Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

இன்று அன்று | 28 அக்டோபர் 1955: உழைப்பால் வென்ற இந்திரா!

 

 
 
INDRA_NOOYI_553274_2599739h.jpg
 

பெப்சிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற மகிழ்ச்சியுடன் அமெரிக்காவில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார் இந்திரா நூயி.

அந்தச் செய்தியைத் தன்னுடைய அம்மாவுக்குச் சொல்ல நினைத்தார். அப்போது அவரது அம்மா அவரிடம், “ராஜ் கிஷன் (இந்திரா நூயியின் கணவர்) அலுவலகத்திலிருந்து வந்திருக்கிறார். அவருக்குக் கொஞ்சம் பால் வாங்கி வா” என்றாராம். கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு பால் பாக்கெட்டை வாங்கி வந்தாராம் இந்திரா.

“அம்மா அத்தனை கண்டிப்பானவர்” என்று சொல்லும் அதே இந்திராதான் அம்மாவின் கட்டுப்பாடுகளையும் தாண்டி, சென்னையிலிருந்து அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கச் சென்றவர்.

1955 அக்டோபர் 28-ல் சென்னையில் பிறந்தவர் இவர். உலகின் அதிகாரமிக்க 50 பெண்களில் ஒருவராக ஃபார்ச்சூன் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அயராத உழைப்பால் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்திரா, தூக்கத்தைவிட உழைப்புக்கே முக்கியத்துவம் தருவேன் என்று கூறுகிறார். ஆம், தினமும் நான்கே நான்கு மணி நேரம்தான் தூக்கத்துக்கு ஒதுக்குகிறார் இந்திரா!

http://tamil.thehindu.com/opinion/blogs/இன்று-அன்று-28-அக்டோபர்-1955-உழைப்பால்-வென்ற-இந்திரா/article7813032.ece?homepage=true

Link to comment
Share on other sites

போனஸ் பிறந்த கதை!

 

ண்டிகை காலம் நெருங்கி விட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட்டு வருகின்றன. சரி இந்த போனஸ் வழங்கும் முறை எப்படி வந்தது.?

bonus.jpg

இதற்கு ஒரு சரித்திர பின்னணி உள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வாரச் சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது.ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் மாத சம்பள முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது  4 வாரங்களுக்கு ஒரு முறை  சம்பளம்  கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது.

அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் ஒரு வருடத்திற்கு 52 வாரங்கள் வருகிறது. அப்படியென்றால் 13 மாத சம்பளங்கள் வர வேண்டுமல்லாவா? இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக 1930ஆம் ஆண்டு வாக்கில் மகராஸ்ட்ராவில் உள்ள சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடங்கின.  தங்களுக்கு ஒரு மாத சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடின.10 ஆண்டு காலம் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒரு மாத சம்பளத்தை வழங்குவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பிரிட்டிஷ் அரசு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு அதிக பணத் தேவை இருக்கும் என்றும், அந்த சமயத்தில் போனஸ் வழங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து 1940ஆம் வருடன் ஜுன் மாதம் 30ஆம் தேதி இந்தியாவில் முதன் முதலாக இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது. இதுதான் போனஸ் பிறந்த கதை.

http://www.vikatan.com/news/article.php?aid=54333

Link to comment
Share on other sites

இயற்கை விந்தை: இப்படியும் ஒரு மரம்!

 
 
tree_2599805f.jpg
 

சந்தன மரம் என்றாலே அதன் வாசனையும் மதிப்பும்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனால், சந்தன மரம் வளரும் விதத்தை அறிந்தால், அதுதான் இனிமேல் உங்களுக்கு ஞாபகம் வரும்.

வேப்பம் மரம், புங்க மரம் என விரும்பும் மரத்தை நினைத்த இடத்தில் தனியாக வளர்க்கிறோம் இல்லையா? ஆனால், சந்தன மரத்தை இப்படித் தனியாக வளர்க்க முடியாது. சந்தன மரத்தை வேறு மரங்களுக்குப் பக்கத்தில்தான் வளர்க்க முடியும். அதற்குக் காரணம் இருக்கிறது. சந்தன மரத்தின் வேர் ஒரு ஒட்டுண்ணி. அதனால், ஒரு மரத்துக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துகளையும் மண்ணிலிருந்து அவற்றால் நேரடியாகப் பெற முடியாது. நிலத்துக்கு அடியில் இதன் பக்கத்தில் உள்ள வேறு மரத்தின் வேரைத் தேடிச்சென்று ஒட்டிக்கொள்ளும்.

அப்படி ஒட்டிக்கொள்ளும்போது, இதன் வேரில் ‘பௌஸ்டோரியா’என்னும் உறுப்பு வளரும். அது பக்கத்தில் உள்ள மர வேரைத் துளைத்துச் சென்று உயிர் வாழத் தேவையான நைட்ரஜனையும் பாஸ்பரஸையும் எடுத்துக்கொள்ளும். அதோடு விட்டுவிடாது, தனக்கு ஊட்டம் தரும் அந்த மரத்தையும் பாதிப்படையச் செய்துவிடும். இதனால் சந்தன மரக்காடுகளில் உள்ள மற்ற மரங்கள் கொஞ்சம் நோஞ்சானாகவே இருக்கும்.

சந்தன மரம் மெதுவாக வளரும் தன்மைக்கொண்டது. அது ஓரளவு வளரும்வரை மற்றத் தாவரங்கள் எல்லாமே சந்தன மரத்தின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டே ஆக வேண்டும். மூக்கைத் துளைக்கும் அளவுக்கு வாசம் வீசும் சந்தன மரக்கட்டையின் இந்தச் செயல், இயற்கையின் விந்தை இல்லையா?

தகவல் திரட்டியவர்: ஆ. ஹரிணி, 6- ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்.

http://tamil.thehindu.com/society/kids/இயற்கை-விந்தை-இப்படியும்-ஒரு-மரம்/article7813354.ece

Link to comment
Share on other sites

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...!

 

mirror.jpg'வாட்ஸ் அப்'பில் அவ்வப்போது சில தகவல்கள் வைரலாக பரவி அனைவரையும் கவர்வதுண்டு. அந்த வரிசையில் கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் என்ற ஒரு செய்தி தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.

அது இங்கே...

'நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதேபோல், உன் சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம், மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதேபோல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாதபோது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! அதேபோல், நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!

இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்".

http://www.vikatan.com/news/article.php?aid=51933

Link to comment
Share on other sites

12185057_935140603201301_490672931889926

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவரும், சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான மைக்கேல் வோனின் பிறந்தநாள்.

Link to comment
Share on other sites

பன்றி உண்டியல் பிரபலமானது ஏன்?

 

 
piggy_bank_2599815f.jpg
 

அக்.31 - உலக சேமிப்பு நாள்

நாம் காசு சேர்க்க உண்டியலைப் பயன்படுத்துகிறோம் இல்லையா? வெளிநாடுகளில் குழந்தைகள் காசு சேர்க்க 'பிக்கி பேங்க்' என்றழைக்கப்படும் பன்றி வடிவ உண்டியலையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்களே, அது ஏன்? அதற்குக் காரணம் இருக்கிறது. அத்துடன் உலக சேமிப்பு நாள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?

பண்டைய கிரேக்க, ரோமானிய நாகரிகங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் காசு சேர்க்கப் பயன்படுத்தப்பட்ட உண்டியல்கள் கிடைத்துள்ளன. இந்த உண்டியல்கள் களிமண்ணிலோ, மரத்திலோ செய்யப்பட்டிருந்தன. பெரும்பாலும் பானை வடிவம், ஜாடி வடிவத்தில் காசு போடுவதற்கான துளையுடன் அவை இருந்தன.

உண்டியல் துளையைத் தலைகீழாகக் கவிழ்த்து ஓரிரு காசுகளை எடுக்கலாம் என்றாலும், மொத்தக் காசையும் எடுக்க வேண்டுமென்றால், உண்டியலை உடைக்கவே வேண்டும். அதற்குப் பிறகு அந்த உண்டியலை தூக்கிபோட்டுவிட வேண்டியதுதான்.

மத்திய காலத்தில்தான் உண்டியல்களின் வடிவமும் களிமண்ணும் மாறின. அந்தக் காலத்தில் உண்டியல் செய்ய ஆரஞ்சு வண்ணக் களிமண் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலத்தில் அதன் பெயர் 'Pygg' (பிக்). இந்தக் களிமண்ணில் செய்யப்பட்ட உண்டியல்கள் 17-ம் நூற்றாண்டில் மிகப் பிரபலம். அது 'Pygg Bank' எனப்பட்டது. காலப்போக்கில் அது மருவி 'Piggy Bank' என்றாகிவிட்டது. பெயர் மருவிய பிறகுதான் பன்றி வடிவ உண்டியல்கள் பிரபலமடைந்தன.

உலகின் பல பகுதிகளில் பன்றிகள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகின்றன. ஜெர்மனியிலும் நெதர்லாந்திலும் பன்றி உண்டியல்கள் அதிர்ஷ்டப் பரிசாகவும், புத்தாண்டுப் பரிசாகவும் கொடுக்கப்படுகின்றன.

இன்றைக்கு களிமண்ணைத் தவிர மற்ற பொருட்களிலும், பன்றியைத் தவிர்த்த மற்ற வடிவங்களிலும் உண்டியல்கள் செய்யப்படுகின்றன. ஆனால், ஆங்கிலத்தில் உண்டியல் பெரும்பாலும் 'பிக்கி பேங்க்' என்றே அழைக்கப்படுகிறது.

ஜப்பானில் மனேகி நெகோ எனப்படும் காசுப் பூனை அதிர்ஷ்டத்துக்காகவும், நல்ல எதிர்காலத்துக்காகவும் வீடுகளில் வைக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகை உண்டியலே.

ஐரோப்பாவில் பீங்கானிலும், அழகான பொம்மைகளைப் போலவும் செய்யப்படும் உண்டியல்கள் காசு சேர்ப்பதற்காக மட்டுமல்லாமல் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

19-ம் நூற்றாண்டின் மத்தியில் உலோக உண்டியல்கள் அறிமுகமாகின. 1920 - 30-களில் தகரத்தில் செய்யப்பட்ட உண்டியல்கள் வெளிநாடுகளில் பிரபலமாக இருந்தன. 1945-க்குப் பிறகு பிளாஸ்டிக் உண்டியல்கள் அறிமுகமாகின.

உலகப் போருக்கு முன்னதாக வாடிக்கையாளர்களிடம் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிக்க வங்கிகள் உண்டியல்களை வழங்கி வந்தன. தனியார் நிறுவனங்களும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இலவச உண்டியல்களை வழங்குவது பிறகு வழக்கமானது.

இன்றைக்கு பன்றி உண்டியல்கள் பிளாஸ்டிக்கில் கிடைத்தாலும், பீங்கானில் செய்யப்படுவதே வழக்கம். இந்த உண்டியல்கள் பழைய காலத்தைப் போல் இல்லாமல், அடியில் மூடியுடன் வருகின்றன. அதனால், உடைக்க வேண்டிய அவசியம் ஏற்படுவது இல்லை.

இன்றைக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கும் பல்வேறு உயிரினங்கள், பழங்கள், பொருட்கள் வடிவில் உண்டியல்கள் கிடைக்கின்றன. நம் ஊரில் பானை செய்பவர்களும் பொம்மை செய்பவர்களும் பல்வேறு வடிவங்களில் மண் உண்டியல்களை விற்பதைப் பார்த்திருக்கலாம்.

இந்தியாவில் ஏன் மாறியது?

இத்தாலியில் உள்ள மிலானோ நகரில் 1924 அக்டோபர் 31-ம் தேதி உலகின் 'முதல் சர்வதேச வங்கி சேமிப்பு மாநாடு' நடந்தது. அப்போது முதல் ‘உலக சேமிப்பு நாள்’ அனுசரிப்பது தொடங்கியது. அந்த மாநாட்டின் கடைசி நாளில் இத்தாலிய பேராசிரியர் ஃபிலிப்போ ராவிஸா 'சர்வதேச சேமிப்பு நாளை' அறிவித்தார். அதற்கு முன்னர் 'உலக சிக்கன நாள்' என்று அது அழைக்கப்பட்டு வந்தது.

இந்தியாவில் 1984-ம் ஆண்டு வரை அக்டோபர் 31-ம் தேதியே உலக சேமிப்பு நாள் அனுசரிக்கப்பட்டு வந்தது. ஆனால், 1984-க்குப் பிறகு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளும் அக்டோபர் 31-ம் தேதி வந்ததால், அக்டோபர் 30-ம் தேதி சேமிப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/society/kids/பன்றி-உண்டியல்-பிரபலமானது-ஏன்/article7813400.ece

Link to comment
Share on other sites

12185177_935127979869230_167707445083754

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மத்தியூ ஹெய்டனின் பிறந்த தினம் இன்று.
டெஸ்ட் போட்டியில் தனிநபர் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை உலக சாதனை (380) இவர் வசம் சில காலம் இருந்தமை பெருமைக்குரிய ஒரு விஷயம்.

Link to comment
Share on other sites

குழந்தைகள் அல்லவா முதியோர்கள்...!

 

னிதனுடைய வளர்ச்சியை 3  காலகட்டங்களாக பிரிக்கலாம். குழந்தை பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம். 60 வயதை கடந்தவர்கள் முதுமை பருவத்தினராக அறியப்படுகிறார்கள் அல்லது மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

நம்மை குழந்தையிலிருந்து பாதுகாத்து சீராட்டி வளர்த்த நம் பெற்றோரை முதியோர் இல்லங்களில் அடைக்கலாமா?அவர்கள் நம் தலைமுறையின் ஆணிவேர்கள். இவர்கள் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அக்டோபர் 1 உலக முதியவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

1990- ம் ஆண்டு ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி இது கடைபிடிக்கப்படுகிறது 1991லிருந்து ஒவ்வொரு ஆண்டும் முதியவர்கள் தினம் கடைபிடித்து வருகிறோம்.கடந்த 2002-ம் ஆண்டு முதியவர்களுக்கான புதிய செயல்திட்டம் வகுக்கப்பட்டு முதியோர் நலன், சுதந்திரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போது உலகம் முழுவதும் 60கோடி முதியவர்கள் இருப்பதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏன் இந்த முதியவர்கள் தினம் கடைபிடிக்கிறோம்?

இன்று முதியவர்களின் நிலை சமூகத்தில்  மிகவும் மோசமாக உள்ளது.

oldnedws_vc1.jpg


முதியவர்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்னைகள்:

வயதான காலத்தில் வரக்கூடிய உடல்நலம் சார்ந்த பிரச்னைகளும், மனநலம் சார்ந்த பிரச்னைகளும்தான் இவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகள். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இவர்களை மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்ல யாரும் இல்லை. தினம் தினம் அரசு மருத்துவமனைகளில் பார்க்கலாம், பல முதியவர்கள் வெயில் என்றும் பாராமல் காத்துக் கிடந்து மருந்து மாத்திரைகள் வாங்கிச் செல்வர். இதில் பலபேர் வீட்டில் உறவுகள் இருந்தும் தனிமையில் வந்திருப்பர்.

அடுத்ததாக இவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்னை மரியாதைக் குறைவு.'நீ எல்லாம் இருந்து என்ன  பண்ண  போற... பேசாம செத்து தொலைய வேண்டியதுதானே..?' போன்ற வசவுகள். பேருந்தில் பயணம் செய்ய சென்றால் அங்கு 'நீயெல்லாம் வரலனு யார் அழுதா..? இங்க வந்து நம்ம உயிர வாங்கிக்கிட்டு' என்ற வசனங்களை கடந்துதான் செல்கிறார்கள்.

இவ்வாறு செய்வதால் என்ன பயன். இவர்கள் யார்? அனுபவத்திலும் ,வயதிலும் மூத்தவர்கள்.
இளைமையின் வாழ்கையை பிள்ளைகளுக்காக செலவழித்துவிட்டு கடைசியில் ஓய்வு எடுக்கும் இவர்களின் உலகம், வேறு எந்நேரமும் தன்னையொத்த வயதினரிடம் கலகலப்பாக பேசி மகிழ்ந்து, பழைய நினைவுகளை மெல்ல அசைபோட்டு, புதுமையை பார்த்து வியப்படைவர். இவர்களுக்கு தேவை அமைதியும், மகிழ்ச்சியும் மட்டுமே. ஆதரிக்க மகன் இருந்தும், அன்பு காட்ட எவரும் இல்லையே என்று புலம்புகின்றனர்.

oldnedws_vc2.jpg



இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது:

மதிக்கப்பட வேண்டியவர்கள் இன்று மிதிக்கப்படுகிறார்கள். மூத்த குடிமக்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் நம்மை விதைத்த விதைகள். மகன்கள் தன் பெற்றோரை தனிமையில் விடாமல் தன்னுடன் வைத்து பாதுகாக்க வேண்டும். சிறிய வயதில் நமக்கு ஒன்று என்றால் துடித்த தந்தை, இப்போது குழந்தை. அவருக்கு உடல்நலமில்லை என்றால் நாம் அருகில் இருந்து கவனித்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

நாமும் ஒரு நாள் முதியவனாகும் காலம் வரும். அன்று நமக்கு இதே நிலைமை நம் பிள்ளைகளால் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? இதை உணர்ந்து செயல்பட்டாலே கண்டிப்பாக காப்பாற்றும் உணர்வு வரும். முதலில்  செய்ய வேண்டியது நம் பெற்றோரை இல்லங்களில் சேர்த்திருந்தால்.அவர்களை அழைத்து வந்து தன்னுடன் வைத்து, கடைசி காலங்களில் பேணி காத்திடுங்கள்.

இது நம் கடமை. தன் மகன் தன்னிடம் ஒருநாள் பேசாமல் இருந்தாலும் தவித்திடும் தாயை பிரிந்து இருப்பதை காட்டிலும், அவர்களை ஆதரித்து அன்பு செலுத்துங்கள். இந்த முதியவர்கள் தினம் மூத்தக் குடி மக்களுக்காக கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கென பல்வேறு சலுகைகள் உள்ளன. ஆனால் அதை அனுபவிக்க முடியாதா நிலைதான் இங்குள்ளது.

இனிமேலாவது தன்னுடைய பெற்றோர்களை பாதுகாக்க வேண்டும். சமூகத்தில் அவர்கள் மரியாதையாக மதிக்கப்படவேண்டும். அவர்களின் மனதை புரிந்து அன்பு செலுத்தினாலே போதும்.

இன்று முதியவர்கள் தினம். இன்றிலிருந்து முடிவெடுத்து, 'முதியோர்களை மதிப்போம்; அவர்களை பாதுகாப்போம்!' என்று உறுதிமொழி ஏற்போம்.

http://www.vikatan.com/news/article.php?aid=53117

Link to comment
Share on other sites

12182839_935504396498255_407665679048299

உலக கால்பந்து வரலாற்றில் மிகக் சிறந்த கால்பந்து நட்சத்திரமாகக் கருதப்படும் டீகோ மரடோனாவின் பிறந்தநாள்.
ஆர்ஜென்டீன அணிக்கு 1986ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்றுகொடுத்த கால்பந்து சக்கரவர்த்தி மரடோனா

Link to comment
Share on other sites

கின்னஸ் சாதனை: ஜோர்டானில் ஒரு ஜாலி வாட்டர் ஸ்லைடர்! (வீடியோ)

 

லகிலேயே மிக நீளமான வாட்டர் ஸ்லைடர், தொடங்கப்பட்டதுமே கின்னஸ் சாதனை படைத்துவிட்டது. அது எப்படி என்று தெரிந்துகொள்ளலாமா...?

ஜோர்டானின் தலைநகர் அம்மானில், ஒரு சாலையில் திடீரென வாட்டர் ஸ்லைடரைப் பார்த்த நகர மக்களுக்கு இன்ப அதிர்ச்சி. பாய்ந்தோடும் தண்ணீரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்ர்ர்ர்னு சறுக்கி விளையாட போட்டிபோடுகின்றனர். அதைப் பார்த்த கின்னஸ் நிர்வாகிகள், உலகிலேயே நீளமான வாட்டர் ஸ்லைடர் இதுதான் எனப் பட்டம் தந்துவிட்டார்கள்.

 'லாங்கஸ்ட் ஸ்லிப் அண்டு ஸ்லைட்' (longest slip and slide) என்று அழைக்கப்படும் இதன் ஸ்லைடரின் நீளம், சுமார் 2007 அடிகள். கால்வாய் போல அமைந்திருக்கும் ஸ்லைடரில் தண்ணீர் விட்டு, ரப்பர் டியூப்களைக் கொண்டு அதில் சறுக்கிச் செல்லலாம். மணிக்கு 30 கி.மீ வேகத்தில், இரண்டே நிமிடங்களில் மறுமுனையை அடையலாம். பிளாஸ்டிக் பேப்பர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்லைடரின் எடை, சுமார் 6 டன்கள்.

 சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில், 'ஸ்லைட் ஜோர்டான்' என்ற பெயரில், ஜோர்டானில் உள்ள எல்லா நகரங்களுக்கும் செல்ல இருக்கிறதாம் இந்த ஸ்லைடர். இந்த ஸ்லைடரை மலைச் சரிவு, சாலைகள், மைதானங்களிலும்கூட அமைத்துக்கொள்ளலாம் என்பதால், இந்த ஸ்லைடருக்கு வரவேற்புக் கூடுகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=54428

Link to comment
Share on other sites

https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/t31.0-8/12185191_935505253164836_3718988535592140906_o.jpg

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர், அணித்தலைவர் கோர்ட்னி வோல்ஷின் பிறந்தநாள்.

அதிக டெஸ்ட் விக்கெட்டுக்கள் வீழ்த்திய உலக சாதனையும் இவர் வசம் இருந்தது.
கனவான் தன்மைக்குப் பெயர்பெற்றவர் வோல்ஷ்.

Link to comment
Share on other sites

அன்னையின் தேகங்கள் - ஒரு அசத்தல் ஆல்பம்!

 

தாய்மையின் புனிதத்தையும், பெண்மையின் அழகியலையும் வெளிப்படுத்தும் முயற்சியாக 'Bodies Of Mothers' எனும் புகைப்பட ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார் பிரபல புகைப்படக் கலைஞர் ஜேட் பியல்.

29-1446119008-kasthuri-ss-600.jpg

உலகம் முழுக்க 80 தாய்மார்கள் பங்கெடுத்த  இந்த முயற்சியில், தமிழகத்தைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி, தன் குழந்தையுடன் போஸ் கொடுத்துள்ளார். ‘A Beautiful Body’ என்ற தலைப்பில் அந்த ஆல்பம் உருவாகியிருக்கிறது.  ஜேட் பியல் என்ற பிரபல புகைப்படக் கலைஞர் தனது வாழ்நாள் புராஜெக்டாக உருவாக்கியிருக்கும் இந்த ஆல்பம், பெண்கள் தற்போது உலகில் அனுபவிக்கும் பிரச்னைகள், வன்கொடுமைகளைக் கடந்து, எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் இன்றி தங்களது இயற்கையான அழகை உணர்ந்து வாழ வேண்டும் என்பதை மையமாகக் கொண்டிருக்கிறது.

29-1446119220-kasthurihot-600.jpg

 இந்த புகைப்படத் தொகுப்புகளுக்காக சுமார் ஒரு லட்சம் பெண்களுக்கும் மேல் ஜேட் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அவர்களின் உணர்வுகள், அனுபவங்கள் என அனைத்தும் அந்தப் புத்தகத்தில் பகிரப்பட்டுள்ளன. மேலாடையின்றி தன் குழந்தையை அணைத்துக் கொண்டிருக்கும் அந்தப் படங்களில் துளி ஆபாசம், கவர்ச்சி, விரசம் என எதுவும் இல்லை. பசுமையான பள்ளத்தாக்கு, சலசலத்து ஓடும் நதி என இயற்கையை தரிசிக்கும் அழகுதான் அப்படங்களில் வெளிப்படுகிறது.

jadee.jpg

இந்தப் பார்வையில் பெண்கள் உடல்கள் எப்போதும்  மதிக்கப்பட, கொண்டாடப்பட வேண்டும் என்பதே ஜேட் பியலின் எண்ணம்! ’தனது புகைப்படக் கருவியில் எப்போதும் உண்மைகளைப் படம்பிடிப்பதே நோக்கம்’ எனக் கூறுகிறார் ஜேட்.  

jade_photographer.jpg

http://www.vikatan.com/news/article.php?aid=54417

 

Link to comment
Share on other sites

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.
மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,
"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்" என்கிறது.


மூவருக்கும் ஆச்சரியம்!
உடனே கேஷியர் முந்திக்கொண்டு,
"நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார்.
பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.


அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…
"அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார்.
அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.


கடைசியாக மேனேஜர்,
"நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம்.
அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,
"ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"
:)

Link to comment
Share on other sites

12189454_935515683163793_423348624123285

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் டிமிட்ரி மச்கரெனாசின் பிறந்தநாள்.
தனது தாத்தா வழியாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் இவர்.

Link to comment
Share on other sites

ஹென்றி டூனன்ட் நினைவு தினம் - சிறப்பு பகிர்வு

 

அக்டோபர் 30, செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டூனன்ட் நினைவு தினம் இன்று

ஹென்றி டூனன்ட் என்கிற ஒப்பற்ற மனிதர் மறைந்த தினம் இன்று. சுவிட்சர்லாந்து நாட்டில் மிகப்பெரிய செல்வவளம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் இவர் ;இளம் வயதிலேயே வியாபாரத்தில் ஆர்வம் கொண்டு இருந்தவர்;வடக்கு ஆப்ரிக்காவில் மிகப்பெரிய ஒரு முதலீட்டு திட்டத்தோடு அங்கே நீர்வள பயன்பாட்டு உரிமையை பெறுவதற்காக கிளம்பினார்.  அங்கே ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்த பிரான்ஸ் தேசத்து மன்னரை சந்திக்க போனார். அங்கே  போரில் எப்படியெல்லாம் வீரர்களும் மக்களும் துன்பப்படுகிறார்கள் என பார்த்து மனம் நொந்து போனார்.

hendry.jpg

போரில் துன்பப்படும் ,காயப்படும் ஜீவன்களை காப்பாற்ற ஒரு நடுநிலையான அமைப்பை உண்டாக்கி காயப்பட்டவர்களின் உயிர் காக்க,உதவி செய்ய உருவாக்க வேண்டும் என அவர் எடுத்த முன்னெடுப்பு தான் செஞ்சிலுவை சங்கம்;தன் ஒட்டுமொத்த வருமானத்தையும் போட்டு அதை நடத்தினார்; பல்வேறு நாடுகளை அதில் இணைத்தார் .நடுவே பிசினஸ் படுத்து தொலைத்தது;எல்லாம் போனது-பிச்சைக்காரன் போல வாழ்வு வாழ்ந்தார்-எங்கே இவர் என்றே யாருக்கும் தெரியாது.மனிதர்
இறந்தே போனார் என பலரும் நினைத்தார்கள்.

அவர் வரிகளிலேயே பாருங்கள்," நான் ஓரிரு ரொட்டித்துண்டுகளில் வாழ்கிறேன். என்னுடைய சாயம் போன கோட்டை செஞ்சிலுவை சங்கத்துக்கு உதவி கேட்க போகும் பொழுது மையால் கருப்பாக்கி கொள்கிறேன்; எங்கேனும் இருக்கும் கதவுகளின் ஓரமாக [படுத்து இரவில் தூங்கிக்கொள்கிறேன்.

முதல் நோபல் பரிசு அறிவிக்கபட்ட பொழுது அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.அதையும் முழுக்க செஞ்சிலுவை சங்கம் சிறப்பாக செயல்பட கொடுத்துவிட்டார்  ஒரே ஒரு அறையில் அனாதையாக வாழ்ந்தார் ; தனியாளாக தன் அறையில் இறந்து போனார். எனினும் இன்றைக்கும் பலபேரின் உயிர்களை காப்பாற்றி அவரின் கனவை நிலைபெற செய்து இருக்கிறது செஞ்சிலுவை சங்கம்;

அதுதானே வெற்றி

http://www.vikatan.com/news/article.php?aid=20807

Link to comment
Share on other sites

கனடாவின் ‘ப்ரைம் மிஸ்டர்'

 
prime_2602713h.jpg
 

இளமைத் துடிப்பு, நவநாகரிகம், புதுமை, முற்போக்கு இவை எல்லாம் இணைந்த ஒரு பிரதமர் கிடைத்தால் எப்படி இருக்கும்? நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அதற்கு நீங்கள் கனடாவில் இருக்க வேண்டும்!

ஆம், கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள ஜஸ்டின் ட்ரூடோதான் மேலே சொல்லப்பட்டிருக்கும் அத்தனை தன்மைகளும் கொண்டவர். அப்படி அவர் பதவியேற்கும் பட்சத்தில், கனடாவின் அரசியல் வரலாற்றில், மிக இளம் வயதில் பிரதமராகப் பதவியேற்ற‌ இரண்டாவது நப‌ர் இவர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது இன்னும் ஸ்பெஷல்.

1971-ல் பிறந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அரசியல் புதிதல்ல. அவருடைய அப்பா பியர் ட்ரூடோ கனடாவின் 15-வது பிரதமர். ஜஸ்டின் ட்ரூடோ நான்கு மாதக் குழந்தையாக இருந்தபோது, அதாவது 1972-ல், அவர் கனடாவின் வருங்காலப் பிரதமராக ஆவதற்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்தவர் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. அமெரிக்காவின் அப்போதைய பிரதமர் நிக்ஸன்தான்.

ஆங்கில இலக்கியமும் கல்வியியல் படிப்பும் படித்த ஜஸ்டின் ட்ரூடோ ஆச்சர்யமூட்டும் விஷயங்களின் கலவை.

2000-ல் தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகுதான் ஜஸ்டின் அரசியலில் தீவிரம் காட்டினார். அவர் சார்ந்திருந்த ‘தாராளவாதக் கட்சி’ 2011 தேர்தலில் பழமைவாதக் கட்சியிடம் தோல்வியடைந்திருந்தது. அப்போது ஒரு தர்ம காரியத்துக் காக நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் பழமைவாதக் கட்சியின் உறுப்பினரை ஜஸ்டின் தோற்கடித்தார்.

குத்துச்சண்டை மட்டுமல்ல தர்ம காரியத்துக்காக மாடலிங்கும் செய்திருக்கிறார். கூடுதலாக, உடலில் 'டாட்டூ' இட்டுக்கொண்ட‌ முதல் பிரதமரும் கனடாவுக்கு இப்போது கிடைத்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்துவிட்டு இவர் ஒரு மாடலாக இருக்கத்தான் முடியும், நல்ல பிரதமராக இருக்க முடியுமா என்றெல்லாம் கேள்வி எழுந்திருக்கிறது. அதுவும் முடியும் என்பதைத் தன் முற்போக்கான கருத்துக்கள் மூலம் நம்பிக்கை அளிக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ.

குத்துச்சண்டையில் ஆர்வமுள்ள வராகவும், ஆணழகராக இருந்தாலும் பெண்ணியத்துக்கு ஆதரவானவர் ஜஸ்டின். “பெண்கள் தங்கள் உடலை என்ன செய்துகொள்ள வேண்டும் என்பதைப் பெண்களிடமே விட்டுவிட வேண்டும். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தினர் தலையிடக் கூடாது” என்று ஜஸ்டின் கூறியிருக்கிறார்.

ஜஸ்டினுடைய முற்போக்கு எண்ணங்களுக்கு முன்னுதாரணம் அவரது தந்தைதான். ஆம், கனடா கண்ட ஆராவாரமிக்க, அறிவுஜீவி அரசியல்வாதிகளுள் ஒருவர் அவர். விவாகரத்து, தன்பாலுறவு, கருக்கலைப்பு போன்றவை தொடர்பான புரட்சிகரமான சட்டங்களை இயற்றியவர் அவர். அவரது வழியில் ஜஸ்டினும் செல்வார் என்பதே அவரது வெற்றிக்கான காரணங்களுள் ஒன்று.

அவர் குறித்த ஒரு வீடியோவைப் பார்க்க இங்கே சொடுக்கவும்:

http://tamil.thehindu.com/society/lifestyle/கனடாவின்-ப்ரைம்-மிஸ்டர்/article7821958.ece

Link to comment
Share on other sites

12189963_936008999781128_146832529238367

முன்னாள் இந்தியப் பிரதமர் (இன்று வரை இந்தியாவின் ஒரே பெண் பிரதமர்) இந்திரா காந்தி அவர்களது நினைவுதினம்.

இவர் தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்கக வேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கான காரணங்களை தேடுவதும் இளைஞர்களை தூண்டி  விடுவதும் தமிழரசு கட்சியின் கைவந்த கலை என்பது இலங்கை அரசியலை புரிந்து கொண்ட அனைவருக்கும் தெரியும்.  பொதுமக்களும் இளைஞர்களும் ஆர்பட்டதில் ஈடுபட்டார்கள் என்று கூறப்பட்டாலும் அவர்களை கொம்பு சீவி விட்டது தமிழரசு கட்சியே என்பது வெள்ளிடை மலையாக தெரியும்.  பலகலை கழகம் திருகோணமலையில் அமைத்திருந்தால் அது  தமிழரின் முழுகட்டுப்பாடில் இருந்திருக்காது என்ற ஜதார்த்தத்தை கூட புரிய முற்படவில்லை.  அப்படியே அங்கு திறந்திருந்தாலும்  தமிழரின் கலாச்சார தலைநகரை புறக்கணித்து சிங்கள ஆக்கிரமிப்புக்காக திருகோணமலையில் பல்கலை கழகம் திறந்ததாக புரட்டு கூறி பிரச்சாரம் செய்திருப்பார்கள் இந்த தமிழரசு கட்சியினர் என்பது தமிழரசு கட்சியின் செயல்களை பார்தவர்கள் அறைவருக்கும் புரியும். 
    • இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மொட்டு கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்த பல முயற்சிகள் எடுத்து வருகின்றார். முதலாவதாக பாராளுமன்றத் தேர்தலையே நடத்த  வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய  பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் சகல முயற்சிகளையும் தவிடு பொடியாக்கி விட்டார் ஜனாதிபதி ரணில்.  கட்சியை ஆரம்பித்ததிலிருந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பல மறைமுக பணிகளை ஆற்றிய பஸில் ராஜபக்ச தனது தவறான கொள்கைகளால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றார். கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக்கியதே மகிந்தவும் பஸிலும் செய்த தவறுகள். அதை நியாயப்படுத்துவதற்காக கோட்டாபய அரசாங்கத்தில் மகிந்த பிரதமராகவும் பஸில் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்று மக்களை படுகுழிக்குள் தள்ளினர். கோட்டாபய ராஜபக்ச எடுத்த சில முடிவுகளை தட்டிக்கேட்க முடியாது மகிந்த விளங்கினார். ஏனென்றால் அவரது மகன் நாமலுக்கு கோட்டாபய விருப்பிமில்லாமலேயே அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை வழங்கினார். மறுபக்கம் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக விளங்கிய பஸில், மகிந்த காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற பதவியில் அமர்ந்து அனைத்து அமைச்சுக்களையும் ஆட்டி வைத்தது போன்று செயற்பட ஆரம்பித்தார். இறுதியில் அனைவரையும் பதவியிறக்க அவர்களுக்கு வாக்களித்த மக்களே வீதிக்கு இறங்கினர். இந்நிலையில் மீண்டும் பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்பும் முயற்சிகளில் கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ச கடும் போராட்டம் செய்து வருகின்றார். தனது மகன் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மண்விழுந்து விட்டதால் குறைந்தது பிரதமராகவாவது ஆக்கி விட வேண்டும் என்று முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். அதற்காக கட்சியில் உயர் நிலை பதவியில் அவரை அமர்த்தி அழகு பார்க்க முடிவு செய்தார். அதன் படி கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தில் நாமல் ராஜபக்ச கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். எனினும் அதற்கு ஆப்பு வைக்கும் முகமாக மகிந்தவின் நெருங்கிய ஆதரவாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ‘நாமலுக்கு ஜனாதிபதியாவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது’ ஊடகங்களுக்கு கருதுத்து தெரிவித்து விட்டார். இது மகிந்தவுக்கும் நாமலுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரசன்னவின் கருத்தை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். சுதந்திர கட்சியின் தலைவராக மகிந்த இருந்த காலத்தில் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட பலர் தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ளனர். இடையில் அரசியலுக்கு வந்த நாமல் ராஜபக்சவை அடுத்த மகிந்தவாக ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. மிக முக்கியமாக பஸில் ராஜபக்சவே நாமலை எதிரியாகத்தான் பார்க்கின்றார்.  மகிந்த அரசியலில் இருக்கும் வரை தான் நாமலுக்கு மரியாதை. அவர் ஓய்வு பெற்று விட்டால் கட்சிய. பஸில் ஆக்ரமிப்பார் அல்லது கலைத்து விடுவார். எனவே தள்ளாட்டத்துடன் பாராளுமன்றில் வலம் வருகின்றார் மகிந்த. தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் ஊடகங்களுக்கு கூறி வருகின்றார்.  பொதுஜன பெரமுனவின்  தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டவுடன் நாமல் ராஜபக்ச தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டுள்ளார். தனது நடை உடை பாவனை மற்றும் தலை அலங்காரம் அனைத்திலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். எந்த உடை அணிந்தாலும் மறக்காமல் சிவப்பு சால்வையை கழுத்தில் போட்டுக்கொள்கின்றார்.  தன்னுடன் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் கூட்டங்களை நடத்துகின்றார். கம்பஹா மாவட்டம் பஸிலின் கட்டுப்பாட்டில் இருந்தது. அரகலய போராட்டத்துக்குப்பின்னர் , மொட்டு கட்சியில் யார் சென்றாலும் மக்கள் அக்கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. அம்மாவட்டத்தில் மொட்டு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் மீண்டும் கட்சியை கட்டியெழுப்பும் முழுமூச்சில் இறங்கியுள்ளார். ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. முன்னாள் தேசிய அமைப்பாளர் பஸிலே இதற்கு முட்டுக்கட்டை போடக்கூடும். நாமலின் கூட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு அவர் உத்தரவு போடலாம். மகன் நாமலை அரசியலில் உச்ச இடத்துக்கு கொண்டு செல்வதற்கு மகிந்த எடுத்த இறுதி முயற்சியே தேசிய அமைப்பாளர் பதவி. ஆனால் மகிந்த தனது ஆட்சி காலத்தில் தனது புதல்வர்களின் சுகபோக வாழ்வு, ஆடம்பரம், வீண் செலவு போன்றவற்றை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்.  அந்த ஆடம்பர வாழ்க்கையின் வீடியோக்கள் படங்கள் இப்போது வலம் வந்து நாட்டு மக்களை எரிச்சலில் தள்ளியுள்ளன. எனவே அதற்கு நாமல் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.  எல்லாவற்றையும் விட ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயாராகும் ரணில் விக்ரமசிங்க இந்த நகர்வுகளை அவதானித்துக்கொண்டிருக்கின்றார். எந்த சந்தர்ப்பத்திலும் அவர் மகிந்த தரப்பினரை எதிர்கால அரசியலில் ஊக்குவிக்க விரும்பாதவராகவே உள்ளார். தேசிய அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ள நாமலுக்கு இந்நாட்டின் தேசிய அந்தஸ்த்துள்ள ஒரு தலைவராக உருவெடுப்பது சவாலான காரியம் என்றே கூறத் தோன்றுகிறது.  https://www.virakesari.lk/article/180916  
    • தமிழ் - சிங்கள புத்தாண்டு முடிவடைந்த உடனேயே அனைத்து அரசியல் கட்சிகளும் மே தினத்தில் தத்தமது மக்கள் செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக செயற்படத் தொடங்கியுள்ளன. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கொண்டாடப்படுகின்ற மே தினம் இலங்கையில் மாத்திரமன்றி பல நாடுகளிலும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.   உலகில் நாடுகளுக்கு இடையிலான மேலாதிக்க மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பெரும்பாலும் வல்லரசு நாடுகள், தனக்கு எதிரான நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகார மேலாதிக்க போக்குடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தடை விதிப்பது மாத்திரமன்றி உலக பொருளாதார ஒழுங்கிலிருந்தும் எதிரி நாடுகளை தனிமையப்படுத்துவதன் ஊடாக வல்லரசு நாடுகள் தமது மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இவ்வகையான முதலாளித்துவ செயற்பாடுகளினால் தொழிலாளர் வர்க்கத்தினரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 19ஆம் நூற்றாண்டில் பெரும் தத்துவ மேதையாக விளங்கிய கார்ல் மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆதரவாக பல தத்துவங்களை எடுத்துரைத்தார். அத்தத்துவங்ளையே இடதுசாரி கோட்பாடுகள் என்றும், அக்கோட்பாடுகளை பின்பற்றும் நாடுகளை கம்யூனிச நாடுகள் என்றும் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றன. 'மனித உழைப்பின்றி இந்த உலகில் எதுவுமே நிகழ முடியாது. இந்த உலகில் அனைத்தும் இயற்கையாக தோற்றுவிக்கப்பட்டவையாகும். மனிதர்கள் வாழ்வதற்கும், இன்பம் - துன்பம் என்பவற்றை உணர்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் காரணமாக அமைந்தது, மனித உழைப்பே ஆகும். இந்த 'உழைப்பு' இன்று மனிதர்களை அடிமைப்படுத்தும் விலங்காக மாற்றமடைய வைத்துள்ளது.   உலகத் தொழிலாளர்களே உங்கள் உழைப்பு எனும் பெரும் மூலதனத்தைக் கொடுத்து, அதற்குப் பிரதிபலனாக உங்களுடைய உரிமைகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள். நீங்கள் இழப்பதற்கு கைவிலங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. அதேநேரம் நீங்கள் ஒன்றிணைந்தால், ஒரு பொன்னுலகம் எதிர்காலத்தில் சாத்தியப்படும்' என்று உழைப்பாளிகள் சுரண்டப்படுவதை எதிர்த்து தத்துவ மேதை கார்ல் மார்க்ஸ் குரல் கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதலாளித்துவத்துக்கு எதிராக பல கிளர்ச்சிகள் தொடங்கின. இதனடிப்படையில் 1986ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் மாத்திரமே வேலை செய்ய முடியும் என்ற கோஷத்துடன், ஐக்கிய அமெரிக்காவில் பல்லாயிரம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வீதிக்கிறங்கி போராடினர். இப்போரட்டத்தின் 3ஆம் நாள் இறுதியில், இனந்தெரியாத கூட்டத்தினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல், தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பாரியதொரு கலவரத்துக்கு வித்திட்டது. இதன் இறுதியில் 11 தொழிலாளர்கள் இறந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர். இதுவே 1989ஆம் ஆண்டு முதல் சர்வதேச தொழிலாளர் தினமாக உலக நாடுகளால் கொண்டாடப்படுகிறது. இலங்கையின் ஆரம்ப காலகட்டத்தில் மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தினால் முதலாளித்துவ கோட்பாடுகள் அதிகம் பின்பற்றப்பட்டாலும், தொழிலாளர் வர்க்கத்துக்கு சார்பான நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன. இலங்கையின் முதலாவது மே தின ஊர்வலம், 1927ஆம் ஆண்டில் தொழிற்சங்க தலைவரான குணசிங்க தலைமையில் இடம்பெற்றது.  அதன் பின்னரே 1956ஆம் ஆண்டில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கருதி அன்றைய தினத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க பொது விடுமுறையாக அறிவித்தார். 1891ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி பிறந்த தொழிற்சங்கவாதியான ஏ.ஈ. குணசிங்க, தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். இவரின் காலப்பகுதியிலேயே புகையிரத வேலைநிறுத்தம் மற்றும் துறைமுக வேலைநிறுத்தம் போன்ற வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. அநேக வேலைநிறுத்தங்கள் தோல்வியில் முடிந்தாலும் ஆங்கிலேயருக்கு எதிராக முக்கியமான சில வேலைநிறுத்தங்களை முன்னெடுத்து வெற்றி பெற்றிருந்ததுடன் இவரே இலங்கையின் தொழிலாளர் இயக்கங்களின் தந்தையாகவும் அறியப்படுகிறார். இவ்வாறு உலக வரலாற்றிலும், இலங்கையின் வரலாற்றிலும் தொழிலாளர்கள் தினம்  போற்றுதலுக்குரியதாக அமைந்தாலும், தற்போதைய காலப்பகுதியில் அரசியல் செல்வாக்கினை காண்பிக்கும் மேடையாக மாற்றம் பெற்றுள்ளமை வேதனைக்குரிய விடயமாகிறது. முதலாளித்துவம், சம உடமை போன்ற கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, அரசியல் நலன் சார்ந்த மே தினத்தில் கூட்டத்தை நோக்கி தேசிய அரசியல் கட்சிகள் அனைத்து போட்டி போட்டுக்கொண்டு தலைநகர் கொழும்பில் இடங்களை ஒதுக்கிக்கொள்ள போராடுகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக்கூட்டம்  கொழும்பு - மருதானை சந்தியில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு கோரப்பட்ட இடம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இம்முறை மே தினத்துக்கு ஒரு இலட்சத்துக்கு அதிகமான ஆதரவாளர்களை கொழும்பு அழைத்து வரலாற்றில் என்றும் இடம்பெறாத வகையில் மே தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக உள்ள எப்.ஆர். சேனாநாயக்க வீதியை பெற்றுத்தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த வருடம் மக்கள் விடுதலை முன்னணி அந்த இடத்தில் மே தின கூட்டத்தை நடத்தியிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த கோரிக்கைக்கு ஆரம்பத்தில் எவ்விதமான எதிர்ப்புகளும் அதிகாரிகளிடமிருநது வெளியாக வில்லை. ஆனால் இம்முறையும் மே தின கூட்டத்தை நடத்த எப்.ஆர். சேனாநாயக்க வீதியை தருமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது. மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கெம்பல் பார்க் மைதானத்தில் நடத்துவதற்கும் அனுமதி கோரியுள்ளது. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் மே தின கூட்டத்தை நடத்த எப்.ஆர். சேனாநாயக்க வீதியை கோரியுள்ளமையினால் இருதரப்புக்குமே குறித்த வீதியை அனுமதிக்க முடியாது என்று அறிவித்து  கொழும்பு மாநகர ஆணையாளர், மாற்று இடங்களை பெயரிட்டு அனுப்புமாறு அறிவித்துள்ளார். இவ்வாறு தமது அரசியல் பலத்தை காண்பிப்பதற்காக அரசியல் கட்சிகள் போட்டிப்போடுகின்றதே தவிர, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக அல்ல. மேலும், வருட இறுதிக்குள் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமக்குள் செல்வாக்கை வெளிப்படுத்தவும் இந்த அரசியல் கட்சிகள் மே தின மேடைகளை பயன்படுத்துகின்றன. எனவே, முற்றிலும் அரசியல்மயப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினம், மீண்டும் சுதந்திரத்துக்கான போராட்டமாக மாற்றமடைவது அவசியமாகும்.   https://www.virakesari.lk/article/181851
    • பணம் சேர்க்க  வந்து விடுவார்    கருத்துகள் மட்டும் சொல்ல கூடாது   ஏனெனில் இது அவருடைய பகுதி நேர வேலை   மற்றும் படி தமிழர்கள் எப்படி போனால் அவருக்கு என்ன ?? 
    • ஆர்.பி.என். இலங்கை மக்கள் மாத்திரமன்றி சர்வதேசம் எங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களும் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அன்று தான் ஈவிரக்கமற்ற குண்டுத்தாரிகளால் அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டன.     கிறிஸ்தவ மக்கள் அன்று ஈஸ்டர் ஞாயிறை நினைவுகூரும் வகையில் காலை வேளை   தங்கள் பங்கு தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில், குண்டுகள் வெடித்துச் சிதறின.  வழிபாட்டிலிருந்த பலரும் அடுத்த கணம் கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் பரிதாபகரமாக   மரணித்தனர். முதலில் இந்த சம்பவத்தை நம்பவோ, ஜீரணிக்கவோ முடியவில்லை. தேவாலயத்துக்குள் குண்டு வெடிக்குமா? என்று எண்ணிப்பார்க்க ஒரு கணம் மனம் தயங்கியது. ஆனாலும், தற்கொலைதாரிகள் இந்த ஈனச் செயலில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் எழுப்பியது.  எதற்காக இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்டார்கள்? இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? அவர்கள் ஏன் தேவாலயத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ற கேள்விக்கு ஐந்து வருடங்கள் கடந்தும் இன்னும் சரியான விடை காண முடியாமல் உள்ளது. நடந்தது என்ன? உயிர்த்த ஞாயிறு தினமான 21 ஏப்ரல் 2019 அன்று நாடு முழுவதும் ஆறு இடங்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் சரியாக காலை 8.45 மணிக்கு ஏக நேரத்தில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.  இதில் மூன்று பிரதான தேவாலயங்களான கொச்சிக்கடை புனித அந்தோனியார் கோவில், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மட்டக்களப்பு தேவாலயம் என்பன அடங்கும். மற்றும் கொழும்பில் உள்ள மூன்று சொகுசு நட்சத்திர விடுதிகளான ஷங்க்ரி லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பரி மற்றும் டிராபிகல் இன் ஆகியவற்றிலேயே குண்டுகள் வெடித்தன.   குறித்த குண்டுவெடிப்பில் குறைந்தது 45 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டனர். 500 பேரளவில் காயமடைந்தனர். மூன்று பொலிஸ் அதிகாரிகள்  இதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மட்டக்களப்பு குண்டுவெடிப்பு இடம்பெற்ற குறித்த தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு பண்டிகையைக் கொண்டாட வந்த  குழந்தைகளால் தேவாலயம் நிரம்பி வழிந்திருந்தது. அந்தப் பச்சிளம் குழந்தைகளும் பலியானமை குறிப்பிடத்தக்கது.  தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? தாக்குதல்கள் நடந்த சிறிது நேரத்திலேயே,  உள்ளூர் தீவிரவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) தான் காரணம் என்று கூறினர். மேலும், அதன் முக்கிய உறுப்பினரான சஹ்ரான் ஹாஷிம், குண்டு தாக்குதல்களின் தலைவனாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்து. பின்னர் கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சஹ்ரான் தன்னைத்தானே குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.  நிலைமை இவ்வாறிருக்க, நாட்டில் சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பானவர்கள் பதில் கூறவேண்டும் என்று குரல்கள் பலமாக ஒலித்தன. அந்த சமயம், ஜனாதிபதியாக விளங்கிய மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் இருந்தார்.  மேலும், இந்திய அரசாங்கம் குறித்த சம்பவம் தொடர்பில், இலங்கைக்கு உளவுத் தகவல்களை வழங்கி இருந்ததாகவும், இருந்தும் இலங்கை  அதைக் கணக்கில் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. இந்தநிலையில் தான் நாட்டில் பல்வேறு ஊகங்கள் வெளிவரத் தொடங்கின. நாட்டில் பாதுகாப்பான சூழல் இல்லை என்பதைக் காரணம் காட்டி ஆட்சியை கைப்பற்ற இவர்களை கூலிப்படையாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் துணிந்து எவரையும் விரல் நீட்ட எவருக்கும் திராணி இருக்கவில்லை. ஆயினும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால் ஒரு சிறிய கோட்டுக்கு அருகே பெரிய  கோட்டை போட வேண்டிய தேவை  ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  ஆண்டவன் தீர்ப்பு! இதேவேளை, மக்களின் குருதியால் தேவாலயத்தின் சிலைகளையும் சுவர்களையும் நனைத்து அவர்களின் உயிரை நொடிப்  பொழுதில் குடிக்க காரணமானவர்களை நிச்சயம் ஆண்டவன் தண்டித்தே தீருவான். பாவம் செய்பவர்களுக்கும் சதி செய்பவர்களுக்கும் நிச்சயமாக ஆண்டவன் தீர்ப்பிலிருந்து ஒருபோதும் தப்பிவிட முடியாது என பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வேதனையை கொட்டித்தீர்த்து கண்ணீர் வடித்தனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என்பதே இன்றைய ஒரே நம்பிக்கையாகும். இந்த விதமான பின்னணியில், உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை நினைவுகூரும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நாடளாவிய ரீதியில் அனைத்து தேவாலயங்களிலும் காலை 8. 30 மணிக்கு 2 நிமிட மௌன அஞ்சலி  செலுத்தப்பட்டது. முன்னதாக உரையாற்றிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, 5 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் முன்னைய  அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் உண்மையை தொடர்ந்து மூடி மறைத்து வருவதாக தெரிவித்தார். அத்துடன் தாக்குதலுடன் தொடர்புடைய சிலரைப் பாதுகாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் தாக்குதல் தொடர்பான உண்மை நிலையை வெளியிடக் கோரி பல கடிதங்கள் அனுப்பிய போதிலும் அவற்றுக்கு  இதுவரை  பதில் கிடைக்கவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.  தாக்குதல் தொடர்பில் இதுவரை நடந்தது என்ன?  போதுமான புலனாய்வு தகவல்கள் கிட்டியும் முன்னாள் ஜனாதிபதி தாக்குதலை தடுக்க தவறிவிட்டார் என்று மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கிய அதிகாரிகள் மீது  உயர் நீதி மற்றம் குற்றம் சாட்டியது. முன்னாள் ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து  குரல் எழுப்பி வரும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் 12க்கும் மேற்பட்ட தடவைகள் விவாதிக்கப்பட்டும் எதுவும் நடக்கவில்லை. எதிர்வரும் காலங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் நடை பெற்றாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். சரத் வீரசேகர கூறுவது என்ன? முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பது அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான  சரத் வீரசேகர குண்டுத்தாக்கல் சூத்திரதாரிகளை ஜே.வி.பி.க்கு தெரியும் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கொழும்பில் கடந்த ஞாயிறு   நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், குண்டுத்தாக்குதல் தொடர்பில் தமது ஆட்சியில் நீதியைப்  பெற்றுக்கொடுப்பதாக கூறுகின்றனர். இது வேடிக்கையானது அவர்களின் தேசிய பட்டியல் உறுப்பினராகப் பெயரிடப்பட்டிருந்தவரின் இரு புதல்வர்கள் தற்கொலை குண்டுதாரியாக  செயல்பட்டவர்கள் மற்றும் அவரது மருமகள் தெமட்டகொட வீட்டில் வைத்து குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார்.  மேலும் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக  நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை  பலவீனப்படுத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளார்.   தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 23 ஆயிரம் குற்றச்சாட்டுகளுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இவ்விவகாரத்தில் அரசாங்கத் தரப்பில் எந்த தாமதமும் இல்லை. நீதிமன்ற கட்டமைப்பில் தாமதம் உள்ளது. தாக்குதல்  தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. எனவே புதிய தகவல்  தெரிந்தவர்கள் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதனடிப்படையில், விசாரணைகள் அடுத்த நூறாண்டுக்கு தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் இவர்கள் கூறுவதைப் பார்த்தால் தாக்குதல் தொடர்பில் குறித்து மக்களுக்கு மாத்திரமே தெரியாதுள்ளது.  பாலித ரங்கே என்ன கூறுகிறார்! குறித்த சம்பவம் தொடர்பில் தெரிந்தோ, தெரியாமலோ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்ற குழுவினருக்காக செயற்பட்டுள்ளார். இனியும் அவரிடம் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று ஐக்கிய தேசிய கட்சி பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.  கோத்தாபய ராஜபக்ஷவை நம்பி தாம் ஏமாந்து போனதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலேயே பாலித ரங்கே பண்டார தமது கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார். நம்பிக்கை இழந்தவர்களாக மக்கள் இறுதி முயற்சியாக கத்தோலிக்க திருச்சபை, குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஏதுவாக, வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்மொழிவை சமர்ப்பிக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேசம் எந்தளவு தூரம் கரிசனை கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. உலகின் பல்வேறு மனித உரிமை மீறல்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளமை தெரிந்ததே. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சந்தேகிக்கப் பட்டவர்கள் என எவருக்கும் தாக்குதலின் போதும் அதனைத் தொடர்ந்தும் பதவிக்கு வந்த அரசுகள் உரிய தண்டனை வழங்க முன்வரவில்லை. மாறாக மௌனம் காத்து வந்ததுடன் குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுத்துவிட்டன என்ற விரக்தி ஒன்றே பாதிக்கப்பட்ட மக்களின்  மனதில் ஆழமான  வடுவாக உள்ளது. இருந்தும் இறைவனின் தீர்ப்பு கால தாமதமானாலும்  நிச்சயம் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் என்ற ஒற்றை நம்பிக்கையில் அவர்கள் உள்ளார்கள்.    https://www.virakesari.lk/article/181975  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.