Jump to content

கே இனியவன் கவிதைகள்


Recommended Posts

அன்பு மிக்க ....
 
யாழ் இணைய நட்புக்களே ....
உலக தமிழ் ஆர்வலர்களே ...
 
திருக்குறளை கவிதயாக மாற்றி எழுதும் என் சிறு முயற்சியில் முதலில் " இன்பத்துப்பால்" 
பகுதியை கவிதையாக்கி வருகிறேன் அதனை தொடர் பதிவாக ....
யாழ் இணையத்தில் பதியபோகிறேன்  ஆவலர்கள்  படித்து இன்புறுங்கள் ....!!!
நன்றி 
 
xmcjh_204797.jpg
 
 
பெண்ணே நீ யார் ....?

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய 
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில் 
அழகியா ..?

எனக்காகவே இறைவனால் 
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து 
துடிக்குதடி -மனசு 
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
 
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 01
 
 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

 

என்னை தாக்கிவிட்டாய்....!!!

நான் பார்த்த நொடியில் 
பெண்ணே நீ என்னை 
பார்த்தாயே - செத்து
பிழைத்தேனடி -நான் .....!!!

உன் 
கண் கண்ணாக இருந்தால் 
தப்பி இருப்பேன் - பார்வையோ 
அணுமின் கதிர்போல் திரட்டி 
என்னை தாக்கிவிட்டாய்....!!!

அன்பே உன் கண் என்ன ..?
சேனைப்படையா ...?
அத்தனையும் கொண்டு என்னை 
தாக்கி விட்டாய் .....!!!

குறள் - 1082

தகையணங்குறுத்தல்

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு 
தானைக்கொண் டன்ன துடைத்து.

 

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 02

 

கே இனியவன் 

யாழ்ப்பாணம் 
Link to comment
Share on other sites

  • Replies 390
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நல்ல முயற்சி தொடருங்கள்.

மிக்க நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்பத்துப் பாலை உங்கள் பங்குக்குப் பெருக்கும் கவிதை முயற்சி.  வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி தொடருங்கள்.

Link to comment
Share on other sites

இன்பத்துப் பாலை உங்கள் பங்குக்குப் பெருக்கும் கவிதை முயற்சி.  வாழ்த்துகள்.

மிக்க நன்றி நன்றி 

நல்ல முயற்சி தொடருங்கள்.

மிக்க நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

உன் பார்வை ஒன்றே போதும் ...!!!

உயிரை 
எடுக்க யமன் வருவான் 
பாசகயிராய் எறிவான் 
என்றெல்லாம் கேள்வி 
பட்டிருக்கிறேன் ....!!!

மங்கை உன் கண்னை 
பார்த்தபின் தான் 
உணர்ந்தேன் என்னை 
கொல்ல யமன் 
வரத்தேவையில்லை ...
உன் பார்வை ஒன்றே போதும் ...!!!


குறள் - 1083

தகையணங்குறுத்தல்

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் 
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

Link to comment
Share on other sites

கொல்லுகிறதடி உன் பார்வை ...!!!

என்னவே என் உயிரே 
பெண்மையில் தலைவியே ..
பிரபஞ்ச்சத்தில் பேரழகியே ...!!!

உன் பார்வை பட்டால் ...
உயிரையே ஒருகணம் 
உலுப்புகிறது .....
உன் இரக்க குணத்துக்கும் 
அறிவுக்கும் அப்பால் 
கொல்லுகிறதடி உன் பார்வை ...!!!


குறள் - 1084

தகையணங்குறுத்தல்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் 
பேதைக்கு அமர்த்தன கண்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நீ என்ன எனக்கு யமனா ..?

என்னவளே 
நீ பார்த்த நொடியே 
பாசக்கயிறு எறிந்து விட்டான் 
நீ என்ன எனக்கு யமனா ..?

அந்தநொடியில்
என் உடல் முழுதும் படரும்
படர் தாமரைபோல் பரவுவது 
உன் கண்ணா ...?

ராமனை மயக்க வந்த 
மாயமான் போல் -நீ 
மாயபெண்ணா....?
மூன்றையும் கலந்த கலவையா ..?


குறள் - 1085

தகையணங்குறுத்தல்

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் 
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

Link to comment
Share on other sites

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 02)

 

 

06 ) வில்லால்இதயத்தை குற்றுகிறாள்..............!!!

 

கயல் விழியே ....
உன் கண் பார்வை என்னை ..
கொன்றததை விட -உன் 
வில் போன்ற புருவம் தானடி 
என்னை மிரட்டுகிறது ....!!!

 

விழியே என் உயிரே ...!!!
புருவத்தை வில்லாளாக 
படைத்த இறைவன் தானடி 
எனக்கு வில்லன் ....!!!

இறைவா அவள் புருவத்தை 
நேராக்கிவிடு ..
வில்லால்இதயத்தை 
குற்றுகிறாள்..............!!!

+

குறள் - 1086

+

தகையணங்குறுத்தல்

+

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் 
செய்யல மன்இவள் கண்.

 

‍‍‍‍‍‍‍‍‍‍‍

07 ) மெல்ல கொல்லுதடி என்னை ...!!!

 

அடி பெண்ணே ....
கண் அழகில் பித்தனானேன் 
சற்றே எனக்கும் நாணம் வர 
தலைகுனிந்தேன் .....!!!

 

அதிர்ந்தேன் 
உன் திரண்ட மார்பழகில் 
நிமிர்த்த நேரழகில் மருண்டேன் 
இரு குன்றுகளையும் 
மறைக்கும் மெல்லிய ஆடை 
மெல்ல கொல்லுதடி என்னை ...!!!

+

குறள் - 1087

+

தகையணங்குறுத்தல்

+

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் 
படாஅ முலைமேல் துகில்.

 

08 ) ஏங்க வைத்து விட்டதடி ....!!!

 

என்னை கண்டு அஞ்சாத 
ஆண்களும் இல்லை ..
அழகை கண்டு மயங்காத 
மங்கையும் இல்லை .....!!!

 

அத்தனையும் ஒரு நொடியில் 
தூசியாய் பறக்க வைத்துவிட்டாய் 
என் மானிட அழகியே ....!!!
பிறை கொண்ட ஒளி நெற்றியிடம் 
அத்தனையும் நான் இழந்து ...
உன்னிடம் பிச்சை பாத்திரம் 
ஏங்க வைத்து விட்டதடி ....!!!

+

குறள் - 1088

+

தகையணங்குறுத்தல்

+

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் 
நண்ணாரும் உட்குமென் பீடு.

 

 

09) உன் அழகை கெடுக்கிறாய் ................!!!

 

என்னவளே 
ஏனடி என்னை கண்டவுடன் 
புலியை பார்த்த பெண் மானை 
போல் அச்சப்படுகிறாய் ...
உன் அச்சத்தில் இத்தனை 
பேரழகா ....?

 

அகத்தே நாணம் என்ற 
பொன் அழகையும் 
கொண்டவளே .எதுக்கடி 
பொன் நகை அணிகலன் 
அணிந்து உன் அழகை 
கெடுக்கிறாய் ................!!!

+
குறள் - 1089

+

தகையணங்குறுத்தல்

+

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு 
அணியெவனோ ஏதில தந்து.

 

10 ) எப்படி புரிய வைப்பேன் ..?

 

போதையை உண்டவனுக்கும் 
பேதையிடன் மாண்டவனுக்கும் 
தான் தெரியும் இரண்டின் சுகம் ...!!!

 

பேதையே உன்னிடம் கொண்ட
மோகத்தை காதல் புரியாதவனுக்கு 
காதல் உணர்வு இல்லாதவனுக்கு 
எப்படி புரிய வைப்பேன் ..?
தலையிடியும் காச்சலும் 
தனக்கு வந்தால் தானே தெரியும் ...!!!

+

குறள் - 1090

+

தகையணங்குறுத்தல்

+

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

Link to comment
Share on other sites

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 03)

 

என் ஆதியும் அந்தமும் ....!!!

 

என்னவளின் பார்வை
நோயும் மருந்தும் 
அவள் கருமை கொண்ட கரு 
விழிப்பார்வை என் உயிரையே 
கொல்லும் பார்வை ...!!!

 

மறுமுறை பார்வை 
உயிர்த்தெழும் உயிராய் 
உயிர்தெழ வைக்கிறாள் ..
உன் பார்வைதான் 
என் ஆதியும் அந்தமும் ....!!!

குறள் - 1091

குறிப்பு அறிதல்

 

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு 
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

 

12) பார்வையால் ஓராயிரம் இன்பமா ..?

 

உன்னை பார்க்கும் 
போது என்னை பார்க்காதது 
போல் ஏனடி கபடமாடுகிறாய்...?

நீ கள்ளமாய் என்னை கடைக்கண் 
பார்வையால் என்னை பார்த்தது ....?

 

இன்ப சுகத்தில் இன்பமடி 
இதற்கு நிகராய் இந்த உலகில் 
இல்லையடி இன்பம் ......
உன் ஓரக்கண் பார்வையால் 
ஓராயிரம் இன்பமா ..?

குறள் - 1092

குறிப்பு அறிதல்

 

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் 
செம்பாகம் அன்று பெரிது.

 

13) காதலை வளர்க்கும் பன்னீரும் உண்டு .....!!!

 

நான் 
பார்க்கும் போது ....
நாணத்தால் என்னை 
பார்க்காமலும் 
நான் 
பார்க்காத போது அவள் 
என்னை பார்ப்பதும் என்ற 
பார்வை போட்டிதானடி ....?

 

நம் காதல் என்னும் 
பயிருக்கு நீ ஊரறிய 
தண்ணீர் ................!!!
கண்ணில் கண்ணீர் 
மட்டுமல்ல 
காதலை வளர்க்கும் 
பன்னீரும் உண்டு .....!!!

குறிப்பு அறிதல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் 
யாப்பினுள் அட்டிய நீர்.

திருக்குறள் : 1093

 

14) காதலில் கிடைக்கும் மற்றுமொரு சுகமடி .....!!!

 

என்னவளை பார்க்கும் 
வேளையில்
நிலத்தை நோக்கும் 
நெற் கதிர் போல் 
தலை குனிகிறாள் ....!!!

 

நான் அவளை பார்க்காத 
நேரம் பார்த்து என்னை 
பார்த்து வெட்கத்தில் 
தனக்குள்ளே தனியே 
சிரிக்கும் அந்த அழகு 
காதலில் கிடைக்கும் 
மற்றுமொரு சுகமடி .....!!!

திருக்குறள் : 1094

குறிப்பு அறிதல்

 

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 
தான்நோக்கி மெல்ல நகும்.

 

15) விழியை ஓரமாக்கி பார்க்கும்....!!!

 

காதலில் 
வெட்கம் ஒரு அழகு ...!!!
நாணம் 
இன்னுமொரு அழகு ...!!!
என்னவள் என்னை ...
வெட்கப்பட்டு வெட்கபட்டு 
பார்க்கும் அழகு அழகோ 
அழகு ......!!!

 

நேரே பார்க்க முடியாத 
வேளையில் விழியை 
ஓரமாக்கி பார்க்கும் அழகை 
தனக்குள்ளே 
நினைத்து சிரிக்கும் அழகு 
அழகுக்கெல்லாம் சிகரம் ...!!!

திருக்குறள் : 1095

குறிப்பு அறிதல்

 

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் 
சிறக்கணித்தாள் போல நகும்

 

Link to comment
Share on other sites

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 04)

 

16) அகத்தால் எனக்காக‌ நீ துடிக்கிறாய் .....!!!

 

எனக்கு தெரியும் அன்பே
நீ வெளி சொல்லாகவும் 
வெளி மூச்சாகவும் ‍ நீ
என்னை வெறுக்கிறாய் ...!!!

 

உன் கண்ணும் உள்ளமும்
என்னையே நினைக்குதடி
புறத்தால் நீ என்னை 
வெறுப்பதுபோல் நடிக்கிறாய் 
அகத்தால் எனக்காக‌ நீ
துடிக்கிறாய் .....!!!

 

திருக்குறள் : 1096

குறிப்பு அறிதல்

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் 
ஒல்லை உணரப் படும்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 16

rose2.png

 

17) இதுவும் ஒரு உத்திதான் அன்பே ....!!!

 

நீ 
வேண்டுமென்றே திட்டுகிறாய் 
என்னை பிடிக்காதது போல் 
கபடமாடுகிறாய்....!!!

எதிரியை போல் பார்க்கிறாய் 
அத்தனையும் பொய் உயிரே ...

 

மனம் முழுதும் நான் 
நிறைந்திருக்கிறேன் 
உன் நினைவு முழுதும் 
நானே இருக்கிறேன் 
என்னை 
யாருக்கும் விட்டு கொடுக்க 
விரும்பாத மனமே எதிரிபோல் 
பார்க்கும் காதலில் இதுவும் 
ஒரு உத்திதான் அன்பே ....!!!

+

திருக்குறள் : 1097

குறிப்பு அறிதல்

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் 
உறா அர்போன்று உற்றார் குறிப்பு 

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 17

rose2.png

 

18) புரிந்ததடி உன் காதலின் ஆழம் .....!!!

 

என்னை தெரியாததுபோல் 
பேசுகிறாய் ...
என்னை பார்க்காததுபோல் 
போகிறாய் ....
உன் தோழிகளுடன் என்னை 
பிடிக்காதது போல் 
நடிக்கிறாய் ....!!!

 

அத்தனையும் பொய்யாச்சு
கண்ணே - நான் உன்னை 
காதல் கொண்ட கருணை 
பார்வையால் - உன் காதல் 
சிரிப்பில் புரிந்ததடி 
உன் காதலின் ஆழம் .....!!!

+

திருக்குறள் : 1098

குறிப்பு அறிதல்

அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப் 
பசையினள் பைய நகும்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 18

rose2.png

 

19) காதல் ரகசிய நாடகம் ....!!!

 

உன்னை எனக்கு தெரியாது 
எனக்கு உன்னை தெரியாது 
என்று ஒருவரை ஒருவர் 
நோக்கும் மாயவித்தை 
காதலில் தவிர எங்குண்டு ...?

இரண்டு வெறுமையில் 
காதல் மலருமோ ...?

 

முன் அறியாததவர்கள் போல் 
ஏக்கம் கொண்டு பார்ப்பது 
காதலர்கள் இடையே நடக்கும் 
காதல் ரகசிய நாடகம் ....!!!

+

திருக்குறள் : 1099

குறிப்பு அறிதல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் 
காதலார் கண்ணே உள 

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 19

rose2.png

 

20) காதல் கண்களால் பேசும் உயிர் பரிமாற்றம் ...!!!

 

என் 
காதலை என் பார்வையால் 
சொல்லிவிட்டேன் ....!!!
உன் 
காதலை உன் பார்வையால் 
சொல்லி விட்டாய் ....!!!

காதலை பரிமாற்றும் 
ஊடகம் பார்வைதானடி ...!!!

 

இதற்கு மேல் எதற்கு 
வாய் மொழி பரீட்சை ..?
காதல் கண்களால் பேசும் 
உயிர் பரிமாற்றம் ...!!!

+

திருக்குறள் : 1100

குறிப்பு அறிதல்

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 20

Link to comment
Share on other sites

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 05)

 

21) இன்பத்தை அள்ளி தரவல்ல...?

மின்னனை ....
தோற்கப்பண்ணும் ....
ஒளிகொண்ட வளையல்...
என்னவள் கரங்களில் தான் ..
காணமுடியும் .....!!!

 

என் ஐம் பொறிகளை
மயக்கி இன்பத்தை அள்ளி
தரவல்ல வளையல்
என் இல்லத்தாளின் கரங்களில்
தானே கிடைக்க முடியும் ...!!!

 

+

திருக்குறள் : 1101

புணர்ச்சிமகிழ்தல்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 21

rose2.png

22) என்னவளே நீ மட்டும் ..?

 

நோய்கள் ஆயிரம் ஆயிரம்
நோய்க்கான மருந்துகளும்
ஆயிரம் ஆயிரம் ....!!!

 

பொருத்தமான நோய்க்கு
பொருத்தமான மருந்து
அபூர்வமோ அபூர்வம் ...!!!

என்னவளே நீ மட்டும்
என் நோயாகவும் ..
என் மருந்தாகவும்
இருக்கிறாயடி .....!!!

+
திருக்குறள் : 1102

புணர்ச்சிமகிழ்தல்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 22

rose2.png

23) ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!

 

என்
பள்ளியறை துணைவியின்
மெல்லிய தோளை தழுவி
உறங்கும் சுகத்துக்கு
ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!

 

என்னவளின்
மெல்லிய தோளில் தழுவிய
பள்ளியறை உறக்கம்
இன்ப கண்ணன் உருவாக்கிய
இன்ப உலகத்தை காட்டிலும்
இன்பமான உலகம் ...!!!

+

திருக்குறள் : 1103

புணர்ச்சிமகிழ்தல்

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 23

rose2.png

24) எங்கே கற்று கொண்டாளோ..?

 

உன்னை விட்டு விலகினால்
சுடுகிறாய் ....!
அருகில் வந்தால்
குளிர்கிறாய் ..!
அபூர்வமான இந்த தீயை
உள்ளத்தில் ஏற்றியவளே...!!!

 

இயற்கைக்கு மாறான
தீயை எனக்குள் கொண்டுவரும்
இந்த மாய வித்தையை
எங்கே கற்று கொண்டாளோ..?

+
திருக்குறள் : 1104

புணர்ச்சிமகிழ்தல்

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 24

rose2.png

25) எப்போது கூடினாலும் இன்பம்தான் ...!!!

 

சிலவற்றை பார்க்கும் போது ...
இன்பம் கிடைக்கும்...
சிலவற்றை கேட்கும் போது...
இன்பம் கிடைக்கும்...
பொருட்கள் எல்லாம் ...
விரும்பியபோதே ...
இன்பம் தருகிறது ....!!!

 

என்னவளே -நீ
தலை நிறைய பூசூடி
மெல்லிய தொள்ளுடைய
உன்னுடன் எப்போது
கூடினாலும் இன்பம்தான் ...!!!

+

திருக்குறள் : 1105

புணர்ச்சிமகிழ்தல்

வேட் ட பொழுதின் அவையவை போலுமே
தோட் டார் கதுப்பினாள் தோள்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 25

Link to comment
Share on other sites

உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!
Link to comment
Share on other sites

நீ மறுத்தது ...
என் காதலை இல்லை ...
உன் ஊசலாடும் உயிரை ....
ஒருமுறை நினைத்து பார் ....!!!
Link to comment
Share on other sites

என்ன 
கொடுமை உயிரே ....
உனக்குள் நானும் ....
எனக்குள் நீயும் ....
இருந்துகொண்டு பிரிந்து 
விட்டோம் என்கிறாயே ....!!!

கண்ணில் காதலாய் ...
விழுந்தாய் ...
கண்ணீரால் நனைகிறது ...
இதயம் ....!!!
 
Link to comment
Share on other sites

மூச்சு உள்ளவரை ...
நினைவிருக்கும் ஒரே ...
விடயம் காதல் ....
பிரிந்தது இரு முரண்பட்ட ....
உடல்கள் மட்டுமே ....!!!
Link to comment
Share on other sites

நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!!!

 

 

கவிப்புயல் இதும் நன்றாகத்தான் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் அவள் காதலிக்க வில்லையா..!

 

யார் அந்த வைர நெஞ்சம் கொண்ட தேவதை...!

Link to comment
Share on other sites

இன்னும் அவள் காதலிக்க வில்லையா..!

 

யார் அந்த வைர நெஞ்சம் கொண்ட தேவதை...!

:(  :(  :(  :(  :(

Link to comment
Share on other sites

நீ 
என்னை விட்டு பிரிந்தது ....
எந்தளவு உண்மையோ ...
அதைவிட உண்மை ....
நீ என்னை  காதலித்தது....
உன்னிடம் காதல் இல்லை ...
என்று பொய் சொல்லாதே ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன் 
Link to comment
Share on other sites

என் கவிதைக்கும் ...
என் காதலுக்கும் ...
எப்போது உதவுபவன் ...
உயிர் நண்பன் தான் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

என் 
காதலி எனக்கு ....
தந்த காதல் பரிசு ...
துடித்து கொண்டிருந்த.... 
இதயத்தை வலித்து ....
கொண்டிருக்க செய்தது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

உனக்காக உயிர் ....
துறக்கமாட்டேன் ....
ஆனால் உன்னோடு ...
உயிர் துறக்க ஆசை ...
உயிர் வாழ ஆசையில்லை ...
உன்னோடு வாழ ஆசை ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.