள் என்று கூறியவுடன் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். 'நான் ஒரு கணினி பொறியாளர்... நான் எப்படி நாவல் எழுதுவது?' என்று.  ஒரு நாளைக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை 1667 வார்த்தைகளில் எழுத துவங்குங்கள் 30வது நாள் 50000 வார்த்தைகள் கொண்ட ஒரு நாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும்.

5. காதலிக்க பழகுங்கள்:

காதல் என்றவுடன் எதிர்பாலின ஈர்ப்பு என்ற அர்த்தம் இல்லை. உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். நீங்கள் செய்யும் சில கெத்தான விஷயங்களுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற‌ நேரங்களில் வேலையை பற்றிய‌ நினைவு இல்லாத உற்சாகமான வேலைகளில் நாட்டம் செலுத்துங்கள்.நண்பர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதிற்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள்.
 
எதை செய்யக் கூடாது?
 
1. 30 நாட்களில் சமூக வலைதளங்களில் இயங்காதீர்கள்,

2. காஃபைன் நிறைந்த பானங்களை அருந்தாதீர்கள்.

3. தொலைகாட்சி பார்ப்பதை ஓரளவுக்கு தவிர்த்துவிடுங்கள்.

4. வேலையை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

5. அலுவலக நேரம் தவிர அதிக நேரம் அலுவலகத்தில் இருக்காதீர்கள்.

15.jpg

 

இவையெல்லாம் உங்களை பழைய நிலைக்கு எடுத்து செல்பவையாக இருந்துவிடும். உங்களை புதுமையாக சிந்திக்க வைக்க இவற்றை கொஞ்சம் தவிர்க்க பழகுங்கள். இதனை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, நீங்கள் நினைத்த புதுமையான உங்களை 30 நாட்களில் நீங்களே தயார்படுத்தி இருப்பீர்கள்.
 
இதனை சரியாக பின்பற்றினால், 30 நாட்களுக்குள் நீங்கள் சரியான பாதையில் பயணிக்க, புதுமையாக உணர, அடுத்தகட்டத்து உங்களை நகர்த்த உதவியாக இருக்கும்.

vikatan

Link to comment
Share on other sites

கட்டைக் காற்சட்டை அணிய தடை விதிக்கப்பட்டதால் பாவாடையுடன் பாடசாலைக்குச் சென்ற ஆண் மாணவர்கள்
 

நீளக் காற்சட்டைக்குப் பதிலாக கட்டை காற்சட்டையுடன் பாடசாலைக்குச் சென்றதால் திருப்பி அனுப்பப்பட்ட ஆண் மாணவர்கள் நால்வர், மறுநாள் பாவாடையுடன் பாடசாலைக்குத் திரும்பிய சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

 

18146dfccschool_24072016_P50_CMY.jpg

 

கிழக்கு சசெக்ஸ் பிராந்தியத்தின் ரொட்டிங்டீன் நகரிலுள்ள லோங்ஹில் உயர் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு பாடசாலைக்கு பாவடையுடன் சென்றனர். 

 

கடந்த வாரம் பிரிட்டனின் பல பகுதிகளில் கடும் வெப்பம் நிலவியது. செவ்வாய்க்கிழமை 33 பாகை செல்சியஸுக்கு வெப்பநிலை இருந்தது.

 

18146_Untitled-4.jpgஇதனால், மேற்படி பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் நீளக் காற்சட்டைக்குப் பதிலாக கட்டைக் காற்சட்டை அணிந்து பாடசாலைக்குச் சென்றனர்.

 

புதன்கிழமையும் இவர்கள் கட்டைக் காற்சட்டையுடன் சென்றதால் அம்மாணவர்களில் சிலர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். வேறு சிலர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.

 

இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை மாணவர்கள் நால்வர் பாவாடை அணிந்துகொண்டு பாடசாலைக்குச் சென்றனர். 

 

9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் நால்வரே இந்த விநோத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் பாவாடைகளை கழற்றுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

 

எனினும், இவ்விடயம் பாடசாலை அதிபர் கேட் வில்லியம்ஸிடம் சென்றபோது, ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடசாலை சீருடைகளின் எந்தப் பகுதியையும் அணிந்துகொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

 

மாணவர்களில் ஒருவரின் தந்தை வெஸ்லி அலன் இது தொடர்பாக கூறுகையில், இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது  சீருடை கொள்கை குறித்து மீள்பரிசீலனை செய்ய பாடசாலை நிர்வாகத்தை தூண்டும் என தான் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

.metronews.lk
Link to comment
Share on other sites

பலூன் மூலம் தனியாக 11 நாட்களில் உலகை சுற்றிவந்து புதிய சாதனை படைத்த மனிதர்
 

181532016-07-23T084558Z_1339049677_S1AETரஷ்யாவைச் சேர்ந்த பெடோர் கொனியுகோவ் பலூன் மூலம் 11 நாட்களில் தனியாக உலகை சுற்றி வந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

 

65 வயதான பெடோர் கொனியுகோவ் கடந்த 12 ஆம் திகதி அவுஸ்தி ரேலியாவிலிருந்து இப் பயணத்தை ஆரம்பித்தார்.

 

பலூன் ஹீலியம் மற்றும் வெப்ப வாயு மூலம் இயங்கும் 56 மீற்றர் (118 அடி) உயரமான பலூனில் அவர் தனியாக பயணம் செய்தார்.

 

நேற்று முன்தினம் 23 ஆம் திகதி மாலை அவர் மீண்டும் அவுஸ்திரேலி யாவைச் சென்றடைந்தார்.

 

இதன்மூலம் 11 நாட்களில் இப் பயணத்தை பூர்த்தி செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார் பெடோர் கொனியுகோவ்.


இதற்குமுன் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் பொசெட் 2002 ஆம் ஆண்டு 13 நாட்களில் பலூன் மூலம் உலகை சுற்றி வந்தமையே சாதனையாக இருந்தது.

 

181532016-07-23T084603Z_322877480_S1AETR

 

இந்நிலையில் பெடோர் கொனியுகோவ் 12 தினங்களில் இப் பய ணத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் எதிர்பார்க்கப்பட்டதற்கு 11 தினங்களிலேயே அவர் இப் பணத்தை நிறைவு செய்துள்ளார்.

 

உறையவைக்கும் குளிர், உறக்கமின்மை போன்ற நெருக்கடி களுக்கு மத்தி யில் 34,820 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பெடோர் கொனியுகோவ் பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அவுஸ்திரேலியாவிலிருந்து ஆரம்பித்து நியூஸிலாந்து, பசுபிக் சமுத்திரம், தென் அமெரிக்கா, தென் ஆபிரிக்காவின் நன்நம்பிக்கை முனை, தென் சமுத்திரப் பிராந்தியங்களுக்கு மேலாக அவர் பறந்து சென்றார்.  

 

கப்பல்கள், விமானங்கள் எதுவும் தென் படாத அந்தார்ட்டிக்காவுக்கு அண்மித்த பகுதிக்கு மேலாக பறந்தபோது மிக அச்சம் ஏற்படுத்துவதாக இருந்தது என பெடோர் கொனியுகோவ் தெரிவித்துள்ளார்.

metronews.lk
Link to comment
Share on other sites

ஜூலை 25: உதிரிப்பூக்கள் திரைப்படத்தை தந்த இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம்

13769360_1185658718159583_69778707962155

Link to comment
Share on other sites

ஆடை மாறிப்போச்சு!

 

p116a.jpg

ர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் கலர் ஜெர்சி அணிந்து ஆடும் பழக்கம் 1980-களின் இறுதியில் அறிமுகமானது. அதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதைப் போலவே கிரிக்கெட் வீரர்கள் வெண்ணிற உடைகளை அணிந்து ஒருநாள் போட்டிகளிலும் ஆடிவந்தனர். 1985-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது அனைத்து நாடுகளும் கலர் ஜெர்சி அணிந்து ஆடின. 1992-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியிலிருந்து, ஒருநாள் போட்டிகளில் கலர் ஜெர்சி அணிந்து ஆடுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆரம்பம் முதல் தற்போது வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி மாற்றங்கள்... ஒரு ஃப்ளாஷ்பேக்.

p116b.jpg

p116c.jpg

p116d.jpg

p116e.jpg

p116f.jpg

 

vikatan

Link to comment
Share on other sites

காவியில்  கால்பந்து  அசத்தும் ராம்தேவ்(காணொளி இணைப்பு)

 

கால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு விளையாடினார். Baba-Ramdev-parliamentarians.jpg

டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில்,  கண்காட்சி கால்பந்துப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது.

 

பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா 'திட்டத்துக்கும், பெண் குழந்தைகள் நலனுக்கான 'பேட்டி பட்சாவோ' திட்டத்துக்கும் நிதி திரட்டும் வகையில்,  இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Baba-ramdev.jpg

போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியுடன் பாலிவுட் நடிகர்கள் அணி மோதியது. 

இந்தியாவுக்கான கால்பந்து விளையாட்டுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள யோகா குரு பாபா ராம்தேவ் போட்டியைத் ஆரம்பித்து வைத்தார்.Baba-Ramdev-football.jpg

பாபா ராம்தேவ் , வழக்கமான காவி உடையுடன் காலில் சப்பாத்துகளும் அணிந்திருந்தார். அத்துடன் களத்தில் இறங்கியும் விளையாடியுள்ளார். Baba-Ramdev-goal.jpg

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில், இந்திய அணியின் முன்னாள் தலைவரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியுமான பிரசுன் பேனர்ஜி, கனரகத் தொழில் துறை அமைச்சர் பாபுல் சுப்ரியா உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர். Baba-ramdev-gootball-top.jpg

பாலிவுட் நட்சத்திரங்கள் அணியில் அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த கண்காட்சி போட்டியில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த நிதி, பிரதமரின் 'தூய்மை இந்தியா' மற்றும்  'பேட்டி பச்சாவோ' திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.  Baba-Ramdev-shoes.jpgexhibition-football-match-between-parlia

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

செம த்ரில்!

 

p88a.jpg

ராத்திரியில் டாய்லெட்டுக்கே தனியாகப் போகப் பயப்படுகிற பயந்தாங்கொள்ளிகள் இருக்கும் இதே ஊரில், ‘ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’னு பயத்தை மடித்து பாக்கெட்டில் வைத்தபடி சொல்லும் சாகசப் பிரியர்களும் இருக்கிறார்கள். அவர்கள் விரும்பும் அபாயகரமான விளையாட்டுகள் நடக்கும் இந்தியாவின் சில முக்கிய இடங்கள் இவை...

ஆலி (உத்தரகாண்ட்):

இந்தியாவில் இருக்கும் பனிச்சறுக்கு விளையாட்டு சாகசப்பிரியர்களின் புகலிடம் ஆலி. உத்தரகாண்ட் இமயமலைப் பகுதிகளின் சரிவில் அமைந்திருக்கும் ஆலி நமது நாட்டின் மிகப்பிரபலமான பனிச்சறுக்குத் தலம். பயிற்சி பெறுபவர்களுக்கு வசதியாக ஆலியில் தங்கும் விடுதிகளும், பனிச்சறுக்குக்குத் தேவையான பொருட்களும், சிறந்த போக்குவரத்து வசதிகளும் கிடைப்பதால் வருடம் முழுவதும் இங்கு பெரும்பாலானோர் குவிகிறார்கள். இங்கே ஸ்கையிங் செய்வதற்கென்றே ரிசார்ட்டுகள் பல பேக்கேஜ்களோடு சுற்றித் திரிகின்றன. ரெண்டு நாள், மூணு நாள் என சின்ன பேக்கேஜ்களும் இருக்கின்றனவாம்.

அந்தமான் நிக்கோபார் தீவுகள்:

p88b.jpg

ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகிலேயோ, விலாவிலேயோ கட்டிக்கிட்டுக் கடலுக்கு அடியில் போய் சுறாமீனுக்கெல்லாம் குட்மார்னிங் சொல்லிட்டு வர்ற விளையாட்டுக்குப் பேருதான் ஸ்கூபா டைவிங். இந்தியாவில் ஸ்கூபா டைவிங்குக்குப் பெயர்போனது அந்தமான் நிக்கோபார் தீவுகள். இங்கே பல பயிற்சியாளர்கள் பெரியவர்களுக்கு மட்டுமல்லாது சிறுவர்களுக்கும் கற்றுத் தருகிறார்கள். இதற்காகவே ஆசியாவில் அதிகப்பேர் விரும்பும் சுற்றுலா விளையாட்டுத்தலமாக அந்தமான் திகழ்கிறது.

காம்ஷெட் (மகாராஷ்டிரா):

p88c.jpg

பாராகிளைடிங் என்பது பெரிய பாராசூட்டைத் கட்டிக்கொண்டு மலையிலிருந்து குதிக்கும் உயிருக்கு உலைவைக்கும் விளையாட்டு. காம்ஷெட்தான் இந்தியாவின் மிகப் பாதுகாப்பான பாராகிளைடிங் சாகசம் செய்யும் இடம். இங்கே இருக்கும் பாராகிளைடிங் சாகசக்காரர்கள் புதிதாக வரும் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சியளிக்கிறார்கள். இதுவரை எந்த விபத்துகளும் நிகழ்ந்ததில்லை என்ற பெருமையையும் காம்ஷெட் பெற்றிருக்கிறது. அண்ணா சாலையில வண்டி ஓட்டுறதே எங்களுக்கு மரண சாகசம்தான். போங்கப்பு!

எலிஃபென்ட் ஃபால்ஸ், ஷில்லாங்:

p88d.jpg

‘பாகுபலி’ படத்தில் பிரபாஸ், சிறுவயதிலிருத்து முயற்சி செய்து ஒருவழியாக மலையில் ஏறி அருவியின் உச்சிக்குச் செல்வார். அதேதான் இந்த ஃபால்ஸ் ரேப்பல்லிங் (Falls Rappelling) சாகச விளையாட்டு. மலையின் உச்சியிலிருந்து ரோப் கட்டப்பட்டு அதைப் பிடித்துக்கொண்டே அவ்வளவு உயரமான நீர்வீழ்ச்சியைக் கடந்து மேலே செல்வார்கள். லேசாக அசந்தாலும்கூட அபாய கட்டத்திற்குச் செல்லவேண்டி வரலாம். ஷில்லாங்கில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சியைத் தேடிக் குவிகிறது சாகசக்காரர்கள் கூட்டம்!

கேரளா:

p88f.jpg

இந்தியாவின் ஃப்ளையிங் ஃபாக்ஸ் வீரர்களால் அதிகம் விரும்பப்படும் இடமாக கேரளா இருக்கிறது. காரணம், இங்கே குறைந்த செலவில் நன்றாகப் பொழுது போக்கலாம். ஃப்ளையிங் ஃபாக்ஸ் விளையாட்டில்  உயரமான இரண்டு பகுதிகளுக்கு இடையே கட்டப்பட்டிருக்கும் கம்பியைப் பிடித்து அதில் தொங்கிக்கொண்டே அடுத்த பகுதியை அடைய வேண்டும். கீழே குனிந்து பார்த்தாலே தலை சுற்றும் அளவுக்குப் பள்ளமாக இருக்கும்.  திடீரென அந்தக் கம்பி அறுந்து விழுந்தால் சங்குதான். பயந்தா தொழில் பண்ண முடியுமா.. ஏஹே!

மைசூர்:

p88e.jpg

ஸ்கை-டைவிங் சாகசத்தில் கர்நாடகாவின் மைசூர் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கே பல நிறுவனங்கள் இரண்டு நாளைக்கு 35,000 ரூபாய் கட்டணத்தில் புக்கிங் செய்து பயிற்சி அளிக்கின்றன. ஸ்கை டைவிங்னா காத்துல பட்டம் விடுறது இல்லை; காத்துல பட்டமாவே மாறுவது. பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் இருந்து ஒரு கயிறோடு அலேக்காகக் குதித்து வானத்தில் மிதக்கும் வித்தைதான் இந்த ஸ்கை-டைவிங். ஃப்ரெண்டின் பைக்கில் 90-ல போனாலே அல்லு கலங்கும் நமக்கு காத்துல பறப்பதெல்லாம் கனவுல மட்டும்தான்!

vikatan

Link to comment
Share on other sites

செல்ஃபி பக்கிகள்!

 

லகம் பூரா செல்ஃபி மோகம் தலை விரிச்சு ஜிங்கு ஜிங்குனு ஆடுது. உலகையே வலம் வரும் சில டெரர் ஷாக்கிங் செல்ஃபிக்கள் இவை... ஷேரிங் மட்டும்தான் நம்ம வேலை!

p30a.jpg

லிபோர்னியாவில் இருக்கும் டிஸ்னி லேண்ட் ரோலர் கோஸ்டர் சவாரியில் எடுக்கப்பட்ட இந்த செல்ஃபியை எடுத்தவர் பெயர் தெரிய வில்லை. ஆனால், இந்த செல்ஃபி வைரலில் உலாவ, பாதுகாப்புக் காரணங் களுக்காக டிஸ்னி நிறுவனம் தங்களின் தீம் பார்க்குகள் எல்லாவற்றிலும் செல்ஃபி எடுக்கத் தடை விதித்துள்ளது. ‘செல்ஃபி ஸ்டிக்’ பெரும் விபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது அவர்களுடைய பயம்!


p30b.jpg

போர் விமானத்தில் பறந்தபடி எடுக்கப்பட்ட இந்தக் கொலவெறி செல்ஃபியை எடுத்திருப்பது அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர். இது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. ஏரியல் போட்டோகிராபர் ஆன்டனி லவ்லெஸ் என்பவர் இதைப் பரிசீலித்து, மிகவும் பாதுகாப்போடு எடுக்கப்பட்ட செல்ஃபிதான் என சர்டிஃபிகேட் கொடுக்க விஷயம் வெடிக்காமல் அமுங்கியது!


p30c.jpg

டத்தில் சந்தோஷமாகப் பாட்டுப்பாடிக் கொண்டு செல்ஃபி ஸ்டிக்கோடு படங்களை எடுத்தபடி காரில் செல்லும் இந்த இசைக்குழு இப்போது உயிருடன் இல்லை. ‘பேபி கம் பேக்’ என்ற பாடலைப் பாடியபடி ‘கோப்ரோ’ கேமராவோடு சென்ற இந்தக் குழு ஒரு விபத்தில் சிக்கிக்கொள்ள செல்ஃபி வீடியோ இணையத்தில் வெளியாகி ஐந்து மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்!


p30d.jpg

ரொம்பத் தனிமையாக ஃபீல் பண்ணும் நபர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாச செல்ஃபி ஸ்டிக் இது. அமெரிக்க ஓவியர்கள் ஏரிக் மற்றும் ஜஸ்டின் என்ற இருவர் வடிவமைத்த இந்த செல்ஃபி ஸ்டிக் அப்படியே அச்சு அசல் மனிதக் கைகளைப்போல உள்ளது. இந்த ஸ்டிக்கில் கேமராவைப் பொருத்திப் படமெடுத்தால் கைகளைக் கோர்த்துக்கொண்டு செல்ஃபி எடுத்த எஃபெக்ட் கிடைக்கும்!


p30e.jpg

எஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் துனீஷியன் பீச்சில் தாக்குதல் நடத்தப்பட்ட இரு தினங்களுக்குப் பிறகு இங்கிலாந்தைச் சேர்ந்த அம்ரன் ஹுசைன் என்ற இளம் அரசியல் பிரமுகர் ‘இந்த இடத்தில்தான் 38 பேர் கொல்லப்பட்டார்கள்’ என்ற டேக்லைனோடு போட்ட செல்ஃபி படங்கள் அவரைக் கட்சியை விட்டே துரத்தப்படவும், உலகம் முழுவதும் கண்டனக்குரல் எழவும் காரணமானது!

vikatan

Link to comment
Share on other sites

சச்சின் ஆடிய போட்டிகளை நீங்களும் விளையாடலாம்... அறிமுகமாகிறது புதிய மொபைல் கேம்!

SA_1.jpg

மைதானத்தின் வாயிலாக கோடிக்கணக்கானவர்களின் நெஞ்சங்களில் நிறைந்தது போதாதென்று, கேமிங் என்னும் சக்தி வாய்ந்த ஊடகத்தின் வழியே நம்மை மேலும் நெருங்கப் போகிறார்  இந்தியாவின் கிரிக்கெட் மாஸ்ட்ரோ சச்சின். ஆம் விரைவில் வெளிவரப் போகிறது ‘சச்சின் சாகா’ எனும் அதிகாரபூர்வ சச்சினின் மொபைல் கேம்!

மொத்த உலகமும் அனலாக் மோடில் இருந்து டிஜிட்டல் மோடிற்கு மாறிக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட், கால்பந்து, சினிமா ஆகியவற்றையெல்லாம் தாண்டி, இந்த டிஜிட்டல் யுகத்தில் யுவன் யுவதிகளை அடிமைப்படுத்தி வைத்திருப்பது மொபைல் கேம்கள்தான். கார்ட்டூனாக வந்து குழந்தைகளின் மனதை ஆக்கிரமித்த போக்கிமான், ‘போகிமான் கோ’வாக வந்து மொத்த உலகையுமே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்,  மிகப்பெரிய ‘பிராண்ட் நேம்’ உடன், இந்தியர்களை ஈசியாக ஈர்த்துவிடும் கிரிக்கெட்டை மையப்படுத்தி வரப்போகிறது ஒரு கேம்! அதுவும் சாதாரண கிரிக்கெட் கேம்  அல்ல…சச்சினின் கேம் அது. சச்சினுக்குப் பிடித்த 100 போட்டிகளை நாம் இந்த கேமில் விளையாட முடியும். அதன் மூலம் சச்சின் அச்சூழலில் இருந்த மனநிலை முதற்கொண்டு நாம் அறிந்து கொள்ள முடியுமாம். அதுமட்டுமின்றி சச்சினே இந்த விளையாட்டில் நமக்கு டிப்ஸ் கொடுக்கும் பயிற்சியாளராக இருப்பாராம்.

SA_3.jpg

புனேவைச் சார்ந்த நிறுவனமான ‘ஜெட் சிந்தசிஸ்’ இந்த கேமை டிசைன் செய்ய உள்ளது. மிகப்பெரிய அமெரிக்க கிராஃபிக்ஸ் நிறுவனத்தோடு இணைந்து, இந்த கேமை மிகச்சிறப்பாக வடிவமைக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜன் நவானி தெரிவித்தார்.  சச்சினும் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

“உங்களுடைய திறமையாலும் என்னுடைய நுண்ணறிவாலும் இவ்விளையாட்டை விளையாடி சாம்பியனாவோம். என்னுடைய கிரிக்கெட் பயணத்தின் அனுபவங்களை இவ்விளையாட்டின் மூலமாக என்னோடு சேர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

‘சச்சின் சாகா’ கேமின் ப்ரொமோ வீடியோவைக் காண

vikatan

Link to comment
Share on other sites

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p38a.jpg

‘மது அருந்துதல் உடல்நலத்திற்குத் தீங்கானது. புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்’னு கேப்ஷன்ஸ் கொடுக்கிற மாதிரி, கூடிய சீக்கிரம் ‘மொபைல் போனைப் பயன்படுத்துவது ஆபத்தானது’னு அறிக்கை விட்டாலும் விடுவாங்க. பின்னே? இப்பவே சார்ஜில் போட்டுப் பேசக் கூடாது, அதிகநேரம் பேசக் கூடாது, மொபைல் வெளிச்சம் கண்ணில் படக் கூடாதுனு ‘மொபைல் பயன்படுத்துவோர் கவனத்திற்கு’ ஆயிரெத்தெட்டு தகவல்கள் வந்துக்கிட்டுதான் இருக்கு. நாமளும், காலையில் கண்ணு முழிச்சதில் இருந்து, ராத்திரி தூங்குறவரை... மொபைலே கதினு கிடக்கிறோம். இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும்னு நீங்க ஒரு  முடிவெடுத்தீங்கனா, இந்தா படிங்க ‘பிரேக் ஃப்ரீ’ ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை!

அப்ளிகேஷனைப் பார்த்ததுமே, ‘என்னவாம்?’னுதான் கேட்கத்தோணும். ஆனால், இந்த அப்ளிகேஷன் உங்களுக்குச் செய்யப்போகும் சேவைகள் ‘ஆஹாங்’ ரகம். டவுன்லோடு செய்தால், உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உதவும். அழைப்புகள், மெசேஜ், படம், வீடியோ, ஆடியோ, வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வெப்சைட்டுகள்... என அத்தனை அத்தியாயங்களும் கையடக்க மொபைலில் இருக்கும்போது, அதை ஒரு நாளைக்கு எத்தனை முறை நீங்கள் பார்க்கிறீர்கள்? 50, 100, 150? எண்ணவே முடியாத கணக்கைக் கடந்துபோகும் இதையெல்லாம் கட்டுப்படுத்துவதுதான், இந்த ‘பிரேக் ஃப்ரீ’ அப்ளிகேஷனின் முக்கியக் கடமை. நீண்டநேரமாக சமூக வலைதளத்தில் மேய்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்றால், ‘போதும் பாஸ்’னு குரல் கொடுக்கும். நாள் ஒன்றிற்கு இத்தனைமணி நேரத்தில் இருந்து, இத்தனைமணி நேரம்வரை (எமர்ஜென்ஸி அழைப்புகளை செட்டிங் செய்துகொள்ளலாம்) மொபைலைப் பயன்படுத்துவதில்லை என்று உறுதிமொழி எடுக்கவைக்கும். குடும்பத்தோடு, நண்பர்களோடு வெளியே செல்லத் திட்டமிடுகிறீர்கள் எனில், அந்த நேரத்தில் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள ‘வலை’களில் இருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக, நோட்டிஃபிகேஷன்களைத் துண்டிக்கும். இதுக்கெல்லாம் எதுக்கு பாஸ் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தணும்னு நினைக்கிறீங்களா? அப்போ, பின்வரும் காரணங்களுக்காகப் பயன்படுத்தலாம்.

p38b.jpg

அடிக்கடி மொபைலையே பார்த்துக்கொண்டிருப்பதால், மனைவியிடம் வாங்கும் திட்டு குறையும். ‘சார்ஜே நிற்க மாட்டேங்குது’ என நீங்கள் புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் கொஞ்சமாவது குறையும். அனிச்சையாக அடிக்கடி மொபைலைத் தடவும் பழக்கத்தை நிச்சயம் கைவிடலாம். பொய் சொல்லும் வாய்க்குப் போஜனம் கிடைக்காது என்பதால், இனி நிஜமாகவே ‘நீ கால் பண்ணதைக் கவனிக்கலை மச்சி. இப்போதான் எடுத்துப் பார்த்தேன்’னு உண்மையைப் பேசலாம். இப்படியாக, மொபைல் போனே கதினு கிடக்காமல், வாழ்க்கையைக் கொஞ்சமாவது வாழ்ந்து பாருங்கனு சொல்லுது இந்த அப்ளிகேஷன்!

டவுன்லோடு லின்க் : https://play.google.com/store/apps/details?id=mrigapps.andriod.breakfree.deux

vikatan

Link to comment
Share on other sites

மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து-2016 அழகு ராணி
 

மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து அழகுராணியாக சலீட்டா சுவான்சானே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

 

1444c3813680911_971539286292211_29023739

 

மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து – 2016 அழகுராணி போட்டிகளின் இறுதிச் சுற்று பேங்கொக் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 

1442ee7B5074CD241C440F798F8563D804D5B74_

 

இதில் 21 வயதான சலீட்டா சுவான்சானே முதலிடம் பெற்று மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து அழகுராணியாக தெரிவு செய்யப்பட்டார். இவர் நுண்உயிரியல் துறை மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

144423a13709757_969306999848773_54744630

 

எதிர்வரும் மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகுராணி) போட்டியில் தாய்லாந்து சார்பாக சலீட்டா சுவான்சானே பங்குபற்றவுள்ளார்.

 

144Untitled-5.jpg

 

இதுவரை தாய்லாந்தைச் சேர்ந்த இரு யுவதிகள் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணியாக முடிசூட்டப்பட்டுள்ளனர்.

 

1441fbd58F5B29F17DE4618BD088E47C7CECEB0_

 

1965 ஆம் ஆண்டு தாய்லாந்தின் அப்சரா ஹோஹ்சகுலாவும் 1988 ஆம் ஆண்டு போர்ன்திப் நகிருன்க னோக்கும் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணியாக தெரிவானார்கள்.

 

1449a234731828BDE2E4E71B9F22E618C05C974_

 

144f15b13731505_1388224317860495_7492277

metronews.lk
Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: ஜூலை 26
 
 

article_1469448292-3-puran-appu.jpg657: அலி இப்னு அபு தாலிப் தலைமையிலான படைகள், முதலாம் முஆவியாவின் படைகளுடன் சிஃபின் நகரில் போரில் ஈடுபட்டனர்.

811: பைசண்டை பேரரசன் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டான்.

1509: விஜயநகரப் பேரரசின் மன்னனாக கிருஷ்ணதேவராயன் முடிசூடினார்.

1788: நியூயோர்க், ஐக்கிய அமெரிக்காவின் 11ஆவது மாநிலமாக இணைந்தது.

1803: உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை, தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.

1847: லைபீரியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1848: மாத்தளை கிளர்ச்சி - இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 8இல் தூக்கிலிடப்பட்டான்.

1891: தாகித்தி பிரான்சுடன் இணைந்தது.

1936: அச்சு நாடுகள் எசுப்பானிய உள்நாட்டுப் போரில் தலையிட முடிவு செய்தன.

1944: பிரிட்டன் மீது ஜேர்மனி முதல் தடவையாக வீ-2 ரொக்கட் தாக்குதல் நடத்தியது.

1945: பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியுற்றது.

1952: எகிப்திய மன்னர் பாருக், தனது மகன் புவாட்டிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

1953: பிடெல் காஸ்ட்ரோ,  சுயஸ் கால்வாயை எகிப்து தேசியமயமாக்கியது.

1956: அஸ்வான் அணைக்கட்டுக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சுயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.

1957: குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொஸ் அர்மாஸ் கொல்லப்பட்டார்.

1957: இலங்கைப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1958: எக்ஸ்புளோரர் 4 ஏவப்பட்டது.

1963: மசிடோனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,100 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1965: பிரிட்டனிடமிருந்து மாலைதீவு சுதந்திரம் பெற்றது.

1974: ஏழாண்டு இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.

1977: கனடாவின் கியூபெக் மாநில சட்டசபை, பிரெஞ்சு மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்கியது.

1994: எஸ்தோனியாவில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்ற ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.

2005: டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.

tamilmirror.lk
Link to comment
Share on other sites

ஜூலை 26: புகழ்பெற்ற எழுத்தாளர் பெர்னாட் ஷா பிறந்த தினம் இன்று.

ஆஸ்கர்,நோபல் நாயகன் ஷா !

13775523_1186387474753374_65227834006769

 

நக்கல்,நையாண்டி,சமூகத்தைப்பற்றிய பார்வை என்று பின்னி எடுத்த அவரின் வாழ்க்கை வெகு சுவாரசியமானது. வறுமை தான் ஆரம்ப கால வாழ்க்கையில் அவருக்கு இருந்த பரிசு. நிறைய கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். மேடை ஏறி பேசவும் முயற்சிகள் செய்தார்;திக்கிப்பேசி மேடையை விட்டு இறங்கிய காலங்கள் உண்டு. விடாமல் கண்ணாடி முன் பார்த்து,தெருக்களில் தனியாக பேசிப்பேசி பயிற்சி செய்தார். மேடையில் அதற்கு பின் அவர்தான் ராஜா. இசை விமர்சனங்களில் குதறி எடுத்து விடுவார். ஒரு இசைக்கலைஞரை “நீயெல்லாம் ஏன் இசைக்கிறாய் ? கோலிகுண்டு விளையாடப்போ ” என்கிற அளவுக்கு எல்லாம் காய்ச்சி எடுத்து இருக்கிறார்.

எழுதி குவித்தார். கம்யூனிச சித்தாந்தங்களை உள்வாங்கி மக்களின் துன்பங்களை எழுத்தில் நாடகமாக வடித்தார். அழுது வடிகிறது என்று தூக்கி எறிந்தார்கள் . ஃபால்பினிசம் மனிதரை கவர்ந்தது. பெரிய எழுச்சி என்பதை விட படிப்படியாக மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று நம்பினார். பொங்கி வழியும் நகைச்சுவைக்கு நடுவில் கருத்துக்களை அழகாக கோர்த்து நாடகங்கள் எழுதினார்.

அவர் உண்மையில் அயர்லாந்து பகுதியை சேர்ந்தவர். ஆங்கிலத்தில் நாங்கள் தான் அபாரமான உச்சரிப்பு கொண்டவர்கள் என்று கருதிய இங்கிலாந்து வாசிகளை நையாண்டி செய்வது போல நாடகம் எழுதினார். இங்கிலாந்தின் உலகப்போர் வாசத்தை விமர்சித்து எழுதினார். மக்கள் தேசத்துரோகி என்று குறித்தார்கள். இவர் நொந்து போனார். ஜோன் ஆஃப் ஆர்க் எனும் வீரப்பெண்மணியை இங்கிலாந்து தேசத்தவர் திட்டமிட்டு கொன்றதாக வரலாறு சொன்ன பொழுது அவரவரின் பார்வையும் சரியே என்கிற தொனியில் நாடகம் எழுதினார். அது அவருக்கு நோபல் பரிசு மற்றும் ஆஸ்கர் விருதை வாங்கித்தந்தது. இன்றைக்கும் அது ஒரு சாதனை

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவருக்கு கால் செய்தார்கள்,”உங்களுக்கு நோபல் பரிசு ஷா ” என்றார்கள். “எல்லா விருதையும் நானே எனக்கு கொடுத்துக்கொண்டு விட்டேனே” என இவர் சொல்ல, “இது நீங்கள் எழுதிய ஜோன் ஆப் ஆர்க் நாடகத்துக்காக” என்றது எதிர்முனை ;”அது போன வருடம் எழுதியது,உயிருக்கு தண்ணீரில் மூழ்கி போராடிக்கொண்டு இருந்தவனுக்கு கரை சேர்ந்ததும் லைப் ஜாக்கெட் தருவதைப்போல இருக்கிறது” என்ற ஷா அந்த விருதை வாங்கிக்கொள்ள போகவே இல்லை. வந்த பணத்தை இலக்கிய பணிகளுக்கு கொடுத்து விட்டார்

“ஷேக்ஸ்பியரை விட எனக்கு வார்த்தைகள் ஆங்கிலத்தில் அதிகம் தெரியும் “என்றார் அவர். அது உண்மையே;அதே போல அவரை விட என் எழுத்து மேலானது என்றும் சொல்வார். பல ஷேக்ஸ்பியர் காதலர்கள் அவரை அசிங்கப்படுத்த ஒரு விழாவுக்கு அழைத்தார்கள். ஷா பல வரிகளை சீரியஸ் ஆன முகத்தோடு சொல்ல யாரும் கைதட்ட வில்லை. முடிந்ததும் ஷா,”இதுவரை நான் பேசியவை ஷேக்ஸ்பியரின் வசனங்கள்” என்று விட்டு கம்பீரமாக இறங்கினார். “என்னுடைய புத்தகங்களை பாடமாக வைத்து பிள்ளைகளை சாகடிக்காதீர்கள்,அப்புறம் ஷேக்ஸ்பியர் போல என்னையும் அவர்கள் வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்” என்ற நல்லவர் அவர்

* ஷாவின் சில பிரபலமான வாசகங்கள் உங்களுக்காக* :

* வாழ்க்கை உங்களை கண்டடைவது இல்லை; உங்களை படைத்துக்கொள்வது

* முயற்சி செய்து தவறுகளால் நிறைந்த வாழ்க்கை மதிப்புக்குரியது மட்டுமல்ல,எதுவுமே செய்யாத வாழ்க்கையை விட பயனுள்ளதும் கூட

* பலர் பிறப்பதற்கும்,புதைப்பதற்கும் நடுவில் மரித்துப்போகிறார்கள்

* பன்றிகளோடு மல்லுயுத்தம் செய்யாதீர்கள். நீங்கள் அழுக்காவீர்கள்; பன்றிகள் அதை ரசிக்கவும் செய்கின்றன

* நீங்கள் இருக்கின்றவற்றை பார்த்து ,”ஏன் இப்படி ?”என்று புலம்புகிறீர்கள், நான் இல்லாத விஷயங்களை பற்றி கனவுகள் கண்டு,”ஏன் இப்படி இருக்க கூடாது ?”என்று கேள்வி எழுப்புகிறேன்

vikatan

Link to comment
Share on other sites

வைரல் படங்கள் #Bestofyesterday

தோழிகளுடன் பெல்ஜியத்தில் ஜாலி டூர்..#சமந்தா

அமிதாப் வீட்டில்  அவரின்  ரசிகர்கள்..

BOY_1.jpg

 

 இளையராஜா பேத்தி ஜியாவுடன் !

BOY_2.jpg

 

தல கிளிக்!

BOY_3.jpg

 

விஷ்ணு விஷால் டிவிட்டரில் ஐந்து லட்சம் ஃபாலோயர்களைத் தொட்டிருக்கிறார்..

BOY_4.jpg

 

தோழிகளுடன் பெல்ஜியத்தில் ஜாலி டூர்..#சமந்தா

BOY_5.jpg

 

காசாவில் அரசிடன் துப்பாக்கி பயிற்சி பெறும் பாலஸ்தீன பெண்

BOY_6.jpg

 

வெற்றிக்களிப்பில் கோலி...

BOY_7.jpg

 

கபாலி படத்தில் இடம்பெறாத சீன்..

BOY_8.jpg

 

லாரன்ஸ்  வித் அம்மா..!

BOY_9.jpg

 

ஒர்க் அவுட் முடிச்சாச்சு..! #சானியா

BOY_10.jpg

vikatan

Link to comment
Share on other sites

இது ஒரு பழைய உண்மைக் கதை!
 
 

article_1469420478-5163077_f260.jpgஇது ஒரு பழைய உண்மைக் கதை!

தனது நண்பனிடம் ஆவேசமாக வந்தவர், 'எனக்கு உனது துப்பாக்கியைத் தந்துவிடுƒ நான் அந்தத் துரோகியைச் சுட்டுவிடப் போகின்றேன்' என்றார். நண்பருக்கோ ஒன்றுமே புரியவில்லை. வந்த நண்பரோ பெரும் பணக்காரர். இவருக்கு என்ன நேர்ந்து விட்டது என்று எண்ணியவர் கோபத்திற்கான காரணத்தைக் கேட்டார்.

'அவனுக்கு என்ன துணிவு இருந்தால் எனது வீட்டிற்கே வந்து எனது மனைவியின் படுக்கை அறைக்கே வந்துவிட்டான். இருவரையும் ஒன்றாக நானே பார்த்து விட்டேன்' என்றார். கேட்டவர் உள்ளுர அவரது செய்கையை எண்ணிப் பரிதாபமும் நகைப்பும் கொண்டு அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். சம்பவம் நடந்து ஓரிரு தினங்களில் பின் கோபித்துப் பின் சமாதானமாக அனுப்பி வைக்கப்பட்டவர் தனது மனைவியுடன் குதூகலமாக நண்பரின் வீட்டிற்கு வந்தார்.

'நாங்கள் சமாதானமாகி விட்டோம். ஆனால் வீட்டிற்கு வந்த துரோகியை மட்டும் விடமாட்டேன்' என்றார்.

ஒழுக்கம் கெட்ட குடும்பத்தில் எல்லாமே நடக்கும்‚ அதுசரி‚ இதில் யார் யாருக்குத் துரோகம் செய்தார்கள்? அப்பாவிக் கணவன் நிலை என்ன?

tamilmirror.lk
Link to comment
Share on other sites

உலகைக் கலக்கும் Pokemon Go
 

கபாலி திரைப்­படம், பிரான்ஸின் நீஸ் தாக்­குதல், துருக்­கியின் தோல்­வி­யுற்ற இரா­ணுவப் புரட்சி முத­லான விட­யங்­க­ளுக்கு மத்­தி­யிலும் பல நாடு­களின் ஊட­கங்­களில் அல­சப்­படும் விடயம் Pokémon Go (போகிமான் கோ). இது ஒரு செல்­லிடத் தொலை­பேசி விளை­யாட்டு (Mobile phone game).

 

பொக்கெட் மொன்ஸ்டர்ஸ் (Pocket Monsters) என்­பதுன் சுருக்­கமே போகிமான் ஆகி­யதாம். இவ் ­வி­ளை­யாட்டில், போகிமான் உலகில் சுற்றி மறைந்­தி­ருக்கும் சிறிய போகி­மான்­களை தேடிக் கண்­டு­பி­டித்து நம் வசப்­ப­டுத்த வேண்டும்.

 

160pokemon228.jpg

 

பின்னர் அவற்­றுக்கு பயிற்­சி­ய­ளித்து அவற்றி சக்­தி­களை அதி­க­ரித்து மற்ற போகி­மான்­க­ளுடன் சண்­டை­யிட்டு அதன்மூலம் மேலும் பல­மான போகி­மான்­களை பெற வேண்டும்.

 

போகி­மானை விளை­யாடும் மனி­தர்கள் trainers (பயிற்­று­நர்கள்) என அழைக்­கப்­ப­டு­கின்­றனர். 1996 ஆம் ஆண்டு போகிமான் ஒரு காகித அட்டை விளை­யாட்­டாக (card game) போகிமான் கம்­பி­யினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

160_DSCF2271.0.0.jpg1998 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட போகிமான் கம்­ப­னி­யா­னது டோக்­கியோ, வோஷிங்டன் டி.சி., லண்டன், சியோல் ஆகிய நக­ரங்­களில் தலை­மை­ய­கங்­களைக் கொண்­டுள்­ளது.


பின்னர் வீடியோ கேம் பதிப்பு வெளி­யி­டப்­பட்­டது. இப்­போது ஸ்மார்ட் போன் தொலை­பேசி மூலம் விளை­யா­டு­வ­தற்­கான பதிப்பு தான் Pokémon Go. அமெ­ரிக்­காவைத் தளமாக் கொண்ட Niantic நிறு­வ­னத்தால் போகிமான் கோ உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.


ஏனைய மொபைல் போன் கேம்­க­ளுக்கும் போகிமான் கோவுக்கும் பெரும் வித்­தி­யா­ச­மொன்று உள்­ளது. அதா­வது நாம் இருக்கும் இடத்தின் சுற்­றா­ட­லுடன் தொடர்­பு­டை­ய­தாக இந்த விளை­யாட்டு வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

 

செல்­போ­னி­லுள்ள கெமரா, கூகுள் மெப், ஜி.பி.எஸ். போன்­ற­வற்றின் உத­வி­யுடன் நாம் இருக்கும் சூழல் இனங்­கா­ணப்­பட்டு, நமக்கு அரு­கி­லுள்ள இடங்­களில் போகி­மான்கள் ஒளிந்­து­கொண்­டி­ருப்­ப­தாக காட்­டப்­படும்.

 

1602016-07-11T182235Z_1310714303_S1AETOZ

 

இது அகு­மென்டட் வீடியோ கேம் என அழைக்­கப்­ப­டு­கி­றது. ஸ்மா ர்ட் போனுக்குப் பதி­லாக, கைக்­க­டி­காரம் போன்று மணிக்­கட்டில் அணிந்­து­கொள்­ளக்­கூ­டிய போகிமான் கோ பிளஸ் எனும் சாத­ன­மொன்றின் மூலமும் போகிமான் கோ விளை­யா­டலாம்.  

 

கடந்த 6 ஆம் திகதி அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, நியூஸிலாந்து ஆகிய நாடு­களில் போகிமான் கோவை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது த போகிமான் கம்­பனி.


ஜூலை 17 ஆம் திக­தி­ வரை ஏனைய பல ஐரோப்­பிய நாடுகள், கனடா உட்­பட  32 நாடு­களில் போகிமான் கோ அறி­மு­க­மா­கி­யி­ருந்­தது.

 

1602016-07-20T161046Z_1354198010_S1AETQR

ரஷ்­யா­வில்...


 

இலங்கை, இந்­தியா முத­லான ஆசிய நாடு­களில் போகிமான் கோ அமு­லுக்கு வர­வில்லை.

 

பொது­வாக செல்­போன்­களில் வீடியோ கேம் விளை­யா­டு­ப­வர்கள், கதி­ரை­யிலோ, கட்­டிலோ கிடந்து செல்­போனை குடைந்து கொண்­டி­ருப்­பார்கள். இத்­த­கைய தொழில்­நுட்­பங்கள் மூலம் மக்கள் வர வர சோம்­பே­றி­யாகிக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்ற விமர்­சனம் உள்­ளது.

 

ஆனால், போகிமான் கோ விளை­யாட்டில் நிலைமை எதிர்­மா­றா­னது. போகி மான்  கோ விளை­யாட்டில் போகி­மான்­களை கண்­டு­பி­டிப்­ப­தற்­காக எழுந்து நட­மாட வேண்­டி­யி­ருக்கும்.

 

போகி­மான்­களை தேடி பல கிலோ­மீற்றர் நடப்­ப­வர்கள் உண்டு. இதனால், இவ்­ வி­ளை­யாட்டில் ஈடு­ப­டு­ப­வர்கள் தம்மை அறி­யா­ம­லேயே பெரும் உடற்­ப­யிற்சி செய்­ப­வர்­க­ளாகி விடு­கி­றார்கள்.

 

1602016-07-18T135116Z_1352183922_S1AETQH

ஸ்பா­னிய பொலி­ஸார்


 

மன அழுத்­தங்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் முன்­னேற்­றத்­துக்கும் இவ்­ வி­ளை­யாட்டு உதவும் என மருத்­து­வர்கள் சிலர் தெரி­வித்­துள்­ளனர்.

 

கன­டாவின் டொரண்­டோ­வி­லுள்ள உள­வியல் மருத்­து­வரும் ரயோர்சன் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ரு­மான டாக்டர் ஒரேன் அமிட்டே இது தொடர்­பாக கூறு­கையில், தனது நோயா­ளிகள் பலர் போகிமான் கோ விளை­யாட்டில் ஈடு­பட ஆரம்­பித்­துள்­ளனர் எனத் தெரி­வித்­துள்ளார்.

 

அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மெட்ரோ ரயில்­வே­துறை போகிமான் கோ விளை­யாட்டை ஊக்­கு­விக்­கி­றது. தமது ரயில் நிலை­யங்கள், ரயில்­களில் எங்­கெல்லாம் போகி­மான்கள் காணப்­ப­டலாம் என்ற விப­ரங்­களை தனது டுவிட்டர் பக்­கத்தில் தெரி­விக்­கி­றது.

 

வணிக உல­கிலும் போகிமான் கோ கலக்­கு­கி­றது.

 

160777943-01-03.jpgபோகிமான் கோ அப்ஸ் வெளி­யி­டப்­பட்டு 2 வாரங்­களில் உல­க­ளா­விய ரீதியில் 3 கோடி தடவை தர­வி­றக்கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

 

இதன் மூலம் போகி மான் கோ நிறு­வ­னத்­துக்கு 3.5 கோடி டொலர் (500 கோடி ரூபா) வரு­மானம் கிடைத்­துள்­ளது. ஜப்­பானில் மெக்­டொனால்ட்ஸ் நிறு­வனம் போகிமான் கோ அனு­ச­ர­ணை­யா­ள­ராக இணைந்­துள்­ளது.

 

இது தொடர்­பான தகவல் நேற்­று­முன்­தினம் வெளி­யா­னதும் ஜப்­பானில் மெக்­டொனால்ட்ஸ் பங்­கு­களின் பெறு­மதி 10 சத­வீ­தத்தால் அதி­க­ரித்­தது.

 

போகிமான் கோ விளை­யாட்டின் மேல­திக அம்­சங்­களை வாங்­கு­வ­தற்­காக போகிகொய்ன்ஸ் (PokeCoins) அப்பிள் நிறு­வனம் வெளி­யிட்­டுள்­ளது.

 

இதன்­மூலம் 1,2 வரு­டங்­களில் அப்பிள் நிறு­வ­னத்­துக்கு 3 கோடி டொலர் (சுமார் 447 கோடி ரூபா) வரு­மானம் கிடைக்கும் மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


அதிக போகி­மான்­களை கண்­டு­பி­டிக்­கக்­கூ­டிய இடங்­க­ளுக்கு மக்­களை அழைத்துச் செல்­வ­தற்­காக விசேட வாடகைக் கார் சேவையை வழங்க அமெ­ரிக்க சார­திகள் சிலர் முன்­வந்­துள்­ளனர். 

 

இவ்­வாறு போகிமான் கோ விளை­யட்­டா­னது போக்­கு­வ­ரத்­துத்
­து­றை­யிலும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. பல்­தே­சிய நிறு­வ­னங்கள், பெரு நிறு­வ­னங்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல சிறு வியா­பா­ரி­க­ளுக்கும் போகிமான் கோ நன்­மை­ய­ளிக்கும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

போகி­மான்­களைத் தேடி வீதியில் இறங்­கு­ப­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பதால் நடை­பாதை வியா­பா­ரிகள், பெட்­டிக்­
க­டைகள், உணவு விடு­தி­க­ளுக்கு வரு­மானம் அதி­க­ரிக்கும் என கரு­தப்­ப­டு­கி­றது.

 

பாது­காப்புத் துறை­யி­ன­ருக்கு நெருக்­கடி

மறு­புறம், போகிமான் கோ விளை­யாட்­டா­னது பல நாடு­களின் பாது­காப்புத் துறை­யி­ன­ருக்கு நெருக்­க­டியை அதி­க­ரித்­துள்­ளது.


போகி­மான்­களை தேடு­ப­வர்கள் வீதி­களில் சமிக்ஞை விளக்­கு
­க­ளைக்­கூட பொருட்­ப­டுத்­தாமல் நடந்து செல்­கி­றார்­களாம். சில மோச­மான வாகன சார­தி­களும் வாகனம் செலுத்­திக்­கொண்டே போகிமான் கோ வி­ளை­யாட்டில் ஈடு­ப­டு­கின்­றனர்.

 

160775722-01-02.jpg

இந்­தோ­னே­ஷியா­வில்...


 

கன­டாவின் கியூபெக் மாகா­ணத்தில் போகிமான் கோ விளை­யா­டிய சாரதி ஒருவர் தனது வாக­னத்தை பொலிஸ் காரொன்­றி­லேயே மோதினார்.


அத்­துடன், போகி­மான்­களை பின்­தொ­டரும் பலர் பாட­சா­லைகள் பொதுக்­கட்­ட­டங்கள், தனியார் வளா­கங்கள், இரா­ணுவ முகாம்
­க­ளுக்­குள்ளும் அத்­து­மீறி நுழைய முற்­ப­டு­கின்­றனர்.

 

அண்­மையில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் பாட­சாலை, நாஸி வதை முகாம் தொடர்பான அமெ­ரிக்க நூத­ன­சாலை ஆகி­யற்­றிலும் சிலர் போகி­மான்­களைத் தேடித் திரிந்து சங்­க­டங்­களை ஏற்­ப­டுத்­தினர். 

 

இதனால் “அத்­து­மீறி நுழை­யா­தீர்கள் “என போகிமான் கோ விளை­யா­டு­ப­வர்­களை எச்­ச­ரிக்கும் பதா­தைகள்  சில இரா­ணுவ முகாம் கள், கட்­டங்­க­ளுக்கு வெளியே காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

 

ஸ்பானிய பொலிஸார் பாது­காப்­பாக போகிமான் கோ விளை­யா­டு­வது குறித்து பொது­மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யுள்­ளனர். இது தொடர்­பான புகைப்­ப­டங்­க­ளையும் ஸ்பானிய உள்­துறை அமைச்சு வெளி­யிட்­டுள்­ளது.

 

பொஸ்­னி­யாவில் 1990களில் நடை­பெற்ற யுத்­த­தத்­தின்­போது புதைக்­கப்­பட்ட மிதி­வெ­டி­களில் போகிமான் கோ விளை­யா­டு­ப­வர்கள் சிக்­கி­வி­டக்­கூடும் என உணர்ந்த அதி­கா­ரிகள் இது தொடர்பில் அறி­வு­றுத்­தல்­களை விடுத்­துள்­ளனர்.


ஜப்­பானில் விரைவில் போகிமான் கோ வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளதை முன்­னிட்டு, விசேட பாது­காப்பு அறி­வு­றுத்தல் பிர­சா­ரங்­களை ஜப்­பா­னிய அர­சாங்கம் ஆரம்­பித்­துள்­ளது.

 

இந்­தோ­னே­ஷி­யாவில் போகிமான் கோ விளை­யா­டிக்­கொண்டு இரா­ணுவ முகா­மொன்­றுக்­குள்­ நு­ழைந்த பிரான்ஸ் நாட்­டவர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பொலிஸார் தெரி­வித்­தனர்.

 

இதே­வேளை, இந்­தோ­னிய ஜனா­தி­பதி மாளிகை அருகில் போகிமான் விளை­யாட வேண்டாம் என அதி­கா­ரிகள் எச்­ச­ரித்­துள்­ளனர். இந்­தோ­னே­ஷிய பொலிஸார், இரா­ணு­வத்­தினர் கடமை நேரத்தில் போகிமான் விளை­யா­டு­வது தடை ­செய்­யப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

 

இந்­தோ­னே­ஷி­யாவில் உத்­தி­யோ­கபூர்வமாக போகிமான் கோ அறி­மு­க­மா­வில்லை. எனினும் சிலர் வெளி­நாட்டு பதிப்­பு­களை சட்­ட­வி­ரோ­த­மாக தர­வி­றக்கம் செய்து விளை­யா­டு­கின்­றனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

சவூதியில்...


போகிமான் கோவுக்கு எதி­ரான குரல்­களும் ஒலிக்­கின்­றன. 2001 ஆம் ஆண்டு போகிமான் ஒரு காகித அட்டை விளை­யாட்­டாக இருந்த காலத்­தி­லேயே சவூதி அரே­பிய மதகுருக்கள் போகிமானு க்கு தடை விதித்திருந்தனர்.

 

160775709-01-02.jpg

 

சவூதி அரே­பி­யா­வில்...


 

15 வருடகாலமாக அமுலிலுள்ள இத்தடை போகிமான் கோ அறிமுகத்தின் பின்னர் மீளவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது..

 

ஆனால், சவூதியில் போக்மன் கேம் மீதான தடை மீள பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என சவூதி அரேபிய கலாசார மற்றும் தகவல் துறை அமைச்சின் உதவி செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் போகி மான்களை பின் தொடர்ந்து சென்ற இருவர் வீட்டு வளாகம் ஒன்றுக்குள் நுழைந்தபோது அவர்களை திருடர்கள் என எண்ணி அவ் வீட்டின் உரிமையாளர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். இதனால் அவ்விரு வரும் காயமடைந்தனர்.

 

குவாத்­த­மா­லாவில் போகி­மான்­களை பின் தொடர்ந்து சென்று வீடொன்­றுக்குள் நுழைந்த 18 வய­தான ஜேர்ஸன் லோபஸ் லியோன் எனும் இளைஞர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ள­தாக செய்­தி கள் வெளி­யா­கி­யுள்­ளது.

 

இச்­ செய்­திகள் உண்­மை­யானால் போகிமான் கோ கார­ண­மாக இடம்­பெற்ற உலகின் முதல் மர­ண­மாக இது இருக்­கலாம். விரை வில் இலங்­கை­யிலும் போகிமான் கோ அறி­மு­க­மா­கலாம்.

 

பொது இடங்­களில் இவ் ­வி­ளை­யாட்டில் ஈடு­ப­டு­ப­வர்­களும் அவர்­களை எதிர்­கொள்­ப­வர்­களும் எச்சரிக்கையுடன் செயற்படுவது நல்லது.

 

– நவீன்

 

metronews.lk
Link to comment
Share on other sites

மின்மினிப்பூச்சி தரும் ஒளியின் இரகசியம்
மின்மினிப்பூச்சி தரும் ஒளியின் இரகசியம்

மின்மினிப்பூச்சி தரும் ஒளியின் இரகசியம்

 

இரவு நேரங்களில் மின்னிக்கொண்டே செல்லும் சில பூச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். இதைத்தான் மின்மினிப்பூச்சி என்று அழைப்பார்கள்.

firefly-2

விலங்கினங்களைப் பொறுத்தவரை, ஒருசெல் உயிரியில் இருந்து ஆழ்கடல் மீன்கள் வரை பல்வேறு உயிரினங்கள் ஒளியை உமிழக்கூடிய ஆற்றல் பெற்றவையாக விளங்குன்றன.

அவற்றுள் மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக ஒளியை உமிழ்ந்து கொண்டு செல்வதைப் பார்க்க மிக அழகாக இருக்கும்.

iridessas-firefly-fun-1425797374

மின்மினி ஒளியை உமிழ்வது உயிர் வேதியியல் செயலாகும். இந்தப் பூச்சிகள், சுவாசத் துளைகளின் வழியாகச் செல்லும் சுவாசக் குழல்கள் மூலம் சுவாசிக்கின்றன.

இவற்றின் அடிவயிற்றுப் பகுதியில் தனிச்சிறப்பு மிக்க செல்கள் காணப்படுகின்றன.

download

இந்தச் செல்களில் லூஸிபெரின் என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது.

இந்தச் செல்களுடன் சுவாசக்குழல்கள் தொடர்பு கொண்டிருப்பதால், இதனுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து ஒளியைத் தருகிறது.

இந்த வேதிவினைக்கு ஆற்றலும் தேவைப்படுகிறது. இந்தப் பூச்சிகள் பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு என பல்வேறு வகையான ஒளியை உமிழ்கின்றன.

onlineuthayan.

Link to comment
Share on other sites

அம்மாவிற்கு திருமணம் செய்துவைத்த அழகு மகள்கள்!...கேரளாவில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்

loversdaylefttt.jpg90 களில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற இந்தித் திரைப்படத்தில் தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடும் தனது தந்தைக்கு அவருடைய பழைய காதலியை தேடிச் சென்று தந்தைக்கு திருமணம் செய்து வைப்பார் 8 வயது மகள். சினிமாவில் பார்த்து ரசித்துப் பார்த்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், கேரளாவில் நிஜத்திலும் அரங்கேறியிருக்கிறது.

கேரளா மாநிலம் கொல்லத்தில் வசிக்கும் அனிதா செம்புவில்யால், தனது இளம்வயதில், ஜி.விக்ரம் என்ற தனது பத்தாம் வகுப்பு ஆசிரியர் மீது காதல்வயப்பட்டார். கம்மாக்கரையிலும் கடல்மணல்வெளியிலும் தங்கள் காதலை நாள்தோறும் வளர்த்தனர். ஆனால் தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்தபோது, அப்படி ஒரு எதிர்ப்பை சந்திப்போம் என இருவரும் நினைத்துப்பார்க்கவில்லை. அனிதாவின் காதலுக்கு அவரது பெற்றோரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. துணிந்து ஒருநாள் அனிதாவை பெண் கேட்டு வந்த விக்ரமை அவமானப்படுத்தியதோடு நில்லாமல் தன் அதிகாரத்தைக்காட்டி அந்த ஊரைவிட்டே வெளியேறச் செய்தார் அனிதாவின் தந்தை. நொறுங்கிப்போனார் அனிதா.

அனிதாவின் தந்தை அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அனிதாவின் படிப்பை பாதியில் நிறுத்தி அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். கொஞ்சகாலம்தான் அந்த வாழ்க்கை இனித்தது. அனிதாவின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஒருநாள் எதிர்பாராதவிதமாக இறந்தார். அதன்பின் தனது 2 குழந்தைகளுடன் தன் வாழ்க்கையை மீண்டும் துவக்கினார் அனிதா. அனிதாவின் 2 மகள்களும் வளர்ந்து கல்லுாரிக்கு செல்லும் வயதை எட்டினர். கணவரின் மறைவுக்கு பிறகு பல சிரமங்களுக்கு இடையே தன் 2 மகள்களையும் வளர்த்து படிக்கவைத்து திருமணம் செய்துவைத்தார் அனிதா. 

இந்த சமயத்தில்தான் அந்த எதிர்பாராத சம்பவம் அனிதாவின் வாழ்வில் நிகழ்ந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் பணிக்காக சென்ற இடத்தில் தனது பழைய காதலன் ஜி.விக்ரமை சந்திக்க நேர்ந்தது. அனிதாவின் பிரிவிற்குப்பின் அவரது நினைவாக விக்ரம் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்துவருவது தெரிந்து உருகிப்போனார் அனிதா. ஊர் திரும்பியபின் தன் வளர்ந்த மகள்களிடம் ஒருநாள் இதை சாதாரணமாக சொல்லி அழுதார்.

kerala6002.jpg

அனிதா இதை சொல்லிவிட்டு வேறு வேலையில் மூழ்கிப்போனார். ஆனால் அம்மாவின் சோகக் கதையைக் கேட்ட மகள்களால் துாங்க முடியவில்லை. அவர்களுக்கு அது கண்ணீரை வரவழைத்தது. தீர்மானமாக ஒரு முடிவெடுத்தனர் சகோதரிகள்.

விக்ரமை நேரில் சந்தித்து தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். அவரது குடும்பத்தினரிடம் பேசி அனுமதி பெற்று அதை தன் தயாரிடமும் தெரிவித்தனர். முதலில் இதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இறுதியாக தன் இரண்டு மகள்களின்  ஆசையின்படி , 32 வருடங்கள் கழித்து, அனிதா தன் தனது காதலர் ஜி.விக்ரமை கடந்த வாரம் வியாழனன்று கரம்பிடித்தார்.

தனது தாயாரின் இளம்வயது நிறைவேறாத விருப்பத்தை அவரது இறுதிக்காலத்தில் நிறைவேற்றிவைத்த மகள்களின் செயல் கேரளாவில் ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
'பணி நிமித்தமாக சென்ற இடத்தில் தனது காதலரை சந்தித்த என் அம்மா, தனது வெற்றிபெறாத காதலைப்பற்றி துயரத்துடன் பகிர்ந்துகொண்டார். அம்மாவின் நினைவாக விக்ரம் திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்வது ஆச்சர்யமளித்தது. எனக்கு கண்ணீரை வரவழைத்தது.

kerala6001.jpg

 

இதுபற்றி என் அக்கா மற்றும் குடும்பத்தினரிடம் பேசி அவர்களை சேர்த்து வைக்க முடிவு செய்தேன்.  நானே இதற்கான வேலையில் இறங்கினேன். திருமணத்துக்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர். எனது அம்மாவை நினைத்து வாழ்ந்து வந்த ஜி.விக்ரமுக்கும் என் அம்மாவுக்கும் கடந்த 21ந்தேதி திருமணம் செய்து வைத்தோம்.” என்று தனது முகநூலில் தனது தாயாரின் திருமணம் குறித்து ஆதிரா குறிப்பிட்டிருக்கிறார்.

இதைவிட சுவாரஸ்யம் ஒன்றும் இந்த திருமணத்தில் உண்டு. அதையும் ஆதிரா தனது முகநுால் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். “நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமணத்தில் முழு மன நிறைவோடு ஆசியோடும் தாலி எடுத்து கொடுத்தவர் யார் தெரியுமா?... இதே ஜோடியை 32 வருடங்களுக்கு முன்பு பிரித்து வைத்த என் தாத்தா தான்.”

பெற்றோர்கள் பிள்ளைகளின் காதலை எதிர்க்கும் இந்தக் காலத்தில், பிள்ளைகளே பெற்றோரின் காதலை தேடிச் சேர்த்து வைத்திருப்பது, சபாஷ் சொல்லத்தான் வைக்கிறது

vikatan

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் ரியோ குதூகலம்
 

பிரேஸிலின் ரியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அமெரிக்க வீர வீராங்கனைகள் குழுவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வைபவம் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

 

146797211-01-02.jpg

 

146797462-01-02.jpg

 

இந்த அறிவிப்புக்கு முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளை பிரதிபலிக்கும் விளையாட்டுக்களில் பார்வையாளர்கள் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

 

146797431-01-02.jpg

 

146797446-01-02.jpg

 

சம்பா நடனக் கலைஞர்களின் நடனங்களும் இந் நிகழ்வில் இடம்பெற்றன.

 

146797436-01-02.jpg

 

146797459-01-02.jpg

 

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவின் சார்பில் 292 பெண்கள் உட்பட 550 பேர் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

metronews.lk
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.