Jump to content

ஜெனிவா தீர்மானம் – தமிழர் தரப்பின் குழப்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா தீர்மானம் – தமிழர் தரப்பின் குழப்பம்

OCT 04, 2015 

UNHRC

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம், தமிழர் தரப்புக்குள் ஒரு தெளிவற்ற நிலையைத் தோற்றவித்துள்ளது என்றே கூறலாம்.

ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள், இந்த தீர்மானம் சாதகமானது போன்ற கருத்தை தோற்றுவிக்க முனைகிறது.

மறுபக்கத்தில், கூட்டமைப்பில் உள்ள ஏனைய பங்காளிக் கட்சிகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் சிவில் சமூகமும், இந்த தீர்மானம் குறித்து ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளன.

இதுபோலவே, புலம்பெயர் சமூகத்திலும், உலகத் தமிழர் பேரவை, தீர்மானத்தை வரவேற்க, ஏனைய பல அமைப்புகள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

போரின் போது தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலமே தீர்வு கிட்டும் என்றே தமிழர் தரப்பு முழுமையாக நம்புகிறது.

அதற்காகவே, சர்வதேச விசாரணைப் பொறிமுறை அமைய வேண்டும் என்ற கருத்தை, தமிழர் தரப்பு எல்லாத் தளங்களிலும் வலியுறுத்தி வந்தது.

ஆனால், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையும் சரி, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலும் சரி, கலப்பு நீதிமன்றத்தை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டது.

உள்நாட்டு, சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுனர்களை உள்ளடக்கியதாக, இந்தக் கலப்பு நீதிமன்றம் தொடர்பான பரிந்துரை முன்வைக்கப்பட்ட போது, அதனை ஏற்றுக் கொள்ளத் தமிழர் தரப்பு பெரும்பாலும் தயாராகவே இருந்தது.

அமெரிக்கா முன்வைத்த முதலாவது தீர்மான வரைவும் கூட, கலப்பு நீதிமன்றம் மூலமான விசாரணை நடத்தப்படுவதையே வலியுறுத்தியது.

ஆனால், ஜெனிவாவில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது, இலங்கை, இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கொடுத்த அழுத்தங்களினால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்த தீர்மான வரைவு மேலும் நலிந்து போனது.

சர்வதேச என்ற பதம் முற்றுமுழுதாக நீக்கப்பட்டது. கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுனர்கள், விசாரணையாளர்களின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டது.

அதாவது கலப்பு விசாரணை என்று அடையாளப்படுத்தும் வகையிலான பகுதிகள் தீர்மான வரைவில் இருந்து நீக்கப்பட்டன.

இது தமிழர் தரப்பை மேலும் அதிருப்தி கொள்ள வைத்தது.

ஒரு பக்கத்தில், ஐ.நாவில் முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவு, நீர்த்துப் போகச் செய்யப்பட்ட அதேவேளை, உள்நாட்டில் அரச தரப்பினர் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் மக்களை இன்னும் குழப்பமடைய வைத்தது.

நடக்கப்போவது சர்வதேச விசாரணையோ, கலப்பு விசாரணையோ அல்ல, உள்நாட்டு விசாரணை தான் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவாக கூறியிருக்கிறார்.

அத்துடன் இதில் வெளிநாட்டுத் தலையீடுகள் இருக்காது என்றும், தேவைப்பட்டால் மாத்திரமே, வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்படும் என்றும் அரசாங்கத் தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

சர்வதேச சமூகம், தமது கண்காணிப்பு மற்றும் பங்களிப்புடன் கூடிய விசாரணைகளே நடக்கும் என்கிறது.

இலங்கை அரசாங்கமோ யாருடைய தலையீடும் இல்லாத தமது சொந்த விசாரணைகளே நடக்கப் போகிறது என்கிறது.

இவ்வாறான செய்திகள், தமிழ் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால், ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய உருவாக்கப்படும், விசாரணைப் பொறிமுறை எத்தகையது- அது எவ்வாறு செயற்படவுள்ளது- அதில் வெளிநாட்டு நீதிபதிகள் நிபுணர்களின் பங்களிப்பு எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்விகள் தமிழ் மக்களிடையே எழுந்திருக்கின்றன.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில தலைவர்கள் புதிய விசாரணைக் கட்டமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்புவதாகத் தெரிகிறது.

ஆனால், வேறு சிலரோ அவ்வாறு நம்பிக்கை கொள்ளவில்லை.

கடந்த கால அனுபவங்கள் தமிழ் மக்களுக்கு மோசமானதாகவே இருந்திருக்கின்றன.

இலங்கையில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களும் விசாரணைக் குழுக்களும் நியாயமானதாக செயற்பட்டிருக்கவில்லை. அவை மக்களின் நம்பிக்கையீனத்தையே சம்பாதித்திருக்கின்றன.

இதன் காரணமாகவே உள்நாட்டு விசாரணைகளை தமிழ் மக்கள் அடியோடு எதிர்க்கின்றனர்- வெறுக்கின்றனர்.

இப்படியான நிலையில், உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய உருவாக்கப்படவுள்ள பொறிமுறை மூலம், எவ்வாறு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போகிறது என்ற கேள்வி வலுப்பெற்றிருப்பதில் நியாயங்கள் உள்ளன.

இந்த விசாரணைகள் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், ஒட்டுமொத்த முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீராகிவிடும்.

இந்த நல்லிணக்க, பொறுப்புக்கூறல் செயல்முறையில் தமிழ் மக்கள் தான் பிரதான பங்காளர்கள்.

அவர்களின் எதிர்பார்ப்பை, கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் தான், வலுக்குறைந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்க சர்வதேச சமூகம் அங்கீகாரம் அளித்திருக்கிறது.

இதில் கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு எந்தளவுக்கு வலுவானதாக இருக்கும் என்பதைப் பொறுத்தே, தமிழ் மக்களால் இதன் மீது நம்பிக்கை வைப்பதா இல்லையா என்று தீர்மானிக்கக் கூடிய நிலை இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர், இதற்கு ஆதரவளித்திருந்தாலும், அவர்களாலும் கூட, தமிழ் மக்களுக்கு இந்த விசாரணைக் கட்டமைப்பு நீதியைப் பெற்றுத் தரும் என்று உத்தரவாகம் அளிக்க முடியாது.

ஏனென்றால் அவர்களுக்கும் கூட இந்த விடயத்தில் உறுதியான நம்பிக்கை இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.

ஒருவேளை, ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ளத் தயங்கினால் அல்லது மறுத்தால், இது முழுமையாக தோல்வியில் தான் முடியும்.

ஆனால், தமிழர் தரப்பு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இப்போதைய தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்படும் விசாரணைப் பொறிமுறையை புறக்கணிப்பதால் அல்லது, இதற்கு ஒத்துழைக்க மறுப்பதால், இதற்கு மேலான ஒரு பொறிமுறைக்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.

அத்தகையதொரு வாய்ப்பு இல்லாத ஒரு சூழல் இருக்குமேயானால், கிடைத்திருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமானது.

இப்போதைய நிலையில், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலான விசாரணைப் பொறிமுறையை ஆதரிப்பது அல்லது ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது என இரண்டு வழிகள் தான் தமிழர் தரப்புக்கு உள்ளது.

இதனை முற்றாக நிராகரிப்பதான ஒரு வழிமுறையை தெரிவு செய்வதற்கு முன்னர், அதனால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகள் அனைத்தையும் தெளிந்த சிந்தனையுடனும், நடுநிலையுடனும் ஆராய வேண்டியது தமிழர் தரப்பிலுள்ள அனைவரதும் கடமையாக இருக்கும்.

ஏனென்றால் அத்தகையதொரு முடிவு சர்வதேச சமூகத்துடன் ஒட்டுமொத்தமாக முரண்படும் நிலையை ஏற்படுத்தும்,

அத்தகையதொரு நிலை, ஒட்டுமொத்த உலகமும், தமிழர்களை நிர்க்கதியாக நிற்க வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றாலும் ஆச்சரியமில்லை.

அதேவேளை, ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய உருவாக்கப்படும் விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவளிப்பதானாலும், அதற்காக அவசரப்பட வேண்டியதில்லை.

அவ்வாறு ஏற்படுத்தப்படக் கூடிய விசாரணைப் பொறிமுறைக் கட்டமைப்பை எவ்வாறு வலிமையானதாக- நடுநிலையானதாக- நம்பகமானதாக மாற்றலாம் என்று ஆராய வேண்டும்.

இங்கும் ஒரு பேரம் பேசும் ஆற்றலை தமிழர் தரப்பு கைக்கொள்ளலாம்

எல்லாவற்றையும் நாடாளுமன்றத்தின் மூலமே உருவாக்கப் போவதாக அரசாங்கம் கூறுகிறது.

அதற்கு மூன்றில் இரண்டு ஆதரவு தேவை. மூன்றில் இரண்டு ஆதரவுக்கு கூட்டமைப்பின் தயவு கண்டிப்பாகத் தேவை.

எனவே, அரசாங்கம் தான்தோன்றித்தனமாகவோ, நியாயமற்ற வகையிலோ முடிவுகளை எடுக்க முடியாமல் கட்டுப்படுத்தும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

தமிழ் மக்கள், இந்த தீர்மானத்துக்கு அமைவாக உருவாக்கப்படும் பொறிமுறையை எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே, அவர்களின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.

மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாது. கிடைத்துள்ள வாய்ப்பை நழுவவிடாமல் நீதியைப் பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒருவேளை, இத்தகைய விசாரணை செயல்முறை நம்பகமான முறையில் இடம்பெறவில்லை என்று தமிழ் மக்கள் உணர்ந்தாலும் கூட, அடுத்த கட்டமாக அந்த நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்த முடியும்.

சர்வதேச சமூகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை எதிர்பார்க்கிறது.  அவர்களின் காயங்கள் ஆற்றப்பட வேண்டும் என்று கருதுகிறது.

தாம் முன்மொழிந்து உருவாக்கிய விசாரணைப் பொறிமுறைகள் இலங்கை அரசாங்கம் சரிவரப் பயன்படுத்த தவறினால், சர்வதேச சமூகம் தமிழருக்குச் சார்பாக மீண்டும் ஒரு முறை திரும்பக் கூடும்.

இப்போதே, தமிழர் தரப்பு ஒத்துழைக்கத் தவறினால் அத்தகைய வாய்ப்பு மீண்டும் கிட்டுமா என்பது சந்தேகம் தான்.

- சத்ரியன்

வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

http://www.puthinappalakai.net/2015/10/04/news/10163

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.