Jump to content

புதிய பயிற்சியாளராக கிளாப் ( Jürgen Klopp) சிலிர்த்தெழுமா லிவர்பூல்?


Recommended Posts

புதிய பயிற்சியாளராக கிளாப் ( Jürgen Klopp) சிலிர்த்தெழுமா லிவர்பூல்?

 

உலகின் சிறந்த கால்பந்து பயிற்சியாளராகக் கருதப்படுப்படும் போர்சியா டோர்ட்மன்ட் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜியான் கிளாப் ( Jürgen Klopp)நேற்று லிவர்பூல் அணியின் புதிய பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதற்காக மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கிளாப் 15 மில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

liv%281%29.jpg

அடுத்த வாரம் டாட்டன்ஹாம் அணிக்கு எதிராக முதல் முறையாக லிவர்பூல் அணி களமிறங்குகிறது. அந்த போட்டிக்கு லிவர்பூல் அணியை முதல் முறையாக வழிநடத்தவுள்ளார் கிளாப். இங்கிலாந்தின் கால்பந்து கிளப்களில் பழமையும் பெருமையும் வாய்ந்த அணி லிவர்பூல். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில்  5 முறை கோப்பையை வென்ற ஒரே  இங்கிலாந்து அணி லிவர்பூல் தான். கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு லிவர்பூல் அணி  தொடர்ந்து சரிவினைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் பரம வைரியான எவர்ட்டன் அணியுடன் டிரா செய்ததும், அணியின் பயிற்சியாளர் பிரண்டன் ரோஜர்ஸ் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த கிளாப்?

கால்பந்து அணியின் மேனேஜர் பதவியென்பது சாதாரமானது அல்ல. ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன், தேர்வுக்குழு தலைவர், பயிற்சியாளர் ஆகிய மூவரும் செய்ய வேண்டிய வேலையை ஒரு மேனேஜர் செய்ய வேண்டும். அதனால் தான் கால்பந்து உலகில் மேனேஜர்களுக்கு என்று தனி மதிப்புண்டு. அத்தகைய தகுதி வாய்ந்த ஒரு பயிற்சியாளரைத்தான் தற்போது  லிவர்பூல் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

clap.jpg

இதற்கு முன்,  ஜெர்மனியின்  போர்சியா டோர்ட்மன்ட் அணியின் மேனேஜராக இருந்த கிளாப். திறமை வாய்ந்த இளைஞர்களைக் கண்டெடுத்து வாய்பளித்தார். உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்ளடங்கிய பேயர்ன் மியூனிச் அணிக்கு தனது இளம் படையால் சவால் விட்டார். இதனால் போர்சியா டோர்ட்மன்ட் அணி ஜெர்மனியின் பந்தஸ்லிகா தொடரில் இரு முறை கோப்பையை வென்றது.

கடந்த  2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரில், டோர்ட்மன்ட் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்று  கிளாப் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இவர் அடைந்த வெற்றிகளைவிட பெரிதும் பேசப்பட்டது, கிளாப்பின் அணியை ஒருங்கிணைக்கும் திறன்தான். லெவண்டோஸ்கி, கோட்சே, ஹம்மல்ஸ், ரியூஸ் என இவர் செதுக்கிய வீரர்கள் ஏராளம். இவர்களை பணபலம் கொண்ட பெரிய கிளப்புகள் வாங்கும்போது, எங்கிருந்தோ ஒரு இளம் திறமையாளரை அந்த இடத்தில் நிரப்பிவிடுவார். திறமைசாலிகளைக் கண்டறிவதில் கிளாப்புக்கு நிகர் கிளாப் தான்.

மீண்டெழுமா லிவர்பூல்

பிரீமியர் லீக்கில் 2013-2014 சீசனில் இரண்டாம் இடம் பிடித்த லிவர்பூல் அணி நட்சத்திர வீரர் சுவாரசை பார்சிலோனாவிற்கு விற்ற பிறகு பெரும் சரிவை சந்தித்தது. பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து பல வீரர்களை வாங்கிய பிறகும், திணறியதே பிரண்டன் ரோஜர்ஸ் வெளியேற்றப்படக் காரணமாய் அமைந்தது. ஆனால் கிளாப்பின் வருகை அதை சரிசெய்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனது புதிய சவால் பற்றி கிளாப் கூறுகையில்,”லிவர்பூல் அணி நிர்வாகம் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. எனக்கென்று ஒரு ஒரு வியூகம்  இருக்கிறது. வெற்றி  முக்கியம்தான். ஆனால் எப்படி வெற்றி பெருகிறோம் என்பதும் முக்கியம். எனது அணி எப்பொழுதும் மனம் முழுதையும் ஆட்டத்தில் செலுத்தியிருக்கும். வீரர்கள் தங்கள் விளையாட்டின் மீதான காதலை ஆட்டத்தில் காட்டுவார்கள்'' என்றார்.

புதிய பயிற்சியாளர் மாற்றம், தொலைந்துபோன லிவர்பூல் அணியின் வெற்றி சரித்திரத்தை மீட்டெடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மோடின்ஹோ, லலானா, பென்டகி, க்ளைன், ஹெண்டர்சன் என திறமை வாய்ந்த இளம் வீரர்களை கிளாப் மேலும் மெருகேற்றி லிவர்பூலை தலைநிமிரச் செய்வார் என்கின்றனர் கால்பந்து  நிபுணர்கள். இந்நேரம் மான்செஸ்டர் யுனைடட், ஆர்சனல், செல்சி போன்ற அணிகள் லிவர்பூலைக் கையாள புதிய வியூகங்கள் வகுக்கத் தொடங்கியிருப்பார்கள்!

http://www.vikatan.com/news/article.php?aid=53510

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜூர்கென் குளோப் இங்கிலாந்தில் நின்று பிடித்தால் உலகின் சிறந்த பயிற்சியாளர்களின் வரிசையில் இடம் பிடிப்பார்.
எனக்கு ஜேர்மனியில் எல்லா விளையாட்டரங்கிற்கும் ரிக்கெற் வாங்காமல் செல்ல அனுமதி உள்ளது.
அந்த வகையில் இவருடைய பொறூசியா அணியின் விளையாட்டுக்களை dortmund  நகரில் அடிக்கடி பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
உண்மையிலேயே ஒரு உணர்ச்சிகரமான பயிற்றுனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
    • 22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது  நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக  இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)  
    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்😏.............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.