Jump to content

விஜய், புலி படக்குழுவினர் வீடுகளில் ரெய்டு ஏன்?: பரபர தகவல்கள்!


Recommended Posts

விஜய், புலி படக்குழுவினர் வீடுகளில் ரெய்டு ஏன்?: பரபர தகவல்கள்!
 

சென்னை: புலி படம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை வைத்து எடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்தே வருமான வரித்துறையினர் விஜய் மற்றும் படக்குழுவினரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்களாம். விஜய் ஆசை, ஆசையாக நடித்து முடித்துள்ள படம் புலி. படத்தின் கதையை சிம்புதேவன் கூறியதுமே வாவ், இந்த படம் நிச்சயம் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும், இதில் நான் நிச்சயம் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின்போது முழு ஈடுபாட்டோடு நடித்து சிம்புதேவனை அசத்தினார் விஜய். படத்தின் இரண்டு டிரெய்லர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

30-1443588020-puli000.jpg

புலி புலி படம் நாளை ரிலீஸாக உள்ளது. புலி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் ரிலீஸாக உள்ளது. பட ரிலீஸை கொண்டாடித் தீர்க்க ரசிகர்கள் ஏற்கனவே தயாராகிவிட்டார்கள்.
 
கருப்பு பணம் புலி படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்ட நிலையில் அந்த படம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை கொண்டு எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது.
 
ரெய்டு தகவல் கிடைத்த உடன் வருமான வரித்துறையினர் இன்று காலை சென்னையில் உள்ள விஜய்யின் வீடு, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள புலி படக்குழுவினரின் வீடுகளுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
 
அதிர்ச்சி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது திரை உலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/why-do-it-officials-raid-vijay-puli-team-s-houses-236732.html

Link to comment
Share on other sites

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா வீடுகள் உட்பட 32 இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் அதிரடி ரெய்டு!!
 

 சென்னை: நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படம் நாளை ரிலீஸாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள புலி படம் கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்து எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது.

IT officials raid Vijay, Puli team, Nayanthara, Samantha's houses

இதையடுத்து வருமான வரித்துறையினர் சென்னையில் உள்ள விஜய்யின் வீடு, புலி படக்குழுவினரின் வீடுகள் என 25 இடங்களில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் நயன்தாராவின் கொச்சி வீட்டிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

நயன்தாரா தவிர்த்து நடிகை சமந்தாவின் சென்னை மற்றும் ஹைதராபாத் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். விஜய், நயன்தாரா, சமந்தா, புலி படக்குழுவினரின் வீடுகள் என மொத்தம் 32 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. புலி படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்..ம்... அம்மா சோதிக்கிறா...!

Link to comment
Share on other sites

'விஜய், நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர்கள் வீடுகளில் சிக்கியது 100 கோடி!' - பரபரப்பு தகவல்!

 

சென்னை:  நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரது வீடுகளில் வருமானவரித் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் ரூ.2 கோடி ரொக்கம் உள்பட ரூ. 100  கோடிக்கும் மேல் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள், ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் பல நடிகர், நடிகைகள் சொத்துக்களை ஏராளமாக வாங்கிக் குவித்ததாக வருமான வரித்துறைக்கு தகவல்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து   பிரபலமான நடிகர், நடிகைகளில் வருமான வரிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் கோடிக்கணக்கான வருமான வரிபாக்கி இருந்தது தெரியவந்தது.

vijay%20nayan.jpg

அதைத் தொடர்ந்து, நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, விஜய்யின் மேலாளர் மற்றும் புலி படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், பைனான்சியர்கள் அன்பு, ரமேஷ் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் அண்மையில் திடீர் சோதனை நடத்தினர்.

சென்னையில் நடிகர் விஜய்க்கு சொந்தமான நீலாங்கரை வீடு, அவரின்  உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மேலும் மதுரை, கன்னியாகுமரி, கேரளாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. நடிகைகள் நயன்தாராவுக்கு சொந்தமான திருவனந்தபுரம் வீடுகள், சொத்துக்கள், சமந்தாவுக்கு சொந்தமான பல்லாவரம் வீடு மற்றும் சொத்துக்கள், புலி படத்தின் தயாரிப்பாளர்கள் செல்வக்குமார், சிபு தமீன், மதுரை திரைப்பட பைனான்சியர் அன்பு மற்றும் ரமேஷ்  ஆகியோரின் வீடுகளிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில், " வருமான வரி ஏய்ப்பு செயல்களில் நடிகர், நடிகைகள் ஈடுபட்டுள்ளது குறித்து எங்களுக்குத்  தொடர்ந்து தகவல்கள் வந்துள்ளன. இந்த சோதனையில் ரூ. 2 கோடி ரொக்கப்பணம், ரூ. 2 கோடி மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புலி படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த படத்தை தயாரிப்பதில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்துள்ளனர். எங்களுக்கு கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் தோராயமாக பார்த்தால் சுமார் ரூ. 100 கோடி வரை கணக்கில் காட்டப்படாத சொத்துகள் நடிகர், நடிகைகள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் சிக்கியுள்ளன" என்று தெரிவித்தனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=53225

Link to comment
Share on other sites

வரி ஏய்ப்பு செய்தேனா? நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!

 

vijay%281%29.jpgசென்னை: நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய வருமான வரியை முறையாக செலுத்தியுள்ளேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் உள்பட சில திரையுலகினர் வீடுகளில் அண்மையில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தான் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றும், வருமான வரியை முறையாக செலுத்தி இருக்கிறேன் என்றும் நடிகர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருமான வரித்துறையினர் கலை உலகைச் சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனையிடுவதும், தணிக்கை செய்வதும் இயல்பான ஒன்று. கடந்த வாரம் என்னுடைய இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் நான் வருமான வரி ஏய்ப்பு ஏதும் செய்துள்ளேனா என்று சோதனையிட்டார்கள்.

நானும், எனது குடும்பத்தாரும், எனது அலுவலர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால் சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

மேற்படி செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை. நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்றும் சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன். நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட கணக்கினை குறித்த நேரத்தில் உரிய வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும், தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

மேலும் நான் எப்பொழுதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். எனவே உண்மைக்கு புறம்பான தேவையற்ற வீண் கருத்துக்களை செய்தித்தாள்களிலோ, ஊடகங்களிலோ வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53344

Link to comment
Share on other sites

விஜய் வீட்டு ஐடி ரெய்டுக்கு பின்னணியில் ஆயிரம் அரசியல்கள்!

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/political-motive-the-it-raids-on-vijay-237087.html
 
 
சென்னை: நடிகர் விஜய் மற்றும் புலிப்பட யூனிட் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை, சோதனையின் பின்னணியில் தமிழக சட்டசபை தேர்தல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 1ம்தேதி, புலி திரைப்படம் ரிலீசாக வேண்டிய நிலையில் செப்டம்பர் 30ம் தேதி அதிகாலையிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய்யின் நீலாங்கரை வீடு மட்டுமல்ல, சாலிகிராமம் அலுவலகம், அடையாறில் உள்ள வீடு என எல்லா இடங்களிலும் நுழைந்திருந்து சோதனை போட்டனர்.
பாகுபலி இல்லையே மொத்தமாக 150 அதிகாரிகள் கொண்ட டீம் "புலி' படக்குழுவையே ஓடவிட்டு விரட்டியது. 300 கோடி பட்ஜெட் என கூறப்பட்ட பாகுபலி டீமிடம் கூட இந்த ரெய்டு நடைபெறவில்லை. அங்கு சந்திரபாபு நாயுடு பக்கபலமாக இருந்து பாகுபலியை காப்பாற்றினார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் புலிக்கு நேர்ந்த நிலைக்கு, பின்னணியிலுள்ள காரணம் கசியத்தொடங்கியுள்ளது.
ரகசிய தகவல்கள் படத்தின் இறுதிக்கட்டத்தின் போது நடந்த ஒரு விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் வருமானவரித்துறை ஆட்களும் அடையாளம் காட்டிக் கொள்ளாமல் பங்கெடுத்து, படத்தின் பட்ஜெட், பைனான்சியர்கள் விவரங்களைத் தெரிந்துகொண்டு, படம் வெளியாவதற்கு முதல் நாள் கதிகலக்கியுள்ளனர். ஏன் இவ்வளவு அக்கறையோடு இந்த திட்டம் நடைபெற்றது என்பதன் பின்னணியில் அரசியல் உள்ளதாம்.
த்தியில் பிரஷர் பாஜகவை சேர்ந்த டெல்லி தலைவர் ஒருவர் விஜயை சந்திக்க விரும்பியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு விஜய் வாய்ஸ் தர வேண்டும் என்று கேட்பது அவரது நோக்கம் என்பதை அறிந்த விஜய் நழுவிக்கொண்டுள்ளார். இதனால் ஒரு ரெய்டை நடத்தி சிறு டிரையலை காட்டியுள்ளனராம். இப்படியே ஜகா வாங்கினால், மெயின் பிச்சர்கள் களமிறங்கும் என்று விஜய்க்கு மேலிட தலைவர் விடுத்த மறைமுக எச்சரிக்கை இந்த ரெய்டு என்கிறது டெல்லி வட்டாரம்.
மாநிலத்திலும் கோபம் அதுமட்டுமின்றி, புலி படம் ரிலீசாகும் முன்பே, நாம் தெரிவித்தபடி, இது ஸ்ரீதேவி என்ற ராணியையும் அவரை ஆட்டுவிக்கும் சுதீப் என்ற வில்லனையும் விஜய் எதிர்க்கும் கதையாகும். "நீங்க நல்லவங்கதான், உங்களை சுற்றியுள்ளவர்கள் சரியில்லை" என்பது போன்று விஜய் பேசும் வசனங்களுடன் படம் அமைந்துள்ளது. இதுவும் சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுப்பை கிளப்பியதாகவும், கூறப்படுகிறது. எனவே, மத்தி மற்றும் மாநிலம் ஆகிய இருபக்கமும் சிக்கிக்கொண்ட தவில் போல மாறியது விஜய் நிலை
 
Link to comment
Share on other sites

நடிகர் விஜய் வரி ஏய்ப்பு விவகாரம் : அதிகாரிகள் சொல்வது என்ன?

 

டந்த 5 வருடங்களான நடிகர் விஜய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்து நேற்று நடிகர் விஜய், அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் தான் 'சட்டத்தை பின்பற்றுபவன் ' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

vijay.jpg


இதனிடையே வருமான வரித்துறை தரப்பில் இருந்து இதனை மறுத்துள்ளனர். நடிகர் விஜய்  வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இது தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் நடிகர் விஜய் உள்ளிட்ட புலி படக்குழுவினர் வீடுகளிலும், நடிகைகள் நயன்தாரா, சமந்தா  வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் ரூ.25 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் ரூ. 2 கோடி மதிப்புள்ள ரொக்கமும், தங்கமும் கைப்பற்றப்பட்டது.

http://www.vikatan.com/news/article.php?aid=53382

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.