Jump to content

கே இனியவன் கவிதைகள்


Recommended Posts

அன்பு மிக்க ....
 
யாழ் இணைய நட்புக்களே ....
உலக தமிழ் ஆர்வலர்களே ...
 
திருக்குறளை கவிதயாக மாற்றி எழுதும் என் சிறு முயற்சியில் முதலில் " இன்பத்துப்பால்" 
பகுதியை கவிதையாக்கி வருகிறேன் அதனை தொடர் பதிவாக ....
யாழ் இணையத்தில் பதியபோகிறேன்  ஆவலர்கள்  படித்து இன்புறுங்கள் ....!!!
நன்றி 
 
xmcjh_204797.jpg
 
 
பெண்ணே நீ யார் ....?

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய 
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில் 
அழகியா ..?

எனக்காகவே இறைவனால் 
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து 
துடிக்குதடி -மனசு 
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
 
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 01
 
 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

 

என்னை தாக்கிவிட்டாய்....!!!

நான் பார்த்த நொடியில் 
பெண்ணே நீ என்னை 
பார்த்தாயே - செத்து
பிழைத்தேனடி -நான் .....!!!

உன் 
கண் கண்ணாக இருந்தால் 
தப்பி இருப்பேன் - பார்வையோ 
அணுமின் கதிர்போல் திரட்டி 
என்னை தாக்கிவிட்டாய்....!!!

அன்பே உன் கண் என்ன ..?
சேனைப்படையா ...?
அத்தனையும் கொண்டு என்னை 
தாக்கி விட்டாய் .....!!!

குறள் - 1082

தகையணங்குறுத்தல்

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு 
தானைக்கொண் டன்ன துடைத்து.

 

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 02

 

கே இனியவன் 

யாழ்ப்பாணம் 
Link to comment
Share on other sites

  • Replies 390
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நல்ல முயற்சி தொடருங்கள்.

மிக்க நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்பத்துப் பாலை உங்கள் பங்குக்குப் பெருக்கும் கவிதை முயற்சி.  வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி தொடருங்கள்.

Link to comment
Share on other sites

இன்பத்துப் பாலை உங்கள் பங்குக்குப் பெருக்கும் கவிதை முயற்சி.  வாழ்த்துகள்.

மிக்க நன்றி நன்றி 

நல்ல முயற்சி தொடருங்கள்.

மிக்க நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

உன் பார்வை ஒன்றே போதும் ...!!!

உயிரை 
எடுக்க யமன் வருவான் 
பாசகயிராய் எறிவான் 
என்றெல்லாம் கேள்வி 
பட்டிருக்கிறேன் ....!!!

மங்கை உன் கண்னை 
பார்த்தபின் தான் 
உணர்ந்தேன் என்னை 
கொல்ல யமன் 
வரத்தேவையில்லை ...
உன் பார்வை ஒன்றே போதும் ...!!!


குறள் - 1083

தகையணங்குறுத்தல்

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் 
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

Link to comment
Share on other sites

கொல்லுகிறதடி உன் பார்வை ...!!!

என்னவே என் உயிரே 
பெண்மையில் தலைவியே ..
பிரபஞ்ச்சத்தில் பேரழகியே ...!!!

உன் பார்வை பட்டால் ...
உயிரையே ஒருகணம் 
உலுப்புகிறது .....
உன் இரக்க குணத்துக்கும் 
அறிவுக்கும் அப்பால் 
கொல்லுகிறதடி உன் பார்வை ...!!!


குறள் - 1084

தகையணங்குறுத்தல்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் 
பேதைக்கு அமர்த்தன கண்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நீ என்ன எனக்கு யமனா ..?

என்னவளே 
நீ பார்த்த நொடியே 
பாசக்கயிறு எறிந்து விட்டான் 
நீ என்ன எனக்கு யமனா ..?

அந்தநொடியில்
என் உடல் முழுதும் படரும்
படர் தாமரைபோல் பரவுவது 
உன் கண்ணா ...?

ராமனை மயக்க வந்த 
மாயமான் போல் -நீ 
மாயபெண்ணா....?
மூன்றையும் கலந்த கலவையா ..?


குறள் - 1085

தகையணங்குறுத்தல்

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் 
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

Link to comment
Share on other sites

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 02)

 

 

06 ) வில்லால்இதயத்தை குற்றுகிறாள்..............!!!

 

கயல் விழியே ....
உன் கண் பார்வை என்னை ..
கொன்றததை விட -உன் 
வில் போன்ற புருவம் தானடி 
என்னை மிரட்டுகிறது ....!!!

 

விழியே என் உயிரே ...!!!
புருவத்தை வில்லாளாக 
படைத்த இறைவன் தானடி 
எனக்கு வில்லன் ....!!!

இறைவா அவள் புருவத்தை 
நேராக்கிவிடு ..
வில்லால்இதயத்தை 
குற்றுகிறாள்..............!!!

+

குறள் - 1086

+

தகையணங்குறுத்தல்

+

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் 
செய்யல மன்இவள் கண்.

 

‍‍‍‍‍‍‍‍‍‍‍

07 ) மெல்ல கொல்லுதடி என்னை ...!!!

 

அடி பெண்ணே ....
கண் அழகில் பித்தனானேன் 
சற்றே எனக்கும் நாணம் வர 
தலைகுனிந்தேன் .....!!!

 

அதிர்ந்தேன் 
உன் திரண்ட மார்பழகில் 
நிமிர்த்த நேரழகில் மருண்டேன் 
இரு குன்றுகளையும் 
மறைக்கும் மெல்லிய ஆடை 
மெல்ல கொல்லுதடி என்னை ...!!!

+

குறள் - 1087

+

தகையணங்குறுத்தல்

+

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் 
படாஅ முலைமேல் துகில்.

 

08 ) ஏங்க வைத்து விட்டதடி ....!!!

 

என்னை கண்டு அஞ்சாத 
ஆண்களும் இல்லை ..
அழகை கண்டு மயங்காத 
மங்கையும் இல்லை .....!!!

 

அத்தனையும் ஒரு நொடியில் 
தூசியாய் பறக்க வைத்துவிட்டாய் 
என் மானிட அழகியே ....!!!
பிறை கொண்ட ஒளி நெற்றியிடம் 
அத்தனையும் நான் இழந்து ...
உன்னிடம் பிச்சை பாத்திரம் 
ஏங்க வைத்து விட்டதடி ....!!!

+

குறள் - 1088

+

தகையணங்குறுத்தல்

+

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் 
நண்ணாரும் உட்குமென் பீடு.

 

 

09) உன் அழகை கெடுக்கிறாய் ................!!!

 

என்னவளே 
ஏனடி என்னை கண்டவுடன் 
புலியை பார்த்த பெண் மானை 
போல் அச்சப்படுகிறாய் ...
உன் அச்சத்தில் இத்தனை 
பேரழகா ....?

 

அகத்தே நாணம் என்ற 
பொன் அழகையும் 
கொண்டவளே .எதுக்கடி 
பொன் நகை அணிகலன் 
அணிந்து உன் அழகை 
கெடுக்கிறாய் ................!!!

+
குறள் - 1089

+

தகையணங்குறுத்தல்

+

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு 
அணியெவனோ ஏதில தந்து.

 

10 ) எப்படி புரிய வைப்பேன் ..?

 

போதையை உண்டவனுக்கும் 
பேதையிடன் மாண்டவனுக்கும் 
தான் தெரியும் இரண்டின் சுகம் ...!!!

 

பேதையே உன்னிடம் கொண்ட
மோகத்தை காதல் புரியாதவனுக்கு 
காதல் உணர்வு இல்லாதவனுக்கு 
எப்படி புரிய வைப்பேன் ..?
தலையிடியும் காச்சலும் 
தனக்கு வந்தால் தானே தெரியும் ...!!!

+

குறள் - 1090

+

தகையணங்குறுத்தல்

+

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

Link to comment
Share on other sites

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 03)

 

என் ஆதியும் அந்தமும் ....!!!

 

என்னவளின் பார்வை
நோயும் மருந்தும் 
அவள் கருமை கொண்ட கரு 
விழிப்பார்வை என் உயிரையே 
கொல்லும் பார்வை ...!!!

 

மறுமுறை பார்வை 
உயிர்த்தெழும் உயிராய் 
உயிர்தெழ வைக்கிறாள் ..
உன் பார்வைதான் 
என் ஆதியும் அந்தமும் ....!!!

குறள் - 1091

குறிப்பு அறிதல்

 

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு 
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

 

12) பார்வையால் ஓராயிரம் இன்பமா ..?

 

உன்னை பார்க்கும் 
போது என்னை பார்க்காதது 
போல் ஏனடி கபடமாடுகிறாய்...?

நீ கள்ளமாய் என்னை கடைக்கண் 
பார்வையால் என்னை பார்த்தது ....?

 

இன்ப சுகத்தில் இன்பமடி 
இதற்கு நிகராய் இந்த உலகில் 
இல்லையடி இன்பம் ......
உன் ஓரக்கண் பார்வையால் 
ஓராயிரம் இன்பமா ..?

குறள் - 1092

குறிப்பு அறிதல்

 

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் 
செம்பாகம் அன்று பெரிது.

 

13) காதலை வளர்க்கும் பன்னீரும் உண்டு .....!!!

 

நான் 
பார்க்கும் போது ....
நாணத்தால் என்னை 
பார்க்காமலும் 
நான் 
பார்க்காத போது அவள் 
என்னை பார்ப்பதும் என்ற 
பார்வை போட்டிதானடி ....?

 

நம் காதல் என்னும் 
பயிருக்கு நீ ஊரறிய 
தண்ணீர் ................!!!
கண்ணில் கண்ணீர் 
மட்டுமல்ல 
காதலை வளர்க்கும் 
பன்னீரும் உண்டு .....!!!

குறிப்பு அறிதல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் 
யாப்பினுள் அட்டிய நீர்.

திருக்குறள் : 1093

 

14) காதலில் கிடைக்கும் மற்றுமொரு சுகமடி .....!!!

 

என்னவளை பார்க்கும் 
வேளையில்
நிலத்தை நோக்கும் 
நெற் கதிர் போல் 
தலை குனிகிறாள் ....!!!

 

நான் அவளை பார்க்காத 
நேரம் பார்த்து என்னை 
பார்த்து வெட்கத்தில் 
தனக்குள்ளே தனியே 
சிரிக்கும் அந்த அழகு 
காதலில் கிடைக்கும் 
மற்றுமொரு சுகமடி .....!!!

திருக்குறள் : 1094

குறிப்பு அறிதல்

 

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 
தான்நோக்கி மெல்ல நகும்.

 

15) விழியை ஓரமாக்கி பார்க்கும்....!!!

 

காதலில் 
வெட்கம் ஒரு அழகு ...!!!
நாணம் 
இன்னுமொரு அழகு ...!!!
என்னவள் என்னை ...
வெட்கப்பட்டு வெட்கபட்டு 
பார்க்கும் அழகு அழகோ 
அழகு ......!!!

 

நேரே பார்க்க முடியாத 
வேளையில் விழியை 
ஓரமாக்கி பார்க்கும் அழகை 
தனக்குள்ளே 
நினைத்து சிரிக்கும் அழகு 
அழகுக்கெல்லாம் சிகரம் ...!!!

திருக்குறள் : 1095

குறிப்பு அறிதல்

 

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் 
சிறக்கணித்தாள் போல நகும்

 

Link to comment
Share on other sites

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 04)

 

16) அகத்தால் எனக்காக‌ நீ துடிக்கிறாய் .....!!!

 

எனக்கு தெரியும் அன்பே
நீ வெளி சொல்லாகவும் 
வெளி மூச்சாகவும் ‍ நீ
என்னை வெறுக்கிறாய் ...!!!

 

உன் கண்ணும் உள்ளமும்
என்னையே நினைக்குதடி
புறத்தால் நீ என்னை 
வெறுப்பதுபோல் நடிக்கிறாய் 
அகத்தால் எனக்காக‌ நீ
துடிக்கிறாய் .....!!!

 

திருக்குறள் : 1096

குறிப்பு அறிதல்

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் 
ஒல்லை உணரப் படும்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 16

rose2.png

 

17) இதுவும் ஒரு உத்திதான் அன்பே ....!!!

 

நீ 
வேண்டுமென்றே திட்டுகிறாய் 
என்னை பிடிக்காதது போல் 
கபடமாடுகிறாய்....!!!

எதிரியை போல் பார்க்கிறாய் 
அத்தனையும் பொய் உயிரே ...

 

மனம் முழுதும் நான் 
நிறைந்திருக்கிறேன் 
உன் நினைவு முழுதும் 
நானே இருக்கிறேன் 
என்னை 
யாருக்கும் விட்டு கொடுக்க 
விரும்பாத மனமே எதிரிபோல் 
பார்க்கும் காதலில் இதுவும் 
ஒரு உத்திதான் அன்பே ....!!!

+

திருக்குறள் : 1097

குறிப்பு அறிதல்

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் 
உறா அர்போன்று உற்றார் குறிப்பு 

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 17

rose2.png

 

18) புரிந்ததடி உன் காதலின் ஆழம் .....!!!

 

என்னை தெரியாததுபோல் 
பேசுகிறாய் ...
என்னை பார்க்காததுபோல் 
போகிறாய் ....
உன் தோழிகளுடன் என்னை 
பிடிக்காதது போல் 
நடிக்கிறாய் ....!!!

 

அத்தனையும் பொய்யாச்சு
கண்ணே - நான் உன்னை 
காதல் கொண்ட கருணை 
பார்வையால் - உன் காதல் 
சிரிப்பில் புரிந்ததடி 
உன் காதலின் ஆழம் .....!!!

+

திருக்குறள் : 1098

குறிப்பு அறிதல்

அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப் 
பசையினள் பைய நகும்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 18

rose2.png

 

19) காதல் ரகசிய நாடகம் ....!!!

 

உன்னை எனக்கு தெரியாது 
எனக்கு உன்னை தெரியாது 
என்று ஒருவரை ஒருவர் 
நோக்கும் மாயவித்தை 
காதலில் தவிர எங்குண்டு ...?

இரண்டு வெறுமையில் 
காதல் மலருமோ ...?

 

முன் அறியாததவர்கள் போல் 
ஏக்கம் கொண்டு பார்ப்பது 
காதலர்கள் இடையே நடக்கும் 
காதல் ரகசிய நாடகம் ....!!!

+

திருக்குறள் : 1099

குறிப்பு அறிதல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் 
காதலார் கண்ணே உள 

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 19

rose2.png

 

20) காதல் கண்களால் பேசும் உயிர் பரிமாற்றம் ...!!!

 

என் 
காதலை என் பார்வையால் 
சொல்லிவிட்டேன் ....!!!
உன் 
காதலை உன் பார்வையால் 
சொல்லி விட்டாய் ....!!!

காதலை பரிமாற்றும் 
ஊடகம் பார்வைதானடி ...!!!

 

இதற்கு மேல் எதற்கு 
வாய் மொழி பரீட்சை ..?
காதல் கண்களால் பேசும் 
உயிர் பரிமாற்றம் ...!!!

+

திருக்குறள் : 1100

குறிப்பு அறிதல்

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 20

Link to comment
Share on other sites

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 05)

 

21) இன்பத்தை அள்ளி தரவல்ல...?

மின்னனை ....
தோற்கப்பண்ணும் ....
ஒளிகொண்ட வளையல்...
என்னவள் கரங்களில் தான் ..
காணமுடியும் .....!!!

 

என் ஐம் பொறிகளை
மயக்கி இன்பத்தை அள்ளி
தரவல்ல வளையல்
என் இல்லத்தாளின் கரங்களில்
தானே கிடைக்க முடியும் ...!!!

 

+

திருக்குறள் : 1101

புணர்ச்சிமகிழ்தல்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 21

rose2.png

22) என்னவளே நீ மட்டும் ..?

 

நோய்கள் ஆயிரம் ஆயிரம்
நோய்க்கான மருந்துகளும்
ஆயிரம் ஆயிரம் ....!!!

 

பொருத்தமான நோய்க்கு
பொருத்தமான மருந்து
அபூர்வமோ அபூர்வம் ...!!!

என்னவளே நீ மட்டும்
என் நோயாகவும் ..
என் மருந்தாகவும்
இருக்கிறாயடி .....!!!

+
திருக்குறள் : 1102

புணர்ச்சிமகிழ்தல்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 22

rose2.png

23) ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!

 

என்
பள்ளியறை துணைவியின்
மெல்லிய தோளை தழுவி
உறங்கும் சுகத்துக்கு
ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!

 

என்னவளின்
மெல்லிய தோளில் தழுவிய
பள்ளியறை உறக்கம்
இன்ப கண்ணன் உருவாக்கிய
இன்ப உலகத்தை காட்டிலும்
இன்பமான உலகம் ...!!!

+

திருக்குறள் : 1103

புணர்ச்சிமகிழ்தல்

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 23

rose2.png

24) எங்கே கற்று கொண்டாளோ..?

 

உன்னை விட்டு விலகினால்
சுடுகிறாய் ....!
அருகில் வந்தால்
குளிர்கிறாய் ..!
அபூர்வமான இந்த தீயை
உள்ளத்தில் ஏற்றியவளே...!!!

 

இயற்கைக்கு மாறான
தீயை எனக்குள் கொண்டுவரும்
இந்த மாய வித்தையை
எங்கே கற்று கொண்டாளோ..?

+
திருக்குறள் : 1104

புணர்ச்சிமகிழ்தல்

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 24

rose2.png

25) எப்போது கூடினாலும் இன்பம்தான் ...!!!

 

சிலவற்றை பார்க்கும் போது ...
இன்பம் கிடைக்கும்...
சிலவற்றை கேட்கும் போது...
இன்பம் கிடைக்கும்...
பொருட்கள் எல்லாம் ...
விரும்பியபோதே ...
இன்பம் தருகிறது ....!!!

 

என்னவளே -நீ
தலை நிறைய பூசூடி
மெல்லிய தொள்ளுடைய
உன்னுடன் எப்போது
கூடினாலும் இன்பம்தான் ...!!!

+

திருக்குறள் : 1105

புணர்ச்சிமகிழ்தல்

வேட் ட பொழுதின் அவையவை போலுமே
தோட் டார் கதுப்பினாள் தோள்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 25

Link to comment
Share on other sites

உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!
Link to comment
Share on other sites

நீ மறுத்தது ...
என் காதலை இல்லை ...
உன் ஊசலாடும் உயிரை ....
ஒருமுறை நினைத்து பார் ....!!!
Link to comment
Share on other sites

என்ன 
கொடுமை உயிரே ....
உனக்குள் நானும் ....
எனக்குள் நீயும் ....
இருந்துகொண்டு பிரிந்து 
விட்டோம் என்கிறாயே ....!!!

கண்ணில் காதலாய் ...
விழுந்தாய் ...
கண்ணீரால் நனைகிறது ...
இதயம் ....!!!
 
Link to comment
Share on other sites

மூச்சு உள்ளவரை ...
நினைவிருக்கும் ஒரே ...
விடயம் காதல் ....
பிரிந்தது இரு முரண்பட்ட ....
உடல்கள் மட்டுமே ....!!!
Link to comment
Share on other sites

நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!!!

 

 

கவிப்புயல் இதும் நன்றாகத்தான் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் அவள் காதலிக்க வில்லையா..!

 

யார் அந்த வைர நெஞ்சம் கொண்ட தேவதை...!

Link to comment
Share on other sites

இன்னும் அவள் காதலிக்க வில்லையா..!

 

யார் அந்த வைர நெஞ்சம் கொண்ட தேவதை...!

:(  :(  :(  :(  :(

Link to comment
Share on other sites

நீ 
என்னை விட்டு பிரிந்தது ....
எந்தளவு உண்மையோ ...
அதைவிட உண்மை ....
நீ என்னை  காதலித்தது....
உன்னிடம் காதல் இல்லை ...
என்று பொய் சொல்லாதே ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன் 
Link to comment
Share on other sites

என் கவிதைக்கும் ...
என் காதலுக்கும் ...
எப்போது உதவுபவன் ...
உயிர் நண்பன் தான் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

என் 
காதலி எனக்கு ....
தந்த காதல் பரிசு ...
துடித்து கொண்டிருந்த.... 
இதயத்தை வலித்து ....
கொண்டிருக்க செய்தது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

உனக்காக உயிர் ....
துறக்கமாட்டேன் ....
ஆனால் உன்னோடு ...
உயிர் துறக்க ஆசை ...
உயிர் வாழ ஆசையில்லை ...
உன்னோடு வாழ ஆசை ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.