Jump to content

இன்று அன்று | 9 அக்டோபர் 1967: புரட்சியின் மறுபெயர் சே!


Recommended Posts

இன்று அன்று | 9 அக்டோபர் 1967: புரட்சியின் மறுபெயர் சே!

che1_2577820f.jpg
 

இளைஞர்களின் நாடி நரம்புகளில் கனல் பாய்ச்சும் பெயர் சே குவேரா. 1928-ல் அர்ஜென்டினாவில் பிறந்த அவர் கியூபா நாட்டு விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தார்.

மருத்துவம் படித்துச் சொகுசான வாழ்க்கை வாழ வாய்ப்புகள் இருந்தும் மக்களின் இன்னல்களைக் களையப் போராளியாக மாறினார். 1954-ல் ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் அவருடைய தம்பி ரவுல் காஸ்ட்ரோவை மெக்சிகோவில் சந்தித்தார். உலகின் சர்வாதிகாரம் படைத்த வட அமெரிக்காவுக்கு ஃபிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் கடும் சவாலாக இருந்தனர். கெரில்லா தாக்குதல் மூலம் பாடிஸ்டாவின் ராணுவத்தை வீழ்த்தி 1959-ல் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபா பிரதமர் ஆனார்.

`லா கபானா’ கோட்டை சிறைச்சாலையின் பொறுப்பாளர் ஆனார். கியூபாவின் நிதியமைச்சராகவும், கியூபா தேசிய வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார். புரட்சிக்கு எல்லைகள் இல்லை என்று நினைத்த சே குவேரா, காங்கோவில் புரட்சிப் படைகளுக்கு உதவினார். பின்னார் பொலிவியாவுக்குச் சென்றார். அங்கு ஆஸ்துமா பாதிப்பால் இருந்தவரை 1967 அக்டோபர் 8-ல் சுற்றிவளைத்தது சி.ஐ.ஏ. பயிற்சி பெற்ற பொலிவியப் படை. பள்ளி ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த சே, அக்டோபர் 9-ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

http://tamil.thehindu.com/opinion/blogs/இன்று-அன்று-9-அக்டோபர்-1967-புரட்சியின்-மறுபெயர்-சே/article7742114.ece?homepage=true

Link to comment
Share on other sites

12109288_490994631067057_537836315406727

இலங்கையில் சே குவேரா !!!
புரட்சியாளர் சே குவேரா 1959ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வேளையில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இது.

தன்னுடைய இரு மொழிபெயர்ப்பாளர்கள், மெய்ப்பாதுகாவலர், இலங்கை காவல் அதிகாரி மற்றும் சேயின் இலங்கை நண்பரோடு, ஹொரணை பகுதியிலுள்ள மொரகஹென எஸ்டேட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

நன்றி: SOORIYAN FM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே புகுந்த நாடு சிறிலங்கா என்ற காரணத்தால் தான் 1971 ஆம் ஆண்டு புரட்சி வெடித்ததோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகளுக்கான விதைகளை நாட்டும் சேகுவேரா எப்போதுமே இருப்பார்.

புரட்சிகளில் நம்பிக்கை உள்ளதால் அவருடைய படம் போட்ட நாலு ரீ-சேர்ட் வைத்திருக்கின்றேன் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகளுக்கான விதைகளை நாட்டும் சேகுவேரா எப்போதுமே இருப்பார்.

புரட்சிகளில் நம்பிக்கை உள்ளதால் அவருடைய படம் போட்ட நாலு ரீ-சேர்ட் வைத்திருக்கின்றேன் :cool:

அவர் பிடித்த பிரான்ட் சுருட்டுத்தான் நான் பாவிக்கிறன் ஆகவே நானும் புரட்சியாளன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே குவேராவின் நினைவு நாள் : அஞ்சலி அர்த்தமுள்ளதாகட்டும்

che_guevara

தனது வாழ்நாளின் பெரும்பகுதியைப் புரட்சியாளனாகவே வாழ்ந்த சேகுவேராவின் அஞ்சலி நாள் இன்று 09.10.2015 ஆகும். 1929 ஆம் ஆண்டு பிறந்து 39 வயதுகள் வரை வாழ்ந்த சே கோட்பாட்டாளர், தத்துவார்த்த ஆசிரியர். மார்க்சியப் போராளி, புரட்சிக்காகரன் எனப் பல பெயர்களில் அறியப்பட்டவர்.


மெக்சிக்கோ சிற்றியில் கியூபப் புரட்சியாளனான பிடல் கஸ்ரோவைச் சந்தித்த போது அவரின் போராட்ட இயக்கத்தில் இணைந்துகொள்கிறார். கியூபப் புரட்சியின் இரண்டாவது முக்கிய தலைவராகச் செயற்பட்ட சே குவேரா, கியூபா அரசியல் பல முக்கிய பதவிகளை வகிக்கிறார்.


1965 ஆம் ஆண்டில் கியூபா அரசின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் வெளியேறி உலகின் ஏனைய நாடுகளில் புரட்சி செய்வதற்காகப் பயணிக்கிறார். ஆபிரிக்க நாடான கொங்கோவில் சே புரட்சிக்கான முயற்சி தோல்வியடைய, பொலீவியாவை நோக்கிச் செல்கிறார். அங்கு மக்கள் மத்தியில் அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கும் போது சீ.ஐ,ஏ உடன் இணைந்து பொலீவியப் படைகள் அவரைக் கைது செய்து கொன்றுபோட்டன,


மத்தியதரவர்க்கக் கல்விச் சமூகத்தில் பிறந்த சே வாசிப்பில் அக்கறை கொண்டவர். சே இன் வீட்டு நூலகத்தில் மட்டும் 3000 நூல்கள் இருந்ததகக் கூறுகின்றனர். மார்க்சியத் தத்துவத்தில் சே இன் ஈடுபாடு அங்கிருந்தே ஆரம்பமாகிறது. 1958 ஆம் ஆண்டு சீ.ஐ.ஏ சே தொடர்பான இரகசிய அறிக்கை ஒன்றைத் தயார் செய்தது. சே, ஒரு அறிவிசீவி என்றும், நன்றாக வாசித்து அறிந்துகொண்டவர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. கியூபாவின் அரசியல் திட்டத்தை முன்வைக்கும் போது, கார்ல் மார்க்சின் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அதனை மேற்கொண்டதாக சே கூறுகிறார்.


குறிப்பான சூழ் நிலைகளில் வெற்றிபெற்ற கியூபப் புரட்சியில் முழுமையான புதிய ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த மக்கள் கட்டமைப்புக்கள் இருக்கவில்லை. தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் ஒரு வகையான தேசிய அரசை நிறுவப் போதுமானதாகவிருந்தது.


1965 ஆம் ஆண்டு உலகத்தின் ஏனைய நாடுகளில் புரட்சிசெய்வதற்காக கியூபாவை விட்டு நீங்கிய சே இன் வழிமுறைகளிலும் அரசியலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.


1960 ஆம் ஆண்டில் மா ஓ சேதுங் மற்றும் சே குவேராவிற்கு இடையேயான உரையாடலில் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தத்தைப் பாராட்டும் சே இன் அரசியல் மாற்றம் தென்படுகிறது.


போராட்ட சக்த்திகளிடமிருந்து சே இன் ஆளுமையை அகற்ற முடியாத சூழலில் சே இராணுவக் கோட்பாடு என்ற போலி நூலை சீ.ஐ.ஏ தயாரித்து வெளியிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.


சே என்ற தனிமனிதனைக் கதாநாயகனாகக் கருதுவதற்குப் பதிலாக சே இன் அரசியலையும் அவரின் இறுதிக்கால அரசியலின் பரிணாம வளர்ச்சியையும் விமர்சன அடிப்படையில் எதிர்கொள்ளும் போதே அப்புரட்சியாளனுக்கான அஞ்சலி அர்த்தமுள்ளதாகும்.

http://inioru.com/meaningful-tribute-of-che/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.