Jump to content

இந்திய இராணுவப் பயிற்சியை அறிமுகப்படுத்திய சம்பந்தனின் கட்சியே வன்முறையை ஆரம்பித்துவைத்தது


Recommended Posts

sampanthan_indian_high

இலங்கையில் ‘அகிம்சை வழியை பின்பற்றிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதன் பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வன்முறையை இனியொரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச ‘அகிம்சை’ தின நிகழ்வில் சம்பந்தன் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

மக்கள் அரச வன்முறைகளிலிருந்தும் பயங்கரவாதத்திலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் தாங்கினால் அது வன்முறையல்ல என்பது சம்பந்தனின் அதிகாரவர்க்கம் சார்ந்த அரசியலுக்குத் தெரியாத ஒன்றே. பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்கள் அரச படைகளின் வன்முறைகளால் அழிக்கப்பட்ட போதே மக்கள் அதனை எதிர்கொள்ள முற்பட்டனர். ஆக, அரச படைகளின் வன்முறையை நிராகரித்து மக்களின் தற்காப்பு யுத்தத்தை வன்முறை என அடையாளப்படுத்தும் சம்பந்தனின் இக் கூற்று மக்கள் மீதான வன்முறை.

படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று, விமர்சனம் சுய விமரசனம் என்ற வழிமுறைகள் ஊடாக நகர்ந்து சென்ற மக்களின் தற்காப்பு யுத்தத்தை வன்முறை கலந்த அன்னியர்களின் தாக்குதலாக மாற்றியதில் சம்பந்தன் சார்ந்த கட்சிகே பிரதான பங்குண்டு.

1982 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் இராணுவப் பிரிவான தமிழ்த் தேசிய இராணுவம் என்ற அமைப்பே இந்திய அரசிடம் முதலில் இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டது. வடக்குக் கிழக்கிலிருந்து சில இளைஞர்கள் இராணுவப் பயிற்சிக்கு தென்னிந்தியாவிற்கு சம்பந்தனின் கட்சியால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சந்திரகாசன்சந்திரகாசன்

அவரது கட்சியின் ஆரம்ப கர்த்தாவான எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் புதல்வரான சந்திரகாசன் இந்திய அரசுடன் இராணுவப் பயிற்சிக்காகப் பேச்சு நடத்தியன் பலனாகவே இளைஞர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். தமிழ்ப் பேசும் மக்கள் நடத்திய தற்காப்பு யுத்தத்தை அன்னிய நாட்டின் வன்முறை யுத்தமாக மாற்றியமைக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு சம்பந்தன் சார்ந்த தமிழரசுக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியுமே முதலில் துணை சென்றன.
தமிழரசுக் கட்சியால் இந்திய அரசு எதிர்பார்த்த அளவு இளைஞர்களித் திரட்ட இயலாமல் போன நிலையில், இராணுவப் பயிற்சி ஏனைய அமைப்புக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுடுதலைப் புலிகள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப் புரட்சி அமைப்பு ஆகிய இயகங்களுக்கு இந்திய இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது.

இவ்வாறு இந்திய அரசின் தலையீடே ஈழப் போராட்டத்தில் வன்முறையை அறிமுகப்படுத்தி அதன் பரிணாம வளர்ச்சியை அழித்து, மக்களை விட ஆயுதங்களை வலுவுள்ளதாக மாற்றியது.

இன்றைய அவலத்திற்கு வித்திட்ட அந்த வன்முறையை சம்பந்தன் சார்ந்த கட்சியும் அதன் அரசியலுமே ஆரம்பித்து வைத்தது.

ஆக, வன்முறையை இனி ஆதரிக்க முடியாது என சம்பந்தன் கூறுவது உண்மயானால், அவர் இந்தியாவை இனி ஆதரிக்க முடியாது. இந்தியா ஆரம்பித்த வன்முறையை மக்களுக்கு வெளிப்படையாகக் கூற வேண்டும்.

இந்திய அரச படைகள் வட கிழக்கை ஆரம்பித்து ஆயிரக்கணக்கில் மனித உயிர்களைப் பலியெடுத்துவிட்டு அதே மண்ணில் அகிம்சை தினத்தை நடத்தும் போது வன்முறையை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவரான சம்பந்தன் அங்கு அகிம்சைக்காக உரையாற்றுவது வேடிக்கையானது

http://inioru.com/sampanthans-speech-against-his-own-act/

 

Link to comment
Share on other sites

சம்பந்தர் ஐயா ...

* முதலில் இந்த ரெனா (TNA) என்றால் என்னவென்று தெரியுமா?

* அமிருடன் ரெனாவை உருவாக்கும் முயற்சியில் அன்று தமிழக சட்டசபை விடுதியில் தங்கியிருந்த தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களில் முக்கிய தலைவர்களில் ஒருவரான சம்பந்தர் ஐயா.. உங்கள் பங்கு என்ன?

" திருமலையில் இருந்து இளைஞர்கள் சிலர் மாற்றியக்கங்களுக்கு என்று அழைத்து செல்லப்பட்டு, ரெனாவில் இணைக்கப்பட்டது, சம்பந்தர் ஐயாவிற்கு தெரியாதா?

* ரெனாவிற்கு இந்திய அரசினால் கொடுக்கப்பட்ட பணத்தில் பெரும் பகுதி, கூட்டணியில் சிலருக்குள் பகிரப்பட்டதும்... சம்பந்தர் ஐயாவிற்கு தெரியாதா???

*...

*...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.