Jump to content

ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

200 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

200 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

 
 
 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 200 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இன்று கொழும்பு பீ.சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாயணசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த அணி சார்பில் மிலிந்த ஶ்ரீ வர்த்தன 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் சார்பில் Jomel Warrican 4 விக்கெட்டுக்களையும் டெய்லர் மற்றும் ஹோல்டர் தலா இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி 200 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இதனயைடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது.
Link to comment
Share on other sites

பந்துவீச்சாளர் ஆதிக்கத்திற்கு மத்தியில் மிலிந்த பிரகாசிப்பு
2015-10-23 10:39:28

 

 

பூவா தலையாவுக்குப் பதில் கெறியா? திசேராவா?

 

இலங்கை அணிக்கும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணிக்கும் இடையில் பி. சர­வ­ண­முத்து விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் இரண்­டா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்­டிக்கு முன்­ப­தாக நேற்றுக் காலை சேர் கெறி, மைக் திசேரா ஆகி­யோரின் முக உரு­வங்­களைக் கொண்ட குற்றி பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

12880_Sobers-Tissera-Trophy.jpg

 

 

138 வருட டெஸ்ட் கிரிக்கட் வர­லாற்றில் பூவா? தலையா? என்­ப­தற்குப் பதி­லாக இரண்டு முன்னாள் வீரர்­களின் பெயர்­க­ளுக்­காக குற்றி பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

 

ஏஞ்­சலோ மெத்யூஸ் குற்­றியை சுழற்­றி­ய­போது சேர் கெறி என மேற்­கிந்­தியத் தீவுகள் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் கோரினார்.

னால் குற்றி மைக்கல் திசேராவின் முக உருவத்துடன் திரும்பியிருந்தது.


.................................................................................................................................

 

12880milinda.jpgஇலங்­கைக்கும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கும் இடையில் பி. சர­வ­ண­முத்து விளை­யாட்­ட­ரங்கில் நேற்று ஆரம்­ப­மான “சேர் கெறி - மைக் திசேரா” கிண்­ணத்­திற்­கான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் பந்­து­வீச்­ச­ளார்கள் ஆதிக்கம் செலுத்­தினர்.

 

இப்போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்த இலங்கை அதன் முத­லா­வது இன்­னிங்ஸில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 200 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது.

 

இலங்கை அணியின் வீழ்ச்­சிக்கு பிர­தான கார­ண­மாக இருந்­தவர் சுழல்­பந்­து­வீச்­சாளர் ஜோமெல் வொரிக்கன் ஆவார். 

 

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தியத் தீவுகள் முத லாம் நாள் ஆட்ட நேர முடி­வின்­போது ஒரு விக்­கெட்டை இழந்து 17 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

 

மேற்­கிந்­தியத் தீவு­களின் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளையும் சுழல்­பந்­து­வீச்­சா­ள­ரையும் எதிர்­கொள்­வதில் சிர­மத்தை எதிர் ­கொண்ட இலங்கை துடுப்­பாட்ட வீரர்கள் சீரான இடை­வெளி­களில் விக்­கெட்­களை இழந்த வண்ணம் இருந்­தனர்.

 

 

ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் கௌஷால் சில்வா நான்­கா­வது பந்தில் ஒட்டம் பெறாமல் ஆட்­ட­மி­ழந்­தமை இலங்கை அணிக்கு இடியைக் கொடுத்­தது.

 

அறி­மு­க­வீரர் குசல் ஜனித் பெரேரா, முத­லா­வது டெஸ் டில் சதம் குவித்த திமுத் கரு­ணா­ரட்ன ஆகிய இரு­வரும் இலங்­கையின் மொத்த எண்­ணிக்கை 34 ஓட்­டங்­க­ளாக இருந்­த­போது தலா 13 ஓட்­டங்­க­ளுடன் அடுத்­த­டுத்து ஆட்­ட­மி­ழந்­தனர்.

 

அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் வெகு­நேரம் தாக் குப் பிடிக்க முடி­யாமல் 14 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந் தார். பகல் போசன இடை­வே­ளை­யின்­போது இலங்கை அணி 4 விக்­கெட்­களை இழந்து 59 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்று திக்­கு­முக்­கா­டிக்­கொண்­டி­ருந்­தது.

 

இடை­வே­ளையின் பின்னர் தினேஷ் சந்­திமால் (25 ஓட்­டங்கள்), மிலிந்த சிறி­வர்­தன (68) ஆகிய இரு­வரும் 41 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தி­ருந்­த­போது சந்­திமால் களம் விட்­ட­கன்றார்.

 

குசல் ஜனித் பெரேரா (16), டில்­ருவன் பெரேரா (5), தம்­மிக்க பிரசாத் (7), நுவன் ப்ரதீப் (0) ஆகியோர் பிர­கா­சிக்கத் தவ­றினர். 

 

டெஸ்ட் போட்டி ஒன்றில் முதல் தட­வை­யாக உதவி அணித் தலை­வ­ராக விளை­யா­டிய ரங்­கன ஹேரத் 26 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்தார்.

 

மேற்­கிந்­தியத் தீவுகள் பந்­து­வீச்சில் ஜோமெல் வொரிக்கன் 67 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­க­ளையும் ஜேசன் ஹோல்டர் 22 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கட்­க­ளையும் ஜெரோம் டெய்லர் 50 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.

 

மேற்­கிந்­தியத் தீவுகள் பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய போது முத­லா­வது ஓவரில் ஷாய் ஹோப் 4 ஓட்­டங்­க­ளு டன் வெளியேறினார்.

 

1288016.jpg

 

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றி அணிக்கு வழங்­கப்­ப­ட­வுள்ள சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் -மைக்கல் திசேரா வெற்றிக் கிண்ணத்­துடன் கிண்ணப் பெயரைக் கொண்ட இரண்டு முன்னாள் கிரிக்கெட் விற்­பன்­னர்­களும் காணப்­ப­டு­கின்­றனர். இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் பயன்­ப­டுத்­தப்­பட்ட இரு­வ­ரி­னதும் முகங்­களைக் கொண்ட குற்­றி­யையும் அவர்களது கைகளில் காணலாம்.

..............................................................................................................................................................

ஆட்டநேர முடிவின்போது கிரெய்க் பிரத்வெய்ட் 4 ஓட் டங்களுடனும் தேவேந்த்ரா பிஷு 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

 

வீழ்ந்த ஒரு விக்கட்டை தம்மிக்க பிரசாத் கைப்பற்றினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12880#sthash.rr3UhHzx.dpu
Link to comment
Share on other sites

163 ஓட்டங்களுடன் மேற்கிந்திய அணியை சுழற்றினர் இலங்கை பந்துவீச்சாளர்கள்
2015-10-23 15:31:11

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 163  ஒட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.

 

12891west-indies-Lanka-600.jpg

 

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில்தம்மிக பெரேரா 34 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

தில்ருவன் பெரேரா 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும்  மிலிந்த சிறிவர்தன 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

கொழும்பு பி. சரவணமுத்து அரங்கில் நடைபெறும் இப்போட்டியில்  இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில்  200 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12891#sthash.9XEfOR6E.dpuf
Link to comment
Share on other sites

மேற்கிந்திய தீவுகளுக்கு 244 வெற்றி இலக்கு

மேற்கிந்திய தீவுகளுக்கு 244 வெற்றி இலக்கு

 

 
 

மேற்கிந்திய தீவுகளுக்கும் இலங்கைக்கும் இடையான இரண்டாவது மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 206 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பில் மெத்திவ்ஸ் 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற வேண்டுமானால் 244 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

முன்னதாக இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 200 ஓட்டங்களை பெற்றநிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 163 ஓட்டங்களை பெற்றுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=73790

Link to comment
Share on other sites

இலங்கை - மேற்கிந்திய 2 ஆவது டெஸ்ட்: நான்காம் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது
2015-10-25 20:18:34

இலங்­கைக்கும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக் கும் இடையில் பி. சர­வ­ண­முத்து ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெறும் இரண்­டா ­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியின் நான்காம் நாளான இன்றைய தினம் பெய்த தொடர் மழை கார­ண­மாக ஆட்டம் கைவி­டப்­பட்­டது.

 

12897rain-umpires-600.jpg


இலங்­கையில் முத­லா­வது வெற்­றிக்­காக 244 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு இரண்­டா­வது இன்­னிங்ஸ் துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தியத் தீவுகள், கிரெய்க் ப்ரத்­வெய்ட்டின் விக்­கெட்டை இழந்த சற்று நேரத்தில் மூன்றாம் நாள் ஆட்டம் மழை கார­ண­மாக முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது.


இப் போட்­டியில் திடீர் 'ஹீரோ' வாக பந்­து­வீச்சில் காட்­சி­கொ­டுத்த மேற்­கிந்­தியத் தீவு­களின் கிரெய்க் ப்ரத்வெய்ட் போட்­டியின் மூன்றாம் நாளன்று இலங்­கையின் கடைசி 6 விக்­கெட்­களைக் கைப்­பற்றி தனது அதி சிறந்த பந்­து­வீச்சுப் பெறு­தியைப் பதிவு (29 ஓட்­டங்­க­ளுக்கு 6 விக்­கெட்கள்) செய்­தி­ருந் தார்.


இவர் இந்த டெஸ்டின் முத­லா­வது இன்­னிங்ஸில் பந்து வீசி­யி­ருக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.


இந்த டெஸ்ட் போட்­டிக்கு முன்னர் 23 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டி­யி­ருந்த கிரெய்க் ப்ரத்வெய்ட் 137 ஓட்­டங்­க­ளுக்கு ஒரே ஒரு விக்­கெட்டை வீழ்த்­தி­யி­ருந்தார்.


இலங்­கைக்கு எதி­ராக 1992 ஆகஸ்ட் மாதம் எஸ்.எஸ்.சி. மைதா­னத்தில் எஸ்.எஸ்.சி. மைதா­னத்தில் நடை­பெற்ற முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் ஷேன் வோர்ன் 3 விக்­கெட்ளைக் கைப்­பற்­றி­யதன் மூலம் ஓர் உலக பந்­து­வீச்சு ஹீரோவை உரு­வாக்­கி­யது போல் இன்னும் ஒரு­வரை இப்­போது இலங்கை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றதோ என எண்­ண­வைக்­கின்­றது.


எண்ணிக்கை சுருக்கம்:
இலங்கை 1வது இன்: 200, 2ஆவது இன்: 206
மே. தீவுகள் 1வது இன்: 163, 2ஆவது இன்: 23 க்கு 1 விக். 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12897#sthash.zQVHkrNz.dpuf
Link to comment
Share on other sites

தொடரைக் கைப்பற்றியது இலங்கை

தொடரைக் கைப்பற்றியது இலங்கை

 

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

அதன்படி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 200 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் மிலிந்த சிறிவர்த்தன 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 206 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதில் இலங்கை அணி சார்பில் மெத்திவ்ஸ் 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 163 ஓட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் கே.சி. ப்ரதாவைடே 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற வேண்டுமானால் இரண்டாவது இன்னிங்ஸில் 244 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது.

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 171 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன் மூலம் இலங்கை அணி 72 ஓட்டங்களால் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=73836

Link to comment
Share on other sites

மேற்­கிந்­தியத் தீவு­க­ளு­ட­னான தொடரை 2 – 0 என இலங்கை கைப்­பற்­றி­யது
2015-10-26 20:22:45

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக பி. சர­வ­ண­முத்து ஓவல் விளை­யாட்­ட­ரங்கில்இன்று நிறைவு பெற்ற இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் 72 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டிய இலங்கை, 2 போட்­டிகள் கொண்ட சேர் கெறி சோபர்ஸ் – மைக்கல் திசேரா கிண்ணத் தொடரை முழு­மை­யாகக் கைப்­பற்­றி­யது.

12920west-indies-lanka.jpg

 


முத­லா­வது இன்­னிங்ஸில் 68 ஓட்­டங்­க­ளையும் இரண்­டா­வது இன்­னிங்ஸில் 42 ஓட்­டங்­க­ளையும் பெற்ற மிலிந்த சிறி­வர்­தன, பந்­து­வீச்சில் 5 விக்­கெட்­களை மொத்­த­மாக வீழ்த்தி எவ்­வித கேள்­விக்கும் இட­மின்றி ஆட்­ட­நா­ய­க­னானார்.


இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியின் கடைசி நாளான இன்று தனது இரண்­டா­வது இன்­னிங்ஸை ஒரு விக்கட் இழப்­புக்கு 20 ஓட்­டங்கள் என்ற நிலை­யி­லி­ருந்து மேற்­கிந்­தியத் தீவுகள் தொடர்ந்­தது.


ஷாய் ஹோப், டரன் ப்ராவோ ஆகிய இரு­வரும் ­ 60 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தி­ருந்­த­போது ஹோப்பின் விக்­கெட்டை கைப்­பற்­றிய மிலிந்த சிறி­வர்­தன, இலங்கை அணிக்கு நம்­பிக்­கையைக் கொடுத்தார்.


அதன் பின்னர் சீரான இடை­வெ­ளி­களில் விக்­கெட்­களைத் தாரை வார்த்த மேற்­கிந்­தியத் தீவுகள் 171 ஓட்­டங்­கைளப் பெற்­றி­ருந்­த­போது கடைசி விக்­கெட்டை இழந்து 72 ஓட்­டங்­களால் தோல்வி அடைந்­தது.


இலங்கை மண்ணில் முத­லா­வது டெஸ்ட் வெற்­றியை ஈட்ட வேண்டும் என்ற எதிர்­பார்ப்­புடன் களம் இறங்­கிய மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு இறு­தியில் ஏமாற்­றமே காத்­தி­ருந்­தது.


இத் தொடரில் 15 விக்­கட்­களைக் கைப்­பற்­றிய ரங்­கன ஹேரத், தொடர் நாயகன் விருதை வென்­றெ­டுத்தார்.

 

எண்­ணிக்கை சுருக்கம்:


இலங்கை 1வது இன்: 200 (மிலிந்த சிறி­வர்­தன 68, ரங்­கன ஹேரத் 26 ஆ.இ., தினேஷ் சந்­திமால் 25, ஜொமெல் வொரிக்கன் 67 – 4 விக்., ஜேசன் ஹோல்டர் 22 – 2 விக்.)


மே. தீவுகள் 1வது இன்: 163 (க்ரெய்க் ப்ரத்வெய்ட் 47, ஜேசன் ஹோல்டர் 21, தம்­மிக்க ப்ரசாத் 34 – 4 விக்., டில்­ருவன் பெரேரா 28 – 3 விக்., மிலிந்த சிறி­வர்­தன 26 – 2 விக்.)


இலங்கை 2வது இன்: 206 (ஏஞ்­சலோ மெத்யூஸ் 46, மிலிந்த சிறி­வர்­தன 42, குசல் மெண்டிஸ் 39, கௌஷால் சில்வா 32, க்ரெய்க் ப்ரத்வெய்ட் 29 – 6 விக்.)
மே. தீவுகள் 2வது இன்: 171 (டரன் ப்ராவோ 61, ஷாய் ஹோப் 35, ஜோமெல் வொரிக்கன் 20 ஆ.இ., ரங்­கன ஹேரத் 56 – 4 விக்., மிலிந்த சிறிவர்தன 25 – 3 விக்.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12920#sthash.a8JUd6lu.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.