Jump to content

இந்திய இராணுவப் பயிற்சியை அறிமுகப்படுத்திய சம்பந்தனின் கட்சியே வன்முறையை ஆரம்பித்துவைத்தது


Recommended Posts

sampanthan_indian_high

இலங்கையில் ‘அகிம்சை வழியை பின்பற்றிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதன் பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வன்முறையை இனியொரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச ‘அகிம்சை’ தின நிகழ்வில் சம்பந்தன் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

மக்கள் அரச வன்முறைகளிலிருந்தும் பயங்கரவாதத்திலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் தாங்கினால் அது வன்முறையல்ல என்பது சம்பந்தனின் அதிகாரவர்க்கம் சார்ந்த அரசியலுக்குத் தெரியாத ஒன்றே. பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்கள் அரச படைகளின் வன்முறைகளால் அழிக்கப்பட்ட போதே மக்கள் அதனை எதிர்கொள்ள முற்பட்டனர். ஆக, அரச படைகளின் வன்முறையை நிராகரித்து மக்களின் தற்காப்பு யுத்தத்தை வன்முறை என அடையாளப்படுத்தும் சம்பந்தனின் இக் கூற்று மக்கள் மீதான வன்முறை.

படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று, விமர்சனம் சுய விமரசனம் என்ற வழிமுறைகள் ஊடாக நகர்ந்து சென்ற மக்களின் தற்காப்பு யுத்தத்தை வன்முறை கலந்த அன்னியர்களின் தாக்குதலாக மாற்றியதில் சம்பந்தன் சார்ந்த கட்சிகே பிரதான பங்குண்டு.

1982 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் இராணுவப் பிரிவான தமிழ்த் தேசிய இராணுவம் என்ற அமைப்பே இந்திய அரசிடம் முதலில் இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டது. வடக்குக் கிழக்கிலிருந்து சில இளைஞர்கள் இராணுவப் பயிற்சிக்கு தென்னிந்தியாவிற்கு சம்பந்தனின் கட்சியால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சந்திரகாசன்சந்திரகாசன்

அவரது கட்சியின் ஆரம்ப கர்த்தாவான எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் புதல்வரான சந்திரகாசன் இந்திய அரசுடன் இராணுவப் பயிற்சிக்காகப் பேச்சு நடத்தியன் பலனாகவே இளைஞர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். தமிழ்ப் பேசும் மக்கள் நடத்திய தற்காப்பு யுத்தத்தை அன்னிய நாட்டின் வன்முறை யுத்தமாக மாற்றியமைக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு சம்பந்தன் சார்ந்த தமிழரசுக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியுமே முதலில் துணை சென்றன.
தமிழரசுக் கட்சியால் இந்திய அரசு எதிர்பார்த்த அளவு இளைஞர்களித் திரட்ட இயலாமல் போன நிலையில், இராணுவப் பயிற்சி ஏனைய அமைப்புக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுடுதலைப் புலிகள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப் புரட்சி அமைப்பு ஆகிய இயகங்களுக்கு இந்திய இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது.

இவ்வாறு இந்திய அரசின் தலையீடே ஈழப் போராட்டத்தில் வன்முறையை அறிமுகப்படுத்தி அதன் பரிணாம வளர்ச்சியை அழித்து, மக்களை விட ஆயுதங்களை வலுவுள்ளதாக மாற்றியது.

இன்றைய அவலத்திற்கு வித்திட்ட அந்த வன்முறையை சம்பந்தன் சார்ந்த கட்சியும் அதன் அரசியலுமே ஆரம்பித்து வைத்தது.

ஆக, வன்முறையை இனி ஆதரிக்க முடியாது என சம்பந்தன் கூறுவது உண்மயானால், அவர் இந்தியாவை இனி ஆதரிக்க முடியாது. இந்தியா ஆரம்பித்த வன்முறையை மக்களுக்கு வெளிப்படையாகக் கூற வேண்டும்.

இந்திய அரச படைகள் வட கிழக்கை ஆரம்பித்து ஆயிரக்கணக்கில் மனித உயிர்களைப் பலியெடுத்துவிட்டு அதே மண்ணில் அகிம்சை தினத்தை நடத்தும் போது வன்முறையை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவரான சம்பந்தன் அங்கு அகிம்சைக்காக உரையாற்றுவது வேடிக்கையானது

http://inioru.com/sampanthans-speech-against-his-own-act/

 

Link to comment
Share on other sites

சம்பந்தர் ஐயா ...

* முதலில் இந்த ரெனா (TNA) என்றால் என்னவென்று தெரியுமா?

* அமிருடன் ரெனாவை உருவாக்கும் முயற்சியில் அன்று தமிழக சட்டசபை விடுதியில் தங்கியிருந்த தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களில் முக்கிய தலைவர்களில் ஒருவரான சம்பந்தர் ஐயா.. உங்கள் பங்கு என்ன?

" திருமலையில் இருந்து இளைஞர்கள் சிலர் மாற்றியக்கங்களுக்கு என்று அழைத்து செல்லப்பட்டு, ரெனாவில் இணைக்கப்பட்டது, சம்பந்தர் ஐயாவிற்கு தெரியாதா?

* ரெனாவிற்கு இந்திய அரசினால் கொடுக்கப்பட்ட பணத்தில் பெரும் பகுதி, கூட்டணியில் சிலருக்குள் பகிரப்பட்டதும்... சம்பந்தர் ஐயாவிற்கு தெரியாதா???

*...

*...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.