Jump to content

சிறிலங்காவின் இனப்படுகொலையாளிகளை விசாரணைக்கு உட்படுத்துக: - அனைத்துலக நாடுகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையரின் வேண்டுதலுக்கு அமைய, சர்வதேசக் குற்றங்களைப் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் சிறிலங்காவின் அரசியல், இராணுவத் தலைவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுழையும் போது, உலகம் தழுவிய நீதி வரம்புகையைப் பயன்படுத்தி, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வழக்குகளை பதிவுசெய்யுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையரின் வேண்டுதலுக்கு அமைய, சர்வதேசக் குற்றங்களைப் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் சிறிலங்காவின் அரசியல், இராணுவத் தலைவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுழையும் போது, உலகம் தழுவிய நீதி வரம்புகையைப் பயன்படுத்தி, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வழக்குகளை பதிவுசெய்யுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

   

ஐ.நா உயர் ஆணையரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கும் எந்த ஒரு தேசத்திற்கும் ஒத்துழைப்பை அளிப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதியளிக்கிறது எனவும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர அவர்களை பாரட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், அனைத்துலக குற்றங்களுக்கான பொறுப்புடைமையை உத்தரவாதப்படுத்துவதற்கு அனைத்துலக அளவிலான மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமை பேரவையினையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்துறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://world.einnews.com/pr_news/286939459/tgte-congratulates-high-commissioner-zeid-urges-unhrc-to-consider-int-l-action-to-ensure-accountability-in-sri-lankaஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் தமிழாக்க வடிவம் :

முழுமையான விளக்கமான அறிக்கையை முன்வைத்ததற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மாண்புமிகு செய்த் உசேன் அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டுகிறது.

'நல்லிணக்கம்' மற்றும் 'நீதி' ஆகியவை தொடர்பில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் ஜெனீவா உரையினது, வெற்றுக் கூற்றுக்களுக்கு ஒரு பொருத்தமான பதில் பதிலாக ஐ.நா உயர் ஆணையரின் இந்த அறிக்கை, அமைகின்றது.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு ஒரு உள்நாட்டுப் பொறிமுறையை, அது 'சர்வதேசத் தரத்தில்' அமையும் ஒன்றாக இருந்தால் கூட, அல்லது சர்வதேச சமூகத்திடமிருந்து தொழில்நுட்ப மற்றும் நிதிஉதவியுடன் செயல்படக் கூடிய ஒன்றாக இருந்தால் கூட, அவ்வாறான பொறிமுறையை நிறுவும் முன்மொழிவை துணிச்சலுடன் நிராகரித்தமைக்காகவும் நாம் உயர் ஆணையரைப் பாராட்டுகிறோம்.

சிறிலங்காவில் 'கடந்தகாலத்தில் அடக்குமுறைச் சூழலை உருவாக்கிய கட்டமைப்புக்களும் நிறுவனப் பண்புகளும் அப்படியே இருக்கின்றன' என்றும் குற்றவியல் நீதிவழங்கப்படும் முறையானது, சக்திவாய்ந்த அரசியல், பாதுகாப்பு, மற்றும் இராணுவச் செயல்பாட்டாளர்களின் தலையீட்டுக்கும் செல்வாக்குக்கும் இடமளிப்பதாக இருந்து வருகிறது என்றும் உயர் ஆணையர் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளரின் நிபுணர் குழுவும் அதே காரணத்தை முன்வைத்திருந்ததை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

'நீதி வழங்கும் அமைப்பு முறையின் கடந்தகால செயல்பாட்டையும் நிகழ்கால கட்டமைப்பையும் பற்றி ஒரு பரிசீலனையை மேற்கொண்டதன் அடிப்படையில், இன்றைய அரசியல் சூழலில் நீதிக்கு எந்தவகையிலும் பயனளிப்பதாக இருக்காது என்று இக்குழு நம்புகிறது' என்று அக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 'சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு' கோரி நடத்திய 'பத்து இலட்சம் கையெழுத்து இயக்கத்தில்' உலகெங்குமிருந்து 14 இலட்சத்துக்கும் மேலானவர்கள் ஏன் பங்கேற்றார்கள் என்பதற்கான காரணங்களில், உள்நாட்டு அளவில் நீதியை வழங்குவதற்கான ஒரு சூழல் சிறீலங்காவில் இல்லாதநிலையும் ஒன்றாகும்.

'குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கை, அவற்றின் தீவிரம், அவை நிகழும் திட்டமிட்ட முறை, மீண்டும் மீண்டும் அதே முறையில் நிகழ்வது, அவை சுட்டிக்காட்டும் நடத்துமுறை உறுதியாக ஒன்றேபோல இருப்பது ஆகிய அனைத்தும் அமைப்பு ரீதியாகத் திட்டமிட்ட முறையில் நடத்தப்படும் குற்றங்களை சுட்டிக்காட்டுகின்றன' என்ற உயர் ஆணையரின் அவதானிப்பு, சிறிலங்கா அரசே சர்வதேசக் குற்றங்களைச் செய்துள்ளதைத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கிறது.

உயர் ஆணையர் மேலும் குறிப்பிடுவதாவது, 'அமைப்பு ரீதியாகத் திட்டமிட்டுச் செய்யப்படும் குற்றங்களுக்கு ' வழக்கமாக மூலாதாரங்கள், ஒருங்கிணைப்பு, திட்டமிடல், மற்றும் அமைப்பு ஆகியவை தேவைப்படுகிறது, மேலும் அவை அவற்றைச் செய்யக்கூடிய நபர்களால் பதவிவரிசை தலைமை அதிகாரப்படி செய்யப்பட்டுள்ளன, அது தலைமைக்கும் தனிநபரின் தனிப்பட்ட பொறுப்புக்கும் இடமளிக்கக்க் கூடியதாகும்.' இந்தத் தொடர்பில், சிறீலங்காவின் தற்போதைய தலைவர், அதிபர் சிரிசேனா 2009 போரின் இறுதிவாரங்களில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார், அந்தக் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் உள்நோக்கத்துடன் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவில் 'ஆட்சி மாற்றத்தை' உயர் ஆணையர் வரவேற்றுள்ளார், அதேநேரத்தில் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பது குறித்த நிலைபாட்டை புதிய அரசாங்கம் மாற்றிக்கொள்ளவில்லை என்பதையும், விசாரணைக் குழுவை நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்பதையும் துல்லியமாகக் கவனத்தில் கொண்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளபடி, அதே புதிய அரசாங்கம் 'பொது அறிவிப்புக்களில் ஒரு மாறுபட்ட தொனியைக் காட்டியுள்ளது.'

மனித உரிமைகளுக்கான உயர் ஆணையம் இடம்பெறும் ஒரு முழுவீச்சிலான உள்நாட்டு அமைப்பை நிறுவுவதற்குப் பரிந்துரைத்துள்ளதையும், உண்மை, நீதி, தவறுகளைத் திருத்திக்கொள்வது, மீண்டும் நிகழாமல் இருக்க உத்தரவாதமளிப்பது ஆகியவை குறித்த சிறப்புப் பிரதிநிதி, ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி ஆகியோரின் வருகையை முன்மொழிந்துள்ளதையும் நாம் வரவேற்கிறோம்.

அத்தகைய சர்வதேச வருகையை முன்மொழிவது 2013 டிசம்பரில் நமது வேண்டுகோளை எதிரொலிப்பதாக இருக்கிறது. அப்போது, தமிழர்களுக்கான சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை நிறுவுவவேண்டும் என்று கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியிருந்தது.

நிபுணர் குழுவைப் போல, ஆணையாளரும் இனப்படுகொலைக் குற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை பற்றி .அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஆயினும் அறிக்கையை வெளியிட்ட பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரித்து நீதிவழங்க இருப்பவர்களால் இனப்படுகொலை நடைப் பெற்றதா என்ற விசாரணையை மேற்கொள்ள சாத்தியம் உண்டு என்ற நிலைப்பாடையும் அவர் நிராகரிக்கவில்லை..

பாகுபாட்டு அடிப்படையில் குற்றங்கள் இழைக்கப்படமையை ஆணையரின் அறிக்கை குறிப்பிடுகின்றது. 'உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்கள் அவர்களுடடைய தமிழின அடையாளம் காரணமாக சந்தேகிக்கப்படுபவர்களாக நடத்தப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கபட்டனர்' என்றும், காணி விவகாரங்கள் இன அடிப்படையில் நடைபெறுவது அதிகரித்து வருகிறது என்றும் அவர் விவரிக்கிறார்.

பிற சர்வதேசக் குற்றங்களுடன் இனப்படுகொலையையும் குற்றச்செயாலாக்கும் சட்டம் இயற்றுமாறு சிறீலங்கா அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழர்கள் இனப்படுகொலைக்குப் பலியாகியுள்ளனர், இனிமேலும் பலியாகக்கூடும் என்பதைச் சர்வதேசச் சமூகம் இறுதியாக உணர்ந்துகொள்வதற்கான அடையாளங்களாக இவை அனைத்தும் அமைந்துள்ளன.

மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளையும் பொது அதிகாரிகளையும் அவர்களுடைய பதவிகளிலிருந்து உடனடியாக நீக்குமாறு சிறீலங்கா அரசாங்கத்தை உயர் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு கண்ணியமான நடவடிக்கையாக, முன்னாள் படைத் தலைவர் திரு.சரத் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட 'பீல்டு மார்ஷல்' பட்டத்தைத் திரும்பப்பெற்றுகொள்ளுமாறும், மேஜர் ஜகத் டையாசின் பதவி உயர்வை நீக்கி, அவரை ஊதியமில்லாத விடுப்பில் வைக்குமாறும் நமது தரப்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிசேனா நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறது.

2009 ஆண்டில், தமிழர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில், அதைத் தடுப்பதற்கு ஐ.நா. தவறியது என்பதற்கு அந்த இடத்தில் இருந்த ஐ.நா.வின் சொந்த ஊழியர்களே நேரடிச் சான்றாக இருந்தபோது என்பது உயர் ஆணையரின் அறிக்கை அதுபற்றி மௌனம் சாதிக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்கிறோம்.

இந்த அம்சத்தை விசாரணை அதிகாரிகள் சேர்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒருவேளை அளவுக்கு மிகுதியாக இருக்கலாம், ஆனால் நீதியின் நலனுக்காகவும் உலகில் எதிர்கால அமைதியின் நலனுக்காகவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச அமைப்புகளின் குற்றத்தன்மையின் இந்த முக்கியமான அம்சம் குறித்து உயர் ஆணையரின் மௌனம் ஏமாற்றமளிக்கிறது என்பதைப் பதிவுசெய்ய விரும்புகிறது.

மேற்கண்டவாறு இருந்தாலும், உயர் ஆணையர் அவரது தொடக்கக் குறிப்புக்களில் சுட்டிக்காட்டியபடி, மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மை கேள்விக்கிடமாகியுள்ளது. அந்த நம்பகத்தன்மையை பாதுகாக்கும் ஒரு வழியாக உயர் ஆணையரின் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளவற்றை, அப்பேரவையானது ஏற்றுகொள்ளவேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

உயர் ஆணையரின் வேண்டுகோளின்படி, சர்வதேசக் குற்றங்களைப் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் சிறிலங்கா அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுழையும் போது, உலகம் தழுவிய நீதி வரம்புகையைப் பயன்படுத்தி, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வழக்குகளை பதிவுசெய்யுமாறு நாகரீகமடைந்த தேசங்கள் அனைத்திடமும் நாம் வலியுறுத்துகிறோம். உயர் ஆணையரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கும் எந்த ஒரு தேசத்திற்கும் ஒத்துழைப்பை அளிப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதியளிக்கிறது.

உயர் ஆணையர் கூறியுள்ளபடி, 'சித்திரவதைகளுக்கும் பிற மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளான, புகலிடம் தேடிவந்த தமிழர்களை, அவர்களுக்கு மீண்டும் அத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட மாட்டாது, அவர்கள் மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவாதமளிக்கப்பபடும் வரை, கட்டாயமாகத் திருப்பி அனுப்பாமலிருக்கும் கொள்கையை உறுதிப்படுத்துமாறு' நாம் கேட்டுக்கொள்கிறோம்.

பிற கலப்புத் தீர்ப்பாயங்களைப் போன்ற ஒரு கலப்புத் தீர்ப்பாயத்தை நிறுவுமாறு உயர் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேசமயம், வட கொரியாவின் வழக்கில், அது ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்றாலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்நிறுத்துமாறு, பாதுகாப்புப் பேரவைக்கு மனித உரிமைப் பேரவை கடந்த ஆண்டு பரிந்துரைத்ததை நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

ஒரு கலப்பு நீதிமன்றம் சிறீலங்காவில் வெற்றிபெற முடியாது, ஏனென்றால் சிறீலங்கா அரசாங்கத்துக்கு நீதி வழங்கும் அரசியல் - (pழடவைiஉயட எநைற), மேலும் அத்தகைய ஒரு பொறிமுறையை அங்கு செயல்படுத்துவதற்கு உகந்த சூழலும் அங்கு நிலவவில்லை என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது.

சிறீலங்கா அரசின் உள்ளார்ந்த இன அதிகாரப் பண்பும், சாட்சிகளின் மீதுள்ள நீடித்த பகைமைச் சூழல்களும் இறுதியாக, உயர் ஆணையரின் அறிக்கையில் முடிவான சொற்களில் காணப்படுவது போல, 'சர்வதேசக் குற்றங்களின் பொறுப்புடைமையை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக சர்வதேச நடவடிக்கை' தேவைப்படுகிறது

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறக்கையில் தெரிவக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

 

http://www.seithy.com/breifNews.php?newsID=141276&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.