Jump to content

தோனி–கோஹ்லி சண்டை சரியா


Recommended Posts

தோனி–கோஹ்லி சண்டை சரியா

 
கோஹ்லி

இந்துார்: கேப்டன் தோனி, கோஹ்லி இடையிலான பனிப்போர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கான்பூர் போட்டிக்கான ‘பேட்டிங் ஆர்டர்’ தொடர்பாக இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம்.

இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதில் இருந்து வீரர்கள் மத்தியில் மோதல் போக்கு உருவானது. கேப்டன் தோனிக்கு எதிராக கோஹ்லியை கொம்பு சீவி விட்டார். டெஸ்ட் அணி கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்ட பின், இது இன்னும் அதிகமானது. 

தோனியின் பேச்சுக்கு வீரர்கள், நிர்வாகத்திடம் மதிப்பில்லாமல் போனது. இடையில் என்ன காரணம் என்றே தெரியாமல் தோனியை ரகானே பகைத்துக் கொண்டார். ‘இவருக்கு பேட்டிங்கே வரவில்லை’ என, வெளிப்படையாக சாடினார் தோனி. 

சமீபத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ அணியில் ரகானேவை களமிறக்க மறுத்தார் தோனி. சரி, ஒருநாள் அணியில் சேர்ப்பார் என்று பார்த்தால், அம்பதி ராயுடு, அக்சர் படேல் இருப்பதால், 11 பேர் கொண்ட அணியில் ரகானேவுக்கு இடம் கிடைப்பது கடினம் என, கான்பூர் போட்டிக்கு முதல் நாள் மாலையில் தெரிவித்தார்.

கடைசியில் அம்பதி ராயுடு, அக்சருக்குப் பதில் ரகானே, ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டனர். இது எல்லோருக்கும் வியப்பு தந்தது. 

பின்னணி என்ன:

இதன் பின்னணியில் பலமான வாய் சண்டை இருந்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, தோனியின் பேட்டியை கேள்விப்பட்ட ரவி சாஸ்திரி மற்றும் கோஹ்லி இணைந்து ரகானேவுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

இலங்கைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் ரகானேவை கட்டாயம் சேர்க்க வேண்டும் என, தோனியிடம் ரவி சாஸ்திரி வற்புறுத்தியுள்ளார்.

தோனியிடம் மோதல்:

அப்போது தோனி,‘ எந்த அடிப்படையில் சேர்ப்பது,’ என, கேட்டுள்ளார். இருப்பினும், ரவி சாஸ்திரி தொடர்ந்து விடாப்பிடியாக தெரிவிக்க, வேறு வழியில்லாமல் ஒரு நிபந்தனையுடன் இறங்கி வந்திருக்கிறார் தோனி. 

அதாவது ரகானேவை ‘பேட்டிங் ஆர்டரில்’ 3வது வீரராக களமிறக்கி, கோஹ்லியை 4வதாக செல்லுமாறு கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கோஹ்லி, அந்த இடத்தில் பேட் செய்ய முடியாது என வாக்கு வாதம் செய்தாராம். 

எல்லாம் போச்சு:

இந்த ‘ஈகோ’ பிரச்னை காரணமாகத் தான் நான்காவதாக வந்த கோஹ்லி (11 ரன்) விரைவில் அவுட்டானதாக கூறப்படுகிறது. இந்த மோதலைப் பார்க்கும்  போது, களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வதில் கூட, தோனிக்கு இருந்த உரிமை பறிபோய்விட்டதாக தெரிகிறது.

 

ரசிகர்கள் ஆதரவு

கான்பூர் போட்டிக்கான அணித் தேர்வில் தோனி ஏற்கனவே ஏமாற்றம் அடைந்திருந்தார். இந்நிலையில் இந்திய அணி பீல்டிங் செய்த போது, பவுண்டரி எல்லைக்கு அருகில் நின்றிருந்தார் கோஹ்லி. அப்போது ரசிகர்கள் ‘கோஹ்லி, கோஹ்லி...’ என, உரக்கக் கத்தினர். அவர்களைப் பார்த்த கோஹ்லி, ‘ இன்னும் சப்தமாக சொல்லுங்கள்’ என, அவர்களின் வேகத்தை துாண்டி விட்டார். ஒருவேளை தோனியின் காதுக்கு கேட்கட்டும் என்று நினைத்திருப்பாரோ என்னவோ?. 

http://sports.dinamalar.com/2015/10/1444671800/.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.