Jump to content

சிறிலங்கா தொடர்பிலான கலப்பு விசாரணை விவகாரம்: - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் துணை ஆவணம் வெளியிட்டது !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சிறிலங்கா விவகாரத்தில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ்விவகாரம் தொடர்பில் துணை ஆவணமொன்றினை வெளியிட்டு வைத்துள்ளது.       http://tgte-us.org/pressrelease/TGTE-GD-Resource%20Paper%20.pdf        ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்களது சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கை தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமித்திருந்த சட்ட வல்லுனர்கள் குழுவே இந்த துணை ஆவணத்தினை தயாரித்துள்ளது.

சிறிலங்கா விவகாரத்தில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ்விவகாரம் தொடர்பில் துணை ஆவணமொன்றினை வெளியிட்டு வைத்துள்ளது.

http://tgte-us.org/pressrelease/TGTE-GD-Resource%20Paper%20.pdf

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்களது சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கை தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமித்திருந்த சட்ட வல்லுனர்கள் குழுவே இந்த துணை ஆவணத்தினை தயாரித்துள்ளது.

   

கம்போடியா விவகாரத்தில் ஐ.நாவின் கலப்பு விசாரணை விவகாரத்தில் பங்கெடுத்திருந்த சட்டவல்லுனர் Richard Rogers (Former head of the Khmer Rouge tribunal’s defense support section and an attorney for Global Diligence)அவர்களது தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணம் 15 பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

கலப்பு விசாரணை நீதிமன்றம் தொடர்பில் அனைத்துலக மட்டத்தில் ஓர் தெளிவான சட்ட வரைவு அற்ற நிலையுள்ளது.

அனைத்துலக மட்டத்தில் இதுவரை உருவாகப்பட்ட கலப்பு நீதிமன்றங்கள் எதிர்கொண்ட சவால்களையும் பலவீனங்களையும் ஆய்வு செய்துள்ள இந்த துணை ஆவணம், சிறிலங்கா விவகாரத்தில் கலப்பு விசாரணை எத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் என்பது பற்றிய விளங்கங்களோடு பரந்துரைகளையும் முன்வைத்துள்ளது.

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் வலுவாகக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், 1.4 மில்லியன் மக்களது ஒப்பங்களையும் ஐ.நாவிடம் ஒப்படைத்துள்ளது.

இதேவேளை சிறிலங்கா விவகாரத்தில் கலப்பு விசாரணைப் பொறிமுறை நடைமுறை சாத்தியமற்றது என்பது பற்றியும் கடந்த ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில் உப மாநாடுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தியிருந்தது.

இந்நிலையில் கலப்பு விசாரணை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணம், சிறிலங்கா தொடர்பிலான கலப்பு விசாரணை நீதிமன்ற வடிவமைப்பு தொடர்பிலான முன்னாய்வுக்கு துணைபுரியும் என்பதோது இந்நீதிமன்றத்தினை அனைத்துலக மயப்படுத்துவதற்கும் வழிசமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாதம் ஊடகசேவை

 

http://www.seithy.com/breifNews.php?newsID=141162&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ! இதுகளிண்ட அலுப்பு தாங்க ஏலாதப்பா!

Link to comment
Share on other sites

அய்யோ! இதுகளிண்ட அலுப்பு தாங்க ஏலாதப்பா!

அவர்கள் உங்களுக்கு ஒன்றும் வீடு தேடி வந்து அலுப்பு குடுக்கவில்லை வாலிசார். ஒரு அமைப்பான  அவர்கள் முக்கியமான ஒரு பிரச்சனையில்  தமது கருத்தை தெரிவித்துள்ளார்கள். அவ்வளவு தான். தமிழ் மக்களில் எல்லா பிரிவினரும் தமது பங்களிப்பை ஐநாவுக்கு வழங்கவேண்டிய தருணம் இது. இதை கூட புரிந்து கொள்ள உங்களால் முடியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.