Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

வரலாற்றில் இன்று: நவம்பர் 20
 

article_1447990035-z.jpg1789: உரிமைகள் சட்டத்தை அங்கீகரித்ததன் மூலம் நியூ ஜேர்ஸி, அமெரிக்காவின் முதலாவது மாநிலமாகியது.

1917: உக்ரைன் குடியரசாகியது.

1945: நாஸி போர்க் குற்றவாளிகள் 24 பேருக்கு எதிராக நியூரம்பேர்கில் விசாரணை ஆரம்பமாகியது.

1947: பிரிட்டனில் இளவரசி எலிஸபெத்துக்கும்   லெப்டினன்ட் பிலிப் மௌன்ட் பேட்டனுக்கும் திருமணம் நடைபெற்றது.

1969: அமெரிக்காவின் கிளீவர் பிளெய்ன் டீலர் பத்திரிகை வியட்நாமின் மை லாய் கிராம படுகொலைகள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டது.

1979: சவூதி அரேபியாவின் மக்கா நகரில் 6000 ஹஜ் யாத்திரிகள் தீவிரவாத குழுவொன்றினால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர். சவூதி அரேபிய அரசாங்கம் பிரான்ஸிடமிருந்து விசேட படைகளைப் பெற்று இதை முறியடித்தது.

1985: மைக்ரோசொப்ட் வேர்சன் 1.0 வெளியாகியது.

1995: இளவரசி டயானா தனது குதிரையோட்டப் பயிற்றுநர் ஜேம்ஸ் வெயிட்டுடன் முறையற்ற தொடர்பிலிருப்பதை பி.பி.சி. பேட்டியொன்றில் ஒப்புக்கொண்டார்.

1998: கென்யா, தான்ஸானியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீதான குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கில் ஒசாமா பின் லாடன் 'ஒரு பாவமும் செய்யாத மனிதர்' என தலிபான் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கானிஸ்தான் நீதிமன்றமொன்று பிரகடனம் செய்தது.

1998: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான முதலாவது மாதிரி விண்ணுக்கு ஏவப்பட்டது.

- See more at: http://www.tamilmirror.lk/159512/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.vXdi8FPp.dpuf
Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

12241032_944481302267231_336948205524464

சின்னக் குழந்தையாய் திரையில் பேபி ஷாலினியாகத் தோன்றி எங்கள் மனங்களை அள்ளி,
பின்னர் திரைவானின் புது மலராய் காதலுக்கு மரியாதை, அலைபாயுதேவில் அன்புடன் புகழ்கொண்டு அமர்க்களத்தில் ஆசை நாயகன் அஜித்தைக் கரம் கொண்டு திருமதி.ஷாலினி அஜித்குமார் என்ற பெயர்கொண்டு இன்னும் இனிதாய் அன்புக்கு உதாரணமாய் வாழும் ஷாலினிக்கு இனிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

12239347_944454005603294_249986061165869


ஐக்கிய நாடுகள் UNICEF சர்வதேச சிறுவர் தினம் இன்று.
சிறுவர்களுக்கான உரிமைகளை வழங்குவோம்;
சிறுவர்களை சிறுவர்களாக வாழவிடுவோம்.

Link to comment
Share on other sites

இஸ்ரேல் நடிகரை கவர்ந்த நாகேஷ், கவுண்டமணி!

 

nagesh%202.jpgமதுரை: மதுரையில் நடைபெற்ற சினிமா கருத்தரங்கு ஒன்றில் பேசிய இஸ்ரேல் நடிகர் கில் ஆலன்,  நாகேஷை தன் குரு என்றும், கவுண்டமணியின் தீவிர ரசிகர் என்றும் கூறி கலகலப்பூட்டினார்.

மதுரையில் சினிமா பற்றிய கருந்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டு துணைத் தூதர் டவ்செகவ் ஸ்டீபன்பெர்க் மற்றும் அந்நாட்டின் பிரபல திரைப்பட நடிகர் கில் ஆலன் ஆகியோர் வந்தனர். மதுரை ஆட்சியர் சுப்பிரமணியன் அவர்களை வரவேற்றார்.

பின்னர் துணைத் தூதர் டவ்செகவ் ஸ்டீபன்பெர்க் பேசுகையில், “பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் எனது கட்டுப்பாட்டில் கர்நாடகா, தமிழ்நாடு கேரள மாநிலங்களில் உள்ளன.

இஸ்ரேல் - இந்தியா இடையேயான உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை குறித்து விவாதிக்கிறோம்.

வேளாண்மை நீரியியல் உட்பட பல்வேறு துறைகளில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாகவுள்ளது. அடித்தட்டு மக்கள் முதல் பெரும் வசதி வாய்ப்பு மிக்க மக்களையும் சந்தித்தோம். மிகவும் அருமையான புதுவித அனுபவங்கள் கிடைத்தன. தமிழக கலாச்சாரம் மிகவும் வித்தியாசமாக உள்ளது" என்றார்.

gil%20alen%20600%201.jpg

மாலையில் நடந்த கருத்தரங்கத்தில் பேசிய நடிகர் கில் ஆலன், “ இஸ்ரேலில் பிரபல நடிகராக இருந்தாலும் தமிழில் 'மொட்டை பாஸ்' என்று என் நண்பர்கள் தமிழில் பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள். அது எனக்கு மிகவும் பிடிக்கும். இருபது ஆண்டுகளுக்கு மேல் சென்னையில் கலாச்சாரம் தொடர்பான பயிற்சிகளை நடத்தி வருகிறோம்.

நடிப்பு, இசை, கலாச்சாரம் என சினிமா சம்பத்தப்பட்ட பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். தமிழில் விஜய் சேதுபதி, விமல் போன்ற பல நடிகர்கள் எனது மாணவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

gil%20alen%20600%202.jpg

மதுரை கலாச்சாரம் மிகவும் பிடித்துள்ளது. மதுரையில் இருந்து வந்த இளைய சமுதாயம் பல வெற்றி கண்டுள்ளது. வட்டார வழக்கு மற்றும் நடை உடை பாவனைகள் மதுரை முழுவதும் பரவிக்கிடக்கின்றன. இதை மிகவும் பெரிய வரமாக நினைக்கிறேன். எனக்கு தமிழ் சினிமாவில் நாகேஷை மிகவும் பிடிக்கும். அவரையே என் குருவாக நினைக்கிறேன். மேலும் எனக்கு கவுண்டமணியின் காமெடியும் பிடிக்கும்" என்றார்.

விழாவில் பேசிய இஸ்ரேல் துணைத்தூதர்,  தமிழ் சினிமாவை பார்த்து தமிழ்க் கற்று கொண்டுவருதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/article.php?aid=55342

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுஸ்

Link to comment
Share on other sites

12248179_944487068933321_188656829063959

நியூ சீலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் டியோன் நாஷின் பிறந்தநாள்

Link to comment
Share on other sites

12247665_1845002229059512_67286720226100

சென்னையின் முக்கிய அடையாளமாக திகழும் மெரினா கடற்கரை தற்போது குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறி உள்ளது.

Link to comment
Share on other sites

மீண்டும் மேகி..! எப்படி இருக்கிறது சுவையும் தரமும்...?

 

நீதிமன்ற தடை, கலாட்டாக்களுக்குப் பிறகு மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வந்திருக்கிறது. சீஸன் 2 - மேகி நூடுல்ஸ் எப்படி இருக்கிறது?

மேகி பாக்கெட்டில் எந்த வித்தியாசமும் இல்லை. அதே மஞ்சள் நிற பேக்கிங். வழக்கமான செய்முறை, விதிமுறைகள்தான். விலை ரூ.????

உள்ளே இருக்கும் நூடுல்ஸ் வழக்கத்தைவிட சற்றே பளிச்சென இருக்கிறது. பாக்கெட்டின் உள்ளே டேஸ்ட் மேக்கர் பாக்கெட் இருக்கிறது. அதை நூடுல்ஸுடன் கலக்கி தேவைப்படும் நீர் ஊற்றி இரண்டே நிமிடங்கள் சமைத்தால், வழக்கமான நிறம், மணம், குணத்துடன் இருக்கிறது மேகி. 

சாப்பிட்டுப் பார்த்தால் வழக்கமான ஸ்பைஸி சுவை. வழக்கம் போல அப்போதைக்கு பசியைத் தள்ளிப் போடுகிறது. மற்றபடி குறிப்பிடும்படியான மாற்றமும் விசேஷமும் இல்லை.

மேகி பிரியர்களுக்கு இது நல்ல செய்தியாக இருக்கும்!

http://www.vikatan.com/news/article.php?aid=55348

Link to comment
Share on other sites

12240392_944960165552678_545327372206605

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அண்டி கட்டிக்கின் பிறந்தநாள்

Link to comment
Share on other sites

யூத் டியூப்: நாங்க சென்னை பேச்சுலர்ஸ்!

 

  • aa_2627982g.jpg
     
  • சின்னா, புஷ்பநாதன், டோனி பிரிட்டோ, திவாகர் (இடமிருந்து வலம்)
    சின்னா, புஷ்பநாதன், டோனி பிரிட்டோ, திவாகர் (இடமிருந்து வலம்)
  • aa1_2627981g.jpg
     

“அட்ரஸ் இல்லாத லெட்டர்ஸ் நாங்க

அள்ளிக் கொடுத்தது மெட்ராஸ் தாங்க

டேலன்ட் இருந்தும் லூசர்ஸ் நாங்க

டேமேஜ் பண்ணுறது இங்கிலீஷ் தாங்க

வயித்துக்காக வாரம் முழுக்க நாயா உழைப்போம்

சொர்க்கம் பார்க்க வீக்எண்ட்ல பேயா பறப்போம்”

என விரிகிறது ‘சென்னை பேச்சுலர்ஸ்’ ஆல்பம். சென்னையில் பேச்சுலர் லைஃபை அணுஅணுவாக ரசித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை ஜாலியாகப் பதிவுசெய்கிறது இந்த ஆல்பம். ‘ஆகோ ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் இந்த ஆல்பத்துக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

சொந்த ஊரைவிட்டு, எதிர்காலத்தைத் தேடி சென்னைக்கு வரும் இளைஞர்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கிறது என்பதை இந்த ஆல்பம் அழகாக விவரிக்கிறது. இந்த ஆல்பத்தை எழுதி இயக்கியவர் புஷ்பநாதன் ஆறுமுகம். சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருக்கும் புஷ்பநாதனுக்கு சொந்த ஊர் திருச்சி. “சென்னையின் பேச்சுலர் வாழ்க்கையை ஒரு ‘மியூசிக் வீடியோ’வாக எடுக்கலாம் என்ற ஐடியா என் நண்பர்களுக்குப் பிடித்திருந்தது. இந்த ஆல்பத்துக்கான பாடல் வரிகளில் ஆரம்பித்து, காட்சிகள் வரை எல்லோமே எங்களுடைய சொந்த அனுபவம்தான். நண்பர்களுடனான உரையாடலில் இருந்ததுதான் இந்த ஆல்பம் உருவானது” என்று சொல்கிறார் புஷ்பநாதன்.

டோனி பிரிட்டோ இசையமைத்திருக்கும் இந்த ஆல்பத்தில் சின்னாவும், திவாகரும் பாடியிருக்கின்றனர். வினோத் குமரனின் படத்தொகுப்பும், ஜெபா ரஞ்சித், கார்த்திக் ஆகியோரின் ஒளிப்பதிவும், அசாரின் நடன அமைப்பும் ஆல்பத்துக்கு கூடுதல் புத்துணர்ச்சியை அளிக்கின்றது. மதன், செந்தில், கதிர், புஷ்பநாதன், லல்லு, சின்னா, திவ்யா, வெற்றி உள்ளிட்டோர் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கின்றனர்.

“ ஆகோ ஸ்டுடியோஸ் சார்பாக ஏற்கெனவே நாங்கள் ‘முதிர் கன்னி’, ‘கனவுகள் விற்பவன்’ போன்ற குறும்படங்களை எடுத்திருக்கிறோம். இந்தக் குறும்படங்களுக்கு விருதுகளும் கிடைத்திருக்கின்றன. இதுதான் எங்களுடைய முதல் மியூசிக் வீடியோ. இந்த வீடியோவுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது” என்கிறார் புஷ்பநாதன்.

சென்னையின் அன்றாட வாழ்க்கையில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான ஆங்கிலம், வேலைவாய்ப்பின்மை, காதல், நட்பு, பசி, பொழுதுபோக்கு, நம்பிக்கை என எல்லாவற்றையும் இந்த வீடியோ தொட்டுச்செல்கிறது. அதனால், யூடியூபில் வெளியாகிய சில தினங்களிலேயே இந்த ஆல்பம் பத்தாயிரம் ஹிட்களை அள்ளியிருக்கிறது.

யூடியூபில் வீடியோவைப் பார்ப்பதற்கு:

http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article7899831.ece

Link to comment
Share on other sites

நடந்தால் காசு: புதிய திட்டம் அறிமுகம்

 

நடந்தால் உடல் எடை குறைவதோடு பணமும் கிடைத்தால் எப்படி இருக்கும்?

151121165106_bitwalking_2_512x288_bbc_no
 ஆப்ரிகாவில் அடிப்படை வசதிகளுக்காக நீண்ட தூரம் நடக்க வேண்டியத் தேவை பல பகுதிகளில் உள்ளது

வேறு வேலை ஏதும் செய்யாமல் நடந்து மட்டுமே காசு ஈட்டும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இது காகிதப் பணமாகவோ அல்லது நாணயமாகவோ கிடைக்காது. டிஜிட்டல் பணமாகவே அது கிடைக்கும்.

பிட் வாக்கிங் டாலர் என பெயரிடப்பட்டுள்ள டிஜிட்டல் பணத்தை ஈட்ட செய்ய வேண்டியதெல்லம் ஒன்றுதான்-நடப்பது.

நடந்து நடந்து இந்த இ-பணத்தை ஈட்டுவதற்கு முன்னர் செய்ய வேண்டிய வேலை ஒன்று உள்ளது. அது நமது மொபைல் ஃபோனில் அந்தத் திட்டத்துக்கான செயலியை தரவிறக்கம் செய்வது.

151121164304_bitwalking_1_512x288_bbc_noமுதலில் செயலியை தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்

இந்தச் செயலியானது நாம் நடப்பதை அளக்கும். 10,000 அடிகள் நடந்தால் ஒரு பிட்வாக்கிங் டாலரை சம்பாதிக்கலாம்.

அதாவது சராசரியாக ஐந்து மைலுக்கு ஒரு பிட் வாக்கிங் டாலர் கிடைக்கும்.

இப்படிச் சம்பாதிக்கும் பணத்தை இதற்கென உள்ள ஆன்லைன் கடைகளில் பொருட்களை வாங்க பயன்படுத்தலாம்.

நிஸான் பஹர், ஃப்ராங்கி இம்பெசி ஆகிய இருவரும் இணைந்து இந்த பணத்த உருவாக்கியுள்ளனர்.

இந்தத் திட்டத்திற்கென சுமார் 10 மில்லியன் டாலர்கள் இதுவரை திரட்டப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டாளர்களே இதில் முதலீடு செய்துள்ளனர்.

ஜப்பானின் மின்னணு நிறுவனமான முரடா, இதற்கென கையில் அணிந்துகொள்ளக்கூடிய பட்டை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஸ்மார்ட் ஃபோனுக்குப் பதிலாக இந்தப் பட்டையை அணிந்துகொண்டும் நடக்கலாம்.

151121165204_bitwalking_3_512x288_bbc_no  இது போன்று பல புதிய சாதனங்கள் வரும் என்று எதிர்பார்ப்புகள் உள்ளன

இந்தத் திட்டத்தின் நிறுவனர்கள், வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்களை ஏற்கனவே உருவாக்கியவர்கள்.

கடந்த ஆண்டு, கென்யாவின் நைரோபியில், கம்ப்யூட்டரைப் போலச் செயல்படக்கூடிய கீபோட் என்று அழைக்கப்படும் சிறிய ஸ்டிக் ஒன்றை 7 டாலர்களுக்கு விற்கக்கூடிய வகையில் உருவாக்கினர்.

பலரும் நடக்கும்போது தாம் நடக்கும் தூரத்தை அளக்கக்கூடிய கருவிகளைப் பயன்படுத்துவதை பார்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஊழியர்கள் நடப்பதின் மூலம் சம்பாதிக்கும் தொகையை அவர்கள் வாங்கும் சம்பளத்துடன் அளித்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

வளர்ந்த நாடுகளைப் பொறுத்தவரை, சராசரியாக ஒரு மனிதர் மாதத்திற்கு 15 பிட்வாக்கிங் டாலரை சம்பாதிக்க முடியுமெனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

ஆனால், ஏழை நாடுகளில் மக்கள் வேலைக்கும் பள்ளிக்கூடத்திற்கும், ஏன் தண்ணீர் சேகரிக்கக்கூட நீண்ட தூரம் நடக்க வேண்டியிருப்பதால், இந்தத் திட்டம் அவர்கள் வாழ்க்கையை மாற்றும் என நம்பப்படுகிறது.

ஆனால், ஒரே இடத்தில் இருந்தபடியே நடப்பது போலச் செய்து ஏமாற்ற முடியாது. கூகுள் மேப் மூலம் ஒருவர் நடந்துசெல்லும் தூரமும் கணக்கிடப்படும்.

ஒரு நாளைக்கு ஒருவர் அதிகபட்சமாக 3 பிட் வாக்கிங் டாலர் மட்டுமே சம்பாதிக்க முடியும்.

தங்கள் ஊழியர்கள் உடல்நலத்துடன் இருக்க வேண்டுமென விரும்பும் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ளும் என இதன் நிறுவனர்கள் நம்புகின்றனர்.

http://www.bbc.com/tamil/science/2015/11/151121_bitwalking_dollar

Link to comment
Share on other sites


இன்று உலக தொலைக்காட்சி தினம்.
ஐ.நா சபை 1996ஆம் ஆண்டு இதே நவம்பர் 21ம் திகதியில் முதல் தடவை 'உலக தொலைக்காட்சி தினத்தை'ப் பிரகடனம் செய்தது.

சமூகத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் தொலைக்காட்சி வகிக்கக்கூடிய பங்கினை வலியுறுத்தியே இத்தினம் ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகிறது.

12241625_944958065552888_894639558607702

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: நவம்பர் 22
 
 

article_1448169581-0.jpg1963: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடி, டல்லாஸ் நகரில் காரொன்றில் பயணம் செய்யும்போது துப்பாக்கிதாரியொருவரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1986: 20 வயதான மைக் டைசன், ட்ரேவர் பேர்பிக்கை தோற்கடித்து உலகின் மிக இளம் அதிபார குத்துச்சண்டை சம்பியன் எனும் பெருமைக்குரியவரானார்.

1990: பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து மார்கரெட் விலகினார்.

2002: நைஜீரியாவில் உலக அழகுராணிப் போட்டியில் பங்குபற்றுபவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்.

2003: உலகக்கிண்ணத் றக்பி தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து  இங்கிலாந்து அணி சம்பியனாகியது.

2005: ஜேர்மனியின் முதலாவது பெண் சான்ஸ்லராக ஏஞ்சலா மார்கெல் பதவியேற்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/159677/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.MkkPcFUH.dpuf
Link to comment
Share on other sites

12246821_1025874244138032_30671308248770


ஸ்பானீஷ் லீக்கில் பார்சிலோனாவிடம் 4-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் படுதோல்வியடைந்தது. இது போன்ற கேலி சித்திரங்களை பார்சிலோனா ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

Link to comment
Share on other sites

சந்திரனில் வசிக்கும் முதியவருக்கு கிறிஸ்துமஸ் பரிசு அனுப்பிய சிறுமி (வீடியோ)

 

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்வார்கள். அதனை மையமாக வைத்து பிரிட்டனை சேர்ந்த ஜான் லீவிஸ் நிறுவனம், ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.


        

பூமியில் வசிக்கும் லில்லி என்ற சிறுமி டெலிஸ்கோப் மூலம் சந்திரனை பார்க்கிறார். சந்திரனில் முதியவர் ஒருவர் தனிமையில் சோகத்தில் வசிப்பது அந்த சிறுமியின் கண்களுக்கு தென்படுகிறது. அந்த முதியவரை மகிழ்விக்கும் வகையில் லில்லி, தனது டெலிஸ்கோப்பை அவருக்கு  கிறிஸ்துமஸ் பரிசாக  அனுப்பி வைப்பது போல், அந்த விளம்பரம் முடிவடைகிறது. இந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
http://www.vikatan.com/news/article.php?aid=55402

Link to comment
Share on other sites

12265535_945278438854184_411658856733681


இலங்கை கிரிக்கெட் முன்னாள் தலைவரும், உலகின் மிக நுட்பமான நுணுக்கங்கள் தெரிந்த சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான மார்வன் அத்தப்பத்துவின் பிறந்தநாள் இன்றாகும்.

6 இரட்டை சதம் அடித்த வீரர்

அண்மைக்காலம் வரை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராகவும் இருந்தவர் மார்வன்.

Link to comment
Share on other sites

சூறையாடப்பட்ட மசூதிக்கு சேமிப்பை நன்கொடையளித்த 7 வயது சிறுவன்!

 

மெரிக்காவின் டெக்ஸாஸ் மாகானத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனான ஜேக் ஸ்வான்சன் தன் சேமிப்பு பணத்தை அவனது குடியிருப்புப் பகுதியிலுள்ள சூறையாடப்பட்ட மசூதிக்கு நிவாரன நிதியாக வழங்கியதற்கு அவனுக்கு ‘ஐ-பேட்’ பரிசாக கிடைத்துள்ளது.

 c1.jpg

பாரீஸ் நகரில் நடந்த ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவின் ஆஸ்டின் நகரிலுள்ள ஃபயூகர்வில் மசூதியை முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் சூறையாடிவிட்டுச் சென்றுவிட்டனர். தீவிரவாத வன்முறை நிகழ்வுகளைத் தொடர்ந்து நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மசூதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் கிழித்து வீசப்பட்டிருந்தது. பொதுமக்கள், போலீசார் என அனைவரும் வந்து பார்த்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்ற நிலையில், அக்கூட்டத்திலிருந்த சிறுவன், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாத நிலையிலும் தன் அம்மாவிடம் நிலவரத்தைக் கேட்டு தெரிந்து கொண்டான்.

c2.jpg

அதன்பின் யாரும் எதிர்பாராத நிலையில், அந்த 7 வயது சிறுவன் ஜேக் ஸ்வான்சன், தன் உண்டியலில் ஐ-பேட் வாங்குவதற்காக தான் சேமித்து வைத்திருந்த 20 அமெரிக்க டாலர்களை மசூதி நிர்வாகிகளிடம் வழங்கிவிட்டான். சிறுவனது செயலைப் பாராட்டி, அமெரிக்க முஸ்லிம்கள் சங்கம் ஸ்வான்சனை கௌரவப்படுத்தும் விதமாக நன்றிக் கடிதத்துடன் ஒரு ஐ-பேட் சேர்த்து வழங்கி உள்ளது.

இதுகுறித்து அம்மசூதியின் நிர்வாகக் குழு உறிப்பினரான ஃபைசல் நயீம் கூறுகையில், ''20 டாலர்கள் என்பது ஒரு பெரிய தொகையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சீர்குலைந்த மசூதியின் சீரமைப்புப் பணிக்காக தன் சொந்த சேமிப்பில் சேர்த்து வைத்திருந்த பணத்தை தன் ஆசையை விட்டுக்கொடுத்து அளித்துள்ளான் ஜேக் ஸ்வான்சன். அந்தப் சிறுவனின் பெருந்தன்மைக்கான ஒரு சிறிய நன்றியாகவே அவன் விரும்பிய ஆப்பிள் ஐ-பேட் பரிசாக வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

http://www.vikatan.com/news/article.php?aid=55419

Link to comment
Share on other sites

அப்பா அழாதே!

ஐரோப்பாவின் வீதிகளிலே பயண இலக்கற்று சுற்றித் திரியும் ஒரு சிரிய அகதி மன வேதனையின் உச்சத்தில் தன் குழந்தையின் முன்னே அழும் காட்சி! என்ன மாதிரியான வக்கிர உலகம் ஒரு தந்தையை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது?

12278661_1026127294112727_37506567854624

11986430_1026127290779394_49888392287777

12239657_1026127287446061_59419998316385

Link to comment
Share on other sites

வரலாற்றின் இன்று: நவம்பர் 23
 
 

article_1448250283-2.jpg1940 - இரண்டாம் உலகப் போர்: ருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.

1955 - கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு கைமாறியது.

1971 - மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

1978 - இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

1979 - மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

1980 - தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 4,800 பேர் பலியாகினர்.

1985 - எகிப்திய பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1996 - எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோஸ் அருகில் வீழ்ந்ததில் 123 பேர் பலியாகினர்.

1998 - கம்போடியத் தலைவர் ஹன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம் ரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

2003 - வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்செ பதவி விலகினார்.

2005 - லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க நாடொன்றிண் முதலாவது பெண் தலைவர் இவராவார்.

2007 - அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது

2007 - ஆர்ஜெண்டீனாவுக்குத் தெற்கோ பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 154 பெர் கொல்லப்பட்டன

- See more at: http://www.tamilmirror.lk/159725/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.I4iTN0DK.dpuf
Link to comment
Share on other sites

12247203_945592532156108_537135900244239

பாகிஸ்தானின் விராட் கோலி என்று அழைக்கப்படும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் அஹ்மத் ஷெசாட்டின் பிறந்தநாள்

Link to comment
Share on other sites

ஒரே மாணவனுக்காக மட்டுமே செயல்படும் பள்ளி: காரணம் என்ன?

 

இங்கிலாந்தில் உள்ள தீவு பகுதி ஒன்றில், ஒரே மாணவனுக்காக ஒரு பள்ளி செயல்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

England%20student%20Aron.jpg 

'ஸ்க்கிரீஸ்' என்ற சமுதாய பள்ளியில் ஆரோன் ஆன்டர்சன் என்ற 10 வயது சிறுவன் படித்து வருகிறான். இந்த சிறுவனுக்காக மட்டுமே அங்கு இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி நாட்களில் சிறுவன் England%20student%20Aron%201%281%29.jpgஆரோன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆசிரியர்களின் முழுக் கவனமும் அவன் மீதே இருக்கும்.

பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தாலும், ஆரோனுக்கு இருக்கும் ஒரே வருத்தம், அவனுக்கு பிடித்த விளையாட்டானா கால்பந்தை அவனுடன் விளையாட யாரும் இல்லை என்பதே. சிறுவன் ஆரோன் மட்டுமே அந்த பள்ளியில் சென்று படித்து வருவதால், இங்கிலாந்திலேயே அதிக பணச்செலவில் கல்வி பயின்று வரும் சிறுவனாக ஆரோன் மாறியுள்ளான்.

தன்னோடு விளையாட எவரும் இல்லை என்ற வருத்தம் சிறுவன் ஆரோனுக்கு உண்டு என்றாலும், அந்த தீவினை விட்டு வெளியேற அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை என்றே தெரிவித்துள்ளான்.

ஒட்டு மொத்தமாக 70 பேர் மட்டுமே குடியிருந்து வரும் இந்த தீவின் மிக அருகில் இருக்கும் நகரம் என்பது செல்ட்லன்ட் தீவின் தலைநகரமான லீர்வீக் நகரே.

சிறுவன் ஆரோனின் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் அருகில் இருக்கும் வேறு தீவுகளில் உள்ள பள்ளிகளில் கல்வி பயின்று வருவதால், ஆரோனுக்கு அவர்களை வாரவிடுமுறை நாட்களில் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.

வீட்டில் இருந்து சைக்கிளில் 2 நிமிடத்தில் சென்றுவிடும் தூரத்தில் இருப்பதால் ஆரோனின் தினசரி வாழ்க்கை சைக்கிள் பயணத்துடனே துவங்குகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=55431

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.