Jump to content

தமிழர் அரசியலின் இன்றைய மோசமான நிலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியலின் இன்றைய மோசமான நிலை : டென்சி

 

Sumanthiran

இலங்கையில் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் தமிழின அழிப்பு மீதான விசாரணை, கடந்தகாலங்களிலும் உள்நாட்டு விசாரணை என்கிற பெயரில், ஏமாற்றங்களுக்கு உள்ளானதினை, வரலாற்றின் படிப்பினைகள் ஊடாக அறிந்து கொள்ள முடியும். தற்போது தமிழ் மக்களின் பிரதிநிதியான, சுமந்திரன் ஐயா, ஐக்கிய நாடுகள் சபை, “இனப்படுகொலை நடந்தது என நிரூபிப்பதற்கு, போதுமான அளவு ஆதாரம் அவர்களிற்கு கிடைக்கவில்லை” எனும் கருத்தினை மையமாக வைத்து, தனது வாதத்தினை முன்வைத்து, மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கி வருவதுடன், தான் தேர்வு செய்யப்பட்டதன் நோக்கங்களை நோக்கி, தனது செயற்பாடுகளை முன்வைக்காது, தம்மை ஒரு முதல் தர சட்டத்தரணி என குறிப்பிட்டு, தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, தம்மாலான வழிகள் மூலம், சர்வதேச மன்றுகளில், ஆதாரங்களை மக்களிடம் இருந்து பெற்று சமர்பிப்பதன் மூலம், நடைபெற்றது இனப்படுகொலையென உலகிற்கு நிரூபிக்க தவறிவிட்டது மட்டும் அல்லாமல், அப்பாவி தமிழ் மக்களிடையே, புலம், தாயகம் எனும் மோசமான பிரிவினையை தூண்டிவிட்டு, அதனில் குளிர்காய்ந்து கொண்டு அரசியல் செய்வது, மிகவும் கீழ்த்தரமானது என்பதுடன், அவருடன் இணைந்து செயற்படும் அரசியல் மற்றும் மக்களினது உரிமைகளை பற்றிய, எவ்வித அடிப்படை அறிவும் இன்றிய சுரேந்திரன் போன்றோர், தன்னார்வ நிறுவனங்களுக்காக வேலை செய்வதுடன், தமது பிழைப்புற்காக தமிழர் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது. இவர்களை, துறை சார் அறிஞர்கள், தக்க கேள்விகளை முன்வைப்பதன் மூலம், இவர்களது நோக்கங்களை வெளிக்கொணர்ந்து, இவர்களை போன்ற பதவிகளிற்காக செயற்படும் அரசியல்வாதிகளை, அரசியலில் இருந்து அகற்ற முன்வந்து செயற்படவேண்டும்.

தமிழ் மக்களாகிய எங்களுக்கு, இவ்வாறான விசாரணைதான் தேவையென, இன அழிப்பின் மற்றும் வள கொள்ளையினால் ஏற்படுத்தப்படும் அழிவுகள் ( சுன்னாகம் நீர் மாசடைதல், மன்னார் மற்றும் திருகோணமலையில் இடம்பெறும் எண்ணெய் கொள்ளையினால் கடல் வளம் மாசடைதல் போன்றவற்றின் பின்னால் இயங்கும் சூத்திரதாரிகளை கண்டறிவதன் மூலம் ) பற்றிய‌ ஆதாரங்களுடன், ஏதாவது ஒரு நாட்டின் ஆதரவுடன் ( விசாரணைக்கு ஓட்டுக்கள் கிடைக்குதோ இல்லையோ, பாதிக்கப்பட்டவர்களான எமக்கு, இவ்விசாரணைதான் தேவையென உண்மைகளை, உலகின் முன் இடித்துரைத்து கபட நாடகம் ஆடும் அமெரிக்காவின் முகத்தில் கரியை பூச முடியும் ) , எங்களுக்கு தேவையான விசாரணையை கோர வேண்டுமே தவிர, சர்வதேச விசாரணை தேவை, சர்வதேச விசாரணை தேவை என, மேற்குலக சக்திகளுடன் இணைந்து போரின் பின் இயங்கிய ஐக்கிய நாடுகள் சபை உட்பட, கொலைகாரர்களை காக்கும் உத்திகளுடன் கூடிய விசாரணையை கோருவதிலோ, வெறும் சர்வதேச விசாரணை தேவை என்பதற்கான கையொப்பங்களை மட்டும் சேர்பதிலோ, பலன் கிடையாது என்பது திண்ணமாகும். இதனை புரிந்து கொண்டு, எமது சமூகத்தில் இருக்கும் துறை சார் நிபுணர்களின் உதவி மற்றும் சிங்கள சமூகத்தில் இருக்கும் சமூக ஆர்வலர்கள், முற்போக்கு சக்திகள், துறைசார் நிபுணர்கள் உதவி கொண்டு ஆதாரங்களை சேகரித்து, எமக்கு தேவையான விசாரணையை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, செயற்பாடுகளை முன்னெடுப்பது பலனளிக்கும்.

வெறுமனே சர்வதேச விசாரணை வேண்டும் என்பதற்கான அர்த்தம் யாது? அமெரிக்காவினாலோ, பிரித்தானியாவினாலோ அல்லது இந்தியாவினாலோ முன்மொழியப்பட்டு, சர்வதேச நீதிபதிகளை கொண்டு விசாரித்தாலும், உண்மை வெளிவரப்போவது கிடையாது. அப்படியான விசாரணையை ஆதரிப்பது என்பதும் இனப்படுகொலை செய்ய தூண்டிய, பின் நின்றவர்களை காப்பாற்றுவதை நோக்காக கொண்டதாகும். மேல் குறிப்பிட்டது போன்ற, தமிழ் மக்களுக்கு தேவையான விசாரணையை, ஆதாரங்களுடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள், குறிப்பிட்ட ஏதாவது ஒரு நாட்டின் உதவியுடன், ஏன் கொண்டுவரமுடியாது? இதனை உங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி நிதிகளிடம் ஏன் நீங்கள் கேட்க கூடாது? 

சிங்கள பௌத்த இனவாத அரச இயந்திரத்தினால் கட்டுண்டு இருந்த இனவாதிகள், போரின் போது இலங்கை அரச மற்றும் ஊடகங்கள் கூறியதை அடிப்படையாக கொண்டு, தமிழின படுகொலையை, தமது இனத்துக்கெதிரானவர்கள் அழிக்கப்படுகிறார்கள் என வேடிக்கை பார்த்தனர். ஆனால் இன்று தங்களுடைய அரசின் உண்மை முகம் அறிந்து, புரிந்து, இலங்கை போரின் பின் செயற்பட்ட ஏகாதிபத்திய நாடுகளின் கபடங்களை அறிந்து, தமிழின விடுதலைப்போரில் கொல்லப்பட்டவர்களிற்கான நீதி கோருவதையும், சுயாதீன விசாரணை கோருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அத்துடன் தமிழர்களாகிய நாமே எமது இனப்படுகொலை பற்றியும், அது ஏன் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதன் பின்னணி பற்றியும், இன்னமும் முழுமையான விபரங்களை அறியாத அறிவிலிகளாகவே உள்ளோம் என்பதே உண்மையாகும். அத்துடன் ஊடகங்கள் வெளியிடும் இனவாத கருத்துக்களினை உள்வாங்கி, ஏதும் அறியாத, எம்மை போன்றே, ஊடகங்களினாலும், அரசியல்வாதிகளினாலும், “இனவாதிகள்” என முத்திரை குத்தப்பட்ட, அப்பாவி சிங்கள மக்களினை, எப்போதும் இனவாதிகள், இனவாதிகள் என குற்றம் சுமத்தாது, அவர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்வுகளை கைவிட்டு, அவர்களிடையே உள்ள மாணவர் அமைப்புக்கள், முற்போக்கு சக்திகள், சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் கட்சிகள் ஆகியனவற்றை இனங்கண்டு, அவர்களிடம் உண்மைகளை எடுத்துச் செல்வது மட்டும் அன்றி, அவர்களுக்கும், எங்களுக்கும், சகலருக்கும் உரித்தான, சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க போராடவேண்டும். மற்றும் போலி சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கருத்துக்களை உள்வாங்காது, நாமே, சுயாதீனமாக செயற்படும் துறைசார் நிபுணர்கள், தன்னார்வலர்கள் துணை கொண்டு இனப்படுகொலை, அதன் வளக்கொள்ளையை நோக்காக கொண்ட அதன் பின்னணி பற்றி அறிந்து ஆராய்ந்து, உண்மைகளை ஆதாரங்களுடன் வெளிக்கொணர செயற்படுவதே காலத்தின் கட்டாயமாகும்.

சர்வதேச மன்றுகளில் தமிழர்களுக்குப் இழைக்கப்பட்டது, இனப்படுகொலையென ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்கு, அதிக காலம் செல்லும் என்பதுடன், அதற்காக அதிக காலம் சளைக்காமல் தொடர்ந்தும் போராட வேண்டும் என்பது மட்டும் அல்லாமல், தற்போது நடைபெறும் விசாரணையானது, “பாதிக்கப்பட்ட மக்களினால் கோரப்பட்டது அல்ல” என்பதனை எமது மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். அத்துடன், இவ்விசாரணையானது, இனப்படுகொலைக்கு இலங்கை அரச இனவாதிகளிற்கு துணை நின்ற, அமெரிக்க அரசினால் முன்கொணரப்பட்ட, ‘போலி கண்துடைப்பு விசாரணையாகும்’ என்பதனையும் புரிந்து செயற்படவேண்டும் என்பதுடன், தமிழ் மக்களாகிய நாம், எமக்கு அறுபது ஆண்டுகளிற்கு மேலாக இழைக்கப்பட்ட அநீதிகளுடன், மற்றைய இன மக்களிற்கும், எமது விடுதலை போராட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அநீதிகளிற்குமாக, ஒரு நடுநிலையான விசாரணையை, ஏதாவது ஒரு நாட்டின் உதவியுடன், முன்னெடுத்து, இனப்படுகொலையை நிரூபிக்க முடியும் என்பதுடன், சகல மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கும், நீதியை வழங்க முடியும் என்பதுடன், இனப்படுகொலையை நடாத்த பின் நின்ற அமெரிக்க, இந்திய, பிரித்தானிய அரசுகளின் உண்மை முகத்தினையும் வெளிக்கொணரவும் முடியும். இதனை நோக்கி, மற்றைய முற்போக்கு சக்திகளுடனும், மற்றைய விடுதலை அமைப்புக்களுடனும், மற்றைய இன மக்களுடனும் இணைந்து எமக்கிழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துக்கூறி, நாமே அயராது போராட வேண்டும் என்பதுடன், வெறும் கோசங்களுடனும், ஆரப்பாட்டங்களுடனும் நில்லாது, மக்கள் மேல் அக்கறை கொண்ட துறை சார் செயற்பாட்டாளர்கள் உதவிகொண்டு சிறந்த போராட்டத்தினை கட்டியமைத்து போராடி எமது விடுதலையை வென்றெடுக்கவேண்டும்.

சிங்கள கவிஞர் ஒருவர் எழுதிய மனதை உறுத்திய‌ கவிதை

“அவர்கள் கருப்பு நிறமா? எனக்கு நிச்சயமாக நீங்கள் உயிருடன் இல்லை என்று தெரியும்.

எங்களுடைய சிங்கள பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் உங்களை மிருகம் என்றே வர்ணித்தன.

இருந்தும் நீங்களும் எங்களுடைய இராணுவத்தினரை போன்று, நிலக்கீழ் காப்பரண்களில், வெடி மருந்து மணத்துடன், பல தூக்கமற்ற இரவுகளை கழித்திருப்பீர்கள் என்று எமக்கு தற்போது தான் புரிகிறது.”

http://inioru.com/useless-politics-and-tamil-politicians/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.