Jump to content

மலேசிய விமானம் எம்.ஹெச். 17 ரஷ்யாவில் செய்த பக் ஏவுகணையால் தாக்கப்பட்டது: விசாரணை அறிக்கை


Recommended Posts

மலேசிய விமானம் எம்.ஹெச். 17 ரஷ்யாவில் செய்த பக் ஏவுகணையால் தாக்கப்பட்டது: விசாரணை அறிக்கை
 

 

 ஹேக்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 ரஷ்யாவில் செய்யப்பட்ட பக் ஏவுகணை வீசித் தான் தாக்கப்பட்டுள்ளது என்று நெதர்லாந்து தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது.

 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 298 பேருடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கிளம்பியது. விமானம் உக்ரைன் வான்வெளியில் செல்கையில் அது பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானம் வெடித்துச் சிதறியது. அதில் இருந்தவர்கள் அனைவரும் உடல் சிதறி பலியாகினர்.

MH17 inquiry to unveil final report into doomed flight

  இந்த சம்பவம் குறித்து நெதர்லாந்து தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது. அந்த குழு இன்று தனது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கை இந்திய நேரப்படி நாளை காலை 4.30 மணிக்கு வெளியிடப்படவிருந்தது. ஆனால் அறிவிக்கப்பட்டதற்கு சில மணிநேரம் முன்பாகவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

மலேசிய விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பக் ஏவுகணை வீசியே தாக்கப்பட்டுள்ளது. ஏவுகணை விமானத்தின் விமானி அறை அருகே ஒரு மீட்டருக்கும் குறைவான தூரத்தில் வெடித்துச் சிதறியது. இதில் விமானி அறையில் இருந்த 3 பேர் பலியாகினர். மேலும் விமானத்தின் முன்பகுதி உடைந்தது. நடுவானில் விமானம் உடைந்தது. அதில் பெரிய பகுதி உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப்படையினர் இருக்கும் இடத்தில் விழுந்தது. உக்ரைன் பயணிகள் விமானத்தை தனது வான்வெளியில் அனுமதித்திருந்திருக்கவே கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

மலேசிய விமானம் தகர்ப்பு : 90 வினாடிகளில் 298 பேர் எரிந்து வீழ்ந்த பரிதாபம்!

 

டந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து, கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.எச்.17 போயிங் 777 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. உக்ரைன் வான் எல்லையில் 33 ஆயிரம் அடி உயரத்தில்  பறந்துகொண்டிருந்தபோது, விமானம் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகினர்.

flight.jpg

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து, நெதர்லாந்து நாட்டின் விசாரணைக்குழு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் அதிர வைக்கின்றன.

விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் அதாவது 10.1 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்திற்கு எதிர்புறமிருந்து 'பக் 'ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. 350 சதுர கிலோ மீட்டர் பகுதிக்குள் இருந்து பக் ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் வந்த ஏவுகணை, விமானத்தின் காக்பிட் பகுதியின் இடது பக்கத்தில் மேற்பகுதியை முதலில் தாக்கியுள்ளது.  இதில் உடனடியாக காக்பிட்டில் இருந்து விமானி, துணை விமானி, வழிகாட்டும் என்ஜீனியர் உள்ளிட்ட 3 பேரும் மரணமடைந்துள்ளனர்.

cok.jpg

அடுத்த 90 வினாடிகளில் விமானம் வானத்திலேயே 2 துண்டாக உடைந்து சிதறியுள்ளது. பயணிகள் அனைவரும் ஏவுகணை தாக்கப்பட்டதால் மரணமடையவில்லை. 33 ஆயிரம் அடி உயரத்தில்  ஆக்சிஜன் பற்றாக்குறையால் மயக்கநிலைக்கு சென்றுள்ளனர். பின்னர் விமானம் வெடித்து சிதறிய போது இறந்திருக்கின்றனர். விமானத்தின் முகப்பு பகுதியை ஏவுகணை தாக்கியதற்கான அடையாளங்கள் 'காக்பிட்' பகுதியை ஆராய்ந்ததில்  உறுதி செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைனின் கிழக்கு பகுதியில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் மலேசிய  விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த அறிக்கையில் பக் ஏவுகணையை ஏவியது யார்? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.  விமானத்தின் உடைந்த பாகங்கள், உக்ரைனில் இருந்து   ரயில் மூலம் நெதர்லாந்தின் கிளிஸ் ரின்ஜென் விமானப்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. விமானம் தகர்க்கப்பட்டு 15 மாதங்களுக்கு பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=53709

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தவன் எதை பாவித்து செய்திருப்பான் என்பது 
எங்கு செய்யபட்டது என்ற செய்தி வந்தபோதே 
எல்லோருக்கும் தெரிந்ததுதானே ....?

இனி என்ன செய்ய போறீங்கள் ?

காணமல் போனது ...?
அதை யார் விசாரிக்கிறது ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.